கானம் பாடும் குயிலேயுன்
..காதுக் கினிய பாடலிலே
மோனம் கலையும் மாமரங்கள்
..மேவி உயரே தான்பார்த்து
வானம் நோக்கி சலசலத்து
..வாகாய் உன்குரல் இனிமையிலே
நாண ந் துறந்த நங்கையைப்போல்
.. நன்றாய்க் கிளையை ஆட்டிடுதே
Printable View
கானம் பாடும் குயிலேயுன்
..காதுக் கினிய பாடலிலே
மோனம் கலையும் மாமரங்கள்
..மேவி உயரே தான்பார்த்து
வானம் நோக்கி சலசலத்து
..வாகாய் உன்குரல் இனிமையிலே
நாண ந் துறந்த நங்கையைப்போல்
.. நன்றாய்க் கிளையை ஆட்டிடுதே
ஆட்டிடுதே பரம்பொருள்
படைத்த உலகினை
உலகின் உயிர்களை
நூலில் ஆடும் பொம்மைகளாய்
இயற்கை சக்திகளை
நிலத்தை நீரை காற்றை
கயிற்றில் சுற்றிய பம்பரமாய்
தீராத விளையாட்டுப் பிள்ளையாய்
பிள்ளையாய்ப் பிறந்து என்னைப்
…பித்தனாய் ஆக்கி விட்டு
மெள்ளவே சொல்லு கின்றாய்
…மேவியே பகைவன் நாமம்
அள்ளியே எடுத்து உன்னை
…அடிக்கவே தோன்றினாலும்
வெள்ளமாய்ப் பாசம் வந்து
…வேகமாய்த் தடுக்கு தப்பா
தள்ளாடும் வயதினிலே பிள்ளையென இங்கே
..தயங்காமல் பிறந்துவிட்ட பிரகலாதா கேட்பாய்
துள்ளிவரும் உன்னழகை துடிப்பான உந்தன்
…அள்ளிவரும் பேச்சுகளைக் கேட்பதற்கு வந்தால்
எள்ளிநகை தான்புரிந்து என்னிடமே நீயும்
..எல்லாரில் வல்லவர்தாம் திருமாலே என்றே
சொற்களிலும் சரம்தொடுத்து சுடுகின்றாய், உன்னை
…சொல்லாலும் அடிப்பதற்கும் மருகுதடா நெஞ்சம்..
நெஞ்சம் பதறுது
அங்கம் உதறுது
காதிலே விழுந்தது
கெட்ட கெட்ட சேதி
காடுகளை அழித்து
குரங்கினம் ஒழித்து
பல்லுயிர் தொலைத்து
தொழில்கள் வளர்த்து
முன்னேற்றமாயிது
மங்குது உன் அறிவு
மண்ணை தலையில் தானே
கொட்டிக்கொள்ளாதே மூடனே
மூடனே நானென் றாலும்
..முனிவரே பகரு வீர்தான்
கூடவே இளமைக் கோலம்
..கொண்டநான் வருகை யில்தான்
பூடகம் எதுவு மிலாமல்
..பெண்மணி தானும் கேட்க
கூடநீர் சுமந்தே கரையில்
..கொணர்ந்த துமேனோ சொல்வீர்..
அக்கரையில் சுமந்த பெண்ணை
..இக்கரையில் விட்ட போதே
பக்கெனவே மறந்து போனேன்
.. பாழ்பட்ட உந்தன் நெஞ்சம்
சொக்கவைக்கும் பாவை தன்னை
..சிந்தையிலே சுமந்து கொண்டு
அக்கறையாய்க் கேட்கி றாயே
..அடைவாயா பக்கு வத்தை..
பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே
இத்தலைமுறையினரே
நாட்டின் கண்கள்
நாட்டின் போர்வாள்கள்
நாட்டின் பயிர்கள்
நாட்டின் விடிவெள்ளிகள்
நாட்டின் சொத்துக்கள்..
நாட்டின் இன்னும் என்னவெல்லாமோ கள்..
அவர்களால் தான் இருக்கிறது
எதிர்காலம்
என மூச்சுவாங்கச் சொல்லி
இறங்கிய பேச்சாளர்
காரை அடைந்தால்
ஒரு சிறுவன்
ஐயா.. கார் க்ளீன் பண்ணட்டுமா..
ச்சீ போ அந்தாண்டை..
எங்கிருந்தோ வந்துட்டாங்க..
என விழுந்தார் எரிந்து..
எரிந்து தணிந்த காடுகள்
அடக்கி வைத்த பெண்மைகள்
இருண்டு கிடந்த வானங்கள்
வரண்டு கிடந்த பாலைகள்
அரிதாகி வரும் காட்சிகள்
ஒழிய வேண்டும் மிச்சங்கள்
மிச்சங்கள் கொஞ்சம் கூட இல்லை
காக்கைக்கு வைத்திருந்த சாதம்..
ம்ம்
முன்னோர்கள்
ஒட்டு மொத்தமாக வந்திருப்பார்களோ
இருக்கலாம்..
எனில் இன்று ஞாயிற்றுக் கிழமை
ஞாயிற்றுக் கிழமை சிறப்பை இழக்கும்
ஏழில் ஒன்றாய் சாதாரணமாய் நிற்கும்
மாறுதலின்றி விடிந்து முடிந்து போகும்
ஏனெனில் இது ஒரு இலையுதிர் காலம்