-
MGR filmography Film 27 (1952) Poster
"என் தங்கை", அண்ணன், தங்கை சென்டிமென்டில் வந்த முதல் வெற்றி படம்.
பெரும் உணர்ச்சிப் பிரவாகமாக அமைந்த எம்ஜியாரின் அடுத்த சோஷியல் படம் . கண்பார்வை இழந்த தங்கை (ஈ.வி.சரோஜா), அவளது சடலத்தைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு தானும் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் கதாநாயகனாக எம்ஜியார்! எம்ஜியார் தற்கொலை செய்து கொள்வதைப் போல நடித்த இரண்டே படங்களில் இது ஒன்று; மற்றொன்று: போரில் தான் கொன்றது தன் சகோதரன் என்று அறிந்து வாளை மேலே தூக்கிப் போட்டு அதற்குத் தானே இரையாகும் ராஜாதேசிங்கு!
எம்ஜியார் இறந்தால் படம் ஓடாது என்ற செண்டிமெண்ட் இன்னும் உருவாகாகதால், இந்தப் படம் ஹிட்டானது. இதைப் பற்றி ராண்டார் கை சொல்கிறார்: 'Remembered for its emotion drenched storyline and MGR’s role as a loving brother, considered by critics as one of his best performances ever.'
சிலோனில் ஏறத்தாழ ஒரு வருடம் ஓடியதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியம்: முதலில் இதில் நடிக்கத்துவங்கியவர், பாடகர் திருச்சி லோகநாதனாம். ஒரு ஷெட்யூல் முடிந்தபின்னர் அவர் பாடகர்தான், நடிகரல்ல (ஜி.என்.பி. அல்லது பிற்காலத்திய டி.என்.சேஷகோபாலன் போல!) என்று படக்குழுவினருக்குத் தெளிவு ஏற்பட, அவர் விலக்கப்பட்டு எம்ஜியார் ஒப்பந்தமானார். இந்தப் படத்தோடு எம்ஜியாருக்கு ஒரு பர்சனல் ஈக்வேஷனும் உண்டு; அவரது குழந்தைப் பருவத்தில் மருத்துவத்திற்கான வசதி இல்லாது அவரது சொந்தச் சகோதரி மாண்டு போனது, இந்தப் படத்தின் கதையோடு அவரை மிகவும் ஒன்ற வைத்ததாம்!........ Thanks...
-
MGR filmography Film 30 (1953) Poster (malayalam)
MGR filmography Film 31 (1953) Poster(tamil)"ஜெனோவா"
மீண்டும் எம்ஜியார் காஸ்ட்யூம் ட்ராமாவுக்குத் திரும்பிய இந்தப் படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் பை லிங்குவலாக எடுக்கப்பட்டு, மலையாள ரிலீஸுக்குப் பல நாட்களுகுப் பிறகு தமிழில் ரிலீசானதாம். எம்ஜியார் நடித்த ஒரே மலையாளப் படம் இது. அநேகமாக எம்ஜியார் நேரடியாக நடித்த பிறமொழிப்படமும் இதுவாகவே இருக்கலாம். அவரது படங்களில் சில தெலுங்கு இந்தியில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் அவர் அந்த மொழிகளில் நேரடியாக நடித்ததில்லை. பொதுவாக எம்ஜியார் படங்களில் மதக்குறியீடுகள் இருக்காது என்றாலும் கழுத்தில் சிலுவையணிந்து எம்ஜியார் காட்சியளிப்பார் இப்படத்தில்! ராமன் தேடிய சீதை போல சிலவற்றில் ஓரிரு காட்சிகளில் நெற்றியில் குங்குமத்தோடு தோன்றுவார்.எங்கள் தங்கம் படத்தில் பாகவதர் ரோலில் நெற்றியில் பட்டையுடனும், ஒரு தேவர் படத்தில் கான்ஸ்டபிள் கெட்டப்பில் நாமத்துடனும் வருவார்!
அவர் கிறித்துவக் கதாபாத்திரத்தில் நடித்த ஒரே படம் இதுதான். ராஜா தேசிங்கு, சிரித்து வாழ வேண்டும் போன்றவற்றில் இஸ்லாமியக் காரெக்டராகத் தோன்றியிருக்கிறார்.
இந்தப் படத்தில் எம்எஸ்வியைப் போடவேண்டாமென்று எம்ஜியார் சொல்லி, ப்ரொட்யூசர் ம்யூசிக் டைரக்டரை மாற்ற முடியாது; வேணுமானால் ஹீரோவை மாற்றுகிறேன் என்று சொன்னதாக ஒரு கதை உண்டு! ஆனால், மிக அதிகமான எம்ஜியார் படங்களுக்கு இசை அமைத்தவர் எம்எஸ்விதான்! அரசியலைப் போலவே திரையுலகிலும் கூட்டணிகளின் நோக்கம் வெற்றிதானே ஒழிய, சொந்த விருப்புவெறுப்புகள் அல்ல என்பதற்கு ஒரு உதாரணம்.
வெற்றிப் படமாக அமைந்த இதன் கதையையே 1957ஆம் வருடம் மகாதேவி என்ற பெயரில் இந்துப் பின்னணியில் தயாரித்தார்கள். அதுவும் வெற்றிப்படமாகவே அமைந்தது...... Thanks...
-
MGR filmography Film 28 (1953) Poster
"நாம்"
புதுவருடம் ஒரு சமூகப்படத்துடன் துவங்குகிறது. எம்ஜியாரை வைத்துத் தொடர்ந்து படமெடுக்கும் ஜூபிடர் பிக்சர்சுடன் இந்த முறை மேகலா பிக்சர்சும் இணைந்து தயாரிக்கிறது. கருணாநிதி குடும்பத்தினருடன் எம்ஜியார், பி.எஸ்.வீரப்பாவும் அதன் பாகஸ்தர்களாக இருந்த காலகட்டமாக இருக்கலாம். கருணாநிதியின் திரைக்கதை வசனம் பாடல்களுடன் சிதம்பரம் ஜெயராமனின் இசையில் காசிலிங்கம் இயக்கிய இந்தப் படம் வெற்றி பெறவில்லை. எம்ஜியார், ஜானகி ஆகியோரின் சிறந்த நடிப்பை விழலுக்கிரைத்த நீராக்கி, எம்ஜியார் சமூகப்படங்களுக்குத் தோதில்லை என்ற கருத்து மீண்டும் உருவாக வழிவகுக்கிறது.
அதே போல் ஏஎம் ராஜா பாடிய பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தாலும், சிஎஸ்சுக்கும் இசை அமைப்பாளராகா பெரிதும் உதவவில்லை இந்தப் படம்....... Thanks...
-
MGR filmography Film 29 (1953) Poster
"பணக்காரி"
எம்ஜியார் காலை மீண்டும் இடறி விட்ட ஒரு சோஷியல் ட்ராமா. டி.ஆர்.ராஜகுமாரியுடன் இணைந்து எம்ஜியார் நடித்த இந்தப் படத்தை எஸ்வி வெங்கட்ராமன் இசையில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார் (பணமா பாசமா கேஎஸ்ஜி அல்ல).
நல்ல தயாரிப்பு, சிறந்த நடிப்பு, இசை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், லியோ டால்ஸ்டாயின் ஆனா கரினாவைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை அக்கால முறைமைகளில் ஆன்டி செண்டிமெண்ட் ஆகி, படம் தோல்வியைத் தழுவியது.
ஒரு சுவாரசியம்: இதற்கு முன்னால் வெளியான பிச்சைக்காரி என்ற படம் வெற்றியடைந்ததால், பிச்சைக்காரி பணக்காரியானாள்; பணக்காரி பிச்சைக்காரி ஆனாள் - என்று ஜோக் அடித்தார்களாம் இந்தப்படம் பற்றி!
இந்தப் படத்தின் கதி குறித்து எம்ஜியார் வருந்தினாரா தெரியவில்லை; ஆனால், எம்ஜியார் ரசிகர்கள் வருந்த வேண்டாம் - அடுத்த படம் அவரை ஸ்டார் ஸ்டேட்டசுக்கு உயர்த்தவிருக்கிறது....... Thanks...
-
MGR film poster Film 32 (1954) Poster
"மலைக்கள்ளன்"
திரையில் தோன்றி ஒண்ணரை மாமாங்க காலத்திற்குப் பிறகு, முப்பது படங்களுக்கு மேலாக நடித்த பிறகு, எம்ஜியாரை A Star to reckon with எனும்படியான நட்சத்திர அந்தஸ்துக்கு, உயர்த்திய படம். இதன் பிறகு MGR had never to look back.
ராபின் ஹூட் போல எளியார்க்கு நல்லானான கொள்ளைக்காரன் கதையாக நாமக்கல் கவிஞர் எழுதிய கதைக்கு, தொடர்ந்து எம்ஜியாரின் தோழராகவும், அவர் படங்களுக்கு கதை வசனகர்த்தாவாகவும் இருந்து வந்த கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் வெளியானது.
படத்தின் நீளம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக என்றாலும், (அந்தக் காலகட்டத்தில் சிறிய படம் என்றாலே குறைந்தது இரண்டே முக்கால் மணி நேரம் இருக்க வேண்டும்!) விருவிருப்பான சண்டைக் காட்சிகளும், இனிமையான பாடல் காட்சிகளும் அந்த வருடத்தின் மிகப் பெரும் வெற்றிப்படமாகி எம்ஜியாரை வசூல் சக்ரவர்த்தியானார்; தன் திரையுலக வாழ்க்கை முழுதும் அந்தப் பட்டத்தை இழக்காமலேயே தொடர்ந்தார்!
இந்தப் படத்தை பஷிராஜா ஸ்ரீராமுலு நாயுடு தமிழ் (எம்ஜியார்), தெலுங்கு (என்டிஆர்) மலையாளம் (சத்யன்), கன்னடம் (கல்யாண் குமார்) இந்தி (திலீப் குமார்) சிங்களம் (சூரசேனா) ஆகிய ஆறு மொழிகளில் தயாரித்தார். அனைத்தும் வெற்றிப்படங்களாயின. இந்திப் படத்திற்கு (ஆசாத்) சி.ராமச்சந்திரா (வஞ்சிக்கோட்டை வாலிபன் இசையமைப்பாளர்) இசையமைக்க, மற்ற அனைத்திலும் எஸ்எம்எஸ் நாயுடுவே இசையமைப்பாளர். இதைப் போல ஐந்து மொழிகளில் ஒரு படத்திற்குப் பணியாற்றிய இசையமைப்பாளர் அநேகமாக அவராகவே இருக்கலாம், இன்றுவரை!
திரைப்படங்களுக்குத் தேசியவிருதுகள் வழங்கப்படத் துவங்கியதன் இரண்டாவது வருடம் வெளியான இப்படம், அந்த வருடத்தின் சிறந்த தமிழ்ப்படமாக வெளியானது. தேசிய விருது பெற்ற முதல் தமிழ்ப் படம் என்ற பெருமைக்கு உரித்தானதும் எம்ஜியாரின் படமாகவே அமைந்தது. இதைப் போல பல எம்ஜியார் படங்கள் 'முதலாவது' என்னும் பெருமையைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது...... Thanks..........
-
MGR Filmography - Film 34 (1955) Poster
"குலேபகாவலி"
கூண்டில் அடைத்து வைத்து இரு கிளிகளின் சிறகையும் வெட்டியதற்குப் பரிகாரமாக, அடுத்த வருடமே ஒரு கிளியை வானில் பறக்க விட்டு ராமண்ணா வெற்றி கண்ட படம்! ஆயிரத்தோரு அராபிய இரவுகள் கதைகளில் ஒன்றை எடுத்தார் ராமண்ணா என்றால், தமிழையே உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட இயக்கத்தைச் சார்ந்து விட்ட எம்ஜியார் உருதுமொழிச் சொல்லை தலைப்பாகக் கொண்ட படத்தில் நடித்தது ஜாலியான ஆச்சரியம்! இன்று வரை, அந்தப் படத்தின் தலைப்பை யாரும் கேள்வி கேட்டதாகக் கூடத் தெரியவில்லை.
இனிமையான பாடல்கள், அற்புதமாக அமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் என்று ஜனரஞ்சகமாக உருவாகி, 150 நாட்களைத் தாண்டி ஓடியது. அது மட்டுமன்றி, எப்போது ரீ ரன்னாக வந்தாலும் வசூலைக் குவிக்கும் எம்ஜியார் படங்களிலும் ஒன்றானது. முந்தைய படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட மயக்கும் மாலை பாடல் இதில் இடம் பெற்று எவர்க்ரீன் ஹிட்டானது.
மலைக்குகையில் காட்டுவாசிகளுடனான சண்டையில் சந்திரபாபு, ராஜகுமாரி எல்லாம் எம்ஜியார் வெளியில் வந்தவுடன் குகையை பாறையைப் போட்டுச் சாத்தி விடலாம் என்று முயன்றிருக்க, வெளியே வரும் எம்ஜியார் மீண்டும் மீண்டும் குகைக்குள் நுழைந்து வாட்போரிட, இவர்கள் தவித்திருப்பது அழகான காட்சியாக்கம். இது போல பல சுவாரசியங்களுடன், அம்மா செண்டிமெண்ட்+ உண்மையே வெல்லும் + விருவிருப்பான சண்டைக்காட்சிகள்+ இனிய இசை இத்யாதி என்று முழுமையான எம்ஜியார் ஃபார்முலாவில் உருவான படம் வெற்றியடைந்ததில் வியப்பென்ன!..... Thanks...
-
MGR filmography Film 33 Poster
"கூண்டுகிளி"
சிகரத்தை நோக்கி விரையும்போது ஒரு சின்ன சறுக்கல் புவிமாந்தர் அனைவருக்கும் பொதுவானதுதானே, புரட்சித் தலைவர் மட்டும் விதிவிலக்காகி விடமுடியுமா!
ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின்னர் எம்ஜியாருக்கு மட்டுமல்ல, தன் முதல் படத்திலேயே நட்சத்திர அந்தஸ்தைப் பெற்று விட்ட சிவாஜி கணேசனுக்கும் ஒரு சறுக்கலாகவே அமைந்து விட்ட படம் கூண்டுக்கிளி. அவரவர் பாதையில் உயரத்துவங்கி விட்ட இரு நட்சத்திரங்களும் ஒன்றாகத் தனது படத்தில் பிரகாசிக்க வேண்டும் என்ற ராமண்ணாவின் விருப்பத்துக்கு உடன்பட்டதால் வந்த வினை! சிவாஜி படமாகவும் இல்லாமல் எம்ஜியார் படமாகவும் இல்லாமல், சொல்லப் போனால் எவர் நடித்திருந்தாலும் சவசவ என்றே போயிருக்கக் கூடிய படமான அதில் அவ்விருவரும் நடித்தது அவர்கள் விதிப்பயன்தான்! இரு திலகங்களும் இணைந்து நடித்த ஒரே படம் என்பதைத் தவிர வேறேதும் பெருமையில்லாத இந்தப் படம் வந்த சுருக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.
ஒரு சுவாரசியமான தகவல் உண்டு. இந்த இரண்டு திலகங்களும் தீவிரமாக அரசியலிலும் ஈடுபட்ட பின்னர் ஒரு முறை மீண்டும் ரிலீஸ் செய்ததாகவும், அப்போது வசூல் ஓரளவு கண்டபோதும், இருவரது ரசிகர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலைக் கையாள முடியாமல் திரையரங்குகள் தாமாகவே படத்தைத் தூக்கி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இப்போது இந்தப் படம் யூட்யூபில் கிடைக்கிறது. திலகங்களின் ரசிகர்களாக இல்லாதவர்கள் பார்க்க முயற்சி செய்யலாம்; ரசிகர்களுக்கோ இன்றும் அது அயர்ச்சிதான்!
இந்தப் படத்தின் இன்னொரு சுவாரசியம்: இதற்காக கேவி மகாதேவன் இசையில் ஏ.எம்.ராஜா-ஜிக்கி குரலில் உருவான, 'மயக்கும் மாலைப் பொழுதே' பாடல் இதில் இடம் பெறவில்லை. சிலகாலம் பின்னர் ராமண்ணா எம்ஜியாரை வைத்துத் தயாரித்த அரேபிய இரவுகள் கதையில் உருவான சூப்பர் ஹிட் படமான குலேபகாவலியில் இடம் பெற்று அமரத்துவம் பெற்றுவிட்டது அப்பாடல்! ஆனால், படத்தின் டைட்டிலில் மட்டுமன்றி, இசைத் தட்டுகளிலும் கேவிஎம் பெயர் அல்லாது, குலேபகாவலிக்கு இசையமைத்த இரட்டையர் விஸ்வநாதன் ராமமூர்த்தி பெயரே இப்பாடலுக்கும் இசையமைப்பாளராகக் கொடுக்கப்பட்டு விட்டது!..... Thanks...
-
MGR Filmography Film 26 (1952) Poster
"குமாரி"
மருத நாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மர்மயோகி போன்ற வெற்றிகளுக்குப் பிறகு வெளியான இந்த காதல்&காஸ்ட்யூம் ட்ராமா வெற்றிப் படமாகவும் அமையவில்லை; எம்ஜியாரின் கெரியருக்கு எந்த வகையிலும் உதவமுமில்லை. எம்ஜியார் நாயகனாக நடித்த அவரது ஆரம்பகாலப் படங்களுள் ஒன்று என்பதைத் தாண்டி வேறு சுவாரசியங்கள் ஏதும் இது கொண்டிருந்ததாகவும் தெரியவில்லை...... Thanks.......
-
MGR filmography - Film 14 Poster (1946)
"ஸ்ரீ முருகன்"
ஹொன்னப்ப பாகவதரின் இந்தப் படத்தில் சிவபெருமான் வேடம் தாங்கியிருந்தார் எம்ஜியார். அவர் செய்த சிவதாண்டவ ஸ்டில் பின்னாளில் பாபுலரானது! முப்பதாண்டுகள் கழித்து உழைக்கும் கரங்கள் படத்தில் மீண்டும் சிவதாண்டம் ஆடினார்!...... Thanks...
-
MGR filomography - Film 15 Poster Boyjbm
"ராஜகுமாரி"
திரையில் பிரவேசித்துச் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு எம்ஜியாருக்குக் கிடைத்த கதாநாயகன் ரோல். இந்தப்படத்தில் ஒரிஜினலாக சின்னப்பா நடிக்கவிருந்து, இதற்கு முந்தைய படமான ஜூபிடர் பிக்சர்ஸின் ஸ்ரீ முருகனில் எம்ஜியாரும் கே.மாலதியும் செய்த சிவதாண்டவம் பரபரப்பாகப் பேசப்படவே டைரக்டர் ஏ.எஸ்.ஏ.சாமியின் சிபாரிசின் பேரில் அவர்களே இதில் நாயகன் நாயகி ஆயினர். அப்போது ஜூபிடர் பிக்சர்சின் மாதச் சம்பளத்தில் எம்ஜியார் இருந்தாராம்; பின்னாளில் அந்தக் கம்பெனியின் பங்குதாரராகவே அவரை ஆக்கியது காலம்! திரைக்கதை வசனத்தில் உதவி செய்தவர் - கருணாநிதி!...... Thanks...