https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...05&oe=5C7641BA
மேற்காணும் விளம்பரத்தில் 12 எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம்.
Printable View
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...05&oe=5C7641BA
மேற்காணும் விளம்பரத்தில் 12 எனக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம்.
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...e9&oe=5C85B4AC
பெம்புடு கொடுகு படத்தின் தெலுங்கு விமர்சனம் இணைக்கப்படுகிறது. நம் குழுவில் தெலுங்கு அறிந்தவர்கள் இதைப் படித்துப் பார்த்து மொழிபெயர்த்து பகிர்ந்து கொண்டால் மிக்க உதவியாயிருக்கும். நன்றி
நடிகர்திலகம் அறிமுகமான " பராசக்தி " மிகப்பெரிய வெற்றி அடைந்ததனால் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்,
பின் தொடர்ந்து வித விதமான கேரக்டர்கள் என நடிப்பில் மின்னினார், முதல் ஐந்தாண்டுகளிலேயே 50 படங்களை நடித்து தள்ளினார், முத்தாய்ப்பான வெற்றிக் குவியல்கள், தனது 27 வது வயதிலேயே புகழின் உச்சத்தில் நின்றார், "நடிகர்திலகம்" ஆனார். 1959 ம் வருடம் வந்த கட்டபொம்மன் உலக அளவில் புகழடையச் செய்தது,
இவ்வாறு நடிகர்திலகம் புகழின் உச்சியில் சென்றதை அன்றைய பத்திரிகைகளும், திரை... உலக பிரபலங்கள் உட்பட அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் கூட மேடைகளில் "சிவாஜி தனது திறமை மிக்க நடிப்பால் மட்டுமே புகழின் உச்சத்தில் இருக்கிறார் சிவாஜிக்கு ராசி தேவையில்லை, சிவாஜிக்கு அதிர்ஷ்டமும் தேவையில்லை, நடிப்பு திறமை இல்லாத நடிகர்கள் சிலருக்கு ராசியும் அதிர்ஷ்டமும் துணை நிற்ப்பதனால் மட்டுமே அவர்களும் மக்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்கள் என்றனர்.
"சிவாஜிக்கு ராசி தேவையில்லை, அதிர்ஷ்டமும் தேவையில்லை " என்பதனை திரும்ப திரும்ப சொல்லியே பின்னர் "சிவாஜிக்கு ராசியில்லை, அதிர்ஷ்டம் இல்லை " என சொன்னவர்கள் "சிவாஜி ராசியில்லாதவர் எனவும் சொல்லி பிரபல படுத்திவிட்டனர், அது நடிகர்திலகத்தை கலை உலகில் வெல்ல முடியாமல் போனவர்களுக்கு பின்னாளில் அரசியலில் பெரும் துணை புரிகின்ற வாக்கியமாகவும் அமைந்து விட்டது,
இந்தச் செய்தியை தொழிலதிபரும் பத்திரிகை நிறுவனருமான திரு டாக்டர் திரிசக்தி சுந்தரராமன் அவர்கள் நமது நாஞ்சில் இன்பா அவர்கள் எழுதிய "சிவாஜியின் ஆளுமை" நூல் வெளியிட்டு விழாவில் சிறப்புரையாற்றிய போது குறிப்பிட்டார்,
மேலும் தான் ஒரு நடிகர்திலகத்தின் தீவிர ரசிகன் எனவும், எங்கள் பத்திரிகையில் நடிகர்திலகம் பற்றிய தொடர் வெளிவரப்போவதை அறிந்த விஷமிகள் சிலர் தடைகள் உருவாக்க முயன்றனர், அவரைப் பற்றி கட்டுரை போடவேண்டாம் அவர் ராசியில்லாதவர், பத்திரிகை சரியாக போகாது என சொன்னவர்கள் மேலும் வேறு வழிகளில் கட்டுரையை தடுக்க முயன்றனர், அவ்வாறு வந்த இடையூறுகள் எங்களுக்கு மேலும் உந்துதல் அளித்தது கட்டுரை வெளியீட்டுக்குப் பின் ஏராளமான ரசிகர்கள் ஆதரவு கடிதங்கள் எழுதி வருகின்றார்கள்,எங்கள் குழுவிற்கு பெரும மகிழ்ச்சி இத்தனை காலம் கடந்தும் கூட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் அதே மனநிலையிலேயே இருக்கிறார்கள் வரும் வாரம் செல்லுலாய்ட் சோழன் 100 வது எபிசோடை எட்டப்போகிறது, நடிகர் திலகம் என்றுமே ராசியானவர் எனவே தான் இத்தகைய வெற்றி.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...c7&oe=5C757B34
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...e3&oe=5C6AE260
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...a6&oe=5C874630
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...0c&oe=5C8259FC
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...75&oe=5C3E55E1
(courtesy net)
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...22&oe=5C7AD493
Rare photo of NT. Thanks to NTFans
(courtesy net)
நடிகர்திலகம் அரசியலில் வெற்றிபெறவில்லை என்பது சரியா??
காழ்ப்புணர்ச்சியால், மாற்று முகாமில் இருக்கும் பலரும் அரசியலில் சிவாஜி ஜொலிக்கவில்லை என்று சாதாரணமாக, போகிற போக்கில் கூறுவதைப் பார்க்கிறோம். நேற்றுகூட ஒரு தமிழக அமைச்சர், சிவாஜி கணேசன் கூட தேர்தலில் ஜெயிக்கமுடியவில்லை என்று உளறுகிறார். ஆனால், இந்தக் கருத்தை நம்மில் பலரும் ஆமோதிப்பது போல கருத்து தெரிவிப்பது வருத்தமளிக்கிறது.
அரசியலில் ஜொலிப்பது என்றால், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி. பதவியைப் பெறுவதா? அல்லது, பதவியை, அதிக...ாரத்தைப் பயன்படுத்தி, கொள்ளையடித்து சொத்துக்களை சேர்ப்பதா?
டெல்லி மாநிலங்களவை உறுப்பினராக இரண்டரை ஆண்டுகாலம் பதவி வகித்தபோது, தனது எம்.பி. பதவிக்கான விமான டிக்கெட், இலவச ரயில் டிக்கெட் போன்றவற்றைக் கூட உபயோகப்படுத்தாமல், தனது சொந்த செலவிலேயே பயணங்களை மேற்கொண்டவர் நடிகர்திலகம்.
பெரியார், காமராஜர் முதல் கலைஞர், எம்.ஜி.ஆர் வரை எல்லோராலும் மதிக்கத்தக்க ஒரு அரசியல்வாதியாக வாழ்ந்ததே போதும். அரசியல் நாகரிகம், சுயமரியாதை ஆகியவற்றோடு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், காமராஜரின் அடிச்சுவட்டை இறுதிவரை பின்பற்றி, யாராலும் குற்றம் சொல்ல முடியாமல் நடந்ததே அவருடைய அரசியல் வெற்றி. அரசியல் என்றால் சம்பாதிக்கும் ஒரு தளம், பதவியை அனுபவிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் இடம் என்று நினைக்கும், அடுத்த தலைமுறையினருக்கு நடிகர்திலகத்தின் நேர்மையான அரசியலை எடுத்துச் சொல்லவேண்டும்.
அரசியலில், தேர்தல் வெற்றி என்பது மட்டுமே வெற்றி அல்ல. அப்படிப் பார்த்தால், இந்திய அரசியல் சாசன சிற்பியாகப் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கார் எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. ஏன், கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தாலும் இன்று அனைத்துத் தரப்பினராலும் போற்றப்படும் நல்லக்கண்ணு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெறவில்லை. இதுபோல பல உதாரணங்களைக் கூறமுடியும்.
கேமரா முன்பு மட்டுமே நடித்து, மக்கள் மன்றத்தில் நடிக்கத் தெரியாத நடிகர்திலகம் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவில்லையே (அதுவும் ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார்) தவிர அவரால் உருவாக்கப்பட்ட, அவரால் வெற்றிபெற்றவர்கள் பலர். தான் செய்த நற்பணிகளை, பலரை வளர்த்துவிட்டதை, உருவாக்கியதை நடிகர்திலகம் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. ஆனால், துரதிஷ்டம், அவரால் வெற்றிபெற்றவர்கள், பலன் பெற்றவர்கள் கூட அதனை வெளியில் சொல்லாமல் விட்டதுதான்.
"உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன் - வேறொன்றும் தெரியாது" என்று திரையில் மட்டுமல்ல, தன் பொதுவாழ்விலும் மனசாட்சிப்படி நேர்மையாக நடந்துகொண்டவர் நடிகர்திலகம்.
எனவே, நமது ரசிக நண்பர்கள், நடிகர்திலகம் அரசியலில் தோற்றார் என்று யார் கூறினாலும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டும். அதுபோல நாமும் இந்த எதிர்மறைக் கருத்தை தெரிவிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள்.
நன்றி.
அன்புடன்
K .சந்திரசேகரன்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...08&oe=5C765C38
(courtesy net)
நேற்றுதான் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நண்பர்கள் முயற்சியில் திரு.பி.கணேசன் அவர்கள் 52 வார தொடர் அன்னதானத் திட்டத்தைத் துவக்கியதுபோல் தெரிகிறது. ஆனால், அதற்குள் ஏழு வா...ரங்களை வெற்றியோடு கடந்திருக்கிறது என்பது ஆச்சர்யமாக உள்ளது.
அதைவிட ஆச்சர்யம்.... உலமெங்கும் பரவிக் கிடக்கும் நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்களின் ஆதரவில், வாரந்தோறும் நடைபெறும் இந்த அன்னதானத்திற்கு மே2019 வரை முன்பதிவு நடைபெற்றிருக்கிறது என்பதுதான்.!
இந்த வெற்றிப் பயணத்திற்கு எல்லாம் வல்ல நடிகர்திலகத்தின் ஆசிர்வாதங்கள் தான் காரணம் என்பதை நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். இம்முயற்சிக்கு பல்வேறு ஒத்துழைப்புகளை தானாகவே முன்வந்து அள்ளி வழங்கும் பிரபலங்களையும், அய்யனின் அன்பு இதயங்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஏழாம் வாரமாக நேற்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர்திலகத்தின் ரசிகரும், நட்பு நெஞ்சமுமான திரைப்பட, தொலைக்காட்சி, மேடை நாடகப் புகழ் திரு. மோகன்ராம் அவர்கள் தலைமையேற்று அன்னதானத்தைத் துவக்கி வைத்தார். அவருக்கு என் முதற்கண் நன்றி!
நேற்றைய அன்னதான உபயதாரர்களான மதுரையைச் சார்ந்த திரு. சந்திரசேகரன், திரு. இன்பசேரன், திரு.JK. ரமேஷ் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.
இம்மூவருக்கும் உரித்தான எங்கள் நன்றியின் வெளிப்பாடான நினைவுக் குறிப்பேட்டினை அவர்கள் சார்பாக, திரு.மோகன்ராம் அவர்களிடமிருந்து திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அய்யனின் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும், அங்கு தானாகவே முன்வந்து தம் ஒத்துழைப்பை நல்கி வரும் நடிகர்திலகத்தின் அன்பு இதயம் திரு. ML.கான் அவர்களின் பங்களிப்பு இந்நிகழ்ச்சிக்கு விலைமதிப்பில்லா அன்பின் அர்ப்பணிப்பாகும்.
மற்றும், திலகத்தின் நேச நெஞ்சங்களான மிட்லண்ட் திரு.சங்கர், திரு.காமராஜ், சூளைமேடு.திரு. நந்தகுமார், திரு.KS.நரசிம்மன், திரு.ஏழுமலை, திரு.பாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
ஒவ்வொரு வாரமும் அய்யனின் 90 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் அன்னதானத்திற்கு வருகை புரிந்து பயன்பெறும் பொதுமக்களுக்கும் என் நன்றி!
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக...
வான்நிலா விஜயகுமாரன்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...f4&oe=5C7A474D
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...26&oe=5C6A03A7
(courtesy net)