https://i.postimg.cc/8PwLKkVK/IMG-4409.jpg
Printable View
அனுதாப செய்தி .
---------------------------
மலேசியா* பொன்மன செம்மல் கலைக்குழுவை சார்ந்த திரு.மேகநாதன்*தலைமையில் இயங்கும் குழுவின் இணைப்பிரியா* கலைஞரும், பல குரல் வித்தகரும் , விழா நிகழ்ச்சிகளை அழகு நடையில் தொகுத்து வழங்கும் திறமையும் கொண்ட திரு. குணா அவர்கள் நேற்று (30/11/19) அதிகாலை 5மணியளவில்* இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியை பெங்களூரு திரு.கா. நா. பழனி மூலம் அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவரை சந்தித்துள்ளேன்* அப்போது கோலாலம்பூரில் அவரது குடும்ப நிகழ்ச்சிகளிலும் நண்பர்களுடன் கலந்து கொண்டது மறக்க முடியாத நினைவு.*.மேலும் பெங்களூரு, திருவண்ணாமலை ஆகிய நகரங்களில் நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாக்களில் அவர் கலந்து கொண்டு* திரு.மேகநாதன் தலைமையில் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .**
திரு.குணா அவர்களை பிரிந்து வாடும், குடும்பத்தினர், உற்றார் உறவினர், மலேசியா இன்னிசை கலைக்குழு, திரு.மேகநாதன் தலைமையில் இயங்கும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். கலைக்குழு, மற்றும் அவரது நண்பர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என் சார்பிலும், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
ஆர். லோகநாதன் .
" உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம் "
இது எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்தமான பாடல் !
இந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தும் காட்டினார் அவர் !
.
எம்.ஜி.ஆர் முதல் அமைச்சராக இருந்தபோது ..
ஒரு மாலைப் பொழுது !
அமைச்சர் ஹண்டே கையில் அன்றைய மாலை செய்தித்தாள் இருந்ததாம் .
எம்.ஜி.ஆர். கேட்டாராம் :
" எதுவும் முக்கியமான செய்தி உண்டா ?"
ஹண்டே கொஞ்சம் தயங்கினாராம் :
" ஒண்ணும் இல்லை....ஆனால்.. "
எம்.ஜி.ஆர் ஹண்டேயை உற்றுப் பார்த்தாராம் : " என்ன விஷயம் ? ஏன் தயங்கறீங்க ? எதுவா இருந்தாலும் சொல்லுங்க !"
ஹண்டே தயக்கத்துடன் சொன்னாராம்:
"தி.மு.க.தலைவர் கருணாநிதி உங்களை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் ."
சலனம் அற்ற முகத்துடன் எம்.ஜி.ஆர். கேட்டாராம் : " என்ன சொல்லி இருக்கிறார் ? "
" உங்களுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று பேசி இருக்கிறார். "
.
சற்று நேரம் அமைதியாக இருந்த எம்.ஜி.ஆர்.சொன்னாராம் : "சரியாகத்தானே சொல்லி இருக்கிறார்.நான் பெரிய படிப்பு எல்லாம் படித்தவன் அல்ல ; இருந்தாலும் பொருளாதாரம் பற்றி எனக்கு எடுத்துச் சொல்ல உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
ஆனால் பசி என்றால் என்னவென்று எனக்கு தெரியும். அந்த கஷ்டம் எனக்கு புரியும் . மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சர் , அதை மறக்காமல் நினைவு வைத்திருந்தால் போதும் ."
சலனமற்ற முகத்தோடு எம்.ஜி.ஆர். இதை சொல்லி விட்டு , தனது அடுத்த வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டாராம்.
ஆம் !
" தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்..
பெரும் பேரின்பம்..!"........... Thanks.........
.
எம்.ஜி.ஆரை மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நினைக்கின்றனர் என் பதை விளக்கும் இன்னொரு சம்பவம். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஊர் திரும்பும் போது மதுரை அருகே வாடிப்பட்டியைச் சேர்ந்த ஒரு தொண்டர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அந்தக் குடும்பத்துக்கு வேண் டிய உதவிகளை செய்யுமாறு கட்சியின ருக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். சில நாட்கள் கழித்து வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து அவர் மதுரை வந்தார்.
முதலில் வாடிப்பட்டிக்கு சென்று, விபத்தில் இறந்த அந்த தொண்டரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விரும்பினார். அதன்படி, வாடிப்பட்டிக்கு காரில் சென்றார். இறந்து போன தொண்டர் இருந்த வீடு குறுகிய சந்தில் இருந் தது. அதில் கார் செல்ல முடியாத நிலை. என்ன செய்வது என்று டிரைவர் சில விநாடிகள் குழம்பினார். இதை கவனித்த எம்.ஜி.ஆர். சட்டென காரைவிட்டு இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்து விட்டார்.
சில நிமிடங்கள் நடைக்குப் பின், அந்த தொண்டரின் வீட்டை எம்.ஜி.ஆர். அடைந்தார். அது மிகவும் எளிமையான சிறிய வீடு. வாசலில் தனது ஷூவை கழற்றிவிட்டு உள்ளே சென்றார். அங்கே வைக்கப்பட்டிருந்த இறந்துபோன தொண்டரின் படத்துக்கு மரியாதை செலுத்திய பின், குடும்பத்தாரை விசாரித்து ஆறுதல் கூறினார். கைக்குழந்தையுடன் இருந்த அந்த ஏழைத் தொண்டரின் மனைவிக்கு தைரியம் சொன்னார்.
அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகே இருந்த தொண்டரின் தாயாரால் துயரத்தை அடக்க முடியவில்லை. யாரும் எதிர்பாராத வகையில் எம்.ஜி.ஆரின் தோளில் கை போட்டு அவரை இறுகக் கட்டிப்பிடித்து, ‘‘என் மகன் போயிட்டானேப்பா, நான் என்ன செய்வேன்?’’ என்று குலுங்கி அழ ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். தோளில் அந்த மூதாட்டி உரிமையுடன் கைபோட்டாலும் அங்கிருந் தவர்களும் உதவியாளர்களும் திகைத்தனர். எம்.ஜி.ஆர். எப்படி எடுத்துக் கொள்வாரோ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால், அந்த தாயின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். அந்த மூதாட் டியை விலக்க வந்தவர்களை பார்வையா லேயே தடுத்து நிறுத்தினார் எம்.ஜி.ஆர்.!
அந்த தாயை அணைத்தபடி, ‘‘நானும் உங்க மகன்தான். உங்க குடும்பத்துக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யக் காத்திருக்கிறேன். கவலைப் படாதீங்க’’ என்று எம்.ஜி.ஆர். கண்கலங்கி சொன்னார்.
அந்த தாயின் சோகம் மறைந்து மனம் லேசானது!............... Thanks..........
https://youtu.be/wEjKUSkzLOM........... Thanks...........
சில புதிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு.
நம் வள்ளல் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் டூப் வேடம் போட்டவர் மாடக்குளம் அழகர்சாமி.
தாழம்பூ படத்தில் ஒரு சண்டை காட்சியில் அவருக்கு கால் ஒடிந்து விட அவருக்கு பிறகு அந்த வாய்ப்பு சரவணா பிலிம்ஸ் வீ.ஜி.வேணு மூலம் மகாலிங்கம் என்பவருக்கு கிடைக்கிறது...
ஒருமுறை புதியபூமி பட சண்டை காட்சியில் மேசை முழுவதும் அசைவ உணவு வகைகள் நிரம்பி இருக்க சண்டை போது அது வீணாகி கீழே சிதற...
எல்லாம் வீணா போச்சே நம் வீட்டுக்கு கொண்டு போய் இருந்தாலும் பிள்ளைகள் சாப்பிடுமே என்று அவர் வருந்த தலைவர் காதுகளில் விழுந்த அந்த செய்தி மகாலிங்கம் அவர் சார்ந்த நடிகர்கள் வீடு திரும்பிய போது அனைத்து மட்டன் வகைகளும் அவர்கள் வீட்டில் நிரம்பி வழிந்தன.
ஒளிவிளக்கு படப்பிடிப்பு முடிந்து மன்னன் வீடு திரும்பி கொண்டு இருக்க பழைய சன் திரையரங்கம் வழியாக வீட்டுக்கு கோடம்பாக்கம் பாலம் வழியே நடந்து மகாலிங்கம் நடந்து கொண்டு சென்று இருக்க வள்ளல் தன் காரை நிறுத்தி என்ன கம்பெனி கார் இல்லயா சரி ஏறு என்று சொல்லி அவர் வீட்டில் விட்டு 2000 ரூபாய் கையில் கொடுத்து போக.
சாலி கிராமத்தில் சொந்த வீடு அப்போது வாங்க அள்ளி கொடுத்த வள்ளல் அவர்களால் எங்கள் குடும்பம் இன்றும் சிறப்புடன் வாழ்கிறது.
சிலவற்றை சொல்ல முடியாது என்கிறார் மகாலிங்கம் அவர்கள் மகன் ராஜப்பா.
வாழ்க எம்ஜியார் புகழ்.அடாத மழையில் கூட விடாது தொடரும் வாத்தியார் நிகழ்வுகள் நன்றி..நாளை............ Thanks.........
மலேசியா நாட்டில்* பினாங்கு நகரில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். விழா*
------------------------------------------------------------------------------------------------------------------
மலேசியா நாட்டில் பினாங்கு நகரில் , புக்கிட் மெர்ட்ட ஜம் என்கிற பகுதியில்*மக்கள் சேவகன் திரு**எம்.ஜி.குமார்* தலைமையில் இயங்கும் ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி* எம்.ஜி.ஆர். நற்பணி மன்றம் ,வெற்றிகரமான 10ம் ஆண்டாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கலை பயண விழா கடந்த 24/11/2019 (சனியன்று ) புனித மேரி அன்னை ஹாலில் , மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை வெகு சிறப்பாக அனுசரிக்கப்பட்டது .**
விழாவையொட்டி அரங்கத்தின் சாலை புறத்தில் இருந்து நுழைவு வாயில் வரையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவம் பொருந்திய பதாகைகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன .* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்* படங்களுடன் அரங்கத்தின் நான்கு திசைகளிலும்* பேனர்கள், பதாகைகள், மற்றும் மேடையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவப்படங்களுடன் மிக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது .
மலேசியா விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .மலேசியா நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் , பக்தர்கள் , பார்வையாளர்கள் வந்து குவிந்தனர் . தமிழகத்தில் இருந்து,உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு, திரு.ஆர். லோகநாதன், திரு.ஜி.வெங்கடேச பெருமாள், திரு. சேமலையப்பன் (திருப்பூர் ) ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
மாலை 5 மணியளவில் பல்வேறு* நல திட்டங்கள் , மாணவ , மாணவியருக்கு உதவும் வகையில் செயல்படுத்தப்பட்டன .* இரவு 7 மணியளவில் திரு.எம்.ஜி.குமார், விளையாட்டுத்துறை இணை அமைச்சர் , சட்டமன்ற உறுப்பினர், திரு..பி.எஸ். ராஜு, திரு.டத்தோ புலவேந்திரன் (இயக்கத்தின் அறங்காவலர் )ஆகியோர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி துவங்கியது .
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று இயக்கத்தின் தலைவர்*மக்கள் சேவகன் திரு.எம்.ஜி.குமார் வரவேற்புரையில் சிறப்பு விருந்தினர்களை,யும்* தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த சிறப்பு பிரதிநிதிகள்*திருவாளர்கள் பி.எஸ். ராஜு, ஜி.வெங்கடேச பெருமாள், ஆர். லோகநாதன், சேமலையப்பன் ஆகியோரையும் விழாவை சிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார்*விழாவில் பேசிய அமைச்சர், திரு.எம்.ஜி.குமார் அவர்கள் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் வகையில் நற்பணி மன்றத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் . முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின்* புகழ் தமிழ்நாட்டில்,* இந்தியாவில் மட்டுமின்றி, கடல் கடந்து மலேசியாவிலும் ஓங்கி நிற்கிறது, மலேசியாவிலும் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கிறார்கள் .. மலேசியாவில் பல்வேறு அமைப்புகள் எம்.ஜி.ஆர். பெயரில் நற்பணிகள் செய்து வருகின்றதை நான் திரு.எம்.ஜி.குமார் மூலம் அறிந்து கொண்டேன் .* எம்.ஜி.ஆர். பெயரில் அற்புதமான அருங்காட்சியகம் ஒன்றை திரு.எம்.ஜி.குமார் உருவாக்கியுள்ளார் .*திரு.எம்.ஜி.குமார்* இயக்கத்தின் மூலமாக 52 மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றார்கள். மலேசிய அரசாங்கமும் மாணவ மாணவியருக்கு உதவும் கல்வி திட்டத்தின் அடிப்படையில், வேண்டிய உதவிகளை திரு.எம்.ஜி.குமார் அவர்களின் இயக்கத்திற்கு உதவுவதாக தெரிவித்தார் . சட்டமன்ற உறுப்பினரும் , திரு.எம்.ஜி.குமார் அவர்களின் சேவைகளை பாராட்டி பேசினார் .* இருவருக்கும் நன்றி தெரிவித்து திரு.குமார் பேசினார் .* பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு* சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன .**
பின்னர் , இயக்கத்தின் அறங்காவலர் திரு. டத்தோ புலவேந்திரன் இயக்கத்தின் செயல்பாடுகளை விவரித்து பேசினார் . அவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது .* விழாவில் சிறந்த சமூக சேவகியாக*திருமதி கோகிலவாணி,* மற்றும் மனித நேய பண்பாளர் என்கிற வகையில்*மாற்று திறனாளி நபர் ஒருவருக்கும் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன .
தமிழகத்தில் இருந்து வந்திருந்த உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ். ராஜு,விற்கு* பொன்னாடை அணிவித்து சிறப்பு பரிசு வழங்கப்பட்டது . திரு.ராஜு*பேசும்போது ,ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி நற்பணி மன்றம், பினாங்கு நகரில் சிறப்பாக செயல்பட்டு , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு விழா எடுத்து பெருமை*சேர்ப்பதற்கு நன்றி தெரிவித்தும், உரிமைக்குரல் மாத இதழ் சார்பில் தமிழ்நாட்டு தலைநகர் சென்னையில் நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்தும் விவரித்து*பேசினார் .* பின்னர் பேசிய திரு.ஆர். லோகநாதன், ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு , சென்னை சார்பில் , இயக்கத்தின் தலைவர் திரு.எம்.ஜி.குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு தொடர்ந்து பெருமை சேர்க்கும் வகையில் விழா எடுத்து வருவதற்கு நன்றி தெரிவித்தும் பேசினார் . பின்னர்* திருவாளர்கள் ஆர். லோகநாதன், ஜி.வெங்கடேச பெருமாள், சேமலையப்பன் ஆகியோருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு* நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .
நிகழ்ச்சி நடக்கும் போது, இரவு உணவு* விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த*அனைவருக்கும் வழங்கப்பட்டது .* இரவு 8.30 மணியளவில்* ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் துவங்கின .* பாடகர்கள் சித்ரன் (பினாங்கு ), ஹரிதாஸ் (சிங்கப்பூர் ) மணியம் (கோலாலம்பூர் ) ஆகியோர் உள்பட உள்ளூர் பாடகர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர் . இடையே நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்கள் , நான் உங்கள் வீட்டு பிள்ளை (புதிய பூமி ), கண்ணை நம்பாதே ( நினைத்ததை முடிப்பவன் ), நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டு பிள்ளை ) ஆகிய பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் ..* சென்னையில் இருந்து திரு.கோபால் , மற்றொரு பெண் நபருடன்* கீழ்கண்ட பாடல்களுக்கு நடனம் ஆடி பாராட்டுக்கள் பெற்றார் .1. நான் பார்த்ததிலே* (அன்பே வா )2. நாணமோ, (ஆயிரத்தில் ஒருவன் )3. நேத்து பூத்தாலே (உரிமைக்குரல் )4.தாயில்லாமல் நானில்லை (அடிமைப்பெண் )5.தாய் மேல் ஆணை ( நான் ஆணையிட்டால் )6.கடவுள் எனும் முதலாளி* (விவசாயி )
நிகழ்ச்சியில் திரு.நாமக்கல் எம்.ஜி.ஆர். , திரு.எம்.ஜி.குமாரையும், அவரது சேவைகளையும் பாராட்டி , தொடர்ந்து புரட்சி தலைவருக்கு விழா எடுத்து* *அவரது புகழுக்கு பெருமை சேர்க்கும்படி வேண்டுகோள் விடுத்தார் .பின்னர் நாமக்கல் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், திரு.கோபால் ( சென்னை ) அவர்களுக்கும்* சந்தன மாலைகள் அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .அதன்பின் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், விழா நடைபெற உதவிய நண்பர்கள் ஆகியோருக்கு மேடையில் சிறப்புகள் செய்யப்பட்டு நினைவுபரிசுகள் வழங்கப்பட்டன .**
நிகழ்ச்சியில் பார்வையாளர்கள், பக்தர்களை ஊக்குவிக்க, குலுக்கல் முறையில்*பரிசுகள் வழங்கும் வகையில் டிக்கட்டுகள் மலேசிய ரிங்கிட் 5/-* (இந்திய பணம் சுமார் ரூ.85/- )* விற்பனை செய்யப்பட்டன.* நிகழ்ச்சியின் முடிவில் இரவு 11.30மணியளவில் முதல் பரிசாக அரை பவுன் எம்.ஜி.ஆர். தங்க லாக்கெட், மற்றும்*10 இதர பரிசுகள் குலுக்கலில் தேர்வு செய்து வழங்கப்பட்டன . இறுதியில் அனைவரையும் வாழ்த்தி நன்றி தெரிவித்து இயக்கத்தின் தலைவர் திரு. எம்.ஜி.குமார்* பேசினார் .* இரவு 12 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது*
விழா முடிவில் சுமார் 700நபர்கள்* நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக திரு. எம்ஜி. குமார் தெரிவித்தார்* *
விழா நடக்கும் முன்தினம் இரவு திரு. எம்.ஜி.குமார் அவர்கள் அமைத்துள்ள மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம் கண்டுகளித்து வியந்தோம் .காரணம், எனக்கு விவரம் தெரிந்த வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு*சினிமா, அரசியல் குறித்த புகைப்படங்கள், சிறிய பேனர்கள் , சிறிய சிலைகள்*தங்கமுலாம் பூசிய வெள்ளித்தட்டுக்கு முன் தலைவர் சிலை, ஆயிரக்கணக்கில் புகைப்படங்கள் , ஆவணங்கள் , புரட்சி தலைவர் எம்.ஜி. ஆரின் சில உடைமைகள் ஆகியன திரு.எம்.ஜி.குமார் அமைத்துள்ளது போல் உலகில் வேறு எந்த பகுதியிலும் எந்த ஒரு பக்தரும் /ரசிகரும் / தொண்டரும் அமைத்திருக்க வாய்ப்பில்லை .* நேரமில்லாத காரணத்தால் அருங்காட்சியகத்தை புகைப்படமோ, வீடியோவோ எடுக்க முடியவில்லை .* ஒருவேளை அடுத்த விஜயத்தின்போது சாத்தியம் ஆகலாம் .**
முன்னதாக ,பினாங்கு நகரம் செல்லும் வழியில் தைப்பிங் என்கிற ஊரில் அய்யனார் கோயில் அருகில் நடிகர்* சத்யராஜ் 2011ல் திறந்து* வைத்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும் , விழாவிற்கு பின்னர் கோலாலம்பூரில், லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மையத்தில் திரு.வி.ஜி.பி. சந்தோசம் வழங்கிய , தமிழக அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு திறந்து வைத்த*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். சிலையையும்* கண்டுகளித்து* மகிழ்ந்தோம் .கோலாலம்பூர் எம்.ஜி.ஆர். மய்யத்தை திரு. மணிவாசகம் (மலேசியா) பராமரித்து வருகிறார் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆருக்கு* தமிழ்நாட்டில் எப்படியோ, இங்கு மலேசியாவில் மாதந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள் அவ் வப்போது*சில சமயம் மாதமிருமுறை* நடந்து வருகின்றன* என்று**மலேசியாவில் உள்ள எம்.ஜி.ஆர். பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர் .
.
#நாட்டுநலனே #முக்கியம்
புரட்சித்தலைவர் முதன்முதலாக தமிழக முதல்வராக இருந்தபோது பாரதப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். அவருக்கு ஆதரவாக எம்ஜிஆர் நடந்து கொண்டார். அதன் பின் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவருக்கும் எம்ஜிஆரின் ஆதரவு தேவைப்பட்டது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழகத்தின் ஆதரவை அளித்து வந்தார். அதன் பின்னர் சரண்சிங் பிரதமரானார். அவருக்கும் ஆதரவு தேவைப்பட்டது...
இப்படி தொடர்ந்து மத்திய அரசில் யார் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.
இதுபற்றி எம்ஜிஆரிடம் நிருபர்கள் கேட்டபோது எம்ஜிஆர் கூறிய "ப்ராக்டிகலான" விளக்கம்...
"தனிப்பட்ட எம்ஜி இராமச்சந்திரன், மத்தியில் யார் ஆட்சி செய்கிறார் என்று பார்த்து ஆதரிக்கவில்லை. தமிழக முதல்வர் என்ற பொதுவான கண்ணோட்டத்தில் நான் மத்திய அரசில் யாரிருந்தாலும் ஆதரிக்கிறேன். இதற்கு ஒரே காரணம்...
#தமிழக #மக்களின் #நலம் #தான்...
தேவையில்லாமல் மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து அதனால் மக்களுக்கு கிடைக்கும் நல்ல திட்டங்களை, உதவிகளை ஏன் தடுக்கவேண்டும்...? அப்படி மத்திய அரசு தவறும் பட்சத்தில் நாம் நியாயமாக, பிரச்சனைகளை சரியான முறையில் அவர்களிடம் அணுகலாமே ?
"மாநில அரசு என்றால் மத்திய அரசை எப்போதும் எதிர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதல்ல..."
மத்திய அரசுடன் நட்புடன் இருந்து கூடுமானவரை நலத்திட்டங்கள் பெற்று தமிழகம் வளர்ச்சி பெற வேண்டும்.
இது தான் எனது கொள்கை, மற்றவர்களின் விமர்சனம் குறித்து நான் என்றும் கவலைப்படுவதில்லை...என்றார் எம்ஜிஆர்.
இந்த உயரிய சிந்தனையும், தொலைநோக்குப் பார்வையும் மனிதநேயமும் இருந்ததால் தான் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியப் பெருந்தலைவர்களில் ஒருவராகி சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார்.
அரவணைத்துப் போதல் கோழைத்தனமுமல்ல... விதண்டாவாதமும், பிடிவாத குணமும் வீரமுமல்ல...
ஒரு மன்னருக்குரிய குணங்களையும், தகுதிகளையும் பெற்றிருந்ததால் தான் வாத்தியார் "மன்னாதி மன்னனாக" என்றென்றும் திகழ்ந்து கொண்டிருப்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ இயலாது........... Thanks.. ............
https://images.app.goo.gl/BubGk9XR2E3dtbGy8.......... Thanks ...........
https://youtu.be/I7W9IR6iHM0......... Thanks...
https://youtu.be/7lEo9cJZbXE....... Thanks...
https://youtu.be/SDdNnRM1O94.......... Thanks...
https://youtu.be/mdKyJto9aj4......... Thanks...
https://youtu.be/V4e-TSpiMhs........... Thanks.........
29/11/2019 முதல் ஈரோடு- சங்கீதா DTS.,வில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.இரு வேடங்களில் அசத்திய
டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை", தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது...
த்கவல் உதவி .ஈரோடு திரு.எம்.கே.ராஜா....... Thanks.........
கல்கண்டு வார இதழ் -04/12/19
-----------------------------------------------
பொன்மனம்* எம்.ஜி.ஆர்.*
எம்.ஜி.ஆர். அ. தி.மு.க. கட்சியினை ஆரம்பித்து அதற்கான நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார் .* தனக்கு மாலை அணிவிப்பவர்கள் தன்னோடு புகைப்படம் எடுத்து கொள்ள விரும்புபவர்கள் கட்சி நிதியாக பத்து*ருபாய் தர வேண்டும் என் நிபந்தனை விதித்தார் .**
ஒரு தொண்டர் எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொள்ளும்போது அவரின் தோளில்*கை போட்டு படம் எடுக்க போஸ் கொடுத்தார் .* *எம்.ஜி.ஆர். இதை எதிர்பார்க்கவில்லை . அவரின் பாதுகாவலர்கள் அந்த ரசிகரின் செயலை தடுக்க முயன்றனர் .
எம்.ஜி.ஆர். அவரை தடுக்காமல் , இவர் பணம் தந்து படம் எடுத்துக் கொள்கிறார் .* இந்த நேரத்தில் இவரை போன்றவர்கள்* நமக்கு எஜமானர்கள் போல. அவர் விருப்பப்படி படம் எடுத்துக் கொள்ளட்டும் .* தடுக்க வேண்டாம் .* என சிரித்தபடி*பாதுகாவலர்களிடம் கூறினார் .* மற்றவர்களும் அவரவர் விருப்பப்படி எம்.ஜி.ஆரோடு படம் எடுத்துக் கொண்டனர் .**
கஷ்டத்திலும் கர்ணன்*
----------------------------------
ஒரு சமயம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் உடல் நலம் குன்றி சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .* அவரை காண எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்றார் .* கலைவாணரின் உடல் நலம் குறித்து விசாரித்த எம்.ஜி.ஆர். பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதால் படுக்கைத் தலையணை அடியில் ருபாய் நோட்டு கட்டு ஒன்றினை கலைவாணருக்கு தெரியாமல் வைத்துவிட்டு புறப்பட்டு சென்றார் .**
ருபாய் நோட்டு கட்டினை கண்ட கலைவாணர் எம்.ஜி.ஆருக்கு போன் செய்து*ஏம்பா ராமச்சந்திரா கொடுத்ததுதான் கொடுத்தாய் . சில்லறை நோட்டுகளாக*தரக் கூடாதா ?* என்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய வசதியாக இருக்குமே என்றார் .
வறுமையிலும் கலைவாணரின் கொடைத்தன்மையை கண்ட எம்.ஜி.ஆரின் கண்கள் கலங்கின .**
எம்.ஜி.ஆர். நடத்திய திடீர் திருமணம்*
------------------------------------------------------------
1985ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சேலம் மாவட்டம் நாமக்கல் எம்.எல்..ஏ.திருமணத்தை நடத்தி வைக்க தன்* மனைவி ஜானகி அம்மையார் அவர்களுடன் வருகிறார் .* காலை 9 மணிக்கு முகூர்த்தம் .* 8 மணியளவில் விருந்தினர் மாளிகையில் இருந்து மண்டபம் நோக்கி புறப்படுகிறார்.* எம்.எல். ஏ .வீட்டு திருமணம் என்பதால் திருமண மண்டபம் விழா கோலம் பூண்டிருந்தது .
விஷயம் அறிந்த நாமகிரிபேட்டையை சார்ந்த ஒரு தலைவர் வெறியர் , தனக்கு அப்போது அங்கு நடக்க வேண்டிய திருமணத்தை நிறுத்திவிட்டு மணப்பெண்ணுடன் இந்த மண்டபம் நோக்கி வந்து, கழுத்தில் மாலைகளுடன்*எம்.எல்.ஏ. வீட்டு திருமண மண்டப வாசலில் , தலைவர் என் திருமணத்தையும்*நடத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி நிற்க, கட்சிக்காரர்களும் , காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து அந்த ஜோடியை அப்புறப்படுத்த முயல .
இந்த செய்தி காரில் வந்துகொண்டு இருந்த முதல்வருக்கு சொல்லப்பட , அவரது கார் திருமண அரங்கை நெருங்க ,அந்த ஜோடியை எவர் தடுக்க முயன்றும் முடியாமல் தன இதயதெய்வம் எம்.ஜி.ஆர். முன் வந்து நிற்க , எம்.ஜி.ஆர். அவர் தோளில் தட்டி, இதுபோல அனுமதி இல்லாமல் இப்படி நடப்பது தவறு .* நான் கட்சி தலைவன்தான் அதுசரி. ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் .* அதில் நம்மால் குழப்பம் வரக்கூடாது , என்னுடன் வாருங்கள் என அழைத்து ,அந்த ஜோடியை வர சொல்ல, , பார்ப்பவர்கள்* கண்கள் நடப்பதை நம்பமுடியாமல்*தவிக்க, அதே மணமேடையில் அந்த இரண்டு ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து , விஷயம் தெரிந்த உடன் , தன்னுடன் கொண்டு வந்திருந்த*இரண்டு பரிசு பொட்டலங்களை தனித்தனியே இரண்டு ஜோடிகளிடம் கொடுத்து விட்டு வாழ்த்தி பேசி, புறப்பட்டு சென்றார் .**
என்றும் மக்கள் செல்வாக்கில் ... முதல் இடத்தில் எம்.ஜி ஆர்., எனும் மூன்றெழுத்துதான்...
NEWS 7 தொலைக்காட்சியும் குமுதம் ரிப்போர்ட்டர் இதழும் இணைந்து நடத்திய மக்கள் கருத்துக் கணிப்பில் ருசிகரமான தகவல்கள்.
05.12.2017 குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளிவந்த தகவல் :
ரஜினி, கமல், விஜய் இவர்களில்
தமிழக அரசியலில் அடுத்த எம்ஜிஆர் யார்
இந்த கேள்விக்கு மக்கள் 'எம்.ஜி.ஆருக்கு இணையாக இந்த மூவரையும் நினைப்பதே தவறு' என்றனர் கோபத்துடன். சினிமாவில் இருந்துக்கொண்டே மக்களின் தலைவராக தோன்றியவர்தான் எம்.ஜி.ஆர்.எனவே எம்.ஜி.ஆருடன் இவர்களை ஒப்பிடவே முடியாது.
எனினும் அவர்களை சமாதானப்படுத்தி கேள்வி கேட்டதற்கு
எம்ஜிஆர் - 56.6%.
கமல்--16.2%
ரஜினி--14.8%
விஜய்--12.4%
என்று பதிலளித்து முதல் இடத்தை எம்.ஜி.ஆருக்கே கொடுத்தனர்.
இதில் ஒரு வியக்கத்தக்க விஷயம் 30 வயதுக்குட்பட்ட இளைஞர், இளைஞிகள் எம்.ஜி.ஆரை நேரடியாக பார்க்க வாய்ப்பில்லை என்றாலும்
எம்ஜிஆர் - 52.1 சதவீதம்
விஜய் -16.6 சதவீதம்
கமல் - 15.8 சதவீதம்
ரஜினி - 15.5 சதவீதம்
கொடுத்து, எம்ஜிஆருக்குதான் முதல் இடம் அளித்தனர்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் : எம்.ஜி.ஆர் -- 62.7 %
கமல்--16.1%
ரஜினி--13.8%
எக்காலத்திலும் எம்.ஜி.ஆர்தான் என்று பதிலளித்த மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு கோடான கோடி நன்றிகள்........... Thanks.............
05/12/2019 அறிவிப்பு பகுதி
கலைசெல்வி ஜெயலலிதா அவர்கள் சம்பந்தபட்ட திரை உலக பதிவுகளுக்கு மட்டுமே அனுமதி.
அவரது சொந்த வாழ்க்கை --அரசியல் வாழ்க்கை பற்றிய பதிவுகள்--கமண்ட்டுகளுக்கு அனுமதி இல்லை.
பதிவுகளிலும் கமண்ட்-( பின்னூட்டங்கள்)-(COMMENT) கண்ணியமானதாகவும் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.
இன்று கோமளவள்ளி என்ற பெயரைக் கொண்ட அம்மு, 'கலைச்செல்வி' என்று தமிழ்த் திரையுலகத்தினரால் போற்றப்பட்ட, பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகை 'செல்வி' ஜெயலலிதா அவர்களின் நினைவு நாள் ஆகும்.
தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர்,கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தவர். (பிறப்பு: பிப்ரவரி 24, 1948) சோழர்கள் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் வைணவர்களின் வாழ்க்கை சிக்கலானதும் அங்கிருந்து பல குடும்பங்கள் பல்வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தன. இப்படி இடம் பெயர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கர்நாடக மாநிலம் மேல்கோட்டைக்குச் சென்றன. அந்தக் குடும்பங்களில் இவரது தாத்தாவுடைய குடும்பமும் ஒன்று.அவர் இந்த ஊரிலிருந்த கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதா அவர்களுக்கு பள்ளிப் படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. (இவரது சித்தி வித்யாவதியும் சிறந்த நடிகையாவார். 'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் எம்.ஜி.சக்ரபாணியுடன் இணைந்து நடித்தவர்)
பள்ளிப் படிப்பில் எப்போதும் முதல் மாணவியாகவே திகழ்ந்தார் . அவர் பெங்களூரில் இருந்தபோது பிஷப் கார்டன் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர் 1958-ஆம் ஆண்டு முதல் 1964 -ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் பிரசன்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தாய் மொழி தமிழைப் போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில ஆவணப் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.1964 -ல் ஜெயலலிதா அவர்களின் திரையுலகப் பிரவேசம் “சின்னடா கொம்பே” என்ற கன்னடப் படத்தின் மூலம் அதிகாரபூர்வமாக அறிமுகமானது. இப்படத்தின் இயங்குனர் பந்துலு அவர்கள். இந்தப் படத்தில் ஜெயலலிதாவின் ஜோடி கல்யாண்குமார்.
1965-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய 'வெண்ணிற ஆடை' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். 'வெண்ணிற ஆடை' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பி.ஆர்.பந்துலுவின் “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். இதில் ஆயிரத்தில் ஒருவன் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. அவர் நடித்த பல படங்கள் நன்றாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றன. சிவாஜி அவர்களுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' கருப்பு வெள்ளை தமிழ் திரைப்படங்களிலேயே மிக அதிக வசூல் பெற்று சாதனை புரிந்தது.
1960-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தைச் செய்தார் ஜெயலலிதா. அந்த விழாவுக்கு தலைமை தாங்கியவர் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன். ‘பெரிய சினிமா நடிகையாக வருவார்’ என்று சிவாஜியிடம் வாழ்த்து பெற்றவர், பின் நாட்களில் அவருடனேயே இணைந்து 17 படங்களில் நடித்தார்.
முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். இதில் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜோடியாக 28 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடி மிகவும் புகழ் பெற்றது. ஜெயலலிதாவின் அழகு, திறமை, நாட்டியம் அவருக்கென்று தனி ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன்,ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவி.எம்.ராஜன்,முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அடிமைப் பெண், ரகசியபோலீஸ், காவல்காரன், குடியிருந்த கோவில், என் அண்ணன், கந்தன் கருணை, கலாட்டா கல்யாணம், எங்கிருந்தோ வந்தாள், பட்டிக்காடா பட்டணமா, சுமதி என் சுந்தரி, பாட்டும் பரதமும் , யார் நீ, நான், சூரியகாந்தி, வந்தாளே மகராசி ஆகிய படங்கள் ஜெயலலிதாவின் திரை உலகப் பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன. இயற்கையாகவே அழகான தோற்றம்கொண்ட ஜெயலலிதா அந்த இளவயதிலேயே படத்துக்குப் படம் நடிப்பில் வேறுபாடுகள் காட்டினார். அதனால் அவரை மானசீகமாக விரும்பக்கூடிய ரசிகர்கள் பெருகினார்கள். நடிகர் திலகத்துடன் அவர் நடித்த 'எங்கிருந்தோ வந்தாள்' படம் அவரது சிறந்த நடிப்பை எடுத்துக் காட்டியது. தெலுங்குப் படங்களில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற பிரபலங்களுடன் நடித்து அவர்களுக்கிணையாக புகழ் பெற்றார் ஜெயலலிதா. இந்தியில் தர்மேந்திராவிடன் கூட ஜோடியாக நடித்துள்ளார் ஜெயலலிதா. (Izzat 1968 ) மலையாளத்தில் 'ஜீசஸ்' என்ற ஒரு படம் மட்டுமே நடித்தார். தமிழில் 87 படங்களும், தெலுங்கில் 29 படங்களும், கன்னடத்தில் 7 படங்களிலும் நடித்துள்ளார்
புடவை, நவீன ஆடைகள் என எந்த ஆடையும் பொருந்தும் உடல்வாகு அவருக்கு இருந்தது. ‘வந்தாளே மகராசி’, ‘பாக்தாத் பேரழகி’ படங்களில் சண்டைக் காட்சிகளிலும் தான் சளைத்தவரில்லை என்று நிரூபித்தார்.
'காவிரி தந்த கலைச்செல்வி' என்று நாட்டிய நாடகங்களும் அரங்கேற்றம் செய்து அசத்தினார் ஜெயலலிதா. 'சோ'வின் நாடகமான ‘யாருக்கும் வெட்கமில்லை’ படமாக்கப்பட்டபோது ஜெயலலிதா அதில் நடித்தார். மிக வித்தியாசமான பாத்திரம் அது. அவருடைய உயரிய ஆற்றல் வெளிப்பட்ட படம் ‘சூரியகாந்தி’. கணவனுக்கு மனைவியிடம் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை குறித்த படம். ஜெயலலிதா சொந்தக் குரலில் பாடிய பாடல் இடம் பெற்ற இந்தப் படத்தின் நூறாவது நாள் விழா தந்தை பெரியார் தலைமையில் நடந்தது.
ஜெயலலிதாவின் 100 வது படமான “திருமாங்கல்யம்” 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாக அவர் குறைத்துக்கொண்டார். 1960, 70 -களில் அசைக்க முடியாத நாயகியாக திகழ்ந்த ஜெயலலிதா, சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார். 1970-களின் தொடக்கத்தில் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக புகழ் பெற்று வலம் வந்தவர் ஜெயலலிதா.1980-இல் வெளிவந்த “நதியைத்தேடி வந்த கடல்” என்ற திரைப்படம்தான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம்.
மிகச் சிறந்த பாடகியாகவும் ஜெயலலிதா விளங்கினார். 'அடிமைப் பெண்' படத்தின் 'அம்மா என்றால் அன்பு' என்று இவர் பாடிய பாடல் பிரபலம். 'ஓ..மேரி தில்ரூபா' என்று டி.எம்.எஸ் அவர்களுடன் .. அவர் பாடிய பாடல் இன்றும் பிரபலம். அது போல 'வைரம்' படத்தில் எஸ்.பி.பி யுடன் இவர் பாடிய 'இரு மாங்கனி போல் இதழோரம்' பாடல் மிகப் பிரபலம்.
ஜெயலலிதா நடித்த முக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
வெண்ணிற ஆடை
ஆயிரத்தில் ஒருவன்
கன்னித்தாய்
முகராசி
தனிப்பிறவி
சந்திரோதயம்
கௌரிக் கல்யாணம்.
மேஜர் சந்திரகாந்த்
மணி மகுடம்
குமரிப்பெண்
யார் நீ?
நீ
மோட்டார் சுந்தரம்பிள்ளை
தாய்க்குத் தலைமகன்.
நான்
மாடிவீட்டு மாப்பிள்ளை
அரச கட்டளை.
காவல்காரன்
கந்தன் கருணை
ராஜா வீட்டுப் பிள்ளை
பணக்காரப் பிள்ள
எங்க ஊர் ராஜா
புதிய பூமி.
தேர்த் திருவிழா
குடியிருந்த கோவில்
மூன்றெழுத்து
முத்துச் சிப்பி
காதல் வாகனம்.
கணவன்
கலாட்டா கல்யாணம்
பொம்மலாட்டம்
கண்ணன் என் காதலன்
ஒளி விளக்கு
ரகசிய போலீஸ் 115
அன்று கண்ட முகம்
நம் நாடு
தெய்வ மகன்.
மாட்டுக்கார வேலன்
அடிமைப்பெண்
அனாதை ஆனந்தன்
குருதட்சணை.
தேடி வந்த மாப்பிள்ளை.
எங்க மாமா
எங்கள் தங்கம்
எங்கிருந்தோ வந்தாள்
என் அண்ணன்.
பாதுகாப்பு
சுமதி என் சுந்தரி
ஆதி பராசக்தி.
அன்னை வேளாங்கண்ணி.
சவாலே சமாளி
தங்க கோபுரம்
குமரிக் கோட்டம்.
ஒரு தாய் மக்கள்.
நீரும் நெருப்பும்.
அன்னமிட்ட கை.
பட்டிக்காடா பட்டணமா
ராஜா
ராமன் தேடிய சீதை.
நீதி
திக்குத் தெரியாத காட்டில்
சக்தி லீலை
பாக்தாத் பேரழகி
பட்டிக்காட்டு பொன்னையா.
வந்தாளே மகராசி
கங்கா கவுரி
சூர்யகாந்தி
அன்பைத் தேடி
அன்புத் தங்கை
தாய்
வைரம்
திருமாங்கல்யம்
அவளுக்கு ஆயிரம் கண்கள்
யாருக்கும் வெட்கம் இல்லை
அவன்தான் மனிதன்
பாட்டும் பரதமும்
கணவன் மனைவி
சித்ரா பவுர்ணமி
ஸ்ரீ கிருஷ்ண லீலை
உன்னை சுற்றும் உலகம்
நதியை தேடி வந்த கடல்
இன்று பாடல்களுக்கு வரையறை இல்லை
கட்டுரை ஒன்று மட்டுமே
படங்கள்- 4
அரசியல் படங்களுக்கும், பதிவுகளுக்கும் கண்டிப்பாக அனுமதி இல்லை
நன்றி
அன்புடன்
நிர்வாகிகள்........... Thanks.........
கடந்த வாரம் கும்பகோணம்- msm dts., தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை கண்டார்... வசூல் சக்கரவர்த்தி... கோடியில் ஒருவர் வாழும் "ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல்... தகவல் உதவி நண்பர் திரு mc. சேகர்...தஞ்சை...
சென்னை பாலாஜியில்* இன்று முதல் (06/12/19) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4* காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : தங்கசாலை திரு.ராமு*
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெளியான புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "ராமன் தேடிய சீதை " ஒரு வார வசூலாக ரூ.1,10,000/- ஈட்டியுள்ளதாக மதுரை நண்பர் திரு.எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
படு மோசமான பிரிண்ட் இந்த வசூலை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*என்றும் கூறினார் .*
https://www.facebook.com/groups/MGR1...BvMfTthoRlMW3x......... Thanks..........
வாழும் தெய்வம் புரட்சி தலைவரின் தொலைநோக்கு பார்வை இதுவரை சோடைபோனது கிடையாது என்பதற்கு உதாரணம் தான் முன்னாள் முதல்வர் அம்மா. அந்த கழக பொதுசெயலாளர் அவர்களின் 3 வது நினைவு நாளை நினைவுகூர்ந்து கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம்.......... Thanks.........
ஜூனியர் விகடன் -11/12/19
கழுகார் கேள்வி பதில்*--------------------------------------------
சு.பிரபாகர், தேவகோட்டை*
பொதுப்பிரச்னைகளுக்காக முன்னணி நடிகர்கள் பலரும் தற்போது குரல் கொடுக்கின்றனர் .* நடிகராக தி.மு.க. வில் இருந்த எம்.ஜி.ஆர். அப்போது ஆளும்* கட்சியை விமர்சனம் செய்திருக்கிறாரா ?
என்னது ,விமர்சனம் செய்திருக்கிறாராவா ,* *அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸிடம் இருந்து தமிழகத்தை தி.மு.க கைப்பற்றியதில் அவருக்கு முக்கியமான பங்கே இருக்கிறது .
https://m.facebook.com/story.php?sto...dukWYdHc2VFjGS............... Thanks.........
2020 ஆண்டு காலண்டர் புரட்சித்தலைவர் அற்புத புகைப்படங்கள் அடங்கிய... ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் வெளியீடும் 6 பக்க வண்ணக் காலண்டர் ....பெரிய சைஷ் (14 * 19) விலை : ரூ. 75 /- தங்களுக்கு தேவையான காலண்டர் எத்தனை என்பதை அறிவித்தால் 25 சதவீகிதம் கழிக்கப்படும்! நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks.........
புரட்சித்தலைவரின் புகழை பாடும் ஒரே மாத இதழான நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் ( டிசம்பர் 2019) பல அறிய தகவல்களுடன் வெளி வந்து விட்டது.மழை காரணமாக டிசம்பர் 5 ம் தேதி முதல் அனைத்து ஊர்களிலும் கிடைக்கும். நன்றி உரிமைக்குரல் ராஜு......... Thanks...
நமது பொன்மனச் செம்மலின் திரைப்பட புகழ் சரித்திரத்தில் மைல்கல்லாக 1970 ம் ஆண்டில் வெளியான கலைப்பேரரசின் திரைப்படங்களுக்கு ( மாட்டுக்கார வேலன், என் அண்ணன், எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, தலைவன்) ஆகிய 5 திரைக்காவியங்களுக்கும் சேர்த்து ...2020 ஜனவரி மாதம் நமது ஒலிக்கிறது உரிமைக்குரல் மாதஇதழ் சார்பாக எப்பொழுதும் போல் பொன்விழா ( 50 ஆண்டு திரைப்பட ) மலர் வெளியிடப் படுகிறது ! பற்பல சாதனைகள் புகைப்படங்கள், அறிய தகவல்கள் என ஒரு வரலாற்று பொக்கிஷமாக வெளிவர உள்ளது ! தலைவரின் அபிமானிகள் ஜனவரி மாதம் இப்பொன் விழா மலருக்கு வாழ்த்து செய்தி தந்து தலைவரின் புகழ்பாட ஆதரவு தாருங்கள். பொன்விழா மலர்... 2020 ஜனவரி 26 ஞாயிறு அல்லது பிப்ரவரி 2 ஞாயிறு வெளியிடப்படும்! மலர் வெளியிடபடும் நிகழ்வு மட்டும் விழாவாக நடைபெறும். நன்றி! உரிமைக்குரல் ராஜு........... Thanks..........
இப்படியும் ஒரு சாதனையில் சரித்திர நாயகன்..... மக்கள் திலகத்தின் "ஒளி விளக்கு" - 100 நாளை எட்டி பிடித்த ஊர்கள் .... சென்னை - பிராட்வே 92 நாள். ஈரோடு- முத்துக்குமார் 85 நாள். மயிலாடுதுறை 90 நாள். வேலூர் இரண்டு அரங்கு இணைந்த 88 நாள். சேலம் 86 நாள். மன்னார்குடி 86 நாள். தஞ்சை 85 நாள்.7 ஊரில் 12 வாரங்களை கடந்துள்ளது. அடுத்து.... "நம்நாடு" - தஞ்சை 91 நாள் மயிலாடுதுறை 96 ஈரோடு 85 கருர் 84 பட்டுக்கோட்டை 96 தூத்துக்குடி 83 புதுச்சேரி 85 வேலூர் 80 எட்டு திரைகளில் 100 நாளை கடந்த நம்நாடு மேலும் 8 ஊரில் 100 நாள் ஒடவேண்டியது.... மேலும் தகவல்கள்
தொடர்வோம்......உரிமைக்குரல் ராஜு....... Thanks...
எங்கும், எப்பொழுதும், என்றைக்கும் , எதிலும் எழுச்சி கொண்ட எழில் வேந்தன், ஏழை பங்காளன்.... கலையிலும், காவியத்திலும் கலைமன்னராகவும்....சக்கரவர்த்தியாகவும் அரசியல் என்னும் தூய்மை பக்கத்தில் மட்டும் வலம் வந்த மன்னவரே...எதிலும் நம் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்....... அவர்களின் அன்பு வழியில்.... உண்மை பக்தர்களாகி நாம் என்றும் புகழாரம் சூட்டி மகிழ்வோம்! நன்றி! உரிமைக்குரல் ராஜு........ Thanks...........
'துக்ளக் ' இத*ழின் நிறுவனர் ம*ற்றும் ஆசிரியர், சிற*ந்த* ந*கைச்சுவை ந*டிக*ர், வ*ச*ன*க*ர்த்தா, எழுத்தாள*ர், இய*க்குன*ர், வ*ழ*க்க*றிஞ*ர், அர*சிய*ல் விம*ர்ச*க*ர், புர*ட்சித்த*லைவி, மோடி, வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பெரும்பாலான* த*லைவ*ர்க*ளின் அன்பைப் பெற்ற*வ*ர் ப*த்மபூஷ*ன் விருது பெற்ற சோ.ராமசாமி அவ*ர்க*ளின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்ச*லி!
இவ*ர் மக்கள் திலகத்துட*ன் க*ண்ண*ன் என் காத*லன், என் அண்ண*ன், ஒளிவிளக்கு,
ச*ங்கே முழ*ங்கு, கும*ரிக்கோட்ட*ம், ஒருதாய் மக்கள், க*ணவ*ன், அடிமைப்பெண், தேடிவ*ந்த* மாப்பிள்ளை, கும*ரிக்கோட்ட*ம், எங்க*ள் த*ங்க*ம், நீரும் நெருப்பும் வ*ரை 12 ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவ*ர் எம்ஜிஆரை அர*சிய*ல்ரீதியாக விம*ர்சித்த* போதும் இருவ*ருக்குமிருந்த* ந*ட்பில் விரிச*ல் விழுந்த*தில்லை. 1980 பாராளுமன்ற* தேர்த*லில் அண்ணா திமுக*விற்கு இர*ண்டு இட*ங்க*ளே கிடைத்தபோதும், எம்ஜிஆரின் அர*சை இந்திரா காந்தி க*லைத்த*போதும் த*லைவ*ருக்கு ஆதர*வாக துக்ளக்கில் எழுதியுள்ளார். அப்போது அண்ணா திமுக*விற்கு ஆத*ர*வாக சில பொதுக்கூட்ட*ங்க*ளிலும் பேசியுள்ளார். ந*ன்றியுட*ன் நினைவு கூறுகிறோம்.
துக்ளக் வாச*க*ர் விழாக்க*ள், துக்ளக் கேள்வி ப*தில், துக்ளக் திரை விம*ர்ச*ன*ம் ஆகிய*வ*ற்றில் இவ*ர*து ந*டுநிலைமை க*ருத்தை தெளிவாக* உணரலாம். ப*ழ*குவ*த*ற்கு இனிமையான*வ*ர். அணுகுவ*த*ற்கு எளிமையான*வ*ர். ப*த்திரிக்கை உலகிலும், நாட*க*த்துறையிலும் திரையுலகிலும் இவ*ர*து ப*ணி மகத்தான*து. த*னித்த*ன்மை வாய்ந்த*து. வாழ்க* திரு. சோ.ராம*சாமி அய்யா புக*ழ்......... Thanks.........
பொன்மனச்செம்மலை உயிரென நேசிக்கும் அன்பு
நெஞ்சங்களே !
அனைவருக்கும் வணக்கம்!
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்
மறைந்து 32 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது பெயரும்
புகழும், பெருமையும் – நாளுக்கு நாள் உலகெங்கும் பரவி
வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக நம் அன்புத் தலைவர்
பொன்மனச்செம்மல் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள்
விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும்,
இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி,
மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வெகு
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அது மட்டுமல்ல, பிரான்ஸ், துபாய், கனடா, சிங்கப்பூர்,
பினாங்கு, மலேசியா, இலங்கை, மொரீசியஸ், மாலத்தீவு
உள்ளிட்ட – பல நாடுகளிலும் நம் தலைவரின் நூற்றாண்டு
விழாக்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து 101,102, 103 – வது
பிறந்த நாள் விழாக்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அது மட்டுமல்ல, வாட்ஸ் அப்–பேஸ்புக், இன்ஸ்டிராகிராம்,
யூ டியூப், உள்ளிட்ட இணையதளங்கள் வழியாகவும் இதய
தெய்வம் எம்ஜிஆர் அவர்களைப் பற்றிய பல்வேறு சிறப்புக்
குரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு உலகெங்கும் பரவி
வருகின்றன.
நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தலைவரின் பக்தர்கள்
எந்தவித சுயநல நோக்கமும் இன்றி, எந்த எதிர்பார்ப்பும்
இல்லாமல் தங்களின் சொந்தப் பணத்தில், நண்பர்கள் மற்றும்
தலைவரின் அபிமானிகள், பக்தர்களின் உதவியால்
விழாக்களை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருவது கண்டு
பெருமை அடைகிறோம்.
இத்தகைய நற்செயல்களில் ஈடுபட்டு தலைவரின்
புகழ்பரப்பும் பக்தர்களை, அபிமானிகளை, ஆதரவாளர்களை
ஒருங்கிணைக்க வேண்டும் என்ற அவா என்னுள் எழுந்தது.
அதற்கான தொடக்கமாகவே, இந்த வேண்டுகோள் கடிதம்
தங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பு முயற்சியை மேற்கொண்டுள்ள துரை
கருணா ஆகிய எனக்கு தற்போது 66 வயதாகிறது.
1970–ம் ஆண்டு வத்தலக்குண்டு நகரில் மக்கள் திலகம்,
எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பில்
இருந்தவன்.
1973 திண்டுக்கல் இடைத் தேர்தலில் கழக வெற்றிக்காகப்
பாடுபட்டவன்.
1973, 1974, மற்றும் 1975 கால கட்டங்களில் விலைவாசி
உயர்வுப் போராட்டம், எம்எல்ஏக்களிடம் மனு அளிக்கும்
போராட்டம், காவல்துறை அடக்கு முறை கண்டனப்
போராட்டம் ஆகியவற்றில் பங்கேற்று சிறை சென்றவன்.
1976, 77 கால கட்டங்களில் திருச்சி மாணவர் அணியில்
இணைந்து பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்றவன்.
1978 முதல் 1984 ஆம் ஆண்டு வரையிலும் நம்முடைய
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழக
தலைமைக் கழக அலுவலகத்தில் அனைத்துலக எம்ஜிஆர்
மன்றம் மற்றும் எம்ஜிஆர் இளைஞர் அணி (1982) யின்
அலுவலக நிர்வாகியாக பணியாற்றியவன்.
1984 முதல் 1996 வரையிலும் அண்ணா, மன்ற முரசு,
பொன்மனம், நமது எம்ஜிஆர் ஆகிய கழக நாளேடுகளிலும்
செய்தியாளனாக பணியாற்றினேன்.
தொடர்ந்து வெற்றிமாலை, மாலைச்சுடர் ஆகிய
நாளேடுகளிலும், இதயம் பேசுகிறது, குமுதம், புதிய
தலைமுறை வாரஇதழ்களிலும் என் பங்களிப்பைச்
செலுத்தியவன்.
கடந்த 4 ஆண்டுகளாக தொலைக்காட்சி விசாதங்களில்
பங்கேற்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
பொன்மனச்செம்மல் புகழை, பெருமையை, அவரது
சிறப்பியல்புகளை எடுத்துச் சொல்லி வருகிறேன்.
எம்ஜிஆர் அரசியல்பாதை, எம்ஜிஆர் வாழ்வும் நெறியும்,
ஒரே ஒரு எம்ஜிஆர், இலங்கை பிரச்னையும் இந்திய
நிலையும், (எம்ஜிஆர் அவர்களின் பங்களிப்பு) ஆகிய
புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன்.
புரட்சித் தலைவரின் சிறப்புகள் குறித்து நூற்றுக்கணக்கான
கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் புகழ்பரப்பும் கூட்டங்கள்,
விழாக்கள் எங்கு நடந்தாலும் சென்று பங்கேற்கிறேன்.
அந்தவகையில், மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை,
புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று தலைவனின்
தனிச் சிறப்புக்கள், ஆட்சிக்கால சாதனைகள்
குறித்துபேசிவருகிறேன்.
2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக பிறந்துள்ள எம்ஜிஆர்
யுகம் ஒளிமயமானது. இன்றைய இளந்தலைமுறை மற்றும்
அடுத்து வரும் புதிய தலைமுறை யினருக்கு
பொன்மனச்செம்மல் எம்ஜிஆரின் பெருமைகளை அவரது
சிறப்புக்களை நாம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நாம்
அனைவரும் ஒருங்கிணைய வேண்டியது அவசியம்.
இந்த ஒருங்கிணைப்பின் முதற்கட்டமாக, வாட்ஸ் அப்,
பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டஇணைய தளத்தில் உள்ள
தலைவனின் பக்தர்கள், தங்களது புகைப்படத்துடன் சுய
விவர குறிப்புகளையும், தங்களுடன் தொடர்பில்உ ள்ள
புரட்சித் தலைவரின் . விசுவாசிகளுடைய சுய விவர
குறிப்புகள் மற்றும் புகைப்படங்களையும் சேகரித்து கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முகவரி:
துரை கருணா
8/23, பீட்டர்ஸ் காலனி
ராயப்பேட்டை
சென்னை 600 104
கைபேசி எண்கள்: 8939307294, 9940224183......... Thanks.........
குமுதம் வார இதழ் -11/12/19
---------------------------------------------
கற்பகம் படத்திற்கு எம்.ஜி.ஆர். போட்ட கண்டிஷன்*
------------------------------------------------------------------------------------
கற்பகம் படத்திற்கு* திரைக்கதை வசனத்தை முழுமையாக எழுதி முடித்ததும் கே.எஸ். கோபாலகிருஷ்ணனுக்கு* ஒரு யோசனை தோன்றியது .* இதை ஆசை என்றும் சொல்லலாம் .* இந்த**படத்தில் ஏன் எம்.ஜி.ஆர்.அவர்களை* கதாநாயகனாக நடிக்க வைக்க கூடாது* *இந்த படத்தில் ஜெமினி கணேசன் நடித்த வேடத்திற்கு முதலில் எம்.ஜி.ஆர். அவர்களை நடிக்க வைப்பதற்கு* ஏற்பாடுகளை செய்தார் .அவரை நேரில் சந்தித்து இந்த ப டத்தின் கதையை சொன்னார்.* கதையைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துவிட்டது .* மருமகன்* சுந்தரம் வேடத்தில் நடிப்பதற்கு* முழுமையாக சம்மதித்தார் .
ஆனால் ஒரு கண்டிஷன். நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்* கொண்டால் நான் நடித்து தருவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார் எம்.ஜி.ஆர்.* என்ன கண்டிஷன் சொல்லுங்கள் ?* உங்கள் கண்டிஷன் ஏற்று கொள்கின்ற வகையில் இருந்தால் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றார் . கே.எஸ்.ஜி.
மாமனார் நல்லசிவம் பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க போகிறீர்கள் முதலில் அதை சொல்லுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்.* நான் கதையை எழுதும்போது என் மனசுக்குள் மாமனார் கதாபாத்திரமாகவே வந்தவர் எஸ்.வி.ரங்காராவ் .* இந்த படத்தின் மாமனாராக* எஸ்.வி..ரங்காராவைத்தான் நடிக்க வைக்க* *போகிறேன் என்றார்* கே.எஸ்.ஜி.
இதை கேட்டதும், எம்.ஜி.ஆர். கொஞ்சம் நேரம்கூட யோசிக்கவிடாமல் , மாமனார் வேடத்தில் டி.எஸ். பாலையா நடிப்பதாக இருந்தால் இந்த படத்தில் நடிப்பதற்கு நான் பரிபூரணமாக சம்மதிப்பேன் என்றார் எம்.ஜி.ஆர்.* இயக்குனர் கே.எஸ்.ஜி.யும்* அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ஒப்பு கொண்டார் .* ஆனால் வீட்டிற்கு வந்ததும் ஒரு யோசனை தோன்றியது .**
மாமனார் நல்லசிவம் வேடத்தில் எஸ்.வி.ரங்காராவ் நடித்தால்தான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் .* அவரையே நடிக்க வைத்தால்தான் படத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தார் .* அதனால் தனது கருத்தை வலியுறுத்தினார் .* ஆனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் டி.எஸ். பாலையா நடிக்க வேண்டும் என பேசிவிட்ட பிறகு* அவரை மாற்ற நினைப்பது சரி எனப்படவில்லை .அதனாலேயே எம்.ஜி.ஆரும் அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகி கொண்டார் .* இப்படி அவர் விலகியதற்கு முக்கியமான ஒரு பிளாஷ் பேக்*கதையும் ஒன்று உண்டு.**
ஜூபிடர் பிக்ச்சர்ஸ் தயாரித்த "மோகினி " படத்தில் இரண்டு கதாநாயகர்களாக*நடிப்பதற்கு பேசப்பட்டவர்கள் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் தான் .* முதலில் எம்.ஜி.ஆர். வேடத்தில் டி.எஸ். பாலையாவும் பாலையா வேடத்தில் எம்.ஜி.ஆரும் நடிப்பதாக இருந்தது .* அதை எம்.ஜி.ஆர்.தான் அவரிடம் பேசி , நீங்கள் நடிக்கும் வேடத்தில் நான் நடிக்கிறேன் , என் வேடத்தில் நீங்கள் நடியுங்களேன் . எனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று கேட்டு கொண்டார் .* அதனால் எம்.ஜி.ஆர். அந்த படத்தில் கதாநாயகன் வேடத்தில் தோன்றினார் .* *பாலையா இரண்டாவது கதாநாயகனாக நடித்தார் .
டி.எஸ். பாலையாவுக்கு பதிலாக தான் நினைத்தபடியே எஸ். வி.ரங்காராவை* நடிக்க வைத்தார் கே.எஸ்.ஜி.* படமும் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது .* எம்.ஜி.ஆர். அந்த படத்தில் நடிக்காமல் போனது ஒரு இழப்புதான்* என்பதை தன்னை சந்திக்கும் நெருக்கமான நண்பர்களிடம் தெரிவித்திருக்கிறார்* கே.எஸ்.கோபால கிருஷ்ணன் .
புரட்சி தலைவர் தன் அரசியல் தலைவராக ஏற்றுகொண்ட அறிஞர் அண்ணாவை முதல்வராக்கியவர்,
தன் நண்பராக கருதிய கருணாநிதி யை முதல்வராக்கியவர்,
தன் துணைவி ஜானகி அம்மையார் முதல்வராக வரக்காரணமானவர்,
தன்னுடன் நடித்த ஜெயலலிதாவை முதல்வராக வரக்காரணமானவர்,
தன் ரசிகரான ஓ.பி.பன்னீர் செல்வம் முதல்வராக வர அடித்தளமிட்டவர்,
தன் கட்சி தொண்டரும் முதல்வராக வர மூலகாரணமாக இருந்து, எடப்பாடி பழனிச்சாமி வரை,
இப்படி பல முதல்வர்கள் தமிழகத்தை ஆள காரணமாக இருந்த "மன்னாதி மன்னன் " புரட்சி தலைவரை பார்த்து சில அரைவேக்காடுகள்
"எம்ஜிஆர் நடிகர்தானே அவர் முதல்வராக வரும்போது நாங்கள் ஆளக்கூடாதா.. "
ஏன்று கேள்விகேட்கிறார்கள், பொதுநல சேவை எதுவும் செய்யாமல் " நடிகர் " என்ற ஒரே தகுதியை வைத்துகொண்டு முதல்வராக வரத்துடிக்கிறார்கள்........... Thanks.........
Madurai-based Tamil linguist C Rajeswari presents fascinating insights into the minds of fans of the superstar-turned-politician through a series of 100 books - The Hindu - https://www.thehindu.com/entertainme...le29415679.ece.......... Thanks..........