PDA

View Full Version : Makkal Thilakam MGR -PART 15



Pages : 1 2 3 4 5 6 7 8 9 10 [11] 12 13 14 15 16 17

Russellzlc
31st May 2015, 05:45 PM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை உரைக்கும் முக்கிய சாராம்சம்/ கோட்பாடு / தத்துவம் எல்லாமே கடமை என்ற கருப்பொருள் ஆகும் / வழிதான் / வாழ்க்கைக்கு உரித்தான உலகில் எல்லா ஜீவன்களும் கடைபிடிக்க வேண்டிய நிமித்தம் / நியதி ஒன்றேதான், இறைவனை அடையும் சிறந்த நெறிமுறை. இதனையேதான் நமது மக்கள் திலகம் தன் வாழ்க்கையில் கடைபிடித்து வந்துள்ளார். ஒரு ஜீவன் பிறந்து நல்லவைகளை நினைத்து, நல்லவைகளை பேசியும், நல்லவைகளை செய்தும், நல்லவைகளையே நாடி, தனக்கும், தன் குடும்பத்திற்கும், மனித குலத்திற்கும், நாட்டிற்கும் எந்த ஜீவன் நல்லவைகளை செய்கிறதோ அந்த ஜீவன் உத்தம ஜீவன் / உத்தம கொள்கையாகும். அதாவது, கடமைகளை செய்வதில் பற்றுதலையும், பலனையும் தியாகம் செய்து வருபவன் உத்தமன் ஆவான். அது சாத்வீக தியாகம் என்று கருதப்படும். இந்த ஜீவனுக்கு, நாம் செய்ய வேண்டிய கடமை நல்ல எண்ணம், நல்ல உடல்நிலை பேணுதல், நல்லவைகளை செய்தல், இந்த உடலை எந்த தீய பழக்கத்திற்கும் ஆட்படுத்தாமல் பேணி காத்தல். அதன்பிறகு நம் குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், நல்லவைகள் சொல்லி, நன்மைகளை செய்து வருதல். அந்த ஜீவன் ஒன்றேதான் இறைவன் திருவடியை சென்று அடையும். இதைதான் மக்கள் திலகம் தன் வாழ்நாளில் கடைபிடித்தார். திரை உலகத்திலும், சொந்த வாழ்க்கையிலும், குடும்பத்திற்கும், மனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், உலகத்தில் வாழும், அணைத்து ஜீவன்களுக்கும் ஒரு உத்தம தலைவராய் வாழ்ந்தார்.

கடமை என்ற சொல்லினை எவ்வாறு தன்னுடைய திரை காவியங்களில் பயன்படுத்தி இருக்கிறார் என்று இதோ பாருங்கள்


http://i60.tinypic.com/2nurdl5.jpg

1.
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

2. ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்.

3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை

4. உள்ளதை சொல்லி நல்லதை செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

5. மக்களை ஒருவன் மதிப்பது கடமை
மக்கள் ஒருவனை மதிப்பது பெருமை
துணை இருந்தால்தான் வலிமையும் ஓங்கும்
துணை இல்லாவிடில் திறமையும் தூங்கும்.. தூங்கும்

6. பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

7. கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

8. போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் -
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் -
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் .

9. கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
கடமை செய்வோம் கலங்காமலே
உரிமை கேட்போம் தயங்காமலே
வாருங்கள் தோழர்களே
ஒன்றாய் வாருங்கள் தோழர்களே

10. நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்
நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்

அருமை திரு.தெனாலிராஜன் சார். தலைவரின் புகழை கவிதையால் பாடுவதை கடமையாக கொண்டுள்ள உங்களுக்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 05:47 PM
http://i57.tinypic.com/jgnod0.jpg

நன்றி திரு.குமார் சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 05:49 PM
" மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்." இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார். .
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
- திரு காந்தி கண்ணதாசன் பேட்டியிலிருந்து

நன்றி திரு.யுகேஷ் பாபு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 05:55 PM
திரு.எஸ்.வி.சார், திரு.சைலேஷ் சார், நீங்கள் இருவரும் பதிவிட்ட வீடியோ காட்சிகள் அருமை.

திரு.ரூப் குமார் பதிவிட்ட ரிக்க்ஷாக்காரன் படத்தின் தகவல்கள் பேப்பர் கட்டிங்குகளுக்கு நன்றி.

சைதாப்பேட்டை இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவர் திரு.ராஜ்குமார் மற்றும் திரு.எம்ஜிஆர் பாஸ்கரன் ஆகியோர் தொடர்ந்து பங்களிக்க வேண்டும்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
31st May 2015, 06:05 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/99-1.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/99-1.jpg.html)

‘மத்தவங்களுக்கு வயிறு நிறைஞ்சா....’


ரிக்க்ஷாக்காரன் படத்தில் ஆரம்பத்தில் ரிக்க்ஷாபோட்டியில் தலைவர் கலந்து கொண்டு வெற்றி பெறுவது முதல் கடைசியில், அண்ணா சமாதி அருகே மஞ்சுளாவை ரிக்க்ஷாவில் வைத்து ஓட்டியபடி வருவதுவரை எல்லாவற்றையும் எழுதத்தான் ஆசை. நேரம் போதாது.

ரிக்க்ஷா போட்டி காட்சியை அவுட் டோரில் சென்னை அண்ணா நகரில் எடுத்திருப்பார்கள். நிஜமாகவே போட்டி மனப்பான்மையோடு தலைவர் ரிக்க்ஷா ஓட்டியிருப்பது தெரியும். தனது முழு திறனையும் பயன்படுத்தி வேகமாக ஓட்டியிருப்பார். ரிக்க்ஷா ஓட்டிப் பார்த்தால் அதன் கஷ்டம் தெரியும். சைக்கிள் மாதிரி இல்லாமல் நாம் ஒரு பக்கம் இழுத்தால் அது ஒரு பக்கம் போகும். பெடலில் அதிக அழுத்தம் கொடுத்து மிதிக்க வேண்டும். பயணிகள் இருந்தால் இன்னும் கஷ்டம்.(என்னையும் ரிக்க்ஷாக்காரன் போலிருக்கிறது என்று நினைக்காதீர்கள். அது ஒன்றும் அவமானகரமான தொழில் அல்ல. ஆனால், சிறுவயதில் ரிக்க்ஷா ஓட்டியான எனது நண்பரின் (அவரும் தலைவரின் ரசிகர்தான்) ரிக்க்ஷாவை ஓட்டி பார்த்திருக்கிறேன்) ரிக்க்ஷாவை மிகவும் அனாயசமாக ஸ்டைலாக ஓட்டியிருப்பார் தலைவர். இதற்காகவே ரிக்க்ஷா வாங்கி பயிற்சி எடுத்தார். வெளிப்புறப்படப்பிடிப்பு என்பதால் தலைவரின் கூடவே ஓடிவரும் ஜனத்திரள். கொடுத்து வைத்த கூட்டம்.

அதிலும், படத்தின் ஹைலைட்களில் ஒன்றான, தலைவருக்கே உரிய தனித்துவமாய் ரிக்க்ஷாவை வட்டமாக ஓட்டிக் கொண்டே, ராமதாஸ் குழுவோடு தலைவர் போடும் சிலம்பு சண்டை காண கண்கோடி வேண்டும். நாமே ஒரு வேலையை செய்யும்போது இன்னொரு வேலையை செய்ய முடியாது. ரிக்க்ஷாவை ஓட்டிக் கொண்டே, அதாவது கால்களால் பெடலை மிதித்துக் கொண்டிருக்கும்போதே தலைவரின் கைகள் குச்சியை சுழற்றும். அப்போதும் குச்சியின் சுழற்சி வேகம் குறையாது. நின்று கொண்டு குச்சியை சுழற்றுவது வேறு. இந்தக் காட்சியில் அதிலும் ஒரு தடை. அந்தக் குச்சி சுழலும் போது ரிக்க்ஷாவின் ஹேன்ட் பாரில் படக் கூடாது. ஹேன்ட் பாரில் படாமல் மின்விசிறியாய் சுழலும் குச்சியின் சுழற்சியில் ராமதாஸ் கோஷ்டி க்ளோஸ்.

ராமாதாசின் குச்சியை தடுத்து, லாவகமாய் தன் குச்சியையும் ராமதாஸ் குச்சியையும் ஒன்றாக சேர்த்து, சேர்க்கப்பட்ட இரண்டு கழிகளுக்கு இடையே ராமதாசின் விரல்களை மாட்டிக் கொள்ளவைத்து அவரை ரிக்க்ஷாவோடு சேர்த்து தலைவர் இழுத்து வந்து சுழற்றி வீசும் அழகே அழகு. (இந்த சண்டைக் காட்சியை நண்பர்கள் தரவேற்றினால் மகிழ்ச்சி)

தலைவருக்கு எப்போதுமே ஒரு வழக்கம் உண்டு. எதிராளி என்ன ஆயுதம் வைத்திருக்கிறானோ அதே அளவுக்கு ஈடு கொடுக்கும் ஆயுதத்தைத்தான் தானும் வைத்திருப்பார். கத்தி என்றால் கத்தி, ஈட்டி என்றால் ஈட்டி. எதிராளி ஆயுதத்தை இழந்து நிராயுதபாணியாகிவிட்டால் தன் கையில் உள்ள ஆயுதத்தையும் தூக்கிப் போட்டு விடுவார். இந்த சண்டைக் காட்சியிலும் ராமதாஸ் கோஷ்டியினர் கம்புகளை இழந்ததும், தலைவர் தன் கையில் உள்ள கம்பையும் தூக்கி வீசிவிட்டு ரிக்க்ஷாவில் அமர்ந்து ஓட்டியபடியே சூப்பர் மேனாய் பறந்து வரும்போது தியேட்டரில் இறக்கை இல்லாமல் நாமும் பறப்போம். இந்த ஸ்டில்லை திரு.முத்தையன் ஏற்கனவே தரவேற்றியுள்ளார். கடந்த திரியில் என்று நினைவு.

சண்டைக்கு முன், ராமதாஸ் குழுவோடு தலைவர் பேசும் அட்டகாசமான வசனங்களையும் சண்டைக்கு பின் கோர்ட்டில் பேசும் கலாய்ப்பு வசனங்களையும் பிறகு பார்ப்போம்.

படத்தில் முக்கியமான ஒரு காட்சி. சாப்பாடு விற்கும் பெண்ணாக பத்மினி. அவர் கொண்டு வந்த சாப்பாடு மீந்து விடும். அதை அப்படியே மொத்தகமாக பணம் கொடுத்து வாங்குவார் தலைவர். சக தொழிலாளி ஒருவர் உடல் நலமில்லாமல் ரிக்க்ஷா ஓட்டாமல் இருக்கிறார். அவரது வீட்டில் இந்த சாப்பாட்டை கொண்டு கொடுக்கச் சொல்வார் தலைவர். தொழில் செய்பவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. தொழிலாளியும் அவரது குடும்பமும் பட்டினியோடும் இருக்கக் கூடாது என்ற உயர்ந்த தத்துவத்தை விளக்கும் காட்சி.

அப்படி பத்மினியிடம் வாங்கிய சாப்பாட்டில் சிறிதளவு கூட தான் எடுத்துக் கொள்ளாமல் அப்படியே அந்த தொழிலாளியின் வீட்டில் கொடுக்கச் சொல்வார். ‘நீ சாப்பிடவில்லையா?’ என்று தலைவரைப் பார்த்து பத்மினி கேட்கும்போது, அருகில் இருக்கும் கரிக்கோல் ராஜ் கூறுவார்...

‘மத்தவங்க வயிறு நிறைஞ்சா, இவருக்கு மனசு நிறைஞ்சுடுமே’

இதை விளக்க ஒரு சம்பவம்.

தலைவர் முதல்வராக இருந்தபோது, ஊட்டியில் திரு.கமல்ஹாசன் நடித்த ஒரு கைதியின் டைரி படப்பிடிப்பு. இயக்குநர் திரு. பாரதி ராஜா. அப்போது ஊட்டியில் தமிழகம் கார்டனில் தலைவர் தங்கியிருக்கிறார். அங்கு படப்பிடிப்பு வைத்துக் கொள்ள ஏற்கனவே திட்டமிட்டுள்ளார் பாரதிராஜா. ஆனால், தலைவர் அங்கு தங்கியிருப்பதால் கார்டன் பூட்டப்பட்டு உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை.

படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. திரு.கமல்ஹாசன் படப்பிடிப்பை முடித்து விட்டு மும்பை செல்ல வேண்டும். பதற்றமாகி இருக்கிறார் திரு.பாரதிராஜா. சிம்ஸ் பூங்காவுக்கு சென்று ‘ஏபிசி நீ வாசி’ பாடலை படமாக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்.

படத்தின் ஸ்டில் போட்டோகிராபர் திரு.சங்கர் ராவ். இவர் ஏற்கனவே தலைவரின் பல படங்களுக்கு ஸ்டில் எடுத்தவர். தலைவரின் ஆஸ்தான போட்டோகிராபர் நாகராஜராவின் மருமகன். தலைவருக்கு நன்கு அறிமுகமானவர். அவர் பாரதிராஜாவை சமாதானப்படுத்தி முதல்வரை பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். பாரதிராஜாவுக்கு நம்பிக்கை இல்லை.

அவரை கூட்டிச் சென்று முதல்வராக இருந்த தலைவரை சந்தித்திருக்கிறார் சங்கர் ராவ். நிலைமையை விளக்கியுள்ளனர். தலைவர் உடனே, ‘யாரு தடுத்தது? நானே ஷூட்டிங் பார்த்து நாளாச்சு. தாராளமா படப்பிடிப்பு நடத்துங்க. நானும் வரேன்’ என்று சொல்லி ஷூட்டிங் பார்க்கவும் வந்திருக்கிறார். அப்போதும் சினிமா தொழிலில் கவனமாக இருந்த அந்த மேதையைப் பாருங்கள். டிராலி ஷாட் ஒன்று படமாக்கப்பட்டபோது, ‘அந்த டிராலி இப்படி வராமல் அப்படி வந்தால் காட்சி நன்றாக இருக்கும்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.

படப்பிடிப்பில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் தலைவரே மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 பேருக்கு தடபுடல் விருந்து. தலைவர் நுட்பமானவர் என்பதற்கு உதாரணம்... முன்னதாகவே, சங்கர் ராவிடம் சைவம் எத்தனை பேர், அசைவம் எத்தனை பேர் என்று கேட்டிருக்கிறார். அதற்கேற்ப உணவு தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் விருந்து.

இரண்டு பேர் மட்டும் தலைவரை நேருக்கு நேராய் பார்க்காமல் அங்கே இங்கே பார்த்தபடி இருந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி சங்கர் ராவிடம் தலைவர் கேட்டுள்ளார். பார்வையிலேயே ஆட்களை எப்படி எடை போடுகிறார் பாருங்கள். சங்கர் ராவிடம் தலைவர் கேட்ட கேள்வி, ‘‘அவர்கள் இரண்டு பேரும் திமுகவா?’......... தலைவர் கணக்கு தப்புமா? சங்கர் ராவும் அதை ஆமோதித்துள்ளார். ஒருவர் எடிட்டிங் பிரிவிலும் மற்றொருவர் ஆர்ட் பிரிவிலும் பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். அவர்களது பெயர்களை சங்கர் ராவிடம் கேட்டு தலைவர் தெரிந்து கொண்டுள்ளார்.

சாப்பாடு பரிமாறிய பிறகு ஒவ்வொருவராக சென்று நன்கு சாப்பிடச் சொல்லி உபசரித்துள்ளார். திமுகவை சேர்ந்த இருவர் அருகில் தலைவர் வந்தபோது, அவர்கள் தலையை குனிந்தபடி சாப்பிட்டுள்ளனர். இருவரையும் தலைவர் பெயர் சொல்லி அழைத்து, முதுகில் தட்டி ஒவ்வொரு உணவு வகைகளை எடுத்துக் கூறி, நன்றாக சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். தலைவரின் இந்த அன்பை பார்த்து திமுகவினரான தொழிலாளர்கள் இருவரும் கண்கலங்கியுள்ளனர்.

விருந்து முடிந்த பின் தலைவர் செய்தது, நம்மையும் கண்கலங்க வைக்கும். எல்லாரும் சாப்பிட்ட பின் அவர்களுக்கு பீடா கொடுப்பதற்காக, பீடாக்கள் வைக்கப்பட்டிருந்த தட்டை தானே எடுத்து எல்லாருக்கும் கொடுத்திருக்கிறார் தலைவர். விருந்தோம்பலில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. ஒரு மாநிலத்தின் முதல்வர், சினிமா தொழிலாளர்களுக்கு (அரசு செலவு இல்லை, சொந்த செலவில்) விருந்தளிப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு தானே தட்டை தூக்கி பீடா எடுத்து கொடுக்கிறார் என்றால், ‘பதவி வரும்போது பணிவு வரவேண்டும்..’ என்று தான் பாடிய பாடல் வரிகளுக்கு தானே இலக்கணமானவர் தலைவர்.

இந்த நிகழ்ச்சியை திரு.சங்கர் ராவ் கூறி, அது நக்கீரன் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட, ‘தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்’ என்ற புத்தகத்தில் உள்ளது.

கரிக்கோல்ராஜ் கூறுவது போல தலைவருக்கு...

‘மத்தவங்க வயிறு நிறைஞ்சா இவருக்கு மனசு நிறைஞ்சுடுமே...’

சத்தியமான வார்த்தைகள்.

அட..நிகழ்ச்சியை விவரிக்கும் வேகத்தில் முக்கியமானதை சொல்ல விட்டு விட்டேனே. விருந்து சாப்பிடும்போது உபசரித்த தலைவரின் தாயன்பை பார்த்து கண்கலங்கினார்களே, இரண்டு திமுகவினர்...

அவர்கள் இருவரும் எதிரிகளையும் வசியப்படுத்தும் தலைவர் முன்னிலையில் மறுநாள் அதிமுகவில் சேர்ந்து விட்டனர்.

அவர்தான் தலைவர்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Richardsof
31st May 2015, 06:53 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

ரிக்ஷாக்காரன் படத்தின் சிறப்புகளை தாங்கள் பதிவிட்ட விதம் மிகவும் அருமை .பாராட்டுக்கள் .ஒரு கைதியின் டயரி படப்பிடிப்பில் நடந்த ருசிகர தகவல்கள் சூப்பர் .உங்களுக்காக ரிக்ஷாக்காரன் சண்டை காட்சி வீடியோ .
https://youtu.be/LAjSMlBp6Ew

oygateedat
31st May 2015, 07:08 PM
http://s12.postimg.org/xcg22ex0d/vdd.jpg (http://postimage.org/)

Richardsof
31st May 2015, 07:32 PM
https://youtu.be/W70Mw6XFMR8

oygateedat
31st May 2015, 08:19 PM
http://s30.postimg.org/8dehq54y9/vvvvf.jpg (http://postimage.org/)

ujeetotei
31st May 2015, 08:41 PM
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்

ரிக்ஷாக்காரன் படத்தின் சிறப்புகளை தாங்கள் பதிவிட்ட விதம் மிகவும் அருமை .பாராட்டுக்கள் .ஒரு கைதியின் டயரி படப்பிடிப்பில் நடந்த ருசிகர தகவல்கள் சூப்பர் .உங்களுக்காக ரிக்ஷாக்காரன் சண்டை காட்சி வீடியோ .
https://youtu.be/LAjSMlBp6Ew

Thanks for uploading the video sir, watched it two times.

ujeetotei
31st May 2015, 08:42 PM
Special post about the 44th Anniversary of Rickshawkaran movie in srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2015/05/rickshawkaran-44.html

fidowag
31st May 2015, 10:10 PM
தின இதழ் -31/05/2015
http://i58.tinypic.com/11twrok.jpg
http://i62.tinypic.com/5ed634.jpg
http://i57.tinypic.com/14wvmzr.jpg
http://i61.tinypic.com/155ny54.jpg
http://i60.tinypic.com/309tuds.jpg

http://i60.tinypic.com/25royms.jpg

fidowag
31st May 2015, 10:13 PM
http://i60.tinypic.com/2exo505.jpg
http://i62.tinypic.com/30jjuwj.jpg
http://i59.tinypic.com/6gfux4.jpg

http://i59.tinypic.com/4viw6q.jpg

http://i62.tinypic.com/34t96d0.jpg

fidowag
31st May 2015, 11:09 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் வரும் வெள்ளி முதல் (05/06/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நம் நாடு " வெள்ளித்திரைக்கு வருகிறது. ரசிகர்கள்/பக்தர்கள்
வெகு விமரிசையாக, சிறப்பான ஏற்பாடுகள் செய்து திரைப்படத்தை வரவேற்க
உள்ளார்கள். அதன் சுவரொட்டிகள் நமது நண்பர்களின் பார்வைக்கு.

http://i62.tinypic.com/1043l3r.jpg

தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.

fidowag
31st May 2015, 11:12 PM
http://i59.tinypic.com/ip3v37.jpg

fidowag
31st May 2015, 11:14 PM
http://i61.tinypic.com/2u8gd1l.jpg

fidowag
31st May 2015, 11:16 PM
மதுரை ராம் தியேட்டரில் 20/05/2015 முதல் சில நாட்களுக்கு மட்டும் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அளிக்கும் "பறக்கும் பாவை " திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது.
அதன் சுவரொட்டியை நமது திரியில் பதிவிட அனுப்பிய மதுரை திரு. எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.

http://i57.tinypic.com/2w5pwle.jpg

oygateedat
1st June 2015, 12:39 AM
மதுரை மாநகரில்
மக்கள் திலகத்தின்
நம் நாடு.
தகவல் மற்றும் சுவரொட்டி
விளம்பரத்தை பதிவிட்ட
திரு லோகநாதன்
அவர்களுக்கு நன்றி

Richardsof
1st June 2015, 06:02 AM
30.6.1977 அன்று தமிழக முதல்வராக மக்கள் திலகம் எம்ஜிஆர் பதவி ஏற்பார் என்று முன் கூட்டியே நமக்கு சொல்லாமல் சொல்லிய பாடல்கள் .1969ல் வெளிவந்த மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் மற்றும் நம்நாடு படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள்.


காலத்தை வென்றவன் நீ ... காவியமானவன் நீ

வாங்கய்யா வாத்தியாரய்யா ..வரவேற்க வந்தோமய்யா .

https://youtu.be/NAkxBhg8b3s
https://youtu.be/7lIENBK-la4

Russellrqe
1st June 2015, 10:49 AM
ஜூன் மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .

ஜெனோவா
மந்திரிகுமாரி
புதிய பூமி
நான் ஏன் பிறந்தேன் .

Russellrqe
1st June 2015, 11:47 AM
1972- MURASOLI - PONGAL MALAR
MAKKAL THILAGAM'S COMMENT ABOUT HIS EARLY MOVIES

http://i62.tinypic.com/20fcav7.jpg

Russellrqe
1st June 2015, 11:48 AM
http://i60.tinypic.com/2wdo674.jpg

Russellrqe
1st June 2015, 11:50 AM
http://i61.tinypic.com/2qbc77m.jpg

Russellrqe
1st June 2015, 11:52 AM
http://i60.tinypic.com/2e49chu.jpg

Russellrqe
1st June 2015, 11:54 AM
http://i62.tinypic.com/116j1gj.jpg

Russellrqe
1st June 2015, 11:55 AM
http://i60.tinypic.com/280t8uv.jpg

Russellrqe
1st June 2015, 11:58 AM
http://i57.tinypic.com/ekqdkj.jpg

ainefal
1st June 2015, 02:06 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/1st%20june%202015_zpsy8n6yaab.jpg

http://dinaethal.epapr.in/511854/Dinaethal-Chennai/01.06.2015#page/13/1

fidowag
1st June 2015, 11:00 PM
தமிழ் இந்து -29/05/2015
http://i60.tinypic.com/1t7wck.jpg
புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தோற்றம் "பணத்தோட்டம் " படத்தில்.
தமிழ் இந்து நாளிதழில் தவறாக "பாசம் " என குறிப்பிட்டுள்ளார்கள்.
http://i57.tinypic.com/2u8jomd.jpg

http://i58.tinypic.com/zloeoh.jpg

fidowag
1st June 2015, 11:05 PM
தமிழ் இந்து -30/05/2015
http://i60.tinypic.com/14w6eyt.jpg
http://i57.tinypic.com/n2o2mc.jpg
http://i60.tinypic.com/2qi1a41.jpg
http://i62.tinypic.com/2w1ujnp.jpg
http://i60.tinypic.com/e7id6d.jpg
http://i58.tinypic.com/1zgyx3c.jpg

http://i58.tinypic.com/23h3zpk.jpg

Russellisf
1st June 2015, 11:11 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsnsvt8kqf.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsnsvt8kqf.jpg.html)

Russellisf
1st June 2015, 11:13 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsu29dpbi0.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsu29dpbi0.jpg.html)

fidowag
1st June 2015, 11:13 PM
தின இதழ் -01/06/2015
http://i60.tinypic.com/vzzy4h.jpg
http://i57.tinypic.com/i6b6rn.jpg
http://i58.tinypic.com/hs1dat.jpg
http://i58.tinypic.com/2r58fgz.jpg
http://i62.tinypic.com/xaszfs.jpg
http://i62.tinypic.com/15xa42a.jpg

fidowag
1st June 2015, 11:15 PM
http://i58.tinypic.com/nmjb4o.jpg
http://i61.tinypic.com/684uv5.jpg
http://i57.tinypic.com/i23whu.jpg

Russellisf
1st June 2015, 11:15 PM
நண்பர் ஒருவருடைய பதிவு நன்றாக
இருந்ததால் பதிவு செய்துள்ளேன் நண்பருக்கு நன்றிகள் !

http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsvqiqvrdc.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsvqiqvrdc.jpg.html)

Russellisf
1st June 2015, 11:16 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsw6rqgses.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsw6rqgses.jpg.html)

fidowag
1st June 2015, 11:17 PM
தின இதழ் -01/06/2015 தொடர்ச்சி

http://i58.tinypic.com/2uhvl1u.jpg

http://i58.tinypic.com/24yy8ft.jpg

http://i57.tinypic.com/2wd13dd.jpg

Russellisf
1st June 2015, 11:27 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps2jfnc0zh.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps2jfnc0zh.jpg.html)



எம் ஜி ஆர்
பலரை வாழவைத்தஂபெயர்
வாழ்வில் பணத்தால் உடலால்
அவதிபட்டஂமக்களை காத்தஂகடவுள்

பல கடுமை மிக்கஂபிரச்சனையில்
இருந்து பலரை காக்கும் போது
எம்ஜிஆர் மீது வீசியஂவதந்தி அம்புகள் .கொஞ்சம் நஞ்சம் அல்லஂ
ஆனால் அவவை சூரியனை கண்டஂ
பனியாகஂமறைந்து போயினஂ
உலகிலே எம் ஜி ஆர் மீது கூறப்பட்டஂ
விமர்சனம் போல் எவரும் சந்திததில்லை
அத்தனையும் தாங்கி தன்னை நம்பியவர்களை வாழவைத்தார்

சாப்பிடுங்கள் நான் என்னஂசெய்யவேண்டும்
உங்களுக்கு என்னஂவேண்டும்
எம் ஜி ஆர் கேட்கும் கேள்விஂ
இப்படி கேட்கஂமுதலில் நல்லஂமனம்
வேண்டும் பின் எதையும் சாதிக்கும்
பலம் வேண்டும்
இயர்க்கையிலே இவை எம் ஜி ஆர் ரிடம் இருந்தது
இன்றையஂதலைமுறை வியக்குகிறது இப்படி ஒருவர்
காலத்தில் தமிழகம் இருந்ததே என்று
இவ்வளவு புகழ் செல்வாக்கு வெற்றி
பலம் கொண்டவர் நம் காலத்தில்
இல்லையே என்று ஏங்குகிறார

Richardsof
2nd June 2015, 05:03 AM
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் தான் ஆரம்ப காலங்களில் நடித்த படங்களை பற்றி மிக தெளிவாக , விளக்கமாக எழுதிய கட்டுரை
மிகவும் அருமை . முரசொலியில் வெளிவந்த கட்டுரையை பதிவிட்டமைக்கு நன்றி .

Richardsof
2nd June 2015, 05:25 AM
தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 27
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.

நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.

அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.

1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.

அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.

மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.

""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.

செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.

முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.

எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.

""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.

எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.

என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.

தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.

தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.

"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.

தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!

மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.

எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!

courtesy - dinamani

Richardsof
2nd June 2015, 05:36 AM
எம்ஜிஆர்! மூன்றெழுத்தில் ஒரு மந்திரம்!

சாதிமத பேதம் கடந்த ஒரு மந்திரம்! மந்திரங்கள்கூட சமயத்தில் உச்சரிப்பை மட்டுமே ஆட்கொள்ளும்! இந்த மூன்றெழுத்து மந்திரமோ ‘அதுக்கும் மேலே’ என்றும் உள்ளத்தை ஆட்கொள்ளும். இதன் திறம், இறைவன் அளித்த வரம்!

எம்ஜிஆர் மனதில் நிறைந்தவர் மட்டுமா? பலர் மனதை வென்றவரும்கூட என்பதில் இருவேறு கருத்தில்லை! வரையறுக்க முயல்கிறேன் வரிகளில், வள்ளல் என வாழ்ந்த இப்பெருந்தகையை! எம்.ஜி.இராமச்சந்திரன் – நாடுவிட்டு நாடு வந்து நாட்கள் பல காத்திருந்து நாடகங்களில் கால் பதித்து இன்று நிலைத்து நிற்பதோ நம் அனைவரின் நெஞ்சங்களில்!

இவருடைய திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடமாய் நற்கல்வியாய் பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது இன்றளவும் கண்கூடான உண்மை! அழகிய தமிழ்மகன் இவர்! அழகென்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்! பொதுவாக கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,

‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.

புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!

இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!

கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’

என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.

‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்.
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார்’

என்று பாடியவர், ஆணையிட்டு ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். ஏழைகளை மனதில் தாங்கி அவர்களுக்கான திட்டங்கள் வகுத்தார்.

அதனால்தான், மக்கள் பாடி வாழ்த்தினர்,

‘நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற
இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற’ என்று!

இந்த வாழ்த்து அவர் நோய்வாய்ப்பட்டிருந்த போது வேண்டுதலாக மாறி,

‘ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரால் நீராட்டுவேன்
இந்த ஓருயிரை நீ வாழவிடு என்று உன்னிடம் கையேந்தினேன்’

என்னும் வேண்டுதலுடன் சேர்த்து ஒவ்வொரு திரையரங்கிலும் கூட்டுப் பிரார்த்தனையாய் தமிழ்நாட்டு மக்களின் எண்ணப் பிரதிபலிப்பாய் ஒலித்துக் கொண்டிருந்தது, அவர் நலம்பெற்று திரும்பி காலடி வைக்கும்வரை!

இவையனைத்துமே அவரே அறியாமல் அவருக்காகப் பாடப்பட்டு பின் உண்மையாய் மாறிய வரிகள்!

மக்கள் திலகம்! மகளிர் மனதில் மிக நெருக்கமான உறவுகளாய் பாசமிகு மகன், அன்பு அண்ணன், ஆசைத் தம்பி என பதிந்ததோடு உதாரணக் காதலனாகவும் இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. திரையுலகம் என்பது சக்திமிகுந்த ஊடகம், அதில் கதாநாயகன் என்பவன் மூன்று மணி நேரம் காண்போர் மதியை ஈர்ப்பவன் என்ற பொறுப்பை உணர்ந்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து பாசம், வீரம், விடுதலை, வேட்கை, கடமை என நல்ல விஷயங்களையே கையாண்டு காண்போருக்குக் கருத்தில் பதிய வைத்தவர். பல கலைகளில் தேர்ந்த இந்த சகலகலா வல்லவர், படிப்பதைவிட பார்ப்பது மக்கள் மனதில் பதிந்துவிடும் என்ற மனோதத்துவத்தை அறிந்து, அதிலும் படிப்பறிவில்லா பாமர மக்களையும் மனதில் கொண்டு நன்மை விதையைத் தூவி அனைவரின் மனதிலும் வேரூன்றிய இந்த எம்ஜிஆர் எனும் பயிர் சற்று துறை மாறி அரசியலில் நுழைந்தது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொற்காலம் என்பது வியப்பேதுமில்லை.

வெற்றி இவரால் பேருவகை கொண்டது. தோல்வியோ தோல்வி கண்டே துவண்டது. தலைவன் என்ற சொல் தாழாமல் தனித்துவம் கண்டது. இவருடைய புதிய கட்சியின் கொடியும் பெயரும் இதயக்கனி என இவரை மனதில் தாங்கிய அண்ணாவை கொள்கைத் தலைவர் என ஏற்றுப் பெருமைப் படுத்தியது. இவருடைய மனதில் அண்ணாவிற்கு இருந்த பக்தியை ஒவ்வொரு மேடையிலும் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்ற வாக்கியத்தால் பறைசாற்றியது. பிறருக்கு வாய்ப்பூட்டு போட்டது. அண்ணாவை மட்டுமே தலைவனாக ஏற்றதால், இவரது கட்சியில் அண்ணாவுக்கான தலைவர் நாற்காலி காலியாகவே வைக்கப்பட்டது. செயலாளராகவே இவரை செயல்பட வைத்தது.

வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டை ஆண்டவர் இல்லை, இவர் வசந்த பூமியாய் தமிழ்நாட்டை மாற்றியவர். மத்தியில் என்றும் இணக்கம் காட்டி தன் மதியால் தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைப் பெற்றுத் தந்தவர். பொங்கலுக்குப் பரிசு தந்து எல்லோர் வீட்டிலும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனார். கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்துத் துறை, வேலைவாய்ப்புகள் என்று இவரது ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகள் பல. குறிப்பாக, 5ம் உலகத் தமிழ் மாநாடும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும், அன்னை தெரசா பல்கலைக்கழகம், தெலுங்கு கங்கை திட்டம் (கிருஷ்ணா நதிநீர்த் திட்டம்) ஆகியவை இவரது ஆட்சியின் அடையாளங்கள். மதுவுக்குத் தடை போட்டார். மகளிர் மட்டும் பேருந்துகளுக்கு விதையிட்டார். ஏழைக் குழந்தைகளின் கால்களுக்கு காலணி தந்து காத்திட்டார்.

அதேபோல், எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கைகளில் மாறுபட்டிருந்தாலும், அரசவைக் கவிஞர் என்னும் புதிய பதவியை உருவாக்கி, அதில் முதல் நபராக கவியரசர் கண்ணதாசனை அமரவைத்து அழகு பார்த்த இவரது பெருந்தன்மை மறுக்கவோ, மறக்கவோ முடியாதது. கல்லூரிகளில் அதிக மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்து பல மாணவர்களின் வாழ்வில் ஒளி விளக்கானவர்.

எண்ணமே வாழ்வு என்பார்கள், தேர்தல் களத்தில் அனுதினமும் அல்லலுற்று ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கிடையில் தேர்தல் நடந்து முடியும்வரை ஆளே வராமல் ஆண்டிப்பட்டியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது மட்டுமின்றி, பெரும்பான்மையும் பெற்று முதல்வரானதிலிருந்தே இவர் மக்கள் மனதில் பதிந்த ஆழம் புரியும். நீள அகலங்கள் விரியும்.

தொண்டர்களை மதித்து அரவணைத்து ஒவ்வொருவரின் திறமையையும் உணர்ந்து பொறுப்பளித்து எண்ணித் துணிந்து செயலாக்கிய இவர் மின்னி மறையும் மின்னலல்ல, வான் உள்ளவரை தமிழ் உலகை ஆளும் பொன்மனச்செம்மல் ஆவார். அவரின் மனத்தைப் போலவே வெள்ளை உடையும், அவருடைய சுறுசுறுப்புக்கேற்ற கைக்கடிகாரமும், கதிர்வீச்சுக் கண்களைக் கட்டுக்குள் வைத்த கறுப்புக் கண்ணாடியும், அனைத்துக்கும் சிகரமாய் மெத்தென்ற தொப்பியும் நிலையாய்ப் பூண்டு வந்த இந்த இணையற்ற மக்கள் திலகம் மக்களின் மனங்களை விட்டு மறையவேயில்லை, நிறைந்தே இருக்கிறார்
courtesy - நர்கிஸ் ஜியா. vallamai

Russellrqe
2nd June 2015, 08:18 AM
FROM TO DAY
MADURAI -SHA -1 THEATER.

MAKKAL THILAGAM MGR IN ''RIKSHAKARAN ''
MESSGAE FROM K.SAMY - MADURAI

http://i57.tinypic.com/vpuhir.png

fidowag
2nd June 2015, 08:42 AM
குமுதம் -08/06/2015
http://i58.tinypic.com/2a6p5eb.jpg

fidowag
2nd June 2015, 08:44 AM
கலைமகள் -மே 2015
http://i60.tinypic.com/1grnts.jpg
http://i61.tinypic.com/2uh4j6r.jpg
http://i60.tinypic.com/303efe9.jpg
http://i60.tinypic.com/5l6xk7.jpg
http://i61.tinypic.com/spykbc.jpg

Russellrqe
2nd June 2015, 09:22 AM
The eternal magic of MGR

As we step out from our house this morning, an old MGR number drifts through the wind and gets to us. We wonder why the tea guy who has been playing all those only-god-knows-what songs every morning has chosen to play "Pudhiya vaanam pudhiya bhoomi..." Then the fact dawns that today is MGR's birth anniversary.

The world remembers him as an all-rounder hero, a shrewd politician and a noble human being. Just the three alphabets 'MGR' is enough even for a child to understand the greatness of this man!

It has been more than 36 years since M.G. Ramachandran's last movie "Maduraiyai Meeta Sundara Pandian" was released. His movies run packed houses even when released today. The young and the old remember this "Aayirathil Oruvan" fondly even today.

Not only MGR's films but even his songs are still very much in demand. The remix version of 'Anru vanthathum Athe Nila' (in Kannamoochi Yaenada) was a hit. His songs like 'Adho andha paravai polla...' and 'Poo mazhai thoovi...' are being remixed. The directors and the actors of today crave to name their movies with the titles of the hits of MGR.

Every nook and corner of the streets and the TV channels have been playing MGR songs right from morning today, as a tribute to this real and reel life hero.

Russellrqe
2nd June 2015, 09:27 AM
FROM NET

MGR
He is best cm ever

Comments:
very nice

My favorite leader for ever
first ever personality to fight aganist corruption in 1972 and successfully ran the govt of T N for 3 consecutive terms from 1977 to 1987 till his death.
greatest cm off all time
Ever green and real hero of Tamil Nadu, South India. Great personality, great mankind, and great kindhearted. The one and only Emperor of Tamil Nadu

Good Leadee and Great man

ainefal
2nd June 2015, 01:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/2nd%20June%202015_zpsm8t7eglr.jpg

http://dinaethal.epapr.in/512034/Dinaethal-Chennai/02.06.2015#page/10/1

Russellzlc
2nd June 2015, 03:03 PM
தமிழ் இந்து -29/05/2015
http://i60.tinypic.com/1t7wck.jpg
புகைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தோற்றம் "பணத்தோட்டம் " படத்தில்.
தமிழ் இந்து நாளிதழில் தவறாக "பாசம் " என குறிப்பிட்டுள்ளார்கள்.


திரு.லோகநாதன் சார்,

நீங்கள் குறிப்பிட்டது மிகச் சரி. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள தலைவரின் படம் பணத்தோட்டம் படத்தின் ஸ்டில். என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே.... பாடலின் காஸ்ட்யூம். அதுவும் ஸ்டில்லுக்காக எடுக்கப்பட்டது. படத்தில் இந்த போஸ் இடம் பெறாது. ஸ்டில்லையும் திருப்பி போட்டிருக்கின்றனர். படத்தில் தலைவர் வலது பக்கம் வகிடு எடுத்திருக்க மாட்டார். ஆனால், இதில் பாருங்கள். .....என்னத்தை சொல்வது?

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd June 2015, 03:04 PM
தின இதழ் -01/06/2015 தொடர்ச்சி

http://i58.tinypic.com/2uhvl1u.jpg



மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அதிக படங்களை இயக்கியவர் ராமண்ணா என்று உள்ளது. தவறான தகவல். அதிக படங்கள் இயக்கியவர் ப. நீலகண்டன்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd June 2015, 03:08 PM
கலைமகள் -மே 2015
http://i60.tinypic.com/1grnts.jpg
http://i61.tinypic.com/2uh4j6r.jpg
http://i60.tinypic.com/303efe9.jpg
http://i60.tinypic.com/5l6xk7.jpg
http://i61.tinypic.com/spykbc.jpg

கலைமகள் பத்திரிகையில் டென் கமாண்ட்மென்ட்ஸ், பென்ஹர் போன்ற படங்களோடு ஆயிரத்தில் ஒருவனை ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு 2014 ம் ஆண்டு திரையிடப்பட்டு வெள்ளிவிழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு கடந்த இந்தப் படத்தின் தன்னிகரற்ற வெற்றி இன்றைய தலைமுறை ரசிகர்களை மட்டுமல்லாது இன்றைய தொழில்நுட்பக் கலைஞர்களையும் பிரமிக்க வைத்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ரகசிய போலீஸ் படத்தை பலரும் பின்னர் பின்பற்றினர் என்று உள்ளது.

நாடோடி படம் மகாத்மாவின் தீண்டாமை கருத்தை வலியுறுத்தும் சிறந்த கதையமைப்பை கொண்ட படமாம்.

தினகரன், தின இதழ், ஹிந்து, குமுதம், இப்போது கலைமகள் பத்திரிகையும் தலைவரின் புகழ் பாட ஆரம்பித்து விட்டது. என்ன இது? யாராவது விஷமிகள் புகுந்து எடிட் செய்து தலைவரின் புகழ் பாடும் செய்திகளை புகுத்தியிருப்பார்கள் என்று நெருங்கிய நண்பர்களிடம் சொல்லி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்வோம்.

கலை மகள்... ஓஹோ புரிந்து விட்டது. சரி.. சரி...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellbpw
2nd June 2015, 04:46 PM
மக்கள் திலகம் திரு எம் ஜி ராமசந்திரன் அவர்கள் நடிப்பில் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற தாயை காத்த தனயன் திரைப்படம் திருச்சி கெய்டி திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் வரும் வெள்ளிகிழமை (05-06-2015) முதல் திரயிடபடுகிறது என்ற மகிழ்ச்சியான தகவலை நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்கிறேன்.

மதுரை சென்ட்ரல் திரையரங்க மேலாளர் திரு பாலமுருகன் அவர்கள் திருச்சி உரிமம் வைத்துள்ள திரைப்படம் இது. திரு கண்ணன் என்கிற நண்பர் மூலம் திருச்சி ஈஸ்வரன் ஐயர் வழியாக இந்த திரைப்படம் கெய்டி திரை அரங்கில் திரயிடபடுகிறது.

தாயை காத்த தனயன் திரைபடத்திலிருந்து எனக்கு பிடித்த ஒரு அருமையான பாடல். கேமரா ஒரு கட்டத்தில் க்ளோசப் அவரை நோக்கி செல்லும். அவர் முகத்தில் அப்படி ஒரு சாந்த்தம் பரவி இருப்பதை காணலாம் !

https://www.youtube.com/watch?v=aNpT2QbfQzQ


தாயை காத்த தனயன் திரைபடத்திலிருந்து எனக்கு பிடித்த சிலம்பு பயிற்சி காட்சி

https://www.youtube.com/watch?v=SDdNnRM1O94

- VIDEO COURTESY : Mr. SAILESH BABU. THANKS SIR !

RKS

Russellzlc
2nd June 2015, 05:37 PM
வாங்க திரு.ஆர்.கே.எஸ்., எங்கே ரொம்ப நாளா காணோம். தாயைக் காத்த தனயன் படம் திருச்சியில் வெளியாகும் செய்தியையும் வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ததற்கு நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
2nd June 2015, 05:43 PM
http://i62.tinypic.com/imta8h.jpg

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

ஒரு பெரியவர். அவரை ஜகத்குரு என்று அழைப்பார்கள். ஒருமுறை அவர் வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்றபோது, ஒருவர் அவர் தங்கியிருந்த இடத்தில் அவரை சந்தித்து, ஒரு குறிப்பிட்ட மதத்தின் குருவாக இருக்கும் உங்களை இந்த உலகத்துக்கே குரு என்று சொல்கிறார்களே? அதை எப்படி ஏற்க முடியும்? நீங்கள் எப்படி ஏற்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெரியவர், ‘‘அப்படியா? நான் அப்படி நினைக்கவில்லை. அவர்கள் ஜகத்குரு என்று சொல்லும்போதெல்லாம் இந்த ஜகமே எனக்கு குரு என்பதாகத்தான் நினைக்கிறேன்’ என்றார். கேள்வி கேட்டவர் வெட்கி, அந்தப் பெரியவருக்கு வணக்கம் தெரிவித்து போய்விட்டார். அந்தப் பெரியவர்...

காஞ்சி மகா பெரியவரேதான் அவர். 1966-ம் ஆண்டு ஐ.நா. சபையில் எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடுவதற்காக அவர் கொடுத்த பாடல்தான் உலகையே அன்பால் வென்று எல்லாரும் சுகமாக வாழ வேண்டும் என்பதை விளக்கும் ‘மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி....’

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் நாடுகளுக்குள்ளே சண்டை ஏது? போர் ஏது? வசுதேவ குடும்பகம் என்பதுபோல உலகமே ஒரு குடும்பமாகிவிடுமே?

அப்படிப்பட்ட நிலை வந்தால்......... இதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதி தாசனும் ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்...’ என்கிறார்.

உலகமே ஒன்றானால் தனியுடமை கொடுமை ஏது? அந்த நிலை அடையவேண்டும் என்ற உணர்வு நமக்கு வேண்டும். அந்த உணர்வு வந்தால் அயராமல் உழைப்போம். தனியுடமை பேசும் மனிதரையும் ஒதுக்கிவிடுவோம்.

உணர்வெனும் கனலிடை
அயர்வினை எரிப்போம்
ஒரு பொருள் தனி எனும்
மனிதரைப் பிரிப்போம்

பிரிப்பது என்றால் அவர்களை பிரித்து துரத்துவது என்று அர்த்தமல்ல. அவர்களை பிரித்து இனம் கண்டு பின்னர் திருத்த வேண்டும். சூழ்நிலையால் தவறு செய்யும் மனிதர்களையும் பண்படுத்தி நேர் வழியில் திருத்தும் கதையமைப்பைக் கொண்ட மக்கள் திலகம் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில் இடம் பெற்ற புரட்சிக் கவிஞரின் ‘புதியதோர் உலகம் செய்வோம்.’ பாடல் மிகவும் அருமையான சிந்திக்கத் தூண்டும் பாடல்.

ஆஹா... எதையோ சொல்ல வந்து எங்கோ போய்விட்டது. மகா பெரியவரை பற்றி சொன்னேனே. இன்று அவரது பிறந்த நாள். அவரது நினைவோடு புரட்சிக் கவிஞர் பாடலை மக்கள் திலகம் பாடும் காட்சியை ரசிப்போமே. (நண்பர்கள் யாராவது பாடலை தரவேற்ற வேண்டுகிறேன்.)

புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

மைத்ரீம் பஜத அகில ஹ்ருஜேத்ரி...

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

siqutacelufuw
2nd June 2015, 11:42 PM
http://i58.tinypic.com/2r2c4k4.jpg

Courtesy : Facebook

fidowag
2nd June 2015, 11:43 PM
தின இதழ் -02/06/2015
http://i57.tinypic.com/2v9ub5y.jpg
http://i61.tinypic.com/59uhxe.jpg
http://i59.tinypic.com/34spkiq.jpg
http://i59.tinypic.com/vq4n5e.jpg
http://i57.tinypic.com/6jhd11.jpg

siqutacelufuw
2nd June 2015, 11:44 PM
http://i61.tinypic.com/2mow9ki.jpg

Courtesy : Facebook

fidowag
2nd June 2015, 11:45 PM
தின இதழ் -02/06/2015 தொடர்ச்சி...


http://i61.tinypic.com/34jdrvq.jpg
http://i62.tinypic.com/2hxrhx2.jpg
http://i61.tinypic.com/14bni47.jpg
http://i60.tinypic.com/4t66ts.jpg

siqutacelufuw
2nd June 2015, 11:47 PM
http://i58.tinypic.com/dmv1oz.jpg

siqutacelufuw
2nd June 2015, 11:51 PM
http://i61.tinypic.com/2yy5ksm.jpg

Courtesy : Facebook

siqutacelufuw
2nd June 2015, 11:55 PM
http://i59.tinypic.com/kf07b6.jpg

siqutacelufuw
3rd June 2015, 12:02 AM
http://i57.tinypic.com/xaurfn.jpg

siqutacelufuw
3rd June 2015, 12:18 AM
http://i59.tinypic.com/m7bamo.jpg

siqutacelufuw
3rd June 2015, 12:33 AM
http://i60.tinypic.com/20gz5tw.jpg


படப்பிடிப்பை தொடங்கிவைக்கும் தலைவர். பக்கத்தில் நடிகர் பாண்டியராஜன்

Russellisf
3rd June 2015, 01:11 AM
ஏன் தலைவர் மீது எனக்கு இவ்வளவு பற்று ? தலைவர் முதல்வர் ஆனபோது ! நான் அரக்கோணம் ரயில்நிலையத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செயிதுகொன்ன்டு இருந்தேன் 1980 என்று நினைக்கிறேன் ! தலைவர் கொள்ளூர் மூகம்பிகையை தரிசனம் செய்துவிட்டு அதிகாலையில் ஆறுமணிக்கு ரெயிலில் சென்னைக்கு திரும்பிக்கொண்டு இருந்தார் ! வண்டி அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நின்றது தகவல் அறிந்த தொண்டர்கள் தலைவரை பார்க்க கூடிவிட்டார்கள் சிறு கூட்டம்தான் ! உதவியாளர் தலைவருக்கு தகவல் சொல்கிறார் ! என்தலைவன் சிரித்த முகத்துடன் வெளியில் வருகிறார் கூட்டத்தை பார்த்து கும்பிடுகிறார் !!!!!
பெருக்கிக்கொண்டு இருந்தநான் இரு துடைப்பங்களையும் என் முதுகின்மேல் வைத்துகொண்டு கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு தலைவரிடம் கையை நீட்டினேன் எட்டவில்லை ! என் துடைப்பங்களையும் கோலத்தையும் பார்த்த தலைவர் மற்ற கைகளை எல்லாம் தட்டிவிட்டு என் கையை பிடித்து இழுத்து எனக்கு கையை தருகிறார் மற்றவர்கள் எல்லாம் என்னை ஒரு ஹீரோ மாதிரி பார்க்கிறார்கள் ! தலைவர் என்னை மட்டுமே பார்த்து சிரித்துகொண்டே கையை ஆட்டுகிறார் ! வண்டி புறப்பட்டுவிட்டது ! அவருக்கு கொடுத்த கையை முகர்ந்தேன் ! சந்தன வாசம் அந்த நாள் முழுக்க போகவில்லை
அன்று முதல் தலைவரின் தொண்டன் ஆகிவிட்டேன் நண்பர்களே


courtesy net

Russellrqe
3rd June 2015, 08:44 AM
4.6.2015
http://i61.tinypic.com/1e15l5.jpg
பின்னால் அமர்ந்திருப்பவர் திரு விஜயன்
மக்கள் திலகத்தின் மரு மகனும் , மன்னாதி மன்னன் பத்திரிகை ஆசிரியருமான திரு விஜயன் அவர்களின் 7 வது ஆண்டு நினைவு நாள் .

Russellrqe
3rd June 2015, 11:58 AM
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அன்றையகாங்- திமுக கூட்டணி தலைவர்கள் ''முடிந்தது எம்ஜிஆர் அத்தியாயம் '' என்று எல்லையில்லாஆனந்தத்தில் எள்ளி நகையாடினார்கள் துள்ளி வருகுது வேல் என்று விளம்பரம் தந்தார்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் எதை பற்றியும் கவலை படாமல் மக்களை நேரில் சந்தித்து வாக்கை கேட்டார் . 1980 சட்ட சபை தேர்தல் நடந்த நேரத்தில் வெற்றி நமதே என்று போஸ்டர்ஸ் தயார் செய்து விட்டார்கள் . தேர்தல் முடிவும் வந்து விட்டது .''வெற்றி தேவதை ''வழக்கம் போல் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு கிடைத்தது .மக்கள் திலகம் இரண்டாவது முறை மீண்டும் முதல்வரானார் . கனவில் மிதந்தவரை ''இன்று போல் என்றும் வாழ்க'' வாழ்த்தினார்கள்

ainefal
3rd June 2015, 02:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/3rd%20June%202015_zps2xgnbbkf.jpg

http://dinaethal.epapr.in/512732/Dinaethal-Chennai/03.06.15#page/11/1

ainefal
3rd June 2015, 02:10 PM
1980 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றதை முன்னிட்டு அன்றையகாங்- திமுக கூட்டணி தலைவர்கள் ''முடிந்தது எம்ஜிஆர் அத்தியாயம் '' என்று எல்லையில்லாஆனந்தத்தில் எள்ளி நகையாடினார்கள் துள்ளி வருகுது வேல் என்று விளம்பரம் தந்தார்கள் .

மக்கள் திலகம் எம்ஜிஆர் எதை பற்றியும் கவலை படாமல் மக்களை நேரில் சந்தித்து வாக்கை கேட்டார் . 1980 சட்ட சபை தேர்தல் நடந்த நேரத்தில் வெற்றி நமதே என்று போஸ்டர்ஸ் தயார் செய்து விட்டார்கள் . தேர்தல் முடிவும் வந்து விட்டது .''வெற்றி தேவதை ''வழக்கம் போல் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு கிடைத்தது .மக்கள் திலகம் இரண்டாவது முறை மீண்டும் முதல்வரானார் . கனவில் மிதந்தவரை ''இன்று போல் என்றும் வாழ்க'' வாழ்த்தினார்கள்

பத்திரிக்கை நபர்களுக்கு நாளை கோட்டையில் சந்திப்போம் என்று கூறினார் திராவிட முன்னேற்ற கழக தலைவர்.

Russellzlc
3rd June 2015, 07:04 PM
http://i59.tinypic.com/m7bamo.jpg

கண்புரை அறுவை சிகிச்சை செய்து, சிறிது ஓய்வுக்குப் பின் புரட்சித் தலைவரின் அரிய புகைப்படங்களோடு பதிவுகளைத் துவங்கியிருக்கும் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நன்றிகள். இந்த படங்களை பார்த்த பிறகு எங்களுக்கு கண் பளிச்சென்று தெரிவது போன்ற உணர்வு. நன்றி சார்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd June 2015, 07:10 PM
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,

நானும் அரசியல் பற்றிய கட்டுரைகளில் தகவல் பிழைகள் இருந்தாலும் சுட்டிக்காட்ட விரும்புவதில்லை. நண்பர் திரு.குமார் அவர்களுக்கு நீங்கள் அளித்துள்ள விளக்கத்தில் புரட்சித் தலைவர் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதால் சொல்ல விரும்புகிறேன். அதில் தகவல் பிழை என்று சொல்லவில்லை. ஆனால், தவறான அர்த்தம் வரும் அபாயம் உள்ளது.

//தஞ்சை தொகுதியை தேர்வு செய்ததும், முதலில் ஆதரவு தருவதாக சொன்ன எம்ஜிஆர் அவர்கள் பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்திராகாந்தி அவர்கள் வேட்பாளராவதற்கு தருவதாக சொன்ன ஆதரவை விலக்கி கொள்ள பிறகு சிங்காரவடிவேலு போட்டியிட்டது பற்றியெல்லாம் இங்கே நிறைய பேசியிருக்கிறோம். //

என்று கூறியுள்ளீர்கள். இந்திரா காந்தி அம்மையாருக்கு முதலில் ஆதரவு தருவதாக சொன்ன புரட்சித் தலைவர் பின்னர் ஆதரவு தர மறுத்தது (தஞ்சையில் மட்டும்) உண்மை. தஞ்சையில் இந்திரா காந்தி போட்டியிட்டால் அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியாகின. அப்படி போட்டியிட்டால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் இந்திராகாந்திக்கு (தஞ்சையில் மட்டும்) ஆதரவு தர முடியாது என்று புரட்சித் தலைவர் கூறினார்.

அதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு இந்திரா காந்தி அம்மையார் வந்தபோது நடந்த கொலைவெறித் தாக்குதலும் பலர் படுகாயமடைந்ததும் திரு.நெடுமாறன் அவர்கள் இந்திராவை காப்பாற்றியதும், காங்கிரஸ் பிரமுகர் அப்துல் காதர் என்பவருக்கு கண்பார்வை போனதும் யாவரும் அறிந்ததே. அதுபோன்ற பயங்கரம் மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதால்தான், தஞ்சையில் (மட்டும்)இந்திராவுக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தர மறுத்தார். நிலைமைகளை புரிந்து கொண்டு இந்திராவும் போட்டியிடவில்லை.

அதே நேரம், சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திரா காந்திக்கு புரட்சித் தலைவர் ஆதரவு தந்ததோடு திரு.முசிறிப்புத்தன் தலைமையிலான குழுவை தேர்தல் பணிகளுக்காக அனுப்பி வைத்தார். அவர்களது தேர்தல் பணிகளுக்காக பின்னர், அவர்களை இந்திரா காந்தி பாராட்டினார் என்பதும் உண்மை.

‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தஞ்சையில் இந்திராகாந்தி அம்மையாருக்கு ஆதரவை புரட்சித் தலைவர் விலக்கிக் கொண்டார்’ என்று மட்டுமே சொன்னால், அவர் வார்த்தை மாறிவிட்டார் என்பதுபோல தவறான அர்த்தம் வருகிறது. அப்படியே புரிந்து கொள்ளப்படும் அபாயமும் உள்ளது. என்பதற்காகவே இதை சுட்டிக்காட்ட வேண்டி வந்தது.

நீங்களும் சரியான முறையில் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russelldvt
3rd June 2015, 09:07 PM
http://i58.tinypic.com/vne8zr.jpg

Russelldvt
3rd June 2015, 09:08 PM
http://i59.tinypic.com/vmria9.jpg

Russelldvt
3rd June 2015, 09:09 PM
http://i61.tinypic.com/2po2ich.jpg

Russelldvt
3rd June 2015, 09:10 PM
http://i62.tinypic.com/8xt24k.jpg

Russelldvt
3rd June 2015, 09:13 PM
http://i58.tinypic.com/2z4g3yx.jpg

ainefal
3rd June 2015, 09:14 PM
புரட்சித்தலைவரின் நண்பராக ஒரு காலத்தில் இருந்த தி.மு.க தலைவர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk1_zpslqizlerq.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk2_zpsnop35yip.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk3_zpsk0mvqbaz.jpg

Thanks to Ravi, FB.

Russellzlc
3rd June 2015, 09:46 PM
திரு.முத்தையன் அவர்களுக்கு,

‘தலைவரின் ஆசியோடு மீண்டும் வந்து விட்டேன். தலைவர் காப்பாற்றுவார்’ என்கிறீர்கள். ‘என்னால் முடியவில்லை’ என்கிறீர்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? உடல் நலனை பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
3rd June 2015, 09:47 PM
புரட்சித்தலைவரின் நண்பராக ஒரு காலத்தில் இருந்த தி.மு.க தலைவர் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk1_zpslqizlerq.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk2_zpsnop35yip.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrkk3_zpsk0mvqbaz.jpg

Thanks to Ravi, FB.

நன்றி திரு.சைலேஷ் சார்,

அபூர்வமான பதிவு. திரு.கருணாநிதி அவர்கள் ஆற்றலாளர்தான். அறிவுக் கூர்மை மிக்கவர்தான். தலைவர் விஷயத்தில் மட்டும் அவர் தடம் மாறாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் நிலையே வேறு.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
3rd June 2015, 09:49 PM
Kalaivendhan Sir,

As regards what happened in 1980 Chepauk Guest House, AIADMK and DMK joining together, please watch the video [ audio Panruti S.Ramachandran]. I do not intend to hurt anyone,this is for info. only:

https://www.youtube.com/watch?v=EMMSGgR4Hgk

Richardsof
4th June 2015, 04:53 AM
இனிய நண்பர் கலைவேந்தன்

திரு குமார் அவர்கள் தன்னுடைய பதிவில் 1980ல் நிலவிய அரசியல் சூழ்நிலையை கூறி இருந்தார் .தவறாக ஒன்றும் கூறவில்லை ..உங்கள் பதிலும் சரியாக இருந்தது .நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆரையும் அவருடைய புகழையும் மறைமுகமாக தாக்கி பதிவிடுவதில் வல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .விட்டு விடுங்கள் .வராது , தெரியாது , புரியாது இது அவர்களின் தாரக மந்திரம் .

Russellail
4th June 2015, 06:00 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.

http://i62.tinypic.com/bfm5nk.jpg

சத்ய தாயின் தவத்திரு அருள்வடிவே அன்பு திருஉருவே;
சதிலீலாவதி பெருமை சேர்த்த சாதனை வீரனே, அழகனே;
சரித்திரம் புகழ வந்த சக்ரவர்த்தி திருமகனே, முக்கால முதல்வனே
சரிநிகர் சமான சமநீதி ஏற்றுரைத்த மன்னாதி மன்னனே;
சத்துணவு திட்டம் தந்த சமத்துவ ஒளிவிளக்கே - நின்
சாம்ராஜ்யம் நிலைநாட்டிய நிருத்ய சக்ரவர்த்தியே.

fidowag
4th June 2015, 07:36 AM
தின இதழ் -03/06/2015
http://i59.tinypic.com/96mcrc.jpg
http://i57.tinypic.com/3147cli.jpg

http://i58.tinypic.com/2gt146e.jpg
http://i60.tinypic.com/27yy9p4.jpg
http://i58.tinypic.com/t51x13.jpg
http://i57.tinypic.com/n4k1ew.jpg

fidowag
4th June 2015, 07:38 AM
http://i61.tinypic.com/eth3dj.jpg
http://i59.tinypic.com/20po4m1.jpg
http://i58.tinypic.com/2je73mt.jpg

fidowag
4th June 2015, 07:41 AM
சினிமா எக்ஸ்ப்ரஸ் செய்திகள் - ஜூன் 2015
http://i61.tinypic.com/afbjt5.jpg
http://i61.tinypic.com/raonet.jpg
http://i58.tinypic.com/f4r81h.jpg
http://i61.tinypic.com/2usd2s0.jpg

http://i59.tinypic.com/2woao8z.jpg

fidowag
4th June 2015, 07:55 AM
http://i59.tinypic.com/2vnhrgg.jpg
http://i62.tinypic.com/2jdrw4y.jpg
http://i62.tinypic.com/160cwau.jpg
பாக்தாத்
http://i58.tinypic.com/2hed769.jpg

fidowag
4th June 2015, 07:59 AM
http://i58.tinypic.com/2ldg748.jpg
http://i60.tinypic.com/8z0fo2.jpg
http://i57.tinypic.com/ion71u.jpg
http://i59.tinypic.com/2q3yqmh.jpg
http://i60.tinypic.com/2zq4wsk.jpg

fidowag
4th June 2015, 08:00 AM
http://i61.tinypic.com/15g22x.jpg

Russellbpw
4th June 2015, 08:26 AM
இனிய நண்பர் கலைவேந்தன்

திரு குமார் அவர்கள் தன்னுடைய பதிவில் 1980ல் நிலவிய அரசியல் சூழ்நிலையை கூறி இருந்தார் .தவறாக ஒன்றும் கூறவில்லை ..உங்கள் பதிலும் சரியாக இருந்தது .நேரம் கிடைக்கும் போதெல்லாம் எம்ஜிஆரையும் அவருடைய புகழையும் மறைமுகமாக தாக்கி பதிவிடுவதில் வல்லவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .விட்டு விடுங்கள் .வராது , தெரியாது , புரியாது இது அவர்களின் தாரக மந்திரம் .

எஸ்வி சார்

வணக்கங்கள் !

மறைமுகமாக எதற்கு தாக்கவேண்டும் என்பது எனக்கு புரியவில்லை.
படித்த செய்தியில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதற்காக இது வக்காலத்தும் இல்லை.

மனிதர்களை பொறுத்தவரையில் வராது, தெரியாது, புரியாது ரகம் உண்டு - அதில் தவறில்லை. முற்றும் துறந்தவர் உண்டு...அறிந்தவர் எவரும் இல்லை !

ஆனால் மனிதர்களில் சிலருக்கு வரும், தெரியும், புரியும், இருப்பினும் வந்தாலும், தெரிந்தாலும் புரிந்தாலும் இப்படிதான் ..என்பது தாரகமந்திரமாக இருகிறதே...அது தவறுதானே ! :-)

rks

fidowag
4th June 2015, 08:29 AM
http://i60.tinypic.com/25f625u.jpg

fidowag
4th June 2015, 08:30 AM
http://i57.tinypic.com/jikux4.jpg

fidowag
4th June 2015, 08:31 AM
http://i61.tinypic.com/2lu3prd.jpg

fidowag
4th June 2015, 08:32 AM
http://i58.tinypic.com/2nta9s7.jpg




எனது தாயாரின் மறைவு செய்தி குறித்து, புகைப்படத்துடன் இரங்கல் செய்தி
பிரசுரம் செய்துள்ள இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி.


இந்த செய்தியும், தகவலும் அறிந்த எனது சகோதர , சகோதரிகளும் , மற்றும்
குடும்பத்தினரும் , இதயக்கனி ஆசிரியர் திரு. விஜயனுக்கு நன்றி
தெரிவித்துள்ளார்கள்.

ஆர். லோகநாதன்.
இணை செயலாளர்,
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்.

fidowag
4th June 2015, 08:33 AM
http://i62.tinypic.com/x39wk6.jpg

fidowag
4th June 2015, 08:34 AM
http://i61.tinypic.com/14k8ims.jpg

fidowag
4th June 2015, 08:36 AM
http://i61.tinypic.com/dxjk2v.jpg
http://i62.tinypic.com/25uk6sy.jpg
http://i58.tinypic.com/2ugkjv9.jpg

fidowag
4th June 2015, 08:38 AM
http://i57.tinypic.com/110ewqg.jpg

fidowag
4th June 2015, 08:39 AM
http://i60.tinypic.com/2ci8ynn.jpg

fidowag
4th June 2015, 08:40 AM
http://i59.tinypic.com/2rdgr3o.jpg

fidowag
4th June 2015, 08:40 AM
http://i62.tinypic.com/24lokza.jpg

fidowag
4th June 2015, 08:42 AM
http://i57.tinypic.com/35nbktv.jpg

fidowag
4th June 2015, 08:43 AM
http://i62.tinypic.com/qqpk4g.jpg

fidowag
4th June 2015, 08:45 AM
http://i57.tinypic.com/1yajqu.jpg

Russellxss
4th June 2015, 09:13 AM
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/q85/s720x720/11207337_872473559506581_6874641555490759588_n.jpg ?oh=d09c2ae76d6f3aad480f1544b05757e5&oe=55F97CDA


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்,

Russellxss
4th June 2015, 09:28 AM
வரும் 5.06.2015 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நம்நாடு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கப்படும் பேனர்.

படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/p480x480/11390168_480703735420071_5173067554784157606_n.jpg ?oh=911a524550b219db73d39a7d56202a43&oe=55EF5B98

சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellsui
4th June 2015, 11:17 AM
puratchi talaivari kurai kooriyum goabels endrum muttaalgal kooruvathal avar pugal mangaadhu. Mudhalil avargal unmai pesatum.

ainefal
4th June 2015, 02:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/4th%20June%202015_zpsaqyr3lca.jpg

http://dinaethal.epapr.in/514005/Dinaethal-Chennai/04.06.15#page/13/1

Russellzlc
4th June 2015, 02:57 PM
மதுரையில் நம்நாடு திரைப்படம் வெளியாகும் தகவலையும் வெற்றி பெற வாழ்த்துக்களும் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தரராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th June 2015, 03:09 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

துள்ளி வருகுது வேல் படத்தின் விளம்பரம் பற்றி மட்டுமே நீங்கள் கருத்து தெரிவித்திருந்தால், நீங்கள் எதிர்பார்த்தது போல என்னிடம் இருந்து பதில் வந்திருக்காது. தஞ்சை தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவர் நிலைப்பாடு பற்றி கூறியதால் பதிலளிக்க வேண்டி வந்தது.

என் கருத்தில் இருந்து மாறுபடுவதாக கூறியிருக்கிறீர்கள். தாராளமாக. அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மாட்டேன். கட்டாயப்படுத்தவும் கூடாது, முடியாது. உங்கள் கருத்து உங்களுக்கு.

அதற்காக, மதுரையில் இந்திரா காந்தி அம்மையார் தாக்கப்பட்டதோ, இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, தஞ்சையில் அவருக்கு ஆதரவு அளிக்க மறுத்த புரட்சித் தலைவர், சிக்மகளூர் தேர்தலில் ஆதரவு அளித்ததோ, திரு.முசிறிப்புத்தன் தலைமையிலான குழுவினரை தேர்தல் பணிக்காக சிக்மகளூருக்கு அனுப்பியதோ, அதற்கு இந்திரா காந்தி அம்மையார் பாராட்டும் நன்றியும் தெரிவித்ததோ உண்மையல்ல என்று ஆகிவிடாது. இந்த நிகழ்ச்சிகளை யாரும் மறுக்கவும் மாட்டார்கள்.


திரு.கோபால்,

மதுரகானம் திரியில் ‘நானன்றி யார் வருவார்?’ பாடல் பற்றி நான் எழுதியபோது டி.ஆர்.மகாலிங்கம் திமுகவில் ஒரு காலத்தில் முக்கியஸ்தர் தெரியுமா? என்றீர்கள். அதை நான் மறுத்து, எனக்குத் தெரிந்து அப்படி எதுவும் இல்லை. நீங்கள் தெரிந்தால் கூறுங்களேன் என்றதும் அமைதியாகிவிட்டீர்கள்.

பாசம் படத்தில் உலகம் பிறந்தது எனக்காக பாடல் வரிகளை புரட்சித் தலைவர் மாற்றச் சொன்னார் என்றீர்கள். (மக்கள் திலகத்துக்கு தாயை பிடிக்காது பாருங்கள்)

எகிப்து அதிபர் நாசர் விசாரித்துத்தான் நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களை நேரு தெரிந்து கொண்டாராம் என்று கூறினீர்கள். (இது உண்மையா? பொய்யா? என்று நண்பர்கள் சொல்லட்டுமே)


என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறி, நான் பதில் அளித்ததும் நைசாக நழுவிய நீங்கள் உண்மைத்தன்மை பற்றியெல்லாம் பேசக்கூடாது. கோயபல்ஸ் யாரென்று எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

பின் குறிப்பு: நமது சகோதரர்கள் யாரும் கடுமையாக பேச வேண்டாம் என்று அன்போடு கோருகிறேன்.

Russellxss
4th June 2015, 07:15 PM
வரும் 5.06.2015 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நம்நாடு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கப்படும் பேனர். ( விநியோகஸ்தரின் ரசனைக்கேற்ப மாற்றங்களுடன் இறுதி வடிவம் பெற்ற பேனர் )

படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p480x480/11391111_480877002069411_625508381052335542_n.jpg? oh=7c64f674ef3c632510137e65fc934722&oe=5634D4C3&__gda__=1443204615_3e77365309fc37c854fc165abd39f09 6


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

Russellzlc
4th June 2015, 07:41 PM
வரும் 5.06.2015 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த நம்நாடு திரைப்படத்திற்கு தியேட்டரில் வைக்கப்படும் பேனர். ( விநியோகஸ்தரின் ரசனைக்கேற்ப மாற்றங்களுடன் இறுதி வடிவம் பெற்ற பேனர் )

படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xat1/v/t1.0-9/p480x480/11391111_480877002069411_625508381052335542_n.jpg? oh=7c64f674ef3c632510137e65fc934722&oe=5634D4C3&__gda__=1443204615_3e77365309fc37c854fc165abd39f09 6


சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.

நன்றி திரு.சுந்தரராஜன் சார்,

விநியோகஸ்தரின் ரசனைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட பேனர் என்று கூறியுள்ளீர்கள். விநியோகஸ்தர் ரசனை மிக்கவர் என்று தெரிகிறது. நம்நாடு திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து அந்த விநியோகஸ்தருக்கு லாபத்தை வாரி வழங்க வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

Russellzlc
4th June 2015, 08:29 PM
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். திரு.குமாருக்கு ‘துள்ளி வருகுது வேல் இந்த தேதியில் வந்த விளம்பரம் சார்.நீங்கள் சொல்வதில் பிழை உள்ளது ’ என்று மட்டுமே சொல்லியிருந்தால் அதோடு முடிந்திருக்கும். நான் தலையிட்டிருக்கவே மாட்டேன். நான் அதைப்பற்றி எதுவும் சொல்லவில்லையே.

தஞ்சாவூர் இடைத்தேர்தலில் புரட்சித் தலைவரின் நிலைப்பாடு பற்றி ‘சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இந்திராவுக்கு ஆதரவு தர மறுத்து விட்டார்’ என்று தேவையில்லாமல் கூறியது நீங்கள்தான். அதனால்தான், என்னிடமிருந்து பதில் வரும் என்று நீங்களே எதிர்பார்த்திருக்கிறீர்கள். அதுவும் நீங்கள் வேண்டுமென்றே சொல்கிறீர்கள் என்றும் கூட நான் குற்றம் சாட்டவில்லையே. உங்கள் கருத்தை படிப்பவர்கள் தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தலில் புரட்சித் தலைவர் பின்வாங்கி விட்டார் (கோபால் சொல்வது போல) என்று நினைத்து விடக் கூடாதே என்பதற்காகவே என் விளக்கம் என்றும் தெளிவாக சொல்லியிருக்கிறேன்.

என் அபிமானத்துக்குரியவரை பாதுகாப்பதாக நான் பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, புரட்சித் தலைவர் பலவீனமானவரோ, புகழ் குறைந்து விட்டவரோ அல்ல நண்பரே.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

ainefal
4th June 2015, 08:47 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk19_zpslnfuxpqu.jpg

ainefal
4th June 2015, 08:49 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/BHARAT%20RATNA%20MGR1_zpsxxggpwun.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/BHARAT%20RATNA%20MGR2_zpsxgv2wg55.jpg

ainefal
4th June 2015, 08:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ENAKKUL%20MGR1_zpsmy2ko2oh.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ENAKKUL%20MGR2_zpsbuou4rpg.jpg

ainefal
4th June 2015, 08:50 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ENGAL%20THANGAM%20MGR1_zpsgzqxxgbj.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ENGAL%20THANGAM%20MGR2_zpsx8fjy8ct.jpg

ainefal
4th June 2015, 08:51 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/EPPADI%20JEYITHEN1_zpsftogpzjj.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/EPPADI%20JEYITHEN2_zpsummknj7r.jpg

ainefal
4th June 2015, 08:52 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/IDHAYAKKANI%20MGR1_zpsv8mfqyss.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/IDHAYAKKANI%20MGR2_zpsnkwib8se.jpg

ainefal
4th June 2015, 08:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/KAVIYA%20THALAIVARUM%20KAVIYA%20KAVINJARUM1_zpsjyy snabz.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/KAVIYA%20THALAIVARUM%20KAVIYA%20KAVINJARUM2_zpsfjc zs0rr.jpg

ainefal
4th June 2015, 08:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAA%20MANIDHAR1_zps8kail3q7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAA%20MANIDHAR2_zpsysa1znx6.jpg

ainefal
4th June 2015, 08:54 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MADURAI%20VEERAN1_zpsfwoeng3f.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MADURAI%20VEERAN2_zpscj9jqgnm.jpg

ainefal
4th June 2015, 08:55 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20ASAN%20MGR1_zpsbc3jeuvb.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20ASAN%20MGR2_zpspdqqcvql.jpg

ainefal
4th June 2015, 08:57 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20MANADHIL%20MGR1_zps1zzozphw.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20MANADHIL%20MGR2_zpsbtuidkvj.jpg

ainefal
4th June 2015, 08:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20THILAGAM%20MGR1_zps0zfj0uaw.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20THILAGAM%20MGR2_zpshhznmq68.jpg

ainefal
4th June 2015, 08:58 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20THILAGAM%20MGR%20MAGATHANA%20VARALARU1_zp sc5w4g02s.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MAKKAL%20THILAGAM%20MGR%20MAGATHANA%20VARALARU2_zp sng3zylom.jpg

ainefal
4th June 2015, 08:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANATHAI%20THOTTA%20MAKKAL%20THILAGAM1_zpstytugg9u .jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANATHAI%20THOTTA%20MAKKAL%20THILAGAM2_zpsagxh89mp .jpg

ainefal
4th June 2015, 09:00 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANIDHA%20PUNIDHAR%20MGR1_zpswsmagqmc.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANIDHA%20PUNIDHAR%20MGR2_zps5pkcflu6.jpg

ainefal
4th June 2015, 09:01 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANNADHI%20MANNAN1_zpsx3mlxfbd.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MANNADHI%20MANNAN2_zps7wjiroxv.jpg

ainefal
4th June 2015, 09:01 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MARAKKA%20MUDHIYADHA%20MAKKAL%20THILAGAM%20MGR1_zp s7b4fepqc.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MARAKKA%20MUDHIYADHA%20MAKKAL%20THILAGAM%20MGR2_zp shitephbf.jpg

ainefal
4th June 2015, 09:02 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20100%20EZHILANA%20VAZHKKAI%20PADHAI1_zpsmfxp7 y6w.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20100%20EZHILANA%20VAZHKKAI%20PADHAI2_zps1l82a b6f.jpg

fidowag
4th June 2015, 09:03 PM
இதயக்கனி மாத இதழ் - செய்திகள் /புகைப்படங்கள் தொடர்ச்சி........

http://i57.tinypic.com/28sndxs.jpg

ainefal
4th June 2015, 09:03 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20A%20BIOGRAPHY1_zpsmffkkrw7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20A%20BIOGRAPHY2_zpsfol7orq1.jpg

ainefal
4th June 2015, 09:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20IN%20THEERGA%20DHARISANAM1_zpszexujxp7.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20IN%20THEERGA%20DHARISANAM2_zpsq7p03faq.jpg

fidowag
4th June 2015, 09:04 PM
http://i61.tinypic.com/2ppd0zc.jpg

ainefal
4th June 2015, 09:04 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20JEWEL%20OF%20THE%20MASSES1_zpsauu3bqog.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20JEWEL%20OF%20THE%20MASSES2_zpsqw6qvrbp.jpg

ainefal
4th June 2015, 09:06 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20KAVIDHAIGAL1_zps5jloiucm.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20KAVIDHAIGAL2_zpsnjlfpt7n.jpg

ainefal
4th June 2015, 09:06 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20KOLAI%20MUYARCHI%20VAZHAKKU1_zpsa5ks5gbo.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20KOLAI%20MUYARCHI%20VAZHAKKU2_zpsoirstg9e.jpg

fidowag
4th June 2015, 09:07 PM
http://i59.tinypic.com/2rylqvc.jpg

ainefal
4th June 2015, 09:07 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20NADIGAR%20MUDHALVARANA%20VARALARU1_zpsldbecs nd.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20NADIGAR%20MUDHALVARANA%20VARALARU2_zps2ltdsz wf.jpg

fidowag
4th June 2015, 09:08 PM
http://i60.tinypic.com/i71pvs.jpg

ainefal
4th June 2015, 09:08 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20NADIPPUM%20ARASIYALUM1_zpsmwjgvioj.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20NADIPPUM%20ARASIYALUM2_zpsktkbx8o8.jpg

ainefal
4th June 2015, 09:09 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20ORU%20SAGAPTHAM1_zps81skbiw8.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20ORU%20SAGAPTHAM2_zpslrz2ke8e.jpg

ainefal
4th June 2015, 09:10 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20P.DEENADAYLAN1_zpsoxjgjtiu.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20P.DEENADAYLAN2_zpsk1wdlea5.jpg

ainefal
4th June 2015, 09:11 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20PETTIGAL1_zpsikuxgjcb.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20PETTIGAL2_zpsx1b2iwvt.jpg

ainefal
4th June 2015, 09:11 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20VARALATTRU%20NIGHAZVUGAL%20PART%201-1_zpsozhbca8a.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20VARALATTRU%20NIGHAZVUGAL%20PART%201-2_zps6zdmahn8.jpg

ainefal
4th June 2015, 09:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20VARALATTRU%20NIGHAZVUGAL%20PART%202-1_zps8i6ixncy.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/MGR%20VARALATTRU%20NIGHAZVUGAL%20PART%202-2_zpsjgniozam.jpg

ainefal
4th June 2015, 09:13 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20ANAITTAL1_zpsu5jh2nnr.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20ANAITTAL2_zpse2lrvagv.jpg

ainefal
4th June 2015, 09:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20KANDA%20MGR1_zpsqznojy8v.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20KANDA%20MGR2_zpscotaiwpl.jpg

ainefal
4th June 2015, 09:14 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20YEN%20PIRANTHEN%20PART%201-1_zpspmjfgyut.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20YEN%20PIRANTHEN%20PART%201-2_zpsoej8ijqn.jpg

ainefal
4th June 2015, 09:15 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20YEN%20PIRANTHEN%20PART%202-1_zpswdgtgq31.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NAAN%20YEN%20PIRANTHEN%20PART%202-2_zpsp7h1txxt.jpg

ainefal
4th June 2015, 09:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NADOODI%20MANNAN1_zps242d5eyb.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NADOODI%20MANNAN2_zpsguabggvk.jpg

ainefal
4th June 2015, 09:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NENJODU%20NENJAM1_zpsb0m8u9b1.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/NENJODU%20NENJAM2_zps7wdcxmyj.jpg

fidowag
4th June 2015, 09:17 PM
http://i58.tinypic.com/2ymdnw4.jpg

ainefal
4th June 2015, 09:17 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PONMANACHEMMAL%20MGR1_zps8qurr6dn.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PONMANACHEMMAL%20MGR2_zpshfmpdukc.jpg

ainefal
4th June 2015, 09:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PURATCHITHALAIVARIN%20VETTRI%20MOZHIGAL1_zpsmtphvs 3b.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PURATCHITHALAIVARIN%20VETTRI%20MOZHIGAL2_zpsc2xb1i ha.jpg

ainefal
4th June 2015, 09:19 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PURATCHI%20THALAIVAR%20MGR%20SUCCESS%20FORMULA1_zp spuokn64n.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/PURATCHI%20THALAIVAR%20MGR%20SUCCESS%20FORMULA2_zp sjnce2edl.jpg

fidowag
4th June 2015, 09:19 PM
http://i62.tinypic.com/10yzwg7.jpg

ainefal
4th June 2015, 09:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/THALAIVAR%20THAMBI%20NAAN1_zpshg0njklt.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/THALAIVAR%20THAMBI%20NAAN2_zpsbot0vw8a.jpg

fidowag
4th June 2015, 09:20 PM
http://i61.tinypic.com/6elvly.jpg

ainefal
4th June 2015, 09:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/THARANI%20KANDA%20THANIPIRAVI%20MGR1_zpsa05cpycq.j pg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/THARANI%20KANDA%20THANIPIRAVI%20MGR2_zps6yhxjsls.j pg

fidowag
4th June 2015, 09:21 PM
http://i60.tinypic.com/b9gbyo.jpg

ainefal
4th June 2015, 09:21 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ULAGAM%20SUTRUM%20VALIBAN%20ORUVANA%20KADHAI1_zpsu zxokxkr.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/ULAGAM%20SUTRUM%20VALIBAN%20ORUVANA%20KADHAI2_zpsc s8jusy6.jpg

ainefal
4th June 2015, 09:22 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VAATHIYAR1_zpsxzplijm2.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VAATHIYAR2_zpsu76oanwt.jpg

fidowag
4th June 2015, 09:23 PM
நீதிக்கு தலை வணங்கு படத்தில் ஒரு காட்சி.

http://i62.tinypic.com/20r0odf.jpg

ainefal
4th June 2015, 09:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VARALARU%20PADAITHA%20VALLAL01_zpscafizzru.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VARALARU%20PADAITHA%20VALLAL1_zpsteupf87y.jpg

ainefal
4th June 2015, 09:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VAZTHU%20KATTIYA%20VALLAL%20MGR1_zpskzuik6rs.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/MGR%20BOOKS/VAZTHU%20KATTIYA%20VALLAL%20MGR2_zpsaxywmn7o.jpg

fidowag
4th June 2015, 09:24 PM
http://i57.tinypic.com/2622io1.jpg

fidowag
4th June 2015, 09:25 PM
http://i58.tinypic.com/vo62hu.jpg

ainefal
4th June 2015, 09:25 PM
The above are the Books which I have with me:

http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/uk19_zpslnfuxpqu.jpg

fidowag
4th June 2015, 09:26 PM
http://i57.tinypic.com/2n8bxax.jpg

fidowag
4th June 2015, 09:27 PM
http://i57.tinypic.com/1epb2v.jpg

http://i60.tinypic.com/1rp7w3.jpg

fidowag
4th June 2015, 09:29 PM
http://i59.tinypic.com/s5k6fm.jpg

fidowag
4th June 2015, 09:31 PM
http://i60.tinypic.com/2z58zew.jpg
http://i62.tinypic.com/mslkox.jpg

fidowag
4th June 2015, 09:32 PM
http://i61.tinypic.com/24dkitk.jpg
http://i60.tinypic.com/29zrhgk.jpg

fidowag
4th June 2015, 09:33 PM
http://i60.tinypic.com/zvv713.jpg

fidowag
4th June 2015, 09:34 PM
http://i61.tinypic.com/nfha82.jpg

fidowag
4th June 2015, 09:35 PM
http://i61.tinypic.com/s287e0.jpg

fidowag
4th June 2015, 09:36 PM
http://i57.tinypic.com/2ij40g1.jpg

fidowag
4th June 2015, 09:45 PM
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினர் திரு. விஜயன் அவர்களின்
7 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி , இன்று (04/06/2015) ராமாவரம் தோட்டத்தில்
அனுசரிக்கப்பட்டது. புரட்சி தலைவரின் பக்தர்கள் பெரும்பான்மையினர்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



நினைவு அஞ்சலி பற்றிய சுவரொட்டிகள் சென்னை மாநகரில் ஆங்காங்கே
ஒட்டப்பட்டிருந்தன. அவற்றுள் சில நண்பர்களின் பார்வைக்கு.

http://i60.tinypic.com/314t6xe.jpg

fidowag
4th June 2015, 09:46 PM
http://i59.tinypic.com/1r83f7.jpg

fidowag
4th June 2015, 09:49 PM
http://i58.tinypic.com/2heipup.jpg

fidowag
4th June 2015, 09:50 PM
http://i62.tinypic.com/t5ojlg.jpg

fidowag
4th June 2015, 09:51 PM
http://i59.tinypic.com/1zgge1g.jpg

fidowag
4th June 2015, 10:26 PM
http://i62.tinypic.com/oj11n4.jpg

fidowag
4th June 2015, 10:28 PM
http://i60.tinypic.com/2me323t.jpg

fidowag
4th June 2015, 10:29 PM
http://i60.tinypic.com/20t19qo.jpg

fidowag
4th June 2015, 10:30 PM
http://i62.tinypic.com/2j4zk1e.jpg

fidowag
4th June 2015, 10:31 PM
http://i58.tinypic.com/fxypas.jpg

fidowag
4th June 2015, 10:32 PM
http://i62.tinypic.com/unble.jpg

fidowag
4th June 2015, 10:33 PM
http://i59.tinypic.com/2501opv.jpg

fidowag
4th June 2015, 10:35 PM
http://i57.tinypic.com/jgjytl.jpg

fidowag
4th June 2015, 10:56 PM
http://i62.tinypic.com/j58aqq.jpg

fidowag
4th June 2015, 10:57 PM
http://i58.tinypic.com/10e34ub.jpg

fidowag
4th June 2015, 10:58 PM
http://i60.tinypic.com/t0sp4o.jpg

fidowag
4th June 2015, 10:59 PM
http://i57.tinypic.com/29cq3w4.jpg

fidowag
4th June 2015, 11:00 PM
http://i59.tinypic.com/2sa0bde.jpg

fidowag
4th June 2015, 11:01 PM
http://i58.tinypic.com/2mborn.jpg

fidowag
4th June 2015, 11:02 PM
http://i60.tinypic.com/24do6f4.jpg

fidowag
4th June 2015, 11:02 PM
http://i60.tinypic.com/rtm6oj.jpg
http://i62.tinypic.com/2gvihr8.jpg
http://i59.tinypic.com/34dt10x.jpg

fidowag
4th June 2015, 11:05 PM
http://i61.tinypic.com/2i9036p.jpg

Russellisf
5th June 2015, 06:44 AM
thanks sailesh sir for uploading thalaivar various book collections




http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/mgr%20books/vaathiyar1_zpsxzplijm2.jpg
http://i160.photobucket.com/albums/t197/sailesh_basu/mgr%20books/vaathiyar2_zpsu76oanwt.jpg

ainefal
5th June 2015, 12:16 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/mgrbear_zps26reskwt.jpg

ainefal
5th June 2015, 01:24 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/5th%20June%202015_zpsux1bpu46.jpg

http://dinaethal.epapr.in/514747/Dinaethal-Chennai/05.06.15#page/14/1

Russellzlc
5th June 2015, 04:42 PM
http://i61.tinypic.com/2dir81u.jpg

நிலைக்க முடியாத அதிகாரம்

கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் செயல்படுவது வழக்கமான ஒன்றுதான். அதன் பின்னணியில் அரசியல் சாயம் இருப்பதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. அதுபோன்று அரசியல் சாயம் இருக்கக் கூடாது என்றால் எந்த மாணவர் அமைப்புமே அரசியல் சாயம் இல்லாததாக இருக்க வேண்டும். ஒரு சில அரசியல் சாயம் உள்ள அமைப்புகள் மட்டும் இருக்கலாம். வேறு சில அமைப்புகள் இருகக் கூடாது என்பது பாரபட்சம்.

சென்னை ஐ.ஐ.டி. அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. இங்கும் சில மாணவர் அமைப்புகள் உண்டு. அதில் ஒன்று அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டம். இந்த அமைப்பு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவையடுத்து தடை செய்யப்பட்டுள்ளது. காரணம், மத்திய பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் உட்பட சில செயல்பாடுகள், அரசின் முடிவுகள் குறித்து இந்த அமைப்பு விமர்சித்ததாம். அதற்காக தடை விதித்துள்ளனர். (தடை செய்யப்படவில்லை என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஐஐடி இயக்குநர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல். ஆனால் இயக்குநர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அறிவித்தால் போராட்டம் ஏன் நடக்கப் போகிறது?) இதை எதிர்த்து மாணவர்களும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் போராடி வருகின்றனர்.

அதே ஐ.ஐ.டி.யில் பா.ஜ.மற்றும் ஆர்எஸ்எஸ் பின்னனி கொண்ட மாணவர் அமைப்பும் செயல்படுகிறது. அதுவும் கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விமர்சித்திருக்கிறது. பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் அந்த அமைப்பின் சார்பில் ஐ.ஐ.டி வளாகத்துக்கு அழைக்கப்பட்டு கூட்டங்களில் பேசியுள்ளனர். காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கியுள்ளனர். இப்போதைய அரசை ஆதரித்தும் தீர்மானங்கள் போட்டுள்ளனர். அப்போதெல்லாம் பா.ஜ.ஆதரவு மாணவர் அமைப்பு தடை செய்யப்படவில்லை.

இப்போது, பா.ஜ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்காக அம்பேத்கர் - பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்வது ஜனநாயகமற்ற செயல். படிக்கும் மாணவர்களுக்கு அரசியல் எதற்கு? என்றால் எல்லா அமைப்புகளையுமே தடை செய்யலாமே? அம்பேத்கர் - பெரியார் (தடைக்கு இந்தப் பெயர்களும் ஒரு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது) வாசிப்பு வட்டத்தை மட்டுமே தடை செய்வது என்ன நியாயம்?

ஒரு அரசை குறிப்பிட்ட கட்சி ஆளலாம். ஆனால், அரசு எல்லாருக்கும் பொதுவானது. சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பையோ, பிரிவையோ பாரபட்சமாக நடத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக மக்கள் திலகத்தை கைது செய்து சர்வாதிகாரியாக நடிக்கும் திரு.மனோகரின் தர்பாருக்கு அழைத்து வருவார்கள். கையில்லாத ரோஸ் நிற பனியன் போன்ற அங்கியில் தலைவரின் அழகை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

‘எந்தக் குற்றமும் செய்யாத நான் நிரபராதி’ என்று தலைவர் ஆக்ரோஷமாக கூறுவார். தலைவர் கூறும் சமாதானங்களை ஏற்க மறுக்கும் திரு.மனோகர், ‘நிலைத்து நிற்கும் என் அதிகாரத்தின் வலிமை புரியாமல் பேசுகிறாய்’ என்று கூறுவார்.

ஸ்டைலாக தோள்களை குலுக்கி லேசான புன்சிரிப்புடன் தலைவர் சொல்லும் பதிலால் அரங்கமே அதிரும். இதை கடந்த ஆண்டுகூட பார்த்த அனுபவம் நமக்கு உண்டு. தலைவரின் பதில்....

‘உங்கள் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு?’

சிலப்பதிகாரத்தை தவிர எந்த அதிகாரமும் நிலைக்க முடியாதுதானே? ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். ஆனால், ஆட்சியாளர்கள் இதை மறந்து விடுவது வேடிக்கை.

அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

fidowag
5th June 2015, 09:07 PM
தின இதழ் -04/06/2015
http://i58.tinypic.com/2s7gs3r.jpg
http://i62.tinypic.com/2d9a5v8.jpg
http://i62.tinypic.com/2myn4mv.jpg
http://i59.tinypic.com/2vir1vl.jpg
http://i59.tinypic.com/2rrm048.jpg

fidowag
5th June 2015, 09:10 PM
http://i59.tinypic.com/ir88q9.jpg
http://i60.tinypic.com/2d9wpb6.jpg
http://i60.tinypic.com/sen51f.jpg
http://i61.tinypic.com/t00t4g.jpg
http://i60.tinypic.com/r0quf4.jpg

fidowag
5th June 2015, 09:12 PM
இதயக்கனி =சினிமா ஸ்பெஷல்
http://i61.tinypic.com/2ljq1qp.jpg

Russellisf
5th June 2015, 10:50 PM
புரட்சி தலைவரின் பாடலிருந்து சில வரிகள்...
'தனக்கொரு கொள்கை
அதற்கொரு தலைவன்
தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்
உனக்கென வேண்டும்
உணர்ந்திடு தம்பி
உழைத்திட வேண்டும்
கைகளை நம்பி
...
எத்தனைப் பெரிய மனிதனுக்கு
எத்தனைச் சிறிய மனமிருக்கு'
...புரட்சி தலைவரின், 'ஆசைமுகம்'.
இவ்வரிகளின் கருத்து எளிதில் புரிந்து கொள்ள உகந்தது, என்ற உண்மையை நம்மில் பலர் அறிவர்.
எனினும், சிறு விளக்கத்தை கீழே தந்துள்ளேன்...உதவும் என்ற நம்பிக்கையோடு.
இவ்வரிகளிலிருந்து கிடைக்கும் படிப்பினை...
ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு குறிக்கோளை (Life Goal) அமைத்துக் கொள்ள முயல வேண்டும்.
'தனக்கொரு கொள்கை'
தமது வாழ்விற்கென்று சட்டதிட்டங்களை (கொள்கைகள்) அமைத்து, அதாவது 'இப்படித்தான் வாழவேண்டும்' என்ற ஒரு கட்டுப்பாடுடன் வாழ முயல வேண்டும்.
இது மனக்கட்டுப்பாட்டை குறிக்கிறது.
'அதற்கொரு தலைவன்'.
இத்தகைய குணாதிசயங்களை வளர்த்துக் கொள்வதற்கு, பெருந்தலைவர்களை 'முன்னோடியாக' (Mentor or Role Model) வைத்துக் கொள்ளலாம்.
'தனக்கொரு பாதை
அதற்கொரு பயணம்'
ஒவ்வொருவரும் வாழ்வில் தனக்கென ஒரு பாதையை (Life Path) அமைத்துக் கொண்டு, அப்பாதையின் வழியே தமது வாழ்க்கை பயணத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
'கண் போன போக்கிலே, மனம் போன போக்கிலே' வாழ்க்கை பயணத்தை மேற்க்கொள்ள கூடாது, என்பது உள்கருத்து.
இதுதான் மாபெருந்தலைவர்களின் வெற்றியின் ரகசியம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவைகள்தாம் அவ்வெற்றிக்கு உதவும் ஆயுதங்கள்.
கடைபிடிப்பது எளிதல்ல.
மனக்கட்டுப்பாடோடு முயன்றால், நிச்சயம் சாதிக்கலாம்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.


courtesy fb

Russellisf
5th June 2015, 10:56 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsemeutgsp.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsemeutgsp.jpg.html)

Russellisf
5th June 2015, 10:58 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/b_zpsbe3zcyql.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/b_zpsbe3zcyql.jpg.html)

fidowag
5th June 2015, 11:39 PM
Dhina Ithazh 05/06/15
http://i59.tinypic.com/20p61jo.jpg
http://i59.tinypic.com/1zq61l2.jpg
http://i62.tinypic.com/nn0dx5.jpg
http://i61.tinypic.com/1z6cri1.jpg
http://i58.tinypic.com/1z491ly.jpg

fidowag
5th June 2015, 11:41 PM
http://i59.tinypic.com/28lb4h0.jpg
http://i60.tinypic.com/2w7pjj6.jpg
http://i60.tinypic.com/2pz9qbc.jpg
http://i61.tinypic.com/2eounx1.jpg
http://i62.tinypic.com/9s9yzb.jpg

fidowag
6th June 2015, 12:06 AM
Thamizh Hindu 05/06/15
http://i60.tinypic.com/2jcfrd5.jpg
http://i62.tinypic.com/29woi9f.jpg
http://i59.tinypic.com/29lk6sh.jpg
http://i58.tinypic.com/2nhq6oy.jpg
http://i58.tinypic.com/21awvfp.jpg

fidowag
6th June 2015, 12:11 AM
http://i60.tinypic.com/59wwar.jpg
http://i57.tinypic.com/vfh5dk.jpg
http://i58.tinypic.com/20syfqh.jpg
http://i59.tinypic.com/8z0k5i.jpg
http://i59.tinypic.com/21oo7ci.jpg

fidowag
6th June 2015, 12:12 AM
http://i59.tinypic.com/fu2vc3.jpg

ainefal
6th June 2015, 12:33 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/EVP50YEARSFUNCTIONDVD_zpsmbl8evoj.jpg

ainefal
6th June 2015, 12:34 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/evp50years_zpsnegi7e48.jpg

Russellail
6th June 2015, 07:43 AM
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.


1. நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்

2. என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

3. கொள்கையிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்


இந்த பாடலின் 2.22 வது மணி துளிகளில் காட்சியில் எம்.ஜி.யார். இடது கை பக்கம் இருக்கும் நபர் (காக்கி நிற உடை அணிந்து நின்று கொண்டு இருப்பவர்) யார் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.
https://www.youtube.com/watch?v=cl5ZIt7KhKc

ainefal
6th June 2015, 01:59 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/6th%20June%202015_zpswqgklaaw.jpg

http://dinaethal.epapr.in/514903/Dinaethal-Chennai/06.06.15#page/12/1

oygateedat
6th June 2015, 02:05 PM
http://s12.postimg.org/n6w6ab27x/IMG_20150606_WA0003.jpg (http://postimage.org/)

Richardsof
6th June 2015, 08:11 PM
Brief Chronology of Political and Cinema Activities of DMK Members (1954-59)

To summarize the activities of MGR’s contemporaries, I provide the following chronology, based on the sources (Film News Anandan, Kannan, Kannadasan, Karunanidhi and Sivaji Ganesan) cited at the end.

1954 March 3: release of Manohara (Manohara) movie, starring Sivaji Ganesan and SSR, scripted by Karunanidhi. A big success in box office.

1954 April 9: release of Illara Jothi (Light of Domesticity) movie, starring Sivaji Ganesan and scripted/lyrics by Kannadasan.

1954 May 25: release of Sorga Vasal (Heaven’s Gate) movie, starring K.R. Ramasamy and scripted by Anna. Moderately received, due to bad mauling by censors.

1954 June 22: First release of Kannadasan’s journal Thenral.

1954 July 22: release of Malai Kallan (Mountain Thief) movie, starring MGR and scripted by Karunanidhi. A big box office success.

1954 July 30: release of Thuli Vizham (Poison Drop) movie, starring K.R. Ramasamy (hero) and Sivaji Ganesan (villain), scripted and directed by A.S.A. Samy.

1954 Aug. 26: release of Koondu Kili (Caged Parrot) movie, starring MGR and Sivaji Ganesan. A box-office failure.

1954 October 15: release of Rathak Kanneer (Blood Tears) movie, starring M.R. Radha and SSR, with Chidambaram Jayaraman as music director. A big success

1955 July 29: release of Gul e Baghavali (Gul e Baghavali) movie, starring MGR. a big success.

1956 January 14: release of Alibabavum 40 Thirudarkalum (Alibaba and 40 Thieves) movie. The first Tamil movie to be produced in color (Geva). A big success.

1956 April 13: release of Madurai Veeran (Hero of Madurai) movie, starring MGR. A big successful movie for MGR, in which the hero character dies at the end!

1956 September 4: release of Thaiku Pin Thaaram (Wife after Mother) movie, starring MGR. The first successful movie in a social theme for MGR. A big success.



1957 March 31: Madras State Assembly election. DMK candidates contested for the first time, under Independent label. While Karunanidhi won at Kulithalai constituency, SSR and Kannadasan lost in their respective constituencies Theni and Thirukoshtiyur.


1957 August 30: death of comedian actor and senior contemporary N.S. Krishnan.

1957 December 9: Prime Minister Nehru delivers a speech at Tiruchirapalli that he was ready even for a war against secessionist tendencies promoted by DMK.

1958 January 6: Black Flag protest to prime minister Nehru during his visit to Madras. MGR detained at Madras jail with SSR.

1958 February 22-23: DMK’s regional conference held at Deva Kottai at Ramanathapuram district. Opening address delivered by SSR. Karunanidhi scripted drama ‘Rising Sun’ staged for the first time.

1958 March 1: DMK receives ‘Rising Sun’ as its official symbol from the Election Commission.

1958 June 27: release of Malai idda Mangai (A Virgin, who garlanded) movie, starring T.R. Mahalingam; produced by Kannadasan. Success in box office, but not for Kannadasan!

1958 August 22: release of Nadodi Mannan (Vagabond King) movie, the first movie under ‘MGR Pictures’ banner. A big success in box office.

1959 January: DMK wins prominently at the Madras municipal council elections. DMK candidates won 45 seats (compared to Congress Party candidates winning 37 seats) for 100 seat assembly. Subsequently A.P. Arasu of DMK was elected as the mayor of Madras city. At the felicitation meeting held, Kannadasan was disillusioned with the recognition Karunanidhi received from the hands of Anna.

1959 February: At the general council meeting of DMK held in Puthukottai, E.V.K. Sampath (then ranked no. 2 in DMK hierarchy) accused Anna and Nedunchezhiyan for not spreading the party message to other three (Andhra, Kannada and Kerala) states.

1959 May 6: release of Veera Pandiya Kattabomman (Heroic Pandiya Kattabomman) movie, starring Sivaji Ganesan in the title role. A big success in box office.

1959 May 19: release of Sivagankai Seemai (Distant land of Sivagankai) movie, starring SSR, produced by Kannadasan; failure in box office.

1959 June 16: Left leg injury to MGR at the drama stage in Sirkazhi.
COURTESY - NET

Richardsof
6th June 2015, 08:15 PM
எங்க வீட்டு பிள்ளை - இந்து இதழில் வெளி வந்த வந்த கட்டுரை மிகவும் அருமை .பதிவிட்ட இனிய நண்பர் திரு லோகநாதனுக்கு நன்றி .

siqutacelufuw
6th June 2015, 10:52 PM
மக்கள் திலகத்தின் தீவிர ஆதரவாளரும், மூத்த ரசிகரும், அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமணம் நாளை 07-06-2015 அன்று சென்னையில் நாளை (07-06-15) நடைபெறுவதையொட்டி அச்சடித்து விநியோகிக்கப்பட்ட பத்திரிகை :

முன் அட்டை தோற்றம் :

http://i58.tinypic.com/vdjsq8.jpg

உள் அட்டையில் பிரசுரிக்கப்பட்ட புகைப்படமும், அழைப்பிதழும்

http://i58.tinypic.com/2n64s3q.jpg

பின் அட்டை தோற்றம் :

http://i57.tinypic.com/33tjaxi.jpg


இன்று மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பக்தர்களும், ரசிகர்களும், அரசு அதிகாரிகளும் ஏராளமான அளவில் திரண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன், மிகப்பெரிய பதாகை கல்யாண மண்டபத்தின் முகப்பில் வைக்கப்படிருந்தது. காண்போர் அனைவரையும் இந்த பதாகை கவர்ந்தது. திருமணத்துக்கு வந்திருந்த முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி இந்த பதாகையையும் அதிலுள்ள வாசகங்களையும் நின்று படித்து விட்டு, நம் மக்கள் திலகத்தை வணங்கி விட்டு, புகழ்ந்து சென்றனர். இது கண் கூடாக கண்ட காட்சி !


குறிப்பு :

பதாகை நிழற்படமும், வாசகங்களும், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியின் சில முக்கிய படங்களும் பின்னர் பதிவிடப்படும்.

siqutacelufuw
6th June 2015, 11:41 PM
http://i62.tinypic.com/k3t2zn.jpg

குடிசை மாற்று வாரியத்தலைவராக நியமிக்கப்பட்ட LATE சுலோச்சனா சம்பத் அவர்களுடன் நம் புரட்சித்தலைவர்.

Courtesy : Facebook

siqutacelufuw
6th June 2015, 11:48 PM
http://i61.tinypic.com/2u8uuxe.jpg

Russellisf
7th June 2015, 01:22 AM
உலகில் பலர் தோன்றி உள்ளார்
புகழும் அடைந்துள்ளார்
ஆனால் வறுமை யின் உச்சத்தில்
பிறந்து தன் உழைப்பு ஒன்றே மூலதனமாகஂகொண்டு உழைத்து
இந்த உலகில் எவராலும் அடையமுடியாதஂபுகழ் வெற்றி சாதனை மக்களின் அன்பு பெற்று
தன் சம்பாத்தியம் திறமை அறிவு
மூலம் தனிமனிதனாகவும் அதிகாரஂ
மனிதனாகவும் தமிழகத்திற்க்கு நன்மைகள் பலசெய்து தன்னையே
தந்தவர் பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர்
கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்தில் ஒருநாள் முழுவதும் நின்று பாருங்கள் ஒருமனிதன் இத்தனை கோடி மக்களின் மனதில்
கடவுளாய் வாழ்கிறாரே எனஂவியக்கத்தான் முடியும்
ஒருமனிதன் இதை விடஂபுகழ் அடையமுடியாது
தமிழகத்தில் கடவுளுக்கு அடுத்து
மக்கள் பெரும்பபெரும்யோர் மதிக்கும் ஒரே சக்தி எம் ஜி ஆர்


courtesy net

Russellisf
7th June 2015, 01:29 AM
yesterday onwards (05.06.15) aayirathil oruvan screened in thangamani theater at pallikonda

msg conveyed by ramamurthy

Russellisf
7th June 2015, 08:13 AM
சுதந்திரம் கிடைத்தஂஉடன் இயக்கத்தை கலைத்து விடுங்கள்
எனஂகூறினார் காந்திஜீ

அந்த இயக்கத்தின் பெயரில் தமிழகத்தில் ஆட்சி அமைத்து சிலர் வாழஂபலர் வாடஂபஞ்சத்தில் பாமரர்கள் வாடஂ
சதாரணமக்கள் வாழ்வு செழிக்கஂ
அறிஞர் அண்ணா .தி மு கஂதொடங்கி
போராடினார் இந்தஂபோரில் ஜெய்க்கஂ பிரம்மா அஸ்திரம் தான்
வேண்டும் எனஂநினைத்தார்
அண்ணா கூறுகிறார் ஊரில் ஒரு
பழம் ?பிரம்மா அஸ்திரம். . கனிந்து
இருக்கு அது யார் மடியில் விழும்
எனஂகவலையுடன் பார்த்தேன் நல்லவேளை அது என் மடியிலேவிழுந்தது ஆதை எடுத்து
என் இதயத்தில் வைத்துக் கொண்டேன் அவர்தான் எம் ஜி ஆர்
அந்த சக்தியை கொண்டு ஆட்சியில்
அமர்ந்த அண்ணா வை காலம் கவர்ந்தது
எம் ஜி ஆர் இல்லை எனஂகூறும் குணம் நட்பு நம்பிக்கையை துணைகொண்டு எம் ஜி ஆர் ஆதரவால் ஆட்சியில் அமர்ந்தஂ
தலைமை நாட்டை மறந்து வீட்டை
பார்க்கஂதொடங்கஂபொங்கி எழுந்தஂ
எம் ஜி ஆர் தலைமையை எதிராக
கேள்வி எழுப்பினார்
கேள்வி கேட்டதால் இந்தஂபழம்
வண்டு துழைத்து விட்டது தூரஂஎறிகிறேன் என்றது தலமை
வண்டு துழைத்தஂபழம் இனிக்கும்
எனஂமக்கள் தங்கள் மனதில் தாங்கி
னார் அண்ணா விற்க்கு மட்டுமே
இதயகனியாகஂஇருந்தஂஎம்ஜிஆர்
கோடி கணக்கான மக்களின் இதயக்கனி ஆனார் மக்கள் அவரை
எவராலும் அசைக்கமுடியாத
முதல்வர் ஆக்கினார்
சாதாரண மக்கள் மேற்கல்வி பயில
ப்ளஸஂடூ அமைத்து உலகதரம் வாய்ந்தஂஅண்ணா பொறியில் கல்லூரி போல் பலபடைத்து கல்வி
மேன்பட்டு தொழில் சிறந்து வளம் பெருகி ஒரு பொற்க்காலஂஆட்சியை
தந்தார் எம் ஜி ஆர்
இன்றும் எம் ஜி ஆர் வழி நடந்தால்
ஆட்சி அமைக்கலாம்
நேற்றும் இன்றும் நாளையும்
எம் ஜி ஆர் தமிழகத்தின் வெற்றியை
நிர்ணயிக்கும் சக்தி

courtesy net

Russellisf
7th June 2015, 08:22 AM
செல்வி ஜெயலலிதா அவசரப் பட்டு முதல்வர் பொறுபேற்றார் என்பது பற்றி கருணநிதி அறிக்கையை படித்தவுடன் எனக்கு ஒரு நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது .. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இதை மெல்லிசை மன்னர் நினைவு கூர்ந்தார் ... அப்படியே வைக்கின்றேன் உங்கள் பார்வைக்காக ...
1960 கள் மெல்லிசை மன்னர் திரைத் துறையில் உச்ச நிலையில் கோலோச்சிய காலக் கட்டம் .... மக்கள் திலகத்திற்கும் நடிகர் திலகத்திற்கும் மாறி மாறி படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டிருந்த காலக் கட்டம் , எப்பொழுதும் பிசி ... அந்த சமயத்தில் தான் கருணாநிதி கொடுத்தனுப்பியதாக ஒரு காகிதத்தை கொண்டு வந்து எம் எஸ் விஸ்வநாதனிடம் கருணாநிதியின் அடிபொடியான அமிர்தம் நீட்டினார் ....
வழக்கம் போல அது கருணாநிதியின் கிறுக்கல் , அதற்கு இசையமைக்க வேண்டும் என்று நெருக்கடி , மெல்லிசை மன்னர் அப்பொழுது ஏகமாக வேலை பளுவில் இருந்த காரணத்தால் , இது போன்ற வரிகளுக்கு எல்லாம் தன்னால் உடனே பாட்டிசைக்க முடியாது என்று மறுத்துவிட்டார் ... வரிகள் பாடல் அமைக்கும் விதமாக இல்லை என்பதையும் தெளிவிபடுத்தினார் .... அத்துடன் அந்த சம்பவம் நிறைவு பெற்றதாகவே மெல்லிசை மன்னரும் நினைத்தார்
நாட்கள் உருண்டோடியது .... பேரறிஞர் அண்ணா அவர்கள் பிப்ரவரி 3 1969 ம் ஆண்டு மறைந்தார் , அடுத்து முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்வு செய்யப் பட்டு முதல்வராக பொறுப்பேற்றது எல்லாம் நமக்குத் தெரியும் , அண்ணாவின் மறைவை ஒட்டி கருணாநிதி பதவியேற்றதால் , அந்த நிகழ்ச்சி பெரிய அளவில் கொண்டாட்டத்துடன் அண்டக்கவில்லை என்பதால் . மார்ச் மாதம் கருணாநிதியை பாராட்டி ஒரு விழா எடுக்க முடிவு செய்தனர் .
விழாவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் கச்சேரியும் இருக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புவதாக சொன்னதால் , அதற்கு ஒப்புக் கொண்டு , கச்சேரிக்கான ஒத்திகையில் எம் எஸ் விஸ்வநாதன் ஈடுபட்டிருந்த பொழுது , ஒரு அதிகாரி அவரிடம் வந்து ஒரு காகிதத்தை நீட்டுகிறார் . என்ன என்று அதைப் பார்த்த பொழுது , பல வருடங்களுக்கு முன்னர் அமிர்தம் தன்னிடம் நீட்டிய அதே காகிதம் தான் என்பது புரிந்தது எம் எஸ் விஸ்வநாதனுக்கு ... முதல்வர் விரும்புகிறார் , இதற்கு நீங்கள் இசையமைத்து கச்சேரியில் பாடவேண்டும் என்று அதிகாரி சொல்லிவிட ... வேறு வழியில்லாமல் அந்த வரிகளுக்கு இசையும் அமைத்து கச்சேரியும் நடக்கிறது ...
கருணாநிதி அந்த நிகழ்ச்சியில் பேசுகிறார் , மேடையில் மக்கள் திலகம் உட்பட அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் , கீழே முன் வரிசையில் எம் எஸ் விஸ்வநாதன் ... காலமெல்லாம் பழிவாங்கும் புத்தியை பிறவிக் குணமாக சுமக்கும் கருணாநிதி , அப்பொழுது சொல்கிறார் " எம் எஸ் விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர் , எனது எழுத்துக்கு பாட்டிசைக்க அவருக்கு நேரமிருக்காது , ஆனால் அவரையே இங்கே வரவழைத்து விடும் அளவிற்கு நான் உயர்ந்திருக்கிறேன் " என்று ....
எம் எஸ் விஸ்வநாதன் கூனிக் குறுகிப் போகிறார் .... மேடையில் இருந்த மக்கள் திலகம் இதை கவனித்து விட ... இறுதியாக மைக்கை பிடிக்கிறார் ... மக்கள் திலகம் பேசியது .... " மெல்லிசை மன்னர் அருமையாக கச்சேரி அரங்கேற்றினார் ... அவர் மாமேதை , எப்படிப் பட்டவர் என்றால் , யாருடைய கிறுக்கலாக இருந்தாலும் எந்தக் குப்பையாக இருந்தாலும் அதற்கு அவர் இசையமைத்து விடுவார் " என்று சொல்ல , அரங்கமே அதிர்ந்தது கை தட்டலில் .... கருணாநிதி முகத்தில் ஈ ஆடவில்லை ...
இப்படிச் சொன்ன மக்கள் திலகம் எப்படிப் பட்டவர் தெரியுமா ? முதல் முறை அவர் முதல்வராக தேர்வு செய்யப் படவிருந்த தேர்தலில் வெற்றி பெற்ற பொழுது ... எல்லோரும் அவரை வாழ்த்த ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றால் , அவரோ , அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களின் படபிடிப்புகளை முடித்துக் கொடுக்க வாஹினி ஸ்டுடியோவில் இருந்தார் .... அவருக்காக 25 நாட்கள் நாடே காத்திருந்தது ... ஜூன் 30 பதவியேற்பு ... ஜூன் 29 ம் தேதி வாஹினி ஸ்டுடியோ வில் டப்பிங் இரவு 11.30 மணி வாக்கில் முடிகிறது ... வெளியே வருகிறார் , ஸ்டுடியோ மண்ணை முத்தமிட்டு வணங்குகிறார் ... அங்கே கூடியிருந்தவர்களிடம் அவர் சொன்னது ...
" திரைத் துறையில் நான் மன்னனாக இருந்து விட்டேன் , நாளை எடுத்துக் கொள்ளப் போகும் பதவி வெறும் மந்திரிப் பதவி தான் , மந்திரியா மன்னனா என்றால் மன்னன் தான் பெரியது என்பேன் .. நான் என்றும் உங்கள் ராமச்சந்திரன் தான் " என்றார் ...

courtesy net

ujeetotei
7th June 2015, 10:06 AM
Brief Chronology of Political and Cinema Activities of DMK Members (1954-59)

To summarize the activities of MGR’s contemporaries, I provide the following chronology, based on the sources (Film News Anandan, Kannan, Kannadasan, Karunanidhi and Sivaji Ganesan) cited at the end.

1954 March 3: release of Manohara (Manohara) movie, starring Sivaji Ganesan and SSR, scripted by Karunanidhi. A big success in box office.

1954 April 9: release of Illara Jothi (Light of Domesticity) movie, starring Sivaji Ganesan and scripted/lyrics by Kannadasan.

1954 May 25: release of Sorga Vasal (Heaven’s Gate) movie, starring K.R. Ramasamy and scripted by Anna. Moderately received, due to bad mauling by censors.

1954 June 22: First release of Kannadasan’s journal Thenral.

1954 July 22: release of Malai Kallan (Mountain Thief) movie, starring MGR and scripted by Karunanidhi. A big box office success.

1954 July 30: release of Thuli Vizham (Poison Drop) movie, starring K.R. Ramasamy (hero) and Sivaji Ganesan (villain), scripted and directed by A.S.A. Samy.

1954 Aug. 26: release of Koondu Kili (Caged Parrot) movie, starring MGR and Sivaji Ganesan. A box-office failure.

1954 October 15: release of Rathak Kanneer (Blood Tears) movie, starring M.R. Radha and SSR, with Chidambaram Jayaraman as music director. A big success

1955 July 29: release of Gul e Baghavali (Gul e Baghavali) movie, starring MGR. a big success.

1956 January 14: release of Alibabavum 40 Thirudarkalum (Alibaba and 40 Thieves) movie. The first Tamil movie to be produced in color (Geva). A big success.

1956 April 13: release of Madurai Veeran (Hero of Madurai) movie, starring MGR. A big successful movie for MGR, in which the hero character dies at the end!

1956 September 4: release of Thaiku Pin Thaaram (Wife after Mother) movie, starring MGR. The first successful movie in a social theme for MGR. A big success.



1957 March 31: Madras State Assembly election. DMK candidates contested for the first time, under Independent label. While Karunanidhi won at Kulithalai constituency, SSR and Kannadasan lost in their respective constituencies Theni and Thirukoshtiyur.


1957 August 30: death of comedian actor and senior contemporary N.S. Krishnan.

1957 December 9: Prime Minister Nehru delivers a speech at Tiruchirapalli that he was ready even for a war against secessionist tendencies promoted by DMK.

1958 January 6: Black Flag protest to prime minister Nehru during his visit to Madras. MGR detained at Madras jail with SSR.

1958 February 22-23: DMK’s regional conference held at Deva Kottai at Ramanathapuram district. Opening address delivered by SSR. Karunanidhi scripted drama ‘Rising Sun’ staged for the first time.

1958 March 1: DMK receives ‘Rising Sun’ as its official symbol from the Election Commission.

1958 June 27: release of Malai idda Mangai (A Virgin, who garlanded) movie, starring T.R. Mahalingam; produced by Kannadasan. Success in box office, but not for Kannadasan!

1958 August 22: release of Nadodi Mannan (Vagabond King) movie, the first movie under ‘MGR Pictures’ banner. A big success in box office.

1959 January: DMK wins prominently at the Madras municipal council elections. DMK candidates won 45 seats (compared to Congress Party candidates winning 37 seats) for 100 seat assembly. Subsequently A.P. Arasu of DMK was elected as the mayor of Madras city. At the felicitation meeting held, Kannadasan was disillusioned with the recognition Karunanidhi received from the hands of Anna.

1959 February: At the general council meeting of DMK held in Puthukottai, E.V.K. Sampath (then ranked no. 2 in DMK hierarchy) accused Anna and Nedunchezhiyan for not spreading the party message to other three (Andhra, Kannada and Kerala) states.

1959 May 6: release of Veera Pandiya Kattabomman (Heroic Pandiya Kattabomman) movie, starring Sivaji Ganesan in the title role. A big success in box office.

1959 May 19: release of Sivagankai Seemai (Distant land of Sivagankai) movie, starring SSR, produced by Kannadasan; failure in box office.

1959 June 16: Left leg injury to MGR at the drama stage in Sirkazhi.
COURTESY - NET

Information about 1959 June 16th incident from srimgr.com

http://www.mgrroop.blogspot.in/2009/06/sirkazhi-1661959.html

ujeetotei
7th June 2015, 10:09 AM
http://i62.tinypic.com/k3t2zn.jpg

குடிசை மாற்று வாரியத்தலைவராக நியமிக்கப்பட்ட LATE சுலோச்சனா சம்பத் அவர்களுடன் நம் புரட்சித்தலைவர்.

Courtesy : Facebook

Selvakumar Sir thanks for the image.

siqutacelufuw
7th June 2015, 11:45 AM
அனைத்துலக எம். ஜி.ஆர். பொது நல சங்கத்தின் துணைத்தலைவரும், ஒய்வு பெற்ற முன்னாள் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைமை பொறியாளருமான திரு. எஸ். எம். மனோகரன் அவர்களின் மகன் திரு. செந்தில்குமார் திருமண வரவேற்பு நிகழ்ச்சியினையொட்டி

அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க சார்பில், நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்கள், மணமக்களை வாழ்த்தும் தோற்றத்துடன் வைக்கப்பட்டிப்ருந்த மிகப்பெரிய பதாகை.

http://i57.tinypic.com/s2zbcm.jpg


மணமக்களை வாழ்த்த வந்திருந்த, பொன்மனசெம்மல் எம். ஜி. ஆர். பக்தர்களும், ரசிகர்களும்.

http://i61.tinypic.com/333xqgn.jpg

http://i57.tinypic.com/21n1fk6.jpg

siqutacelufuw
7th June 2015, 12:03 PM
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டான் தங்கமணி அரங்கில், மறு வெளியீட்டில் வெள்ளிவிழா கண்டு உலக சாதனை படைத்த நம் பொன்மனச்செம்மலின் வெற்றிக்காவியம் "ஆயிரத்தில் ஒருவன்", ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. அது குறித்த விளம்பரங்கள் :

http://i61.tinypic.com/wi23r9.jpg

http://i59.tinypic.com/35buqer.jpg

http://i59.tinypic.com/inbymh.jpg


புகைப்படம் எடுத்து அனுப்பியவர் : சகோதரர் திரு. வேலூர் இராமமூர்த்தி அவர்கள்.

siqutacelufuw
7th June 2015, 12:06 PM
http://i58.tinypic.com/2wqhlc0.jpg

ainefal
7th June 2015, 02:23 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/7th%20June%202015_zps0w587njc.jpg


http://dinaethal.epapr.in/515615/Dinaethal-Chennai/07.06.2015#page/13/1

Richardsof
7th June 2015, 03:29 PM
1954ல் மலைக்கள்ளன் படம் பிரமாதமாக ஓடி, எம்ஜிஆருக்கு வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயரும் ஒட்டிகொண்டது .
1977 ல் அவர் திரை உலகை விட்டு விலகும் வரை வசூல் மன்னனாகவே விளங்கினார் .அதற்கு பின்னரும் அவருடைய
பழைய படங்கள் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டு வருகிறது . அநேகமாக 38 வருடங்களாக தொடர்ந்து எம்ஜிஆர் படங்கள்
தமிழகத்தில் ஓடிக்கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும் .

நன்றி - ஹரீஷ் - முகநூல்

Richardsof
7th June 2015, 04:11 PM
கோட்டையை பிடித்தது ' கோடம்பாக்கம் ' !

இத்தனை அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும், 1977ல் தனது 136வது படமான ' மதுரை

மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தில் நடித்து வந்தார் எம்ஜிஆர். அப்படத்தில்" தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை.." என்று பிரகடனப்படுத்தியபடி ஒரு பாடல்.

அதில்:

" ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்

கோட்டையிலே நமது கொடி பறந்திடவேண்டும்

கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்.

புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்

வீரமுண்டு வெற்றி உண்டு ; விளையாடும் களமும் உண்டு

வா.. வா.. என் தோழா ! "

- தலைவன் சொன்னதெல்லாம் வேத வாக்காக போற்றிக் கொண்டிருந்த அதிமுக கட்சி தொண்டர்களுக்கு, ரசிகர்களுக்கு இது போதாதா ! இதை விட வேறென்ன அழைப்பு வேண்டியிருக்கப் போகிறது ?

Richardsof
7th June 2015, 04:15 PM
1977 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக, 200 இடங்களில் நின்று 130 தொகுதிகளில் வென்று தனி மெஜாரிட்டியுடன் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. திமுகவோ வெறும் 48 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. காங்கிரஸ் 27 இடங்களுடனும், ஜனதா 10 இடங்களுடனும் திருப்திபட்டு கொள்ள வேண்டியதாயிற்று. அருப்புக்கோட்டைத் தொகுதியில் எம்ஜிஆர், சுமார் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தார்.

அரசியல் சட்டம் இடம் கொடுக்காது என்பதால், தனது கடைசிப் படமாக 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்' படத்தை முடித்து கொடுத்து விட்டு 30-6-1977 அன்று எம்.ஜி.ஆர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

உலக வரலாற்றிலேயே, ஒரு சாதாரண சினிமா நடிகர் சொந்தமாக அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்த முதலாமவர் என்ற சாதனையோடு கோட்டைக்குள் நுழைந்தார் எம்ஜிஆர்.

எந்த சினிமாவில் துக்கடா வேடத்திற்கு கூட வாய்ப்புக் கிடைக்காமல் ஸ்டுடியோ

வாசல்களில் தவம் கிடந்தாரோ, அதே சினிமாவை தனது சாதுர்யத்தால் தன்வசமாக்கி அதன் மூலமாக புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே புகுந்தார் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன்.

ஆம். ஒரு நாடோடி, மன்னன் ஆனார் !

'வேஷதாரி' என்று மட்டம் தட்டியவர்களையும், 'அரிதாரம் பூசிகிறவனெல்லாம் அரசாள முடியுமா' என்று நக்கலாக கேட்டவர்களையும் ' கோட்டையிலே இனிமேல் கூத்தாட்டம் தான் நடக்கும்' என்று கிண்டலடித்தவர்களையெல்லாம் வாயடைக்க செய்யும் விதத்தில் மக்கள் ஆதரவுடன் 1977ல் ஆரம்பித்து 87ல் மரணமடையும் வரை மொத்தம் 10 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் தமிழகத்தின் முதலமைச்சராக முத்திரைப் பதித்தார்.

பாலிடிக்ஸில் பயாஸ்கோப்புக்கு தனிப் பெரும் அந்தஸ்தையும் மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுத்த மக்கள் திலகம் 24-12-1987ல் மண்ணுலகை விட்டு மறைந்தார், தமிழக அரசியலிலும், சினிமாவிலும் மட்டுமின்றி ஏழை எளிய மக்களின் மனதிலும் நிரந்திரமாகத் தங்கி விட்டு.
courtesy - net

Richardsof
7th June 2015, 04:23 PM
தமிழ் டாக்கியில் முதன்முதலாக திமுக கொடியை பகிரங்கமாக 'நாடோடி மன்னன்' படம் வாயிலாக காண்பித்தார் எம்.ஜி.ஆர். படத்தின் டைட்டிலில் கறுப்பு- சிவப்பு கொடியுடன் ' எம்ஜியார் பிக்சர்ஸ்' என்ற பேனரை திரையில் கண்ட திமுக கட்சியினருக்கு குறிப்பாக ரசிகர்களுக்கு பீறிட்டுப் பொங்கிய உணர்வை- உற்சாகத்தை இங்கு எழுத்தில் கொண்டு வர முயல்வது அத்தனை சுலபமில்லை.

வீராங்கன் என்ற பெயரில் நாடோடியாக அதாவது புரட்சி வீரனாக வரும் எம்.ஜி.ஆரின் கொள்கைச் சிறப்பை அறிந்த பிறகு , மன்னன் எம்.ஜி.ஆரின் மனைவி சொல்வாள்:

"அண்ணா.. நீங்கள் தான் அரசாள வர வேண்டும்"

"எனக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நிலமற்றோருக்கு நிலமளிக்கப்பட்டு உழவுக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தி பெருக்கப்படும். தொழிலுக்கும் ஊக்கமும் மானியமும் தரப்படும். பெண்கள் முன்னேற அவர்களுக்கு சுயதொழில் செய்ய அரசு உதவி செய்யும். அநியாய வரிகள் இருக்காது..."

-என்ற ரீதியில் எதிர்கால செயற் திட்டங்களை அடுக்குவார் 'நாடோடி' எம்.ஜி.ஆர்.

இன்னொரு காட்சியில் மார்த்தாண்டன் என்ற பெயரில் வரும் 'மன்னன்' எம்.ஜி.ஆருக்கும் 'நாடோடி' எம்.ஜி.ஆருக்கும் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல்:

மன்னன்: "எதற்காகப் புரட்சி ? யாரை எதிர்த்து?"

நாடோடி: " உங்கள் ஆட்சியை எதிர்த்து. சர்வாதிகார முறையை ஒழிக்க.

எங்கள் லட்சியம் ஆளை ஒழிப்பதல்ல. மக்களாட்சியை

ஏற்படுத்துவது."

மன்னன்: " ஏன் நானும் மக்களில் ஒருவன் தானே. நானே ஆண்டாலென்ன?

நாடோடி : " நீங்கள் மக்களில் ஒருவர் தான். ஆனால் மக்களின் நிலையை

அறியாதவர். அவர்களின் நிலை உணர்ந்த ஒரு ஏழை தான்

நாட்டை ஆளவேண்டும்."

மன்னன்: " ஆட்சி பற்றி உனக்கென்ன தெரியும்? "

நாடோடி : " நீங்கள் மாளிகையில் இருந்து கீழே மக்களை பார்க்கிறீர்கள்.

ஆனால் நான் மக்களில் ஒருவனாக இருந்து மாளிகையை

பார்க்கிறவன். மக்களின் துயரமும் தேவைகளும் எனக்கு

நன்றாக தெரியும்"

- இந்த காட்சியில் அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மன்னன் மார்த்தாண்டனாகவும்,

நாடோடி வீராங்கன் திமுகவின் பிரதிநிதியாகவும் உணரப்பட்டது கழகக் கண்மணிகளால்.

அதே படத்தில் மற்றொரு கட்டத்தில் , தனக்கு பதிலாக அரசை சில நாட்கள் ஆள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும் மன்னனிடம் நாடோடி சொல்வார்:

" பதவியில் அமருவது எனக்கு நோக்கமில்லை என்றாலும் மக்களுக்கு நன்மை கிடைக்குமென்பதால் ஒப்புக் கொள்கிறேன். நான் மக்களுக்காக செய்ய விரும்பும் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட வேண்டும். அதிகாரமில்லாத அரசாட்சியை நான் விரும்ப மாட்டேன் "

அதே படத்தில் வரும் ''காடு வெளஞ்சென்ன மச்சான் ..." எனத் தொடங்கும் பாடலில்,

" இப்போ- காடு வெளயட்டும் பொண்ணே

நமக்கு காலமிருக்குது பின்னே.

நாளை போடப் போறேன் சட்டம் - பொதுவில்

நன்மைப் புரிந்திடும் திட்டம்.

நாடு நலம் பெறும் திட்டம். "

இவ்வாறாக , எம்.ஜி.ஆர். தனது வருங்கால இலக்கை கோடிட்டு காண்பிக்கிறாரா அல்லது தான் சார்ந்திருந்த திமுகவையும் அதன் தலைவரையும் உயர்த்திப் பிடிக்கிறாரா என்று கணிக்க முடியாதபடிக்கு ஒருவித கெட்டிக்காரத்தனம், இப்படம் முழுவதும்வியாபித்திருந்தது.

Russellwzf
7th June 2015, 04:37 PM
Thaaru Maaru Song from the upcoming STR movie "Vaalu" features the Super Stars of Tamil Cinema.. Starting from Honorable makkal Thilagam MGR (our Vaathiyaar), Rajnikanth, Ajith and STR...Watch between 0.17 to 1.11

https://www.youtube.com/watch?v=ExVNebc5MAc

oygateedat
7th June 2015, 07:14 PM
http://s1.postimg.org/9h67448fz/IMG_20150607_WA0002.jpg (http://postimage.org/)

Fwd by Mr.R.Saravanan, Madurai

oygateedat
7th June 2015, 08:26 PM
மதுரை சென்ட்ரல் திரை அரங்கில் நம்நாடு காவியத்தை காண இன்று மாலைக்காட்சிக்கு வருகை புரிந்தோர் 600 பேர்கள்.

தகவல் - திரு.ஆர்.சரவணன் - மதுரை

oygateedat
7th June 2015, 08:38 PM
கோவை டிலைட் திரை அரங்கில் நம்நாடு
கடந்த வெள்ளி அன்று திரையிடப்பட்டு வெற்றி நடைபோடுகிறது.

oygateedat
7th June 2015, 08:57 PM
http://s1.postimg.org/9de7tcypr/IMG_20150607_WA0003.jpg (http://postimage.org/)

Richardsof
8th June 2015, 05:43 AM
"நான் ஏன் பிறந்தேன்' (1972)

"நான் ஏன் பிறந்தேன்' என்ற தலைப்பில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆனந்த விகடன் இதழில் தனது சுயசரிதையை எழுதி வந்தார். இதே பெயரில் ஜி.என்.வேலுமணி, எம்ஜிஆரைக் கதாநாயகனாக வைத்து வண்ணப்படம் ஒன்றைத் தயாரித்தார். சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், மேற்படிப்பு முடித்து ஊருக்குத் திரும்புகிறான். படிப்புக்கு வாங்கிய கடனால் குடும்பம் மோசமான நிலையில் உள்ளதைக் காண்கிறான்.
.
மனைவி, குழந்தை, சிற்றன்னை, அவளது குழந்தைகள், தங்கையின் குடும்பம் என மிகப் பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு அந்த இளைஞனின் தலையில் விழுகிறது. ஏதாவதொரு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில், ஒரு எஸ்டேட்டில் மேனேஜர் வேலைக்கு தான் திருமணமானவன் என்பதை மறைத்து வேலைக்குச் சேருகிறான். எஸ்டேட் முதலாளியின் மகளுக்கு கால்கள் திடீரென விளங்காமல் போய்விட அவளுக்கு மனத் தைரியத்தைக் கொடுத்து அவளது கால்கள் மீண்டும் செயல்பட வைக்கிறான்.

அந்தப் பெண்ணோ இளைஞனை விரும்புகிறாள். இதனால் ஏற்படும் குழப்பங்களை எப்படி தீர்க்கிறான் அந்த இளைஞன் என்பதே கதை. நல்ல குணங்களைக் கொண்ட இளைஞனாக எம்ஜிஆர் நடித் திருந்தார். அவரது ஜோடியாக கே.ஆர்.விஜயா, எஸ்டேட் முதலாளியின் பெண்ணாக காஞ்சனா ஆகியோர் நடித்தனர்.

மேலும் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், நாகேஷ், நம்பியார், வீரராகவன், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.லட்சுமி, ஜி.சகுந்தலா, பேபி இந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் பாத்திரத்தில் எம்ஜிஆர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்தார். தனக்கு குடும்பம் இருப்பதை வெளியே சொல்ல முடியாமலும், பணக்கார பெண் தன்னை காதலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது அவர் சிறந்த நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார். காஞ்சனாவும் சிறப்பாக நடித்தார்.

படத்தின் சிறப்பம்சம் மிகச் சிறந்த பாடல்கள் ஆகும். வாலி, புலமைப்பித்தன் உள்ளிட்ட கவிஞர்கள் எழுதிய பாடல்களுக்கு இனிமையான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் வழங்கி இருந்தனர். எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக இந்தப் படத்தில்தான் அவர்கள் இசையமைத்தனர்.

கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி அவர்கள் இசையமைத்த கருத்தாழம் மிக்க பாடல்கள் வருமாறு:
"நான் ஏன் பிறந்தேன்;
நாட்டுக்கு நலமென புரிந்தேன் என்று நாளும்,
பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா,
நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா'

"தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
தினமும் நான் சொல்லும் கதை பாட்டு'

"நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்'

"உனது விழியில் எனது பார்வை
உலகை காண்பது
என் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது'

"என்னம்மா சின்னப் பொண்ணு
என்னவோ தேடும் கண்ணு
நானும் உந்தன் ஜோடி அல்லவோ'

"தலைவாழை இலை போட்டு
விருந்து வைத்தேன்
என் தலைவா உன் வருகைக்கு
தவமிருந்தேன்'

இந்த பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான இசையை கொண்டவை என்றால் அது மிகையாகாது. இந்தப் பாடல்களை டி.எம்.சௌந்தர் ராஜன், சுசீலா ஆகியோர் அனுபவித்து பாடி அசத்தியிருப்பார்கள்.
இந்த பாடல்களுடன் பாரதிதாசனின்,

"சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே இங்கு எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே ' என்ற பாடலையும் டி.எம்.சௌந்தர் ராஜனின் குரலில் மிக சரியான இடத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
எம்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படம் குடும்பத்தினர் அனைவரும் காணும் வகையில் படமாக்கப் பட்டிருந்தது.
courtesy - malai sudar

Richardsof
8th June 2015, 05:46 AM
நெஞ்சில் நிற்கும் வரிகள்

சினிமா என்பது ஐயோ குய்யோ என்று மட்டும் அழுது வழியும் ஒன்றல்ல / காதல் வீரம் புரட்சி உண்மை நேர்மை தாய்மை பாசம் எழுச்சி என்று மக்கள் மேன்மைக்கு பயன் செய்யும் சாதனம், அதனை சரியாக பயன்படுத்திய ஒரே உலக நடிகர் அமரர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே, அவர் திரை வாயிலாக இரண்டடியில் கூறிய பெரிய சிந்தனைகள் பாடங்கள் காண்க .

இஞ்சினியருக்கும் டாக்டருக்கும் அட்வகேட்டுக்கும் ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடுபவன் யாரு ? விவசாயி விவசாயி - (விவசாயி )

அழுபவர்கள் சிரிக்க வேண்டும், சிரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் - (நான் ஏன் பிறந்தேன் )

நாய்க்கு வீசியெறியும் எச்சில் இலையின் மிச்ச சோறுகூட என் உடன்பிறப்புகளுக்கு கிடைக்கவில்லை என்றால் நான் வாழ்வது மனிதர்கள் மத்தியில் அல்ல அரக்கர்கள் நடுவில் - (மீனவ நண்பன் )

நாம் நாக்குக்கு அடிமையாக இருக்கக் கூடாது நாக்குத்தான் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும் - (பல்லாண்டு வாழ்க )

தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்துக்கொள்ளும் ஆசையை வளர்த்தால் நம்மால் பிறருக்கு எதுவுமே
செய்ய முடியாது (ஆயிரத்தில் ஒருவன்)

பத்துக்கோடி டாலர் உங்களுக்கு பெரிசு அதைவிட இந்த உலகில் உள்ள தனி ஜீவன் எனக்குப் பெரிசு - (உலகம் சுற்றும் வாலிபன்)

பலம் உள்ளவனால்த்தான் சமாதானத்தைப்பற்றிப் பேச முடியும் - (படகோட்டி)

வலிமை உள்ளவன் வைத்ததெல்லாம் சட்டமாகாது பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டமாக்க வேண்டும். - (நல்ல நேரம்)

உதவி என்று வருபவர்களை பணம் பதவி என்ற பெயரால் உயிருடன் விழுங்கும்
திமிங்கிலம் நீ ( படகோட்டி)

கோடி செல்வம் இருந்தும், தாயன்பில்லாத மாளிகை வாசியை விட, குடிசையில் இருந்தாலும்
தாயின் கையால் உண்ணும் நான் பாக்கியசாலி - (தொழிலாளி )

இப்படி அவரின் பல படங்களில் சிந்தையை தொடும் வரிகள் வசனங்களாக பாடல்களாக நிறையவுண்டு, 5 எம் ஜி ஆர் படங்கள் பார்த்தால் ஒரு குட்டிப் பல்கலைக்கழகம் சென்று படித்த அறிவைப் பெறலாம் .
courtesy -ramesh

Richardsof
8th June 2015, 05:50 AM
o யோகி – அர்ச்சனா வாசுதேவன்

மக்கள் திலகம் எம்ஜிஆர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்?’ புத்தக வெளியீட்டில், தலைமையேற்று புத்தகத்தை வெளியீடு செய்து பேசிய டத்தோ எம். சரவணன், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூல்களை கண்ணதாசன் அறவாரியம் வெளியிடுவதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. இதன் முக்கிய நோக்கமே, அவரின் புத்தகங்கள் மலேசியர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
எம்ஜிஆரின், ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற புத்தகத்தைப் படித்து, நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை எம்ஜிஆரிடம் இரண்டு விஷயங்கள் தனித்துவம் வாய்ந்தவை.
ஒன்று எந்தக் காரியமாக இருந்தாலும் அதனைக் குறித்த நேரத்தில் எம்ஜிஆர் செய்து விடுவார். மற்றொன்று அவருடைய ஈகைக் குணமாகும். இந்த இரண்டையும் அவர் நடிகராக இருந்தபோதும், அரசியல்வாதியாக இருந்தபோதும் பின்பற்றியே வந்துள்ளார்.
எம்ஜிஆரைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், சிலர் சரித்திரத்தில் வாழ்வார்கள். இன்னும் சிலர் சரித்திரத்துக்காக வாழ்வார்கள். ஆனால், நம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சரித்திரமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்” என்று கூறினார்.

Richardsof
8th June 2015, 06:03 AM
நான் ஏன் பிறந்தேன்!!!
naan en piranthen

பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்

கவிஞர் வாலி அவர்கள் இயற்றி மக்கள் திலகம் நடித்து வெளியான பாடல்கள் என்பதா? மக்கள் திலகத்திற்காக கவிஞர் வாலி இயற்றிய பாடல்கள் என்பதா? இந்தக் கலவை தந்திருக்கும் முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன தமிழ்த்திரைசையில்! நான் ஏன் பிறந்தேன்… என்கிற திரைப்படத்தில் இடம் பெரும் இனிய பாடலிது! கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ் இசையமைப்பில் உருவான பாடல்கள் என்றும் நம் இதயம் தொடுகின்றன!

நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
நினைத்து செயல்படு என் தோழா
உடனே செயல்படு என் தோழா

முன்னோர் சொன்ன சொல்லே ஆனாலும் எளிய தமிழில் வினாக்களாய் நம் நெஞ்சில் பதிக்கிறார். மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் கென்னடி தான் பதவி ஏற்றக் கூட்டத்தில் “Ask not what your country had done for you; Ask what you have doe for the country” என்ற பொன்மொழியின் பிரதிபலிப்பாக இப்பாடல் திகழ்கிறது!

பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்
க*ற்ற*வ*ர் ச*பையில் உன*க்காக* த*னி இட*மும் த*ர* வேண்டும்
உன் க*ண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உல*க*ம் அழ* வேண்டும்

mgrvaali
இந்த வைர வரிகள் என்னையும் கூட வாழ்க்கைப் போராட்டத்தில் நீந்தி வெற்றி பெற வைத்திருக்கின்றன என்றால் அது மிகையில்லை! அந்த நன்றிக் கடனாக “வாழும் தமிழே வாலி” என்கிற நூலை கவிஞர் வாலிக்கு நன்றி காணிக்கையாக எழுதி குமரன் பதிப்பகத்தால் வெளியிட்டேன்.. பாடலாசிரியன் என்கிற தகுதியோடு திரையுலகில் பாட்டு எழுதிச் சென்றவர் பலர் இருக்கலாம்! அதே பாடல்கள் மக்கள் நெஞ்சில் குடியிருக்கச் செய்தவரைத்தான் ‘கவிஞர்’ என்கிற வரிசையில் கொள்கிறோம். மேலும் அதிலும் மானுட வாழ்விற்கான தேவைகளைக் கருத்துக்களை வழங்கிய கவிஞர்களையே காலம் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறது.
கவிஞர் காவிரிமைந்தன்.

Richardsof
8th June 2015, 06:04 AM
ஆனந்தவிகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய தொடரை நூலாக்கி, அரிய படங்களையும் சேர்த்து இரு தொகுதிகளாக வெளியிட்டிருப்பது சிறப்பு. இத்தொடர் எழுதுவது ஏன் என்பதை எம்.ஜி.ஆர். விளக்குவதிலிருந்தே விறுவிறுப்பு தொடங்குகிறது.
தனக்கு உதவிய குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ஏ.வி.ராமன் போன்றோரை அவர் விவரிப்பதைப் படிக்கும்போது அட... இப்படியும் நல்ல மனிதர்கள் இருந்துள்ளார்களே என்ற வியப்பே ஏற்படுகிறது. இதைப்போல மனிதர்கள் பலரை நூலெங்கும் காண முடிகிறது.
"திருடாதே' படத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்ட விஷயங்கள் அனைத்துமே தனக்கு எதிராக மாறியதையும், அச் சூழலில் தான் நடந்துகொண்ட விதத்தையும் எம்.ஜி.ஆர். விவரித்திருப்பது வாழ்க்கைப் பாதையில் போராடும் அனைவருக்கும் பாடம்.
திரைப்படம், அரசியல் என அவர் எதிர்கொண்ட மனிதர்கள், அவர்களால் ஏற்பட்ட பாதிப்பு, உதவி, அவமானம், புகழ், பொருள், தன்னிடமிருந்த செருக்கு, விரக்தி, எதிர்ப்பு, அன்பு, பாசம், மோசம், சோதனை, அதை முறியடித்து பெற்ற சாதனை என வாழ்வின் அத்தனை கோணங்களையும் மிக எளிய முறையில் யாருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
மொத்தத்தில் 134 தலைப்புகளில் எம்.ஜி.ஆர். விவரித்திருக்கும் சம்பவங்கள், கருத்துகள் அனைத்தும் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக்கூடாது என்பதை மிகச்சிறப்பாக விளக்கியிருக்கும் அற்புதமான நூல்.

Richardsof
8th June 2015, 06:20 AM
எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார்.
’உங்களுக்கெல்லாம் தெரியும். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்கொண்ட எதிர் பாராத தோல்வியைத்தொடர்ந்து என்னுடைய மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் என்னுடைய ஆட்சியைக் கலைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாகிரெட்டியாரின் மூத்த புதல்வர் பிரசாத் அகால மரணமடைந்து விட்டார். நான் துக்கம் விசாரிக்க நாகிரெட்டி அவர்களின் வீட்டிற்கு போயிருந்தேன். என்னை கண்டதும் அவர் ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்து “உங்கள் ஆட்சியை கலைத்து விட்டார்களே” என்று கதறி அழ ஆரம்பித்துவிட்டார். ( இந்த இடத்தில் எம்.ஜி.ஆர் சற்று நிறுத்தி விட்டார்.) எவ்வளவு உயர்ந்த உள்ளம் பாருங்கள். அவர் பெற்ற பிள்ளை இறந்து விட்டார்.ஆனால் அவர் என்னுடைய ஆட்சியை கலைத்துவிட்டார்களே என்று அழுகிறார். என் மீது அவர் எப்படிப் பட்ட அன்பைக்கொண்டிருக்கிறார் பாருங்கள்.
நான் இப்போது அவரிடம் மேடையில் ஏதோ கேட்டதை நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள். நான் கேட்டேன். ‘ இன்று எனக்கு ஆட்சி மீண்டும் கிடைத்து விட்டது. ஆனால் உங்களுக்கு உங்கள் மகன்? உங்கள் மகனை என்றென்றைக்குமாக நீங்கள் இழந்தே விட்டீர்கள்.’
( எம்.ஜி.ஆர் குரல் மிகவும் நெகிழ்ந்து தழுதழுத்தது)

1980களில் வந்த படங்கள் குறித்த தன் அதிருப்தியை தொடர்ந்து எம்.ஜி.ஆர் வெளிப்படுத்திய விதம் கீழ் வருமாறு:

”’இதயக்கனி’ படம் வெளிவந்திருந்தபோது நான் என் ரசிகர் ஒருவரிடம் படம் பற்றி கேட்டேன். அவர் எனக்கு பிடித்திருக்கிறது என்று சொன்னார். நான் அவர் சொன்னதைக் கேட்டு திருப்தியடைந்துவிடவில்லை.” உன் தாயார் இதயக்கனி படம் பார்த்தார்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று மீண்டும் கேட்டேன். அவர் சற்று தயங்கினார். “ தயவு செய்து அவர் சொன்னதை அப்படியே சொல்” என்றேன். என் ரசிகர் மெதுவாக சொன்னார். ”வர வர எம்.ஜி.ஆர் படம் கூட இனி பார்க்க முடியாது போலிருக்கிறதே என்று என் தாயார் வேதனைப்பட்டார்.” இடி இறங்கியது போல நான் துடித்துப்போய் விட்டேன். அந்த படத்தில் நான் ராதா சலூஜாவுடன் நெருக்கமாக நடித்து விட்டேன் என்று பலரும் பேசியதை அறிய வந்தேன். மீண்டும் நானே எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து அப்படிப்பட்ட காட்சிகளை நீக்கினேன். மீண்டும் படத்தை வெளியிட்டேன். அதற்கே அப்படி என்றால் இப்போது நடப்பது என்ன? எவ்வளவு ஆபாச காட்சிகள். எப்படியெல்லாம் கற்பழிப்பு காட்சிகள். இது தான் திரையுலகம் காணும் பண்பாடா? இது நியாயமா? நான் மிகுந்த பணிவோடு எச்சரிக்கிறேன். தயவு செய்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுங்கள்.உங்களை கை கூப்பி வேண்டிக்கேட்கிறேன். தயவுசெய்து கண்ணியம் மீறாதீர்கள்.வளர்ச்சியில் தான் மலர்ச்சியை காண்கிறோம். அதே நேரம் மலர்ச்சியில் வளர்ச்சியைக் காண்கிறோம்.”

Russellrqe
8th June 2015, 09:01 AM
வினோத் சார்
மக்கள் திலகத்தின் நான் ஏன் பிறந்தேன் - இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது .உங்கள் பதிவுகள் மூலம் நினைவு படுத்தியதற்கு மனமார்ந்த நன்றி . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு மற்றும் இனிய பாடல்கள் மறக்க முடியாதது .மக்கள் திலகம் - மேஜர் சுந்தராஜன் சந்திப்பு காட்சிகள் , மக்கள் திலகத்தின் மாண்புகளை வி .கோபால கிருஷ்ணன் பெருமையுடன் கூறும் காட்சிகள் ,குடும்பத்தில் உருவான குழப்பங்களை மிகவும் சாமார்த்தியமாக மக்கள் திலகம் சமாளிக்கும் காட்சிகள் ,அருமை .