-
**
கோழிப் பாடல்கள் -1
மதுரையில் என் வீடிருக்கும் தெருவிற்கு இடப்பக்க முனையில் –முக்கில் சாலை..சாலையைக் கடந்து சென்றால் நெட்டுவாக்கில் கொஞ்சம் செம்மண்பாதையிட்ட (அல்லது ரோட் போட்டிருந்ததா என நினைவில்லை) வி.பி சதுக்கம் என்று ஒரு தெரு வரும்..அங்கு இருந்த ஒருவீட்டில் என் சிறுவயது சினேகிதனை (அப்போ நான் நாலாம் கிளாஸ் ஆர் அஞ்சாம் கிளாஸ் நினைவில்லை) பார்க்கப் போவேன் அவர்கள் வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள் நான்கைந்து கோழிகள் கொக் கொக் கொக்கென குட்டிக்கண்ணை உருட்டி உருட்டி கிராதகா நீயா என்னைச் சாப்பிடுவே என்பது போல் பார்த்துக் கொஞ்சம் ஒயிலாட்டம் ஆடி இடையை அசைத்துச் செல்லும்.. ஒன்றிரண்டு கொண்டை வைத்த சேவல்களும் நடை பயிலும்..அப்புறம் தான் குஞ்சுகள் கீச் கீச் எனக் கத்தியபடி குட்டிக் கண்களை உருட்டிய படி நடக்கிறதே உருள்வது போல இருக்கும்படி சென்று கொண்டிருக்கும்.. ஆனால் முதல் முதல் பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யம்.. காரணம் ஒரு சில கோழிக்குஞ்சுகள் பச்சை ஒருசில மஞ்சள் ஒரு சில பிங்க் என ஹோலி நிறத்தில் இருந்தன.. என்னடா இது எனக் கேட்டதற்கு ஏதோ தூக்கிட்டுப் போகாம (கழுகா பூனையா நினைவில்லை) இந்த ஏற்பாடு என அந்த ஃப்ரண்ட் சொன்னது நினைவிருக்கிறது..
ஆக நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் கோழியைச் சாப்பிடாவிட்டாலும் கோழியைப் பார்த்திருக்கிறேன் என்றுதான்..வளர்ந்த பிறகு பார்த்த கோ….க்கள் வேறு! ஆக..
பெட்டிக்குள் பூட்டப் பட்ட கதானாயகி கூட மாட்டிக் கொண்ட கதானாயகன்..இதோ பாட்டு.. என்னா விசில் ஹம்மிங்க்ணா…
https://www.youtube.com/watch?v=VVqZ...yt-cl=85114404
-
கோழிப் பாடல்கள் – 2
கரைசெல்ல வாழ்வினில் கண்களை மூடி
இறையைத் தொழுதல் இனிது..
ஆமாங்க சில பேர் - பொறந்ததுலருந்து வளர்ந்து பெரியவனாகி வேலை கிடைச்சு காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்க உருகி பின் அப்பா அம்மா பார்த்த பொண்ணை சமர்த்தா சொத்தோட கல்யாணங்கட்டி ஹனிமூனுக்கு நிறைய செலவெல்லாம் மாமனார்க்குவெக்காம சிக்கனமா ஸ்விட்சர்லாந்துல்லாம் போய்ட்டு வந்து பின் சமர்த்தா வாரிசுகளை ப் பெத்து வளாத்து ஆளாக்கி அவர்களைக் கல்யாணங்கட்டி மூப்பெய்தி பின் கண்மூடற நிலை வர வரைக்கும் என்னெல்லாம் பொய்கள் சொல்லியிருப்பாங்க… அவ்வப்ப இறைவனைக் கும்பிட்டிருப்பாங்களா. ஹாய் காட் நான் நல்லா இருக்கேன் உன்னாலே ந்னு என்னிக்காவது தாங்க்ஸ் சொல்லியிருப்பாங்களா ம்ம் இதுக்கு நடுல்ல இந்த இறைவன்ங்கறவன் யாருன்னு கொஞ்சம் ஆன்மிக அலசல்லாம் பண்ணிகினு வேற இருப்பாங்க இல்லியோ.. கவிஞர் என்னவாக்கும் சொல்றார் இந்தப் பாட்டுல…
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த
ஏழையின் பேர் உலகில் இறைவன்
இதோ பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டவன்.
Song நு தேடினா இல்லீங்க்னா.. ஸாரி..
(ஹப்பா அடுத்து போடப் போற பாட்டுக்கு ஜஸ்டிஃபை பண்ணியாச்சு..:) )
-
கோழிப் பாடல்கள் – 3
அநியாயங்க அக்கிரமம்.. கோழிப் பாட்டுன்னு தேடினா எல்லா வெவகாரமாத் தான் வருது. கோழி கூவும் நேரமாச்சு தள்ளிப் போங்கறா ஒருத்தி.. கோழிக்குஞ்சு தேடிவந்த கோபாலா அப்படின்னு எக்ப்ளனேஷ்ன் வேற தயிர்வடை கணக்கா ( நிறத்துக்குச் சொன்னேங்க்ணா) இருக்கற இன்னொரு பொண் சொல்றா.. ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராஜாங்கம்னு வேற ரெண்டு காதலர்கள் கூவுறாங்க..சாரி பாடறாங்க என்னமோ போங்க இங்க ரெண்டு கோழி முழிச்சுண்டுருக்கு..எப்படி ஆடறது பாடறதுன்னு பார்ப்போம்.
இருளுடன் மழையும் கூடி
…இளமையும் சேர அங்கே
விறுவிறு வென்றே நங்கை
…வேகமாய் நடன மாட
கருநிற வானில் மின்னல்
..கண்களில் மோகங் கூட்ட
வருத்திடும் வாடைக் காற்றும்
.வாழ்த்துரை எழுத லாச்சே!
***
கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க (ஸ்வெட்டர் போட்டுக்கலாமில்லை)
கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
https://www.youtube.com/watch?x-yt-t...yer_detailpage
-
இன்னாமா எழுதுறாங்கபா? நாம நடைய மாத்தினாலும் இவங்களுக்கு அளவுல, இல்லை இல்லை ஒரு பத்து சதவீதமாவது எழுத முடியுமா? முயற்சிக்கலாம். நான் பட பாடல் "போதுமோ இந்த இடம் ..." அபாரம்பா!!!
-
இன்னாங்ணா டமால்னு நானும் கோழிப்பாட்டை போடுவேன்-னு சொல்லிப்போட்டீங்க. எனக்குத் தெரிஞ்ச பாட்டையெல்லாம் நீங்களே சொல்லியும் போட்டீங்க.எல்லாம் விவஹாரமான பாட்டால்ல இருக்கு. கோழி-ன்னா இப்பிடித்தானா? இங்கே எதுவும் சென்சார் இல்லையா?
-
இந்தாங்ணா ஒரு கோழிப் பாடல். வழக்கமான கோழிப் பாடல்தான்.
https://www.youtube.com/watch?v=xXXUzmo_Az8
-
ஆஹா. ஆப்டுகிட்டதுங்ணா வித்தியாசமான ஒரு கோழிப்பாட்டு. கொஞ்சம் சோகம்தான். பரவாயில்லை.
https://www.youtube.com/watch?v=Iv8YcPW8zGw
-
ஆஹா அழகான அறிவான அருமையான அற்புதமான அட்டஹாசமான பாட்டுங்ணா (நெஜமாவே)
https://www.youtube.com/watch?v=E18POUkDaIE
-
எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஏத்தமான பாட்டுங்ணா:
https://www.youtube.com/watch?v=rXorBw_EP88
-