http://i1170.photobucket.com/albums/...ps368kdvk7.jpg
Printable View
கண்ணன் என் காதலன்
இந்த பதிவை NT திரிக்கு வந்து பதிவிடும் அருமை நண்பர்களுக்கும் , வர எண்ணியுள்ள தோழர்களக்கும் , வந்தால் வருவேன் என்று இன்னும் முடிவு எடுக்காத சகோதர்களுக்கும் , எது எப்படி இருந்தாலும் கண்டிப்பாக வருவேன் என்று தீர்மானம் எடுத்துள்ள நல்ல இதயங்களுக்கும் காணிக்கையாக்குகின்றேன் .........
அன்று மழைத்துளிகள் நிறைந்த மாலைப்பொழுது - கரும் மேகங்கள் சூழ்ந்த வானம் வெகுவாக அழ தன்னை தயார் படுத்திகொண்டிருந்தது - ஒருபுறம் காற்று தன் நண்பர்களாகிய புழுதிகளுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தது - வானத்தில் தோன்றிய மின்னல்கள் தொடர்ந்து பூமியை புகைப்படம் (தனது whatsapp இல் போட) எடுத்துக்கொண்டே இருந்தது . விண்ணுலகில் யாருக்கோ திருமணம் போல - மேள தாளங்களை விட அதிகமான சத்தத்தில் இடி முழங்கிக்கொண்டே இருந்தது . நெஞ்சில் நிறைந்த அந்த மாலை பொழுதை , மனதில் ஆழமாக நிறைந்துள்ள நல்ல சில படங்களை பார்ப்பதன் மூலம் அருமையாக செலவழிக்கலாமே என்று நினைத்தேன் - அப்படி நினைத்ததின் பலன் உடனே கையில் கிடைத்தது - எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு
கதை : தெரிந்த கதைதான் ஆனால் தெரிந்து கொள்ள முடியாத முடிவு . கண்ணன் ஒரு அநாதை (MGR )- கண்ணன் என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ !!- தன்னை வளர்த்து வரும் கேப்டனிடம் தன் உயிரையே வைத்து இருந்தான் - பியானோ கண்ணன் என்று சொல்லும் அளவிற்கு பியானோ வாசிப்பதில் சிறந்தவனாக இருக்கும் கண்ணனிடம் தன் உறவினர் மகள் மல்லிகாவை (JJ ) இசையை கற்றுக்கொள்ள வைக்கிறார் கேப்டன் ... கண்ணனின் அழகிலும் , பண்பிலும் , இசையிலும் தன் இதயத்தை பறி கொடுக்கின்றாள் மல்லிகா - கண்ணனிடம் சொல்லாமல் ... கண்ணனின் இதயமோ மாலதியிடம் -( வாணிஸ்ரீ ) கண்ணன் மல்லிகாவை தன் உடன் பிறந்தவளாகத்தான் கருதுகிறான் அதனால் அவளின்பால் மனம் அவனுக்கு செல்லவில்லை . கண்ணனுக்கும் மாலதிக்கும் திருமணம் நிச்சியக்கபடுகின்றது - அந்த சமயத்தில் மல்லிகா கண்ணன் ஓட்டிவந்த காரில் அடிபடுகிறாள் - விளைவு அவள் தன் கால்களில் இருக்கும் உணர்ச்சியை இழக்கிறாள் - சுந்தர் ( முத்துராமன் ) கேப்டன்னின் மகன் மல்லிகாவை நொண்டி என்று திட்டி அவளை மணக்க மறுக்கிறான் - மல்லிகாவிற்கு வாழ்வே வெறுத்து விடுகின்றது - தன் கனவுகளை எல்லோருக்கும் தெரியும்படி சொல்லிவிடுகின்றாள் - முடிவு - மாலதியின் தியாகம் , மல்லிகாவின் கழுத்தில் கண்ணனின் மூலம் மூன்று முடிச்சாக விழுகின்றது . இதன் நடுவில் குடும்ப மருத்துவருக்கு ( அசோகன் ) மாலதியின் மீது ஒரு கண் - அதை புரிந்துகொண்ட கண்ணன் மாலதியையும் காப்பற்றுகின்றான் - மருத்துவர் வேடத்தில் நல்லவனாக வரும் நயவஞ்சகன் கண்ணனை தீர்த்து கட்ட முயலும் போது குறிதவறி அது மல்லிகாவின் உயிரை குடித்து விடுகின்றது - மல்லிகாவின் கால்களில் ஒரு பழுதும் இல்லை என்பதும் தெரிய வருகின்றது , சுந்தரின் பிடியில் இருந்து தப்பிக்கவே மல்லிகா ஆடிய நாடகம் என்றும் தெரிய வருகின்றது -- தான் செய்த தவறு , மாலதிக்கு செய்த துரோகம் இவைகளே தனக்கு எமனாக வந்ததை எண்ணி வருந்தி , மாலதியை கண்ணனிடம் ஒப்படைக்கிறாள் மல்லிகா - படம் மாலதி கண்ணன் திருமணத்துடன் முடிவடைகிறது
நடிப்பு : கண்ணன் - ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு - பல இசைக்கருவிகளை வாசித்து அசத்தி தள்ளுவார் . இரு பெண்களை கருவாக கொண்ட கதையானாலும் , தன் வழியை தனி வழியாக்கிகொண்டு நடிப்பார் . முத்துராமனிடம் நிதானம் , அசோகனிடம் கிண்டல் , வளர்ப்பு தந்தையுடன் பாச பிணைப்பு - காதலிலே நளினம் இப்படி பியானோ வாசித்துக்கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுவார் .
முத்துராமன் - குடுத்த வேடம் குறைவாக இருந்தாலும் நிறைவுடன் செய்கின்றவர் .
வாணிஸ்ரீ - இன்னும் பல MGR படங்களுடன் நடித்திருக்கலாம்
JJ - உணர்ச்சிகளை அழகாக வெளிபடுத்துகின்றார் - நடனமும் வெகு அழகு
பலர் இருந்தும் வேறு எவர் நடிப்பும் சொல்லும் படியாக இல்லை - சிங் காக வரும் அசோகன் இப்படி தமிழை கொலை செய்திருக்கவேண்டாம் - வெறுப்பு வரும் அளவிற்கு பேசுவார் .
படத்தில் சில குறைகள் :
1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன
பாடல்கள் : எல்லா பாடல்களுமே மிகவும் அருமை - குறிப்பாக - பாடுவோர் பாடினால் ---- சிரித்தாள் தங்கபதுமை ---
இனிய மாலையில் கன்னணனின் பியானோ வில் மயங்கி அடுத்த நாள் வேலைக்குச் செல்லவேண்டுமே என்ற வெறுப்பில் எழுந்தேன்
அன்புடன்
ரவி
Just now came to know about the problem re. "to be released movie". MT created social awareness among people [பல புனித நூல்கள் சொல்ல நினைத்த கருத்துக்களை மக்கள் திலகம் பாமரமக்களை சென்றுஅடைய செய்தார்]. NT தனது படங்கள் முலமாக குடும்ப பாசம், பக்தி இது போல பல நல்ல கருத்துக்களை பரப்பினார். Both of them did not face any such problem with any religion/caste/censor Board.
Dear Friends, is there any update on the Ulagam Suttrum Valiban digital re-release ?
http://i62.tinypic.com/2rnx0rk.jpg
A Tribute to MGR mother - Sathyabama (Antha Thai Illamal Naan Illai song from Adimai Penn)
https://www.youtube.com/watch?v=BVvW...ature=youtu.be
EARTH DAY 2015!
Quote:
இன்று உலக பூமி தினம் 2015
உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !!
மக்கள் திலகத்தின் தொலை நோக்குப் பார்வையில் நம் உலகத்தின் சிறப்புக்கள்
இந்த உலகம் பிறந்தது இவருக்காக ..இதில் ஓடும் நதிகளும் இவருக்காகவே!!
https://www.youtube.com/watch?v=pLXWZDSy7FY
பொன்மனச் செம்மலின் உலகம் பற்றிய கருத்துக் கணிப்பு : அழகுக் கலைகளின் சிகரம்!
https://www.youtube.com/watch?v=SXcf1djh2DE
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் நமக்காக
https://www.youtube.com/watch?v=QIcZIM8GLQg
short & sweet
இனிய நண்பர் திரு ரவி சார்
25.4-1968ல் வெளியான கண்ணன் என் காதலன் படம் 47 ஆண்டுகள் நிறைவு பெறும் நேரத்தில் தங்களின் விமர்சனம் பாராட்டுக்குரியது .2000 வார்த்தைகளில் சொல்வதை விட 200 வார்த்தைகளில் நச்சென்று நீங்கள் பதிவிட்டு இருப்பது சிறப்பாகும்.நன்றி நண்பரே .
EARTH DAY 2015
https://youtu.be/XObyqQ50I1c
கண்ணன் என் காதலன்
எங்கிருந்தோ ஒரு பியானோ இசை , புல்லாங்குழலுக்கும் இல்லாத அந்த இனிமை காற்றில் மிதந்து வந்தது - இசைப்பது யார் - கண்ணனா ? ஆமாம் - கண்ணனே தான் - யாதவ குலத்தை கலக்கிய கண்ணன் அல்ல - இந்த கண்ணன் வெண்ணையை திருடவில்லை - பல இதயங்களை திருடியவன் - அந்த வகையில் இவனும் ஒரு திருடனே ! மக்கள் அவனை தங்களது நெஞ்சம் என்ற சிறையில் கட்டி தண்டித்தார்கள் - தவறு தவறு ---ஆராதனை செய்தார்கள். அந்த கண்ணனை பற்றியும் அவனை காதலித்த அந்த இரண்டு கோபிகளை பற்றியும் அழகாக எடுத்துச்சொல்லும் படம் இது - சற்றே மாறுப்பட்ட கதை , நடிப்பு - மக்கள் திலகம் தனது தனிப்பட்ட முத்திரையைத் தாண்டி நடித்தபடம் - பாடல்கள் தொடாத தொட்டி பட்டிகள் மிகவும் குறைவு
திரு ஹைதராபாத் ரவி
கண்ணன் என் காதலன் - உங்கள் பாணியில் மிகவும் ரசித்து , நடு நிலையோடு விமர்சனம் எழதிய உங்களுக்கு என் அன்பு பாராட்டுகளை தெரிவிக்கிறேன் . ராமபிரானின் ஆசீர்வாதம் தங்களுக்குஎப்போதும் உண்டு .
மதுரை - ராம் திரை அரங்கில் தற்போது
மக்கள் திலகத்தின் ''நான் ஏன் பிறந்தேன் '' நடை பெறுகிறது .
தகவல் - திரு கே. சாமி . மதுரை
சகோதரர் திரு. ஹைதராபாத் ரவி அவர்களுக்கு,
மக்கள் திலகத்தின் காவியம்
http://i62.tinypic.com/902175.jpg
http://i58.tinypic.com/23pv6r.jpg
"கண்ணன் என் காதலன்" பற்றிய தங்களின் தொகுப்பு வெகு அருமை.
1968 ஏப்ரல் மாதம் 25ம் தேதி யன்று வெளியான இந்த காவியத்துக்காக, அப்போது சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்த நானும், என் நண்பர்கள் திருவாளர்கள் எம். ரங்கராஜன் (DPI யில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்), ரவிக்குமார், ( சொந்த ஊர் குடியாத்தம்), கே. என். ரங்கராஜன் ( IOB யில் பணியாற்றியவர்) பார்த்தசாரதி (தற்போது உயிருடன் இல்லை) மற்றும் மீர்சாகிப்பேட்டை பகுதியில், சொந்த தொழில் செய்து வரும் டி. சந்திரசேகரன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான STAR ஒன்றை மூங்கில் பத்தைகள் மற்றும் வண்ணத்தாட்கள் கொண்டு உருவாக்கி அதில், அதற்கு முன்பு வந்த "குடியிருந்த கோயில்" காவியத்தில், பொன்மனச்செம்மல் தோன்றும் வண்ண, கருப்பு-வெள்ளை STILL களை ஒட்டி, அதனை "ஸ்டார்" திரையரங்கில் கட்டி தொங்கவிட்டு அழகு பார்த்த அற்புத காட்சி நினைவுக்கு வருகிறது. மேலும், மக்கள் திலகத்தின் மூத்த ரசிகர்கள் பலர் தோரணம் கட்டி, கையால் வரையப்பட்ட அக்கால பேனர்களில், வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். உருவத்துக்கு மாலையலங்காரம் செய்த பணிகளில் அவர்களுக்கு உதவியாக இருந்ததும் என்னை அசை போட வைக்கிறது.
"நடிக மன்னன்" எம். ஜி. ஆர். அவர்களின் வண்ண மற்றும் கருப்பு-வெள்ளை STILL கள் அப்போது வெளியான "பொம்மை", "பேசும் படம்", ஆகிய மாத பத்திரிகைகளிருந்தும், "திரை உலகம்" பத்திரிகையிலிருந்தும் CUT செய்து சேகரித்து வைப்போம்.
பள்ளியில் படிக்கும் போதே, "எம். ஜி. ஆர். ரசிகர்கள் பட்டாளம்" ஒன்றை, எங்களுக்குள் ஏற்படுத்தி, அவரது சாதனைகளை சொல்லி மகிழ்வோம்.
இன்றும் என் பள்ளி நண்பர்கள் பலருடன் என் தொடர்பு இருந்து வருகிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன். இந்த தொடர்பில் மேலும் சில பள்ளி தோழர்கள் (இதில் பெரும்பாலனவர்கள் எம். ஜி. ஆர். ரசிகர்கள் மற்றும் பக்தர்களே) இணைந்து, தற்போது, இந்த நட்பு வட்டாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை சந்தித்து, மக்கள் திலகத்தின் படங்களுக்காக உழைத்ததை பெரும் பாக்கியமாக கருதி, அந்த நாள் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டு பேரின்பம் அடைவோம். நண்பன் பார்த்தசாரதி மட்டும் இல்லையே என்ற கவலை, எங்கள் கலந்துரையாடலில் இருக்கும்.
இனிய நினைவுகளை மீண்டும் அசை போட வைத்தமைக்கு நன்றி !
மக்கள் திலகத்தின் காவியங்கள் பற்றிய தங்களின் அடுத்த தொகுப்பினை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
பின் குறிப்பு :
படத்தில் சில குறைகள் என்று
1. கண்ணன் ஏன் மல்லிகாவை வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை ? இது ஒரு புரியாத புதிர் .
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுக்கின்றன
என்று கூறியுள்ளீர்கள்.
1. குடும்ப மருத்துவராக நடிக்கும் அசோகனை முழுமையாக நம்பிய காரணத்தினால், மல்லிகாவை கண்ணன் வேறு கைதேர்ந்த மருத்தவரிடம் கால்களை காட்டவில்லை.
2. நகைச்சுவை காட்சிகள் படத்தின் வேகத்தை தடுப்பது உண்மைதான். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.
[QUOTE=sivajisenthil;1220565]ஸ்வீட் எடு கொண்டாடு குறுந்தொடர்
பகுதி 7
திரிஷா இல்லேன்னா நயன்தாரா ! .......குதிரை கிடைக்கலேன்னா மூவேந்தர் சாய்ஸ் யானையே!
யானைகளை அடக்கி ஆள்வதிலும் வீரம் வெளிப்படுத்திய நமது திரையுலக மூவேந்தர்கள் !!
திரு.சிவாஜி செந்தில் சார்,
குதிரை கிடைக்கலேன்னா யானை என்பதற்கு நீங்கள் பயன்படுத்தியிருக்கும் உதாரணத்தை ரசித்து சிரித்தேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
[QUOTE=Varadakumar Sundaraman;1220639]மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் முதலாக 1967 தேர்தலில் போட்டியிட்ட பரங்கிமலை
[SIZE=2]பிற்பகல் 12 மணி அளவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரங்கிமலை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை விட 3000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் என்ற செய்தி வானொலியில் வந்தவுடன் மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை .பட்டாசுகள் வெடித்தும் , இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள் .பின்னர் ஒட்டு எண்ணிக்கையில் ஒவ்வொரு சுற்றிலும் மக்கள் திலகத்தின் வாக்குகள் வித்தியாசம் முன்னேறி கொண்டே வந்தது .இரவு 10 மணியளவில் மக்கள் திலகம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை கடந்து முன்னேறி கொண்டு வந்தார் . நள்ளிரவில் அதிகார பூர்வமாக தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (27,674) மக்கள் திலகம் எம்ஜிஆர் வெற்றி என்ற செய்தியினை கேட்டதும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை மறக்க முடியாத நாள் ..என்னை போன்றே தமிழகமெங்கும் இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மக்கள் திலகத்தின் வெற்றியை குதூகலத்துடன் கொண்டாடினார்கள் .
தங்களின் மலரும் நினைவுகளுக்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்புக்குரிய திரு.ரவி அவர்களுக்கு,
எனக்கு மிகவும் பிடித்த கண்ணன் என் காதலன் படத்தை பற்றிய தங்களின் விமர்சனம் பிரமாதம். நறுக்குதெறித்தாற்போல் அமைந்த நல்லதொரு அலசல். கதையையும் ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள். மக்கள் திலகமும் வாணிஸ்ரீயும் பாடும் ‘கண்கள் இரண்டும்...’ நான் மிகவும் ரசிக்கும் பாடல்.
இனிய மாலைப் பொழுது பற்றிய தங்களின் வர்ணனையும் அட்டகாசம். (whatsapp இல் போட )நவீனத்தோடு இணைந்த வளமான கற்பனை. சிறந்த கலைஞர்களை மட்டுமல்ல, இனிய இயற்கையையும் ரசிக்கும் தேர்ந்த ரசிகர் என்பதை காட்டிவிட்டீர்கள்.
தங்களின் உயர்ந்த ரசனைக்கும் அருமையான விமர்சனத்துக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பேராசிரியர் திரு.செல்வகுமார் சார்,
கண்ணன் என் காதலன் படம் வந்தபோது உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அற்புதம். நீங்களும் திரு.ரவி சாரும் என்னையும் பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். தலைவரின் ரசிகர்களான பல நண்பர்களோடு சேர்ந்து படம் பார்த்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. கால ஓட்டத்தில், வாழ்க்கையில் நம்மை நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், ஒருவரோடொருவர் தொடர்புகள் விட்டுப் போய் பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. நானும் உங்களோடு சேர்ந்து தியேட்டரில் தோரணங்கள் கட்டியது போல ஒரு உணர்வு. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்