மக்கள் குரல் -09/01/19
http://i68.tinypic.com/2a9uwrk.jpg
Printable View
மக்கள் குரல் -09/01/19
http://i68.tinypic.com/2a9uwrk.jpg
தினத்தந்தி -10/01/19
http://i64.tinypic.com/311s46v.jpg
''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில்,
அவரை எதிர்த்தவர் நீங்கள். அதற்காக, இப்போது வருத்தப்படுகிறீர்களா?''
''தி.மு.கழகத்தில் அடங்காப் பற்றும் தணியா வேட்கையும் கொண்டவனாக இயங்கிய காலத்தில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை நெஞ்சிலே போற்றியது உண்டு. தி.மு.கழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி அவரை வெளியேற்றியபோது, கட்சிக்கும் தலைமைக்கும் நான் கொண்டு இருந்த விசுவாசத்தின் காரணமாக, எம்.ஜி.ஆர். அவர்களை எதிர்த்து மேடைகளில் விமர்சித்தேன். கடுமையாக விமர்சித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே இறங்கி காரில் ஏறினால், அவரது 'நாடோடி மன்னன்’, 'மன்னாதி மன்னன்’ பாடல்கள்தாம் இரவு முழுக்கப் பயணத்தில் ஒலித்துக்கொண்டு இருக்கும். 'நாடோடி மன்னன்’, 'மதுரை வீரன்’, 'தாய்க்குப் பின் தாரம்’, 'எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது!
அவர் முதல் அமைச்சராக இருந்தபோது, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா, 'இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்னையை எம்.ஜி.ஆர்-தான் தூண்டுகிறார்’ என்று அந்நாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு குற்றம் சாட்டினார். மறுநாள் நாடாளுமன்றத்தில், இலங்கை அதிபர் மீதும் இந்தியப் பிரதமர் மீதும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து நான் பேசினேன். காங்கிரஸோடு கூட்டணி இருந்ததால், அண்ணா தி.மு.க. எம்.பி-க்கள் வாய் திறக்கவில்லை.
'என்ன, உங்களுக்கு எம்.ஜி.ஆர். மீது திடீர்க் காதல்?’ என்று காங்கிரஸ்காரர்கள் கேட்டார்கள். 'அவர் எங்கள் முதல் அமைச்சர். அவரை இலங்கை அதிபர் விமர்சிப்பதை, எள் அளவும் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்களுக்குள் இருக்கின்ற அரசியல் போராட்டத்தை, தமிழ்நாட்டில் பார்த்துக்கொள்வோம்’ என்றேன்.
அதன் பிறகு, 1989-களின் தொடக்கத்தில், இலங்கையில் வன்னிக் காட்டில் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களோடு இருந்த நாட்களில், எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் செய்த உதவிகளை அவர் விவரித்தபோது, நான் மெய்சிலிர்த்துப்போனேன். அதில் இருந்து மேடைகளில் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி, விமர்சிப்பதை விட்டுவிட்டேன்.
தொடக்க நாட்களில் அவரை விமர்சித்ததற்காக நான் வருந்துகிறேன்!''
- ' விகடன் மேடை ' யில் வைகோ ..... Thanks..........
Greetings and good day to everyone. In remembrance of philanthropy Makkal Thilagam Dr. MGR 102nd birthday, we would like to extend our food charity programme invitation to you which will be conducted by MGR Punitha Mandram members which will be held on 19th January 2019 Saturday from 11am onwards at MALAYSIA ASSOCIATION FOR THE BLIND.
Address :13, Jalan Tun Sambanthan 4, Brickfields, 50470 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.
As this will be our 3rd successful year of food charity, we thank our past generous contributors who has made possible towards achieving the food charity movement. With a great heart i hope you would kindly accept this as a personal invitation towards the programme. We are also looking forward to your.kind and generous contribution towards the food charity for the Blind. With warm wishes we are looking forward to your generous support and looking forward towards your presence on 19th January 2019 to Celebrate the 3rd consecutive year celebration in the name of our Noble hearted Evergreen Dr.MGR the Mahaan. Thank you.
Warmest & Kind Regards
MGR Punitha Mandram Members /
Singapore MGR /
Dr. MGR Kalaimagal Poonkodi...... Thanks..........
அனைவருக்கும் 2019 புத்தாண்டு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்......... மக்கள் திலகம் புகழ் என்றும் வாழியவே....
பலருக்கு தெரியாத புது விஷயம்...
எம்ஜிஆர் படத்தை அறிஞர் அண்ணா திறந்துவைத்தார்...
வடசென்னை-பழைய வண்ணாரப்பேட்டையில்
சர்.தியாகராயா கலை கல்லூரி உள்ளது..
இது 1950 ல் ஆரம்பிக்கப்பட்டது...
நீதிக்கட்சி தலைவரின் பெயரில் இது உள்ளதால் இக்கல்லூரி
நிதி நெருக்கடியில் தவித்தபோது
அப்போதைய காங்கிரஸ் அரசு மூட திட்டமிட்டது..
அக்கல்லூரி தாளாளர்கள் இதை
பேரறிஞர் அண்ணாவிடம் தெரிவித்தனர்..
பேரறிஞர் உடனே எம்ஜிஆரை அழைத்து இப்பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றார்...அதற்கு எம்ஜிஆர் உடனே ஒரு கலைநிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வந்த வசூலுடன் தனது பணத்தையும் போட்டு நிதி நெருக்கடியிலிருந்து அக்கல்லூரியை காப்பாற்றினார்...
அந்த விழாவில் பேசிய அண்ணா அவர்கள், அக்கல்லூரி ஸ்திரமான நிலையை அடையும் வரை எம்ஜிஆரை அக்கல்லூரியின் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும்படி கேட்டு கொண்டார்..
அதன் படி எம்ஜிஆர் அக்கல்லூரியின் அறங்காவலராக
1960 முதல் 1962 வரை இருந்தார்...
அந்த சமயத்தில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை அக்கல்லூரி வளாகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்துவைத்தார்...அக்கல்லூரி இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... நன்றி:......... Thanks...
கடந்த வாரம் காரைக்கால் P.S.R. DELUX A/C-4K DOLBY DIGITAL அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த டிஜிட்டல் "ஆயிரத்தில் ஒருவன் " தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் திரையிடப்பட்டது .
http://i64.tinypic.com/w0g5zc.jpg
கடந்த வாரம் மதுரை ராம் அரங்கில் (04/01/19) முதல் மீண்டும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான டிஜிட்டல் "ரிக்ஷாக்காரன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டது .
http://i66.tinypic.com/289zy90.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.