http://www.pinkvilla.com/files/image...ges/hema51.jpg
Printable View
NSK இன் மணமகள் திரை படத்தில் திரு டி எஸ் பாலையா அவர்கள் வாயஅசைப்பில் பின்னணி குரல் கொடுத்த திரு v .n சுந்தரம் பாடும் பாரதியார் பாடல் உடன் ML வசந்தகுமாரி அவர்கள் .லலிதா ஆட பத்மினி மற்றும் பாலையா அவர்கள் வீணை வாசிக்க
https://www.youtube.com/watch?v=O0VNOCKk7UI
டியர் வாசு சார்,
இரண்டு நாட்கள் காணாமல் போய் இன்று ஒரு அருமையான பாடலை 'இன்றைய ஸ்பெஷலாக' கொண்டு களமிறங்கியிருக்கிறீர்கள். வழக்கம்போல அருமை. (தேன் இனிக்கும் என்று ஒவ்வொரு தடவையும் சொல்ல வேண்டியதில்லை, எனினும் சில நேரம் 'நவக்கிரகம் நீங்க நவக்கிரகம்' போன்ற பாடல்களையும் கொண்டு வருவதால் ஒவ்வொரு முறையும் சொல்லிவிடுவது நல்லது).
'துலாபாரம்' பார்த்தாலே மனம்பாரம் அப்போது இளைஞர்களாக இருந்தவர்கள் கிண்டலடிப்பது உண்டு. அந்த அளவுக்கு படத்தின் பிற்பகுதியில் சோகம் நிறைந்திருக்கும். அந்தப்படத்தில் இப்படியொரு பாடல் என்பது ஆச்சரியம்தான். அதுவும் 'பாடல் காட்சிகளென்றாலே அட்டென்ஷன் பொஸிஷனில் நிற்பவர்' என்று பொதுவாக கிண்டலடிக்கப்படும் முத்துராமனிடமிருந்து. நிஜமாகவே வித்தியாசம்தான்.
இந்தப்பாடலை மிகவும் உருகி உருகி சிலாகித்துள்ளீர்கள். ரொம்ப நல்ல மூட்ல இருந்துள்ளீர்கள் என்று தெரிகிறது. முத்துராமனின் ஸ்டலை புகழ்ந்து தள்ளிவிட்டீர்கள்.
'சங்கம் வளர்த்த தமிழ்' பாடலிலும் கவிஞர் கட்டுப்பாடில்லாமல் விளையாடி இருப்பார்.....
'தோட்டத்திலே தென்னை இரண்டு முற்றித்திரண்டு
பக்கம் உருண்டு - அதைத்தொடவோடிய விழியோடொரு
விழிமோதிய கணமே என்னைத் தாக்கித்தகர்த்தவை இரண்டு
முற்றித்திரண்டு பக்கம் உருண்டு' என புகுந்து விளையாடி விடுவார்.
'பூஞ்சிட்டு கன்னங்கள்' சுகம் சோகம் இரண்டு வெர்ஷன்களுமே அற்புதம்.
சூப்பர் பதிவு..., பாராட்டுக்கள்....
அன்பு கார்த்திக் சார்,
நன்றி!
நேற்று வெளியூர் பயணம். லீவ். அதற்கு முந்தின நாள் 'தோட்டக்கார சின்ன மாமா' (மாதவி), அதற்கு முன்னால் 'ஊருக்கெல்லாம் பூச்சூட்டும்' (ராஜா வீட்டுப் பிள்ளை) இ.ஸ்பெஷலில் போட்டிருந்தேன். சந்திரபாபு ஆவணம் ஒன்றும் அளித்திருந்தேன்.
'சிரிப்போ' என் இதயம் கவர்ந்த பாடல். எந்தப் படத்திலும் இது போல சுறுசுறுப்புத் திலகமாக இல்லாததால்தான் இந்தப் படத்தில் உங்கள் பெயர் கொண்டவரின் அப்பாவுக்கு புகழுரை. இரண்டு நாகளுக்கு முன்னம்தான் 'சம்சாரம் என்பது வீணை' பாடலில் 'முத்துராமனை பிடிக்காது' என்றுகூட எழுதியிருந்தேன். நல்லதை திறமைகளை எங்கிருந்தாலும் பாராட்டும் குணம் நமக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் கோபாலிடமிருந்து 'நாடோடி மன்னனு'ம், எனக்கு மிகவும் பிடித்தமான 'பொன்னந்தி மாலைப் பொழுது' 'இதயவீணை' படப் பாடல் பற்றிய தங்களுடைய சிறப்பான ஆய்வும் இங்கு கிடைத்தன.
இனிய நண்பர்கள் திரு கார்த்திக் சார் / திரு கிருஷ்ணா சார் / திரு கோபால் சார் / திரு சி.க சார்
உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு நன்றி . துலாபாரம் - பாடல் பதிவு மிகவும் அருமை .நன்றி
வாசு சார் .
பொங்கும் பூம்புனல் - இரவின் மடியில் - அருமையான பாடல்கள் நன்றி திரு ராகவேந்திரன் சார் .
கோபால் சார் - கவிதை - புதுமை .
டியர் வினோத் சார்,
ஜெய்சங்கரின் "நிலவுக்கு போவோம்" பாடல் வீடியோவுடன், முதன்முதலில் நிலவில் கால்பதித்த அப்பல்லோ-11 வீரர்கள் ஆம்ஸ்ட்ராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோரின் நிழற்படங்களை பதித்த உங்கள் டைமிங் சென்ஸை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை....
THANKS KARTHIK SIR
42 ஆண்டுகள் முன் வேலூர் அப்சரா அரங்கில் தவப்புதல்வன் முதல் நாள் - முதல் காட்சி பார்த்த நினைவலைகள் .
26.8.1972
கல்லூரி நண்பர்களுடன் முதல் நாள் ரசிகர்கள் மன்ற சிறப்பு காட்சி காலை 10 மணிக்கு படம் பார்க்கசென்றோம் .திரை சீலை நீக்கியவுடன் முதலில்பல்வேறு ரசிகர்கள் மன்ற வரவேற்பு சிலைடுகள்காட்டப்பட்டது .
பின்னர் வருகிறது ''வசந்த மாளிகை '' காட்டியவுடன் விசில்கள் - கைதட்டல்கள்
ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்தோம் . .
http://youtu.be/ORqLDJZ6WJk