https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...ddccc93837d493
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Printable View
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...ddccc93837d493
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
கோவை கமிஷனர் திரு விஸ்வநாதன்அவர்களின் பாராட்டு
http://i1065.photobucket.com/albums/...ps1karorij.jpg
சிவாஜி என்னும் சிங்கத்தை சீன்டாதே
இன்றைய புதுப்படங்களே திரையரங்கில் ஆளில்லாமல் காத்து வாங்கிகொண்டிருக்கும் வேளையில் எங்கள் இதய தெய்வத்தின் கர்ணன் மறு வெளியீட்டில் தமிழகமெங்கும் வசூலை வாரிக்குவித்து 10 கோடிக்கு மேல் லாபம் பெற்று இன்றைய தலைமுறையின் மகுடம் சூட்டப்பட்டவர் சிவாஜி.. புதுப்படங்களின் ஷீல்டு இருக்கிறதோ இல்லையோ எங்கள் நடிகர்த்திலகததின் மருவெளியீட்டு கர்ணன் 25 நாள் 50 நாள் 100நாள் ஷீல்டு அனைத்து ஏசி தியேட்டர்களை அலங்கரித்து கொண்டிருக்கிறது.
உலகிலேயே எந்த ஒரு நடிகரும் செய்யாத சாதனையாக தான் நடித்த இரண்டு படங்களை துணிச்சலாக ஒரே நாளில் வெளியிட்டு இரண்டு படங்களும் இரண்டு முறை தமிழகமெங்கும் 100 நாட்களை கண்டது மறத்தமிழன் சிவாஜி மட்டுமே.
வருடத்திற்கு ஒரு படம் கூட ெளியிடதைரியமில்லாத நடிகர்கள் மத்தியில் தன நடிப்பின் மீது அசுர நம்பிக்கை வைத்து வருடத்திற்கு பத்திற்கும் மேல் படங்களை துநிச்சலாக வெளியிட்டு பாரதிராஜா போன்ற இயக்குனர்கள் தான் இயக்கிய அனைத்து படங்களில் எங்கள் தலைவன் நடித்த முதல் மரியாதையே அதிக 50 நாள் 100 நாட்கள் கண்டதை சரித்திரம் மறக்காது.
தலை முறைகள் தாண்டி கடும் போட்டியில் தீபாவளி ரேசில் இயக்குனர் தயாரிப்பாளர் பலமின்றி வெள்ளை ரோஜா வெற்றி ராஜாவாகி அதிக 100 நாட்கள் கண்டு தீபவளிய தனதாக்கி உலக சாதனை படைத்தவர எங்கள் சிவாஜி.
உலகிலேயே தான் நடித்த வேடங்களை பற்றியோ மேக்கப் போடுவதை பற்றியோ பில்டப் கொடுக்காமல் படம் வந்த பிறகு மக்களின் பாராட்டை பெற்றவர் எங்கள் சிவாஜி. அதற்கு உதாரணம் எஸ்பி சௌத்ரி, பிரஸ்டிஜ் பத்மநாபன், கட்டபொம்மன், கர்ணன் கப்பலோட்டிய தமிழன் பாரிஸ்டர் ரஜினிகாந்த் ,அப்பர், ராஜராஜ சோழன் இன்னும் எத்தனையோ - தமிழ் சமுதாயத்தை புரட்டி போட்டவர் எங்கள் சிவாஜி
இருக்கும் போதே மக்கள் மறந்த நடிகர்கள் இருக்கும் திரையுலகில் இறந்தும் திரையுலகை வாழ வைத்து கொண்டிருக்கும் எங்கள் சிவாஜி யாழ் தமிழ் வாழும் - தமிழன் வாழ்வான்
இன்னும் 50 ஆண்டுகள் கழித்து சிவாஜி படம் ஓடும் - சிவாஜி ரசிகர்கள் இருப்பார்கள்
ஆனால் நீங்கள் ????????????????????????
,
கமல் 1980 இல் குங்குமத்தில் சொன்னது." உலக அளவிலேயே ஒரு உன்னத நடிகன் ,ஸ்டார் ஆகவும் இருந்த அதிசயம் நடிகர்திலகம் ஒருவராலேயே நிகழ்த்த பட்டது. அவர் விரலை சொடுக்கினால் திரிசூலம் போன்ற படங்கள் பண்ணி பிளாக் பஸ்டர் ஆக்குவார்.எங்கள் யாராலும் அது போன்று கனவும் காண முடியாது என்று."
கீழ்கண்ட படங்களுக்கு சரியான பதிவுகள் யாராலும் இடப்படவில்லை என்று நானும் முரளியும் பேசி கொண்டிருக்கும் போது புலன் ஆனது.
1)பராசக்தி.
2)தூக்கு தூக்கி .
3)பாகபிரிவினை .
4)பாலும் பழமும்.
5)நவராத்திரி.
வாசுவுடன் உரையாடும் போது திரும்ப திரும்ப பேச பட்ட படங்கள் தவிர்த்த மற்ற சில பேச படாத படங்களில் பங்களிப்பு வேண்டினார். உ .ம் -எதிரொலி போன்ற படங்கள்.முரளியும், வாசுவும்,ராகவேந்தரும் நிறைய செய்துள்ளனர். ஆனாலும் முயல்கிறேன்.
நேரமின்மை,தூக்கமின்மை, மாற்றம் , மோசமான வியாபார நிலை என்னை துரத்தி ,துன்புறுத்தி கொண்டுள்ளது. குடும்பத்தின் ஏற்றமான நிலையே ஒரே சந்தோசம்.
கூடிய விரைவில் முரளி,வாசுவின் ஆசைகளை பூர்த்தி செய்ய முயல்வேன்.
http://i.ytimg.com/vi/a63IlNFGip8/hqdefault.jpg
உள்ளாடை காட்டி உலகப் புகழ் பெற்றவரல்ல சிவாஜி.பாலுணர்ச்சி தூண்டி பாவையரை இதழ் முத்தமிட்டு பார்ப்பவரை கெடுத்தவரல்ல சிவாஜி. முகத்தில் சேறு போல் மேக்கப் போட்டு நடிக்க முடியாமல் ஏமாற்றத் தெரிந்த நாயகன் அல்ல.சிவாஜி. தன உன்னத நடிப்பால் நம்முள் இறங்கி காட்டியவர் சிவாஜி. வெத்து வெட்டு வேஷதாரிகளின் 'மாஸ்க்' வேஷம் கலைத்து உண்மையான கலைஞனின் உன்னதத்தை உணர்த்துவோம். ஏதோ ஒன்று எல்லாவற்றிலும் வாய் வைப்பது போல எல்லாவற்றிலும் வாய் வைத்து நானும் ரவுடி என்று எப்போதும் காட்டி, அதை வெட்டி இதை ஒட்டி பெருமை தேடி கொண்ட நடிகரல்ல சிவாஜி. சிவாஜியின் பாதணிக்குக் கீழ்தான் எவனுமே. ஆணானப்பட்ட மார்லன் பிராண்டோவே பாதம் பணிந்தான். நீங்கள் எல்லாம் எந்தமூலைக்கு? எங்கள் உத்தமபுத்திரனை எந்த வில்லனும் ஒன்றும் பிடுங்க முடியாது. அவர் கால் கழுவிக் குடித்தால் கூட உங்களுக்கெல்லாம் நடிப்பு வராது. மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் நசுக்குவோம்.மேலே எங்கள் உத்தம புத்திரன், நடிப்பு வில்லன் சிவாஜி நிற்கும் ஸ்டைலைப் பாருங்கள் கூன் முதுகுக் கார்களே! இந்த ஒரு போஸுக்கு பதில் சொல்ல முடியுமா உன்னால்.
அடியும் முடியும் இன்றுவரை கண்டிட இயலாத தெய்வீக விஸ்வரூப சாதனை நாயகன் நடிகர்திலகம் !
திரு கமலஹாசன் அவர்களே கூறியது போல தமிழ் 'திரையுலக வரலாறு சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என்றே எழுதப் படும். அவர் நாற்காலியில் அமரும் அருகதை என்றும் யாருக்கும் கிடையாது'. பின் எங்கிருந்து வந்தது இந்த ஒப்பீடு ?!
வந்த வழி மறக்காமல் இருப்பது எந்தவொரு கலைஞனின் புகழார்வ ரசிகருக்கும் பொருந்தும்
நினைத்தாலே கசக்கும் 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லாத' மீள் வெளியீட்டு மதிப்பில்லாத படங்களுடன் ஒப்பிடும் போது கர்ணன் திரைப்படம் வாயிலாக அமரத்துவம் அடைந்த பின்னும் தனது காலங்களை வென்ற திரைப்படங்களின் மறு வெளியீட்டு மதிப்பு என்னவென்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக பசுமரத்தாணியாக நிரூபித்து 'நினைத்தாலே இனிக்க' வைத்தவர் நடிகர்திலகம் !!
அமரர் காதல் மன்னர் ஜெமினிகணேசனால் அறிமுக 'குழந்தை நட்சத்திரமாக' திரை வாழ்வு / 'காதல் இளவரசராக' மறுவாழ்வு கண்டபோதும் நாம் பிறந்த மண்ணின் மீது சத்யமாக தன்னை ஒரு சிவாஜி ரசிகராகவே அடையாளப் படுத்திக் கொண்டு நடிகர் திலகத்தால் ஒரு தேவமகன் ஸ்தானத்தில் பெருமைப் படுத்தப் பட்டவர் நம்மவர் கமலஹாசன் !
விந்தையான வேந்தன்/உத்தம புத்திரன் சிவாஜி ரசிகனின் ரசிகர்கள் உ(ன்ம)த்த(ம) வில்லன்களாக கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிவது.........தெய்வீக விஸ்வரூபத்தை அண்ணாந்து பார்த்து ஆகாயம் நோக்கி உமிழ்வது ........விந்தையிலும் விந்தையே!!!
Quote:
பழுத்த மரம் கல்லடி படுவது இயற்கையே .....பறித்துண்ண நேர்வழிகள் இருப்பினும்!!