superQuote:
courtesy -
THIRU GANESH - BANGALORE
எல்லாமும் நீயே!
தாயுமானவன் -எமக்குத்
தந்தையானவன்; அன்னை, தங்கை, அன்பு, பாசம், இன்ன பிற உறவுகளாய்
என்றும் வாழும் நீ
எங்கள் இதயத்தில் பூத்த மலர்!
மண்ணில் "இவர்போல் யரென்று" வாழ்வாங்கு வாழ்ந்தாய்;
விண்ணில் இருந்தும் இன்றும் நீ
என்னில் இருப்பவன்!
மாசில்லா உண்மை மனிதன் நீ!என்றும்-
மற்றவர்க்கு வாழும் பேரிதயம் உனக்கு!
வேசியையும் மன்னித்த இயேசு போல -உன்னைத்
தூற்றுவோரையும்
ஏற்றிவைத்து அழகு பார்க்கும்
மாற்றில்லாத்தலைவன் நீ!
எங்கோ இருக்கும் இறைவனை
எப்போதும் வணங்கும் ஏமாற்றுக் கூட்டமொன்று!
"மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!" என்று
மழலைச் சிரிப்பில் இறைவனைக் கண்டவன் நீ!
உன் உருவில்,
மறையாவரம் பெற்ற கடவுளைக் கண்டோம் -ஆம்
உன் கருணையிலே கடவுளையே கண்டோம்!
உன்னை நம்பிக் கெட்டவர்கள் இல்லை;
உன்னைத் திட்டியவகள் கூட கெட்டது இல்லை!
உன்னை நம்பாதவரும் கெட்டது இல்லை;
உன்னை நினைத்தாலே நம்பிக்கை வந்துவிடும்!
நீ எல்லோரையும் புரிந்துகொண்டவன்!
உன்னை எல்லோருக்கும் புரியவைத்தவன்!
உன்னையே நீ அறிந்தவன் -அதனால்
பிறரிலும் வாழ்பவன்!
உன் பெயரைச் சொல்லி வளர்க்கிறோம் பிள்ளை
உன் கொள்கை சுமந்து அவன் சிறப்பான் நாளை!
பசித்தவருக்கு உணவு தந்தாய்!
நலிந்தவருக்கு
கல்வி தந்தாய்... அதனால் வாழ்வு தந்தாய்!
நீ இன்று வந்தால், உன் உயிரையும் தருவாய்! -அதனால்,
நீ வருவதென்றால் -தலைவா
என் உயிரையும் தருவேன்!
------------------------------------------------------------------------------------