‘தமிழர் தலைவர்’
என் தாயார் பாரம்பரியம் கேரளா (பாலக்காடு) ஆகும். தந்தையின் பாரம்பரியம் கோவை மாவட்டம் (காங்கேயம்) என்ற ஊர் ஆகும். கேரளாவில் இன்னும் பல மாவட்டங்களில் பெயருடன் பிள்ளை என்று சொல்லி அழைக்கப்படுகிறது. இப்படி அழைக்கப்படுபவர்களுடைய பாரம்பரியம் தமிழ்நாடு. இதை எல்லாம் அறியாமல் அரசியலில் உள்ள சிலர் என்னை மலையாளி என்றும் மலையாளத்தான் என்றும் பேசுகிறார்கள். சிலர், பொறாமை உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னை தமிழ்நாடு மக்களும், அயல்நாட்டில் வாழும் தமிழ் மக்களும் பல தமிழ்ச் சங்கங்களும் என்னை தமிழன் என்று சொல்வதும் பாராட்டுவதுமே நான் ஒரு தமிழன் என்பதை எடுத்துக் காட்டுகிறது.
----- இன்றைய தினஇதழ் நாளிதழில் புரட்சித் தலைவரின் கருத்து.
படிக்கும்போதே கண்களை நீர் மறைக்கிறது. மக்கள் திலகத்தை தமிழர்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டதால்தான் மூன்று முறை முதல்வராக்கினர். செய்தியை பதிவிட்ட திரு.லோகநாதன் சார், திரு.சைலேஷ் சார் ஆகியோருக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்