http://i64.tinypic.com/2ahd1y9.jpg
Printable View
http://i68.tinypic.com/2luuzc4.jpg
இன்று இரவு 10 மணி முதல் ஜெயா மூவிஸில் , நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த
"விக்கிரமாதித்தன் " ஒளி.பரப்பாகி வருகிறது
http://i67.tinypic.com/538lg0.jpg
மக்கள் திலகத்தின் தீவிர பக்தரும் எங்கள் அருமை நண்பருமான சைதை திரு.ராஜ்குமார் அவர்களின் மறைவுச் செய்தி அளவற்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நம்ப முடியவில்லை. எளிமையும், உதவும் குணமும் கொண்ட அவரது மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல. எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவருக்குமே தாங்கஇயலா துன்பத்தை அளிப்பதாக உள்ளது. அன்னாரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் இத்துயரைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல எம்.ஜி.ஆரின் ஆன்மா வழங்கட்டும். வாழும் போது எம்.ஜி.ஆரின் நினைவாகவே வாழ்ந்த சைதை ராஜ்குமார் அவர்களின் ஆன்மா எம்.ஜி.ஆரின் திருவடி நிழலில் அமைதிபெறட்டும்.
மக்கள்திலகத்தின் தீவிர பக்தர் திரு.சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு மக்கள்தலைவர் சிவாஜி ரசிகர்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கைலயும் அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
அவரது இழப்பை தாங்காது தவிக்கும் மக்கள்திலகம் திரி நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...14a8dd6b757143
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
பொன்மனச்செம்மலின் தீவிர பக்தர், மென்மனம் படைத்தவர் , சிறந்த களப்பணியாளர், எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், எனது உறவினர்கள் பலரும் அறிந்த எனது ஆருயிர் உடன்பிறவா சகோதரர் , சைதை ராஜ்குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவருடன் பழகிய நாட்கள், மிகவும் இனிமையானவை. அவருடன், நானும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் காப்பாளர் திரு. ஹயாத்தும் கலந்து பேசும் பேச்சுக்களில் புரட்சித்தலைவரின் புகழ் பாடும் விதமாக புதுமையான ஆலோசனைகளை முன் வைத்து அதனை நடைமுறைப்படுத்திய ஆற்றல் மிகுந்த செயல் வீரர்.
அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், சென்னை காமராஜர் அரங்கில் 16-03-2014 அன்று (மக்கள் திலகத்தின் "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் முறையில் 14-03-2014 அன்று தமிழகமெங்கும் வெளியிடப்பட்டிருந்த சமயம் அது) இதய தெய்வம் நம் புரட்சித்தலைவரின் 97வது பிறந்த நாளை, காண்போர் வியக்கும் வண்ணம், மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடி , வெற்றிகரகமாக நடத்திக் காட்டினார். சீருடைகள் வழங்கி சிறப்பித்த சிந்தனையாளர்.
2013ஆம் வருடம் நடைபெற்ற "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில்" , சென்னை நேரு விளையாட்டரங்கம் முகப்பில், முதல்வர் நுழையும் வாசலில், அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவர் தலைமயிலான "இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு" வுடன் இணைந்து எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம் வைத்த மக்கள் திலகத்தின் மகத்தான பதாகைகளை கண்ட கட்சிக்கார்கள், வியப்பின் உச்சிக்கே சென்று விட்டதும், பொன்மனச்செம்மல் எம். ஜி. ஆர். பக்தர்கள் வாய் விட்டு பாராட்டியதும், பசு மரத்தாணி போல் என் நெஞ்சில் இன்றும் நிழலாடி கொண்டிருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவருக்கு துணையாக, உறக்கம் துறந்து, விழித்திருந்து உரையாடியதையும், அவர் நம் மனிதப்புனிதர் எம். ஜி. ஆர். அவர்களை பற்றி சிலாகித்து பேசியதையும் என் வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு அற்புதமான நிகழ்வு !
இப்படிப்பட்ட ஒரு செயல்வீரனை நாம் இழந்து விட்டோம் . ஆறுதல் சொல்ல வேண்டிய எனக்கே ஆறுதல் கூறும் அளவுக்கு ஒரு நெருங்கிய பாசப்பினைப்பிணை ஏற்படுத்தி விட்டார்.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ! இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற மக்கள் திலகத்தின் பாடலுக்கு ஏற்ப ஒரு உதாரண புருஷனாக திகழ்ந்த தெய்வத்திரு. ராஜ்குமார் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை இத்திரியின் மூலமும் தெரிவித்து கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய அவர் தெய்வமாக கருதும், இறைவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
http://i1170.photobucket.com/albums/...ps3qwcan3d.jpg
today dailythanthi given article of thalaivar residence and mathippugal illatha avar upoyokitha porutkal damaged by heavy flood
என் வாழ்க்கையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது – நடிகை சரோஜா தேவி பெருமிதம்
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு
புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில்
தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய
கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு
மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில்
வைத்துள்ளான். என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
அவர்களை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி
மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக
மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை ,
என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில்
இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில்
எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு
நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை
கற்றுத்தந்தவர் அவர் , நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்
என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால்
நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன் , பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன்.
அதனால் நீங்கள் அவர் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல்
அவருடைய இருப்பிடம் என்பது தெய்வம் வாழும் இடம் போல் புனிதமாக கோவில்
போல் இருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி , அவர் இல்லை
என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை.