Originally Posted by
chinnakkannan
//3. "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ"
இங்க நம்ம கவியரசர் // கவியரசர்னு நீங்க கண்ணதாசனைச் சொல்றீங்கன்னு நினைக்கேன்.. யூ ஆர் ராங்க் யுவர் ஆனர்.. பாடல் எழுதியவர் வாலி ஐயா.. (ராஜேஷ் வந்தா அடிப்பார்..)
//நீரலைகள் இடம் மாறி நீந்துர குழலோ-ன்னு சொல்றப்ப எனக்கு கொஞ்சம் புரியலைங்களே. நீங்க ஒரு தடவை கேட்டுட்டு சொல்லுங்களேன்.// அதாகப் பட்டது தலைவன் தலைவியை நினைந்து ஏக்கத்துடன் தண்ணீரைப்பார்க்கிறான் (இங்கே கடலோ பேங்க்காக் பேக் வாட்டர் என்று நினைக்கறேன்) அவள் முகம் அங்கே நிழலாடுகிறது.. கூடவே மெல்லிய காற்று நீரில் அடிக்க அவள் கூந்தல் கலைந்தாடுவது போல் பிரமை.. நிமிர்ந்தால் தலைவியே நேரில்..ஓஓடி வருகிறாள்..அவள் கூந்தலும்படபடக்கிறது..அலையலையா.ய் நீரலைகள் நீரில் தானே இருக்கும் இந்த என் கண்ணாட்டியின் கூந்தலில் இருக்கிறதே என்று ஆச்சர்யப் பட்டுப் பாடுவதாக அமைந்திருக்கிறது எனலாம்..
ஹூம்..இந்தப் பாட்டுல ரசிக்க எவ்வளவோ இடம் இருக்கு..அதாவது புரிஞ்சுதா.. :) ம்ம் நடத்துங்க நடத்துங்க..