-
உலகையே உலுக்கும் கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டே வெளியில் வரக்கூடாது என்கிற நிலை. வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துவிடலாம். ஆனால் பசி. அதற்கு வழி. பிதுங்குமா இல்லையா விழி..?
அந்த பிதுங்கும் விழிகளுக்கு வழி சொல்லியிருக்கிறது நம்ம ரேஷன் கடைகள். மொத்தம் கிட்டத்தட்ட 35000 நியாயவிலை கடைகள். ஏழு கோடி தமிழ்மக்கள். கிட்டத்தட்ட 2 கோடி ரேஷன் அட்டைகள்.
நம்ப முடிகிறதா இப்படிப்பட்ட சூழலை இன்றைய அரசு இலகுவாக சமாளிக்கக் காரணம் ஒரு மாமனிதன். அம்மாமனிதனின் தொலைநோக்கு பார்வை. அந்த மனிதனின் பசியறிந்த மனசு.
யார் அவர்..?
ஆம். புரட்சித்தலைவர் எம்ஜியார்.
இந்த சினிமாரக்காரனுக்கு என்ன தெரியும் நிர்வாகம் பற்றி..? அந்தாளு கூட ஒரு நூறு விசிலடிச்சான் குஞ்சுகள் சுத்திகிட்டு திரியுவானுக அவனுகளுக்குலாம் அரசு நிர்வாகம் ன்னா என்னான்னு தெரியுமா..? அதுவுமில்லாம அந்த நடிகன் கூட இருப்பவனெல்லாம் படிக்காத ஆட்கள். இதுகளை லாம் வச்சிக்கிட்டு இந்தாளு எண்ணத்தப் பண்ணிடுவான்னு பார்த்திடுவோம்.
இப்படி எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளானவர் வேறுயாருமல்ல நம்ம மக்கள் திலகம் எம்ஜியார் தான்.
அப்படிப்பட்டவர் தான், 1980 இல் ஒரே ஒரு கையெழுத்தில் 22000 கடைகளை திறந்தார். இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு கடை என்பதை இலக்காக கொண்டு இந்த structure ஐ மிகச்சிறப்பாக உருவாக்கி, அவசர காலத்திற்கு தமிழனுக்கு உணவாக்கிய, உன்னதமான மனசு நம் தலைவருடையது.
அது மட்டுமா தமிழகம் முழுவதும் கிராமங்கள் தோறும் PHC மருத்துவமனைகளை ஏற்படுத்திய சாதனைகளுக்கும் சொந்தக்காரரும் அவரே.
சுமார் 40 ஆண்டுகாலத்திற்கு முன்பே இதன் முக்கியத்துவம் அறிந்து செயலாற்றியவர்
மக்கள் திலகம். அதனால் தான் அவர் மக்களின் திலகம்.......... Thanks.........
-
'லூஸிப்பர்' மோகன்லால் நடித்து பிருதிவுராஜ் தயாரித்த மலையாளபடம் இதுவரை உள்ள எல்லா மலையாள வசூலையும் முறியடித்த படம் இந்த படம் சென்ற ஈஸ்டர் அன்று ஏசியநெட் டிவியில் ஔிபரப்பபட்டது இதில் ஒருகாட்சி கதாநாயகன் ஒரு அனாதை விடுதி நடத்தி கொண்டே கேரளா அரசியலில் ஒரு முக்கிய புள்ளியாக நேர்மைவாதியாகவும் இருக்க சில ஊழல்வாதிகள் கதாநாயகனை அழிக்க போலீசை அனுப்புகிறது ... உயர் அதிகாரி தலைமையில் அனாதை இல்லத்தில் நுழைந்து கதாநாயகன் ஆன மோகன்லாலை பொய் வழக்கின் பெயரில் விலங்கு மாட்டி இழுத்து செல்ல ஒரு சிறுமி மோகன்லாலை நெருங்க உயர்அதிகாரி சிறுமியை தூக்கி வீச கோபம் கொண்ட கதாநாயகன் உயர் அதிகாரியை காலால் ஓங்கி மிதித்து தள்ளுகிறான் கோபம் கொண்டு உயர் அதிகாரி கதாநாயகனை பார்த்து நீ என்ன பெரிய "எம்.ஜி.ஆரா. " தலைவராடா என உறுமி தரதர என இழுத்து செல்லுகிறார் ...
மலையாள படத்தில் இந்த காட்சியை கண்ட போது.அநீதியை எவ்வளவு பெரியவன் செய்தாலும் தண்டிக்கும் சக்தி எம்.ஜி.ஆரு.க்கு மட்டுமே இருந்தது என்பதை மலையாளிகளும், கேரள திரையுலகமும் ஒப்பு கொள்ளுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது... வாழ்க, வளர்க... மக்கள் திலகம் புகழ்........ Thanks.........
வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...
-
உண்மை தான்.
தானம்...
கோ தானம்(பசு)...
கன்னிகா தானம்...
நிதானம்...
அன்னதானம்...
பொருள்தானம்(தங்கம் அடங்கும்)...
உடைகள் தானம்....
வீடுகள் தானம்....
புரட்சிதலைவர்
கையில் எடுத்தார்...
சட்டத்தை
நானே போடப்போகிறேன்
சட்டம்
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்
நாடு நலம் பெறும் திட்டம்.
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு....... Thanks.........
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது*அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.
சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .
சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .
எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .
மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..
தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .
-
எதிரிகளைப் பந்தாடும் #MGR ஆரம்ப காலப் படங்களில் கடுமையாகச் சண்டையிடுவார். போகப்போக லகுவாகச் சண்டையிட ஆரம்பித்தார்.
சில சமயம் சிரித்துக்கொண்டே அடிப்பார், உன்னைத் தாக்குவது என் நோக்க மல்ல என்று சொல்வது போல. வில்லனை வீழ்த்திய பிறகு அவனைக் கொல்ல மாட்டார். அவன் திருந்த ஒரு வாய்ப்புக் கொடுப்பார். முடிந்தால் அவனிடமே அதிகாரத்தையும் கொடுப்பார். அதிகாரத்தைத் துறந்து ஆனந்தமாகச் செல்லும் எம்.ஜி.ஆரின் மேல் மக்கள் பூமாரி பொழிவார்கள்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, “என்னுயிரைத் தருகின்றேன், மன்னன் உயிர் போகாமல் இறைவா நீ ஆணையிடு” என்று ஒருவர் பாடுவார். சர்வ மதங்களையும் சேர்ந்தவர்கள் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். எம்.ஜி.ஆர். நிஜத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது சர்வ மதத்தவரும் பிரார்த்தனை செய்தார்கள். அவருக்காகச் சிலர் உயிரை விட்டார்கள். ‘
'நான் ஆணையிட்டால்’ என்று தங்களுக்காக முழங்கிய திரைப் பிம்பத்தை அரியணையில் ஏற்றிப் பார்த்த மக்களின் செயலை இந்த வரிசையில் வைத்துப் பார்த்தால் துல்லியமாகப் புரிந்துகொள்ளலாம்.
காட்சிப் படிமங்களும் வசனம் அல்லது பாடல் வரிகளும் எம்.ஜி.ஆரின் பிம்பத்தைக் காவிய நாயகனின் நிலைக்கு உயர்த்தியதற்கான ஆகச் சிறந்த உதாரணங்களாக ‘நாடோடி மன்னன்’ படத்தில் வரும் கொள்கை அறிவிப்புகளையும் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் ‘நான் ஆணையிட்டால்’ பாடலையும் சொல்லலாம். இதே உத்தியை அல்லது பாணியை ஒரு கட்டத்துக்குப் பிறகான எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களிலும் காணலாம்.
தனது திரை பிம்பத்தைத் தன் நிஜ பிம்பமாக மக்கள் கருதுகிறார்கள் என்பதை ஏதோ ஒரு தருணத்தில் துல்லியமாக உணர்ந்த எம்.ஜி.ஆர்., அந்த பிம்பத்தை வலுப்படுத்தும் முயற்சிக்காகத் தன் கலை வாழ்வை முற்றிலுமாக அர்ப்பணித்தார்.
‘பெற்றால்தான் பிள்ளையா’, ‘பாசம்’ போன்ற படங்கள் காணாமல்போயின. வேட்டைக்காரன், காவல் காரன், விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன், ஊருக்கு உழைப்பவன் என்று அவர் படங்கள் திரை, நிஜ பிம்பங்களுக்கு இடையிலான வித்தியாசங்களை அழிக்கும் வெளிப்பாடுகளாக மாறத் தொடங்கின.
இந்த முயற்சியில் காட்சிகளையும் வசனம் மற்றும் பாடல்களையும் பயன்படுத்தும் கலையில் தனிப்பெரும் திறனாளராக எம்.ஜி.ஆர். உருவெடுத்தார்.
சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். பாடல்களில் நாம் கண்ணதாசனையோ ,வாலியையோ உணர்வோம். எம்.ஜி.ஆரின் பாடல்களில் எல்லாமே எம்.ஜி.ஆராகவே மாறியிருக்கும்.
‘குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம்’ என்பது கவிஞனின் கனவு. அது முழுக்க முழுக்க எம்.ஜி.ஆரின் பிரகடனமாகவே பார்க்கப்பட்டது.
திரைப்படம் என்பது பல்வேறு கலைகளைத் தன்னுள் அடக்கிய பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலை. பார்வையாளர்களின் உளவியலை வடிவமைக்கக்கூடிய அதன் தன்மையை எம்.ஜி.ஆரைப் போலச் சிறப்பாகப் புரிந்துகொண்டவரோ அதை வெற்றிகரமாகப் பயன் படுத்தியவரோ உலகில் இன்னொருவர் இல்லை. பல கோடானுகோடி கணக்கானோரை impress செய்யும் வகையில் பயன்படுத்தினார். திரையில் பாத்திரம் இல்லை. கதை இல்லை. அங்கே இருப்பவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. வெளியில் இருக்கும்
எம்.ஜி.ஆரும் அவரும் ஒருவரே. இதுதான் பெருவாரியான ரசிகர்களின் மனதில் படிந்த பிம்பம். திரைப் படிமம் நிஜப் படிமமாக மாறும் உருமாற்றம் இது. இந்த உருமாற்றத்தில் பெற்ற வெற்றிதான் எம்.ஜி.ஆரை, சாகும்வரை தமிழகத்தின் முதல்வராக வைத்திருந்தது.
-கட்டுரையாளர் திரு.மதன்.......... Thanks.........
-
12.07.1974 இல் தடைகளை தாண்டி வருகிறது புரட்சிதலைவரின் "நேற்று இன்று நாளை", படம்..
உ.சு.வா. மாதிரி கோட்டை விட்டுவிடாமல் படத்தை வரவிடாமல் செய்ய அன்று ஆண்ட தீயசக்தி வழக்கம் போல தூண்டி விட்டது.
கும்பகோணம் நகரில் பெரும் பதட்டம் ஆரம்பம் ஆனது.. சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த ஐ.ஜி.அருள் அவர்கள் ஆளும் கட்சி மன்னை நாராயணசாமி என்றாலும் சரி அதிமுக பிரமுகர் எஸ்.ஆர்.ராதா குழுவை சேர்ந்த எம்ஜியார் மன்றம் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும் கலவரம் வராமல் தடுக்க இரு தரப்பினரையும் அழைத்து ஒரு அதிகாரி மூலம் பேச்சு நடத்த.
அந்த நாளும் வந்தது....நகர் எங்கும் இருந்த தலைவரின் விளம்பர போர்டுகள், பட போஸ்டர்கள் கிழித்து எறிய பட்டன.
படம் ஓடவேண்டிய அரங்கை கொளுத்தி விட ரவுடிகள் பட்டாளம் தயார் ஆகின.......அவர்கள் அரங்கை நெருங்கும் போது அங்கே நூற்றுக்கணக்கில் எம்ஜியார் படை திரண்டு அவர்களை தடுத்தனர்.
இருதரப்பிற்கும் ஏற்பட்ட கடும் மோதலில் சேதம் இருபுறமும் ஏற்பட அங்கே அரங்கில் படம் அமர்க்களமாக ஓட துவங்கியது.
தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே பாடலுக்கு எழுந்த கரவொலி கும்பகோணம் நகர் எங்கும் ஒலித்தது.
இதை தாங்க முடியாத தீயசக்தி கும்பல் எஸ்.ஆர் ராதாவுக்கு சொந்தம் ஆன அவர் பிரிண்டிங் பிரெஸ்ஸை அடித்து நொறுக்கி சேதம் செய்தது...தடுக்க முயற்சி செய்த இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விஷயம் அறிந்த மன்னர் ஏன் இப்படி ப்ரெஸ்க்கு ஆட்கள் காவல் இல்லையா என்று வருந்த உடனே கிளம்பி கும்பகோணம் வருகிறேன் என்று தகவல் சொல்ல.
அதை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் துள்ள....அடுத்த வாரம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தலைவர் பேசி முடிந்து சேதம் அடைந்த பிரஸ் ஐ பார்வை இட்டபின்.
எஸ் .ஆர்.ராதாவை அழைத்து ரூபாய் 25000 கொடுக்க அதை உடனே பிரஸ் சேதத்துக்கு 11000 ரூபாய் மற்றும் காயம் அடைந்த இருவருக்கு ஆளுக்கு 2000 போக மீதி 10000 ரூபாயை தலைவர் வசம் திருப்பி கொடுக்க.
வள்ளல் அவரை பார்க்க அவர் வள்ளலை பார்க்க எப்படிப்பட்ட தலைவர் எப்படிப்பட்ட தொண்டர் என்று அருகில் இருந்தவர்கள் வியக்க.
1977 சட்டமன்ற பொது தேர்தலில் கும்பகோணம் தொகுதிக்கு கழகம் சார்பில் 10 பேர் மனு செய்ய...எஸ்.ஆர்.ராதா மனு செய்யவில்லை.
ஏன் என்று தலைவர் பட்டியல் பார்த்து விசாரிக்க நான் கட்சிக்கு உழைக்கவே இருக்கேன் பதவிக்கு உங்க கிட்ட வரவில்லை என்று சொல்ல.
வேட்பாளர் பட்டியலில் எஸ் .ஆர்.ராதா பெயர் வர அவரும் மற்ற எம்ஜியார் மன்ற தோழர்கள் கட்சியினர் பம்பரமாக சுற்றி பணியாற்ற...
30 ஆண்டுகள் ஆக காங்கிரஸ் கட்சி கோட்டை ஆக இருந்த கும்பகோணம் தொகுதியில் மன்னவர் எம்ஜியார் கண்ட கொடி வெற்றி பெற்று பட்டொளி வீசி பறந்தது.
வெற்றி பெற்ற தொண்டர் எஸ்.ஆர்.ராதா அவர்களை வீட்டு வசதி துறை அமைச்சர் ஆக்கி அழகு பார்த்தார் தொண்டர்களின் காவலர் புரட்சிதலைவர்..
வாழ்க. எம்ஜியார் புகழ்.
நன்றி....தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி.
பின்குறிப்பு.
அப்படிப்பட்ட எஸ் ஆர்.ராதா அவர்கள் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு எம்ஜியார் விழாவில் அருமையாக தலைவர் பற்றி பேசினார்...விழா தி.நகரில் நடைபெற்றது....நன்றி.
படத்தில் தலைவருடன் நடந்து வருபவர் எஸ்.ஆர்.ராதா அண்ணன் அவர்கள்....... Thanks...
-
சென்ற பதிவில் தங்க சுரங்கம் மற்றும் அடிமைப்பெண்ணை பற்றி சொல்லியிருந்தேன். இந்த பதிவில் 1969ம் வருட கடைசியில் வெளிவந்த இரண்டு படங்களை பற்றி சொல்கிறேன். அதில் ஒன்று நம்நாடு மற்றொன்று சிவந்த மண்.
நம்நாடு தீபாவளிக்கு ஒரு நாள் முன் நவ 7ம் தேதியும் சிவந்த மண் தீபாவளிக்கு ஒரு நாள் பின்னால் நவ 9ம் தேதியும் வெளிவந்தது. நம்நாட்டை பொறுத்தவரை அடிமைப்பெண்ணின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த படம் என்பதாலும் ,விஜயா கம்பெனி நாகிரெட்டியின் படம் என்பதாலும் படத்தின் வெற்றியை பற்றி எந்தவித சந்தேகமும் எழவில்லை. படமும் வெளிவந்து நல்ல விமர்சனமும் எழுந்ததால் படம் 50 நாட்கள் சார்லஸில் ஓடியது. அதனால் எம்ஜிஆர் ரசிகர்கள் எல்லோரும் சிவந்த மண்ணின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
நவ 9ம் தேதியும் வந்தது. படம் வெளியானவுடன் முதல் காட்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒன்றிரண்டு எம்ஜிஆர் ரசிகர்களும் ஆரம்ப காட்சியை பார்த்து விட்டு ரொம்ப குஷியாக வந்தார்கள். படம் டப்பா, குப்பை நான்கு வாரங்கள் கூட ஓடாது என்ற விமர்சனங்களை அனைவரிடமும் சொன்ன போதிலும் படம் முதல் வாரம் சிவாஜி ரசிகர்களால் நன்றாகவே போனது. அதுமட்டுமல்ல
அந்த படத்திற்கு வந்த விளம்பரம், பிரம்மாண்டம், வெளிநாட்டு காட்சிகள், பிரமிட் காட்சிகள் ,வெற்றி பெற்ற பாடல்கள் போன்ற காரணத்தால் எல்லோரும் ஒரு தடவை படம் நன்றாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் பார்க்க விரும்பினார்கள். எப்படியும் நான்கு வாரங்களுக்கு மேல் ஓட வாய்ப்பில்லாத ஒரு படத்தை 100நாட்கள் ஓட்டுவதென்றால் சிவாஜி ரசிகர்களின் திறமையை என்னவென்று சொல்லுவது.
ஆனாலும் ரசிகர்களும் இந்த படத்தை விட்டால் சிவாஜிக்கு வேறு பிரமாண்ட படம் கிடையாது என்ற காரணத்தால் என்ன விலை கொடுத்தாவது படத்தை 100 நாள் ஓட்ட வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். படம் இரண்டாவது வாரம் காலை காட்சி மற்றும் செவ்வாய் வெள்ளி மாட்னி காட்சிகள் பாதி தியேட்டர் கூட நிரம்ப சிரமப் பட்டதால் ரசிகர்கள் தங்களது இந்திரஜித் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். ஆரம்பத்திலேயே வசூலில் பின் தங்கி விட்டால் பின் அதை ஈடு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு முதலில் இருந்தே அடிமைப்பெண்ணின் ஷோ பை ஷோ வசூல் ரிப்போர்ட்டை தியேட்டர்காரர்களிடமிருந்து வாங்கி அதை கம்பேர் பண்ணியே வசூலை ஏற்றத் துவங்கினார்கள்.
இரண்டும் ஒரே தியேட்டரில் வெளிவந்ததால் சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் வசதியாகப்போனது. தியேட்டர் வழியாக எப்போது யார் சென்றாலும் ப்ரீ டிக்கெட் ரசிகர்கள் மூலமாக கிடைத்து விடும். சிவாஜி ரசிகர்கள் எல்லோரும் வசதியானவர்கள்,பணக்கார வீட்டு பையன்கள். தெய்வ மகன் படத்தில் செல்ல மகனாக சிவாஜி வருவாரே அதை போலதான் அவரது ரசிகர்களும். பெற்றவர்களும் பிள்ளையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் முழு ஒத்துழைப்பை நல்கினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியே பணத்தை தண்ணீராக செலவு செய்த போதிலும் 50 நாட்களில் ௹ 73000 க்கு மேல் முடியவில்லை.அடிமைப்பெண் ௹ 78678 வசூல் செய்தது. ௹5000 க்கு மேல் வித்தியாசம்.
ஒரு ஷோ ஹவுஸ்புல் ஆனால் அதிக பட்சம் ௹800 தான் கிடைக்கும். இப்படியே தொடர்ந்து டிக்கெட் கிழித்து 13 வார முடிவில் அடிமைப்பெண்ணை தாண்ட சுமார் 7000க்கும் அதிகமாக தேவைப்பட்டது. அப்போது சிவந்த மண் தினசரி 2 காட்சிகள் தான் நடந்தது. உடனே சிவாஜி ரசிகர்கள் ஒரு ஐடியா பண்ணினார்கள். தினசரி மாட்னி காட்சிக்கு வேறு மொழிப்படம் குறைந்த பட்ஜெட்டில் திரையிடுவது அந்த படம் ஹவுஸ்புல் ஆன மாதிரி D C R எழுதுவது ரிகார்டுகளில் சிவந்த மண் 3 காட்சிகள் ஓடிய மாதிரி எழுதி மொத்த வசூலையும் சிவந்த மண் கணக்கில் சேர்த்து விடுவது என்று பல ஜகஜ்ஜால வித்தைகளை செய்து சிவந்த மண்ணை 101 நாட்கள் ஓட்டி வசூலிலும் ௹ 106200. என்று கொண்டு வந்து வெற்றி விழாவை எம்ஜிஆர் ரசிகர்களின் வயிற்றெரிச்சலோடு கொண்டாடினார்கள். அடிமைப்பெண் மொத்த வசூல் ௹ 105816 /13 பை.
ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். சிவந்த மண் 100 வது நாள் விளம்பரத்தில் தூத்துக்குடி பாலகிருஷ்ணா மட்டும் தனியாக தெரிவதை பாருங்கள்.திருநெல்வேலி நாகர்கோவில் ஈரோடு தஞ்சாவூர் வேலூர் திண்டுக்கல் முதலான ஊர்களை காணவில்லை. அப்படி என்றால் தூத்துக்குடி மக்கள் மட்டும் விரும்பி பார்த்து ஓடிய படமா? பொதுவாக திருநெல்வேலியை விட தூத்துக்குடி வசூலும் ஓடுகின்ற நாட்களும் 40 சதவீதம் குறைவு. இது விநியோகஸ்தர்கள் கணக்கு. திருநெல்வேலியில் ஓடிய நாட்கள்
76. அப்படியென்றால் தூத்துக்குடியில் அதிக பட்சசமாக 42 நாட்கள் ஓடலாம். ஆனால் 101 நாட்கள் ஒட்டப்பட்டது உலக அதிசயங்களில் ஒன்றாகிப் போனது.
ஆமாம் இவ்வளவு பணத்தை சிவாஜி ரசிகர்கள் எப்படி கொண்டு வந்தார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்கு பலியானவர் ஒரு வெறி பிடித்த சிவாஜி ரசிகர். தூத்துக்குடியை பொறுத்தவரை சிவாஜி படம் நல்ல படமாக இருந்தால் 3 வாரம் ஓடுவதே பெரிய விஷயம். ராஜா 21 நாட்களும் சொர்க்கம் 21 நாட்களும்
ஞானஒளி 18 நாட்களும்தான் ஓடின.
இவ்வளவு ஏன்? தியாகம் 3 வாரம்தான் ஓடியது. அதைவிட சிவாஜி ரசிகர்களால் பெரிதும் சாதனை என்று போற்றப்பட்ட திரிசூலம் இங்கே சிறிய தியேட்டரான காரனேஷனில் 50 நாட்கள் ஓடுவதற்குள் முழி பிதுங்கி விட்டது. ஏனென்றால் சிவாஜி படத்தை திரும்ப திரும்ப பார்க்க யாரும் முன்வரமாட்டார்கள். அதனால் எம்ஜிஆர் ரசிகர்களின் கேலிக்கு ஆளாகியதால் எப்படியும் சிவந்த மண்ணை ஓட்டி சாதித்து காட்ட வேண்டும் என்ற வெறி அவர்களை அப்படி செய்ய தூண்டியது என நான் நினைத்ததுண்டு.
அப்படிப்பட்ட ஊரில் ஒரு சிவாஜி படத்தை 100 நாட்கள் ஓட்டுவதென்பது கற்பனைக்கெட்டாத
ஒரு விஷயம். அதை திறம்பட செய்து முடிப்பதற்கு அந்த சிவாஜி வெறியர் செய்த காரியம்தான் காரணம். அப்படி என்ன செய்தார் என்றால் அவர் தனக்கு சொந்தமான வீட்டை இந்த படத்திற்காகவே விற்று அதை அப்படியே சிவந்த மண் வசூலை உயர்த்துவதற்காக பயன்படுத்தி கொண்டார். இத்தனைக்கும் அவர் ஒரு நல்ல எண்ணெய் வியாபாரி.
அவர் பெயரிலேயே பிராண்டட் நல்லெண்ணை வியாபாரம் செய்பவர். ஆனால் சமீபத்தில் அவரை பற்றி நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் என்னவென்றால் எல்லா சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடுகிறார் என்கிறார்கள். இன்று அவர் விற்ற சொத்து மட்டும் இருந்தால் பல லட்சங்களுக்கு மேல் விலை போகும்.
எல்லாம் காலம் செய்த கோலம். சரி அந்த வெற்றியாவது நிலைத்ததா என்றால் அதுவுமில்லை. எப்படி படத்தின் தயாரிப்பாளர் படத்தை எடுத்து கடன்காரர் ஆனாரோ அதை போல் படத்தை ஓட்டி அவரது ரசிகரும் இன்று கடன்காரனாக நிற்பது வேதனையாக இருக்கிறது.
அடுத்து வந்த மாட்டுக்கார வேலன் 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 77 நாளில் எடுத்தது அவர்களுக்கு வசதியாய் போனது. அதற்கடுத்து வந்த ரிக்ஷாக்காரன் 50 நாளிலேயே 85000 தாண்டி சிவந்த மண்ணை விட 12000 அதிகம் வசூல் செய்தது. அதையும் அதிக நாள் ஓட்டினால் பிரச்னை ஆகும் என்று தூக்கி விட்டார்கள். அதற்கு அடுத்து வந்த உலகம் சுற்றும் வாலிபன் இனிமேல் யாரும் சாதனையை பற்றி பேசக்கூடாது என்பதற்காகவே படம் 104 நாட்கள் ஓடி ௹186000 தாண்டி வசூல் செய்ததாக கணக்கு காண்பித்தாலும் கணக்கில் வராமல் சுமார் ௹100000 க்கும் அதிகமான வசூலை ஏப்பமிட்டார்கள் என்பதே எல்லோருடைய கணிப்பும். மூன்று வருடம் மட்டும் நீடித்த சிவந்த மண்ணின் சாதனையை உலகம் சுற்றும் வாலிபன் வந்து தகர்த்தெறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதான் புலியை பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையின் கதை............ Courtesy by: Mr. Shankar, fb.,
-
1967-ஆம் ஆண்டு எம்ஜிஆர் சுடப்பட்டார் எம்ஜிஆரிடம் போலீஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றார்கள் பிறகு அந்த வாக்குமூலத்தை வெளியிடாமல் இருந்து விட்டார்கள் அதற்கு காரணம் அன்றைய அரசாங்கம் வாக்குமூலம் வெளியே தெரிந்தால் நாட்டில் கலவரம் ஏற்பட்டு விடும் என்பதற்காக. வாக்கு மூலத்தை வெளியிடவில்லை. கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் முன்னால் எம்ஜிஆர் கூறியதாவது என்னைக் கொலை செய்ய ராதாவிற்கு முக்கியமான காரணம் இருந்தது ராதாவிற்கும் எனக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன நான் திமுக உறுப்பினர் ராதா பெரியார் கட்சியை சேர்ந்தவர் நான் தொழிலாளி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது அந்தப்படத்தில் தொழிலாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துகூட்டுறவு முறையில் ஒரு பஸ் வாங்கி இயக்குவார்கள் அந்த விழாவில் நான் பேசுவதற்கு ஒரு வசனமும் எழுதி இருந்தார்கள் இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை நட்சத்திரம் பிறந்துள்ளது என்று வசனம் எழுதி இருந்தார்கள் நான் பேசி நடிக்கும் பொழுது இன்று தொழிலாளிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று பேசினேன் உடனே எம் ஆர் ராதா அவர்கள் உங்கள் கட்சி சின்னத்தை இங்கு பேச கூடாது என்றார் எனக்கும் எம் ஆர் ராதாவுக்கும் வாக்குவாதம் இந்த சமயத்தில் பட தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் வந்து எங்களை அமைதிப்படுத்தினார் இவ்வாறு எம்ஜிஆர் கோர்ட்டில் நீதிபதி முன்பாக கூறினார் பின் சின்னப்பத்தேவர் அவர்களையும் அழைத்து கோர்ட்டில் விசாரித்தார்கள் சின்னப்பா தேவர் அவர்களும் நான் தயாரித்த தொழிலாளி படத்தில் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்ற எம்ஜிஆர் வசனம் பேசினார் இதனால் எம் ஆர் ராதா எம்ஜிஆர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது நான் அவர்களை சமாதானப்படுத்தினேன் என்று கூறினார் எம்ஆர் ராதாவின் வக்கீல் என்டி வானமாமலை சாண்டோ சின்னப்பா தேவர் இடம் விசாரணை நடத்தினார் அவரிடமும் ராதா அவர்கள் நம்பிக்கை சூரியன் உதித்து விட்டது என்று எம்ஜிஆர் பேசிய வசனத்தால் எம் ஆர் ராதா வுக்கு எம்ஜிஆருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறினார் இந்த செய்தி தினமணி பத்திரிகையில் வெளிவந்தது இப்படி எல்லாம் உயிரைக் கொடுத்து திமுகவை வளர்த்தவர் எம்ஜிஆர் எம்ஜிஆர் திமுகவை கைப்பற்ற முயற்சிக்கவில்லை எம்ஜிஆர் உதயசூரியன் சின்னத்தை கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை கருணாநிதியை முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதற்கு முயற்சி செய்யவில்லை காரணம் எம்ஜிஆருக்கு இருக்கும் மக்கள் சக்தி உலகத்தில் வேறு யாருக்கும் கிடையாது எம்ஜிஆர் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுகவை ஆரம்பித்தார் தனி மனிதனாக இருந்து அண்ணா திமுக கட்சியை வளர்த்தார் தனி மனிதனாக இருந்து மூன்று முறை முதல் அமைச்சராக வந்தார் வாழ்க புரட்சித்தலைவர் நாமம் வளர்க புரட்சித்தலைவர் புகழ்!!!........ Thanks to mr. Aiyappadas fb.,
-
"நேற்று இன்று நாளை", படம் என்றவுடன் எனக்கு ஒரு மறக்க முடியா புரட்சி நினைவு.
ஈரோட்டில் படம் ரிலீசன்று போடக் கூடாது என்று அப்போதைய ஆட்சியாளர்களால் வெளியிட இருந்த செண்ட்ரல் தியேட்டர் நிர்வாகத்தை மிரட்டி தடுத்தனர்,தியேட்டர் வாசலில் படம் பார்க்க வந்த ஆயிரக்கணக்கான,ரசிகரகளும் கழக தொண்டர்களும் எம் ஜி.ஆர் மன்றத் தலைவராக இருந்த ஈரோடு அழகரசன் என்பவர் தலைமையில் ஒன்று கூடி தலைவரின் படம் திரையிடவில்லை என்றால் வேறு எந்தத் தியேட்டரிலும் படம் ஓடாது என்று அனைத்துத் தியேட்டரிலும் ஒரு வாரகாலம் நிறுத்திக் காட்டினோம்,அதோடு மட்டுமல்லாமல் அன்றைக்கு வீரப்பன் சத்திரம் எனும் இடத்தில் தி.மு.க அமைச்சர்கள் கலந்து கொண்ட பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டது,ஆட்சி,அதிகாரத்தை மண்டியிட வைத்து தலைவர் படம் ரிலீஸ் ஆன பிறகுதான் மற்ற தியேட்டர்கள் திறக்கப்பட்டன....... Thanks...
-
பாமரர்,படித்தவர்,உடன் நடித்தவர், கட்சிக்காரர் இவர்களுக்கு தலைவர் உதவினார் சரி.
10 வயது பாலகன் செந்திலுக்கு எப்படி...
1977 தலைவர் முதல்வர். ..பெரம்பலூர் மாவட்டம் சூரப்பனூர் நம்ம செந்தில் குமரனுக்கு.
செந்தில் குமரன் அப்பா திருச்சி கூட்டுறவு வங்கி மேலாளர்..ஒரு நாள் அவருக்கு வெகுதொலைவில் உள்ள பஞ்சம்பட்டி கிளைக்கு மாறுதல் உத்தரவு வர குடும்பத்தில் ஒரே சோகம்.
அங்கு போய் வரவே 7 மணி நேரம் ஆகும் என்பதால் செந்தில்குமரன் அப்பா அந்த ஊர் அருகில் தங்கி வேலை பார்த்து விட்டு சனிக்கிழமை வீட்டுக்கு வந்து அடுத்த நாள் மாலை வேலைக்கு திரும்பிவிட.
நரக வாழ்க்கை செந்தில் குடும்பத்துக்கு....ஊரில் வேறு கடும் குடிநீர் தட்டுப்பாடு...பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க அம்மா மதியம் போனால் இரவு ஆகிவிடும் சிலநாள் வீட்டுக்கு வர.
ஒரு நாள் டீக்கடையில் சிலர் எம்ஜியார் பற்றி பெருமையாக பேசி கொண்டு இருக்க உடனே செந்தில் ஊரில் இருந்த தபால் நிலையத்தில் ஒரு இன்லாண்ட் கவர் வாங்கி.
அதில் அவனுக்கு தோன்றிய படி......முதல்வர் எம்ஜியார் அண்ணா என்று ஆரம்பித்து... குடும்ப சூழல்... ஊர் குடிநீர் கஷ்டம் எல்லாம் மை ஒழுகும் குண்டு பேனா கொண்டு எழுதி ஒட்டி
முதல்வர்...எம்ஜியார் அவர்கள்...சென்னை கோட்டை என்று முகவரி எழுதி போஸ்ட் செய்து விட.
அடுத்த வெள்ளிக்கிழமை இரவு செந்தில் தூங்கி கொண்டு இருக்க அவன் அப்பா டேய் எழுந்திரு என்று மிரட்டி எழுப்பி ஒரு கவரை அவனிடம் காட்ட.
உயர்த்த பட்ட விளக்கின் ஒளியில் அதை செந்தில்குமரன் படிக்க....அதில்..
பெருனர்.... கே.சாமிநாதன்...என்று ஆரம்பித்து... உங்கள் மகன் செந்தில்குமரன் அவர்கள் எழுதிய வேண்டுகோள் கடிதத்தின் படி உங்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு நீங்கள் மீண்டும் அரும்பாவலூர் கிளைக்கு மாற்றம் செய்ய படுகிறீர்கள் என்று இருக்க.
மறுநாள் காலை சூரப்பனூர் கிராமத்துக்கு அரசு அதிகாரிகள் படை எடுத்து அந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளும் தூர் வார பட்டு பெரிய பொது கிணற்றில் மின் மோட்டார் பொறுத்த பட்டு தண்ணீர் விடாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட.
அன்று முதல் செந்தில்குமரன் மனதில் மட்டுமல்ல அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் எம்ஜியார் நிரந்தர ஹீரோ ஆனதில் என்ன வியப்பு இருக்க முடியும்?...
வாழ்க எம்ஜியார் புகழ்..தொடரும்...உங்களில் ஒருவன் நெல்லை மணி...நன்றி.......... Thanks...