இந்த பாட்டு ஒன்றே போதும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை கூற.
http://youtu.be/-oD7J1WRwVU
Printable View
இந்த பாட்டு ஒன்றே போதும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை கூற.
http://youtu.be/-oD7J1WRwVU
தயவு செய்து எல்லோரையும் ஒரே தராசில் எடை போட வேண்டாம். தமிழ் நாட்டில் அனைவரும் ஒருவர் புண்ணியத்தில் மட்டும் வாழவில்லை. நானோ ,என் உறவினர்களோ, போதும் ,போதும் சொல்லும் அளவு பொருள் ,நியாயமான வழிகளிலே, எங்கள் படிப்பு,அறிவு,திறமையினால் கிடைத்தே வந்தது.
இதையே வேறு விதமாகவும் சொல்லலாமே. ஆதாயம் கிடைத்தவர்கள் மட்டுமே, மிகையாக புகழ்ந்து பயன் பெற்றார்கள் என்று.
நடிக்கும் போது கைதட்டல் வாங்கலாம்.நடையின் போது கைதட்டல் வாங்கலாம். ஒரு போஸ் கொடுத்து கைதட்டல் வாங்கும் ஒரே நடிகன் உலகத்திலே உன்று என்றால் அது கலை கடவுள் நடிகர் திலகம் மட்டும் தான். உதாரணம் புதிய பறவை படத்தில் வரும் சிட்டு குருவி முத்தம் என்ற பாட்டில் ஒரு புல் சூட் கோட் போட்டு கொண்டு
அமர்க்களமாக சிறு குன்றின் மேல் நிற்கும் அந்த
அற்புதமான போஸே தான்.
எந்த கல்நெஞ்சத்தையும் தன்னுடைய நடிப்பால்
கரையவித்த ஒரே உலக நடிகன் நடிகர் திலகம்
மட்டும் தான். உதாரணம் படிக்காத மேதை படத்தில் வரும் அந்த உணர்ச்சிமிகு காட்சியான
கண்ணாம்பாvai விதவை கோலத்தில் பார்க்கும் அந்த கட்சி ஒன்றே போதும் நடிகர் திலகத்தை நாம் ஏன் கலை கடவுள் என்று கூறுகிறோம். இந்த காட்சியை பார்க்கும் அனைவரையும் அழ
வைக்கும் ஒரே உலக நடிகன் நடிகர்திலகம் மட்டும் தான்.
என் உள்ளம் கவர்ந்த கண்ணன்
-------------------------------------------------
இந்த பெயரில் எனக்கு தெரிந்த படத்தில் இருந்து எனக்கு பிடித்த கன்னணனை பற்றி சில
வரிகள் கூற விருப்ப படுகின்றேன்.
தெய்வமகன் கண்ணன்
-------------------------------------
நடிப்பில் நம்மை ஆட்கொண்ட அற்புத கண்ணன்.
கௌரவம் கண்ணன்
---------------------------------
பாரிஸ்terin விஸ்வருபம் முன்பு அடக்கி வாசித்த கண்ணன்.
எனக்கு பிடித்த அழகிய என் தம்பி கண்ணன்
---------------------------------------------------------------------
முதல் காட்சியில் இருந்து தொடங்கி முடிவு வரை தன் அற்புத நடிப்பில், அழகிய வடிவத்தில்
நிஜமாகவே பிரம்ம்ஹா நண்பர் கோபால் கூறுவது போல் ஒரு திராவிட மன்மதன் ஆக
படைத்து சில நாட்கள் அல்லது வருடங்கள் எடுத்து நடிகர் திலகத்தை படைத்தது விட்டார்.
அதுவும் எந்த படத்தில் எல்லா காட்சிகளிலும்
தூள் கிளப்பி விட்டார் நம் நடிகர் திலகம்.
ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் ஸ்டைல் போஸே என்ன அந்த வாள் போஸ் enna ஆகா இவரல்லவோ பிறவி நடிகன் மற்றவரெல்லாம் ?
பேபி ரோஜாரமனியிடம் காட்டும் பாசமாகட்டும்
தம்பி விஸ்வதிடம் கட்டும் அதட்டல் கலந்த
நடிப்பாகட்டும் தம்பியிடம் தோற்பது போல் நடித்து பின்பு பாடம் புகட்டும் போதும் ஒரே அதகளம் தான்.
நாகேஷிடம் தெரிய வேண்டிய விஷயங்களை தெரிந்து கொண்டு பின் அந்த வீட்டில் அடி வைக்கும் நடிகர் திலகத்தின் போஸே காண கண் கோடி வேண்டும்.
இந்த ஒரு காட்சிக்காகve எனக்கு இந்த கண்ணனை பிடிக்கும்.
சில வாக்கு வாதங்களால் தேவையற்ற செய்திகளையும் தேவையற்ற பதிவுகளையும் படிக்க பிடிக்காத விவரங்களையும் படங்களையும் இந்த கண்கள் பார்க்க விரும்பவில்லை. சிவாஜி என்ற அற்புத கலைஞனுக்காக தொடங்கப்பட்ட திரியில் தரம் குறையும் அளவுக்கு
பதிவுகள் வராமல் இருக்க வீண் விவாதம் தவிர்க்கப்பட வேண்டும்.
இல்லையேல் சிவாஜி என்ற உலகப்புகழ் தமிழனின் செய்திகள் மட்டும் வரும் வரை திரியை பார்க்க விரும்பாத என்னைப்போன்ற பல ரசிகர்கள்
I WAS ABOUT TO SAY THAT !!!! YOU STOLE MY WORDS GOPAL SIR !!
இது சர்வ சாதாரணமாக காலம் காலமாக நடப்பது தான் !
என்ன நடிகர் திலகம் அவர்கள் இதை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்து REACT செய்யாமல் தொடர்ந்து தொழிலில் கவனம் செலுத்தியதால்...அடுத்தவர் எத்தனை நூற்றாண்டு ஆனாலும், இவரை பார்த்து இவரது திரை உலக சாதனையை பார்த்து காலம் காலமாக பொருமுகின்ற அளவிற்கு உச்சத்தில் நின்றார், நிற்கிறார், நிர்ப்பார் .
நமக்கு ஆதாரத்துடன் கிடைக்கும் உண்மை நிகழ்வுகள் பதிவிட்டால் எப்போதுமே ஒரு சிலர் பொய் என்று கூறுவார்கள்...ஆனால் அதே ஒரு சிலர்....ஆதாரமே இல்லாமால் வாயால் அவர்கள் கூறினார்கள் ...இவர்கள் கூறினார்கள் ....உலகம் கூறுகிறது.....அப்படி இப்படி என்று கூறுவதை நாம் "ஹரிச்சந்திரன் கூற்று" போல அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும் !!!
1967 முன்பு வரை தமிழ்நாட்டில்அனைத்து மக்களும் பிச்சை காரர்களாக இருந்ததும் இல்லை.....
1967 உக்கு பிறகு இன்று வரை யாரும் குபேரர்களாகவும் மாறிவிடவில்லை என்பதை ஒரு சிலர் உணரவேண்டும் !
எதுவாகினும், நான் சில விஷயங்களை படித்து பதில் பதிவிடவேண்டும் என்றிருந்தேன்...நீங்களே அதில் ஒன்றை எழுதிவிடீர்கள்...! Thanks !!!
RKS !!
பார்த்ததில் பிடித்தது - 47
முக்தா ஸ்ரீனிவாசன் மற்றும் நடிகர் திலகம் combination ல் வந்த வெற்றி படம் .1978 வருடத்தை வெற்றியுடன் தொடங்கினார் என்றே சொல்லலாம் , இன்னும் சொல்லப்போனால் அண்ணன் ஒரு கோவில் என்ற வெற்றி படத்தை தொடர்ந்து வந்த வெற்றி படம் இது . வழக்கமான முக்தா ஸ்ரீநிவாசன் படம் போல் இல்லாமல் , அதாவது கதாநாயகன் அல்லது கதாநாயகிக்கு எந்த வித நோயும் இல்லை , மாறாக ஒரு வித்தியாசமான குடும்ப கதையை கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்
தன் காதலிக்கு உடம்பு சரி இல்லாமல் போக , மருத்துவரை அழைக்க போகிறார் பிரபு (சிவாஜி ) அவரை அவமான படுத்தி விடுகிறார் மருத்துவர் , கோபத்தில் மருத்துவரை தாக்க , மருத்துவர் இறந்து விட்டதாக நினைத்து சென்னைக்கு தப்பி ஓடி விடுகிறார்
காலம் சுழல மீண்டும் அந்தமானுக்கு வருகிறார் பிரபு , தன் வளர்ப்பு மகள் ஒரு சிற்பியை காதலிக்க , அந்த சிற்பி அவர் மகன் என்று அறிந்து கொள்ளுகிறார் , சிற்பியும் (அவர் மாமாவும்) தன் தந்தையை கண்டுபிடித்து தண்டனை கொடுத்து விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லுகிறார்
தன் மனைவியும் தேடி கண்டுபிடிக்கிறார் பிரபு , அவரிடம் தன் கணவர் யார் என்று தன் மகனிடம் , தன் அண்ணனிடமும் கூற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ,மனைவி அதற்கு மறுக்கிறார்
முடிவு என்ன என்பது தான் பரபரப்பான கிளைமாக்ஸ்
இந்த படம் சிவாஜி அவர்களின் மாறுபட்ட நடிப்பை காட்டி உள்ளது என்றே சொல்ல வேண்டும் , படத்தின் flashback காட்சிகளில் இளைஞர் , கதை தற்போது நடக்கும் சுழலில் வயதானவர் , அதே போல் இப்போது தல அஜித் மங்காதாவில் சொல்லுவது போல் money money தான் இவருக்கு பிரதானம்
பணத்தினால் எதையும் விலைக்கு வாங்கி விடுகிறார் , தன்னிடம் வேலை பார்க்கும் நபரின் பிரச்னையை தீர்த்து விடுகிறார் , புது ஜோடிக்கு கல்யாணம் செய்து விட்டு , அவருக்கு அறிவுரை கூறும் காட்சி எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று
தன்னை அவமான படுத்திய மருத்துவரை பணக்கார பிரபுவாக சந்திக்கும் பொது அவர் முகத்தில் தெரியும் வெறி ,கோபம் நம்மளுக்கும் தொற்றி கொள்ளுகிறது , தவறுக்காக அந்த மருத்துவர் மனிப்பு கேட்ட உடன் மனித்து விடுவது - நிஜ வாழ்வில் சிவாஜி அவர்களின் குணம்
தன் மனைவியை தேடி அலையும் காட்சிகளில் நம்மளையும் அசராடிகிறார். பல வருடங்களாக தன் மனைவியை பிரிந்து , பிறகு அவரை சந்திக்கும் பொது melo dramatic ஆக இல்லாமல் கொஞ்சம் அழுகை , பிறகு பரஸ்பரம் விசாரிப்பு ,பிறகு சிரிப்பு என்று வித்தியாசமாக காட்சி அமைத்து இருக்கிறார்கள் அதில் நம்மவரின் நடிப்பு எதார்த்தம் .
சுஜாதா அந்தமான் தீவின் tribal girl பாத்திரத்தில் நன்றாக இருக்கிறார் , அதை விட வயதான பாத்திரத்தில் மிகவும் பொருந்தி இருக்கிறார் ,
SHE HAS GROWN OLD WITH DIVINE LOOK . அதுவும் காதலர்களாக இருந்த பொது ஏழை வீட்டில் கோழி குழம்பு என்றால் ஒன்னு கோழிக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் இல்லை , ஏழைக்கு உடம்பு சரி இல்லை என்று அர்த்தம் . வெகு நாட்களுக்கு பிறகு தன் மனைவி கையால் சாப்பிடும் பாகியம் கிடைத்து தன் முதலாளி விசுவாசம் காரணம் காட்டுவதும் , அதை மனைவி புரிந்து கொள்வதும் கவிதை
தன் மகன் தன் வளர்ப்பு மகளை கல்யாணம் செய்து கொள்ள கேட்கும் சீதனமாக கேட்பது தன் உயிர் என்பதை அறிந்து அவர் காட்டும் புன்முறுவல் priceless , சிவாஜியின் முயற்சிகளை சுஜாதா முறியடிக்கும் காட்சிகள் திரைகதையின் பலம்
தன் மனைவி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பணம் கேட்டு வரும் பொது இவர் குஷியாக பணத்தை தருவதும் , பிறகு பணம் காசு முக்கியம் கிடையாது அன்பு பாசம் தான் முக்கியம் என்று புரியவைக்கும் பொது , பணத்தால் இவர் அபிஷேகம் செய்யும் காட்சியும் , அதை தொடர்ந்து வரும் பாடலும் நான் ரசித்த காட்சிகளில் ஒன்று .
படத்தில் நான் ரசித்த இன்னும் சில விஷயங்கள் கேமரா , வெளிப்புற காட்சிகள் , சிவாஜி அவர்களின் எதார்த்தமான make up , ஸ்டைல் , டிரஸ் , இந்த படத்தில் அவர் உடை அவர் வயதை அழகாக compliment செய்தது என்றே சொல்ல வேண்டும்
சந்திரமோகன் , கவிதா நடிப்பு சுமார் . தேங்காய் ஸ்ரீநிவாசன் , மனோரமாவின் நகைச்சுவை படத்துக்கு வேகத்தடை .
பாடல்கள் என்றும் கேட்கலாம்
படத்தை பற்றி மிகவும் சுமாராக தான் எழுதி உள்ளேன் , காரணம் படத்தை மிகவும் ஆர்வத்துடன் பார்த்தேன் , எதை எழுதுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ,அதனால் அனைத்தையும் விவரிக்கிறேன் பேர்வழி என்று மீண்டும் சொர்க்கம் படத்துக்கு எழுதி சொதப்பியது போல் செய்ய வேண்டாம் என்ற எச்சரிக்கை தான்
நமது வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகள் பல...
அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது சில......
சரஸ்வதி பூஜைக்கு
http://www.youtube.com/watch?v=UTBqjfjR7OM
அந்த கால கட்டத்தில் சிவாஜி சுஜாதா நடித்த மூன்று திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. அதே போல் சிவகுமார் ஸ்ரீதேவி நடித்த மூன்று படங்கள் தோல்வி அடைந்தது.