வாசுதேவன் சார்,
'சந்திப்பு' படத்தில் தான் ஒரு காட்சியில் தோன்றியது பற்றி ஏற்கெனவே ராகவேந்தர் சார் நமது திரியில் விவரமாகச் சொல்லியிருந்தார். அதை எல்லோரும் படித்துள்ளோம். நீங்கள் கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன்.
சந்திர சேகர் சார்,
தங்களின் த.மு.முன்னணி கால நினைவலைகள் சுவையாக உள்ளன. வாசு சொன்னதுபோல இன்னும் விலாவரியாகச் சொன்னால் மகிழ்வோம் நாங்கள். த.மு.மு. அலுவலகத்தில் என்ன பொறுப்பில் தாங்கள் இருந்தீர்கள்?. அப்போது கட்சிப்பணிகள் எல்லாம் எப்படி நடந்தன?. மேஜரும் சௌகாரும் கூட கட்சியில் இருந்தார்களே, அவர்களின் செயல்பாடுகள் எப்படியிருந்தன? போன்றவற்றை அறிய அதிக ஆவலாக உள்ளோம். த.மு.மு.கட்சி ஜனதாதளத்துடன் 'மெர்ஜ்' ஆனதா, அல்லது கலைக்கப்பட்டதா என்பதையும் தெரிவிக்கவும். (அப்போது நான் "நிறைய" சம்பாதிக்க வேண்டும் என்ற நப்பாசையில் குவைத் நாட்டில் இருந்ததால், நாட்டு நடப்புகள்பற்றிய விவரங்களில் சிறிது தொய்வு விழுந்து விட்டது).