http://i67.tinypic.com/281gfoi.jpg
Printable View
உலக சரித்திரத்தில் இந்தியாவை சேர்ந்த 4 தலைவர்கள்*

சுவாமி விவேகானந்தர்*
அண்ணல் காந்தி*
ஆசியஜோதி நேரு*
மக்கள் திலகம் எம்ஜிஆர் ..
இந்த நான்கு தலைவர்களும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள் .
உலக புகழ் பெற்றவர்கள் .
என்னை பெரிதும் கவர்ந்த மக்கள் திலகம் ஒரு படிக்காத மேதை .
ஏழைகளின் கண்ணீர் துடைக்க வந்த வள்ளல் .
சத்துணவு திட்டத்தை விரிவாக்கம் செய்த சரித்திர நாயகன் .
எளிமை - புன்னகை -அமைதி - தன்னடக்கம்*
தர்மம் - என்றே வாழ்ந்து காட்டிய தலைவர் .
தொண்டனை அனுசரித்த தலைவன்*
ரசிகனின் உணர்வுகளை மதித்த நாயகன் .
அதனால்தான் அவர் படங்கள் 1977க்கு பிறகு இன்றும் 36 ஆண்டுகள் பின்னரும் திரையில் பவனி வருவது உலக திரைப்பட வரலாற்றில் அவருக்கு கிடைத்த வெற்றியாகும் .
தமிழர்கள் - சினிமா ரசிகர்கள் - தினமும் உச்சரிக்கும் வார்த்தையில்*
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து*
என்றென்றும் நிச்சயம் இடம் பெறும் .
நன்றி '... Thanks...
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
இன்பங்கள் இங்கே பொங்கி வழியும்
முகங்கள் நான் பார்க்கிறேன்
இதயம் எங்கும் பாலைவனம் போல்
இருக்கும் நிலை பார்க்கிறேன்
அன்பு பணிவு அடக்கம் எங்கே
தேடி பார்த்தேன் தென்படவில்லை
(அன்புக்கு நான் அடிமை )
குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசை தண்ணீர் போலே
இரைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
அன்புக்கு நான் அடிமை
உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று
உறவு கொண்டீர்களே
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
மறந்து போனீர்களே
நாகரீகம் என்பது எல்லாம்
போதையான பாதை அல்ல
அன்புக்கு நான் அடிமை... Thanks...
மக்கள் திலகம் பட்டம் சும்மா கொடுக்க பட்டதல்ல
அதை கொடுத்தது கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன்
மக்களின் அன்பை எம் ஜி ஆர் பெற்றதை குறித்து பிரபல மலையாள பத்திரிகை மலையாழமனோரமா இப்படி கூறியுள்ளது மக்களின் அடிமனதில் எம் ஜி ஆர் அடைந்த இடத்தை காந்திஜீ யால் கூட அடைய முடியவில்லை என்று
இன்று போல் பணம் பிரயாணி கொடுத்து கூடும் கூட்டம் அல்ல
வழியில் மக்கள் அன்பால் குறிப்பிட்ட பொதுமேடைக்கு வர இரண்டு நாட்கள் கூட ஆகியிருக்கும் அதை மக்கள் திருவிழாவாக கொண்டாடி காத்திருப்பார்கள்
நடந்தால் ஊர்வலம்
நின்றால் மாநாடு
பேசினால் அது வேதவாக்கு
எம் ஜி ஆர் ஒரு அதிசய சகதி
எம் ஜிஆரை வென்றவர்கள் அன்றும் இன்றும் இல்லை இனி என்றும் இல்லை
எம் ஜி ஆர் என்றால் வீரம்
எம் ஜி ஆர் என்றால் கருணை
எம் ஜி ஆர் என்றால் வள்ளல்
எம் ஜி ஆர் என்றால் மனிதநேயம் என்றே எதிர் காலம் கூறும்... Thanks...
புரட்சித் தலைவரின் தீவிர
ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பே
பேரறிஞர் அண்ணா அவர்கள்
கூறிய
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும்
நல்ல மனமுன்டு
என்ற இலக்கணத்தின்படி
எங்கள் தலைவரின்
பொன் மனம்
காட்டிய நல்வழியில்
எதிரொலிக்கும்
இந்த பதிவு
நீங்கள் ஆள வேண்டாம் என்று தானே நினைத்தோமே தவிர வாழ வேண்டாம் என்று இல்லை.....
ஒரு இழப்பின் வலி எங்களுக்கு நன்றாகவே தெரியும் மரணத்தை விட கொடுமையானது.....
உங்கள் தொண்டர்கள் போல் மற்றவர்கள் இறப்பில் சந்தோஷம் காண்பவர் நாங்கள் இல்லை......
எங்கள் புரட்சித் தலைவர் & அம்மா ஜெயலலிதாவக்கு ஒரு எதிரி தலைவர் என்றால் நீங்கள் ( கருணாநிதி) ஒருவர் மட்டுமே
நல்லா வாழ்ந்திங்க நல்ல படியாக திரும்பி வாங்க... அதை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம்
இப்படிக்கு
காலத்தை வென்ற காவிய தலைவர்
எம்ஜிஆர் ரசிக ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள்
தமிழ் வெல்லும் 💖... Thanks...
வருகின்ற "தீபாவளி" திருநாள் மறு வெளியீடாக எப்பொழுதும் திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் லட்சிய படைப்பு "நாடோடி மன்னன்" டிஜிட்டல் வருவதாக இனிய தகவல்...
சத்யா மூவிஸ்' தயாரித்த "காவல்காரன்'' படத்தில் எம்.ஜி.ஆரின் தம்பியாக சிவகுமார் நடித்தார்.
1966-ம் ஆண்டின் பிற்பகுதியில் "காவல்காரன்'' படம் தயாராயிற்று. முதன் முதலில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, சிவகுமாரை அவர் கைகுலுக்கி அன்புடன் வரவேற்றார்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். தன் தாயார் சத்யா அம்மையார் பற்றியும், குடும்ப நலனுக்காக அவர் செய்த தியாகங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
சிவகுமாரும் தன் தாயார் பற்றி எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
இதுகுறித்து சிவகுமார் எழுதியிருப்பதாவது:-
"என் தாயாரின் வைராக்கியம், தியாகம், எதற்கும் கலங்காத நெஞ்சுரம், நிலத்தில் கடுமையாகப் பாடுபடும் உடல் நலம் பற்றி எல்லாம் எம்.ஜி.ஆருக்கு தைரியமாக எடுத்துச் சொன்னேன்.
ஒரு சமயம் அம்மாவின் வலது கை மணிக்கட்டுக்கு மேலே இரண்டு எலும்புகள் ஒடிந்து தொங்கும் அளவுக்கு விபத்து ஏற்பட்டு, ஆறு மாத காலம் எனக்குச் சொல்லாமல் வைத்தியம் பார்த்து கையை சரிப்படுத்திக் கொண்டார். என் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, இந்த விபத்து பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. என் நண்பர்களையும் மிரட்டி, எனக்குக் கடிதம் எழுத விடாமல் தடுத்துவிட்டார்.
இதை அறிந்ததும், எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.
இந்த உரையாடல் நடந்து 3 மாதத்தில், எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரைக் காண யாரும் அனுமதிக்கப்படவில்லை. நான் பலமுறை மருத்துவமனைக்குச்சென்று ஆர்.எம்.வீ. அவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர். உடல்நிலைப் பற்றி விசாரித்து விட்டுத் திரும்பிவிட்டேன்.
எம்.ஜி.ஆர். உடல் நிலை சற்று முன்னேறியதும், அவரைப் பார்க்க என்னை உள்ளே அனுப்பி வைத்தார், ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர். படுத்திருந்தார். காவல்காரன் படத்தில், நானும், அவரும் ஒரே ஒருநாள்தான் நடித்திருந்தோம். என் முகம், உடனடியாக அவர் நினைவுக்கு வரவில்லை. கண்களை இடுக்கிக்கொண்டு என்னைப்பார்த்தபடி தீவிரமாக யோசித்தார். நான் சிவகுமார் என்பதைத் தெரிந்து கொண்டார்.
அந்த உடல் நிலையிலும் - கழுத்தில் பெரிய பேண்டேஜ் உறுத்திக் கொண்டிருந்தபோதிலும், முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்துக்கொண்டு `வாங்க' என்றார்.
குண்டடிப்பட்ட சமயம், ஊருக்கு போயிருந்ததாக சொன்னேன்.
அவர் முகத்தில் ஒரு மின்னல் வெட்டு. "ஊருக்கு போனியா... அ...ம்...மா... உன் அம்மா... சவுக்கியமா?'' என்று, விசாரித்தார். என் தாயார் பற்றி நான் கூறிய தகவல்களை மரண வாசல் வரை போய் மீண்டு வந்த அந்த நேரத்திலும் நினைவில் வைத்திருந்து அவர் விசாரித்ததைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுவிட்டேன்.
எம்.ஜி.ஆர். என்னைத் தேற்றி, "எனக்காக அம்மாவை வேண்டிக்கச் சொல். சீக்கிரம் குணமாகிவிடுவேன்'' என்றார்.
எம்.ஜி.ஆர். குணம் அடைந்தபின், "காவல்காரன்'' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி வேகமாக நடந்தது.
7-9-1967-ல் இப்படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது..... Thanks...
தற்போது வெற்றி நடை போடுகிறது கலையுலக காவலன் மக்கள் திலகம் " நினைத்ததை முடிப்பவன்" டிஜிட்டல், கும்பகோணம்- MSM dts தினசரி 4 காட்சிகள்...
RARE STILLS
http://i68.tinypic.com/25r1ild.jpg