அரசு பாடப்புத்தகங்களில் எம்ஜிஆர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை பாடமாக வைத்தால் எல்லா மாணவ மாணவிகளும் மனிதாபிமானம் , கஷ்டத்தில உதவுவது, தாய் மீது பாசம், நேர்மை , மக்கள் பணி ஆகியவற்றை கற்றாலே போதும், நல்ல மனிதனாக வாழ முடியும்...... Thanks...
Printable View
அரசு பாடப்புத்தகங்களில் எம்ஜிஆர் வாழ்வில் நிகழ்ந்தவற்றை பாடமாக வைத்தால் எல்லா மாணவ மாணவிகளும் மனிதாபிமானம் , கஷ்டத்தில உதவுவது, தாய் மீது பாசம், நேர்மை , மக்கள் பணி ஆகியவற்றை கற்றாலே போதும், நல்ல மனிதனாக வாழ முடியும்...... Thanks...
இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் 'தேவதாஸ்’ படத்தின் இசைக் கோர்ப்பை முடிக்கும் முன்னரே இறந்துவிட, மீதி இருந்த இரண்டு பாடல்களையும் அவருடைய பிரதான உதவியாளர்களான விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும்தான் முடித்துக்கொடுத்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கே., இவர்கள் இருவரையும் இணைத்து 'விஸ்வநாதன்- ராமமூர்த்தி’ எனப் பெயர் போட்டு தான் தயாரித்த 'பணம்’ படத்துக்கு இசையமைக்க வாய்ப்பு தந்தார். இசைக் குழு நண்பர்களான இருவரும் 'மெலடி பார்ட்னர்கள்’ ஆனது இப்படித்தான். ஒருகட்டத்துக்குப் பின்னர் ராமமூர்த்தி விலகிக்கொள்ள, அதன் பிறகு தமிழ்த் திரையிசையின் மன்னர், மந்திரி, தளபதி, பட்டாளம்... என அனைத்துமாக விஸ்வரூபம் எடுத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
எம்.எஸ்.வி-யுடன் இசைபடப் பயணித்த புலவர் புலமைப்பித்தன், அவரை 'குழந்தை’ என்றே சொல்கிறார்...
''உலக விஷயங்கள் எது பற்றியும் கவலைப்படாத, இசை உலகம் மட்டுமே தெரிந்த மனிதர் அவர். 'காமராஜர் திரும்ப வந்துட்டார்’ என யாராவது சொன்னால், 'அப்படியா... எப்ப வந்தார்?’ என எட்டிப்பார்த்து விசாரிக்கும் அளவுக்கு வேட்டி கட்டிய வெள்ளந்திப் பிள்ளை. வீட்டில் இருந்து காலை 7 மணிக்கு ரிக்கார்டிங் தியேட்டர் வந்துவிடுவார்.வரும்போது பத்து, பன்னிரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு, பஞ்சு பஞ்சாக அடுக்கிய இட்லிகளைக் கொண்டுவருவார். கூடவே குடத்தில் தண்ணீரும் வரும். 'வாத்தியார் அய்யா... சீக்கிரம் சாப்பிட வாங்க. இல்லைன்னா இட்லி எல்லாம் வித்துரும்’ என என்னிடம் சொல்லிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டரே அதிரும்படி சிரிப்பார். அப்படி ஒரு பிள்ளை மனசு.
எம்.எஸ்.வி ஒரு பாடலுக்கு மெட்டு போட அமர்ந்தால், கண்ணிமைக்கும் நேரத்தில் மெட்டுக்கள் சரம் சரமாகக் கொட்டும். 'நேற்று இன்று நாளை’ படத்துக்காக நான் எழுதிய 'நீ என்னென்ன சொன்னாலும் கவிதை...’ பாடலுக்கு கடகடவென, அடுத்தடுத்து 10 மெட்டுக்கள் போட்டு எல்லோரையும் திணறடித்தார்.
அந்தப் பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த சமயம், சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்துக்கு இசையமைக்க சிவாஜி வீட்டுக்குச் சென்றிந்தார் எம்.எஸ்.வி. எல்லோரிடமும் எப்போதும் கிண்டலாகப் பேசும் சிவாஜி, அன்று
எம்.எஸ்.வி-யிடம், எம்.ஜி.ஆர் அண்ணனுக்கு நீ முத்து முத்தா பாட்டு போடுவியோ? ஏன் எனக்குப் போட மாட்டியலோ?’ எனக் கேட்க, அது கிண்டல் எனக்கூடப் புரியாமல் பதறிவிட்டார்
எம்.எஸ்.வி. 'அண்ணே... எனக்கு ஒரு சுக்கும் தெரியாது. மெட்டு போட்டது மட்டும்தான் நானு. பாட்டு எழுதினது எல்லாம் வாத்தியார் அய்யாதான். நீங்க அவர்கிட்ட கேட்டுக்கிடுங்க’ எனச் சொல்ல, சிவாஜி வாய்விட்டுச் சிரித்து எம்.எஸ்.வி-யைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்.
எம்.எஸ்.வி மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடகர், நடிகர்... என்பதை எல்லாம் தாண்டி மிகச் சிறந்த பண்பாளர். 'தமிழ்த் திரையுலகில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறாரா?!’ என வியக்கவைக்கும் அளவுக்கு நயமான பண்புகளோடு வாழ்ந்திருக்கிறார்.
அப்போது தேவர் ஃபிலிம்ஸுக்குப் பிரதான இசையமைப்பாளர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்தான். ஆனால், ஒரு புதுப் படத்துக்கு இசையமைப்பதற்காக, தேவர் தன் மடியில் பணத்தைக் கட்டிக்கொண்டு எம்.எஸ்.வி வீட்டுக்கு வந்து, 'தம்பி... நம்ம கம்பெனியோட புதுப் படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ எனச் சொல்லி, பணத்தைக் கொடுத்திருக்கிறார். பதறிப்போன எம்.எஸ்.வி., 'மாமா (கே.வி.மகாதேவன்) இசையமைக்கும் கம்பெனிக்கு நான் இசையமைக்கிறது இல்லைனு முடிவுபண்ணியிருக்கேன். என்னால் இசையமைக்க முடியாது’ என மறுத்துவிட்டார். தேவர், எம்.எஸ்.வி-யின் அம்மா நாராயணி அம்மையாரிடம் சிபாரிசுக்குப் போக, அவரும் 'என் மகன் சொல்றதுதாங்கய்யா சரி. அவனை வற்புறுத்தாதீங்க’ எனச் சொல்லிவிட்டார். வளமான வாய்ப்பு கிடைக்கிறதே என வந்ததை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல், அதிலும் பண்பாடு காத்தவர் அவர்.
பாடல்களில் நல்ல வரிகள் எழுதிவிட்டால் சம்பந்தப்பட்ட கவிஞரைப் பாராட்டு மழையில் நனைத்துவிடுவார் எம்.எஸ்.வி. அதுவும் ஒருமுறை எனக்கு அவர் அளித்த பாராட்டு வாழ்நாளுக்கான வரம். 'வரம்’ படத்தில் ஒரு பாடலில் 'அட்சயப்பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா...’ என ஒரு வரி எழுதினேன். அதைப் படித்துவிட்டு நெகிழ்ந்துபோய், என் காலைத் தொட்டுப் பாராட்டினார். 'இப்படி நீங்க செஞ்சா, நான் இனி பாட்டு எழுத மாட்டேன்’ எனக் கடிந்துகொண்டேன். அதற்கு அவர், 'வாத்தியார் அய்யா.. இவ்வளவு நல்ல வரிக்கு இந்த மரியாதைகூட பண்ணலைன்னா, அப்புறம் நான் இசையமைச்சு என்ன பிரயோஜனம்?’ என்றார். அந்த அளவுக்கு வார்த்தைகள் மீது காதல்கொண்ட மகா கலைஞன் அவர். ஒரு பாடல் நன்கு வந்துவிட்டால் அதற்கான பெருமையை, 'வாத்தியார் அய்யா உங்களுக்கு 75 சதவிகிதம்; எனக்கு 25 சதவிகிதம்’ எனப் பிரிப்பார். அவ்வளவு குழந்தை மனசுக்காரர். ஆனால், அவர் பாட்டு போட்ட அளவுக்கு, துட்டு வாங்கியது கிடையாது.
10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்; 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் அதே உழைப்புதான்.
டி.எம்.எஸ் போல பிரமாதமான பாடகர் கிடையாது. ஆனால், அவருக்கு அவ்வளவு சுலபத்தில் பாடல் ட்யூன் பிக்கப் ஆகாது.
டி.எம்.எஸ்., ட்யூன் கற்றுக்கொள்ளும் வரை விட மாட்டார் எம்.எஸ்.வி. திரும்பத் திரும்பச் சொல்லிக்கொடுப்பார். எம்.எஸ்.வி போட்ட மெட்டில் 70 சதவிகிதம் மட்டுமே பாடகர்கள் பாடுவார்கள். அவர் மெட்டில் வைத்திருக்கும் முழு சங்கதிகளோடு எவரும் பாடியது கிடையாது. ஆனாலும், அவர்கள் பாடி முடித்ததும் உச்சி முகர்ந்து பாராட்டுவார் எம்.எஸ்.வி.
அது அண்ணா அவர்கள் இறந்த சமயம். 'மணிப்பயல்’ படத்தில் அண்ணாவுக்காக நான் எழுதிய 'காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்... கொண்ட கருணையினால் எங்கள் நெஞ்சில் நிறைந்தான்...’ பாடலை அழுதுகொண்டே மெட்டு அமைத்துப் பாடினார் எம்.எஸ்.வி.
நாங்கள் இருவரும் இணைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உருவாக்கிய அ.தி.மு.க பிரசாரப் பாடல்களும், தொண்டர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 1977-ம் ஆண்டு அ.தி.மு.க முதன்முறையாகப் போட்டியிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக, எம்.எஸ்.வி இசையமைக்க நான் எழுதிய, 'வாசலெங்கும் ரெட்டையிலை கோலமிடுங்கள்... காஞ்சி மன்னவனின் காலடியில் மாலையிடுங்கள்...’ பாடல், ஒலிக்காத ஊரே கிடையாது. 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக இரண்டே மணி நேரத்தில் ஒன்பது பாடல்களுக்கு மெட்டு அமைத்து, இரண்டு நாட்களில் பதிவுசெய்தும் அனுப்பிவைத்தவர் எம்.எஸ்.வி....... Thanks...
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!....... Thanks...
Varalaatru padhivu. Arumai. Ratham sindhi valarthaar. MGR pictures emblem DMK kodi. Chakravarthi Thirumahal padathil Thalaivar name was Udhaiya Suriyan. Thannudaiya padathil yaedho oru idathil Katchiyin kolhaiyai solliduvar. Basement of DMK was MGR only...... Thanks...
மக்கள் திலகத்தை தேடி பதவியும் புகழும் வந்தன.கருணாநிதி தேடி சென்று பெற்றவைதான் எல்லாம் இருக்கும் போதும், இறந்த பிறகும்.ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.?கடவுள் இருக்கின்றான் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா?...... Thanks...
Ulaka arasial varalaatril oru thanimanithan katchiyai vittu thookki eriyapattavar thanikatchi aarambitchu kurukiya kaalaththil oru byeelectionil panam aal palam ulla aalum katchiyai oru laksham vaaku viththiaasaththil thorkatiththathu sariththira saathanai purinthavar namathu mahonnatha vasool chakravarthi Makkal Thilakam M G R avarkal........ Thanks...
MGR-கவிஞர் வாலி
கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் பாடலாசிரியர்களாகக கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் கவிஞர் வாலி பாடல் எழுத திரைப்படத்துறைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அதற்கு முன்பு பக்திப் பாடல்களை (கற்பனை என்றாலும்) எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் பாடல்களைப் பாட வந்த திரைப்பட புகழ் டி.எம். சௌந்தர்ராஜன் கவிஞர் வாலியை சென்னைக்கு வரச்சென்னார். அங்கு வந்து சினிமாவுக்கு பாடல் எழுத முயற்சி செய்யுங்கள் என்றார். அவர் அழைத்ததை திரையுலகமே அழைத்தாக எண்ணி சென்னைக்கு வந்தார் கவிஞர் வாலி.
சென்னையில் நாகேஷ், வி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நட்பு கிடைத்தது. வி.கோபாலகிருஷ்ணன் மூலம் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு பல கம்பெனிகளில் ஏறி இறங்கினார். எதுவும் பலன் தராததால் துவண்டு போய் மறுபடியும் தனது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்துக்கே பயணமாக முடிவு செய்தார். அப்பொழுதுதான் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலொன்று காற்றினிலே கலந்து வந்து கவிஞர் வாலியின் காதில் நுழைந்தது மனதில் தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்து மீண்டும் போராடுவதற்கான நம்பிக்கையை வாலிக்கு கொடுத்தது.
அந்தப் பாடல் ‘மயக்கமாக கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஒடுவதில்லை, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு...'
சென்னையிலேயே நண்பர் வி.கோபாலகிருஷ்ணன் மூலம் போராடி 1959ஆம் ஆண்டு ‘அழகர் மலைக் கள்வன்' படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது.
‘நிலவும் தாரையும் நீயம்மா, உலகம் ஒரு நாள் உனதம்மா' என்று பாடல் எழுதிக் கொடுத்தார். இந்தப்பாடலை ப.சுசிலா தனது இனிமையான குரலில் பாடி கொடுத்தார்.
எந்த கண்ணதாசன் பாடல் கேட்டு நம்பிக்கை பெற்று மறுபடியும் திரையுலகில் போராடி நுழைந்தாரோ அதே கண்ணதாசனுக்குப் போட்டியாக பாடல்கள் எழுத ஆரம்பித்தார் வாலி. அதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தது.
முக்தா சீனிவாசன் தனது ‘இதயத்தில் நீ' படத்தில் பாடல் எழுத அழைத்தார். கவிஞர் வாலியை எம்.எஸ். விஸ்வநாதனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் பாடல் எழுதும் ஆற்றலைப் பார்த்துவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் கேட்டார். ‘இத்தனை நாள் நீ எங்கிருந்தாய்' என்று.
டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது ‘கற்பகம்' படத்தில் இடம்பெற்ற அத்தனைப் பாடல்களையும் எழுதச் சொன்னார். அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் வெற்றிப் பெற்றது. ‘கற்பகம்' பெயரிலேயே ஸ்டுடியோவை வாங்கி நடத்தத் தொடங்கினார் கோபாலகிருஷ்ணன். இந்தப் படத்தின் அத்தனைப் பாடல்களையும் பி.சுசிலாவே பாடினார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்லவன் வாழ்வான்' படத்தில் பாடல் எழுத கவிஞர் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை டைரக்டர் ப.நீலகண்டன்தான் பெற்றுத் தந்தார். கவிஞர் வாலியை எம்.ஜி.ஆரிடம அறிமுகப்படுத்தியதும் ப.நீலகண்டன்தான்.
எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி' படத்திலும் அனைத்துப் பாடல்களையும் சரவண பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி எழுதச் சொன்னார். ‘படகோட்டி' படத்தின் முழு கதையை வாலி கேட்டதால் அவரையே அந்தப் படத்திற்கு ஒரு பெயரை சூட்டச் சொன்னார்கள். அவரும ‘படகோட்டி' என்று பெயர் வைத்தார்.
இப்படி எம்.ஜி.ஆருக்கு 61 படங்களில் தொடர்ந்து பாடல்களை எழுதி எம்.ஜி.ஆரின் பாராட்டுக்களை பெற்றார் கவிஞர் வாலி.
அதே போல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ‘அன்புக் கரங்கள்' படம் மூலம் தொடர்ந்து பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. சிவாஜிக்கு 60 படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுதி அவரின் பாராட்டுக்களைப் பெற்றார்.
கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் நிழற்படங்களிலும் ஒலித்தன. நிஜவாழ்க்கையிலும் அவை பிரதிபலித்தன.
எம்.ஜி.ஆருக்காக வாலி எழுதிய ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...' ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்ததை எதிரொலித்தது. அதன்பிறகு அவர் வெளியே வந்த பிறகும் அவரது மூன்றெழுத்து பெயரும் இன்று வரை ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்...' இந்தப் பாடல் வரிகளும் நிஜமாகின. சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆரை முதலமைச்சராக மாற்றியது. அவரும் தனது ஆட்சியில் ஏழை எளியோரை வேதனைப்படாமல் பார்த்துக் கொண்டார்.
ஜெமினியின் ‘ஒளிவிளக்கு' படத்தில் கதைப்படி தீ விபத்துக்குள்ளான எம்.ஜி.ஆரை காப்பாற்ற வேண்டி ஊர்மக்கள் பிரார்த்தனை செய்து பாடுவதுபோல் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார் வாலி.
‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு
தலைவா உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு'
இந்தப்பாடல் படத்தில் ஒலித்து பாராட்டுக்களை பெற்றது.
இதேப் போன்று எம்.ஜி.ஆர் நிஜமாகவே உடல்நலம் சரியில்லாத போது அவர் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் மக்கள் இந்தப்பாடலைப் பாடித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘தலைவன்' என்றொரு படம். நீண்ட காலமாகவே முடிக்கப்படாமல் கிடப்பிலிருந்த படம். எதனால் இந்தப்படம் எடுத்து முடிக்க தாமதமாகிறது என்று யோசித்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியை அழைத்து, 'இந்தப்படம் தாமதமாவதற்கு நீங்கள்தான் காரணம்,' என்று கூறினார். வாலியும் 'நான் எப்படி காரணமாவேன்?' என்று கேட்டார்.
அதற்கு எம்.ஜி.ஆர். நீங்கள் எழுதி கொடுத்த பாடல் வரிகளை திரும்பவும் சொல்லிப்பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.
‘நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருக்க...' இப்படி பாடல்வரிகளை எழுதி கொடுத்தால் எப்படி படம் முடியும் வெளியே வரும் என்றார் சிரித்துக் கொண்டே எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் கவிஞர் வாலியை அழைத்து ‘அடிமைப் பெண்' படத்தில் அம்முவை (ஜெயலலிதா) சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடச் சொல்லப் போகிறேன். அதற்கான ஒரு பாடலை எழுதுங்கள் என்றார். வாலியும் ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை எழுதிக் கொடுத்தார். அதை செல்வி ஜெயலலிதா அவர்கள் தனது சொந்தக் குரலில் பாடினார்.
ஒரு நாள் கவிஞர் வாலி எம்.ஜி.ஆரிடம், ‘அண்ணா நீங்கள் பின்னாளில் அவரைப் (ஜெயலலிதா) பாட வைக்கப் போறீங்க என்று தெரிந்ததான் அன்றே ஒரு பாடலை எழுதிவிட்டேன். அந்தப் பாடல்
‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என்பாட்டுக்கு அவன் தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் கோயில் இல்லாத இறைவன்''
இதை ‘அரசகட்டளை' படத்தில் செல்வி ஜெயலலிதாவே பாடி நடித்திருப்பார். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர் தன்னை மறந்து சிரித்துவிட்டார்.
அதே போன்று ‘அன்னமிட்டகை' படத்தில்
‘அன்னமிட்ட கை இது ஆக்கிவிட்ட கை'
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம்
வாழவைத்த அன்னமிட்ட கை'
என்று எழுதியிருந்தார் வாலி. இந்தப் பாடலின் கருத்துப்படி எம்.ஜி.ஆர். முதல்வரானதும் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டார். அவருடைய கை எத்தனையோ பேருக்கு அன்னமிட்ட கையாகத் திகழ்ந்தது.
‘பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்று ஒரு பாடலை எழுதினார் வாலி. எம்.ஜி.ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நல்ல நல்ல பிள்ளைகள் கட்சியில் வந்து சேர்ந்தார்கள். அவரை நாடாள வைத்தார்கள். ‘காவல்காரன்' படத்தில் ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது, கேட்டேன் தந்தாய் ஆசை மனது...' என்ற பாடலை எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அப்பொழுது எம்.ஜி.ஆர் குண்டடிப்படிருந்தார். அவர் உடல் நலம் பெற்று வந்து இந்தப் பாடல் காட்சியில் பாடி நடித்தார்.
இப்படி பதினாறாயிரம் பாடல்களுக்கு மேல் ஓய்வின்றி எழுதி சாதனைப் புரிந்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு மட்டும் நான்காயிரம் பாடல்கள் எழுதியவர் கவிஞர் வாலி.
எல்லா தலைமுறையினருக்கும் பாடல்கள் எழுதிய ஒரே பாடலாசிரியர் கவிஞர் வாலி மட்டும்தான். இவர் ஒரு முருக பக்தர் அதனால் தான் இவர் எழுதிய பாடல் வரிகளிளெல்லாம் சக்திப்பெற்று நிஜங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பாடலாசிரியராக மட்டுமல்ல.. ஒரு எழுத்தாளராக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றவர்.
நடிகராக அவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தர். பொய்க்கால் குதிரையில் நடித்ததோடு, கதை வசனத்தையும் எழுதினார்.
1931ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தவர் கவிஞர் வாலி. சொந்தப் பெயர் ரங்கராஜன். இவருக்கு வாலி என்று புனைப்பெயர் வைத்தவர் பாபு என்ற பள்ளி நண்பர்....... Thanks...
ஆந்திர மாநிலம் கடப்பாவில் பிறந்த நடிகை கண்ணம்மா அவர்கள் ஆரம்பத்தில் நாடங்கங்களில் நடிக்கும் போதே திருமணம் செய்து கொண்டு பின் அரிச்சந்திரா என்ற படத்தில் நடிகை ஆகி.
பின் பி.யு.சின்னப்பா அவர்கள் உடன் புகழ் பெற்ற ஜோடியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.. வயதான பின் அனைத்து தமிழ் முன்னணி நாயகர்களின் அம்மாவாக நடிக்க துவங்கி பெயர் பெற்றார்.
அந்த காலத்தில் 85000 ரூபாய் சம்பளம் வாங்கினார்... ஆந்திராவில் புகழ் பெற்ற வார நகைகள் என்று திங்கள் செவ்வாய் என்று தினம் தினம் போடும் நகைகளை வாங்கி குவித்தார்.
பின் தன் கணவர் நாகபூஷனம் உடன் இணைந்து 25 படங்களை தொடர் தோல்வி படங்களை தயாரித்து பொன் பொருட்களை இழந்தார்.
இழந்தவற்றை மீட்க தலைவர் சரோஜாதேவி நடித்த தாலி பாக்கியம் படத்தை எடுத்தார்.. அவர் கணவரே இயக்குனர்.
படப்பிடிப்பு கர்நாடகாவில் 150 பேர் கொண்டு நடந்து கொண்டு வரும் போது இவர் கொண்டு போன 5 லட்ச ரூபாய் பணம் களவு போக அங்கு உள்ளவர்களுக்கு பணம் கொடுக்க இல்லாமல் தவிக்க.
விஷயம் அறிந்த தலைவர் அங்கு இருந்து சென்னை மானேஜர் குஞ்சப்பன் மூலம் 5 லட்சம் வரவழைத்து கண்ணம்மா கையில் கொடுத்து அந்த இக்கட்டில் இருந்து காப்பாற்றினார்.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி அடையாமல் பெரிய அளவில் லாபம் வராமல் நஷ்டம் இல்லாமல் ஓடினாலும் ,அவரின் கடன்களை அடைக்க போதவில்லை.
பின் சென்னையில் அவர் கணவர் மிச்சம் மீதி இருந்த சொத்து களையும் தொலைக்க அவர் வீடு மட்டும் மிஞ்ச
அதை ஏமாற்றி பிடுங்க பலர் தயார் ஆக ஒருவர் சொன்ன யோசனை படி அந்த வீட்டை எம்ஜியார் பெயருக்கு எழுதி கொடுங்கள் ஒரு பயல் கிட்ட வரமாட்டான் என்று சொல்ல.
அதன் படி தலைவருடன் அவர் பேச உங்கள் யோசனை சரி ஆனால் வீட்டு பத்திரம் உங்கள் கையில் இருக்கட்டும் என் பெயருக்கு எழுதி கொடுத்தது போல இருக்கட்டும் என்றார் பொன்மனம்.
அதன் படி கண்ணம்மா அவர்கள் 1964 மே மாதம் 7 ஆம் தேதி இறப்பதற்கு 4 நாட்கள் முன்னால் அந்த வீட்டு பத்திரத்தை தலைவர் இடம் கொடுக்கிறார்.
அவர் புதைக்க பட்ட போது அவரிடம் மீதி இருந்த கொஞ்சம் நகைகளை அவர் விருப்பப்படி அவரோடு சேர்த்து அடக்கம் செய்தார்களாம்..
பின் குறிப்பு...
நகைகள் உடன் கண்ணம்மா அவர்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்ட சேதி நெருப்பாய் பரவ அன்று முதல் அந்த இடுகாடு கண்ணம்மா பேட்டை என்று அழைக்க பட ஆரம்பித்ததாக ஒரு ஊர்ஜிதம் செய்ய படாத தகவலும் உண்டு.
அந்த அவரின் வீட்டை கஷ்டம் போக்க அந்த காலத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு பெரும் தொகையை அவரிடம் கொடுத்து இருக்கிறார் நம் தலைவர்....
மற்ற புகழ் பெற்ற நடிகர்கள் அம்மாவாக அவர் நடித்து இருந்தாலும் தாயை காத்த தனயன் நம் தலைவர் மட்டுமே.
நன்றி....வாழ்க எம்ஜியார் புகழ்...தொடரும்..
உங்களில் ஒருவன் நெல்லை மணி..
படத்தில் கே.பி. சுந்தராம்பாள் அவர்களிடம் ஆசி பெரும் தலைவர்....... Thanks...
நாகபூஷணம் தெலுங்கு நடிகர் ! 1974 புதுவை சட்டமன்ற பொது தேர்தல் ! புதுவையை சேர்ந்த ஒரு தொகுதி ஆந்திர அருகில் உள்ள ஏனம் தொகுதிக்கு அண்ணா தி மு க வேட்பாளரை நிறுத்த வேண்டும் ! அங்கு நம் கட்சி கிடையாது ,நிற்க்க வேட்பாளரும் கிடையாது ! கட்சி மானம் காப்பாற்ற புதுவையை சேர்ந்த அன்றய மகளிரணி செயலாளர் தெலுங்கு பேசும் ஜெயலட்சுமி என்ற அம்மையாரை ஏனம் வேட்பாளராக அறிவித்து அழைத்துச் சென்று தலைவர் செலவுலேயே தேர்தல் நடந்தது ! நடிகர் நாகபூழனம் அவர்களை இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்ய வைத்தார் நம் தலைவர் ! வெற்றி வாய்ப்பை இழந்ததோம் ! பழைய நினைவுகள் ! நன்றி ! ...... Thanks...
பாட்டாலே*புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -24/04/2020 அன்று* வின்*டிவியில் வெளியான* தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் திரைப்படங்களில் குழந்தைகளுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் நிறைந்த கருத்தான பாடல்கள் அமைப்பதில் முனைப்புடன் இருந்தார் .* குழந்தைகள்தான்* எதிர்காலத்தில் வளர்ந்த சக்திகள் , நாட்டை முற்போக்கு சிந்தனையுடன் வழிநடத்தும் தலைவர்களாக வரக்கூடியவர்கள்*பல உயர்ந்த பட்டம், பதவிகளை அடைந்து மத்தியிலும், மாநிலத்திலும் அரசுக்கட்டிலில் அமர்ந்து ஆட்சியை செவ்வனே நடத்தக் கூடியவர்கள்* அப்படிப்பட்ட குழந்தைகளின் கருத்தை கவரும் வண்ணம் ஏராளமான பாடல்கள் தன் படங்களில் அமையும்படி பார்த்துக் கொண்டார் .**
ஒருமுறை படப்பிடிப்பில் நடிகை கே.ஆர். விஜயாவுடன் நடித்து வந்தார். நடிகைக்கு காலையில் பெட் காபி குடிக்கும் பழக்கம் இருந்தது .* காபியில் உள்ள நச்சுத்தன்மைகளை விளக்கி நடிகை கே.ஆர். விஜயா அந்த பழக்கத்தை கைவிடும்படி செய்தார் .* இதுபோன்று படப்பிடிப்புகளில் பல கலைஞர்கள் உடன் நடிக்கும்போது அறிவுரைகள், போதனைகள் செய்ய தவறுவதில்லை .
எம்.ஜி.ஆர். தன் படங்களில் வரும் பாடல்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொண்டு பாடும்படி அமைய வேண்டும் ,அவர்கள்தான் நாளைய தலைவர்கள் ,என்று கூறியதோடு , குழந்தைகள் மீது அளவற்ற*அன்பு, பாசம் வைத்திருந்தார் .*நீதி போதனைகள், சமூக*சீர்திருத்த*கருத்துக்கள்*அடங்கிய*பாடல்கள ுக்கு முக்கியத்துவம் அளித்தார் .அந்த பாடல்கள்*சமூகத்தில் பெரிய தாக்கத்தை*ஏற்படுத்த வேண்டும் என்று விரும்பினார். அந்த வகையில்*கவிஞர்**பட்டுக்கோட்டை*கல்யாணசுந்தரம் எழுதிய*சின்ன*பயலே*, சின்னப்பயலே சேதி*கேளடா*,.......* ஆளும் வளரனும் , அறிவும்*வளரனும் அதுதாண்டா வளர்ச்சி. உன்னை*ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும்*மகிழ்ச்சி ..... மனிதனாக வாழ்ந்திட வேணும்*மனதில் வையடா*, தம்பி மனதில்*வையடா ....* வளர்ந்து வரும் உலகத்திற்கே நீ வலது கையடா*.. ... என்று காலம் கடந்து*நிற்கும்*வைர வரிகளை* அரசிளங்குமரி திரைப்படத்தில்*அறிமுகப்படுத்தினார்.**
சில*காலம்* சந்தர்ப்ப சூழ்நிலை, சமுதாய சீரழிவு*காரணமாக*திருடனாக வாழ்ந்தவன் ,நல்லவனாக திருந்தி வாழ்வதற்கு ஏற்ப ஒரு திரைக்கதை தயாரானது . அதற்கு*டைட்டில்**பெயர் வைப்பதற்கு* பல பேர் சொன்ன*தலைப்புகளை நிராகரித்து , அந்த சமயத்தில் வித்வான் லட்சுமணன் அவர்களின்*யோசனைப்படி திருடாதே*என்று தலைப்பை*தேர்வு செய்து , அதற்காக*அவருக்கு*ரூ.500/- பரிசளித்தார்* எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் படத்தின்*தலைப்புகளை தேர்வு செய்வதில் எம்.ஜி.ஆர். மிகவும் கவனமாக*இருந்தார்.எதிர்மறை கருத்துக்கள்*மக்களை சென்றடையக்கூடாது என்று* .*மக்களுக்கு*பாசிட்டிவ்*ஆன* தலைப்புகள், செய்திகள், கருத்துக்கள்*தன் படத்தில் புகுத்துவதில் ஆர்வம் செலுத்தினார் .இந்த படத்தில்*கவிஞர் பட்டுக்கோட்டை*கல்யாண சுந்தரத்தின் திருடாதே, பாப்பா திருடாதே,வறுமை நிலைக்கு*பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே .......சிந்தித்து*பார்த்து செய்கையை*மாத்து, சிறிசாய் இருக்கையில் திருத்திக்கோ,தெரிஞ்சும்*தெரியாம*நடந்திருந்தா திரும்பவும் வராமல்*பாத்துக்கோ*..........திருடனாய்*பார்த்த ு திருந்தாவிட்டால் திருட்டை*ஒழிக்க முடியாது*போன்ற*வரிகள்*எக்காலத்திற்கும் பொருந்தும்*.
கன்னித்தாய் என்கிற*படத்தில்*குழந்தைக்கு அறிவுரை சொல்லும்*பாடலில்*தவிதவிக்கிற ஏழைக்கெல்லாம் திட்டம் போடணும்*, அதை சரிசமமான*பங்கு போட சட்டம் போடணும், குவியக்குவிய விளைவதெல்லாம் கூறு போடணும்*ஏழை குடிசை*பகுதியில்*பாலும் தேனும்*ஆறா*ஓடணும்*. ... கேளம்மா*சின்ன*பொண்ணு கேளு*என்ற பாடலில் இந்த வரிகள்*இருக்கும்.*ஏழை எளியோரின் துயர் துடைக்கும் வகையில்*தன் எண்ணங்கள் இப்படித்தான் பிரதிபலிக்கும் என்பதை*இந்த பாடலில்*வடிவமைத்தார் எம்.ஜி.ஆர்.*
*வேட்டைக்காரன் படத்தில்*எம்.ஜி.ஆர். கௌபாய்*வேடத்தில்*நடித்தார்.எம்.ஜி.ஆருக்கு வித்தியாசமான வேடம்.* அந்த படத்தில்*மிகவும் சுறுசுறுப்பாகவும், ஓடியாடி*நடித்தார். சில*காட்சிகளில் துள்ளல்கள் அதிகம்.* ஒரு இடத்தில உட்காராமல் படுவேகத்துடன், பம்பரம் போல சுழன்று சில காட்சிகளில் நடித்திருப்பார் படம் முழுவதும் மிகவும் உற்சாகமாக*நடித்திருப்பார் ..* இந்த படத்தில் வெள்ளி நிலா முற்றத்திலே என்ற பாடலில்*, தன் குழந்தைக்கு அறிவுரை சொல்லும்போது, நான்கு பேர்கள்*போற்றவும், நாடு உன்னை வாழ்த்தவும், மானத்தோடு வாழ்வதுதான் சுய மரியாதை ......என்கிற வரிகளில் சுய மரியாதை பற்றிய விளக்கத்தை மிகவும் எளிதாக*குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில்*இருந்தது*.
நான் ஏன் பிறந்தேன் என்கிற படத்தில்*குடும்ப*பாங்கான கதை.* அவரது குடும்பத்தில் குழந்தைகள் நால்வர் இருப்பர்.* எம்.ஜி.ஆர். நடித்த*குடும்ப*பாங்கான படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது . வறுமையில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற , திருமணம் ஆனவர்*என்ற உண்மையை*சொல்ல முடியாமல் , தன்னை காதலிப்பவரின் உடல்நலத்தையும், உயிரையும்*காப்பாற்ற வேண்டிய பொறுப்புகளை சுமந்து*பல துன்பங்களை கடந்து*இறுதியில் குடும்பத்துடன் ஐக்கியம் ஆவதுதான் கதை .இந்த படத்தில்*, தம்பிக்கு*ஒரு பாட்டு*அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு என்ற பாடலில்* உயர்ந்தவர் யாரும் சுயநலம் இருந்தால்*தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே, உழைப்பால் பிழைப்போர்*தாழ்ந்திருந்தாலும் உயர்ந்தவராவார் குணத்தாலே என்கிற* வரிகளில் ஜனநாயக*நாட்டிற்கு*தேவையான பொது உடைமை கருத்துக்கள்*அடங்கி இருக்கும் . வளரும் குழந்தைகளுக்கான நீதி போதனைகள், அறிவுரைகள் இந்த பாடலில் அமைந்தன .
எம்.ஜி.ஆர். தான் நடித்த**தனக்கு*பிடித்த*ஒரு சில*படங்களில் பெற்றால்தான் பிள்ளையா முக்கியமானது .* அதில் வரும் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி என்கிற பாடலில் , கருணை இருந்தால்*வள்ளலாகலாம்.* கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம்,* இந்த மூன்றும் இருந்தால்*தலைவனாகலாம். என்ற வரிகள் அமைந்திருக்கும்.* வளரும் குழந்தைகள் நாளைய தலைவர்களாகவும், கடமை வீரனாகவும், பொறுப்பு மிகுந்த தேசியவாதியாகவும் உருவாக*இந்த பாடல் நல்ல படிப்பினையாக*இருக்கும் .இந்த பாடலில்*மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் என்று ஒரு வரி இருக்கும். எம்.ஜி.ஆரின் உச்சரிப்பு அப்படியே இருக்கும். ஆனால் நெருக்கடி நிலை பிரகடனம் ஆனபோது* , இந்த படம் மறு தணிக்கைக்கு*சென்ற போது பாடல் வரியில்*அறிஞர் அண்ணா*போல் என்பதற்கு பதிலாக திரு.வி.க . போல் என்று வரும்படி செய்தார்கள்.* அப்போதைய அரசியல் சூழலில் சில*எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு இப்படி சில*சோதனைகள்*கொடுத்து*அவரது*தேர்தல் வெற்றிக்கு*தடை ஏற்படுத்தினர். ஆனால் அதையெல்லாம் மீறி*அவற்றை*தவிடு பொடியாக்கி*எம்.ஜி.ஆர். ஆட்சி பீடத்தில்*அமர்ந்தார் என்பது வரலாறு .
ஆனந்த ஜோதி படத்தில்*எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்தார் .இந்த படத்தில்*வரும் ஒரு தாய் மக்கள் நாமென்போம், ஒன்றே எங்கள் குலம் என்போம்,* தலைவன் ஒருவன்தான்*என்போம், சமரசம் எங்கள் வாழ்வென்போம்*என்ற பாடலில் , தர்மத்தின்*சங்கொலி*முழங்கிடுவோம், தமிழ்த்தாயின் மலரடி*வணங்கிடுவோம்**என்கிற வரிகளில் மொழிப்பற்று, நாட்டுப்பற்று உணர்வுகள் அடங்கிய கருத்துக்கள்*இருக்கும்.* அந்த காலத்தில் , இந்த பாடல்*பல பள்ளிகளில், சுதந்திர*தினம், குடியரசு தின*விழாக்களில்*மாணவ மாணவிகள்*பாடும் பாடலாக*அமைந்தது .
நம் நாடு படத்தில்தனது அண்ணனின் குழந்தைகளுக்காக** நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, என்கிற பாடலில்* விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் . தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் . என்ற வரிகள்*குழந்தைகளுக்கு நீதி போதிக்கும்* *வாத்தியாராக இருந்து சொன்ன கருத்துக்கள்*, நிஜத்தில்*எம்.ஜி.ஆர். தனது அண்ணன் சக்கரபாணி அவர்களின் குழந்தைகளை* தன் குழந்தைகளாக பாவித்து அவர்களை*படிக்க வைப்பதில் இருந்து , திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளை தானே* முன்னின்று நடத்தி வைத்துள்ளார்*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல்**சினிமா , அரசியல் , பொது வாழ்க்கை என்று மூன்று உலகிலும்*உச்சத்தை*தொட்டவர் வேறு எவருமில்லை .ஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் அவருக்கு ஒரு மனக்குறை*இருந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில்*கவிஞர் வாலி எழுதிய பாடலில்*பணம் படைத்தவன் படத்தில்*தனக்கொரு குழந்தை பிறக்கும்*தருவாயில், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னை போலவே இருப்பான், தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன்* (பேரறிஞர் அண்ணா*) வழியிலே*நடப்பான்*என்ற*பாடலில் நடித்தார் .பொதுவாக* எம்.ஜி.ஆர். குழந்தைகள் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தார் . அதனால்தான் , வறுமை, பசிப்பிணி காரணமாக எந்த குழந்தையும் பாதிக்க கூடாது என்கிற வகையில்*பள்ளிகளில், குழந்தைகளுக்கான சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்தார் .* ஆரம்பத்தில் நிதிநிலை நெருக்கடி, எதிர்க்கட்சிகள் விமர்சனம் , அமுல்படுத்துவதில் சிக்கல்*இவையெல்லாம் இருந்தும்*திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். இன்று இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த திட்டத்தை*அமுல்படுத்தி வருகின்றன தமிழகத்தில் எம்.ஜி.ஆர். குழந்தைகள் சத்துணவு கூடம் என்ற பெயரில் திட்டம் செயலாக்கத்தில் உள்ளது . உலகமே இந்த திட்டத்தை வியந்து பாராட்டுகிறது . இதன் காரணமாக*பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன .
எம்.ஜி.ஆர். சொந்தமாக இயக்கி தயாரித்த*நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் கண்ணதாசன், இன்னொருவர் எம்.ஜி.ஆர். கதை இலாகாவை சார்ந்த*ரவீந்தர். ரவீந்தருக்கு ஒரு சமயம்*திருமணம் நிச்சயம் ஆகி இருந்தது .எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மூலம் எம்.ஜி.ஆருக்கு*விஷயம் தெரிய வருகிறது .* எம்.ஜி.ஆர். ரவீந்தரை*திருமண பரிசாக*என்ன வேண்டும் கேள்,ஏதுவாகிலும் செய்கிறேன் என்று சொன்னபோது மாங்கல்யம் வாங்குவதற்கு ரூ.16/- வேண்டும் என்று கேட்டார் .அதை நீங்கள்தான்*தரவேண்டும் என்றார். அதற்கு எம்.ஜி.ஆர். மறுத்ததோடு*, நான் இருமுறை*திருமணமாகி* மனைவியரை இழந்தவன். எனக்கு குழந்தை இல்லை.* எனது அண்ணனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். நீ வாழ வேண்டியவன். எனவேதான்*என் அண்ணனை*தரும்படி*கேட்டுக் கொண்டேன் என்று விளக்கினார் .**
ஊருக்கு உழைப்பவன் படத்தில்*கவிஞர் முத்துலிங்கத்தின் பிள்ளை தமிழ் பாடுகிறேன், ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன் என்ற பாடல்* வரும்.,இந்த பாடலில்*எம்.ஜி.ஆருக்கு பிள்ளை இல்லை என்ற மனக்குறை, துயரம், சோர்வு*எல்லாம் தன்னுடைய முகபாவத்தில் தெரியும்படி***உணர்வுபூர்வமாக*நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்*, எல்லா துறையிலும் சாதித்த*எம்.ஜி.ஆர். தனக்கு*வாரிசு இல்லை என்ற மனக்குறையை போக்க தவித்தது போல் இந்த பாடல் அமைந்தது .*
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே*, உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே*என்கிற தத்துவப்பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பாடலின்*கருத்துக்கள் அமைந்தன . எம்.ஜி.ஆர். குழந்தைகளை நேசித்ததன்*பலனாக*, அவர்களது*ரசிப்பு தன்மைக்கு ஏற்றவாறு ,எந்தெந்த சொற்களை கேட்டால் குழந்தைகள் உற்சாகம் அடைவார்களோ ,அதற்கு தகுந்தபடி ,அவர்களின் சிரிக்கும் பாஷையில்* சிக்கு*மங்கு சாச்சா பாப்பா என்று குழந்தைகளே கோரஸாக பாடும்படி*பாடலில் முதல் வரியில் அமைத்திருந்தார் .
1972ல் தி.மு.க.வில் இருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். என்பது அனைவரும் அறிந்த ஒன்று . ஆனால் அவர் கட்சி பதவி ஆசையினாலோ, அதிகார பதவி ஆசை யினாலோ அப்படி கேட்கவில்லை .* தவறு எங்கிருந்தாலும் தட்டி கேட்பது என்பது அவரது சிறிய வயதில் இருந்தே இருந்த வழக்கத்தில் ஒன்று .*** அவர் கும்பகோணம் ஆனையடி பள்ளியில் மூன்றாவது வகுப்பு படிக்கும்போது கோடையில் மண்பானை வாங்க வேண்டி பள்ளி ஆசிரியர் சிறுவர்களிடம் தலா 3 பைசா, 5 பைசா என்று வசூல் செய்து ,திட்டமிட்டபடி, பெரிய பானை வாங்காமல் , சிறிய பானை வாங்கி , காசு மிச்சம் சேர்த்திருந்தார் . இதை அறிந்து சிறுவர்களிடம் கலந்து ஆலோசித்த அவர் அதை தட்டி கேட்க முற்பட்டார் என்று தான் எழுதிய நான் ஏன் பிறந்தேன் என்ற நூலில் பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .
தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் தனது பாடல்கள்மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை ,பாட வகுப்பில் சொல்வது போல , ஒரு பல்கலை கழகமாக , வாத்தியார் எம்.ஜி.ஆர். திகழ்ந்திருப்பார் .* தனது ஒவ்வொரு செயலிலும் யாருக்காவது , எதையாவது நல்ல முறையில் செய்ய வேண்டும், எளிதாக சொல்ல வேண்டும்* தனது ஒவ்வொரு மூச்சிலும் , தன்னுடன் பழகுபவர்கள், தொடர்புடையவர்கள் வாழ்க்கைத்தரம் உயர தன்னாலான உதவிகள் தன் வாழ்நாள் முழுவதும்*செய்யவேண்டும் என்பதை, கொள்கையாக எந்தவித* பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்து வந்தார் ..**
மன்னாதி மன்னன் படத்தில் வரும் அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற பாடல் தி.மு.க. வின் கொள்கை பாடலாக இருந்தது எம்.ஜி.ஆர். முதல்வரான பின்பும் அவர்* காரில் பயணித்தபோது இந்த பாடல் ஒலிக்காத நாளில்லை என்று சொல்லலாம் .**
நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடல்கள் விவரம் :
1.சின்ன பயலே சின்ன பயலே - அரசிளங்குமரி*
2.திருடாதே பாப்பா திருடாதே - திருடாதே*
3.கேளம்மா சின்ன பொன்னு -* *கன்னித்தாய்*
4.வெள்ளி நிலா முற்றத்திலே -வேட்டைக்காரன்*
5.தம்பிக்கு ஒரு பாட்டு -நான் ஏன் பிறந்தேன்*
6.நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி -பெற்றால்தான் பிள்ளையா*
7.ஒருதாய் மக்கள் நாமென்போம் - ஆனந்த ஜோதி*
8. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம் நாடு*
9.எனக்கொரு மகன் பிறப்பான் - பணம் படைத்தவன்*
10..பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் -* ஊருக்கு உழைப்பவன்*
11.சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன்*
12.ஏன் என்ற கேள்வி* -ஆயிரத்தில் ஒருவன்*