Originally Posted by
g94127302
சமீபத்தில் என் தாயும் இறைவனடி சேர்ந்தவள் . ஒரு நாளில் 100 தடவையாவது என் பெயரை சொல்லிக்கொண்டிருப்பாள் - தேவை ஒன்றும் இருக்காது - ஆனால் கண்டிப்பாக அதில் பாசம் இருக்கும் - கண்டிப்பு இருக்காது - கருணை இருக்கும் ; காரணம் இருக்காது ஆனால் அதில் ஒரு பூரிப்பு இருக்கும் - அவளின் கடைசி நாட்களில் - க்ளுக்கோமா என்ற கண் சம்பந்த பட்ட வியாதியில் , பார்வைகளை தொலைத்து விட்டாள் - ஆனால் அவள் தொலைக்க விரும்பாதது என் மீது வைத்திருக்கும் பாசம் - சொன்னார்கள் அவள் 10 மாதம் என்னை சுமந்தவள் என்று - அது தவறு ! இறுதி மூச்சு உள்ளவரை என்னை சுமந்து கொண்டுதான் இருந்தாள் -- அவள் உடம்பைக் கூட , நெருப்பு மிகவும் மரியாதையுடன் தான் நெருங்கியது ...
No one in this world can take mom’s place, not even God.