-
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ்
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 2,400/- (ரூபாய் இரண்டாயிரத்து நானூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 2,600/- (ரூபாய் இரண்டாயிரத்து அறுநூறு)
முன்னைய பதிவிலிருந்து
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,100/- (ரூபாய் இரண்டாயிரத்து ஒருநூறு)
-
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 5,600/- (ரூபாய் ஐந்தாயிரத்து அறுநூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,200/- (ரூபாய் நான்காயிரத்து இருநூறு)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
அன்புடன்,
பம்மலார்.
-
டியர் பம்மலார்,
தங்களின் பதிவுகள் மூலம் நடிகர் திலகத்தின் படங்கள் புரியும் சாதனைகளை அனைவருக்கும் தெரியும் படி புள்ளி விவரங்கள் மூலம் அளித்து வருவது பாராட்டுக்குரியது. தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.
நேற்றுடன் முடிவடைந்த சிவாஜி வாரத்தில் ஒரு தனித்துவம் இருக்கிறது. ஆமாம், சென்னை சாந்தியில் 02.08.1975ல் மன்னவன் வந்தானடி வெளியான போது முதல் நாள் வரைக்கும் அதாவது 01.08.1975 வரைக்கும் சிவாஜி வாரம் இரு வாரங்கள் கொண்டாடப் பட்டு நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப் பட்டன. தற்போது 26.03.10 அன்று சிவாஜி வாரத்தை அதே மன்னவன் வந்தானடி படம் தொடங்கி வைத்துள்ளது. இது நிச்சயம் வியக்கத்தக்கதாகும். எதேச்சையாக அமைந்தாலும் சரித்திரம் திரும்புவதன் அறிகுறியாகக் கூட காட்சியளிக்கலாம் அல்லவா. அது மட்டுமல்ல, அப்போது மன்னவன் வந்தானடி படம் 100 நாட்கள் ஓடி முடிவடைந்தவுடன் வேறொரு படம் சில நாட்கள் திரையிடப்பட்டு அதனைத் தொடர்ந்து மீண்டும் சிவாஜி வாரமாக நாளுக்கொரு படமாக சாந்தியில் திரையிடப்பட்டன.
இதை என்னென்பது
ராகவேந்திரன்
-
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
1.4.2010 - வியாழன் - சொர்க்கம்
பிற்பகல் 2:30 மணிக் காட்சி = ரூ. 3,700/- (ரூபாய் மூவாயிரத்து எழுநூறு)
மாலை 6:15 மணிக் காட்சி = ரூ. 4,500/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூறு)
இரவு 9:45 மணிக் காட்சி = ரூ. 2,200/- (ரூபாய் இரண்டாயிரத்து இருநூறு)
அன்புடன்,
பம்மலார்.
-
தங்கத்தமிழ்ப் பெருமகனின் வெள்ளித்திரைத் திருவிழா - செவாலியே சிவாஜி வாரம் - பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கம் - ஒரு வார மொத்த வசூல் விவரம் (சற்றேறக்குறைய)
26.3.2010 - வெள்ளி - மன்னவன் வந்தானடி = ரூ. 9,800/- (ரூபாய் ஒன்பதாயிரத்து எண்ணூறு)
27.3.2010 - சனி - கௌரவம் = ரூ. 7,800/- (ரூபாய் ஏழாயிரத்து எண்ணூறு)
28.3.2010 - ஞாயிறு - எங்கள் தங்க ராஜா = ரூ. 22,000/- (ரூபாய் இருபத்து இரண்டாயிரம்)
29.3.2010 - திங்கள் - திருவருட்செல்வர் = ரூ. 11,700/- (ரூபாய் பதினொன்றாயிரத்து எழுநூறு)
30.3.2010 - செவ்வாய் - பாரத விலாஸ் = ரூ. 7,100/- (ரூபாய் ஏழாயிரத்து ஒருநூறு)
31.3.2010 - புதன் - ராஜபார்ட் ரங்கதுரை = ரூ.12,000/- (ரூபாய் பன்னிரெண்டாயிரம்)
1.4.2010 - வியாழன் - சொர்க்கம் = ரூ.10,400/- (ரூபாய் பத்தாயிரத்து நானூறு)
ஆக மொத்தத்தில், ஒரு வாரத்தின் மொத்த வசூல் சற்றேறக்குறைய ரூ. 80,800/- (ரூபாய் எண்பதாயிரத்து எண்ணூறு). இன்றைய காலகட்டத்தில், இத்தகைய கலெக்ஷன், சாதனைகளின் உச்சம்.
தியேட்டர் வாடகை, திரைப்பட பிரிண்ட் வாடகை, பப்ளிசிடி மற்றும் இதர செலவுகள் எல்லாம் போக, திரையிட்டவருக்கு குறைந்த பட்சமாக ரூபாய் பத்தாயிரத்துக்கும் மேல் லாபம் கிடைத்துள்ளது.
சிவாஜி கணேச கடாட்சத்தால் பெரம்பூர் மஹாலட்சுமி திரையரங்கில் திரையிடப்பட்ட சிவாஜி வாரம், அபாரமான லட்சுமி கடாட்சத்தை அளித்துள்ளது.
செவாலியே சிவாஜி வாரம் ஒரு ஹிமாலயன் ஹிட்.
நமது நடிகர் திலகம் என்றுமே வசூல் சக்கரவர்த்தி தான்.
முன்னைய பதிவிலிருந்து
-
ஏப்ரல் 9, வெள்ளி முதல் சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் பாசமலர். இதற்கான விளம்பரம் இன்று (3.4.2010) ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வெளியாகியுள்ளது. அதனைக் கண்டு களிக்க கீழ்க்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
http://paasamalar69.webs.com/apps/ph...lbumid=8638909
அன்புடன்,
பம்மலார்.
முன்னைய பதிவிலிருந்து
-
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பது ஆன்றோர் வாக்கு. தமது முழுமுதற் காவியமான பராசக்தியின் மூலம் திரையுலகுக்கே திருப்பத்தை, திருப்புமுனையை ஏற்படுத்தியவர், நம் பெருமான் நடிகர் திலகம். தற்பொழுது தமது வாரப் படங்களின் மூலம், குறிப்பாக சிங்காரச் சென்னை மாநகரில், பெரும் திருப்புமுனையை உருவாக்கியுள்ளார். சென்னை பெரம்பூர் மஹாலட்சுமியில் செவாலியே சிவாஜி வாரம் பெற்ற மாபெரும் வெற்றியினால், சீர் மேவும் சென்னை மாநகரம் கண்டு வரும் நல்ல திருப்பங்கள்:
1. பெரம்பூர் மஹாலட்சுமியில் சிவாஜி வாரம் வெற்றிகரமாக முடிந்து ஒரு வார இடைவெளியில், அதே அரங்கில் 9.4.2010 வெள்ளி முதல் நமது நடிகர் திலகத்தின் பாசமலர் திரைக்காவியத்தை ஜி.எம்.பிக்சர்ஸ் என்கின்ற திரைப்பட விநியோகஸ்தர் திரையிட உள்ளார்.
2. திவ்யா பிலிம்ஸ் திரு.ஜி.சொக்கலிங்கம் அவர்கள், காலனையும், காலத்தையும் வென்ற கலைக்கடவுளின் கர்ணன் காவியத்தை, கலை தெய்வத்தின் அவதார நிறைவு நாளை முன்னிட்டோ அல்லது அவதாரத் திருநாளை முன்னிட்டோ, மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏ.சி. திரையரங்குகளில் திரையிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், வேறு ஏதேனும் ஒரு கலைக்குரிசிலின் காவியத்தை அவர் எங்கேனும் திரையிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
3. பல விநியோகஸ்தர்களுக்கு சிவாஜி படங்களைத் திரையிட வேண்டும் என்கின்ற எண்ணம் எழுந்துள்ளது.
-
சிவாஜி - நடிகர் முதல் திலகம் வரை புத்தகத்திலிருந்து (கிழக்குப் பதிப்பகம் வெளியீடு) சில தகவல்கள்..
* தமிழில் ஒரு படத்தின் வசனங்கள் இசைத்தட்டாக வெளிவந்த முதல் படம் பராசக்தி
* வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய முதல் படம் பராசக்தி
* பராசக்தி வெளியாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு 1968-ல் உயர்ந்த மனிதன் வெளியான போது வட சென்னையில் உள்ள மஹாராஜா திரையரங்கில் (இப்போதைய பாண்டியன் தியேட்டர்) பராசக்தி வெளியாகி 118 நாட்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது.
joe
-
இன்று (8.4.2010) மாலை பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கிற்கு சென்றிருந்தேன். நமது நல்லிதயங்கள் கிட்டத்தட்ட 50 பேர் அரங்கிற்கு வெளியே குழுமியிருந்தனர். அரங்கின் பிரதான வாயிலில், சிவாஜி வாரத்திற்கு பந்தல் போட்டது போல், பந்தல் போட்டுக் கொண்டிருந்தனர். பந்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகப் பெரிய பேனர்கள் (பதாகைகள்) வைப்பதற்கும் ஏற்பாடுகள் திவீரமாக செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. பெரம்பூர் ஏரியாவே பாசமலர் போஸ்டர்களால் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது என்றால் அதற்கு மேல் பப்ளிசிடியைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?! பெரம்பூர் பகுதி மட்டுமல்லாது, சென்னை மாநகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பாசமலர் போஸ்டர்கள் விதவிதமான டிசைன்களில் ஒட்டப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. மொத்தத்தில், பாசத்திலகத்தின் பாசமலர் மறுவெளியீட்டால், சென்னையே களை கட்டியுள்ளது.
போனஸ் நியூஸ்:
இதே பெரம்பூர் மஹாலட்சுமியில், பாசமலருக்குப் பின் ஓரிரு வாரங்கள் கழித்து, நல்லிதயங்களின் இதயங்களை மீண்டும் திருட "திருடன்" வரப் போவதாகவும் தகவல் வந்துள்ளது.
நமது நடிகர் திலகத்தின் திரைப்படக் கொண்டாட்டம் பல விதம், நாமும் அதிலே பல விதம்!!!
-
பம்மலார்,
எங்கள் நாஞ்சில் நகர் எப்போதும் நடிகர் திலகத்தின் நகராகவே விளங்கி வருகிறது என்பது அந்த பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்கு தெரியும்.
80-களில் வசந்தமாளிகை திரைப்படம் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் வெளியாகும் .குறிப்பாக ராஜேஷ் திரையரங்கில் .இன்னும் குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை , திரிசூலம் போன்ற படங்கள் நள்ளிரவு சிறப்புக்காட்சிகளோடு திரையிடப்பட்டு ,அப்போது வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் புதிய படங்களை விட வசூல் குவித்து சாதனை படைக்கும் ..அந்த தகவல்களையும் தொகுக்க வேண்டும்.
joe