கண்ணுக்குள்ளே என்னைப் பாரு
காணக் கண் கோடி வேண்டும் ... இந்த வரிகள் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நடிகர் திலகத்திற்கு பல்லாயிரம் சதம் பொருந்தும். அவருடைய கண்களில் வீசும் வீச்சு நேருக்கு நேர் பார்ப்பதற்கு தைரியம் வேண்டும்... குறிப்பாக திரைப்படத்துறையில் உள்ளவர்கள் பலர் இதைச் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம். அந்தக் கண்கள் ஒவ்வொன்றிலும் நாம் எவ்வளவு அர்த்தம் தெரிந்து கொள்கிறோம்.. புரிந்து கொள்கிறோம்.. தாங்கள் புரிந்து கொண்டது, அறிந்து கொண்டது, தெரிந்து கொண்டது, அனைத்தையும் இந்த திரியில் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
இத்திரியில் தரப் படும் படங்கள் உங்களுடைய மூளைக்கு ஏராளமான வேலை வைக்குமே..
அது மட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் நடிகர் திலகத்தைப் பற்றிய பல்வேறு திரிகளில் விவாதங்களின் போது இந்நிழற்படங்கள் தங்களுக்குப் பயன்படும்.
தங்களின் பொழிப்புரை ஓரிரு வரிகளில் அமையட்டும்.
கவிதையாகவும் எழுதலாம், கடிதமாகவும் எழுதலாம்..
கட்டுரையும் வடிக்கலாம் .. வெண்பாவும் பாடலாம்...
கானாவும் பாடலாம்.. காவியமும் பாடலாம்...
தொடக்கமாக நம் வாசு சாரின் உயிர் இங்கே இந்த கண்களைப் பிரசவிக்கிறது.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...75090568_n.jpg