View Full Version : Makkal Thilakam MGR -PART 15
Pages :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
[
15]
16
17
puratchi nadigar mgr
24th June 2015, 12:17 AM
நாளை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்
வழங்கும், தேவரின் "தாயைக் காத்த தனயன் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/1fin2v.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு.சுந்தர்.
saileshbasu
24th June 2015, 12:32 AM
https://www.youtube.com/watch?v=UNRyFsizdig
puratchi nadigar mgr
24th June 2015, 12:33 AM
நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு .
----------------------------------
கடந்த சில நாட்களாக , தின இதழ் நாளிதழில், உண்மைக்கு புறம்பான,தவறான
செய்திகள் பிரசுரம் ஆகி வந்தது குறித்து, நண்பர்களின் விமர்சனங்களை/ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு , நண்பர் திரு. ராஜ்குமார் , தின இதழ்
ஆசிரியர் திரு.குமரனிடம் இது குறித்து, புகார் தெரிவித்தும், நண்பர்களின் கருத்துக்கள் /விமர்சனங்கள் /கண்டனங்கள் எழுந்தது குறித்தும் நமது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரியின் சார்பாக , தொலைபேசியில் விரிவாக , உரையாடியுள்ளார்.
உரையாடலுக்கு பின்னர், தின இதழ் ஆசிரியர், இனி வரும் நாட்களில் இது போன்ற
தவறுகள் , பிழைகள் நேரா வண்ணம் பார்த்து கொள்வதாக உறுதி அளித்ததாக
திரு. சைதை ராஜ்குமார் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
ஆர். லோகநாதன்.
saileshbasu
24th June 2015, 01:03 AM
https://www.youtube.com/watch?v=OYGai8NAXmg
saileshbasu
24th June 2015, 01:07 AM
https://www.youtube.com/watch?v=qXsRTtZWGII
saileshbasu
24th June 2015, 01:15 AM
https://www.youtube.com/watch?v=cMECGAa2Nc8
saileshbasu
24th June 2015, 01:19 AM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KANNADASAN1_zps3aep0qmj.jpg
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/KANNADASAN2_zpswbooijsc.jpg
saileshbasu
24th June 2015, 01:46 AM
HAPPY BIRTHDAY TO THIRAI ISAI CHAKRAVARTHI [MELLISAI MANNAR]. OUR SINCERE WISHES FOR YOUR SPEEDY RECOVERY:
நான் சபை ஏறும் நாள் வந்தது நாம் சந்திக்கும் நிலை வந்தது
என் சங்கீதம் தாய் தந்தது !!
தேன் சந்தங்கள் தமிழ் தந்தது நானும் அன்பான நண்பர்கள் முன்பாக
இந்நேரம் பண்பாட வந்தேன் நெஞ்சில் உண்டான எண்ணத்தை
உல்லாச வண்ணத்தை பாட்டாக தந்தேன் பாட பாட ராகம் வரும்
பார்க்க பார்க்க மோகம் வரும்
நான் எல்லோரும் தருகின்ற நல்வாக்கை துணை கொண்டு
செல்வாக்கை பெறுகின்றவன் !!
https://www.youtube.com/watch?v=LD0ydSvlkBw
esvee
24th June 2015, 06:00 AM
தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் பிறந்த தினம் இன்று!
ஒரேநாளில் பிறந்த இரண்டு மாமேதைகள் தான் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன். “நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற வரிகளின் மூலம் இன்றும் நம் நெஞ்சில் வாழ்ந்து வருபவர் கண்ணதாசன் அவர்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியில் நாத்திகனாக இருந்து, பின் இவர் எழுதிய ’அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நாவலின் வாயிலாக இறைவனை புரிந்துகொண்டார்.
பாடல்கள் மட்டுமின்றி ’ஏசு காவியம்’, ‘அவள் ஒரு இந்து பெண், வனவாசம் என காலத்தால் அழியாத நாவல்களை படைத்துள்ளார்.
இதேபோல் பாடலின் வரிகள் இவை இல்லையெனில் வெறும் காகிதங்களாக தான் இருக்கும், அதன் பெயர் தான் விஸ்வநாதன், மன்னிக்கவும் இசை. எனக்கு இசையும், விஸ்வநாதனும் வேறு ஆளாக தெரிவதில்லை. இவரால் தான் ஒரு மாநிலத்தில் தலையெழுத்தே மாறியது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆனால் அது தான் உண்மை.தன் பாட்டின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காது நிழைத்திருக்கும் ’புரட்சி தலைவர்’ எம்ஜிஆர் அவர்களுக்கு 75% படங்களுக்கு இசையமைத்தது என்றால் இவர் தான்.
மேலும் கண்ணதாசனும்-விஸ்வநாதன் அவர்கள் கூட்டனியில் ’ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், என் கடமை, தங்கப்பதக்கம்’ போன்ற பல படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.
ஒரு பாடல் வரிகள் இல்லாமல் முழுமையடையாது, அதேபோல் இசையில்லாமல் வரிகள் உயிர் பெறாது. அதனால் தான் கலைத்தாய் இருவரையும் ஒன்றாக படைத்தார் போல!இதுபோல் மாமனிதர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் என்றும் ‘சினி உலகத்திற்கு’ பெருமை தான்.
courtesy - net
esvee
24th June 2015, 06:04 AM
கவிஞர் கூட்டம் கதாநாயகிகளையே வர்ணித்து பாடல்கள் புனைந்து வந்த நிலையில், இவரது வரவால் கதாநாயகனை, இவரது தேக்குமர தேகத்தை, பொன் தந்த நிறத்தை விரும்பி,
‘தேக்குமரம் உடலைத் தந்தது,
சின்னயானை நடையைத் தந்தது,
பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது,
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது என்று வர்ணித்துப் பாட வைத்தது.
புகழ்ந்து பலர் பாடினாலும் அதற்குப் பொருத்தமாய் வாழ்ந்து காட்டிய தோற்றம் மட்டுமா? அவரின் மன ஏற்றமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்த வள்ளல் திருக்குறளை நிறையப் படித்திருப்பார் நிச்சயமாக! எவரெவர் எப்படியெப்படியெல்லாம் இருக்க வேண்டுமென வள்ளுவர் பெருமான் வரையறுத்துள்ளாரோ அப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்தி நிஜத்தில் வாழ்ந்து காட்டிய நேர்த்தி சொல்லி மாளாது! சொற்களில் அடங்காது!
இவருக்காக எழுதிய பாடல்கள் வியப்பின் உச்சம்! திரைப்படத்தை மீறி உண்மையாகவே இவருக்கெனப் பிறந்த அந்த வார்த்தைகள் இவருக்கு மட்டுமே பொருத்தமான அவ்வரிகள் இவரால் வளம் பெற்றன, சாகாவரம் பெற்றன! கற்புக்கரசி பெய்யென்று சொன்னால் பெய்யுமாம் மழை! இலக்கியத்தில் படித்திருக்கிறோம். அப்படி இவருக்கு திரைப்படத்திற்கு எழுதிய வரிகள் நிஜமானது வியப்பின் உச்சம். ‘உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்’ பாடலில்,
மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு
மாலைகள் விழவேண்டும்! ஒரு
மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழவேண்டும்!
கவிஞரின் கற்பனையில் பிறந்த வரிகள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டது எப்படி?
‘மனிதனென்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்’
என்கிற வரிகளுக்கேற்ப வாரி வாரி வழங்கி வள்ளலானார், பின் மக்கள் மனங்களில் தெய்வமானார்.
courtesy - vallamai
esvee
24th June 2015, 06:10 AM
கவிஞர் கண்ணதாசனும் திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரும் இணைந்து மதுரைவீரன் (1956), மகாதேவி (1957), நாடோடிமன்னன்(1958), மன்னாதி மன்னன் (1960) என்று பல படங்களை தந்து தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்தின் ஊதுகுழல்களாக திரையில் செயல்பட்டு வந்தனர்.
எம்ஜிஆர் நடிப்பில் கண்ணதாசன் பாடல், கதை வசனத்தில் உருவான 'மன்னாதி மன்னன்' படத்தில்
"அச்சம் என்பது மடமையடா;
அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று பாடல் எழுதி தான் சார்ந்திருந்த இயக்கத்தின் தனி திராவிட நாட்டு ஆசையை வெளிப்படுத்தினார் கண்ணதாசன்.
அதே பாடலில்,
"கனக விசயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேரமகன்
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி
இசைப்பட வாழ்ந்தான் பாண்டியனே..."
- என , திமுக முன்னிறுத்தி வந்த தமிழ், தமிழர்கள், மூவேந்தர்களின் பெருமைப் பாடும் கருத்துருவை பாடல் வரிகளாகவும் வசனங்களாகவும் தந்தார் கவியரசு.
மதுரை வீரன் படத்தில் ,
"கடமையிலே உயிர் வாழ்ந்து
கண்ணியமே கொள்கையென
மடிந்த மதுரை வீரா..."
- என்று தொடரும் இப் பாடலில் 'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' என்ற அண்ணாவின் பிரபல மேற்கோளை கோடிட்டு காட்டினார் கண்ணதாசன்.
அதே படத்தில் இன்னொரு பாடல்.
" செந்தமிழா எழுந்து வாராயோ - உன்
சிங்காரத் தாய்மொழியை பாராயோ"
- என்று சொல்வார்
எம்.ஜி.ஆர். தயாரித்த ' நாடோடிமன்னன் ' படத்தில், 'செந்தமிழே வணக்கம்.." என்று
பாடலாக வணங்கிய கண்ணதாசனின் தமிழ், அதே படத்தில் 'அண்ணா.. நீங்கள் நாடாள வர வேண்டும்" என்ற வசனத்தின் மூலம் அண்ணாதுரையை முதலமைச்சராக வர வேண்டுமென 1958லேயே தனது ஆசையை வெளியிட்டது.
courtesy - thinnai
Varadakumar Sundaraman
24th June 2015, 09:06 AM
HAPPY BIRTH DAY M.S.V SIR
http://i58.tinypic.com/23j65it.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:07 AM
http://i57.tinypic.com/9roy2o.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:08 AM
http://i57.tinypic.com/2qnva6t.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:09 AM
http://i60.tinypic.com/212g4z6.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:12 AM
http://i60.tinypic.com/2s0bn1z.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:13 AM
http://i57.tinypic.com/2u4og7m.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:15 AM
http://i61.tinypic.com/2j1r9df.jpg
http://i61.tinypic.com/33cydmp.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:20 AM
தமிழக அரசவை கவிஞரின் பிறந்த நாள்
http://i57.tinypic.com/23w8qjc.jpg
puratchi nadigar mgr
24th June 2015, 09:22 AM
இன்று பிறந்த நாள் காணும் மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி.அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
இன்று மதியம் 12 மணிக்கு ஜெயா மூவிஸில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். நடித்த
"ஒரு தாய் மக்கள்" ஒளிபரப்பாகிறது.
http://i61.tinypic.com/2myb0x2.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்
Varadakumar Sundaraman
24th June 2015, 09:22 AM
http://i57.tinypic.com/idhef4.jpg
puratchi nadigar mgr
24th June 2015, 09:23 AM
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் , திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆரின்
" தொழிலாளி " ஒளிபரப்பாகிறது .
http://i62.tinypic.com/2zz3z8i.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:24 AM
http://i62.tinypic.com/30siqdf.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:25 AM
http://i62.tinypic.com/5mjvw2.jpg
Varadakumar Sundaraman
24th June 2015, 09:27 AM
http://i59.tinypic.com/r1abk5.jpg
puratchi nadigar mgr
24th June 2015, 09:31 AM
அற்புதமான பாடல்கள் இசைஅமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று இரவு 8 மணிக்கு
ராஜ் டிஜிடல் பிளஸ்சில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " ரகசிய போலீஸ் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2zhh54j.jpg
ravichandrran
24th June 2015, 04:19 PM
இன்று பிறந்த காணும் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
saileshbasu
24th June 2015, 05:18 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/24th%20June%202015_zps6d5mw8qe.jpg
http://dinaethal.epapr.in/528054/Kancheepuram-Edition/24.06.15#page/14/1
Yukesh Babu
24th June 2015, 05:27 PM
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம்...சினிமா...!
ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர்...!
அந்த கதை உருவான கதை..!
1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.
எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் …
” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ”
போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்...
காமராஜர் பதட்டத்துடன் தன் காரை விட்டு கீழே இறங்க முயற்சிக்க , தடுத்து விட்ட எம்.ஜி.ஆர்..காமராஜரிடம் இப்படிக் கேட்டாராம்....
“என்னங்க...ஏன் இப்படி தனியே வர்றீங்க...? செக்யூரிட்டி யாரும் இல்லையா? ”
எம்.ஜி.ஆர்.இப்படிக் கேட்கக் காரணம் என்னவென்றால் .... அப்பொழுது காமராஜர் முதல் அமைச்சர் ...
காமராஜர் சிரித்தபடி சொன்னாராம்...“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க ..? எனக்கு எதற்கு பாடி கார்டு ? ”
எம்.ஜி.ஆரும் புன்னகைக்க ..அப்புறம் கொஞ்ச நேரம் பேசி விட்டு இருவரும் பிரிந்து சென்றார்களாம் ....
காரில் ஏறிய எம்.ஜி.ஆர் நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தாராம்....
நெடுநேர சிந்தனைக்குப் பின் சொன்னாராம்... “ என்னோட அடுத்த படத்துக்கு ஐடியா கிடைச்சிட்டது ...நம்ம காமராஜர் ஐயாதான் ஹீரோ...! ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாமல் , தனக்கு சவால் இல்லாமல் .. யார் மக்கள் மத்தியிலே வலம் வருகிறானோ ....அவன்தான் உண்மையான தலைவன் ... இதை வச்சு ஒரு கதை எழுதணும்,” என்றாராம் எம்.ஜி.ஆர்...
அப்படி உருவான அந்தப் படம்தான் “அரச கட்டளை” ...!
இந்த நேரத்தில் காமராஜரின் எளிமையைப் பற்றிய இன்னொரு தகவல் நினைவுக்கு வருகிறது...!
காமராஜர் முதல் அமைச்சரானபோது சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு வாகனம் புறப்பட்டதாம்...உடனே அதைத் தடுத்த காமராஜர் கேட்டாராம் இப்படி...!
“நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?”
courtesy net
Yukesh Babu
24th June 2015, 05:42 PM
1960களில் தலைவர் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பயணத்தை மேற்க்கொள்வதற்காக காத்திருந்தார்.
தலைவரின் பாஸ்போர்ட் வழங்கப்படாமல் பொருமையை சோதிக்கும் அளவு தாமதம்.
தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், அப்பொழுது முதல்வராக இருந்த காலஞ்சென்ற திரு பக்தவச்சலம் அவர்களை பாஸ்போர்ட் விஷயமாக சந்தித்து உரையாட ஏற்பாடு செய்திருந்தார்.
தலைவரின் மனதிற்குள் ஒரே போராட்டம், அப்போதய காலகட்டத்தில் தலைவர் அரசியலில் காங்கிரஸ் அல்லாத கட்சியை ஆதரித்து வந்ததால், முதல்வரை எப்படி சந்தித்து உரையாடுவது என்ற குழப்பம்.
முதல்வர் வீட்டிற்குள் நுழந்ததும், 'நீங்கள்ளாம், நமது நாட்டின் பெருமையை உயர்த்தும் கலைஞர்கள். நீங்கள்ளாம் வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தாவிடில் வேறு யாரால் முடியும். உங்கள் இலங்கைப் பயணத்திற்கு ஆதரவை காட்டுவது எங்களது கடமை, எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க எனது ஆதரவு நிச்சயம் உண்டு, அதோடு இலங்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்', என்று தலைவரிடம் கூறி அனுப்பினாராம்.
'உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்ற தலைப்பில், தலைவர் எழுதிய புத்தகத்தில் மேற்க்கூறியதை எழுதியிருக்கிறார்.
இதோடு, 'கட்சி வேற்றுமையில்லாமல் எப்படி கலைக்கு முக்கியத்துவமும் தக்க மரியாதையையும் அளித்து உதவினார்', என்றும் தலைவர் அந்நாளைய முதல்வரை புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net
Yukesh Babu
24th June 2015, 05:43 PM
தமிழகஂஅரசியலில் எம் ஜி ஆர் சக்தி
கதர் உடை உத்திராட்சமாலை எனஂ
இந்தியா சுதந்திரமாக காங்கிரஸ்
வாதியானஂஎம்ஜிஆர் அறிஞர் அண்ணா வின் எழுர்ச்சி மிக்கஂஎழுத்து பேச்சு இவைகளால்
கவரப்பட்டு தி மு கஂவில் இணைந்து
செயல்பட்டார்
அண்ணா சொன்னார் மரத்தில் அபூர்வகனி ஒன்று பழுத்துள்ளது யார்
கையில் விழுமோ எனஂஏங்கினேன்
அது என் மடியில் விழுந்தது அதை என் இதயத்தில் பத்திரப்படுத்தி கொண்டேன் அந்த கனியே என் இதயக்கனி எம் ஜி ஆர் எனஂ
சிலஂஎம்எல்ஏஂயுடன் இந்தஂகட்சி
எம் ஜி ஆரின் துணையுடன் தேர்தலை சந்திக்கிறது எம் ஜி ஆரின்
வளர்ச்சி பிடிக்காதவர்களின் எண்ணதால் துப்பாக்கியால் தாக்கபடுகிறார் தர்மம் தலைகாக்கஂ
கட்டுடன் கூடிய கை கூப்பி எம் ஜி ஆர் படம் தமிழகம் எங்கும் ஒட்டபடுகிறது கொடுத்து சிவந்தஂகரம் கும்பிட்டு கேட்கிறது
ஊழல் காங்கிரஸ் விரட்டி திராவிடம்
ஆட்சியில் அமரஂஉதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனஂ
அந்த தேர்தலில் எம் ஜி ஆர் படுத்து
கொண்டே ஜயித்து தி மு காவை யும்
அரியணையில் அமரச்செய்தார்
எம் ஜி ஆர் இருக்கும் வரை தி மு கா
வென்றது
என்று எம் ஜி ஆர் ரை நீக்கியதோ அன்று முதல் தி மு கஂதோல்வியையும் எம் ஜி ஆர் ஆரம்பித்த அ தி மு க வெற்றிகரமாக
ஆட்சி பிடித்து ஆள்கிறது
எம் ஜி ஆர் வழியார் நடக்கிறாகளோ
அவர்களை மக்கள் தேர்ந்து எடுத்து
அரியணை யில் அமரவைப்பார்
ஏன் என்றால் மக்களுக்கு தெரியும்
உண்மை எம் ஜி ஆர் தொண்டர்களால்
தான் நல் ஆட்சி தரமுடியும் என
Yukesh Babu
24th June 2015, 05:43 PM
களம் காணாமல் படுத்து கொண்டே
ஒரு முறையல்லஂஇரு முறை வென்றஂவெற்றிவீரன் எம் ஜி ஆர்
எதிரியே அவர் வந்தஂஉடன் வெற்றிகனியை அவரிடம் கொடுத்து
விடுகிறேன்
எனஂசொல்லவைக்கும் சக்தி உலகில் எம் ஜி ஆர் ரை தவிரஂஎவருக்கும் இல்லை
courtesy net
KALAIVENTHAN
24th June 2015, 07:48 PM
The following image was posted at the request of my dear Brother and Co-Hubber Mr. M.G.C. PRADEEP BAALU.
http://i62.tinypic.com/scc01k.jpg
In this Picture, it is his Grandfather Palagummi Padmaraju (Writer/Novelist/Director) & Makkal Thilagam
This image was taken on June 20-1976 on his parents wedding day.
Thank you my dear brother M.G.C.Pradeep for the opportunity given to me to post this rare image.
அரிய புகைப்படத்தை பதிவிட்ட சகோதரர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும் அதற்கு காரணமாக இருந்த சகோதரர் திரு.எம்.ஜி.சி.பிரதீப் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
24th June 2015, 07:50 PM
HAPPY BIRTH DAY M.S.V SIR
http://i58.tinypic.com/23j65it.jpg
மெல்லிசை சாம்ராஜ்யத்தின் நிரந்தர மா மன்னராக விளங்கும் திரு.எம்.எஸ்.வி. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
24th June 2015, 07:52 PM
http://i60.tinypic.com/212g4z6.jpg
நன்றி திரு.குமார் சார்.
மெல்லிசை மன்னரிடம் தலைவர் எடுத்துக் கொண்ட உரிமையும் காட்டிய பாசமும் நெகிழ வைக்கிறது. ‘‘இதைச் சொல்றதுக்கா மெனக்கெட்டு திரும்பி வந்தீங்க?’’ என்று தலைவரிடம் கேட்டதன் மூலம் தலைவரிடம் அவருக்கு உள்ள உரிமையும் புரிகிறது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
24th June 2015, 07:53 PM
தமிழக அரசவை கவிஞரின் பிறந்த நாள்
http://i57.tinypic.com/23w8qjc.jpg
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை...
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
24th June 2015, 07:57 PM
http://i62.tinypic.com/30siqdf.jpg
இந்தக் கட்டுரையை ஏற்கனவே கவியரசர் எழுதி பத்திரிகையில் அப்போது படித்திருக்கிறேன். ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கும் நிலை. அந்த நிலையிலும் தலைவர் பதட்டமில்லாமல், மனம் கலங்காமல் நிலைமையை எதிர்கொண்டதோடு மீண்டும் வெற்றி பெறுவோம் என்பதிலும் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கிறார் என்பதை கவியரசரே தன் எழுத்தால் விளக்கியுள்ளார். அந்த உறுதி மக்கள் மீது அவரும், அவர் மீது மக்களும் வைத்திருந்த நம்பிக்கையின் உறுதி.
நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
24th June 2015, 08:37 PM
புரட்சித் தலைவர் பற்றி கவியரசர்
புரட்சித் தலைவருக்கும் கவியரசருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் காரணமாக தலைவரை கவியரசர் கடுமையாக தாக்கியிருந்தாலும் அதையெல்லாம் தாண்டிய அன்பும் நட்புறவும் கவியரசர் மீது தலைவருக்கு உண்டு. இன்று திரு.குமார் சார் பதிவிட்டுள்ள கவியரசரின் ‘சந்தித்தேன், சிந்தித்தேன்’’புத்தகத்தின் பக்கங்களில் (பதிவு எண்.3523) கவியரசரே இதை ‘‘நான் அவர் மீது காட்டிய பகையையும் அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்?’’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அன்பின் அடையாளமாகத்தான் ஆட்சிக்கு வந்ததும் கவியரசரை அரசவைக் கவிஞராக்கி அழகுபார்த்தார் தலைவர்.
இணையதளத்தில் இருந்து எடுத்து கீழே உள்ள இந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்துள்ளேன். ‘நான் பார்த்த அரசியல்’ புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரை எடுத்தாளப்பட்டுள்ளது. அந்தப் புத்தகம் என்னிடமும் உள்ளது. நம்மில் பலரிடமும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் இருந்து சில பகுதிகள் இணையதளத்தில் இருந்து.......
-------------------------------------
திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.
இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.
கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.
“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.
செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.
நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.
“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.
“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.
“தெரியாது” என்றேன்.
“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.
“இருக்காதே” என்றேன்.
“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.
இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.
அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.
கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.
“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.
“என்ன நினைக்கிறாய்?” என்றார்.
“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.
“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.
ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன். 1971 பொதுத் தேர்தலே சான்று.
அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.
இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.
ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்*ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.
இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.
1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.
சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.
ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு. எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.
முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது. அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான். ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள். கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள். அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.
இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது. இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.
சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர்பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது. அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.
எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.
கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது. எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும். திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும். அதனால் எம்.ஜி.ஆருடைய விலகல் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.
மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.
“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”- என்றும் அவர் காட்டினார். அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது. எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர். எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.
இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை. ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்.
அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார். ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார். இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது.
பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.
ஆதாரம் : கவிஞர் கண்ணதாசனின் ‘நான் பார்த்த அரசியல்’
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
makkal thilagam mgr
24th June 2015, 11:15 PM
http://i62.tinypic.com/i23u9z.jpg
Courtesy : Facebook
makkal thilagam mgr
24th June 2015, 11:19 PM
கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் பிறந்த தினத்தையொட்டி, நமது இதய தெய்வம் மக்கள் திலகத்துடன் அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வழங்கி, இன்று நற்பதிவுகளிட்ட சகோதரர்கள் திரு. வரதகுமார் சுந்தராமன், திரு. கலைவேந்தன் மற்றும் திரு. வினோத் ஆகியோருக்கு நன்றி !
saileshbasu
24th June 2015, 11:34 PM
JAYA MOVIES - TOMORROW 25/6/2015- 12 AFTERNOON [ INDIA] : PUTHIYA BOOMI
https://www.youtube.com/watch?v=Hih-i1_cJmo
esvee
25th June 2015, 06:16 AM
இனிய நண்பர் திரு குமார் அவர்கள் பதிவிட்ட கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னரின் கட்டுரைகள் மிகவும் அருமை .
திமுகவிலிருந்து கண்ணதாசன் 1961ல் விலகிவிட்டாலும் , அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் மீது தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தாலும் , பாடல்கள் என்று வந்து விட்டால் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆளுமைகளை பற்றி மிக அழகாக வர்ணனை செய்த கண்ணதாசன் போல் எவருமில்லை என்பதில் பெருமையே .
esvee
25th June 2015, 06:48 AM
மக்கள் திலகத்தின் ''புதிய பூமி'' திரைக்கு வந்து நாளையுடன் 47 ஆண்டுகள் நிறைவு பெறுகிற நேரத்தில் இன்று
ஜெயா தொலைக்காட்சியில் இப்படம் ஒளி பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது . தகவலுக்கு நன்றி சைலேஷ் சார்
saileshbasu
25th June 2015, 08:43 AM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=cXQxVEbSwIM
saileshbasu
25th June 2015, 08:44 AM
MGR Enga Veetu Pillai Movie 50 Year Celebration
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜா தேவி நடித்த 'எங்க வீட்டு பிள்ளை' வெளியாகி 50 வருடங்கள் ஆகின்றது, அதனையோட்டி உரிமைக்குரல் இதழ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியின் தொகுப்பு.
ShrutiWebTV
https://www.youtube.com/watch?v=HZz9XaPXbJg
Varadakumar Sundaraman
25th June 2015, 08:54 AM
சைலேஷ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் மாண்புகளை மிக சிறப்பாக கூறிய தலைவர்களின் வீடியோ தொகுப்புகள்எல்லாமே அருமை . நன்றி சார் .
saileshbasu
25th June 2015, 04:44 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/25th%20June%202015_zpshv8us7zx.jpg
http://dinaethal.epapr.in/528764/Dinaethal-Chennai/25.06.15#page/14/1
Yukesh Babu
25th June 2015, 05:20 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsw9no3ijh.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsw9no3ijh.jpg.html)
Yukesh Babu
25th June 2015, 05:27 PM
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி......ஓவியம்!
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsu4dubs7i.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsu4dubs7i.jpg.html)
Sathya VP
25th June 2015, 05:32 PM
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி......ஓவியம்!
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsu4dubs7i.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsu4dubs7i.jpg.html)
Super still Yukesh babu sir...
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
RavikiranSurya
25th June 2015, 05:33 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsp8y4dsho.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsp8y4dsho.jpg.html)
Yukesh Babu
25th June 2015, 06:03 PM
யோகாசனம் செய்யும் மக்கள் திலகம் !
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8yniwyjz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8yniwyjz.jpg.html)
RavikiranSurya
25th June 2015, 06:49 PM
யோகாசனம் செய்யும் மக்கள் திலகம் !
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zps8yniwyjz.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zps8yniwyjz.jpg.html)
for the film Thalaivan ?
RKS
Yukesh Babu
25th June 2015, 06:50 PM
yes sir
puratchi nadigar mgr
25th June 2015, 08:56 PM
இன்று காலை 6 மணிக்கு ஜெயா மூவிஸில் , நிருத்திய சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர்.
நடித்த " விக்கிரமாதித்தன் " ஒளிபரப்பாகியது
http://i57.tinypic.com/2zh4ild.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
puratchi nadigar mgr
25th June 2015, 08:59 PM
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் பிளசில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது
http://i62.tinypic.com/9sv3o5.jpg
Yukesh Babu
25th June 2015, 09:24 PM
முதல் ஏ தமிழ் சினிமாவில் ஏ சான்று பெற்ற முதல் படம் மர்மயோகி. எம்ஜிஆர் நடித்து. கே ராம்நாத் இயக்கிய படம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1951-ல் வெளியான படம் இது.
முதல் வண்ணப்படம் தமிழின் முதல் வண்ணப்படம் என்ற பெருமை அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு உண்டு. எம்ஜிஆர் நடித்த இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் டிஆர் சுந்தரம் இயக்கினார். அன்றைய நாட்களில் இந்தப் படத்தின் கேவா கலரை வியந்து பார்த்தது ரசிகர் கூட்டம்.
முதல் பிஆர்ஓ தமிழ் சினிமாவின் மக்கள் தொடர்பாளர் (பொதுஜனத் தொடர்பு) என்ற பணியை உருவாக்கியவர் எம்ஜிஆர். 1958-ல் அவரது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பிஆர்ஓவாக அறிமுகமானவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நாம் இத்தனை புள்ளிவிவரங்களை எழுத தகவல் சேகரித்து வைத்திருக்கும் பெரும் சாதனையாளர்.
courtesy one india
puratchi nadigar mgr
25th June 2015, 09:26 PM
சென்னை பாடி சிவசக்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " ஒளி விளக்கு "
தினசரி 4 காட்சிகள் - குறைந்த கட்டணம்-ரூ.30/-
தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
ஓடும் நாட்களிலும், வசூலிலும் பிரளயத்தை ஏற்படுத்திய/ஏற்படுத்துகின்ற
திரைக்காவியம். இடைவிடாது தமிழகம் முழுதும் அடிக்கடி வலம் வரும்
ஒப்பற்ற திரைப்படம்.
http://i61.tinypic.com/10p0boi.jpg
தனது நண்பர் மூலம் செய்தி அறிந்து, உடன் தகவல் தெரிவித்த மடிப்பாக்கம்
திரு. சுந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
puratchi nadigar mgr
25th June 2015, 09:28 PM
http://i59.tinypic.com/b64rd5.jpg
Yukesh Babu
25th June 2015, 09:31 PM
ஓளி விளக்கு என்றுமே அணையா விளக்கு எந்த ஒரு நடிகரின் 100 வது படங்கள் இன்று வரை மறு வெளியீடு வந்தது கிடையாது தலைவரின் நூறாவது படம் மட்டும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு திரைக்கு வந்து வசூலை வாரி குவிக்கும்
சென்னை பாடி சிவசக்தியில் தற்போது வெற்றி நடை போடுகிறது
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கலை மற்றும் அரசியல் உலகின் " ஒளி விளக்கு "
தினசரி 4 காட்சிகள் - குறைந்த கட்டணம்-ரூ.30/-
தமிழ் திரையுலகில் அனைத்து நட்சத்திரங்கள் நடித்த 100 வது படங்களிலேயே
ஓடும் நாட்களிலும், வசூலிலும் பிரளயத்தை ஏற்படுத்திய/ஏற்படுத்துகின்ற
திரைக்காவியம். இடைவிடாது தமிழகம் முழுதும் அடிக்கடி வலம் வரும்
ஒப்பற்ற திரைப்படம்.
http://i61.tinypic.com/10p0boi.jpg
தனது நண்பர் மூலம் செய்தி அறிந்து, உடன் தகவல் தெரிவித்த மடிப்பாக்கம்
திரு. சுந்தர் அவர்களுக்கு மிகவும் நன்றி.
Yukesh Babu
25th June 2015, 09:32 PM
பதிவு செய்த லோகநாதன் அவர்களுக்கு நன்றி
puratchi nadigar mgr
25th June 2015, 09:33 PM
http://i57.tinypic.com/n33m89.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 09:36 PM
http://i62.tinypic.com/xpzryb.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 09:38 PM
http://i61.tinypic.com/6is1np.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 09:41 PM
http://i60.tinypic.com/s324na.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 09:57 PM
மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த "நம் நாடு "
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி (18 மாத இடைவெளியில் ) ரூ.1,03,000/- வசூலை குவித்து சாதனை படைத்தது.
அப்போதைய சுவரொட்டிகள் சிலவற்றை நண்பர்களின் பார்வைக்கு பதிவிடுகிறேன்.
http://i60.tinypic.com/2pzz0bm.jpg
செய்தி/புகைப்படங்கள் தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.
puratchi nadigar mgr
25th June 2015, 09:59 PM
http://i58.tinypic.com/21kmq6t.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:01 PM
http://i60.tinypic.com/2hrityh.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:03 PM
http://i58.tinypic.com/fcjx8k.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:05 PM
http://i62.tinypic.com/2pq3zeu.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:07 PM
http://i62.tinypic.com/euebdt.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:09 PM
http://i60.tinypic.com/25srcbk.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:11 PM
http://i60.tinypic.com/2s6on0p.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:14 PM
http://i57.tinypic.com/28uptsz.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:16 PM
http://i58.tinypic.com/2n9xchd.jpg
RavikiranSurya
25th June 2015, 10:18 PM
ஓளி விளக்கு என்றுமே அணையா விளக்கு எந்த ஒரு நடிகரின் 100 வது படங்கள் இன்று வரை மறு வெளியீடு வந்தது கிடையாது தலைவரின் நூறாவது படம் மட்டும் இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு திரைக்கு வந்து வசூலை வாரி குவிக்கும்
வாழ்த்துக்கள் ...
நவராத்திரி நடிகர் திலகம் அவர்களின் 100வது திரைப்படம். சாதா கேவேட் பிரிண்ட் மட்டுமே போட்டது. 1964இல் அதாவது நடிக்கவந்த 12 ஏ வருடத்தில் 100 வது படமாக அதுவும் ஒரே நாளில் நடிகர் திலகத்தின் மற்றொரு திரைப்படமாம் முரடன் முத்துவுடன் ஒரே சமயத்தில் வெளியாகி எந்த 100வது படமும் பெறாத என்றுமே பெறமுடியாத மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் நவராத்திரி.
பாளிஎஸ்டர் பிரிண்ட் கருப்பு வெள்ளை என்பதால் போட்ட 3 பரிண்டும் எங்கு யாரிடம் உள்ளது என்ற தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. பிரிண்டில் வெள்ளி இருக்கும்பட்சத்தில் அதனை நல்ல விலைக்கு வெள்ளி உருக்கு வியாபாரம் செய்பவர்கள் வசம் சென்றதா என்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு பிரிண்ட் கிடைத்தால் நவராத்திரி திரைப்படமும் ஒளிவிளக்கு போல திரையிட முயற்சி மேற்கொள்ளப்படும் சார் !
Rks
saileshbasu
25th June 2015, 10:21 PM
Emergency Supporters: A List That Will Surprise You
While states north of Vindhyas, waged a spirited battle against Indira’s Emergency, it was mostly business as usual in the south.....
http://swarajyamag.com/lite/emergency-supporters-a-list-that-will-surprise-you/
puratchi nadigar mgr
25th June 2015, 10:24 PM
மதுரை ராம் தியேட்டரில் கடந்த 10/06/2015 முதல் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் "நல்ல நேரம் " திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i58.tinypic.com/zxtj7o.jpg
செய்தி/புகைப்படங்கள் தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார்.
puratchi nadigar mgr
25th June 2015, 10:31 PM
http://i57.tinypic.com/347a8ur.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 10:41 PM
நக்கீரன் வார இதழ் -24/06/2015- சினிமா சீக்ரட் செய்திகள்.
------------------------------------------------------------------
http://i61.tinypic.com/28rdu6v.jpg
http://i62.tinypic.com/2s67twj.jpg
http://i61.tinypic.com/30l2yrq.jpg
makkal thilagam mgr
25th June 2015, 11:13 PM
http://i57.tinypic.com/9fp7r6.jpg
Courtesy : Facebook. Thanks to Mr. MGR Kamalraj
puratchi nadigar mgr
25th June 2015, 11:56 PM
சென்னை தேனாம்பேட்டை , காமராஜர் அரங்கில் வரும் சனிக்கிழமை (27/06/2015)
அன்று நடைபெற உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 98 வது பிறந்த நாள் விழா /
சாண்டோ சின்னப்பா தேவரின் 100 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிக்காக , இதயக்கனி மாத இதழ் சார்பாக , திரு. விஜயன் அவர்கள் ஏற்பாடு செய்து
சென்னை நகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.
http://i59.tinypic.com/k2hb3t.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 11:58 PM
காமராஜர் அரங்கு முன் இதயக்கனி மாத இதழ் சார்பாக அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i61.tinypic.com/2m455r6.jpg
puratchi nadigar mgr
25th June 2015, 11:59 PM
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. எஸ். ராஜ்குமார்
அமைத்துள்ள பேனர்.
http://i60.tinypic.com/27wycn6.jpg
puratchi nadigar mgr
26th June 2015, 12:00 AM
http://i60.tinypic.com/8z2wb5.jpg
puratchi nadigar mgr
26th June 2015, 12:01 AM
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனர்.
http://i59.tinypic.com/1pcygm.jpg
esvee
26th June 2015, 06:51 AM
இலக்கிய செல்வர் திரு மா .பொ . சி அவர்களின் பிறந்த நாள் இன்று .
http://i58.tinypic.com/30vp1zm.jpg
ravichandrran
26th June 2015, 08:18 AM
TODAY ONWARDS AT COIMBATORE SHANMUGA THEATRE
http://s17.postimg.org/6m87uur73/IMG_20150625_WA0009.jpg (http://postimage.org/)
ravichandrran
26th June 2015, 08:30 AM
http://s27.postimg.org/798qm3frn/IMG_20150625_WA0011.jpg (http://postimage.org/)
Varadakumar Sundaraman
26th June 2015, 09:09 AM
TO DAY - SILAMBU SELVAR MA.PO.SI BIRTH DAY
http://i60.tinypic.com/10hkac5.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:10 AM
http://i58.tinypic.com/2nrhn6b.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:11 AM
http://i59.tinypic.com/2z6dzcl.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:14 AM
PUTHIYA BOOMI
27.6.1968
48TH ANNIVERSARY.
http://i62.tinypic.com/24wgiyp.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:16 AM
THANKS PAMMALAR- [SIZE=3]MALARMALAI-1
http://i57.tinypic.com/10yf044.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:19 AM
http://i61.tinypic.com/2a8p8ir.gif
Varadakumar Sundaraman
26th June 2015, 09:20 AM
http://i57.tinypic.com/anijyu.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:20 AM
http://i61.tinypic.com/xl0c2g.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:22 AM
THANKS RAVICHANDRAN SIR
http://i62.tinypic.com/104m744.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:23 AM
http://i60.tinypic.com/2vsesro.png
Varadakumar Sundaraman
26th June 2015, 09:24 AM
http://i60.tinypic.com/b3la12.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 09:25 AM
http://i60.tinypic.com/jfay9w.jpg
puratchi nadigar mgr
26th June 2015, 09:47 AM
இன்று காலை 6 மணி முதல் ஜெயா மூவிஸில் புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.நடித்த
"ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாகி வருகிறது
http://i57.tinypic.com/2ns70uh.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
puratchi nadigar mgr
26th June 2015, 09:50 AM
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிடல் பிளசில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "மாட்டுக்கார வேலன் " ஒளிபரப்பாகிறது.
http://i60.tinypic.com/16a1b21.jpg
Varadakumar Sundaraman
26th June 2015, 11:35 AM
TODAY ONWARDS AT COIMBATORE SHANMUGA THEATRE
http://s17.postimg.org/6m87uur73/IMG_20150625_WA0009.jpg (http://postimage.org/)
மக்கள் திலகத்தின் ''ஆசைமுகம் '' படம் வெளி வந்து 49 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் திரை அரங்கினில் ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியான விஷயம் . தகவல் தந்த திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி .
சென்னை - பாடி - சிவ சக்தியில் மக்கள் திலகத்தின் 100 வது காவியம் ஒளிவிளக்கு - தகவல் மற்றும் விளம்பரங்கள் பதிவிட்ட திரு சுந்தர் , திரு லோகநாதனுக்கு நன்றி .
saileshbasu
26th June 2015, 01:15 PM
NOW ON JAYA MOVIE - THALAIVAN
https://www.youtube.com/watch?v=ssC0vTtNKNo
saileshbasu
26th June 2015, 01:30 PM
https://www.youtube.com/watch?v=_Do8lK7iLaM
ravichandrran
26th June 2015, 02:50 PM
Today onwards
at coimbatore
delite theatre
kumarikkottam
saileshbasu
26th June 2015, 03:28 PM
https://www.youtube.com/watch?v=s8XCUBoJ1jk
Please watch from 17:13 onwards.
KALAIVENTHAN
26th June 2015, 03:55 PM
http://i57.tinypic.com/10yf044.jpg
‘ஒத்தையா? மொத்தமா?
எத்தனை பேர் வாரீங்க?’
இந்தியா இலங்கை இடையே கடற்பகுதியில் அமைந்திருக்கும் பல தீவுகளில் ஒன்றுதான் புங்குடு தீவு. அந்த தீவைச் சேர்ந்த செல்லையா என்பவருக்கும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணமாகி அவர்களது அன்பில் விளைந்தது ஒரு மழலை. கொஞ்சம் வளர்ந்து சிறுவனானதும் யாழ்ப்பாணத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ராணி தியேட்டரில் தலைவர் நடித்த மலைக்கள்ளன் படத்தை பார்த்ததும் அன்று முதல் மனம் முழுவதும் தலைவரை அப்பிக் கொண்டு அவரது ரசிகனான் அந்தச் சிறுவன்.
பின்னர், தமிழகம் வந்து பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படித்த இளைஞனுக்கு தலைவர் மீது பற்று வளர்ந்த வேகத்தைப் போலவே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்தது. நாடகங்களை எழுதி அவற்றில் நடிக்கவும் செய்தார். கலங்கரை விளக்கம், பணமா பாசமா? உள்ளிட்ட படங்களின் கதாசிரியர் ஜி.பாலசுப்பிரமணியன் மூலம் தலைவரின் அறிமுகம் கிடைத்தது.
பச்சையப்பன் கல்லூரி விழாவில் தலைவர் ஒருமுறை கலந்து கொண்டபோது அந்த இளைஞனின் பேச்சு தலைவரை கவர்ந்தது. ஜி.பாலசுப்பிரமணியம் மூலமாக தலைவரை ஒரு படப்பிடிப்பில் அவரது மேக் அப் ரூமில் தனியாக சந்தித்தபோது, தானே முந்திக் கொண்டு அந்த இளைஞனுக்கு வணக்கம் சொன்ன தலைவரின் பண்பும் பணிவும் அடக்கமும் இளைஞனை அவருக்கு மேலும் அடிமைப்படுத்தின. பணிவோடு தலைவரின் கால்களைத் தொட்டு வணங்கி தனக்கு பெருமை சேர்த்துக் கொண்டான் அந்த இளைஞன்.
தங்க நிகர்த் தலைவரின் அழகும் நிறமும் ஒளிபொருந்திய அவரது முகமும் கட்டுடலையும் பார்த்ததும் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை குழிதோண்டிப் புதைத்தான்.
‘‘படித்து விட்டு என்ன செய்வதாய் உத்தேசம்?’’......... தலைவர்.
தலைவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்த பின், நடிக்க விரும்புகிறேன் என்று எப்படி சொல்வது? வெட்கம் பிடுங்கித் தின்றது அந்த இளைஞனுக்கு. ஏற்கனவே நாடகங்களில் நடித்ததோடு, சில நாடகங்களையும் எழுதியிருந்ததால், ‘கதை எழுதுவேன்’ என்றான் இளைஞன்.
‘அப்படியா? ’ என்று கேட்டு மகிழ்ச்சியடைந்த தலைவர் ‘எனக்கு ஒரு கதை கொடுங்களேன்’ என்று அந்த இளைஞனிடம் கேட்க 3 நாட்களில் கதை தருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற இளைஞன். (விடைபெறுவதற்கு முன் தலைவரின் அன்பான உணவு உபசரிப்பு) 3 நாளில் கதையோடு வந்தான்.
கதை தலைவருக்கும் பிடித்துப் போனது. அந்தக் கதைதான் தலைவர் நடித்து 1966-ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தாமதமாகி பின்னர் 1968-ம் ஆண்டு வெளியாகி வசூலை வாரிக் குவித்த வெற்றிப் படமான ஜேயார் மூவிஸின் ‘புதிய பூமி’.
படத்துக்கான கதையைக் கொடுத்த தலைவரின் ரசிகனான, கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு அப்போது வயது 17.
பெயர் ..... வி.சி.குகநாதன்.
‘‘என் திரையுலக வாழ்க்கையில் திரைக்கதாசிரியனாக அங்கீகாரம் அளித்து என் திரையுலக வாழ்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைத்தவர் நான் வணங்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர்’’ என்று பின்னாளில் வி.சி.குகநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
புதியபூமி படத்தில் தலைவரின் பெயர் கதிரவன். கிராம மக்களுக்கு சேவை செய்யும் டாக்டராக வருவார். புதியபூமி படம் வெளியான நேரத்தில் 1968-ம் ஆண்டு தென்காசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் பெயர் கதிரவன். தேர்தலில் கதிரவன் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவும் வேண்டுமா?
*எல்லாரும் தலைவரை எங்க வீட்டுப் பிள்ளை எனக் கொண்டாடுவதை தலைவரே கூறுவதைப் போல அமைந்த , ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...’ பாடல், மற்றும்,
* சின்னவளை முகம் சிவந்தவளை..
* நான்தாண்டி காத்தி....
* நெத்தியிலே பொட்டு வெச்சு...
* விழியே விழியே உனக்கென்ன வேலை....
போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்ட நம் எல்லாருக்குமே மிகவும் பிடித்த படம் புதியபூமி. (எல்லாத்தையும் இப்பயே சொல்ல முடியாது. ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம்... கொஞ்சம்.... சரியா?)
அதிலும் விழியே விழியே... பாடலின் முடிவில் தலைவர் பெண் போலவும் செல்வி. ஜெயலலிதா அவர்கள் ஆண் போலவும் அபிநயங்கள் செய்வது அட்டகாசம். பாடல் முடியும்போது படிகளில் ஜெயலலிதாவை இடதுபுறமும் வலதுபுறமுமாக மாற்றியபடியே, zigzag ஆக அவரை விட வேகமாக ஓடும் தலைவரின் சுறுசுறுப்பு....... அவருக்குத்தான் வரும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பின்குறிப்பு: புதியபூமி படத்தின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். ‘நான்தாண்டி காத்தி..’ யும். அதனால்தான் அதில் வரும் அடுத்த வரிகளான ‘ஒத்தையா? மொத்தமா? எத்தனை பேர் வாரீங்க?’ என்பதையே இந்த கட்டுரைக்கு தலைப்பாக்கினேன். மற்றபடி, தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதா அவர்கள் போட்டியிடும், நாளை நடக்க இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கும் இந்த தலைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் படிப்பவர்கள் தாங்களாக அப்படி நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
esvee
26th June 2015, 09:03 PM
இனிய நண்பர் கலைவேந்தன் சார்
புதிய பூமி - வி.சி . குகநாதன் பற்றிய அறிமுகத்துடன் ,படத்தை பற்றியும் , இன்றைய அரசியல் பற்றியும் இணைத்து
தாங்கள் விளக்கிய விதம் சூப்பர் .
esvee
26th June 2015, 09:36 PM
super title music
https://youtu.be/8JVTd0WkNnU
esvee
26th June 2015, 09:50 PM
super fight scene ''THAIKKU THALAIMAGAN ''
https://youtu.be/GbRMw5bGMlM
puratchi nadigar mgr
26th June 2015, 09:54 PM
இன்று முதல் (26/06/2015) சென்னை பாட்சாவில் (மினர்வா ) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சி மட்டும் நடைபெறுகிறது.
http://i62.tinypic.com/1y90rd.jpg
தகவல் உதவி : திரு.நசீர் அகமது.
saileshbasu
26th June 2015, 10:05 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/26th%20June%202015_zpshf4rzpsy.jpg
http://dinaethal.epapr.in/529557/Dinaethal-Chennai/26.06.2015#page/13/1
puratchi nadigar mgr
26th June 2015, 10:05 PM
தினகரன் - வெள்ளி மலர் -26/06/2015
http://i57.tinypic.com/2i77ntw.jpg
saileshbasu
26th June 2015, 10:42 PM
https://www.youtube.com/watch?v=_g1hYFUU0NM
RavikiranSurya
26th June 2015, 10:49 PM
தினகரன் - வெள்ளி மலர் -26/06/2015
http://i57.tinypic.com/2i77ntw.jpg
:mrgreen:
RavikiranSurya
26th June 2015, 10:51 PM
https://www.youtube.com/watch?v=s8XCUBoJ1jk
Please watch from 17:13 onwards.
Definitely it is being politicised sir !
Till such time Mr.SarathKumar, Mr.Radharavi and Kaalai exist as office bearers, it will continue.
They are industry's best commission agents as of now !
Regards
RKS
saileshbasu
27th June 2015, 12:09 AM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=PG9WI8xBM0E
puratchi nadigar mgr
27th June 2015, 12:39 AM
தமிழ் இந்து -26/06/2015
http://i62.tinypic.com/16lftwp.jpg
http://i58.tinypic.com/123twzc.jpg
http://i57.tinypic.com/35i2h61.jpg
http://i62.tinypic.com/de5qhv.jpg
puratchi nadigar mgr
27th June 2015, 12:42 AM
http://i61.tinypic.com/15nm91y.jpg
http://i61.tinypic.com/2iggbo4.jpg
http://i60.tinypic.com/2192kbs.jpg
http://i62.tinypic.com/2wn9qp5.jpg
puratchi nadigar mgr
27th June 2015, 12:45 AM
http://i60.tinypic.com/s41gxx.jpg
puratchi nadigar mgr
27th June 2015, 12:46 AM
http://i59.tinypic.com/33k4v9v.jpg
puratchi nadigar mgr
27th June 2015, 12:50 AM
வரும் ஞாயிறு (28/06/2015) அன்று ஜெயா தொலைக்காட்சியில்
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " பிற்பகல் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது. அடிக்கடி ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது.
http://i59.tinypic.com/307u7b9.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
puratchi nadigar mgr
27th June 2015, 12:54 AM
28/06/2015- ஞாயிறு மாலை 4.30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
"ஆயிரத்தில் ஒருவன் " ஒளிபரப்பாக உள்ளது. அடிக்கடி திரைப்பட முன்னோட்டம்
காண்பிக்கப்படுகிறது .
http://i61.tinypic.com/2uzyqgx.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
esvee
27th June 2015, 07:03 AM
ஒரே வள்ளல் எம்.ஜி.ஆர் தான் ! வைரமுத்து .
எம்.ஜி.ஆருக்கே மரணமா?
எனக்கு முதலில் மரணப்பயம் வந்தது.
காற்று – சமுத்திரம் – வானம் – எம்.ஜி.ஆர்
இவைகளெல்லாம் மரணிக்க முடியாத சமாசாரங்கள் என்று எங்கள் கிராமத்து மக்களைப் போலவே நானும் நம்பிக்கிடந்த நாட்களுண்டு.
அன்று அந்த நான்காவது நம்பிக்கை நசிந்து விட்டது.
47 முதல் 87 வரை நாற்பதாண்டு காலம் தமிழர்கள் உச்சரிக்கும் ஐம்பது வார்த்தைகளில் ஒரு வார்த்தையாய் இருந்த பெயரை மரணத்தின் மாயக்கரம் அழித்துவிட்டதா?
.ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க் கிடத்தப்பட்டிருந்தீர்கள். இமைக்காமல் கிடந்த உங்களை இமைக்காமல் பார்த்தேன்.
என்னால் அழ முடியவில்லை.அழுகை வரவில்லை.
மனிதல் மட்டும் சோகப் பனிமுட்டம்.
“நான் ரசித்துக் காதலித்த ராஜகுமாரா ! உனக்கா மரணம்?”என்று உதட்டுக்குத் தெரியாமல் நாக்கு உச்சரித்துக் கொண்டது.
அங்கே கூடியிருந்த அரசியல்வாதிகளில் பலர் நாளைகளைப் பற்றியே தர்க்கித்துக் கொண்டிருக்க- நானோ உங்கள் நேற்றுகளை நினைத்தே விக்கித்துக் கொண்டிருந்தேன்.
அப்பப்பா என்ன வளர்ச்சி உங்கள் வளர்ச்சி !
அயல் வீட்டுக்காரருக்கு அறிமுகமில்லாத ஒரு வாழ்க்கையோடு தொடக்கமானீர்கள்; அரசாங்க மரியாதையோடு அடக்கமானீர்கள்.
அன்று கடைசிப் படுக்கையில் உங்களைக் கண்டபோது – ஒரு சரித்திரம் சரிந்து கிடக்கிறது என்று நினைத்தேன். ஓர் அபூர்வம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன்.
ஒன்றன் பின் ஒன்றாய் ஞாபக மேகங்கள் …….
இருபது வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தது காதல் ;
எட்டு வயதில் என்னைத் தூங்கவிடாமல் செய்தவர் நீங்கள்.
கதைகளிலும் கனவுகளிலும் நான் கற்பனை செய்து வைத்திருந்த ராஜகுமாரன் நீங்கள் தான் என்று நினைத்தேன்.
உங்களின் இரட்டை நாடியின் பள்ளத் தாக்கில் குடியிருந்தேன்.
உங்கள் முகத்தின் மீது மீசைவைத்த நிலா என்று ஆசை வைத்தேன்.
நீங்கள் புன்னகை சிந்தும் போது நான் வழிந்தேன். வாள் வீச்சில் வசமிழந்தேன். உங்கள் பாடல்களில் நானும் ஒரு வார்த்தையுமாய் ; நானும் ஒரு வாத்தியமாய் ஆனேன்.
ஒரு தாளம் கட்டுமானத்தில் சிரிக்கும் உங்கள் சங்கீதச் சிரிப்பில் வார்த்தைகளில் பிசிறடிக்காத உங்கள் வசன உச்சரிப்பில் நான் கரைந்து போனேன்.
பெரியகுளம் ரஹீம் டாக்கீஸில் “நாடோடி மன்னன்”பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து, தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, சுவரில் நசுக்கப்பட்ட மூட்டைப் பூச்சிகளின் ரத்தக் கோடுகளை அந்தப் படத்தில் வரும் கயிற்றுப் பாலமாய்க் கற்பனை செய்து கொண்டு விடிய விடிய விழித்திருக்கிறேன்.
“மன்னனல்ல மார்த்தாண்டன”என்று உங்களைப் போல் மூக்கில் சைகை செய்யப் போய் சுட்டுவிரல் நகம்பட்டு சில்லி மூக்கு உடைந்திருக்கிறேன்.
பிரமிக்க மட்டுமே தெரிந்த அந்தப் பிஞ்சு வயதில் எனக்குள் கனவுகளைப் பெருகவிட்டதிலும் கற்பனைகளைத் திருகிவிட்டதிலும் உங்கள் ராஜாராணிக் கதைகளுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதை நான் ரகசியமாய் வைக்க விரும்பவில்லை.
நூறு சரித்திரப் புத்தகங்கள் ஏற்படுத்த முடிந்த கிளர்ச்சியை உங்கள் ஒரே ஒரு படம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பாதிப்பு எனக்கு மட்டும் இல்லை. குடை பிடித்துக் கொண்டவர்களையும் எங்கோ ஓர் ஓரத்தில் நனைந்துவிடுகிற அடைமழை மாதிரி உங்களை விமர்சித்தவர்களைக் கூட ஏதேனும் ஒரு பொழுதில் நாசூக்காக நனைத்தே இருக்கிறீர்கள்.
என்ன காரணம் என்று எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் மந்திரத்தால் மாங்காயோ தந்திரத்தால் தேங்காயோ தருவித்தவரில்லை. வரலாற்று ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அகழ்ந்து பார்த்தால் மட்டுமே உங்கள் வெற்றியின் வேர்களை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்த மண்ணில் எங்கள் மனிதர்கள் சில நூற்றாண்டுகளாக எதை இழந்துவிட்டு நின்றார்களோ அதையே நீங்கள் தோண்டி எடுத்துத் துடைத்துக் கொடுத்தீர்கள் ; விறுவிறுப்பாய் விலைபோயிற்று.
உடலும் உயிரும் மாதிரி காதலும் வீரமும் கலந்தே விளைந்த களம் இந்தத் தமிழ் நிலம்.
காதலை ஒரு கண்ணாகவும் வீரத்தை ஒரு கண்ணாகவும் போற்றிய தமிழன், பொருளாதாரத்தை நெற்றிக் கண்ணாய் நினைக்காமல் போனான் என்பதே அவன் முறிந்து போனதற்கு மூல காரணம்.
பொருதாரச் சிந்தனைக்கே வராத தமிழன், காதலையும் வீரத்தையும் மட்டும் கோவணத்தில் முடிந்து வைத்த தங்கக் காசுகளைப் போல ரகசியமாய்க் காப்பாற்றியே வந்திருக்கிறான்.
இடைக்காலத்தில் தமிழன் அடிமைச் சகதியில் சிக்கவைக்கப்பட்டான்.
அடிக்கடி எஜமானர்கள் மாறினார்கள் என்பதைத் தவிர அவன் வாழ்க்கையில் மாற்றமே இல்லை.
அவனது வீரம் காயடிக்கப்பட்டது ; காதல் கருவறுக்கப்பட்டது.
இழந்து போன ஆனால் இழக்க விரும்பாத அந்தப் பண்புகளை வெள்ளித் திரையில் நீங்கள் வெளிச்சம் போட்ட போது இந்த நாட்டு மக்களின் தேவைகள் கனவுகளில் தீர்த்துவைக்கப்பட்டன.
வீராங்கன், உதயசூரியன், கரிகாலன், மணிவண்ணன், மாமல்லன்
என்றெல்லாம் நீங்கள் பெயர்சூட்டிக் கொண்டபோது தமிழன் தன் இறந்தகால பிம்பங்களைத் தரிசித்தான்.
நீங்கள் கட்டிப்பிடித்து கானம் படித்துக் காதலித்தபோது தமிழன் புதைந்து போன காதல் பண்பைப் புதுப்படித்துக் கொண்டான்.
மலையாள மரபுப்படித் தாயார் பெயரைத் தான் இனிஷியலாகக் கொள்வார்கள். ஆனால் நீங்களோ தமிழ் மரபுப் படி தந்தை பெயரைத்தான் இனிஷிலாகக் கொண்டீர்கள்.
நீங்கள் முதன் முதலாய் இயக்கித் தயாரித்த “நாடோடி மன்னனில்” தொடக்கப் பாடலாக “செந்தமிழே வணக்கம்” என்று தான் ஆரம்பித்தீர்கள்.
உங்களைப் பற்றி என் செவிகள் சேகரித்திருக்கும் செய்திகள் ருசியானவை.
ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள்.
இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள்.
உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன்.
உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்-
நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.
உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம்.
பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான்.
உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன.
எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது.
நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர.
ஒரே ஒரு பாட்டு உங்களுக்கு நான் எழுத ஆசைப்பட்டேன்.
ஆனால்,என்னால் எழுத முடிந்தது உங்களுக்கான இரங்கல் பாட்டுதான்.
உங்களுக்கு என்னால் படைக்க முடிந்தவை – உங்கள் இறுதி ஊர்வலமான “காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்” தான்.
உங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு நான் முதன் முதலாய்ப் போனது உங்கள் அன்புத் துணைவியாருக்கு ஆறுதல் சொல்லத்தான்.
“உங்களைப் பற்றி முதன் முதலில் நான் பேசியது உங்கள் இரங்கல் கூட்டத்தில் தான். அன்று சொன்ன இறுதி வரியே இன்றும் என் இறுதி வரி ;
ஒரே ஒரு சந்திரன் தான் ;
ஒரே ஒரு சூரியன் தான் ;
ஒரே ஒரு எம்.ஜி.ஆர் தான் ;
நன்றி : வைரமுத்துவின் “இந்தக் குளத்தில் கல் எறிந்தவர்கள்” நூலிலிருந்து.
saileshbasu
27th June 2015, 08:42 AM
NOW ON JAYA MOVIE - MAHADEVI:
https://www.youtube.com/watch?v=ThUwMFGxowc
Varadakumar Sundaraman
27th June 2015, 09:13 AM
FROM TO DAY
MADURAI - VANDIYOOR - PALANIMURUGAN
MAKKAL THILAGAM M.G.R. IN ENGA VEETTU PILLAI .
MESSAGE FROM THIRU K. SAMY- MADURAI
http://i59.tinypic.com/35c3d5d.jpg
Varadakumar Sundaraman
27th June 2015, 09:26 AM
1956ல் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய மக்கள் திலகம் எம்ஜிஆர்
1956ல் மாபெரும் சாதனைகள்
1. முதல் முழு நீள வண்ணப்படம் .அலிபாபாவும் 40 திருடர்களும் .மாபெரும் வெற்றி படம் .
2. மதுரை வீரன் - வெள்ளி விழா காவியம் .மிக அதிகமான அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் 1980 வரை இந்த சாதனைகளை முறியடிக்கப்படவில்லை .
3. தேவரின் தாய்க்கு பின் தாரம் - சூப்பர் ஹிட் காவியம் .பல அரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம் .
Varadakumar Sundaraman
27th June 2015, 09:34 AM
கலைவேந்தன்
இயக்குனர் வி .சி .குகநாதன் என்றென்றும் மக்கள் திலகத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்தவர் . 1984ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் பூர்ண குணமடைய அண்ணா மற்றும் மக்கள் குரல் பேப்பரில் அரைப்பக்க விளம்பரம் ஒன்று தந்தார் .
அந்த விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் ,தனி ஆளுமைகள் , மனித நேயம் பற்றி மிக அழகாக வர்ணித்து இருந்தார் . நன்றி மறவாத நல்ல இயக்குனர் வி.சி. குகநாதன் .
Varadakumar Sundaraman
27th June 2015, 09:46 AM
தமிழ் திரை உலகில் மறக்க முடியாத தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழா இன்று சென்னையில் நடை பெற உள்ளது . மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து 16 படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றிகளை கண்டவர் . தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்திற்கும் கே வி மகாதேவன் அவர்கள் இசை அமைத்துள்ளார் .
தேவர் படங்கள் - ஒரு கண்ணோட்டம் .
கண்டிப்புக்கு பெயர் போனவர் தேவர் .தான் தயாரித்த 16 மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் எல்லாவற்றையும் திட்டமிட்டு , மிக குறுகிய காலத்தில் தயாரித்து , வெளியிட்டு மாபெரும் வெற்றிகளை கண்டவர் .
தாய்க்கு பின் தாரம் - 1956 - மாபெரும் வெற்றி படம் .
தாய் சொல்லை தட்டாதே - 1961ல் வசூலில் கலக்கிய காவியம் .
தாயை காத்த தனயன் - 1962- மெகா ஹிட் .
குடும்ப தலைவன் - வெற்றி படம் .
தர்மம் தலைகாக்கும் - 1963- வெற்றி படம் .
நீதிக்கு பின் பாசம் - 1963 - வெற்றி படம் .
வேட்டைக்காரன் - 1964- தமிழ் திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சி செய்த காவியம் .
தொழிலாளி - 1964- வெற்றி படம் .
கன்னித்தாய் -1965- சுமாரான வெற்றி
முகராசி - 1966 - 100 நாட்கள் ஓடிய காவியம் .
தனிப்பிறவி - 1966 - வெற்றி
தாய்க்கு தலைமகன் -1967 வெற்றி படம் .
விவசாயி - 1967 - வெற்றி படம்
தேர்த்திருவிழா - 1968 - சுமாரான வெற்றி
காதல் வாகனம் - 1968 தேவரின் படங்களில் சுமாராக ஓடிய படம் .
நல்ல நேரம் -1972ல் பல சாதனைகள் புரிந்த மெகா ஹிட் காவியம்
saileshbasu
27th June 2015, 03:38 PM
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
தருமம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே.. இந்த நாளும் நமதே
Yukesh Babu
27th June 2015, 03:50 PM
ஒருமுறை அண்ணா அவர்கள் காரில் திமுக கொடியுடன் வெளியூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்தார்.
வழியிலே ஒரு பாட்டி இளநீர் விற்றுகொண்டிருந்தார்!
அண்ணா கார்டிரைவரிம் இளநீர் வாங்கி வர சொல்லி குடித்தபின் டிரைவர் பாட்டியிடம் நூறு ரூபாய் குடுத்து மிச்சம் சில்லரை கேட்டார்.
பாட்டியிடம் சில்லரை இல்லை
டிரைவர் அண்ணாவிடம் தகவல் சொல்ல அண்ணா மீதி பணத்தையும் பாட்டியையே வைத்துகொள்ள சொல்லி விட்டார்
இதை பாட்டியிடம் டிரைவர் கூறியபோது பாட்டி டிரைவரிடம்
"காருக்குள்ளே இருப்பது எம்ஜிஆரா? என கேட்டார்"
இதுதான் தலைவரின் சிறப்பு!
Yukesh Babu
27th June 2015, 04:35 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsnluyt4ti.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsnluyt4ti.jpg.html)
"சினிமாவில் டூயட் பாடுவது கேலிக்குரியது..”
– இப்படிச் சொன்னவர் ..நூற்றுக்கணக்கான டூயட்களை தனது படங்களில் பாடி நடித்த எம்.ஜி.ஆர்...!
இதை தனது பேட்டியில் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்..
மகேந்திரன் சொல்கிறார்..:
“ தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலையில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது” என்று கடுமையாகப் பேசினேன்..”
பின்னர் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது , இது பற்றி மகேந்திரன் இப்படிக் கேட்டாராம்...
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?"
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னாராம் :
"நீங்கள் அன்று என் முன்னால், 'சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம்..”
அப்புறம் நடந்தது ..அதை மகேந்திரனே தொடர்கிறார் :
# "நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கே சென்று . எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்தேன்...
"காரைக்குடியில் இருந்த நான், டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்..." என்றேன்...
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் " என்று ஆசீர்வதித்தார்.
# எம்.ஜி.ஆர் .என்னவோ தன் ஆசியையும் , ஆசையையும் சொல்லி விட்டுப் போய் விட்டார்....
ஆனாலும் இன்றும் கூட ... மகேந்திரன் பார்முலாவை விட , எம்.ஜி.ஆரின் பார்முலாவைப் பின்பற்ற ஆசைப்படும் நடிகர்களும் , இயக்குனர்களும்தான் அதிகம்...!
# சரி..எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே , அவரைக் கடுமையாக விமரிசித்தும் , எம்.ஜி.ஆர். ஏன் மகேந்திரன் மீது கோபம் கொள்ளவில்லை...?
# இதற்கு எம்.ஜி.ஆரின் “ நம் நாடு ” பாடல் நல்ல பதில் தருகிறது...
“மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்..”
Yukesh Babu
27th June 2015, 06:16 PM
ப்ளாஷ்பேக்: ஜவான்களின் ஹீரோவான மக்கள் திலகம் எம்ஜிஆர்!
1966-ம் ஆண்டு முதல் முதலாக ஏவிஎம் நிறுவனத்தில் படம் நடித்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர். அந்த பேனரில் அவர் நடித்தது ஒரே படம்தான். அந்தப் படமும் ப்ளாக்பஸ்டர். வெள்ளிவிழாவைத் தாண்டி ஓடியது. இந்தப் படத்துக்காக 5 நாட்கள் மட்டும் சிம்லாவில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள்.
அப்போது எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தது. போரில் காயம் பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இந்திய ஜவான்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் போயிருந்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் பார்த்ததுமே அங்கிருந்த தென்னக வீரர்கள் அடையாளம் கண்டு, நெகிழ்ந்து போனார்கள். நமது ராணுவ வீரர்களுக்காக அப்போது சிம்லாவில் நடந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசியிருக்கிறார்கள் எம்ஜிஆரும் சரோஜாதேவியும். அப்போது எம்ஜிஆர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்: "நண்பர்களே, இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில் நீங்கள் எவ்வளவு பணம் திரட்டுகிறீர்களோ, அதற்குச் சமமான தொகையை நான் எனது தனிப்பட்ட நிதியாகத் தர விரும்புகிறேன்," என்றார்.
இப்படி ஒரு அறிவிப்பை யாருமே அங்கு எதிர்ப்பார்க்காததால் திகைத்துப் போய்விட்டார்கள். கைத்தட்டல்களால் அந்தப் பகுதி அதிர்ந்தது.
அன்றே, அங்கு திரண்ட நிதி எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர், தன் சம்பளத்தில் கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, அங்கேயே பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று நிதிக்குக் கொடுத்துவிட்டார்.
அந்த ஒரே இரவில், வட இந்தியா முழுவதும் எம்ஜிஆரின் வள்ளல்தன்மை பரவி பெரிய செய்தியாகிவிட்டது. மக்களின் ஹீரோவாகிவிட்டார் மக்கள் திலகம். அதற்கடுத்த தினங்களில் சிம்லா பகுதியில் எம்ஜிஆர் எங்கே போனாலும் மக்கள் வெள்ளம்.. அந்த வெள்ளம் அவர் விமானமேறும் வரை தொடர்ந்து கொண்டே இருந்ததாம்!
Source : http://tamil.oneindia.com/…/mgr-becomes-hero-jawans-flashba…
Yukesh Babu
27th June 2015, 07:21 PM
சிவாஜியை வைத்து ஒரு படம் கூட ஏன் தயாரிக்கவில்லை?
எம்.ஜி.ஆர். மீது வைத்திருந்த அளப்பரிய பாசம்தான் காரணம். `துணைவன்’ படத்தின் கதையைக் கேட்டுவிட்டு, என் தம்பி சிவாஜிக்குப் பொருத்தமான கதை அவரை வைத்து இந்தப் படத்தை எடுங்கள் என்றார். எம்.ஜி.ஆர்., ஆனால் தேவர் அதற்கு மறுத்துவிட்டார். இத்தனைக்கும் தேவரின் மகளை எனக்குப் பேசி மணம் முடித்து வைத்தவர் நடிகர் திலகம் அவர்கள்.
அவர்மீது அபரிமிதமான அன்பும் மரியாதையும் வைத்திருந்தாலும் நட்புக்கு மரியாதை கொடுத்து கடைசிவரை எம்.ஜி.ஆரின் உடன்பிறவா அண்ணனாகவும் அவரது முதலாளியாகவும் முருக பக்தராகவும் வாழ்ந்து மறைந்தார்.
courtesy the hindu tamil interview given by R.Thiyagarajan devar son in law
Tenali Rajan
27th June 2015, 09:09 PM
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து
சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா
எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா.
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
http://i58.tinypic.com/nwym47.jpghttp://i60.tinypic.com/fbdfls.jpg http://i58.tinypic.com/hvrzmd.jpg
http://i61.tinypic.com/t6vx9l.jpg
saileshbasu
27th June 2015, 10:11 PM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=oK0rH2miGFA
saileshbasu
27th June 2015, 11:12 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/27TH%20jUNE%202015_zpsdicajoum.jpg
http://dinaethal.epapr.in/530313/Kancheepuram-Edition/27.06.15#page/14/1
Sathya VP
27th June 2015, 11:38 PM
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் என்று ஆசை துடிக்கிறது !!!
http://i61.tinypic.com/2wo9gud.jpg
esvee
28th June 2015, 07:21 AM
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை வைத்து 16 படங்களை தயாரித்த தேவர் பிலிம்ஸ் திரு சின்னப்பா தேவரின் நூற்றாண்டை முன்னிட்டு தாங்கள் பதிவிட்ட படங்கள் பட்டியல் மற்றும் தகவல்கள் மிகவும் அருமை .
தேவர் அவர்கள் சிறந்த தயாரிப்பு நிர்வாகி . அவருடைய படங்கள் பூஜை தினத்தன்றே படம் வெளியாகும் தேதியினை அறிவிப்பார் .பூஜை தினத்தன்றே எம்ஜிஆர் படங்கள் எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும் .
தேவர் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மிருகங்களை வைத்து படம் எடுத்துள்ளார் . 1961ல் மக்கள் திலகத்தின் ''திருடாதே '' படம் சென்னை பிளாசா - பாரத் - மகாலட்சுமி அரங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது .பின்னர்
தேவரின் தாய் சொல்லை தட்டாதே- 1961 , தாயை காத்த தனயன் -1962 படங்கள் இதே அரங்கில் வந்து 100 நாட்கள் மேல் ஓடி மாபெரும் வெற்றி அடைந்தது .வேட்டைக்காரன் -1964 பொங்கல் அன்று வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது .
சென்னை - சபையர் அரங்கில் முதல் முறையாக திரையிடப்பட்டதமிழ் படம் தேவரின் கன்னித்தாய் -1965. ஆறு வாரங்களுக்கு மட்டும் என்று விளம்பரம் தந்தார்கள் . முதல் வார பிரமாண்ட வசூலுடன் விளம்பரமும் தந்தார்கள் .
1962, 1963, 1964, 1966, 1968 முறையே ஆண்டுக்கு இரு படங்களை தயாரித்தார்கள் .தேவரின் முதல் வண்ணப்படம்
நல்ல நேரம் .சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்களும் , பிற ஊர்களில் 100 நாட்களும் , இலங்கையில் 100 நாட்களும் ஓடியது .
தேவரின் 16 எம்ஜிஆர் படங்களும் மறு வெளியீடுகளில் பல முறை தொடர்ந்து வெளிவந்து சாதனைகள் படைத்துள்ளது .
திரை இசைத்திலகம் இசையில் பாடகர் திலகம் பாடிய தத்துவ பாடல்கள் மக்கள் திலகத்தின் பெருமைகளுக்கு பெருமைகள் சேர்த்தது .
மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்ட ....
போயும் போயும் மனிதனுக்கு ....
மாறாதையா மாறாது ....
தர்மம் தலைகாக்கும் ..தக்க சமயத்தில் ...
உன்னை அறிந்தால் ..நீ உன்னை ..
ஆண்டவன் உலகத்தில் முதலாளி ..
கேளம்மா சின்ன பொண்ணு கேளு ..
உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு
உழைக்கும் கைகளே ...
நல்ல நல்ல நிலம் பார்த்து
கடவும் என்னும் முதலாளி ...
ஓடி ஓடி உழைக்கணும் ...
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பாற்றலையும் , தனி ஆளுமைகளையும் தன்னுடைய 16 படங்களிலும் வெளி வர மக்கள் திலகத்தை வைத்து தயாரித்த சின்னப்பா தேவரை மறக்க முடியாது .
saileshbasu
28th June 2015, 08:14 AM
NOW SHOWING ON JAYA MOVIE - SANGE MUZHANGHU
https://www.youtube.com/watch?v=zSY7krinVuU
Tenali Rajan
28th June 2015, 10:20 AM
விண்ணுக்கும் மண்ணுக்கும் புவியில் உயர்வானவன்
எல்லையில்லா அருள் அன்புக்கும் பண்புக்கும் நிகரானவன்
நல்சொல்லுக்கும், செயலுக்கும் என்றும் உறவானவன்
பொது நன்மைக்கும், மக்கள் நலத்துக்கும் அரண் ஆனவன்
நன்னெறிக்கும், நீதிக்கும் நிலமானவன்-ஒளி அகமானவன்
பொன் மாண்புக்கும் அருள் நோன்புக்கும் வித்தானவன்
அறன் ஆண்மைக்கும், பேராண்மைக்கும், பொருளானவன்,
எங்கும் நிறைந்தவன், எல்லையில்லா புகழ் வடிவானவன்.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2zpqo10.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:32 AM
MAKKAL THILAGAM- DEVAR COMBINATION FIRST MEGA HIT MOVIE. 1956
http://i59.tinypic.com/25pqvrk.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:33 AM
SUPER MEGA HIT AND BOX OFFICE HIT OF THE YEAR 1961
http://i57.tinypic.com/eagyzn.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:35 AM
SUPER MEGA HIT AND BOX OFFICE HIT OF THE YEAR 1962
http://i60.tinypic.com/zkpb88.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:36 AM
HIT MOVIE - 1962
http://i61.tinypic.com/166hs85.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:38 AM
1963- MUSICAL HIT MOVIE
http://i59.tinypic.com/2j4oyoh.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:39 AM
BEST FAMILY ENTERTAINER OF THE YEAR 1963
http://i59.tinypic.com/1q4htg.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:41 AM
CREATED ALL TIME RECORD IN 1964.
http://i58.tinypic.com/16jg7iv.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:42 AM
1964
THE BEST ''LABOUR'' STORY AND ACTION PACKED MOVIE BY M.G.R
http://i57.tinypic.com/258no5c.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:44 AM
MUSICAL HIT MOVIE- 1965
http://i60.tinypic.com/5znrtg.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:46 AM
1966
JUST 12 DAYS SHOOTING . 100 DAYS HIT MOVIE.
http://i57.tinypic.com/2mc6f88.jpghttp://i58.tinypic.com/351hav8.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:47 AM
THE BEST ENTERTAINER MOVIE -1966
http://i60.tinypic.com/jl4ayp.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:50 AM
1967- CLASSIC MOVIE.
http://i62.tinypic.com/ouuno5.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:51 AM
1967
AGRICULTURE- DOCUMENTARY BASED MOVIE
http://i61.tinypic.com/1603f9f.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:53 AM
1968 - ENTERTAINMENT MOVIE
http://i61.tinypic.com/2ps0x94.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:54 AM
1968
LOVER'S TRANSPORT- ENTERTAINMENT MOVIE
http://i58.tinypic.com/2l9r0k4.jpg
Varadakumar Sundaraman
28th June 2015, 10:56 AM
THE BIGGEST HIT MOVIE OF THE YEAR 1972
http://i62.tinypic.com/x29a1d.jpg
puratchi nadigar mgr
28th June 2015, 12:36 PM
தற்போது சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"பறக்கும் பாவை " 11 மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கண்டுகளியுங்கள்.
http://i62.tinypic.com/2khi6s.jpg
puratchi nadigar mgr
28th June 2015, 12:41 PM
இன்று பிற்பகல் 2 மணிக்கு வசந்த் டிவியில் புரட்சி நடிகர்/மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
இருவேடங்களில் நடித்த "ராஜா தேசிங்கு " ஒளிபரப்பாக உள்ளது.
ravichandrran
28th June 2015, 04:26 PM
http://s18.postimg.org/li03fankp/IMG_20150628_WA0003.jpg (http://postimage.org/)
KALAIVENTHAN
28th June 2015, 07:51 PM
http://i62.tinypic.com/i23u9z.jpg
Courtesy : Facebook
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக தலைவர் வெளிநாடு சென்றபோது எடுக்கப்பட்ட அரிய புகைப்படம். டொமஸ்டிக் டிபார்ச்சர்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளதற்கு மேலே உள்ள எழுத்துக்களைப் பார்த்தால் ஜப்பானிய எழுத்துக்கள் போல தெரிகிறது. ஜப்பான் விமான நிலையம் என்று கருதுகிறேன். ஒரு கை இடுப்பிலும் இன்னொரு கை பேண்ட் பாக்கெட்டிலும்.... ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச போஸை கவனித்தீர்களா? நன்றி பேராசிரியர் திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
esvee
28th June 2015, 07:56 PM
கடந்த ஒரு வாரமாக மக்கள் திலகத்தின் பல படங்கள் பல் வேறு ஊடக தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டது.
இன்று மட்டும் சங்கே முழங்கு , பறக்கும் பாவை , ராஜா தேசிங்கு , குமரிகோட்டம் , ஆயிரத்தில் ஒருவன் 5 படங்கள் ஒளிப்பரப்பப்பட்டது.
KALAIVENTHAN
28th June 2015, 07:56 PM
http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/Capture_zpsp8y4dsho.jpg (http://s501.photobucket.com/user/subbuchennai/media/Capture_zpsp8y4dsho.jpg.html)
துணை இயக்குநராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் பணியாற்றிய திரு. சங்கரன் (நாயர்) அவர்கள், தலைவரின் அறிவுரையை ஏற்று பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரை துறந்து சங்கரன் என்றே பின்னாளில் அறியப்பட்டவர். முக்கியமான காட்சிகளில் கண்ணாடியை கழற்றி உறுத்துப் பார்ப்பது இவரது தனி முத்திரை. புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.ஆர்.கே.எஸ்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:03 PM
TO DAY - SILAMBU SELVAR MA.PO.SI BIRTH DAY
http://i60.tinypic.com/10hkac5.jpg
வடக்கெல்லை போராட்டம் நடத்தி திருத்தணியை தமிழ்நாட்டுக்கு சொந்தமாக்கிய பெருமை பெற்ற சிலம்புச் செல்வருடன் தலைவர் இருக்கும் அரிய புகைப்படத்தை பதிவிட்ட திரு.குமார் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:06 PM
வரும் ஞாயிறு (28/06/2015) அன்று ஜெயா தொலைக்காட்சியில்
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " பிற்பகல் 1.30 மணிக்கு
ஒளிபரப்பாகிறது. அடிக்கடி ட்ரைலர் காண்பிக்கப்படுகிறது.
http://i59.tinypic.com/307u7b9.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
தலைவர் பற்றிய பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள், விழாக்களின் புகைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள் பற்றியும் ஸ்டைல் சக்கரவர்த்தியின் அட்டகாச புகைப்படங்களுடன் விவரங்களை பதிவிடும் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி. தகவல் தெரிவித்த மடிப்பாக்கம் திரு.சுந்தர் அவர்களுக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:09 PM
கலைவேந்தன்
இயக்குனர் வி .சி .குகநாதன் என்றென்றும் மக்கள் திலகத்தின் மீது அளவு கடந்த பாசம் வைத்தவர் . 1984ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அவர் பூர்ண குணமடைய அண்ணா மற்றும் மக்கள் குரல் பேப்பரில் அரைப்பக்க விளம்பரம் ஒன்று தந்தார் .
அந்த விளம்பரத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பாற்றல் ,தனி ஆளுமைகள் , மனித நேயம் பற்றி மிக அழகாக வர்ணித்து இருந்தார் . நன்றி மறவாத நல்ல இயக்குனர் வி.சி. குகநாதன் .
நானும் பார்த்திருக்கிறேன் சார். பேப்பர் கட்டிங் உங்களிடம் இருக்கிறதா? இருந்தால் பதிவிடவும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:12 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsnluyt4ti.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsnluyt4ti.jpg.html)
"சினிமாவில் டூயட் பாடுவது கேலிக்குரியது..”
– இப்படிச் சொன்னவர் ..நூற்றுக்கணக்கான டூயட்களை தனது படங்களில் பாடி நடித்த எம்.ஜி.ஆர்...!
இதை தனது பேட்டியில் வெளிச்சம் போட்டு வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன்..
மகேந்திரன் சொல்கிறார்..:
“ தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது, அவர் முன்னிலையில், "தமிழ் சினிமாவில் யதார்த்தம் என்பது அறவே கிடையாது” என்று கடுமையாகப் பேசினேன்..”
பின்னர் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்தபோது , இது பற்றி மகேந்திரன் இப்படிக் கேட்டாராம்...
"எங்கள் கல்லூரியில் உங்கள் முன்னாலேயே தமிழ் சினிமாவைக் கடுமையாக விமரிசனம் செய்தேனே... உண்மையிலே அது குறித்து நீங்கள் என்மீது கோபம் கொள்ளவில்லையா?"
அதற்கு எம்.ஜி.ஆர். சொன்னாராம் :
"நீங்கள் அன்று என் முன்னால், 'சினிமாவில் மட்டுமே காதலிப்பவர்கள் டூயட் பாடுகிறார்கள். அது அபத்தம்' என்றீர்கள். அது உண்மைதானே. வெளி நாட்டுப் படங்களில் யார் டூயட் பாடுகிறார்கள்? எனக்கும் டூயட் பாடுவது கேலிக்குரியது என்று புரியும். இதுவும் ஒரு நாள் மாறியே தீரும். டூயட் இல்லாத படங்கள் தமிழில் வந்தே தீரும். இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து நாங்கள் இன்னமும் டூயட் பாடுகிறோம்..”
அப்புறம் நடந்தது ..அதை மகேந்திரனே தொடர்கிறார் :
# "நெஞ்சத்தைக் கிள்ளாதே” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. அதற்காக டெல்லி சென்ற நான், முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழ்நாடு இல்லத்திற்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அங்கே சென்று . எனது விருதை அவரது காலடியில் சமர்ப்பித்தேன்...
"காரைக்குடியில் இருந்த நான், டில்லிக்கு வந்து குடியரசுத் தலைவரிடம் விருதுகள் வாங்கியதற்கு நீங்கள்தான் காரணம்..." என்றேன்...
பெருமிதப்பட்டு ஒரு தாயின் மனநிலையில் எங்களை வாழ்த்திய அவர், "குடத்திலிருந்த விளக்கை எடுத்து வெளியே வைத்தேன். அதுமட்டுமே நான் செய்தது. மற்றதெல்லாம் உங்களின் திறமையால் வந்தது. ஆனால் ஒன்று நிச்சயம். கல்லூரிக் காலத்தில் நீங்கள் கனவு கண்ட தமிழ் சினிமாவும், நான் ஆசைப்பட்ட தமிழ் சினிமாவும் உங்களால் நிறைவேறி வருகிறது. இதற்கு மேலும் நீங்கள் சினிமாவில் செய்யப்போகும் மாற்றங்களை மற்றவர்களும் பின்பற்றுவார்கள் " என்று ஆசீர்வதித்தார்.
# எம்.ஜி.ஆர் .என்னவோ தன் ஆசியையும் , ஆசையையும் சொல்லி விட்டுப் போய் விட்டார்....
ஆனாலும் இன்றும் கூட ... மகேந்திரன் பார்முலாவை விட , எம்.ஜி.ஆரின் பார்முலாவைப் பின்பற்ற ஆசைப்படும் நடிகர்களும் , இயக்குனர்களும்தான் அதிகம்...!
# சரி..எம்.ஜி.ஆர். முன்னிலையிலேயே , அவரைக் கடுமையாக விமரிசித்தும் , எம்.ஜி.ஆர். ஏன் மகேந்திரன் மீது கோபம் கொள்ளவில்லை...?
# இதற்கு எம்.ஜி.ஆரின் “ நம் நாடு ” பாடல் நல்ல பதில் தருகிறது...
“மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்
மெய்யான அன்பே தெய்வீகமாகும்..”
நமக்கெல்லாம் தலைவரின் ஆக்க்ஷன் படங்கள் பிடிக்கும் என்றால், தலைவருக்கு பிடித்தமான அவரது படம் பெற்றால்தான் பிள்ளையா? வித்தியாசமான படங்களை தலைவர் விரும்பினாலும் வியாபாரம், நம்மைப் போன்ற ரசிகர்களின் திருப்தி என்றெல்லாம் இருக்கிறதே? நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:14 PM
விண்ணுக்கும் மண்ணுக்கும் புவியில் உயர்வானவன்
எல்லையில்லா அருள் அன்புக்கும் பண்புக்கும் நிகரானவன்
நல்சொல்லுக்கும், செயலுக்கும் என்றும் உறவானவன்
பொது நன்மைக்கும், மக்கள் நலத்துக்கும் அரண் ஆனவன்
நன்னெறிக்கும், நீதிக்கும் நிலமானவன்-ஒளி அகமானவன்
பொன் மாண்புக்கும் அருள் நோன்புக்கும் வித்தானவன்
அறன் ஆண்மைக்கும், பேராண்மைக்கும், பொருளானவன்,
எங்கும் நிறைந்தவன், எல்லையில்லா புகழ் வடிவானவன்.
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/2zpqo10.jpg
கவிஞர் திலகம் திரு.தெனாலிராஜன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
28th June 2015, 08:17 PM
http://i59.tinypic.com/33k4v9v.jpg
‘தர்மோ ரக்க்ஷதி ரக்க்ஷித’
சாலிவாஹனன் என்ற திரைப்படத்தில் தலைவருக்கு சிறிய வேடம். அதில் நடித்த கதாநாயக நடிகருடன் தலைவருக்கு கத்தி சண்டை காட்சி. கதாநாயகனை விட தலைவர் சிறப்பாக கத்தி சண்டை காட்சியில் நடித்திருக்கிறார் (தெரிந்ததுதானே?). இது குறித்து இயக்குநரிடம் கதாநாயக நடிகர் புகார் செய்துள்ளார். படத்தின் இயக்குநர் கதாநாயகனுக்கு ஆதரவாக இருந்தார். இதுபற்றி, உடன் நடிக்கும் ஸ்டண்ட் நடிகரிடம் தலைவர் தனது நிலையைச் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அந்த ஸ்டண்ட் நடிகரும் தலைவருக்கு ஆறுதல் கூறினார். ‘உங்களிடம் திறமை இருக்கிறது, கண்டிப்பாக முன்னுக்கு வருவீர்கள், வருந்தாதீர்கள்’ என்று அன்பாக பேசியுள்ளார்.
அதன்படியே, சில ஆண்டுகளில் தலைவர் கதாநாயகனாக உயர்ந்தார். தான் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்தில் அந்த ஸ்டண்ட் நடிகருக்கும் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து தன் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்க தலைவர் உதவினார். தான் உயர்ந்தபோது தனக்கு ஆறுதல் கூறிய அந்த ஸ்டண்ட் நடிகரையும் படத் தயாரிப்பாளராக உயர்த்தி விட்டார். அந்த ஸ்டண்ட் நடிகர்......... இன்று நூற்றாண்டு காணும் சாண்டோ திரு.சின்னப்பா தேவர் அவர்கள். தலைவர் நடித்துக் கொடுக்க அவர் தயாரித்த முதல் படம் தாய்க்குப் பின் தாரம்.
இடையில் சில காலம் தலைவருக்கும் சின்னப்பா தேவருக்கும் ஊடல் ஏற்பட்டாலும் அந்த ஊடலால் அவர்களது நட்பு பழுதுபட்டதில்லை. சொல்லப்போனால், ஆழ்ந்த நட்பு இருக்கும் இடத்தில்தான் உரிமையுடன் கூடிய ஊடலும் எழும். புரிதல் ஏற்பட்டு அதன்பின் ஏற்படும் கூடல் மேலும் நெருக்கத்தை அதிகரிக்கும். அப்படி, தேவருக்கும் தலைவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் கடைசிவரை பிரிக்க முடியாததாக இருந்தது.
தலைவர் குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவரது திரையுலக வாழ்வே முடிந்தது என்று கூறினர். தலைவருக்கு மீண்டும் பேச்சுத் திறன் வருமா? என்று நல்ல உள்ளங்கள் ஏங்கித் தவித்த நேரம். அந்த நிச்சயமில்லாத நிலையில், தலைவரை மருத்துவமனையில் சந்தித்து ‘விவசாயி’ படத்துக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்த நம்பிக்கையின் சிகரம் தேவர் அவர்கள்.
‘தலைவர் மீண்டும் நடிப்பது நிச்சயம் இல்லாத நிலையில், பணம் கொடுக்க வேண்டுமா? ’என்று சிலர் கேட்டபோது, ‘அவர் (தலைவர்) தாய்க்குப் பின் தாரம் படத்தில் நடித்த பிறகுதான் நாம் முழுதாக சாப்பிட்டோம். அவரால் நடிக்க முடியாவிட்டால் செலவு கணக்கில் வைத்துக் கொள்கிறேன் போ..’ என்று கூறிய பெருந்தகையாளர் தேவர் அவர்கள். (இதுபற்றி திரையுலக அனுபவங்கள் பற்றிய தனது தொடர் கட்டுரையில் திரு.ஆரூர்தாஸ் அவர்கள் விரிவாக கூறியுள்ளார். அது விகடன் பிரசுரத்தின் சார்பில் ‘கோட்டையும் கோடம்பாக்கமும்’ என்ற புத்தகமாகவும் வெளிவந்துள்ளது) தலைவர் சிகிச்சை பெற்றுவந்தபோது சென்னை தியாகராய நகரில் உள்ள அகத்தியர் கோயிலில், தலைவர் பெயருக்கு தினமும் அர்ச்சனை செய்து கோயில் பிரசாதத்தை தலைவரை சந்தித்து கொடுத்து விரைவில் குணமடைய பிரார்த்தித்த நட்பின் இலக்கணம் தேவர் அவர்கள்.
முருகனுக்கு அமைந்தது ஆறுபடை வீடுகள் அல்ல, ஏழுபடை வீடுகள் என்று கூறுமளவுக்கு மருதமலை முருகன் கோயிலை ஏழாவது படைவீடாக மாற்றிய தேவர் அவர்கள், அக்கோயிலுக்கு மின்விளக்கு வசதிகளை தனது சொந்த செலவில் செய்து, அதை விளக்கேற்றி வைக்கும் கரங்களுக்கு சொந்தக்காரரான தலைவரை விட்டே தொடங்கச் செய்தார். (அப்போது மருதமலை கோயில் படிகளில் தலைவரும் தேவரும் இறங்கி வரும் படம் நமது திரியில் பதிவிட்டுள்ளோம்)
அந்த ஆழ்ந்த நட்புணர்வின் அடையாளமாகத்தான் தேவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் முதல்வர் என்ற பந்தா ஏதுமின்றி பிரிவைத் தாங்காது துயரில் ஆழ்ந்த ஆத்மார்த்தமான நண்பனாக தலைவர் நடந்தே சென்றார்.
இருவருக்கும் இடையிலான நட்பு, நங்கூரம் பாய்ச்சிய கப்பலாய் உறுதியாக இருந்ததால்தான் தலைவரை வைத்து அதிக படங்கள் (16 படங்கள்) தயாரித்த தயாரிப்பாளர் என்ற பெருமையை தேவர் அவர்கள் பெற்றார்.
தேவர் - தலைவர் காம்பினேஷனில் படங்களை நாம் ரசிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே, தர்மம் தலைகாக்கும், நீதிக்குப் பின் பாசம், குடும்பத் தலைவன், நல்ல நேரம், சாதி வேறுபாடுகள் இன்றி ஊரே ஒற்றுமையாக ஒன்றுகூடி தேரிழுப்பதை நினைவூட்டும் தேர்த்திருவிழா, காதல், மானம், வீரம் என்று வாழ்ந்த தமிழனின் கண்ணியமான காதல் கலாசாரத்தை விளக்கும் தலைப்பான காதல் வாகனம், போன்ற வீட்டுக்கும் சமூகத்துக்கும் வழிகாட்டும் அந்த தலைப்புகளையே ரசிக்கலாம். அதுபற்றியே தனியாக ஒரு திறனாய்வு செய்யலாம்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒன்றை ஒன்று சார்ந்துதான் வாழ வேண்டும். இதுதான் இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியை மீறாமல் மற்ற உயிர்களுக்கு உதவி வாழ்வதுதான் தர்மம். யாசகம் கேட்போருக்கு தட்டில் பத்தோ, இருபதோ போடுவது மட்டுமே தர்மம் அல்ல. இலட்சியத்தில் தெளிவு, அதை அடைவதற்காக ஏற்றுக் கொண்ட கொள்கையில் உறுதி, தனிவாழ்வில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை, பணியில் வாய்மை, உற்றார், உறவினரை கைவிடாமல் ஆதரிப்பது, முடிந்த வகையில் சமூகத்துக்கு சேவை செய்வது, நல்ல குடும்பத் தலைவனாகவும் நாட்டுக்கு நல்ல குடிமகனாகவும் இருந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தருவது எல்லாமே நமக்கு விதிக்கப்பட்ட தர்மம்தான். இந்த தர்மத்துக்கு எதிராக செயல்பட்டால் அது அதர்மம்.
மேலே குறிப்பிட்ட இந்த தர்மங்களை காப்பாற்றினால் வீடும் நாடும் செழிக்கும். அப்போது நாம் எல்லாருமே நன்றாக இருப்போம். இதைத்தான் பெரியவர்கள் ‘தர்மோ ரக்க்ஷதி ரக்க்ஷித’ என்று கூறினார்கள். தர்மத்தை நாம் ரட்சித்தால் தர்மம் நம்மை ரட்சிக்கும் என்பது பொருள். இதுதான் தேவர் - தலைவர் காம்பினேஷனில் வெளியான வெற்றிப் படத்தின் தலைப்பு.
தர்மத்தை நாம் ரட்சித்தால் அதாவது காப்பாற்றினால்....... நம்மை
‘தர்மம் தலைகாக்கும்’.
இதை உணர்ந்தால் எல்லாருக்கும் என்றும் எப்போதும்...
‘நல்லநேரம்’.
இதை தங்களது சொல்லால், செயலால், வாழ்வால் நாட்டுக்கு உணர்த்திய பெருமகனார்களான....
தீவிர முருகபக்தராய் விளங்கி சந்தனத்தையே சட்டையாய் அணிந்த தேவர் அவர்களின் புகழ் வாழ்க.
தேவரைப் போல வாழ்வில் பலரையும் உயர்த்திய தலைவரின் புகழ் ஓங்குக.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
esvee
28th June 2015, 08:32 PM
விவசாயி படத்தில் மக்கள் திலகம் பாடிய பாடல் வரிகள் .
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
விவசாயி ..மட்டுமல்ல சினிமா
நமது இந்திய திரைப்படங்கள் , குறிப்பாக தமிழில் ... மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய நடிப்பில்
சாதித்த சாதனைகளை மறக்க முடியுமா ? எத்தனை ஹாலிவுட் நடிகர்கள் , படங்கள் அவர்கள் பட்டங்கள்
நம் ரசனைக்கு ஒத்து வராத மேற்கத்திய படங்கள் பற்றி கவலை இல்லை .மக்கள் திலகம் -இந்த பட்டத்திற்கு
ஈடு இணையேது ?
esvee
28th June 2015, 08:37 PM
எம்ஜிஆர், நாகிரெட்டியார், சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் மூவருக்குமான நேரிய உறவை பற்றி சொல்லி சிலிர்க்க வைத்தார் ” ஆரம்ப காலத்தில் கோவையில் எம்ஜிஆருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக சினிமா எடுக்க ஆசைப்பட்ட தேவர் தனது ஊரில் பலரிடமும் ஆயிரம் ஐநூறு என்று காசு வாங்கி ஒரு லட்ச ரூபாய் திரட்டி, நேராக வந்து நாகிரெட்டியாரை பார்த்து ‘இந்தாங்க . இதை வச்சு ஒரு படம் தயாரிக்க போறேன். மேற்கொண்டு காசுன்னு எதுவும் கேட்கக் கூடாது. நீங்கதான் எல்லாம் பாத்துக்கணும்’ என்று கொடுக்க, அதன்படியே தேவரின் தயாரிப்பில் வந்த படம்தான் தாய்க்குப் பின் தாரம். படம் சூப்பர் ஹிட். பிறகு எம்ஜிஆருக்கும் தேவருக்கும் மனஸ்தாபம் வந்து பிரிந்து தேவர் எடுத்த பல படங்கள் தோற்றுப் போக, எம்ஜிஆர் நாடகத்தில் நடித்த போது கால் உடைந்து அவருக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டபோது இருவரும் மீண்டும் சேர்வதற்கும் காரணம் நாகி ரெட்டிதான்.அதன் பிறகு எம்ஜிஆரும் தேவரும் இணைந்து 15 படங்களை உருவாக்கினார்கள்.
courtesy - net
puratchi nadigar mgr
28th June 2015, 09:04 PM
இரங்கல் செய்தி.
--------------------------
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களின் தாயார் இன்று மாலை
சென்னை சைதாபேட்டையில் காலமானார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாக தன் தாயாரை இழந்து வாடும்
திரு. பி.எஸ். ராஜு அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் மற்றும் ஆசி கிடைக்கட்டும்.
ஆர். லோகநாதன்.
தகவல் உதவி : திரு. பி.ஜி.சேகர்.
ravichandrran
28th June 2015, 09:08 PM
http://s10.postimg.org/o92eqvcyx/IMG_20150628_WA0005.jpg (http://postimage.org/)
Fwd by Mr.R.Saravanan - Madurai
saileshbasu
28th June 2015, 09:26 PM
My heartfelt condolences on the sad demise of Sri. BSR's [ Urimaikural Magazine] Mother.
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ukPresentation1_zpszaclfmh2.jpg
https://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
puratchi nadigar mgr
28th June 2015, 09:28 PM
தமிழ் இந்து -28/06/2015
http://i58.tinypic.com/2e1eni8.jpg
http://i58.tinypic.com/eqxwlw.jpg
http://i59.tinypic.com/143gp6u.jpg
puratchi nadigar mgr
28th June 2015, 09:31 PM
மாலை முரசு -27/06/2015
http://i62.tinypic.com/2eygl1f.jpg
puratchi nadigar mgr
28th June 2015, 09:32 PM
தினத்தந்தி -28/06/2015
http://i60.tinypic.com/a3z8td.jpg
MGR Roop
28th June 2015, 09:39 PM
MGR's Grandson MGCB Pradeep informed me about the demise of B.S.Raj's mother, my heartfelt condolences for his loss. May her soul rest in peace.
puratchi nadigar mgr
28th June 2015, 09:41 PM
இந்த வார பாக்யா இதழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
திரைப்பட கதையை விரிவாக பிரசுரம் செய்துள்ளனர்.
http://i59.tinypic.com/zvvn03.jpg
http://i59.tinypic.com/2ptovhu.jpg
http://i58.tinypic.com/296fbs7.jpg
http://i60.tinypic.com/29yqhac.jpg
http://i60.tinypic.com/rhpv5u.jpg
http://i57.tinypic.com/o761dj.jpg
saileshbasu
28th June 2015, 09:48 PM
Again Bagya Magazine [ without checking thoroughly and doing just cut and paste job] is saying so, not Loganathan Sir.
saileshbasu
28th June 2015, 09:53 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/28th%20June%202015_zpst02wgpxz.jpg
http://dinaethal.epapr.in/531021/Dinaethal-Chennai/28.06.15#page/16/1
saileshbasu
28th June 2015, 10:01 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/ns3_zps8k2yh3ej.jpg
http://dinaethal.epapr.in/531021/Dinaethal-Chennai/28.06.15#page/3/1
saileshbasu
28th June 2015, 10:06 PM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=g2Q0-XY4BeA
saileshbasu
28th June 2015, 10:09 PM
https://www.youtube.com/watch?v=75S1AW4B1ts
puratchi nadigar mgr
28th June 2015, 10:24 PM
http://i62.tinypic.com/343fypw.jpg
ravichandrran
28th June 2015, 11:42 PM
http://s15.postimg.org/y0zkfwqcb/gfff.jpg (http://postimage.org/)
saileshbasu
29th June 2015, 12:55 AM
So he is playing his part as requested by the persons behind: This shows his level.
https://www.youtube.com/watch?v=Thtg-Kg7kRE
https://www.youtube.com/watch?v=vX9UFS37SUY
esvee
29th June 2015, 06:16 AM
https://youtu.be/XwOvMoa620o
Varadakumar Sundaraman
29th June 2015, 12:44 PM
RARE STILL FROM NET.
http://i61.tinypic.com/1zcjpxk.jpg
Varadakumar Sundaraman
29th June 2015, 12:45 PM
RARE STILL FROM NET.
http://i59.tinypic.com/2lcse3l.jpg
saileshbasu
29th June 2015, 03:48 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/29th%20June%202015_zpstmeb95tr.jpg
http://dinaethal.epapr.in/531635/Dinaethal-Chennai/29.06.15#page/8/1
esvee
29th June 2015, 06:42 PM
RARE STILL FROM NET.
http://i61.tinypic.com/1zcjpxk.jpg
இனிய நண்பர் திரு குமார் சார்
மக்கள் திலகத்தின் அபூர்வ நிழற்படங்கள் மிகவும் அருமை . எந்த வித ஆடம்பரமின்றி எளிமையாக மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் மக்கள் மத்தியில் கலா ரசனையோடு ரசிக்கும் காட்சி - . அற்புதமான பதிவு.
esvee
29th June 2015, 08:47 PM
ஓடி ஓடி உழைக்கணும் …
‘நல்ல நேரம்’ திரைப்படத்திற்காக நாயகன் பாடும் பாடல்! காட்டுவிலங்காம் யானைகள் வைத்து தேவர் எடுத்த படம்! உழைப்பின் மேன்மையை உயர்த்திக்காட்டும் புலவரின் கைவண்ணம்! எழுத்தில் எழுந்துநிற்கும் உயர்ந்த கோபுரம்! வாழ்க்கைப் பாடத்தை வரிகளில் காட்டியிருக்கும் அற்புதக் கவிதை!
உழைப்பின் பெருமை என்னவென்று உலகறியும்! உழவன் முதல் கவிஞன் வரை உழைப்பு ஒன்றுதான் மனித முன்னேற்றத்திற்கு முதல்படி! இவ்வுலகில் பிறந்த எந்த மனிதனும் உழைப்பதில் பின்வாங்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், உழைக்க மறுப்பவனுக்கு உண்ணுவதற்கு உரிமை கிடையாது என்றே இலக்கணம் வகுக்கலாம். அதுவும் தனக்காக வாழ்வதைவிட பிறருக்காக வாழ்வதிலேதான் அர்த்தமிருக்கிறது! ஆனந்தமிருக்கிறது! இந்த தத்துவ தரிசனத்தைத் திரைப்பாடலில் கொண்டுவரும் சாமர்த்தியம் புலவர் புலமைப்பித்தன் போன்ற பிதாமகர்களுக்கே கைகூடும்!
இருசக்கர வாகனத்தில் பயணம் செல்லும்போதெல்லாம் என் மகனை முன் வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆர். பாடல்களை முணுமுணுப்பது வழக்கம்! என் மகன் விவேகானந்தன் சுமார் 6 வயது இருக்கும்போது முதலில் உரக்கப்பாடிய வரிகள் இவைதான்…
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் கூட கேட்டேன். என்ன விவேக், பல்லவியெல்லாம் விட்டுவிட்டு சரணத்தில் உள்ள வரிகளைப் பாடுகிறாயே என்று! அப்பா, அதில் கருத்து இருக்கிறது என்றான். அவன் கண்டிப்பாக வாழ்க்கையில் முன்னுக்கு வருவான். வெற்றி மேல் வெற்றி பெறுவான் என்று உணர்ந்தேன். தற்போது பொறியியல் பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதோடு, கவியரசு கண்ணதாசன் அவர்களின் பூரண ஆசிகளால் குறும்படங்களுக்குப் பாடல்கள் எழுதிவருகிறான்.
உலகம் முழுமைக்கும் உரிய பாடலிது! அறநெறி போற்றி ஆயிரம் செய்யுள்களைவிட இந்த ஒரு திரைப்பாடல் அதைவிட மக்கள் மனதில் எளிதாகச் சென்று சேரத்தக்கது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
1234 … அப்… அப்…
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
வயித்துக்காக மனுஷன் இங்கே கயித்தில் ஆடுறான் பாரு
ஆடிமுடிச்சி இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
அன்போடு சொல்லுறதைக் கேட்டு நீ அத்தனைத் திறமையும் காட்டு
இந்த அம்மாவைப் பாரு ஐயாவைக் கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க
சோம்பேறியாக இருந்து விட்டாக்கா சோறு கிடைக்காது தம்பி
சுருசுருப்பில்லாம தூங்கிட்டுருந்தா துணியும் இருக்காது தம்பி
இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டா ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லிப்போடு
வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் வந்தாகணும் அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினைத் தந்தாகணும் – நாட்டுக்குப்
படிப்பினைத் தந்தாகணும்.
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
https://youtu.be/8jSApzVWFjQ
courtesy - – கவிஞர் காவிரிமைந்தன்.vallamai
puratchi nadigar mgr
29th June 2015, 09:52 PM
குமுதம் -06/07/2015
http://i60.tinypic.com/w9corr.jpg
http://i57.tinypic.com/28k3iad.jpg
http://i60.tinypic.com/72g30m.jpg
http://i62.tinypic.com/hs0ww5.jpg
puratchi nadigar mgr
29th June 2015, 09:54 PM
http://i60.tinypic.com/oi7pqq.jpg
http://i58.tinypic.com/27wytd.jpg
http://i58.tinypic.com/173k0k.jpg
puratchi nadigar mgr
29th June 2015, 10:26 PM
சென்னை பாட்சாவில் (மினர்வா) தற்போது வெற்றிநடை போடுகிறது
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அளிக்கும் "உழைக்கும் கரங்கள் " தினசரி பகல் காட்சியில் .
http://i57.tinypic.com/xcrj2d.jpg
makkal thilagam mgr
29th June 2015, 10:28 PM
http://i60.tinypic.com/2415wl4.jpg
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கிறது. அதில் இருப்பவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த உடனே, நம் புரட்சித்தலவைர் அவர்கள், தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை தானே தூக்கி, தன் காரில் ஏற்றி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நம் பொன்மனசெம்மலுடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் . அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்து விட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன. ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் உலகிலேயே எங்கள் தமிழ் நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்து கொள்கின்றேன் என்று பேசிய பொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகு நேரமானது
முகநூலில் தகவல் : அ . ரவிச்சந்திரன் - அ.இ.அ.தி.மு. க. பைங்காடு - THANKS TO THEM.
எந்த ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும், நமது நாட்டின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் நிலை நாட்டுவதில் தனி அக்கறை கொண்டவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள்
puratchi nadigar mgr
29th June 2015, 10:31 PM
மெகா டிவியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் ,"
வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகியது .
http://i59.tinypic.com/295a6gp.jpg
puratchi nadigar mgr
29th June 2015, 10:35 PM
நாளை (30/06/2015) இரவு 7.30 மணிக்கு முரசு தொலைக்காட்சியில் நடிக மன்னன்
எம்.ஜி.ஆர். நடித்த " அபிமன்யு " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2qn2h3t.jpg
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
puratchi nadigar mgr
29th June 2015, 10:48 PM
மாலை முரசு -29/06/2015
http://i61.tinypic.com/6rpufb.jpg
http://i59.tinypic.com/2e4gm7m.jpg
ravichandrran
29th June 2015, 10:48 PM
http://s28.postimg.org/x0fvac1bh/ffff.jpg (http://postimg.org/image/50brq1xux/full/)
ravichandrran
29th June 2015, 10:51 PM
மக்கள் திலகத்தின் இரு அற்புத வண்ணக்காவியங்களுக்கு
இசை அமைத்தவர்கள் திருவாளர்கள் சங்கர் கணேஷ்.
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
பாடல்கள் அனைத்தும் என்றும் நம் செவிகளில்
ரீங்காரமிடும்.
மக்கள் திலகத்துடன் திருவாளர்கள் சங்கர் கணேஷ்
http://s22.postimg.org/txrefdm0h/534956_175232922633694_1463069948_n.jpg (http://postimage.org/)
ravichandrran
29th June 2015, 10:52 PM
மக்கள் திலகத்துடன் திரு கணேஷ்
http://s16.postimg.org/kzpvdak9h/44842_175233122633674_961151793_n.jpg (http://postimage.org/)
ravichandrran
29th June 2015, 10:53 PM
மக்கள் திலகத்தின் பொற்கரங்களில்
கேடயம் பெரும் திரு கணேஷ் அவர்களின்
அன்பு மகனும் மகளும் (சம்சாரம் அது மின்சாரம் - வெள்ளிவிழாவில்)
http://s16.postimg.org/t0461s179/44781_175233622633624_1286725977_n.jpg (http://postimage.org/)
puratchi nadigar mgr
29th June 2015, 10:57 PM
நக்கீரன் - 27/06/2015- சீக்ரட் சினிமா செய்திகள்
http://i57.tinypic.com/wi7dde.jpg
MGRRAAMAMOORTHI
29th June 2015, 11:14 PM
உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு அவர்களின் தெய்வத்தாயின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
அவருடைய ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் வேண்டுகிறேன்
puratchi nadigar mgr
30th June 2015, 12:08 AM
சென்னை காமராஜர் அரங்கில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 98 வது பிறந்த நாள் விழா / தேவர் 100 வது பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது கீழ்காணும் "எம்.ஜி.ஆர். பேட்டிகள் " என்கிற நூல் விற்பனை செய்யப்பட்டது.அதன் முன்புற/பின்புற தோற்றத்தை காண்க.
http://i62.tinypic.com/2dceu6h.jpg
http://i61.tinypic.com/2hzilqs.jpg
http://i62.tinypic.com/15wf9qt.jpg
http://i61.tinypic.com/14av1xy.jpg
puratchi nadigar mgr
30th June 2015, 12:19 AM
நாளை (30/06/2015) பிற்பகல் 1.30 மணிக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும்
"ராமன் தேடிய சீதை " ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
http://i60.tinypic.com/95oo3l.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் .திரு. சுந்தர்.
saileshbasu
30th June 2015, 12:50 AM
https://www.youtube.com/watch?v=V_YmPX2JCLQ
From where and why did they call the great personality Mansoor Ali Khan? Could anyone updated me regarding the proposed film which was to be produced by nadigar Sangam : Innattu Mannargal [?] - starring Prabhu, Karthik, Sathyaraj and Vijaykanth.
esvee
30th June 2015, 07:03 AM
41 ஆண்டு கால திரையுலக பயணம் 1936- 1977
24 ஆண்டு கால அரசியல் அனுபவம் 1953 - 1977
கோடிக்கணக்கான ரசிகர்களின் அயராத உழைப்பு
மக்களின் பேராதரவு
மக்கள் திலகத்தின் வெற்றி பயணம் துவங்கியது .ரசிகர்களின் கனவு நனவாகியது .
திரை உலகிலும் அரசியல் களத்திலும்
நினைத்ததை முடிப்பவன்
நாளை நமதே
நாடோடி மன்னன்
மன்னாதி மன்னன்
நல்ல நேரம்
ஒளிவிளக்கு
மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் முறையாக தமிழ் நாடு முதல்வராக பதவி ஏற்ற தினம் இன்று . 30.6.1977
நாடோடி மன்னன் - நிஜ வாழ்க்கையில் மகுடம் சூடிய திரு நாள்
இன்று 38 ஆண்டுகள் கடந்த பின்னரும் அவரது புகழ் , செல்வாக்கு , ஒட்டு வங்கி மக்கள் மனங்களில் நிலையாக நிலைத்து விட்ட சாதனைகள் உலக வரலாற்றில் இடம் பெற்றது மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த
மாபெரும் பெருமை .
saileshbasu
30th June 2015, 08:46 AM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=7lIENBK-la4&list=PLD8A46DBD5EC7F107
Varadakumar Sundaraman
30th June 2015, 09:06 AM
MAKKAL THILAGAM M.G.R 'S MOVIES RELEASED IN THE MONTH OF JULY .
MAKKAL THILGAM M.G.R.IN SMALL ROLE IN ''ASOK KUMAR''- 10.7.1941
http://i59.tinypic.com/5o5qj7.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:12 AM
22.7.1954
MALAIKKALLAN
http://i57.tinypic.com/9q8zsx.jpg
28.7.1955
GULEBAGAVALI
http://i62.tinypic.com/fxh555.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:12 AM
14.7.1961
http://i60.tinypic.com/ibfb77.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:14 AM
5.7.1963
http://i61.tinypic.com/2prd6l2.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:14 AM
18.7.1964
http://i61.tinypic.com/2qtfzue.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:17 AM
9.7.1965
PON VIZHA ANDU NIRAIVU
http://i59.tinypic.com/1238gf4.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:21 AM
24.7.197O
http://i61.tinypic.com/2n1c1me.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:22 AM
12.7.1974
http://i57.tinypic.com/2w6cmxv.jpg
Varadakumar Sundaraman
30th June 2015, 09:23 AM
4.7.1975
http://i59.tinypic.com/213i077.jpg
RAGHAVENDRA
30th June 2015, 10:56 AM
திரு உரிமைக்குரல் ராஜு அவர்களின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயரைத் தாங்கும் வலிமையை இறைவன் திரு ராஜு அவர்களுக்குத் தரவேண்டும்.
திரு ராஜூ அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.
Sathya VP
30th June 2015, 11:25 AM
My heartfelt condolences to B.S.Raju sir...
Sent from my HM NOTE 1LTEW using Tapatalk
Varadakumar Sundaraman
30th June 2015, 04:23 PM
என் ரத்தத்தின் ரத்தமே:
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஜூன் 30, 1977 -இல் பதவி ஏற்றார் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் சரித்திரத்தில் புதிய சகாப்தம் உருவான நாள் அது. அண்ணா சமாதியில் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு விழாவுக்கு வந்தார். தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி, சென்னை ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அதை அடுத்து, அதுவரை தமிழகத்தில் எந்த முதல்வரும் செய்திராத சாதனையை செய்தார் எம்.ஜி.ஆர். பல லட்சக்கணக்கான மக்களை ஒருங்கே சந்தித்து, அவர்களுக்கு நன்றி கூறி, அவர்களின் நல் ஆசியுடன் தன் ஆட்சியை ஆரம்பித்தார்.
ராஜாஜி ஹால் நிகழ்ச்சியை அடுத்து, அண்ணா சாலையில், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து, அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய மேடைக்கு வந்தார். பதவி ஏற்றதுமே, மக்களைச் சந்திக்கவேண்டும், அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார் எம்.ஜி.ஆர்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் அங்கே இருந்தனர். தமிழகமெங்கும் இருந்து மக்கள் பலர் லாரி, வேன் பிடித்து சென்னை வந்து சேர்ந்தனர்.
ஜெமினி மேம்பாலத்திலிருந்து அண்ணா சிலை வரை; மறுபக்கம் காசினோ தியேட்டர் முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை; இன்னொரு பக்கம் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் வரையிலும் எம்.ஜி.ஆரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் காலை 11 மணி வெயிலில் தார் ரோட்டில் மக்கள் உட்கார்ந்திருந்தனர்.
பெரும்பான்மையினர் எம்.ஜி.ஆரை நேரில் பார்க்க முடியாத நிலைமை இருந்தாலும், அவர் பேசுவதை நன்றாக கேட்கும் வகையில் மைக் ஏற்பாடுகள் எல்லா இடங்களிலும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பேச ஆரம்பிப்பதற்கு முன்னர், மேடையின் எல்லா பக்கங்களுக்கும் சென்று, மக்களைப் பார்த்து கை அசைத்தார். அவர் கை அசைத்ததும், விசில் சத்தம், கை தட்டல், ஆரவாரம் பல நிமிடங்கள் தொடர்ந்து வானை பிளந்தன.
குறைந்தபட்சம் என்று கணக்கெடுத்தாலும் பத்து லட்சம் பேருக்கு அதிகமாக இருக்கும் தார் ரோடுகளிலும் கட்டிடங்கள் மேலேயும், மரங்களிலும், தரையிலும் எங்கிருந்தெல்லாம் எம்.ஜி.ஆரை அன்று பார்க்க முடியுமோ, அவர் பேசுவதை கேட்க முடியுமோ, அங்கெல்லாம் வேறு எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாது மக்கள், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் இருந்தார்கள்.
'மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய தமிழக அமைச்சர்களே, பாராளுமன்ற உறுப்பினர்களே, சட்டசபை அங்கத்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே' என்று எம்.ஜி.ஆர் பேச ஆரம்பித்தார். அடுத்து 'என் ரத்தத்தின் ரத்தமான என் அன்பு உடன்பிறப்புக்களே' என்று எம்.ஜி.ஆர் சொன்னதும் மீண்டும் கரகோஷம் விண்ணைத் தொட்டன. எங்கும் மகிழ்ச்சி, எங்கும் ஆரவாரம்.
கே.ராஜாராம், காளிமுத்து, ராஜா முகமது, பி.டி.சரஸ்வதி, அரங்கநாயகம், ராகவானந்தம், நாஞ்சில் சம்பத், எட்மன்ட் உட்பட அனைத்து அமைச்சர்களும், எம்.ஜி.ஆரின் பர்சனல் டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் அங்கு இருந்தார்கள்.
மேடையில், 'இந்த வெற்றி என் வெற்றி இல்லை; இது உங்கள் வெற்றி. நான் உங்களில் ஒருவன்; உங்களுக்காகவே பாடுபடுவேன். இது உங்கள் ஆட்சி; மக்கள் ஆட்சி. மக்களுக்கு செய்கிற தொண்டே, மகேசனுக்கு, ஆண்டவனுக்கு செய்கிற தொண்டு என்று நான் நம்புகிறேன். தமிழகமும், தமிழக மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும்; அது தான் என் லட்சியம். என் லட்சியத்தில் நான் வெற்றி பெற, உங்களுடைய ஆசிகளை வேண்டுகிறேன்...' என்று பேசினார் எம்.ஜி.ஆர்.
மக்களின் பெருத்த ஆரவாரத்தின் இடையே அவர் பேசிக்கொண்டு இருந்தார். அவ்வளவு மக்கள் பாசத்துடன், அன்புடன் அவரைப் பார்க்க, பேசுவதை கேட்க கூடி இருந்தது எம்.ஜி.ஆர் வாழ்க்கையிலேயே அவருக்கே மறக்க முடியாத நாள் என்றே நான் சொல்வேன்.
மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு, முதல்வர் பதவியை ஏற்க முதல்முறையாக அங்கிருந்து, தமிழக அரசின் நிர்வாக மையமும், தலைமைச் செயலகமான கோட்டைக்குச் சென்றார் எம்.ஜி.ஆர். தன் அறையில், சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை சந்தித்து நிர்வாகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். மாலை நான்கு மணிக்குத் தான் வீட்டுக்கு திரும்பினார்.
Courtesy - net
saileshbasu
30th June 2015, 04:44 PM
எல்லா புகழும் புரட்சித்தலைவனுக்கே
KALAIVENTHAN
30th June 2015, 08:53 PM
உரிமைக்குரல் மாத இதழின் ஆசிரியர் சகோதரர் திரு.பி.எஸ்.ராஜூ அவர்களின் தாயார் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், திரு.ராஜூ அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
30th June 2015, 08:58 PM
RARE STILL FROM NET.
http://i61.tinypic.com/1zcjpxk.jpg
நன்றி திரு.குமார் சார்.
இதுவரை பார்த்திராத அரிய புகைப்படம். தலைவருக்கு அருகே இயக்குநர் ப.நீலகண்டன். அன்னை ஜானகி அம்மையார் அருகே இசையமைப்பாளர் திரு.எஸ்.எம்.சுப்பையா நாயுடு. ஏதோ நாடகத்துக்கு தலைவர் தலைமை தாங்கியபோது அந்த நாடகத்தை பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீங்கள் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் கூலிங்கிளாஸையும் ஊடுருவி தலைவரின் கண்கள் தெரிகின்றன. இதுபோன்று கண்கள் தெரியும்படி அவர் கூலிங்கிளாஸ் அணிந்திருப்பதை வைத்துப் பார்த்தால் 1971-72 காலகட்டமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
30th June 2015, 09:00 PM
http://i60.tinypic.com/2415wl4.jpg
புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஒரு முறை அமெரிக்கா வில் நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருக்கின்றார், வழியில் கார் ஒன்று சாலை விபத்தில் சிக்கி சின்னா பின்னமாகியிருக்கிறது. அதில் இருப்பவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த உடனே, நம் புரட்சித்தலவைர் அவர்கள், தன் காரை நிறுத்தச்சொல்லி காரில் அடிபட்டு கிடந்தவரை தானே தூக்கி, தன் காரில் ஏற்றி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நம் பொன்மனசெம்மலுடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுதான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்று உள்ளார் . அந்த விழாவில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார் .தொடர்ந்து பேசிய தலைவர் ஒரு விபத்து நடந்து விட்டது யாரும் உதவிக்கு வரவில்லை சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன. ஆனால் இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்கள் நண்பர்கள் அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய மனிதாபிமானம் உள்ளவர்கள் உலகிலேயே எங்கள் தமிழ் நாட்டினர்தான், என்று பெருமையோடு தெரிவித்து கொள்கின்றேன் என்று பேசிய பொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகு நேரமானது
முகநூலில் தகவல் : அ . ரவிச்சந்திரன் - அ.இ.அ.தி.மு. க. பைங்காடு - THANKS TO THEM.
எந்த ஒரு சிறு வாய்ப்பு கிடைத்தாலும், நமது நாட்டின் பெருமையையும், தமிழனின் பெருமையையும் நிலை நாட்டுவதில் தனி அக்கறை கொண்டவர்தான் நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள்
‘எந்த நாடு என்ற கேள்வியில்லை, எந்த ஜாதி என்ற பேதமில்லை’ என்று பாடிய தலைவரின் நாடு, மொழி, மதம், இனம் கடந்த மனிதாபிமானம் பற்றிய தகவலையும் தலைவரின் அட்டகாசமான, பொருத்தமான புகைப்படத்தையும் பதிவிட்ட பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. முகநூலில் இதைப் பதிவிட்ட தலைவரின் பக்தருக்கும் நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
30th June 2015, 09:02 PM
மக்கள் திலகத்தின் இரு அற்புத வண்ணக்காவியங்களுக்கு
இசை அமைத்தவர்கள் திருவாளர்கள் சங்கர் கணேஷ்.
நான் ஏன் பிறந்தேன்
இதயவீணை
பாடல்கள் அனைத்தும் என்றும் நம் செவிகளில்
ரீங்காரமிடும்.
மக்கள் திலகத்துடன் திருவாளர்கள் சங்கர் கணேஷ்
http://s22.postimg.org/txrefdm0h/534956_175232922633694_1463069948_n.jpg (http://postimage.org/)
அரிய புகைப்படத்தை பதிவிட்ட கொங்கு மண்டல தளபதி திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
30th June 2015, 09:05 PM
நக்கீரன் - 27/06/2015- சீக்ரட் சினிமா செய்திகள்
http://i57.tinypic.com/wi7dde.jpg
நக்கீரன் பத்திரிகையில் திரைப்பட தயாரிப்பாளர் திரு.கலைஞானம் சினிமா சீக்ரெட் என்ற தொடரை எழுதி வருகிறார். தலைவரின் விசுவாசியான சத்யா ஸ்டூடியோ திரு.பத்மநாபன் குறித்து அவர் எழுதியிருந்ததை சமீபத்தில் திரு.லோகநாதன் பதிவிட்டிருந்தார். அது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
கட்டுரையை படித்து விட்டு திரு.பத்மநாபனின் இரண்டு மகள்களே திரு.கலைஞானத்தின் வீட்டுக்கு வந்து, அழுதிருக்கிறார்கள் என்றால் இது ஒரு முக்கியமான ஆவணம்.
மேலும், தலைவர் மறைந்தபிறகு, திரு.பத்மநாபனின் நிலை குறித்து அவரது மகள்கள் திரு.கலைஞானத்திடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள் கல் மனதையும் கரைய வைக்கும். ஆண்டவனுக்கு கூட இப்படிப்பட்ட பக்தர்கள் உண்டோ? என்னவோ? தமிழகத்தை ஆண்டவருக்கு எப்படிப்பட்ட பக்தர்கள் இருக்கிறார்கள்?
பதிவுக்கு நன்றி. திரு. லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
KALAIVENTHAN
30th June 2015, 09:12 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/130.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/130.jpg.html)
ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
ravichandrran
30th June 2015, 09:43 PM
http://i1273.photobucket.com/albums/y412/esvee6/130.jpg (http://s1273.photobucket.com/user/esvee6/media/130.jpg.html)
ஆண்டவரே வாழ்க! ஆள்பவரே வாழ்க!!
1977-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவர் தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. உலகிலேயே ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான முதல் நடிகர் என்ற பெருமையை தலைவர் பெற்றார்.
அந்த வகையில் முதல்வரானவர், தமிழகத்தின் முதல்வராகவும் 1977-ம் ஆண்டு இதே நாளில்தான் (ஜூன் 30) பதவியேற்றார். 38 ஆண்டுகள் கழித்து இதே நாளில், தனது அன்புக்குரிய தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பெயரால் அவர் தோற்றுவித்த மக்கள் இயக்கமான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 27-ம் தேதி ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:
பதிவான மொத்த வாக்குகள் : 1,81,032
முதல்வர் செல்வி. ஜெயலலிதா (அதிமுக) : 1,60,432
திரு.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்) : 9,710
அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட முதல்வர் செல்வி. ஜெயலலிதா, 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திரு.மகேந்திரன் அவர்கள் உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கடந்த அக்டோபர் மாதம் புரட்சித் தலைவர் அதிமுகவை தோற்றுவித்த நாளான 17ம் தேதியன்று செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
கடந்த மே மாதம் 11ம் தேதி, பல்வேறு தடைகளையும் சதிகளையும் தகர்த்து, தமிழ் திரைப்பட வரலாற்றில் அதுவரை வெளியான படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்ததுடன், தலைவர் திரைப்படத்துறையில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படாமல் திகழ்ந்து பெருவெற்றி கண்ட திரைப்படமான உலகம் சுற்றும் வாலிபன் வெளியான அதே நாளில்தான், வழக்கில் இருந்து செல்வி. ஜெயலலிதா அவர்கள் விடுதலையானார்.
தமிழகத்தின் முதல்வராக தலைவர் முதன்முதலில் பதவியேற்று சாதனை படைத்த ஜூன் 30-ம் தேதியான அதே நாளில்தான் இடைத்தேர்தலில் செல்வி. ஜெயலலிதா அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
தலைவருக்கு மட்டுமல்ல, தலைவர் பெயரை உச்சரித்தாலே வெற்றிகள் தொடர்ந்து வரும் என்பதற்கு இன்றைய இடைத்தேர்தல் முடிவும் ஒரு உதாரணம்.
தலைவர் முதல்வராக பதவியேற்று சரியாக 38 ஆண்டுகள் கழிந்தும் கூட, ஏன்? அவர் உடலால் மறைந்து 28 ஆண்டுகள் ஆனாலும் கூட, அவர் தோற்றுவித்த இயக்கத்துக்கு இன்றும் மக்களிடம் அமோக ஆதரவும் செல்வாக்கும் உள்ளதென்றால் அதற்கு, மக்களின் இதய சிம்மாசனத்தில் மன்னாதி மன்னனாக வீற்றிருக்கும் தலைவருக்கு உள்ள செல்வாக்குதான் காரணம்.
தலைவர் தமிழகத்தை ஆண்டவர் மட்டுமல்ல, மக்களின் மனங்களை இ(எ)ன்றும் ஆள்பவர்.
ஆண்டவரே! ஆள்பவரே! வாழ்க நின்புகழ்!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Thank you Mr.Kalaiventhan sir
ravichandrran
30th June 2015, 09:46 PM
http://s22.postimg.org/vxjzualv5/ddd.jpg (http://postimage.org/)
http://s9.postimg.org/k8p5g9r4v/1452541_215340365314933_2054109558_n_1.jpg (http://postimage.org/)
saileshbasu
30th June 2015, 10:20 PM
http://i160.photobucket.com/albums/t197/Sailesh_Basu/30th%20June%202015_zpsbanhncb9.jpg
http://dinaethal.epapr.in/532364/Dinaethal-Chennai/30.06.2015#page/15/1
Yukesh Babu
30th June 2015, 10:51 PM
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன், சட்டசபை:
அமைச்சர் குழந்தைவேலு, எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி தேனிக்கு அருகில் தன மகன் அழகிரி பெயரில் சொத்துகளை அபகரித்துள்ளதாக புகார் வாசித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ,அரசியலை விட்டே விலகத் தயார் என்று சவால் விட்டார் கருணாநிதி.
சபாநாயகர் ராசாராம், ஆட்களை அனுப்பி விவரத்தை சேகரித்து சட்டசபையில் அறிக்கை ஒன்றை வாசித்தார்....
"எதிர்கட்சித் தலைவர் அவர்களின் மீது, அமைச்சர் குழந்தைவேலு கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை "
சபை முடிந்ததும், சபாநாயகரை தழுவிய எம்.ஜி.ஆர் "நடுநிலை தவறாமல் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளீர்கள்" ராசாராமுக்கு நன்றி கூறினார்.
அதுதான் மக்கள்திலகம்.
காலங்கள் கடந்தாலும் எதிர்தரப்பு மக்களாலும் போற்றக்கூடியவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையல்ல.
Yukesh Babu
30th June 2015, 11:03 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsee86f105.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsee86f105.jpg.html)
Yukesh Babu
30th June 2015, 11:05 PM
அண்ணாவுடன் மக்கள் திலகம்
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsi9hxta4k.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsi9hxta4k.jpg.html)
Yukesh Babu
30th June 2015, 11:07 PM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpsylecjmb8.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpsylecjmb8.jpg.html)
Yukesh Babu
30th June 2015, 11:15 PM
எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)
நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் - சாண்டோ சின்னப்ப தேவர்.
சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று.பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர்.
ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை, 'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர்.
1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது.
அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.
திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார்.
புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.
விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!
விகடன் தொகுப்பிலிருந்து
Yukesh Babu
30th June 2015, 11:20 PM
different thalaivar fan in fb
இந்த தலைமுறையல்ல இன்னும் நூறு தலைமுறை கடந்தாலும் அவர்கள் மனதிலும் வாழும் இதய தெய்வம் நமது வாத்தியார் தான், இன்றைய இளைஞர்கள் மனதில் எவ்விதம் வாழ்கிறார் நம் புரட்சித் தலைவர் பாருங்கள்!!
பிற மாநிலத்தவர் தமிழ் சினிமாவில் இப்போதும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர் அவர்களை நான் ரசிப்பதில்லை பதிலுக்கு அவர்களை கேலி செய்கிறேன், ஆனால் இன்று எம்.ஜி.ஆர் உயிருடன் கூட இல்லை அவரும் பிற மாநிலத்தவர்தானே அவரை ஏன் ரசிக்கிறாய், விஜய் கமல் என்ற இரு தமிழர்களுக்கு முகநூலில் ரசிகர் பக்கங்கள் தொடங்கி நடத்தி வரும் நீ எம்.ஜி.ஆருக்கும் முகநூல் ரசிகர் பக்கம் துவங்கியது ஏன் என பலரும் என்னிடம் கேள்வி கேட்டுள்ளனர் நான் பதில் சொன்னதில்லை, இன்றாவது பதில் சொல்ல நினைக்கிறேன் இந்த பதிவின் மூலமாக!
நான் தீவிர விஜய் ரசிகன் அது நான் மறைந்தாலும் மாறாத ஒன்று சினிமாவில் விஜய்யை ரசித்ததை காட்டிலும் நிஜ வாழ்கையில்தான் அவரை அதிகம் ரசித்திருக்கிறேன், தன்னால் முடிந்த உதவிகளை ஏழைகளுக்கு தொடர்ந்து செய்து வருபவர்! கமல்ஹாசன் சினிமாவிற்காகவே பிறந்தவர் தன்னை சினிமாவிற்காக அற்பனித்தவர் சிவாஜி கணேசன் அன்று எப்படியோ அது போல் இன்றுள்ள சிவாஜி கணேசன் ரசிகர்களும் கமல்ஹாசனை தான் வாழும் சிவாஜியாக பார்க்கின்றனர், களத்தூர் கண்ணம்மா முதல் இன்றுவரை நடிப்பில் எவரும் அசைத்து பார்க்க முடியா சிகரம் அவர், இந்திய சினிமாவில் சிறந்த நடிப்பு என்றால் அனைவருக்கும் நியாபகம் வரும் ஒரே கலைஞர் கமல்ஹாசன்.
எம்.ஜி.ஆர் தமிழராக பிறந்தவரல்ல ஆனால் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர், தமி்ழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வாழ்ந்தவர், முதலமைச்சர் என்ற பதவியில் அவர் அமர்வதற்கு முன்பே ஒரு நடிகராக இருந்துகொண்டே ஏழைகளுக்கு பல நலதிட்ட உதவிகளை செய்து வந்தவர், இன்றும் அவரால் பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்கிறது மேலும் அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்து தமிழகத்திற்கு செய்த நன்மைகள் ஏராளம், அதையெல்லாம் விரிவாக பேசினால் அரசியல் பேசுகிறான் என்பார்கள் நான் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவனும் அல்ல.
தமிழக மக்களுக்காக ஓர் தமிழராக வாழ்ந்து தமிழராக தமிழ் மண்ணில் மறைந்தார், பூவுலகை விட்டு நீங்கி 30 வருடங்களாக போகிறது இன்றும் நல்லோர் மனதை விட்டு நீங்காத ஓர் நிஜ சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் நமது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்!
puratchi nadigar mgr
1st July 2015, 12:20 AM
நாளை (01/07/2015)இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். "தனிப்பிறவி " ஒளிபரப்பாக உள்ளது.
http://i57.tinypic.com/2echet2.jpg
.
தகவல் உதவி: மடிப்பாக்கம் திரு. சுந்தர்
saileshbasu
1st July 2015, 12:35 AM
உன்னை விடமாட்டேன்
https://www.youtube.com/watch?v=WOvDLgYsI7Y&list=PLsBwSDmJH_gn3jeYqdelYDuuE42068a2M
Yukesh Babu
1st July 2015, 01:15 AM
http://i1170.photobucket.com/albums/r521/yukeshbb/a_zpspjpahbab.jpg (http://s1170.photobucket.com/user/yukeshbb/media/a_zpspjpahbab.jpg.html)
esvee
1st July 2015, 06:10 AM
http://s22.postimg.org/vxjzualv5/ddd.jpg (http://postimage.org/)
http://s9.postimg.org/k8p5g9r4v/1452541_215340365314933_2054109558_n_1.jpg (http://postimage.org/)
ஜூலை மாதத்தில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் பட்டியல் - திரு குமார்
ஆண்டவரும் ஆள்பவரும் - கட்டுரை - திரு கலைவேந்தன்
உன்னை விட மாட்டேன் - திரு சைலேஷ்
மக்கள் திலகம் பற்றிய முக நூல் பதிவுகள் - திரு யுகேஷ் பாபு
மக்கள் திலகத்துடன் இசை சிற்பிகள் அபூர்வ நிழற்படம் - திரு ரவிச்சந்திரன்
அருமையான பதிவுகள் . நன்றி நண்பர்களே
puratchi nadigar mgr
1st July 2015, 09:05 AM
சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் 27/06/2015 (சனிக்கிழமை ) அன்று இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் திரு. விஜயன் ஏற்பாடு செய்த புர ட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 98 வது பிறந்த நாள் மற்றும் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் 100 வது பிறந்த நாள் விழா பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு.
http://i59.tinypic.com/1676phi.jpg
puratchi nadigar mgr
1st July 2015, 09:09 AM
காமராஜர் அரங்கு முன்பு விற்பனைக்கு தயாராக உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய புகைப்படங்கள் /பேட்ஜ்கள் / பேனாக்கள் / சாவி கொத்துக்கள்
http://i60.tinypic.com/24fwvbp.jpg
puratchi nadigar mgr
1st July 2015, 09:14 AM
http://i60.tinypic.com/245yolj.jpg
puratchi nadigar mgr
1st July 2015, 09:17 AM
புகைப்படக் கண்காட்சி பற்றிய புகைப்படங்கள்.
http://i58.tinypic.com/2s13mdl.jpg
puratchi nadigar mgr
1st July 2015, 09:18 AM
http://i62.tinypic.com/2ztgl1c.jpg
Powered by vBulletin® Version 4.2.5 Copyright © 2021 vBulletin Solutions, Inc. All rights reserved.