https://youtu.be/qUhlVwrT-Vc
தலைவர் தலைவர் தான்✌........ Thanks...
Printable View
https://youtu.be/qUhlVwrT-Vc
தலைவர் தலைவர் தான்✌........ Thanks...
https://www.facebook.com/groups/MGR1...5knPElclhV6E7k... Thanks......
இப்பொழுது 5.45 மணியளவில் ரிஷி மூவிஸ் திரு சாய் நாகராஜன் அவர்கள் அலைபேசியில் தெரிவித்த இனிய, இன்ப தகவல்கள்... மதுரை - சென்ட்ரல் சினிமாஸ் dts., திரையரங்கில் 'தீபாவளி' திருநாளில் திரையிடப்பட்டு... தினசரி 4 காட்சிகள், 7 நாட்களில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களின் பிரமாண்ட லட்சிய படைப்பு "நாடோடி மன்னன்" , ரூபாய் 195000.00 எவரும் நெருங்க இயலாத, நினைத்து கூட பார்க்க முடியாத வசூல் பிரளயம் படைத்திருக்கிறார்... அது8 அடாத, விடாத மழையிலும்... காவியத்தை பார்த்து ரசித்த நல்ல உள்ளங்கள் 5001 நபர்களுக்கு மேல்......... கலர் பகுதி பிரிண்ட் சுமாராக இருந்தும்... பல காட்சிகள் எடிட்டிங் செய்து குறைக்கப்பட்டலுமே இவ்வளவு பெரிய
மகத்தான வசூலை சர்வ... சாதாரணமாக... அள்ளி குவித்துள்ளது...இதுதான் சரித்திரம்... சாதனை... சகாப்தம் ஆகியவைகளின் உச்சமோ...உச்சம்...
https://youtu.be/deqTvMWqWe4........ Thanks...
செய்தி திருத்தம்
*-------------------------
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட தயாரிப்பான "நாடோடி மன்னன் " ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- என்று தகவல் அளித்திருந்தேன் . அது தவறு .
1958ல்* முதல் வெளியீட்டில் மதுரை தங்கம் தியேட்டரில் ( ஆசியாவின் மிக பெரிய அரங்கம் ) வெற்றிகரமாக 140 நாட்கள் ஓடியது . அதன்பின் நூற்றுக்கணக்கான முறை* மதுரையில் கடந்த 61 ஆண்டுகளாக பல அரங்குகளில் வெளியாகி வெற்றி வாகை சூடி வசூலை குவித்துள்ளது .* ஆனால் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் தவறாக 61 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெளியாகி வெற்றி பெற்று வசூலை குவித்துள்ளது என்பது போல் செய்தி பதிவு செய்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது .எனவே நண்பர்கள் செய்திகளை பதிவிடும்போது சரியான, முறையான தகவலை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
தீபாவளி வெளியீடாக , புதிய படங்களுக்கு போட்டியாகவும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும் , பக்தர்கள், ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து*நாடோடி மன்னன் வெற்றி காவியத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கண்டு ரசித்து , பேராதரவு* அளித்து , விநியோகஸ்தர் அறிவித்த தகவலின்படி*ரூ.1,95,000/- வசூல் ஈட்ட* சுமார் 5.100 நபர்கள் காரணமாக திகழ்ந்துள்ளனர் .என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.* *இந்த வசூலை இனி* எந்த பழைய படமும் அவ்வளவு எளிதாக முறியடிக்க வாய்ப்பே இல்லை .* ஆனால் மற்றொரு தலைவரின் படம் வெளியானால் இந்த வசூலை முறியடிக்கும் என்பது எனது நம்பிக்கை . இந்த சாதனை, சரித்திரம், சகாப்தம் படைக்க பேருதவியாக இருந்த ரசிகப்பெருமக்களுக்கு ஏகோபித்த நன்றி .
* சென்னை**அகஸ்தியாவில் கடந்த மாதம் வெளியான புரட்சி தலைவரின் நாடோடி மன்னன் ரூ.66/-, ரூ.80/-* கட்டணத்தில் ஒரு வார வசூலாக ரூ.1,85,000/-* பெற்று சாதனை படைத்தது .* தற்போது மதுரையில்* சென்ட்ரல் அரங்கில் ரூ.30/-, ரூ.50/- கட்டணத்தில் ரூ.1,95,000/- வசூல் செய்து சரித்திரம் படைத்துள்ளது . எனவே அன்றும் இன்றும், என்றும் மக்கள் தலைவர் தான் வசூல் சக்கரவர்த்தி*
இவ்வாறு* : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .செய்தியளித்தார் .
தினகரன்* *-வெள்ளி மலர்*
-------------------------------------------
நான் இல்லாமே நடக்காது - கவிஞர் வாலி .
---------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பொதுவாக அடிக்கடி கவிஞர் வாலியை வெறுப்பேற்றுவார் .அதை புத்திசாலித்தனமாக எதிர் கொள்ளும் முறையை எம்.ஜி.ஆர். ரசிப்பார் .
அப்போது தன்* கனவு படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை பெரும் பொருட்ச்செலவில் எடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வாலியை சந்தித்தபோது "இந்த படத்தோட டைட்டில் கார்டில் உங்க பேரு இருக்காது கவிஞரே , ஏன்னா,இந்த படத்திற்கு உங்களிடம் பாட்டு கேட்க போவதில்லை . என்று விளையாட்டாக சொன்னார் .
வாலி , பதிலுக்கு, அண்ணே, என் பேரு இல்லாமே உங்க படத்தை , நீங்க ரிலீஸ் பண்ணவே* முடியாது , இது சவால் என்றார் .**
அப்படியா ? பார்த்துவிடலாமா என்று உசுப்பு ஏற்றிவிட்டார்* எம்.ஜி.ஆர்.*
அண்ணே, உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலிலேயே என் பெயர் இருக்கு .* அதை எடுத்துட்டா,* உலகம் சுற்றும் பன்* என்றுதான் நீங்க படத்தை ரிலீஸ் செய்யணும் .
வாலி இல்லாமே எப்படி வாலிபன் வெளியாகும் என்றார் .
எம்.ஜி.ஆருக்கு சிரிப்பு* பொத்துக்* கொண்டு வந்தது .
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக, பின்னர் 4 பாடல்கள் எழுத எம்.ஜி.ஆர்.*வாய்ப்பளித்தார் .* அதில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின .
தினகரன்* *- வெள்ளிமலர் -01/11/19
------------------------------------------------------
தாலி பாக்கியம்*
------------------------------
எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது தமிழகம் எங்கும்* ஒளி விளக்கு படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் "பாடல்தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது .
எம்.ஜி.ஆர். உடல்நலம் தேறி, சென்னை திரும்பியதும் , உடல்நலம் விசாரிக்க நேரில் போனார் வாலி.* அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.. ஜானகி ,வாலியிடம் ,* ஒளி விளக்கு படத்தின்* உங்க பாடலான '"இறைவா உன் மாளிகையில் " பாடலைத்தான் நாடே பாடி, உங்க அண்ணனுக்கு பிரார்த்தனை செய்தாங்க .* அதன் பலனாலேதான் அவர் நல்லா ஆயிட்டாரு .* என்று உருக்கமாக சொன்னார் .
அப்போது வாலி, அம்மா அது வாலி பாக்கியம் இல்லை,. உங்க தாலி பாக்கியம் தான் என்று கூறி நெகிழவைத்தார் .
Is Vijay trying to emulate MG Ramachandran with his films? https://indianexpress.com/article/en...bigil-6096161/.......... Thanks.........
https://youtu.be/ZdAF3Zo9v5c........... Thanks.........
Meet Santhana Krishnan, a die-hard MGR fan - The Hindu - https://www.thehindu.com/society/mee...le28472749.ece....... Thanks...