https://i.postimg.cc/RCpVjy6p/1e9417...61d8d59be7.jpg
Printable View
https://i.postimg.cc/w3KK9XdM/ec035f...b0c73a67e7.jpg
இன்று
கவிஞர் கண்ணதாசன்
மறைந்த தினம்
புரட்சித்தலைவர் 1972ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற மக்கள் இயக்கத்தை ஆரம்பித்த நாள் இன்று. நடிகன் நாடாள முடியுமா?! என்று கேள்வி கேட்ட மூட நபர்களுக்கு, தன்னால் முடியும் என்பதை, இந்தியா மட்டுமல்ல... சர்வதேச அளவில்... முதன் முறையாகவும்...தொடர்ச்சியாக ஏறத்தாழ 11 ஆண்டுகள்... காலம் நல்லாட்சி செய்து நிரூபித்துக்காட்டிய பெருமைக்கு சொந்தக்காரர்தான், புரட்சித்தலைவர் அவர்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில், பொன்மனத்தலைவர்
புரட்சித்தலைவர் அவர்களை வணங்கி ஆசி பெறுவோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை........... Thanks...........
நண்பா , சுகாராம்
வாட்சாபில் வந்ததை எடுத்து போட்டிருக்கும் உங்கள் பதிவு பார்த்தேன்
பாவ மன்னிப்பு படம் சென்னயில் வெள்ளிவிழா கண்டது.
அந்தப் படம் சென்னயில் 10 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த இரண்டும் உண்மையான தகவல்கள்தான்.
அதேநேரம் ராமநாதபுரத்தில் டூரிங் டாக்கிசில் பாவமன்னிப்பு 2 லட்சம் வசூல் பெற்றது என்று யாராவது சொன்னால் அது பொய்யான தகவல்.
இலங்கை, பெங்களூர், திருவனந்தபுரத்தில் பாவமன்னிப்பு படம் 100 நாள் ஓடவில்லை என்று உங்கள் பதிவில் இருப்பதும் சரிதான்.
சென்னயில் பாவமன்னிப்பு வெள்ளி விழா ஓடியது. 10 லட்சத்துக்கு மேல் வசூல் செய்தது. உண்மை. உண்மை. உண்மை.
சென்னயில் சாந்தி தியேட்டரிலும் பாவமன்னிப்பு வெளிவந்தது. சாந்தி தியேட்டர் பெரியது மட்டும் இல்லாமல் சென்னயில் அப்போ ஒரே ஏர் கண்டிசன் தியேட்டர். எனவே, மற்ற தியேட்டர்களை விட டிக்கட் பணம் அதிகம். 10 லட்சம் தாண்டி வசூல் பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.
நம்ப தலைவர் ஒரு ஏர் கண்டிசன் தியேட்டர் கட்டியிருந்தால் எல்லா படங்களும் வசூலை குவித்து இருக்கும்.
நாம்ப எப்பவும் புரட்சித் தலைவர் பாதையில் உண்மையின் பக்கம்தான் இருப்போம்.
இன்று முதல் (18/10/19)* திண்டுக்கல் என்.வி.ஜி.பி.அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
தகவல் உதவி :மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*
இன்று முதல் (18/10/19) விருதுநகர் அல்லம்பட்டி ஸ்ரீராமில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4காட்சிகளில் திரைக்கு வந்துள்ளது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார்.*
தீபாவளி வெளியீடாக மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் தலைவர் /புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நடித்து அசத்தலாக இயக்கிய "நாடோடி மன்னன் " திரைக்கு வந்து வசூல் சாதனை புரிய உள்ளது .
கோவையில் தீபாவளி வெளியீடாக 2 படங்கள் வெளியாகின்றன .-----------------------------------------------------------------------------------------------------
சண்முகாவில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அகிலம் போற்றும் "ஆயிரத்தில் ஒருவன் "டிஜிட்டலில் தினசரி 4 காட்சிகளில் வெளியாகிறது .
டிலைட்டில்* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படமாகிய டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி* 2 காட்சிகளில் வெளியாகிறது .
தகவல் உதவி : கோவை நண்பர் திரு. கமலக்கண்ணன் .
மாலை மலர் -16/10/19
அ.இ .அ .தி .மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா - தலைமை கழகத்தில் கோலாகல ஏற்பாடு*
--------------------------------------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருஉருவ சிலைகளுக்கு 17ந்தேதி அ.தி.மு.கே. ஒருங்கிணைப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர் .
கழக கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .
தலைமை கழக அறிவிப்பு .
மக்கள் குரல் -16/10/19
அண்ணா தி.மு.க. 48ம் ஆண்டு துவக்க விழா .
எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு 17ந்தேதி எடப்பாடி - ஓ.பி.எஸ். மலர்மாலை அணிவித்து மரியாதை .
கழக கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார்கள் .
தமிழகம் முழுவதும் இரு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து*கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டுகோள் .
மாலை சுடர் -17/10/19
அ.தி.மு.க.வின் 48ம் ஆண்டு துவக்க விழா இன்று கொட்டும் மழையில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது . முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., தொடர்ந்து வழிநடத்திய ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. 48ம் ஆண்டு விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது .இதையொட்டி தலைமை அலுவலகம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது .முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தலைவர்களின் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்தபின் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் ,மேள தாளங்கள் முழங்க தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள் .
இடைத்தேர்தல் பிரச்சாரம் காரணமாகவும், மழை காரணமாகவும், மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் ,கட்சி பிரமுகர்கள் குறைந்த அளவிலும் ,தொண்டர்கள் சுமார் 500 பேர்களும் கலந்து கொண்டனர் .
மக்கள் குரல் -17/10/19
அண்ணா தி.மு.க. 48ம்* ஆண்டு* துவக்க விழா .
---------------------------------------------------------------------------
கொட்டும் மழையில்*எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மலர்மாலை அணிவிப்பு*
எடப்பாடி, ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றி* தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள் .
உயர்நீதி மன்ற தடை உத்தரவு காரணமாக பேனர்கள் வைக்கப்படவில்லை .சுவரொட்டிகள் மட்டும் ஏராளமான அளவில் ஒட்டப்பட்டிருந்தன .
சிலர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் .கழக தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க , ஆனந்த கூத்தாடி கொண்டாடினார்கள் . கழக அலுவலகம் முழுவதும் கொடிகள் , தோரணங்களால் ,மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது .
தினகரன் - வெள்ளி மலர் -11/10/18
-----------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர் .
----------------------------------------------------------------------
1931ல் கும்பகோணம் பாய்ஸ் நாடகக் கம்பனியில் 11 வயது குருமூர்த்தி* 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார் .
அந்த ராமச்சந்திரன்தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழக திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .
நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது பிறந்த நாள் ) சென்னையில் கொண்டாடினார் .**
மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த கீழ்வேளூர் சி. குருமூர்த்தி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே* ஓவிய வகுப்பிலும் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார் .*அப்போதே நாடகங்களிலும் நடிக்கத்தொடங்கினார் .* நாடக ஈடுபாட்டால் பள்ளிப் படிப்பு பாதியிலேயே நின்று போனது .
எம்.ஜி.ஆரோடு இணைந்து "பவளக்கொடி " " கோவலன் " ஆகிய நாடகங்களில்*நடித்திருக்கிறார் .**
தமிழ் இந்து -11/10/18
அவர் இரு நவ இசை ராஜ்ஜியம் - டெஸ்லா கணேஷ்*
--------------------------------------------------------------------------------
படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டில் படமாக்கப்பட்ட தொடக்க கால வண்ணப்படங்களில் ஒன்று என்ற பெருமை "சிவந்த மண் " படத்திற்கு உண்டு .அந்த பெருமையை முந்திக் காட்ட எம்.ஜி.ஆர். " உலகம் சுற்றும் வாலிபன் " படத்தை தொடங்கினார் .* "அன்று சிந்திய ரத்தம் "என்கிற பெயரில் தனக்காக தயாரான திரைக்கதை, தவிர்க்க இயலாத காரணங்களால் "சிவந்த மண்ணாக " மாறிவிட்டது அதில் ஏற்பட்ட ஏமாற்றத்தை "உலகம் சுற்றும் வாலிபனால் " வென்றுவிட தீர்மானித்தார் எம்.ஜி.ஆர்.
கமர்ஷியல் பிரம்மாண்டங்கள் நிறைந்த படம் . அதற்கு உலக இசை வடிவங்களை துல்லியமாக உள்வாங்கி பிரதிபலிக்கும் வகையிலான இசையை மெல்லிசை மன்னரால் மட்டுமே தர முடியும் என நம்பினார் .
1970ல்* ஜப்பானில் எக்ஸ்போ 70 கண்காட்சி நடந்தபோது, அதன் பின்னணியில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.* மெல்லிசை மன்னருக்கு மிக குறைந்த கால அவகாசமே கொடுத்தார் .* சிவந்த மண்ணில் ஐரோப்பிய, அரேபிய இசையை சிறப்பாக கொடுத்த மெல்லிசை மன்னருக்கு "உலகம் சுற்றும் வாலிபனின் " ஜப்பான், தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய இசை கலந்த பாடல்களையும், பின்னணி இசையையும் தரவேண்டிய சவால் காத்திருந்தது .*
குறைந்த காலத்தில் மெல்லிசை மன்னர் போட்ட நூற்றுக்கணக்கான சிறந்த மெட்டுக்களை எம்.ஜி.ஆர். நிராகரித்து இன்றைய டிஜிட்டல் காலத்திலும் , உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வெற்றி பாடல்களை தேர்ந்தெடுத்தார் .
எம்.எஸ். வி. என்ற மகா இசை கலைஞரின் எல்லையற்ற திறமைக்கு இந்த சான்று ஒன்றே போதும் .
திரும்பக் கொடுத்த எம்.எஸ்.வி
---------------------------------------------------
உலகம் சுற்றும் வாலிபனுக்காக எம்.ஜி.ஆர். கொடுத்த பிரபலமான பன்னாட்டு இசை ரெக்கார்டுகளை , அவரிடமே திருப்பி கொடுத்த எம்.எஸ்.வி. தனது சொந்த இசை அறிவில் இருந்து , அருவியாக பொழியும் இசையை தந்தார் .ஜப்பானிய இசையின் அடையாளமான "கோட்டொஹார்ப் ", ஷாக்குஹச்சி* ப்ளூட் , "டாய்க்கோ ட்ரம்ஸ் ", ஷாமி சென்பாஞ்சோ "* ஆகிய இசைக்கருவிகளையும்*உள்ளடக்கி பத்துக்கும், மேற்பட்ட பிரம்மாண்ட பாடல்களோடு, புதுமையான தீம் இசை கோவைகளையும் அமைத்தார் .* ஜேசுதாசும், எஸ்.பி.பி.யும்* பாடல்களில் குழைய எம்.ஜி.ஆர். இன்னும் இளமையானார் .
வெளிநாட்டுக்கு காட்சிகளுக்கு இணையாக சென்னை ஸ்டுடியோக்களில்*கலை இயக்குனர் அங்கமுத்துவின் திறமையால் போடப்பட்ட பிரம்மாண்ட "புத்தர் கோயில் " "ஸ்கெட்டிங் அரங்கம் " போன்ற அரங்கங்களில் படமாக்கப்பட்ட காட்சிகளில் படத்தொகுப்பில் எந்த வேறுபாடும் தெரியாத வகையில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையும் பின்னி பெடலெடுத்து* திறமையாக பணியாற்றியது*
1973 திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வெளியிடப்பட்டு*எம்.ஜி.ஆரின் கட்சி தொண்டர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்து சென்றது .உலகம் சுற்றும் வாலிபனின் மகத்தான கமர்சியல் சாதனைகளில் மெல்லிசை மன்னரின் பங்கு அளவிடற்கரியது .**
முதல் தேர்தல் வெற்றி தந்த ஊக்கத்தில் முதலமைச்சர் நாற்காலியை நோக்கி*எம்.ஜி.ஆர். பயணிக்க தொடங்கினார் என்றே கூறலாம் .
https://youtu.be/tqRpCqkVRZE............. Thanks.........
https://kannadasan.wordpress.com/tag...dasan-and-mgr/....... Thanks...
18-10-1971... 18-10-2019...இன்று திரையுலக வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் அவர்களின் சூப்பர் காவியம் " நீரும் நெருப்பும்", 48 வருடங்கள் ஆகி, 49ம் ஆண்டு தொடக்கம்... மீண்டும், மீண்டும் திரையிடப்பட்டு இன்றும் வெற்றி கொடியை பறக்கவிடும் நற் காவியம்...
https://i.postimg.cc/W1h1yChR/IMG-3991.jpg
நன்றி - திரு நெல்லை மணி
தோழர் மஸ்தான் சாஹிப் , பா.ம.. சென்னையில் 10 லட்சம் வசூல் தாண்டவில்லை அதற்கான ஆதார DCR., பார்த்திருந்தால் நம்புவதற்கு நமக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை.. அப்போது அந்த படமும் ஓரளவுக்கு ஒட்டப்பட புத்தா பிக்சர்ஸ்ம், அப்ப ரொம்ப நட்பிலிருந்த சரவணா பிலிம்சாரும், avm நிறுவனத்தினரும் தான். காரணம் அவர்கள் தாம்(avm) விளம்பர பலூன், மற்றும் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் எது சிறந்த பாடல், அதற்கான காரணம் ஆகியனவற்றை கடிதமெழுதி தெரிவிபவர்கள் படத்தை பார்த்த டிக்கெட்டுடன் கலந்து கொள்ள சொல்லி அப்படி நடந்தது. அப்புறம் அதேபோல சில படங்களை( ந. ராத்திரி), உட்பட அதற்கப்புறம் தி. சூலம் 200 வது பட விழா சைடு ரீல் கலரில் படத்தின் இடைவேளையில் காண்பிக்கப்படும் என்ற பல விளம்பர உத்திகள் செய்யப்பட்டதை நாமெல்லாம் அறிந்தது பார்த்தது தானே.. ஆதலின் இது போன்ற இட்டுகட்டிய மிகவும் பொய்யான தகவல்களை பாவம் அவர்கள் முகநூல் வாட்சப்ப் முதலிய சமூக வலைத்தளங்களில் வஞ்சனையில்லாமல் புளுகுகின்றனர்.. எதுவும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் என்றால் ஒத்துக்கொள்ளலாம்... Thanks..........
நமது மக்கள் திலகம் திரியில் அட்டகாசமான 27001 பதிவுகள் பதிந்திருக்கும் திரு லோகநாதன் அவர்களை நம் உறுப்பினர்கள் அனைவரின் சார்பாக நல்வாழ்த்துக்கள் தெரிவித்து உவகையுடன் பாராட்டுவோம்...
என்ன தான் தங்கத்திலே ஆயிரம் கலப்படம் இருந்தாலும் அதற்குரிய மதிப்பு ஒரு நாளும் குறைந்ததில்லை.......
அதைப் போல நம்ம
புரட்சித் தலைவர்
மீது ஆயிரந்தான் குறை சொன்னாலும் அது மக்களிடம் எடுபட்டதில்லை...
ஏனென்றால்
புரட்சித் தலைவர்
ஒப்பீடில்லா உவமானம் !.......
உலகத்தில் எந்த நாட்டிலும்
எந்த ஒரு நடிகருக்கும்...
எந்த ஒரு தலைவருக்கும்...
இத்தனை காலங்கள் கடந்தும்... இப்படி ஒரு மதிப்பு மரியாதை இருந்ததில்லை.......... Thanks..
உலகம் சுற்றும் வாலிபன் - பெங்களூர் நகர விநியோகஸ்தர்
கே .சி .என் மூவிஸ் அதிபர் நாகராஜ் ஒரு முறை பேட்டியில்
கூறியது .
1973 ல் உலகம் சுற்றும் வாலிபன் பெங்களூர் நகரில் 5 அரங்கிலும் மைசூர் நகரில் இரண்டு அரங்கிலும் பின்னர் படம் பெங்களூரில்
3 அரங்கில் 105 நாட்கள் ஓடிய பின் கர்நாடக மாநிலத்தில் உள்ள
25 நகரங்களில் ஓராண்டு காலம் சுழற்சி முறையில் தொடர்ந்து ஓடி வசூலில் மகத்தான சாதனை புரிந்த ஒரே படம் ..
பெங்களூர் நகரில் முதல் வெளியீட்டில் 10 லட்சம் வசூல் செய்த முதல் தென்னிந்தியபடம் . மாநில மொழியான கன்னட படம் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை .மக்கள் திலகம் இங்கும்
வசூல் சக்கரவர்த்தி என்று நிருபித்து காட்டினார் ............... Thanks.........
என் தலைவன் ஒரு வாத்தியார்...
புரட்சி தலைவரின் கண்ணீர் வரவழைக்கும் பேட்டி .......
அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?
(பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள்.
அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.
வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.
எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.
சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்)
குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க.
பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.
ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.
வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்.
ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம்.
நல்ல பசி. இலை போட்டாச்சு.காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப்போயிருக்காங்க.
சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்
நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.
வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு
கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.
கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?
ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது.
அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,
கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?
எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன்,
எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன்.
இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது
எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க
ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம்.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால்
விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம்............. Thanks.........
இந்த வாரம் சென்னை அகஸ்தியா 70 mm அரங்கில் திரையிடுவதாக இருந்த புரட்சி தலைவர் "நாளை நமதே" அடுத்த வாரங்களில் வரவிருப்பதாக நண்பர்கள் தகவல்... நன்றி........
கர்நாடகாவில் ஒரு மலை கிராமத்தில் இருந்து வந்த நரிக்குறவர்கள் குழுவாக எம்ஜிஆரை காண வந்திருந்தனர்.
அதில் வயதில் மூத்த நரிக்குறவர் ஒருவர், வெற்றிலை போட்ட வாயுடன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து முத்தமிட் டார். அவரது உதடுகளின் அடையாளம் எம்.ஜி.ஆரின் கன்னத்தில் பதிந்து விட் டது. இதை எதிர்பாராத எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் வேகமாகப் பாய்ந்து அவரை விலக்க முற்பட்டனர். அவர் களைத் தடுத்த எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘விடுங்கப்பா, அவங்க என்னை குடும்பத்தில் ஒருத்தனா நினைக்கறதால அன்பை இப்படிக் காட்டுறாங்க. இதில் தவறு ஒன்றுமில்லை’’ என்று சாதாரணமாகக் கூறினார்.
இதன் தொடர்ச்சியாக
முதல் நாள் எம்.ஜி.ஆரை பார்த்துவிட்டுச் சென்ற நரிக்குறவ சமூக மக்கள் மறுநாளும் கூட்டமாக வந்துவிட்டனர். கிளம்பிக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அவர்களிடம் விசாரித்தார். முதல் நாள் அவரை முத்தமிட்ட அந்த நரிக் குறவர், ‘‘உங்க தயவால என் ஆசை நிறை வேறிடுச்சு சாமி’’ என்றார்.
‘‘என்னது?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதற்கு,
‘‘நம்பள மாதிரி ஆளுங்கள நீங்க பாக்க மாட்டீங்கன்னு சிலர் சொன்னாங்க. அவர்களிடம் உங்களை முத்தமிட்டு காட்டுறேன்னு சபதம் செய்தேன். ஜெயிச்சுட்டேன். என்னை மன்னிச்சுடுங்க சாமி’’ என்று கூறினார்.
அதைக் கேட்டு சிரித்த எம்.ஜி.ஆர்., ‘‘பரவாயில்லை. இனிமேல் இதுபோன்று வேறு யாரையும் முத்தமிடுவதாக சபதம் செய்யாதே. வம்பா போயிடும்’’ என்று சொல்லி, பணியாளர்களை அழைத்து, வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு போடச் சொல்லி
அவர்களுடன் சாப்பிட்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இன்றைக்கு இருக்கும் மக்களால் பிரபலமானவர்களில் யாருக்கு இந்த குணமுண்டு.
தொண்டர்களையும் ரசிகர்களையும் தொடக் கூட அனுமதிக்காத முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படுபவர்களே அதிகம்.
#படித்தேன் பகிர்ந்தேன்............. Thanks.........
.