http://i1170.photobucket.com/albums/...psfbacdf24.jpg
thanks boominathan aandvar
இந்த அகிலத்திற்கு வழி காட்டிய கண்கள்
Printable View
http://i1170.photobucket.com/albums/...psfbacdf24.jpg
thanks boominathan aandvar
இந்த அகிலத்திற்கு வழி காட்டிய கண்கள்
தர்மநீதி மக்களாட்சி வாழ்க!
புரட்சித்தலைவர் படமென்றால் சமூக நீதியைச் சொல்லும் பாடல் இல்லாமலா இருக்கும். அந்தப் பாடலையும் கவியரசர் எழுதினால் அப்பாடல் நம் இதயங்களில் இடம் பெறாமலா இருக்கும்!….
உழைக்கும் வர்க்கத்தை உயர்த்தி, உல்லாசக் கோட்டைகளில் வாழும் உள்ளங்களிலும் உழைப்பின் உன்னதத்தை உயர்த்திட, தனிப்பிறவியாம் எம்.ஜி.ஆர். மூல்ம கண்ணதாசன் எடுத்துரைத்த என்றும் வாழும் சமூகநீதிப் பாடலைச் சந்திப்போமா?
“உழைக்கும் கைகளே!
உருவாக்கும் கைகளே!
உலகைப் புதுமுறையில்
உண்டாக்கும் கைகளே!”
பாடலின் தொடக்கத்தைச் சந்தித்தோம்!
“உழைக்கும் கைகள்!
உலகையே புதுமுறையில்
உருவாக்க நினைத்து, அப்படியே
உண்டாக்கும் கைகள்!’
உண்மையானே!
இந்தக் கைகள் இவ்வுலகில் செய்யும் அதிசயங்கள்…. என்னவாம்? ஒன்றா? இரண்டா? கேளுங்களேன்!
“ஆற்றுநீரைத் தேக்கி வைத்து
அணைகள் கட்டும் கைகளே!
ஆண்கள் பெண்கள் மானம்காக்க
ஆடை தந்த கைகளே!
சேற்றில் ஓடி நாற்றுநட்டு,
களை எடுக்கும் கைகளே!
செக்கர்வானம் போல என்றும் சிவந்து நிற்கும்
கைகள் எங்கள் கைகளே!”
கேட்டீர்களா? இப்படி உழைக்கும் மக்களின் உயர்வை, படிக்காத பாமரமும் அறியும் வண்ணம் எளிய சொற்களில், புரட்சித் தலைவர் மூலம் பூமிக்கு உணர்த்தும் கவியரசரின் கவித்துவத்தின் மகத்துவமே மகத்துவம்.
இப்பாடலின் விரிவான விளக்கங்களும், ஏற்கனவே முன்னர் வந்த நூல்களில் முழுமையாகச் சொல்லப்பட்டுள்ளன.
இருப்பினும் நம் இதயங்களைத் தொடும் இரண்டொரு வரிகளை வாசிப்போமே!
‘உலகம் எங்கும் தொழில் வளர்க்கும்
மக்கள் ஒன்றாய்க் கூடுவோம்!
ஒன்று எங்கள் ஜாதியென்று
ஓங்கி நின்று பாடுவோம்!
தர்மநீதி மக்களாட்சி வாழ்கவென்றே
ஆடுவோம்! – நாம்
வாழ்கவென்றே ஆடுவோம்!”
courtesy - net
வெற்றி-திருப்புகழ் பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i60.tinypic.com/x3a8zr.jpg
http://i1170.photobucket.com/albums/...ps0bcb9cc9.jpg
The one & the only star still shinning in the hearts of the poor!
புரட்சித்தலைவரின் புகழுரைகள்!
கவிஞர் கண்ணதாசன் பற்றி உங்கள் கருத்தென்ன?
என்ற வினா, சென்னை வானொலி நிலைய ‘சினிமா நேரம்’ ஒலிபரப்புப் பேட்டியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு எம்.ஜி.ஆர் கூறிய பதில்:
“கவி அரசு என்றும், அரசு கவி என்றும் புகழோடு மக்கள் மனதிலே தனக்கென்று, தனியிடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் அவர்கள், உலக மக்களுக்கும், எல்லாத் தரப்பினருக்கும் தேவையான தத்துவங்களை மிக எளிமையாக, ஆனால் உறுதியாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
இந்த நூற்றாண்டில் கவிஞர் கண்ணதாசனைப் போல், பல்லாயிரக்கணக்கான பாடல்களை, உரைநடை இலக்கியங்களை, கவிதைகளைப் படைத்த கவிஞர்கள் வேறு யாருமே இல்லை.
காப்பியங்களைப் படைத்த கம்பனாக, இளங்கோவாக, ஞானத்தையும், விஞ்ஞானதைத்தையும், இணைத்த வள்ளலாராக, புதுமைக்கவி, படைத்த பாரதியாக, புரட்சிக்கவி படைத்த பாரதிதாசனாக; தேவாரம், திருவாசகம், திருப்பாசுரம் என்ற ஆன்மீக நெறிகளைப் பாடிய அரும்பெரும் புலவர்களாக; இப்படிப் பல கோணங்களில் பலரும் வியக்கும் வண்ணம் தமிழ்க்கவிதைகளைப் படைத்தவர் என்ற பெருமை கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கே உண்டு.”
கவியரசரை இப்படி இதயத்துள் வைத்துக் கள்ளங்கபடமின்றி உண்மையாகப் புகழ்ந்துரைத்த புரட்சித்தலைவரை நாம் பாராட்டாமல் இருக்க முடியுமா?
நாமே பாராட்டவேண்டும் என்று தோன்றுகின்றபோது, கவியரசர் பாராட்டியிருக்க மாட்டாரா? பாராட்டியுள்ளார்! எப்படி?
“நீ தொட்டது துலங்கும்!
நின்கை கொடுத்தது விளங்கும்!
நின்கண் பட்டது தழைக்கும்!
நின்கால் படிந்தது செழிக்கும்!
நின்வாய் இட்டது சட்டம்!
அன்பிலும் குறைவிலாது
அறத்திலும் முடிவிலாது
பண்பிலும் இடைவிடாது
பழகிடும் புரட்சிசெல்வா!
வாழ்க! வாழ்க!”
என்று, பல்லாண்டுகளுக்கு முன்னரே கவியரசர், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிப் பெருமிதப்படுத்தியுள்ளார்.
courtesy- net
தமிழக முதல்வர்
புரட்ச்சித்தலைவர் எம்ஜிஆர்
அவர்களுடன், அப்போதைய தமிழக
நிதியமைச்சர் மாண்புமிகு நாவலர்
இரா.நெடுஞ்செழியன் அவர்கள் .
இன்று .நாவலரின் பிறந்தநாள் .
http://i59.tinypic.com/2ntzryt.jpg
" மக்கள் திலகம் எம். ஜி. ஆர். திரியின் பாகம் 10 ஐ துவக்கி வைத்திருக்கும் அண்ணன் திரு. லோகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.