Quote:
நேற்றுதான் (5/12/2014)நேரம் கிடைத்து காவியத் தலைவன் பார்த்தேன். ஒரு intense period drama என்ற வகையில் மிக ரசனைக்குரியது.நடிகர்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது. ஜெய மோகன்- வசந்த பாலன் கூட்டணியில் இன்னுமோர் நல்ல படம்.
இருங்கள் ,இருங்கள் . நான் சொல்ல வந்ததே வேறு.
இத்தனை பண்ணியவர்கள் இதயத்தை கோட் ஸ்டாண்டில் வைத்து techno -music பண்ணி கொண்டிருக்கும் திலிப் என்கிற ரகுமான் என்ற robot இடமா அதனை ஒப்படைப்பது? கே.வீ.மகாதேவன் போன்ற மேதைகள் உயிரோடு இல்லையென்றாலும், பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இதய சுத்தியுடன் , படத்தில் ஆன்மா அறிந்து இசையமைக்கும் இளைய ராஜாவை எப்படி மறந்தார்கள்? இளைய ராஜாவை வைத்து, பழைய கால இசை கருவிகளையே உபயோகித்தோ,அல்லது ஹே ராம் போல புதுமையுடன் ஜீவன் கெடாமலும் பண்ணியிருக்கலாமே? இந்த படம் பார்க்கும் மனநிலையுடன் வரும் பண்பட்ட ரசிகர்கள், ரகுமானின் கன்றாவி இசை கேட்கவா வருவார்கள்?
இவரின் மிக பெரிய ரசிகன் என்ற விதத்தில் ,இவர் சமீப பத்து வருடங்களாக என்னை ரொம்பவே சோதிக்கிறார் ரகுமான். இப்படி involvement இல்லாமல், ஏனோதானோ பின்னணி இசை, பாடல்கள் நான் கேட்டதே இல்லை. இந்த படத்தை இசையே இல்லாமல் எடுத்திருந்தால் கூட ,இதை விட சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இளைய ராஜாவின் ஆத்மார்த்த இசை, அவதாரம் அளவிற்கு படத்தை கொண்டு சென்றிருக்கும். அருமையான ஒரு படத்தை ,ஆத்மார்த்தமாக ரசிக்கும் அனுபவத்தை கெடுத்த ரகுமானை, வசந்தபாலன்,பாலா,செல்வராகவன்,மிஸ்கின் போன்ற நல்ல இயக்குனர்கள் நாடாமல் இருப்பது நல்லது.
அந்த மொக்கை படத்தை ரஹ்மான் இசை இல்லாமல் சகித்திருக்க முடியாது. அவதாரம் படம் நல்ல இசை, படம் படு மொக்கை. இவை எல்லாம் இவருக்கு நல்ல படங்களாம், செல்வராகவன் நல்ல இயக்குனராம்:banghead: மிஸ்கின், பாலா போன்றவர்கள் பாதிக்கு மேல் காப்பி. வசந்தபாலன் சற்று பரவாயில்லை. இவருக்கே இவ்வளவு தெரிந்திருக்கும் போது வசந்தபாலனுக்கு தனது படத்திற்கு என்ன தேவை என்பது தெரியாமலா இருந்திருக்கும். இத்தனைக்கும் இந்தியில் மார்க்கெட் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால் ரஹ்மான் தான் வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதுமில்லை. அப்படியும் ரஹ்மானை இசையமைக்க கேட்டார்கள் என்றால்... ஒரு வேளை கோபால் இந்த படத்தை தயாரித்திருந்தால் சூப்பர் ஹிட் ஆக்கியிருப்பாரோ?