Originally Posted by saradhaa_sn
நன்றி ராகவேந்தர் சார்,
பம்பாய் மெயில் பட ப்ரிவியூவின்போது, ரவிச்சந்திரனுடன் உங்களுடைய சந்திப்பு மிகவும் சுவையாக இருந்தது. அவருடன் உரையாடியபோது ஒரு விஷயத்தைக்கவனித்தீர்களா?. நம்முடன் அதிகம் பேசவேண்டும் என்று விரும்புவார். ஆனால் அதற்கான விஷயம் கிடைக்காமல் சற்று தடுமாறுவார். நாம் விஷயத்தைத் தூண்டிவிட்டால் போதும் உடனே 'தாங்ஸ்' என்று சொல்லிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவருடைய பேச்சில் அடிக்கடி வரும் வார்த்தை 'thanks'. அதுபோல மறைந்த திரு. பாலாஜி அவர்களுடன் பேசும்போது அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை 'well'. அதேபோல மறைந்த மேஜர் சுந்தர்ராஜன் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை 'but one thing'. ரொம்ப ஜோவியலாகப்பேசும் கங்கை அமரன் அவர்களிடம் பேசும்போது நான் கவனித்தது, அவர் அடிக்கடி 'சரியா சொன்னீங்க' என்ற வாக்கியத்தை உபயோகிப்பார்.
இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள்தான் என்றில்லை, மனக்காயங்கள் ஏற்பட்ட தருணங்களும் உண்டு. ஒருமுறை 'நெஞ்சமெல்லாம் நீயே' படப்பிடிப்பில் நடிகர் மோகனை சந்தித்தபோது கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்துகொண்டார். ரொம்ப அவமானமாகபோய்விட்டது. 'சரி, ஏதோ அவருக்குப்பிரச்சினை போலிருக்கு' என்று பேசிக்கொண்ட எங்களிடம், அங்கிருந்த ஒருவர் 'இல்லேம்மா, இந்தாளு எப்பவுமே இப்படித்தான்' என்றார்.