உண்மை கிருஷ்ணாஜி - ருத்ரய்யா மறைந்தது ஒரு மா பெரும் இழப்பு - "அவள் அப்படித்தான் " எழுப்பிய தாக்கம் போல நம்மை வெகு நாட்கள் பாதிக்கும் . அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…
Printable View
உண்மை கிருஷ்ணாஜி - ருத்ரய்யா மறைந்தது ஒரு மா பெரும் இழப்பு - "அவள் அப்படித்தான் " எழுப்பிய தாக்கம் போல நம்மை வெகு நாட்கள் பாதிக்கும் . அவருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்…
திரு கலைவேந்தன் - உங்கள் தமிழ் நடையில் மயங்கியவர்களில் நானும் ஒருவன் - உங்களை இந்த திரியில் வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் -
அன்புடன்
ரவி
https://encrypted-tbn1.gstatic.com/i...0tfNj1sm6SqtbA
இன்று எம் என் நம்பியார் அவர்கள் மறைந்து 6 ஆண்டுகள் நிறைவு நவம்பர் 19, 2008 - thanks to Maalaimalar
மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மே 21, 1919 - நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் மலபார் மாவட்டம் (தற்போதய கண்ணூர் மாவட்டம்) சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் பிறந்தார். . நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே, அண்ணன் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடிபெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார்.
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால்தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது. நவாப் கம்பெனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935-ம் ஆண்டு 'பக்த ராம்தாசு' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும்.
அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது. பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக்குழு. தஞ்சையில் நடந்த ஏசுநாதர், ராஜாம்பாள் போன்ற நாடகங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்ட மாதச் சம்பளம் மூன்று ரூபாய். அவ்வேளையில் கிருஷ்ணலீலா நாடகத்தில் நடித்து வந்த கே. சாரங்கபாணிக்குக் கையில் ஏதோ கோளாறு ஏற்படவே சாரங்கபாணியின் வேடங்கள் அனைத்து நம்பியாருக்குக் கிடைத்தன.
1939-ல் பதினைந்து ரூபாய் சம்பளம் வாங்கி பெரிய நடிகராகி விட்டார். 1944-ல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி.கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து எஸ்.டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இந்நாடகத்தில் நடித்ததன் மூலம் நம்பியாரும் எஸ்.வி. சுப்பையாவும் பெரும் புகழடைந்தனர். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வித்யாபதி (1946), ராஜகுமாரி ஆகியவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். கஞ்சன் (1947) என்ற படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அபிமன்யு, மோகினி போன்ற படங்களிலும் நடித்தார். அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி படத்தில் கதாநாயகன் மூர்த்தியாக நடித்து பெயர் பெற்றார்.
அதன் பின்னர் அவர் பல படங்களில் வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்.ஜி.ஆர்.-ன் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்களில் எம்.ஜி.ஆர்.-உடன் சேர்ந்து நடித்தார். சிவாஜியுடன் இவர் நடித்த சிவந்தமண்,தில்லானா மோகனாம்பாள்,குலமா குணமா,தெய்வமகன்,தர்மம் எங்கே,சவாலே சமாளி,திரிசூலம் போன்ற படங்கள் குறிபிடத்தக்கவை. 1980-களில் வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே. பாக்யராஜ். அவர் நடித்த தூறல் நின்னு போச்சு, இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த்தின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி. தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பலமுறை அரங்கேற்றியுள்ளார். திகம்பர சாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரிமலைக்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 1946-ம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார்.
பா.ஜ.கவின் முக்கிய தலைவராகத் திகந்த சுகுமாரன் நம்பியார் இவரது மகன். இவர் கடந்த வருடம் காலமானார். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி பிற்பகல் 12:30 மணியளவில் மறைந்தார்.
நடிகர் சரத்பாபு இவரது மகளை மணந்து பின் சமீபத்தில் விவாகரத்து பெற்று விட்டார்
http://www.youtube.com/watch?v=EgFTJDYI42w
வ. உ .சி யின் நினைவு நாளை அசைபோடும் இந்த நாட்களில் , சற்றே பாரதியை பற்றியும் நினைத்து பார்த்தேன் - இருவரும் ஒன்றாக பழகியவர்கள் - ஒரே நோக்கத்துடன் உழைத்தவர்கள் - இருவருமே வரும் கால இந்தியா வை பற்றி பல கனவுகள் கண்டவர்கள் - ஆனால் என்றும் தணியாத சுதந்திர தாகத்துடன் இந்த மண்ணுலுகை விட்டு பிரிந்தவர்கள் - இருந்தாலும் என்றும் நம் உள்ளத்தில் நிரந்தரமாக வாழ்பவர்கள் . அடுத்த தலைமுறையில் இவர்கள் வாழ்வார்களா என்று கேட்டால் , பதில் சொல்வது மிகவும் கடினம் - பாரதி -யார் ? என்று கேட்க்கும் பலர் நம்முடையே இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் - பாரதியின் கவிதை ஒன்றை இங்கு பதிவிட விரும்பிகிறேன்
பாரதி ஒரு பெரிய உபாசகர் - அவர் ஓர் அழகான நெருப்பைப் பார்த்தேன் என்று பாடுவார் . சிறிய நெருப்புப்பொறி ; பெரிய நெருப்பல்ல . அந்தத் துளி நெருப்புப் பொறியை பார்த்தவர் , இங்கே மினுக் மினுக் என்கிறதே , எங்கேனும் கொண்டுபோய் அதை ஒளித்து வைத்தால் என்ன என்று எடுத்துப் போனார் . எங்கே ஒளித்து வைப்பது ? .....
ஒரு பெரிய காடு இருந்தது . அந்த காட்டில் ஒரு மரம் ; அந்த மரத்தில் ஒரு பொந்து . அந்த பொந்துக்குள்ளே கொண்டு போய் தீப்பொறியை வைத்து விட்டார் .
" அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
ஆங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் "
ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு அர்த்தம் பாருங்கள் ! அக்னிக்குஞ்சு - வெறும் அக்னி அன்று . அதைக் காட்டில் வைத்தேன் என்று சொல்லாமல் " ஆங்கோர் " காடு என்கிறார் . காடு பக்கத்தில் இல்லை ; எங்கேயோ தூரத்தில் இருக்கிறது . அக்னிக்குஞ்சு பக்கத்தில் இருக்க வேண்டாம் என்று எங்கேயோ ஒரு காட்டில் கொண்டு வைத்துவிட்டு அதை மறந்துவிட்டார் .
" வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் மூப்பென்றும் குஞ்சென்றும் உண்டோ !
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் "
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் - எனும்போது அந்த நெருப்பு எப்படிப்பட்ட நெருப்பு என்பதை உணரமுடியும் .
பாரதி ஆனந்தத்தின் எல்லைக்குப் போனார் - அதனால் தான் தத்தரிகிட தித்தோம்!
ஏன் தத்தரிகிட தித்தோம் வந்தது ? " சின்ன பொறிதானே " என்று நினைத்து நெருப்பைக் கொண்டு போய் இதயமாகிற பொந்தில் வைத்தேன் . என்னைச் சுற்றி என் மனத்துக்குள் வேண்டாத காடும் , குப்பையும் இருந்தன . நெருப்புப் பொறியை உள்ளே வைத்து விட்டு அதை நான் மறந்து போய் விட்டேன் - ஆனால் வெந்து தணிந்தது காடு ; சுற்றியிருந்த குப்பையெல்லாம் பொசுங்கிப் போய் விட்டது - இனி எனக்கு மிஞ்சியது ஆனந்தமே -தத்தரிகிட தித்தோம் "
ஆழத்தில் புதைந்து கிடக்கும் முத்துக்கள் அவர் பாடல்கள் - நம் மனதில் இருக்கும் வேண்டாத எண்ணங்களையும் , கோபங்களையும் ,ஆசைகளையும் எரித்து விட்டால் , நம்மை பிரிக்க எந்த சக்தியும் இல்லை - ,நாமும் பாரதி போல தத்தரிகிட தித்தோம் என்று ஆடலாம் !!
பாரதியின் நினைவில் -" நல்லதோர் வீணை" இங்கே உங்களுக்காக !
http://youtu.be/Nrh1i6TXBK8
:):smokesmile:
குட் மார்னிங்க் ஆல்..
க்ருஷ்ணா ஜி.. எம்.என் நம்பியாரை நினைவுகளுக்கு நன்றி.. ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது நம்பியார் ராஜ சுலோச்சனா எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங்.. என்ன பாட் சொல்லுங்க பார்க்கலாம் :)
எஸ்வி,கலைவேந்தன்,
ஒரு வேண்டுகோள். கரு பொருள்,பார்வை இரண்டையும் விசாலமாக்கி பங்கு தந்தால் ரசிக்க காத்திருக்கிறோம். செக்கு மாடு போல ,அங்கு போட்டதையே இங்கு வந்து செய்யாமல், எங்களை போன்ற பொது ரசிகர்களை பரவச படுத்த வேண்டுகிறேன்.
கல்லூரி காலத்தில் நான் பழகிய நண்பனும்(35 வருடங்களாக தொடர்பிலில்லை), one movie wonder என்ற வகையில் தமிழின் மிக சிறந்த படங்களில் ஒன்றை தந்தவனும் ஆனா ருத்ரையா மறைவுக்கு எனது ஆத்மார்த்தமான கண்ணீர் அஞ்சலி.
நான் எழுத நினைத்த "அவள் அப்படித்தான்" எனது நண்பனின் ஆத்மாவுக்கு சமர்ப்பணமாவது,குரூர கவிதையாகி விட்டதே?
" Bharathi Yaar? " Interesting. It reminds me of what happened about 20 years back.
I began our annual music party with the song " veLLai thaamarai poovil iruppaaL...". At the end of the party one youngster in his early 30s came up to me and asked me how I knew Bharathiyar songs. I was stunned. In my elementary school days (1940s) we used to start the day with " senthamizh naadenumpodhinile"" or " veLLai thaamarai poovil". Monday morning was for flag hoisting and " thaayin maNikkodi paareer...". Obviously, Bharathiyar is out of the school curriculum. Sad! May be, Bharathiyar devotees should bring this up with the government.
I still sing 'veLLai thaamarai poovil', 'nenjil uramum indri', 'manadhil urudhi veNdum', 'mohathai kondru vidu', 'chinanchiru kiLiye' and other songs.
I would not be surprised if Bharathiyar is forgotten.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
இளையராஜா தொடர் வரிசையிலே இன்று ஒரு அபூர்வப் படம்.
http://www.tamilmp3.us/Music3/A-Z%20...Kuzhanthai.jpg
1978-ல் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் அன்னை வேளாங்கண்ணி கிரியேஷன்ஸ் 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்ற படம் ஒன்று வந்தது. அதிகம் யாருக்கும் தெரியாத படம். வந்த சுவடும் தெரியாது. போன சுவடும் தெரியாது. அம்ஜத் குமாரின் 'தோரஹா' காட்சிகள் ஓவர் என்று அப்போதைய சிறுசுகள், இப்போதைய பெருசுகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். (சி.க 'ரொம்ப முக்கியம்' என்பது காதுல கேட்குது)
விஜயகுமார், பவானி (யெஸ்... புண்ணியபூமி, உழைக்கும் கரங்கள் பவானிதான்) பிரதான நடிகர்கள். அம்ஜத் குமார், எஸ்.ஆர் விஜயா, விஜயமாலினி, ஆனந்து, பால பாஸ்கர், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்திருந்தனர். தயாரிப்பு எம்.ஷோபிதா குமார் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படம் இது. இப்படத்தைப் பற்றி அதிகமாக எந்தத் தகவலும் இல்லை.
ஆனால் இதில் மட்டும் இளையராஜா விட்டு வைத்தாரா என்ன?
http://4.bp.blogspot.com/-yGgeUMbPuz...2452210701.jpg
சகோதர உறவுகள் எஸ்.என்.சுரேந்தர், ஷோபா சந்திரசேகர் இருவரும் இணைந்து பாடிய ஓர் அருமையான பாடல். (எஸ்.என் சுரேந்தர், இவர் அண்ணன் எஸ்.என் சுந்தர், ஷோபா இவர்கள் இணைந்து 1970- ல் 'லலிதாஞ்சலி' என்று அவர்களின் தாயாரின் நினைவாக ஒரு லைட் மியூசிக் ட்ரூப் ஒன்று தொடங்கி நடத்தினார்கள்)
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
மலர் போல பெண் ஒன்று
மடி மீது பொன் வண்டு
மனம் கேட்பது உன்னிடம் மது
தா என்று
ரதி மன்மதன்
காவியம் இதுதான் இன்று
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
விழி மூடித் தூங்கும் போதும்
உடல் மீது கோலம் போடும்
விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்
இனி என்னவோ
வாழ்வெல்லாம் சுகம் ஆரம்பமாகும்
மாலை இள மனதில்
ஆசை தனை தூவியது அதிகாலை
அந்த நினைவில் தினம் ஆயிரம்
கவிதைகள் பாடியது மாலை
சொக்கித் துவள வைக்கும் பாடல்தான். மாதுரி, சொர்ணா, வசந்தா இவர்கள் மூவரின் குரல் கலந்தால் எப்படி ஒலிக்குமோ அப்படி ஷோபாவின் குரல் மூவரின் ஒன்று சேர்ந்த கலைவையாக போதையூட்டுகிறது. அதுவும் 'விளையாட்டிலே இன்பம் அதுதான் வேண்டும்' என்று சொக்க வைப்பார்.( கிருஷ்ணா! அடிக்க வர வேண்டாம்) பாடல் முழுவதும் மென்மையான இசை அமர்க்களமாய் பவனி வருகிறது. திரும்பக் கேட்காமல் இருக்க முடியாத பாடல் வகையைச் சார்ந்தது.
கேட்டு மகிழுங்கள். கேட்டால் நிறுத்தவே மனம் வராது.
http://www.youtube.com/watch?feature...&v=3s0IEi0y4NE
இது மட்டுமல்லாமல்
பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிளை
நல்ல பாட்டை மாத்த சொல்வதென்ன நினைப்பில
இவர் புத்தி மாற அடிக்க வேணும் வேப்பிலை
மாப்பிள்ளைன்னா மாப்பிள்ளை மண்ணாங்கட்டி தோப்பிலே
இளையராசாவை நினைச்சு
இளையராசாவை நினைச்சு
இளைச்சு போனேங்க தவிச்சு
வரவா தரவா மெதுவா பெறவா
என்று ஷோபா குரலில் ராஜா புகழ் பாடும் பாடல் ஒன்றும் உண்டு. இதையும் ஷோபா டீஸிங் ஸ்டைலில் ஜோராகப் பாடியிருப்பார். எஸ்.பி.ஷைலஜா குரல் போல் இருக்கும்
http://www.inbaminge.com/t/a/Aval%20...i%20Kulandhai/