http://i59.tinypic.com/291fin7.jpghttp://i61.tinypic.com/34zhnv9.jpghttp://i60.tinypic.com/2i09agp.jpg
Printable View
oh! Begum song?! Thank u very much sir. Dhanyanaanen:) Avasiyam parkkiren. Now my time:). The same wonderful Begam (song) only for u.:) Oh God! What a sweet voice! chance nahee.
'Duniya Ka Maza Le Lo
Duniya tumarhi hai'
'பஹார்' படத்தில் சின்ன சிட்டாக வைஜயந்திமாலா ஜிப்ஸி ஸ்டைலில் பின்னி எடுக்கும் பாடல். அதுவும் பேகம் 'ஹய்' என்று பாடலை படு உற்சாகத்துடன் எடுக்க வைஜயந்தியின் முகபாவங்கள் ஏ.ஒன்.
பின்னாலேயே 'வாழ்க்கை' வரப் போகுதா?:)
https://www.youtube.com/watch?featur...qkrBDX8cpj8eGt
சி.க. சார்,
அடேங்கப்பா! பிரம்மாண்டம்.
//இது கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த “சப்த பதி” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்//
தப்பு. கதை விரி..........வாக்கம்.
நன்றாகத்தான் இருந்தது. ஆனால் கொஞ்சம் நீளம். தப்பே இல்லை. நீலமாய் இருந்தாத்தான் தப்பு.
நான் பார்த்ததில்ல சி.க.சார். (போட்டாச் போட்டாச்...என்று கத்த முடியாமல் பண்ணின உம்மை பழைய நீராகார சாதத்தில் வெல்லம் போட்டு சாப்பிட வைக்க வேண்டும்.:)
கிருஷ்ணா அருமையாக சப்போர்ட் பண்ணி இருந்தார். நேற்று போனில் கூட இப்படத்தை சிலாகித்து:) எப்படி? சிலாகித்து:)... எப்படி எப்படி எப்படி?... சிலாகித்து:) நாங்க ரெண்டு பேர் மட்டுமே பேசி விஸ்வநாத்தின் புகழைப் பரப்பினோம்.
பார்த்துட்டு வாரேன் (நன்றி சி.க)
வணக்கம் வாசு ஜி
வைஜயந்தி மாலாவின் சூப்பர் பாடல் காலையில் பூபாளமாக ஒலிக்க இணைத்த நமது திரியின் பாலம் வாசு அவர்களுக்கு காலை வணக்கம்
அன்பு சி கேQuote:
ராமனைத் தூங்கச் செய்யும் தாலாட்டு கேட்டிருக்கிறீர்களா ரவி.. இதோ..(கிருஷ்ணா ஜி..இந்த ரீதி கெளளை ராகத்தில் அமைந்த பாடல் திரையில் உண்டா;;
காலை வணக்கம்
ரீதி கௌளை ராகத்தில் அமைந்த தமிழ் திரை பாடல்களை கேட்கிறீர்களா ?
உங்கள் பெயரில் இருக்கும் பாடலே ரீதி கௌளை ராகம் தான் 'சின்ன கண்ணன் அழைக்கிறான் ','தலையை குனியும் தாமரையே ','கண்கள் இரண்டால் (சுப்ரமணியபுரம்) '
காலை வணக்கம் ராஜேஷ் சார்
வினோத் சார்,
பழைய ஆவணங்கள் அருமையோ அருமை. கலக்கி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மதுர கானத்தின் ஆவணத் தூண் நீங்கள்.
வணக்கம் ராஜேஷ்ஜி
வணக்கம் கிருஷ்ணா! கண்ணா! முகுந்தா! கோ.... வேண்டாம்.
எஸ்வி சார்
முக்கனிகள் மா, பலா,வாழை (மக்கள் திலகம்,நடிகர் திலகம்,காதல் மன்னன்) ஆவண புகைப்படம் அருமை
யாரவது நடிகர் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் இருந்தால் மன்னிக்கவும். இந்த பதிவு யாரையும் காயபடுதுவதர்க்காக போடப்படும் பதிவு அல்ல.அன்றைய ,இன்றைய நடிகர்களின் நிலைபாட்டை தெரிவிக்கவே
தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட நடிகர் விக்ரம் வரவில்லை என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைஞானம். இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி. இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!).
இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:
சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து... இறந்தும் விட்டார். திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார். "விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி 'தந்துவிட்டேன் என்னை' படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி... பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க... அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' என வேதனைப்பட்டார்.
"ராஜேந்திரன் சார்... ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க... அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்''
என அவரை ஆசுவாசப்படுத்தினேன். -இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.