https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...40&oe=5CD98307
Printable View
இனிய காலை வணக்கம் நண்பர்களே!
நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்தும் 52 வார அன்னதானத்தின் பதின்மூன்றாம் வார நிகழ்ச்சிக்கான அழைப்பு...
http://oi64.tinypic.com/s42681.jpg
நன்றி வான்நிலா
அன்பு நண்பர்களுக்கு....
இனிதே நடந்தேறியது இன்றைய பனிரண்டாம் வார அன்னதான நிகழ்ச்சி.
" எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்...
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே..."
என்று திரைப்படத்தில் பாடி நடித்ததுபோல், தன்நிலை உயர்ந்ததும், தம் நேச நெஞ்சங்கள் பலரை தன்நிலைக்கு விளம்பரமின்றி உயர்த்தி அழகு பார்த்த பெரும் மனிதர் நடிகர்திலகத்தின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு, குரூப்ஸ் கர்ணன் சார்பாக திரு. பி. கணேசன் அவர்களின் பெருமுயற்சியில் நடத்தப்பட்டு வரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இன்றைய நிகழ்ச்சிக்கு உபயதாரர் சென்னையைச் சேர்ந்த திரு. ஆர்.தேசிகன் அவர்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திரு. வீயார் என்கிற திரு. வி.ராகவேந்திரா அவர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
திரு. தேசிகன் அவர்களுக்கு திரு. கே.எஸ்.நரசிம்மன் அவர்கள் பொன்னாடைப் போர்த்த, திரு. எஸ்.கே.விஜயன் அவர்கள் நினைவுக் குறிப்பேட்டினையும், 2019 வருட காலண்டர் மற்றும் நடிகர்திலகத்தின் கையடக்கப் பிரதி நூலொன்றையும் வழங்கினார்கள்.
திரு. வீயார் அவர்களுக்கு திரு. குமாரசாமி அவர்கள் பொன்னாடைப் போர்த்தி சிறப்பித்தார். இதயவேந்தன் சிவாஜி மன்ற செயல்வீரர் ஆர்.எஸ்.சிவா முன்னின்று நிகழ்ச்சியை நடத்திட, திரு. அம்பத்தூர் வெங்கடேசன், திரு. பாண்டியன், திரு. கல்தூண் ரவி, திரு.நடராஜ், உள்ளிட்ட நடிகர்திலகத்தின் ரசிக இதயங்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் திரளாக வந்திருந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு செய்து, உணவருந்தி அகமகிழ்ந்து வாழ்த்திச் செல்வது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
நிகழ்ச்சியின் களத்திலிருந்து மனமகிழ்ந்த வண்ணம்....வான்நிலா விஜயகுமாரன்.
http://oi65.tinypic.com/xkxbg8.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்