-
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
-
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
-
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது...
-
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல
அடியெடுத்து கொடுத்ததோ
-
Naane varugiren
Kelamal tharugiren
Naane varuginen
Kelamal tharugiren
Kan theendi urigiren
Kai theendi karaikiren
-
kaNNaale pesi pesi kollaadhe
kaadhalan kettu kettu sellaadhe
kaadhal dheiveega raaNi.........
vaNakkam Madhu Sree! :). Is it raining in Chennai ? :)
-
காதல் ராணி கட்டிக்கிடக்க
கட்டில் இருக்கு கட்டழகு கலையே வா
பால் போல் மேனி பள்ளி கொள்ளவும்
துள்ளி விழவும் வெள்ளி வட்ட நிலவே வா
-
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ பெண்ணுக்கு
அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Sent from my SM-G935F using Tapatalk
-
பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை...
-
காக்கா காக்கா மை கொண்டா
காடைக் குருவி மலர் கொண்டா
பசுவே பசுவே பால் கொண்டா
பச்சைக் கிளியே பழம் கொண்டா