dear ravikiran. ?!
Printable View
dear ravikiran. ?!
மிக்க நன்றி சதீஷ்.
அனைத்து நடிகர் திலக ரசிகர்களுக்கும் எனது வந்தனம். என் பெயர் ராமதாஸ். ஒய்வு பெற்ற தமிழ் ஆசிரியர். எனது சொந்த ஊர் தஞ்சாவூர். தற்சமயம் கல்கத்தாவில் உறவினர்களுடன் வசித்து வருகிறேன். நான் பல ஆண்டுகளாக நடிகர் திலகம் திரியை வாசித்து மகிழ்வுற்று வருகிறேன். என்னுடைய தமிழறிவிற்கு உரம் போட்டு வித்திட்டவர் நமது அய்யா நடிகர் திலகம் அவர்கள். நான் சிவாஜி அவர்களின் நிரந்தர ரசிகன். நடிகர் திலகம் திரியின் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பையும் பல ஆண்டு காலங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறேன். குறிப்பாக ஜோ, முரளி, ராகவேந்திரன், பம்மல் சுவாமி, கார்த்திக், சாரதா, கோபால், பார்த்தசாரதி, வாசுதேவன், ராகுல்ராம் இவர்களின் எழுத்துக்கள் என்னை இங்கே ஈர்த்து இழுத்து வந்து விட்டது. இங்கிருப்பவர்கள் போல எனக்கு நிறைய விவரங்கள் தெரியாது. ஆனால் பெரும்பான்மையான நடிகர் திலகத்தின் படங்களை இன்றுவரை பார்த்து பார்த்து மகிழ்கிறேன். ஒய்வு கிடைக்கையில் நிச்சயம் நடிகர் திலகத்தின் அருமையான திறமைகளை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வேன்.
அனைவருக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
warm welcome mr ramadoss to NADIGARTHILAGAM thiri on my behalf and other stalwarts kindly share your thoughts and past eperiences every now and then and let us make this thiri a memorable one. may day greetings.
புதிய வரவான நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகனும் ,தமிழாசானும் ஆகிய, ராமதாசு அவர்களுக்கு திரியின் வந்தனம்.வருக.
Dear Shri. Ramadoss,
Hearty welcome to the glorious world of NT. Please share your thoughts on NT and enthrall all of us.
Regards,
R. Parthasarathy
நல்வரவு நல்கிய கோபால், ராமஜெயம் அய்யா, பார்த்தசாரதி அவர்களுக்கு என் உவகை கலந்த நன்றிகள்.
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் திலகத்தின் படம் அம்பிகாபதி. நம் நாயகரின் நயமிகு நற்றமிழுக்காகவே இப்படத்தை எண்ணிலடங்கா தடவைகள் நோக்கியுள்ளேன். எனக்கு என்னமோ எல்லா படங்களையும் விட சிவாஜி அவர்கள் இந்த படத்தில் அற்புத வனப்புடன் காணப்படுவார். அதிலும் குறிப்பாக இறுதிக் கட்ட காட்சியான சிந்தனை செய் மனமே பாடலில் அவர் அழகு கொப்பளிக்கும் தேஜஸுடன் அமர்ந்து ஓரக்கண்ணால் பானுமதியை கண்டவாறே பாடல் பாடும் அழகே தனிதான்.
அதிலும்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான் - கொன்றைத்
தளிர்மாலை மலர் மாலை ஜெபமாலையுடன் சந்தத்
தமிழ்மாலை தனைச் சூடுவான்
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
தாபமிகு வெப்பு வாதமொடு பித்த மான பிணி மொய்த்து உடம்போடு
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
சாருமுயிர் துன்ப சாகரமுழன்று சாதனை இழந்து வருந்தாமுன்
தாளையளித்திட வேணுமெனத் துதிபாடருணைக்கிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள்மழை பொழிந்து
முத்தைத்தரு பத்தித் திருநகையென
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவிமலர் தொடுத்த
வரிகளுக்கு அவர் இடைவிடாமல் மூச்சுப் பிடித்து வாயசைக்கும் தருணத்தில் மயங்காத மனமும் உண்டா? இந்தக் காட்சியின் போது அரங்குகளில் பொது மக்களால் நடிகர் திலகத்தின் திறமைக்குக் கிடைத்த கைக்கொட்டல்கள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இப்பாடலில் நடிகர் திலகத்தின் பேரழகை நோக்கும் போதெல்லாம் என் கண்கள் குளமாகி விடுவது என்னால் தவிர்க்க இயலாததாகிறது.
'என்ன தவம் செய்தனை யசோதா' பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. இந்த அம்பிகாபதியைப் பெற நாம் என்ன தவம்தான் செய்தோமோ!
தவறுகள் ஏதாவது இருப்பின் அன்பர்கள் பொறுத்தருள்வீர்.
Dear ram dos sir
warm welcome to this great nadigar thilagam thread
c. Ramachandran, trichy
[QUOTE=Gopal,S.;1129821]மிக மிக விரும்பி சுவைத்த சிவாஜி பட காதல் பாடல் காட்சிகள் .
மயக்கம் என்ன - வசந்த மாளிகை
ஒரு தரம் ஒரே தரம்- சுமதி என் சுந்தரி
மடி மீது தலை வைத்து- அன்னை இல்லம்
DEAR GOPAL SIR
SIMPLY SUPERB COLLECTION OF NT'S LOVE SONGS GREAT
C. RAMACHANDRAN.
There is a difference between spontaneous Hit and Paid Hit. There were pressure not to run the
Karnan movie upto 175 days inspite of house full shows till 150 days. It is not the case with otherone.