http://i1065.photobucket.com/albums/...pslmqweu9r.jpg
Printable View
தேவர் பிலிம்ஸ் திரைப்படங்களில் நடிகர் திலகம் நடித்ததில்லை என்றாலும் திரு தேவர் அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.
திரு சின்னப்பா தேவர் அவர்கள் அகவை 60 முடிந்தபோது, சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திரை உலகம் மட்டுமின்றி அரசியல் ஆர்வலர்கள் பலரும் இதில் ஆச்சர்யத்துடன் அதே சமயத்தில் சந்தோஷத்துடன் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். ஆச்சர்யம் காரணம் அந்த சஷ்டிஅப்தபூர்த்தியை நடத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
அப்படி தேவர் பிலிம்ஸ் திரு சின்னப்பா தேவர் அவர்களின் சஷ்டிஅப்தபூர்த்தி நடிகர் திலகம் அவர்கள் தலைமையில் நடந்தபோது எடுத்த புகைப்படம்.
அனைத்து திரி நண்பர்களுக்கும்,
கடந்த இரண்டு தினங்களாக நிகழ்ந்த தேவையற்ற வாதங்களை மனகசப்புகளை மறப்போம். உணர்ச்சிவசப்பட்டு ஒரு இளைய சகோதரர் பேசியவற்றை பெரிதுபடுத்தாமல் மறப்போம். எனக்கு அவர் மீது எந்த வருத்தமோ கோவமோ இல்லை. அவர் என்றில்லை எவர் மீதும் இல்லை. ஆகவே அனைவரும் நடிகர் திலகம் பற்றிய positive விஷயங்களை பதிவிடுவோம். குறிப்பாக கட்டபொம்மன் பற்றி.
நாளை அதன் ட்ரைலர் வெளியீட்டு விழா. ஆகவே அந்தப் படத்தைப் பற்றிய செய்திகளும் மற்றும் நடிகர் திலகத்தின் பல்வேறு செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். திரியை சுமுகமாக முன்னெடுத்து செல்வோம்.
சிவா சார்,
மூத்த ரசிகர் நீங்கள். நமக்கு தெரியும் நடிகர் திலகத்தின் சாதனைகள் பற்றி. ஆகவே நாம் யாரோடும் வாதம் செய்யாமல் சாதனை தகவல்களை மட்டும் பதிவிடுவோம் என்று வேண்டுகோளாக விடுக்கிறேன்.
அனைவரின் புரிதலுக்கும் நன்றி!
அன்புடன்
முரளி சார்,
அருமையான மீள் பதிவு. "ஆரோடும் மண்ணில் என்றும்" பாடலை எப்போது கேட்டாலும், மண்ணின் மணம் வீசும்.
தாங்கள் குறிப்பிட்டதுபோல சில நல்ல பதிவுகள் தேவையில்லாத குறுக்கீடுகள் மூலம் படிக்க சுவாரசியம் இல்லாததாக ஆகிவிடுகிறது.
என்னுடைய சிறு வேண்டுகோள். இதுமாதிரி தேவையற்ற சர்ச்சைப் பதிவுகள் வரும்போது, பதிலே அளிக்காமல் நீக்கிவிட்டால் நல்லது.
கலை வேந்தன் ,
உங்கள் பதிவுக்கு நன்றி. இனி நான் பதில் சொல்வது வீண்.
நான் சொல்ல வருவது, பத்திரிகையாரின் தொழில் தர்மம் ,சொந்த விருப்பு விருப்புகளால் மாசு படாமல் ,பொதுமக்கள் அனைவரின் பிரதிநிதி என்று உணர்ந்து செயல் பட வேண்டியது அவசியம். அதை மீறி நடந்தால் பாரதியாரின் வரிதான்.
"படிச்சவன் சூதும் வாதும் செஞ்சா ஐயோன்னு போவான்....ஐயோன்னு போவான் ......
மற்ற படி நடிகர் திலகம் பற்றி நான் எழுதிய எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.(வசதியானதை மட்டும் மேற்கோள் காட்டி)
ஹிந்துவில் வந்த பதிவு எல்லை மீறிய ,சம்பந்தா சம்பந்தமில்லாத ஒருதலை பட்சமானது. இதை எழுதியவர் பாரதியார் சாபமிட்ட படி ஆவார் என்பது திண்ணம். (எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை).