-
பொதுவாக புரட்சித்தலைவர் நடித்த எந்தப் படமும் தோல்வி அடைந்தது கிடையாது ... தன்னை நம்பியவர்களை புரட்சித்தலைவர் ஒருபோதும் கைவிட்டது கிடையாது புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் திடீரென்று வித்யா கர்வம் தலைக்கேறி நான் பாடுவதால் தான் எம்ஜிஆர் படமே ஓடுகிறது என்றெல்லாம் பொதுமேடைகளில் கூறியிருந்தார் அதனாலேயே அவருக்கு வாய்ப்புகள் பறிபோனது பிற்பாடு தன் தவறை உணர்ந்து புரட்சித் தலைவருடன் சமாதானம் ஆனார் புரட்சித் தலைவரும் பெருந்தன்மையுடன் மன்னித்து அவருக்கு மீண்டும் தன் படத்தில் பாடுவதற்கு வாய்ப்புகள் கொடுத்தருளினார் பொதுவாக எம்ஜிஆர் அவர்கள் மக்கள் திலகம் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர் அவரை நம்பி படம் எடுத்த யாரும் வீன் போனது கிடையாது அவரை நன்றாக புரிந்து கொண்டு படம் எடுக்கும் பொழுது காட்சிகளின் பின்னணி மற்றும் டைரக்ஷனில் அவர் கொஞ்சம் குறுக்கீடு செய்வார் டைரக்டர் சொல்வதை கூட மீறி இந்த காட்சியை இவ்வாறு நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார் அவர் கூறியது நூற்றுக்கு நூறு சரியாக பலிக்கும் அவர் சொன்ன மாதிரி காட்சியை மாற்றி அமைத்தால் அந்த படம் நூறு நாட்கள் கண்டிப்பாக ஓடியே தீரும் புரட்சித்தலைவர் சாதாரண நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த கலைஞானி மிகச் சிறந்த சினிமா டைரக்டர் ஆவார் தலைவரை நன்றாக புரிந்து கொண்டவர் சினிமா டைரக்டர் பா நீலகண்டன் ஆவார் டைரக்ஷன் பண்ணும்போதே எம்ஜிஆரிடம் கருத்து கேட்பார் பெரும்பாலும் புரட்சித் தலைவரின் ஆலோசனைகளின் படியே டைரக்ட் பண்ணுவார்.........
-
கலை எம்ஜிஆரின் பிறப்போடும் வறுமையை விரட்டவும் தேவை ஆனது
ஆனால்
நாட்டு பற்று எம்ஜிஆரின் மனதின் அடிதட்டானது சினிமா வாய்ப்பு கிடைப்பது சிரமம் ஆனபோது இந்திய ராணுவத்தில் சேர துணிந்தார் எம்ஜிஆர் வேறு ஏதாவது தொழில் செய்ய விரும்பவில்ல எம்ஜிஆர்
சினிமாவில் பிரபலமானபோதும் நடிப்பதே தன் உண்மை வாழ்வாக்கினார்
திரையில் தீயோரை அடக்கினார் எம்ஜிஆர்
நிஜத்திலும் தீயோரை அடக்கினார்
திரையில் வள்ளலாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் வள்ளலாக வாழ்ந்தார் எம்ஜிஆர்
திரையில் எதிலும் வெற்றி காணும் நாயகனாக நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் எங்கும் எதிலும் வெற்றி தலைவர் ஆனார் எம்ஜிஆர்
திரையில் எம்ஜிஆர் படம் காண கூட்டமோ கூட்டம்
நிஜத்தில் எம்ஜிஆரை காண நாள் கணக்காக தவம் கிடந்தது மக்கள் கூட்டம்
திரையில தொழில்் அனைத்தையும் தொழிலாழர்களுக்கே கொடுப்பதாக இதயக்கனி படத்தில் நடித்தார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் சொந்த சத்தியா ஸ்டுடியோவை தொழிலாளர்களே முதல்லாளி ஆக்கினார் எம்ஜிஆர்
திரையில் கடைசியில் அனைத்தையும் நல்லதாக முடித்து எல்லோரையும் வாழவைப்பார் எம்ஜிஆர்
நிஜத்தில் தன் உடைமைகளை அனைத்தையும் நாட்டுக்கே எழுதிவைத்து கடவுள் ஆனார் தமிழர்களுக்கு
சினிமா எம்ஜிஆர்
நிஜ எம்ஜிஆர் இரணடையும் ஒன்றாக கொண்டு அன்பு வீரம் கொடை திறமை மனிதநேயத்தோடு வாழ்ந்ததாலே மக்கள் எம்ஜிஆரை மட்டும் இதயக்கனி தலைவராக கொணடனர்
ஒரு சூரியன்
ஒரு சந்திரன்
ஒரு எம்ஜிஆர்
வளர்க...வாழ்க ...எம்.ஜி.ஆர் .,புகழ்.........
-
#மக்கள் திலகத்தின் அர்ப்ப*ணிப்பு..
மக்கள் திலகம் முத*ல்வராக அரியணையில் அமரும் வரை அவர்தான் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும்; அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும்; நம்பர் 1 ஹீரோவாகவும் இருந்தார். நாடகத்தில் நடித்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து, சாதாரண நடிகராக அறிமுகமாகி, துணை பாத்திரங்களில் நடித்து, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து நம்பர் 1 இடத்தை அவர் பிடித்தது ஏதோ குருட்டு அதிர்ஷ்டத்தால் அல்ல. அதற்கு பின்னால் இருந்தது அவருடைய ஈடுபாடு மிகுந்த திட்டமிட்ட கடும் உழைப்பு.
எம்.ஜி.ஆரின் 100-வது படம் ஜெமினியின் ‘ஒளிவிளக்கு’. எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். எம்.ஜி.ஆரின் முதல் படமான ‘சதிலீலாவதி' கதையை எழுதியவர் வாசன். ஜெமினி பேனரில் அவர் தயாரித்த படமே எம்.ஜி.ஆரின் 100வது படமாகவும் அமைந்தது சிறப்பு. இந்தியில் நடிகர் தர்மேந்திரா நடித்த ‘பூல் அவுர் பத்தர்’ என்ற படமே தமிழில் ‘ஒளிவிளக்கு’ ஆக மாறியது.
படத்தில் ஒரு காட்சியில் தீ பிடித்து எரியும் வீட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கும் குழந்தையை எம்.ஜி.ஆர். காப்பாற்றுவார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடும் நிலை யில், அவரை காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி சவுகார் ஜானகி பாடும்
‘ஆண்டவனே உன் பாதங் களை நான் கண்ணீரில் நீராட்டினேன்...’
பாடல் 1984-ல் எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
‘ஒளிவிளக்கு' படத்தில் இன்னொரு விசேஷம். எம்.ஜி.ஆர். மது குடிப்பது போன்ற காட்சி அமைப்பு. படங்களில் கூட சிகரெட், மதுவை தொடாத எம்.ஜி.ஆர். குடியின் தீமையை உணர்த்துவதற் காக, தானே குடிப்பது போல நடித்த ஒரே படம். குடியின் தீமையை உணர்த்தும் வகையில்
‘தைரிய மாக சொல் நீ மனிதன்தானா? நீ தான் ஒரு மிருகம். இந்த மதுவில் விழும் நேரம்...’
பாடலில் எம்.ஜி.ஆரின் மனசாட்சி அவர் வடிவில் மேலும் 4 பேராக; மொத்தம் 5 எம்.ஜி.ஆர்கள் பல வண்ண உடைகளில் திரையில் தோன்றும் காட்சியில் தியேட்டர் இரண்டுபடும். ஹிந்தி ப*ட*த்தில் த*ர்மேந்திரா குடிப்ப*வ*ராக*வே இருந்த*தால் இந்த* அறிவுரை பாட*ல்காட்சி இல்லை.. மேலும் புதுசா க*ட்டிக்கிட்ட*..பாட*லும் அவை தொட*ர்பான
காட்சிக*ளும் இல்லை..எம்.ஜி.ஆரின் ஆலோச*னைப்ப*டி இவை சேர்க்க*ப்ப*ட்ட*து..
இப்போது போல எல்லாம் அப்போது சினிமாவில் தொழில்நுட்பம் முன்னேறவில்லை. ‘மாஸ்க்' முறையில் ஒவ்வொரு எம்.ஜி.ஆராக இந்தக் காட்சியை எடுத்திருப்பார்கள். காட்சி சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, காலையில் இருந்து இரவு முதல் பல நாட்கள் இந்தப் பாடல் காட்சிக்காக எம்.ஜி.ஆர். மெனக்கெட்டார்.
பாடல் காட்சி முழுவதும் படமாக்கப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவிலேயே ரஷ் போட்டு பார்க்க வேண்டும். படத்தின் தயாரிப்பு வேலை களை எஸ்.எஸ்.வாசனின் மகனும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியராக இருந்தவரும் ஊழியர்களால் மரியாதையாக ‘எம்.டி’ என்று அழைக்கப்பட்டவரு மான எஸ்.பாலசுப்ரமணியன் கவனித்து வந்தார். பின்னர், எம்.ஜி.ஆர். நடித்த ‘சிரித்து வாழ வேண்டும்' படத்தையும் இவர்தான் இயக்கினார்.
பாடல் காட்சிக்காக காலையில் இருந்து இரவு வெகு நேரமாகியும் நடித்துக் கொடுத்த எம்.ஜி.ஆர். களைப்பு காரணமாக, பாடல் காட்சியின் ரஷ் பார்க்காமலேயே நள்ளிரவில் வீட்டுக்குப் புறப்பட்டார். ‘‘ரஷ் பார்த்துவிட்டு எப்படி வந்திருக்கிறது என்று எனக்கு போன் பண்ணி சொல்லுங்கள்’’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்.
சிறிய அரங்கில் ரஷ் பார்த்தபோது ‘தைரியமாக சொல் நீ... ’
பாடல் காட்சி சிறப்பாக வந்திருந்தது. உடனே, ‘‘எம்.ஜி.ஆருக்கு போன் செய்து நல்லா வந்திருக்குன்னு சொல்லிடுப்பா..’’ என்று உதவியாளரிடம் கூறினார் பாலசுப்ரமணியன். அப்போது, பின்னாலிருந்து அவரது தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தபோது புன்னகையுடன் நின்றிருந்தார் எம்.ஜி.ஆர்.
விஷயம் என்னவென்றால், களைப்பால் வீட்டுக்குக் கிளம்பிய எம்.ஜி.ஆருக்கும் பாடல் காட்சி எப்படி வந்திருக்கிறது என்று பார்க்க ஆசை. அதனால், களைப்பை உதறிவிட்டு ரஷ் திரையிடும் அரங்குக்குள் வந்து, படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் அமைதியாக பின்னால் அமர்ந்திருக்கிறார். தொழிலில் அவ்வளவு ஆர்வம். அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு!
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் முதன்முதலில் பகுதி கலரில் தயாரிக்கப்பட்ட படம் ‘நாடோடி மன்னன்.’ சரவணா ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்த முதல் வண்ணப்படம் ‘படகோட்டி.’ விஜயா கம்பைன்ஸ் தயாரித்த தமிழின் முதல் வண்ணப்படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை.’ ஏவி.எம் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘அன்பே வா’ படம்தான் அந்நிறுவனத்தின் முதல் வண்ணப்படம். ஜெமினி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் வண்ணப்படம் ‘ஒளிவிளக்கு’. சத்யா மூவிஸ் பேனரில் தயாரான முதல் வண்ணப்படம் ‘ரிக் ஷாக்காரன்’. தேவர் ஃபிலிம்ஸ் முதல் வண்ணப்படம் ‘நல்ல நேரம்’. இந்த எல்லா படங்களிலும் கதாநாயகன் வண்ணமிகு நாயகன் மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர்...........
-
*காண கிடைக்காதவை:*
*01 / 11 / 1988* ஆம் ஆண்டு வெளிவந்த *சினிமா எக்ஸ்பிரஸ்* இதழில்....
*ஆர். எம். வீரப்பன்* அவர்களை நடிகர் *விஜயகாந்த்* சந்தித்து கேட்ட கேள்விகளின் தொகுப்புகள் மட்டும் :
1 - எம்ஜிஆர் நாடக மன்றம் தோன்றியது எப்போது ?
2 - முதன் முதலில் *திரு. எம்ஜிஆர்* அவர்களை எப்போது சந்தித்தீர்கள் ?
3 - *திரு. எம்ஜிஆர்* அவர்களை நீங்கள் சந்தித்த போது , *திரு. எம்ஜிஆர்* அவர்கள் *திருமதி. ஜானகி* அம்மையார் அவர்களை திருமணம் புரிந்திருந்தாரா ?
4 - பட உலகில் *திரு. எம்ஜிஆர்* அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன ?
5 - *சத்யா மூவிஸ்* நிறுவனத்திற்கும் , *திரு. எம்ஜிஆர்* அவர்களுக்கும் என்ன தொடர்பு ? , அந்த நிறுவனத்தில் அவரது பங்கு என்ன ?
6 - *சத்யா மூவிஸ்* வெள்ளிவிழா கண்ட நிறுவனம்... ஆனால் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் ,
*தெய்வத்தாய்*
*நான் ஆணையிட்டால்*
*காவல்காரன்*
*கண்ணன் என் காதலன்*
*ரிக்ஷாக்காரன்*
*இதயக்கனி*
என 6 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
நீங்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தும்... ஏன் *சத்யா மூவிஸ்* தயாரிப்பில் *திரு. எம்ஜிஆர்* அவர்கள் அதிகமான படங்களில் நடிக்கவில்லை ?
7 - *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மிக நன்றாக நடிக்கக் கூடியவர் என்பதற்கு உதாரணமாக , *என் தங்கை* , *நாம்* , *நான் ஏன் பிறந்தேன்* போன்ற படங்களை கூறலாம்.
தொடர்ந்து அப்படிப்பட்ட நடிப்பாற்றலை வெளிப்படுத்தக் கூடிய பாத்திரங்களை ஏன் ஏற்று நடிக்கவில்லை ?
8 - *சத்யா மூவிஸ்* படங்களில்... *கண்ணன் என் காதலன்*, *நான் ஆணையிட்டால்* இரண்டு படங்களும் மற்ற படங்கள் வெற்றி பெற்ற அளவுக்கு வெற்றி பெற வில்லை என்பது உண்மையா ?
9 - அண்ணே !
பொதுவாக *எம்ஜிஆர்* அவர்களது படங்களில் காதல் நெருக்க காட்சிகள் இராது ! , ஆனால் வீரப்பன் அவர்களின் படங்களில் மட்டும் அது இருக்கும் என்று கூறியிருந்தார் ! *சத்யா மூவிஸ்* படங்களில் காதல் நெருக்கக் காட்சிகள் அதிகமாக இடம்பெறக் காரணம் என்ன ?
10 - *திரு. எம்ஜிஆர்* அவர்களின் படங்கள் கொடுத்த பெரிய வெற்றிகளை போல் , *சத்யா மூவிஸ்* அன்மையில் தயாரித்த மற்ற படங்கள் அந்த அளவுக்கு அளிக்கவில்லை என்று நினைக்கிறேன் , அதற்கு காரணம் என்ன ?
11 - *புரட்சித்தலைவர் எம்ஜிஆர்* அவர்களை வைத்து படமெடுத்த நீங்கள் இதுவரை *சிவாஜி* அவர்களை வைத்து படம் எடுக்க வில்லை ! ஆனால் ? *திரு. எம்ஜிஆர்* அவர்கள் மறைந்த பிறகு *சத்யா மூவிஸ் தயாரிப்பில் புதிய வானம்* படத்தில் சிவாஜி நடிக்கிறார்... இதைப் பற்றி சிலர் , *ஆர். எம். வீ.* அவர்கள் சிவாஜியை வைத்து படம் எடுக்கலாமா ? என்று கேட்டால் தங்களது பதில் என்ன ?
*இவ்வாறாக பல கேள்விகளை திரு. ஆர். எம். வீரப்பன் அவர்களிடம் திரு. விஜயகாந்த் அவர்கள் கேட்டார்*
நன்றி :
அன்பன் ,
*எம்ஜிஆரின் காலடி நிழல்*
*உழைக்கும் குரல் தளம்*
Special thanks to ,
*Makkal Thilagam MGR*.........
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் 01/08/20/அன்று திரு.துரை பாரதி*அளித்த*தகவல்கள்*
-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எனும் மாபெரும்* சரித்திரத்தில் பல்வேறு பக்கங்களை நாம் பார்த்து வருகிறோம்* அந்த பக்கங்களை புரட்ட புரட்ட அதிசயங்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறது .* அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையில் கிடைக்கும் புதையல் போல, ஜீபூம்பா விளக்கை தேய்த்தால் நடக்கும் அதிசயங்கள் போல எம்.ஜி.ஆர். என்கிற ரகசிய* புதையல், அற்புத புதையல் மானுட உலகம் எப்படி வாழ வேண்டும் ,எப்படி வாழ்ந்தால் எப்படி ஜெயிக்கலாம் என்பதற்கு நன்னம்பிக்கை விதை எம்.ஜி.ஆர். அவர் அதிசயிக்கத்தக்க மந்திரங்களோ, மாயமோ செய்யவில்லை .* ஆனாலும் பல கோடி மக்களின் உள்ளங்களை வென்றார். அது எப்படி .அவர் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் ,போட்டியில் வென்றார் .உலகிலேயே ஒரு நடிகர் கட்சியை தொடங்கினார்* என்ற சாதனையை படைத்தார் .குறுகிய காலத்தில் ஆட்சியை பிடித்தார் என்ற வரலாறு படைத்தார் . இப்படி பல்வேறு விஷயங்களில் அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம் .அப்படிப்பட்ட சாதனை நாயகன், நம்மை போலவே ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து , தமிழகத்தில் பெரும்பான்மையான ஜாதி பலமோ, பண பலமோ, பெரிய படிப்பறிவோ ,அதிகார பலமோ இல்லாமல் கோடிக்கணக்கான இதயங்களை ஆட்கொண்டார் என்றால் எப்படி .அப்படியான செய்திகளைத்தான் நாம் பார்த்து வருகிறோம் .அப்படியான வகுப்பறைகளில் பாடங்கள் கற்பது போல அவருடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு நாளும் பாடங்களை கண்டு வியக்கிறோம் .அந்த பாடங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகளாக அமைந்துள்ளது என்பதை சகாப்தம் நிகழ்ச்சியில் பார்க்கிறோம் .
*எம்.ஜி.ஆர். அவர்கள் நாராயணன் என்பவருடன் நட்பு வைத்திருந்தார் .* அவரை நட்புக்கு இலக்கணமாக அண்ணா பத்திரிகையில் பணிபுரிய வைத்தார் .அதில் தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களை எல்லாம் அழைத்து வந்து வேலைக்கு*அமர்த்தினார் .* அவர்களில் சோலை, கார்த்தி ,அண்ணா நாராயணன் போன்றவர்கள் முக்கியமானவர்கள் .அண்ணா நாராயணன் அவர்கள் எம்.ஜி.ஆரிடம் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார் .* அதாவது அண்ணா பத்திரிகையில் சேருவதற்கு முன்பாக ஒருமுறை மாலைமுரசு பத்திரிகை அலுவலகத்தில் சினிமா தொடர்பாளராக இருந்த ஜெயபாண்டியன் என்பவருடன் ஊட்டியில் நடைபெறும் நல்ல நேரம் படப்பிடிப்புக்கு வருமாறு அழைத்தார் .அவர்கள் ரயில் மூலம் கோவைக்கு வந்து , அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலையில் ஊட்டி சென்று சேருகிறார்கள் . எம்.ஜி.ஆர். தேநீர் இடைவேளையில்*இவர்களை சந்தித்து ,பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு தெரியுமா பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் என்று செய்தி வந்துள்ளது உண்மையா என்று .இவர்கள் மாலை பத்திரிகையில் பணியாற்றுகிறவர்கள் .எம்.ஜி.ஆரை பார்க்க வந்த ஆசையில் மாலை செய்திகள் பற்றிக்கூட கேட்டு தெரிந்து கொள்ளாமல் உள்ளார்கள் .எம்.ஜி.ஆர்.கேட்ட இந்த கேள்வி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது . வியந்தும் போனார்கள் . எம்.ஜி.ஆர். தன் தொழில் மீது மிகுந்த அக்கறை கொண்டது போலவே ,உலக நடப்பு, நாட்டின் நடப்புகள் ஆகியவற்றை அன்றாடம் ,அவ்வப்போது அறிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார்* என்பதை அறிந்த அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள் .ஏனென்றால் அந்த காலத்தில் செல்போன் வசதிகள் இல்லாத நேரம் என்பதுதான் .
ஒருநாள் எம்.ஜி.ஆர். நாத்திகம் பத்திரிகையில் பணிபுரிந்த நாராயணனிடம்*இன்றைக்கு மெயில் பத்திரிகை பாத்தீர்களா என்று கேட்டார் .மெயில் பத்திரிகை மாலை தினசரியாக அண்ணா சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தது .மெயில் பத்திரிகை வாங்கி முதல் பக்கத்தில் 8 வது பத்தியில் பாருங்கள் . படித்துவிட்டு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்றார் . அப்போதுதான் தெரிகிறது .மேற்கு வங்காளத்தின் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே ,ஊழல் அமைச்சர்களை தூக்கிலிட வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் .**அப்போது எம்.ஜி.ஆர். தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் கணக்குகளை* ஊழல்களை தட்டி கேட்டு* போராட்டம் நடத்திக்**கொண்டிருந்த நேரம் .நாராயணனிடம் இந்த செய்தியை உங்கள் பத்திரிகையில் முதல் பக்கத்தில் போடுங்கள்* நான் ஒரு பேட்டி அளிக்கிறேன் ,அதை உள்பக்கத்தில் போடுங்கள் என்றார் .பத்திரிகைகளில் எது தலைப்பு செய்தியாக வர வேண்டும் . எப்படி வரவேண்டும் ,எந்த நேரத்தில், எந்த பக்கத்தில் வரவேண்டும் என்கிற நுட்பங்கள் அறிந்தவர் எம்.ஜி.ஆர்.*
பத்திரிகை துறையில் இப்போது போல அட்வான்ஸான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நேரம் ..அந்த நேரத்தில் பிரின்டிங் பிளாக்கை மாற்றி வைத்துவிட்டனர் .எம்.ஜி.ஆர்.வழக்கமாக* எப்போதும் வலதுகையில் கடிகாரம் கட்டுவார் . ஆனால் இதில் இடது கரத்தில் உள்ளது போலுள்ளது .அதை கண்டுபிடித்து பத்திரிகை ஆசியரை தொடர்பு கொண்டு இப்படியெல்லாம் பிரசுரம் செய்யக்கூடாது என்று*கேட்டுக் கொண்டாராம் . இப்படி எந்த விஷயத்திலும் நுட்பத்தை கடைபிடிப்பவராக இருந்துள்ளார் எம்.ஜி.ஆர்.*
ஆரம்ப காலத்தில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி,வெள்ளை பனியன் ஆகியவைதான் அணிந்து வந்தார் .இரண்டுசெட் வைத்திருந்தார் .அவற்றை தினசரி தானே இரவில் துவைத்து ,காயவைத்து* அதிகாலையில் எழுந்ததும்*இஸ்திரி போட்டு அணிவாராம் . குறைந்த அளவில் துணிகள் இருந்ததால் ஆரம்பத்தில் சற்று நீல நிறமாக இருந்தவை ,தொடர்ந்து துவைத்து அணிவதால் லேசான வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆகிவிட்டன .* அந்த காலத்தில் சில ரூட்டுகளில் , ரோடுகளில் டிராம் வண்டிகள் செல்லும் . அந்த டிராம் வண்டி புறப்பட்டதும் ,இந்த கால இளைஞர்களை போல அப்படியே தாவி குதித்து ஏறுவாராம் .* பார்ப்பதற்கு, தோற்றத்தில் பெரிய வசதியான, பணக்கார வீட்டு பிள்ளை போல இருப்பாராம் . தினசரி செலவிற்கு தன் தாயார் கொடுத்த இரண்டணாதான் வைத்திருப்பாராம் . அவருடைய தோற்றத்திற்கும், உடைகளுக்கும் சம்பந்தமே இருக்காதாம் .அப்படி ஒரு ஏழ்மையில் இருந்ததை*பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார் .
ஒரு திருமணத்திற்கு அழைப்பு வருகிறது . எம்.ஜி.ஆர். செல்கிறார் . ஆயிரக்கணக்கில் கூட்டம் சேருகிறது .பட்டு வேட்டி, பட்டு ஜிப்பாவுடன் நடிகர் பி.யு.சின்னப்பா வருகிறார் .அவரை காணவும், அவரது பாடல்களை கேட்கவும் கூட்டம் சேருகிறது .* அவர் பாடல்களை பாடப்பாட கைதட்டி ரசிக்கிறார்கள் .எம்.ஜி.ஆரால் வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிகிறது .அப்போது யோசனை செய்கிறார் . நமக்கும் இதுபோல கூட்டம் சேருமா .நம்மை அங்கீகரிப்பார்களா*என்று . இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் காலம் எப்போது என்று ஏங்கிய காலம் .* ஆக.ஒரே நாளில் எம்.ஜி.ஆர். சிகரத்தை அடைந்து கொடி கட்டி பற க்கவில்லை .கோட்டைக்கு வந்துவிடவில்லை. உயரமான இடத்திற்கு செல்லவில்லை . கிட்டத்தட்ட 14 படங்களில் சிறு வேடங்கள், துணை வேடங்கள்* சொன்னால்கூட தெரியாது. அந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்று*அவ்வளவு சிரமப்பட்ட* காலம் .அன்றைக்கு மிக பிரபலமாக இருந்த நடிகர் டி.ஆர். ராமச்சந்திரன் சபாபதி படத்தில் கதாநாயகனாக நடித்தார் .* அவருக்காக தன் பெயரை எம்.ஜி.ராமச்சந்தர் என்று சுருக்கிக் கொண்டார்* பெயர் குழப்பம் வராமலிருக்க .* பிறகு சில நண்பர்களின் யோசனையின்படி அருமையான பெயரை ஏன் சுருக்கி கொண்டீர்கள் .உங்களுக்கு நல்ல எதிர்காலம்* இருக்கிறது*என்று சொன்னதன்* பிறகு எம்.ஜி..ராமச்சந்திரன் என்று பெயரை மாற்றிக்கொண்டார் . டி.ஆர். ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்தபோது பெயர் குழப்பம் வந்துவிடுமோ என்று கவலைப்பட்ட எம்.ஜி.ஆர். சிகரத்தின் உச்சிக்கு சென்றபிறகு* எம்.ஜி.ஆருக்கு மாமனாராக, சரோஜாதேவியின் தந்தையாக குணச்சித்திர வேடத்தில் அதே டி.ஆர். ராமச்சந்திரன்* அன்பே வா படத்தில் நடித்தார் .** மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும்*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.புத்தம் புதிய புத்தகமே - அரச கட்டளை*
2.ஒன்று எங்கள் ஜாதியே ,ஒன்று எங்கள் நீதியே - பணக்கார குடும்பம்*
3.உன்னை அறிந்தால் -வேட்டைக்காரன்*
4.எம்.ஜி.ஆர். - அசோகன் உரையாடல் - ரிக்ஷாக் காரன்*
5.எம்.ஜி.ஆர். - கெம்பைய்யா உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*
6.எம்.ஜி.ஆர்.-லதா - நாகேஷ் உரையாடல் -உலகம் சுற்றும் வாலிபன்*
7.எம்.ஜி.ஆர். -தேங்காய் ஸ்ரீநிவாசன் - இன்றுபோல் என்றும் வாழ்க .
8.எம்.ஜி.ஆர். -சரோஜாதேவி உரையாடல் - அன்பே வா*
*
0
-
பிரான்சு எம் ஜி ஆர் விழாவுக்கு 2014 இல் பாரிஸ் வந்த அசோகன் மகனும் நடிகருமான வின்சென்ட் அசோகன் அருமையாக தலைவர் புகழ் போற்றி உரையாற்றினார் ! நேற்று இன்று நாளை படம் தங்கள் குடும்பத்துக்கு வெற்றி மட்டுமல்ல வருமானத்தையும் தந்தது என்றும் அசோகனுக்கும் தலைவருக்கு இருந்த நெருக்கமான நட்பையும் விளக்கி பேசினார் ! அந்த படம் எடுக்கும் போது தீயச் சக்திக்கும் - தலைவருக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்படவே அந்த படத்தை முடிக்காமல் அப்படியே வாங்கி அழித்துவிடலாம் என்று அதிக தொகை பேசியுள்ளது கருணா ! ஆனாலும் அசோகன் மறுத்துவிட்டுள்ளார் ! பணப் பற்றாக்குறையில் நின்று இருந்த படத்தை தலைவர் பண உதவியால் முடித்து வெளியிட்டு வெற்றி பெற்ற மனிதராக அசோகன் நிமிர்ந்ததாக நன்றியுடன் வின்சென்ட் கூறினார் ! உண்மையிலேயே உயரத்தில் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்தான் நண்பர் வின்சென்ட் அசோகன் அவர்கள் ! இன்றும் நட்புடன் பேசுவார் ! நல்ல பதிவுக்கு வாழ்த்துகள் ! நன்றி ! .........
-
நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்து லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் "உரிமைக் குரல்" ஆகும்........
பட்டுக்கோட்டை நகரில் அதிக வசூலைக் கொடுத்த திரைக்காவியம் பல ஆனாலும் முதலிடம் பெற்றது உரிமைக்குரல் திரைக்காவியம் ஆகும்.
தஞ்சைத் தரணியில் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் திரைக்காவியம் அதிக வசூலைப் பெற்று முதலிடம் பெற்று 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியாத வெற்றியாகும்.
கும்பகோணம் நகரில் அதிக வசூலை உருவாக்கி வெற்றி கண்ட திரைக்காவியம் உரிமைக்குரல் இக்காவியத்தின் வசூல் 1978 வரை பேசப்பட்டது-
வேலூர் மாநகரில் அதிக வசூலை உருவாக்கி 100 நாட்களைக் கடந்து ஓடி 1978 வரை முதன்மை பெற்ற காவியம் இதயக்கனி திரைப்படம் ஆகும் 4 லட்சத்தை வசூலாக கொடுத்தது.
புதுச்சேரி நகரில் அதிக வசூலைப் பெற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய உலகம் சுற்றும் வாலிபன் காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படத்தாலும் முறியடிக்க முடியவில்லை.
நாகர்கோவில் ராஜேஷ் திரையரங்கில் குறைந்த நாளில்*
83 நாட்களில் உரிமைக்குரல் பெற்ற வசூல் 2 லட்சத்திற்கு மேல் ஆகும். இத்திரைப்படத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை..........
-
மக்கள் திலகத்தின் சாதனைகள் பல...... "ஏ" சென்டர்களில் கிட்டத்தட்ட 40 சென்டர்களில் 38 ஏரியாக்களில் புரட்சித் தலைவர் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன், உரிமைக்குரல், இதயக்கனி, நேற்று இன்று நாளை, பல்லாண்டு வாழ்க, மீனவ நண்பன் திரைப்படங்கள் வரிசையாக சாதனையைப் படைத்துள்ளது. நான்காவது ஐந்தாவது இடத்தில் தான் மற்ற நடிகர்களின் படங்கள் ஆகும்.
கடைசியாக 1977 வரை தமிழகத்தில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்கள் வரிசையில் முதலிடம் காண்பது உலகம் சுற்றும் வாலிபன்.*
2 கோடிக்கு மேல் வசூல்*
அடுத்து உரிமைக்குரல் ஒரு கோடியே 70 லட்சம் வசூல். மூன்றாவது இதயக்கனி திரைப்படம் ஒரு கோடியே 50 லட்சத்தை வசூலாக கொடுத்தது. நான்காவது மீனவ நண்பன் திரைப்படம் ஒரு கோடியே 35 லட்சத்தை வசூலாக கொடுத்தது.*
எல்லா திரைப்படங்களும் ஆறுமாத காலத்திலேயே வசூலை படைத்து உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நடிகர் சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் தங்கப்பதக்கம் மட்டும் சென்னை சாந்தி திரையரங்கிலும், திருச்சியில் பிரபாத் திரையரங்கிலும் அதிக வசூலைப் பெற்றது. வேறு எந்த ஊரிலும் கிடையாது.**
மற்றும் " பி .சி." செண்டர்களில் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்கள் முதன்மை பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபன் திரைக்காவியம் குறைந்த நாளில் மிகப்பெரிய வசூலை அதாவது 23 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்து. அதன் பின்பு இரண்டாம் வெளியீட்டில் 7 லட்ச ரூபாயை வசூல் ஆக கொடுத்து மொத்தம்
30 லட்ச ரூபாய்க்கு மேல் வசூலைக் கொடுத்து திரைப்பட உலகில் மிகப்பெரிய சாதனையை சென்னை நகரில் தக்கவைத்து இக்காவியத்தின் வசூலை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்கப்படவில்லை........(1978, 1979... உட்பட்ட தொடர்ந்து பல வருடங்களுக்கு புரட்சி தலைவர் வகுத்து அளித்த தியேட்டர்கள் புதிய அனுகூலமான சட்டங்கள் கருணையோடு தான் வெளியான படங்கள் சகாயங்கள் பெற்றது அனைவரும் அறிந்ததே).........
-
1977ஆம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட உலகின் சக்கரவர்த்தியாக இருந்து* ..-அரசியல் வானில் சக்கரவர்த்தியாக முதல்வராக வீற்றிருந்த புரட்சித்தலைவர் அவர்கள்...--திரையுலகில் பதித்த முறியடிக்காத சாதனைகளின் வெற்றிகள்.... வரலாறுகள்.
தென்னிந்திய வரலாற்றில் தனி ஒரு அரங்கில் அதிக வசூலை உருவாக்கிக் கொடுத்த திரைக்காவியம்*
உலகம் சுற்றும் வாலிபன்*
திரையரங்கு*
சென்னை தேவி பாரடைஸ்
182 நாட்கள் ஓடி 13 லட்சத்தை வசூலாக கொடுத்தது ஒரு மிகப்பெரிய சாதனையாகும்.
மதுரை மாநகரில் மிகப்பெரிய சரித்திரத்தை வசூலைப் பெற்று தந்த காவியம் உரிமைக்குரல் திரைப்படம் 200 நாட்களில் 7 லட்சத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையாகும்.
கோவை மாநகரில் உரிமைக்குரல் 150 நாட்களில் கீதாலயா அரங்கில் ஏற்படுத்திய சாதனையை 1978 வரை எந்த திரைப்படமும் முறியடிக்க முடியவில்லை.
ஈரோடு மாநகர் சரித்திரத்தில் உரிமைக்குரல் திரைக்காவியம் ராயல் திரையரங்கில் 155 நாட்கள் ஓடி 4 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்து முறியடிக்க முடியாத சாதனையில் முதலிடம்.
நெல்லை மாநகரில் முழுமையாக ஓடி வெள்ளி விழா கொண்டாடி 180 நாட்களை கடந்து மூன்று லட்சத்து 75 ஆயிரத்து வசூலாக கொடுத்த கொடுத்து..... லட்சுமி திரையரங்கில் வெற்றி வாகை சூடிய காவியம் உரிமைக்குரல்..........
-
1977 ஆம் ஆண்டு வெளியான பொன்மனச் செம்மலின் புரட்சி காவியங்கள் இரண்டு*
மீனவ நண்பன் திரைப்படம்*
முதல் வெளியீட்டில் 38 திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சென்னை மதுரை சேலம் நகரங்களில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. முதல் வெளியீட்டில் ஒரு கோடியை கடந்து வெற்றி நடை போட்டது.
இரண்டாவது*
இன்று போல் என்றும் வாழ்க திரைக்காவியம்*
42 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு 26 திரையரங்குகளில் 50 நாட்களை வெற்றிகொண்டு முதல் வெளியீட்டில் மட்டும் 85 லட்சத்தை வசூலாக கொடுத்தது. சென்னையிலும், மதுரையிலும்*
100 நாட்கள் கண்டது. சேலத்தில் இரண்டு திரையரங்குகளிலும் தொடர்ந்து திரையிடப்பட்டு 100 நாட்களை வெற்றி கொண்டது.
நவரத்தினம் திரைக்காவியம் சென்னையில் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டு ஒன்பது லட்ச ரூபாய்க்கு மேல் வசூலை கொடுத்தது*
8 வாரங்களில் இந்த வசூலைக் கொடுத்த வெற்றிக் காவியம் நவரத்தினம். அதேபோல தமிழகத்தில் 44 திரையரங்குகளில் வெளிவந்து முதல் வெளியீட்டில்*
70 லட்சத்தை வசூலாக கொடுத்த காவியம் நவரத்தினம்.*
மதுரை திருச்சி சேலம் கோவை நகரங்களில் அதிகபட்ச வசூலை படைத்த திரை காவியம் ஆகும்-
நம்முடைய தலைவரின் திரை உலக சாதனைகள் இப்படி இருக்க........ அதே ஆண்டில் வெளியான இன்னொரு நடிகரின் திரைப்படங்கள் பல வெளிவந்தது. ஆனாலும் அத்திரைப்படங்கள் சில இடங்களில் மட்டும் நின்றது. சில ஊரில் 100 நாள் ஓட்டப்பட்டது.*
இந் நடிகரின் 5 படங்கள்*
தீபம், அவன் ஒரு சரித்திரம், இளைய தலைமுறை,*
நாம் பிறந்த மண்,*
அண்ணன் ஒரு கோயில்*
5 திரைப்படங்கள் வெளி வந்தது.*.........