-
எம்.ஜி.ஆர் பிறந்தார்!
-----------------------------
எம்.ஜி.ஆரின் இத்தனையாவது பிறந்த நாள் என்று நான் கணக்கெல்லாம் வைத்துக் கொள்வதில்லை.
கிருஷ்ண ஜெயந்தி,,அனுமத் ஜெயயந்தி பிள்ளையார் சதுர்த்தி வரிசையில்--எம்.ஜி.ஆர் ஜெயந்தி! தட்ஸ் ஆல்!
இன்றைய எம்.ஜி.ஆர் ஜெயந்தியை நான் விளக்க வேண்டியதில்லை.
நாடு முழுதும் இப்போதும் அதன் கொண்டாட்டத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பதே நீங்கள் தானே?
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு உரையாடல் ஓடியது--
எங்களுக்குள் என்றால்--
கனரா வங்கி சரவணன் ராஜகோபால்--எம்.ஜி.ஆரின் பேரன்--குமார் ராஜேந்திரன்,,மற்றும் அடியேன்!
பிரதமர் மோடி வெளியிட்ட எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம்!
தலைவரின் காய்ன் சூப்பரா இருக்கு என்று குமார் ராஜேந்திரன் சொல்லிக் கொண்டிருந்தபோதே மின்னலென சரவணன் ராஜகோபாலின் விழிகள் என்னை சந்தித்தன. ஒரு விஷயத்தை மின்னஞ்சலென அவர் கண்ணஞ்சல் செய்தார்
எம்.ஜி.ஆர் ஜெயந்தி அன்று எம்.ஜி.ஆர் அருங்காட்சியில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்துக்கு பக்கத்தில் இரு புறமும் இரு நாணயங்களை வைத்து அழகு பார்ப்பது என்பதே அந்த சேதி!
சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள்--
அன்றிலிருந்து சரவணன் ராஜகோபாலுக்கு அதே சிந்தனை.
ஆன் லைன் மூலம் இரண்டு நாணயங்களை,,நம் முகனூல் அண்ணன் ஜெயப்ரகாஷ் மூலம் தருவிக்கும் வரை அவர் சிந்தனை வேறெதையும் நாடவில்லை.
எம்.ஜி.ஆர் நினைவகத்தை நிர்வகித்து வரும் குமார் ராஜேந்திரனிடம்,,,, எம்.ஜி.ஆர் ஜெயந்தியன்று அதை வழங்க முடிவெடுத்தார்!
எம்.ஜி.ஆரை இன்றைய நிலையில்--
எம்.ஜி.ஆருக்காகவே விரும்பும்,,அவர் வழி தொடரும்-
ஜே.சி.டியார்,,எஸ்.வி.சேகர்,,எம்.ஜி.ஆர் லதா ஆகியோர் நம் சிந்தையில் இடறினார்கள்.
அவர்கள் கையால் அந்த நாணயஸ்தருக்கான நாணயத்தை வழங்க முடிவெடுத்தோம்!
அந்த நாணயத்தை அழகான ஸ்டாண்ட் ஒன்றில் பொறிக்கச் செய்யும் வேலையை சிவாஜிபாபு முருகேசன் மேற்கொள்ள,,விழா ஏற்பாட்டைக் கவனிப்பதாக இருந்தவர்--
நீண்டதொரு நித்திரையில் ஆழ்ந்திருக்கும்--
முக நூல் அண்ணன் கோபாலகிருஷ்ணன்!!
காலம் தான் சில நேரம் கடுமையாக விளையாடுமே?
நாணய அன்பளிப்புக்கு சொந்தக்காரர் சரவணன்ராஜகோபால் பெரியதொரு இதய அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு,,தற்போது வீட்டில் கட்டாய ஓய்வு?
இதயம் உள்ளவர்களுக்குத் தானே இதய நோவு?
கோபாலகிருஷ்ணனோ தலைவரிடம் செய்தியை சொல்வதற்காக அவரைத் தேடிக் கொண்டு அங்கேயே??
நிகழ்ச்சி பொறுப்பாளர் அல்லவா??
மிகவும் விமரிசையாக நாணயம் வழங்கு விழா நடந்தேறியது.
கட்சியின் அமைப்புச் செயலாளராக அங்கேக் கொண்டாடினாலும்,,தலைவர் வளைய வந்த இந்த இடத்தில் தலைவருக்கான நாணயத்தை வழங்குவது ரொம்பவேப் பெருமையாயிருக்கு என்று அண்ணன் ஜே.சி.டியார் பேசியபோது அவருடன் வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை?
மிகவே உணர்ச்சி வசப்பட்டார்.
மத்திய அரசோ,,மா.நில அரசோ எவர் எம்.ஜி.ஆரை இருட்டடிப்பு செய்தாலும்--சின்னச் சின்னத் தெருக்களிலெல்லாம் அவர் போட்டோவை வைத்துக் கும்பிடும் தூய பக்தர்களை விடவா அரசியல்வாதிகள் எம்.ஜி.ஆரை உயர்த்திவிட முடியும்?
தான் எவ்வளவு கோடி சம்பாதித்தோமோ அதை அப்படியே அள்ளாமல் குறையாமல் மக்களுக்கேத் திருப்பித் தந்த தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவர் தான் என்று எஸ்.வி.சேகர் குறிப்பிட்டபோது அங்கேக் கூடியிருந்தவர்கள் அனைவருமே உணர்ச்சி வயப்பட்டார்கள்/
சிவாஜிபாபு முருகேசன் பம்பரமாய் சுழன்று ஏற்பாடுகளை கவனிக்க--
பெங்களூர்--சம்பங்கி,,அரியலூர் சுகுமாரன்,,ஹோசூர் சித்தார்த் இப்படி அசலூரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் அதுவும் கொரொனா பாதிப்பு முற்றிலும் விலகாத நிலையிலும் வந்திருந்தது மிகப் பெரிய விஷயம் மட்டுமல்ல--எம்.ஜி.ஆர் ஒருவருக்கே சாத்தியமானது என்பதே சத்தியமானது!
எந்தக் கட்சியில் இப்போது இருக்கிறார் என்று தெரியாது-
ஆனால் ஆளுயர மாலையுடன் வந்திருந்து ஆழமான எம்.ஜி.ஆர் பக்தியை அங்கேக் கொட்டியது--
அண்ணன் திரு நாவுக்கரசர்!!!
மீண்டும் சொல்வேன்! வந்திருந்த அத்தனை உயிர்களும்-எம்.ஜி.ஆருக்காகவே எம்.ஜி.ஆரை ஏந்திப் பிடிப்பவர்கள்??
கொரோனா தொற்றா? அப்படியென்றால்?
சமூக இடைவெளியா?? எதற்காக?
இந்த இரண்டு கேள்விகளையும் மட்டும் தான் இன்றைய தினம் மக்கள் கேட்டிருக்கிறார்கள்?
அப்படி கேட்க வைத்தது??
எம்.ஜி.ஆர்!!!.......vtr
-
இதயதெய்வம் புரட்சிதலைவர் பிறந்தநாள் சிறப்பு பதிவு.....
உலகில் நம் தங்க தலைவருக்கு போல வேறு எந்த தலைவருக்கும் அதிகம் சிலைகள் இல்லை.
தமிழகத்தில் மட்டும் 12800 தாண்டி.
மாநகரங்கள்... நகரங்கள்...கிராமங்கள் சேர்த்து...
இவை தவிர மலேசியா சிங்கப்பூர் இலங்கை அந்தமான் பாண்டிசேரி மொரேசியஸ்..பாரிஸ் லண்டன் மாநகர் இவை போன்ற வெளிநாடுகள் யூனியன் பிரதேசங்கள்
இவை தாண்டி இந்திய திருநாட்டில் பெங்களூர் மும்பை கல்கத்தா இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்ற பிற மாநிலங்களில் நம் மன்னனுக்கு வைக்க பட்ட சிலைகள் சேர்த்தால் 13000 என்ற இலக்கை எட்டும்.
உலக அளவில் ஒரு நடிகரின் திரைப்படங்கள் அதிக அளவு மறு வெளியீடு செய்யப்பட்டவை நம் தலைவரின் படங்களே இந்த நொடி வரை.
உலக அளவில் அதிக நூல்கள் எழுத பட்ட ஒரே தலைவர் நம் மன்னாதி மன்னன் அவர்களை பற்றியே..
ஒரு அரசியல் தலைவர் மறைந்தும் அவரது பிறந்தநாளில் நினைவு நாளில் பொது மக்கள் வீதிகளில் ஒருவரை படத்தை வைத்து வணங்கி மகிழ்வது உலகில் நம் புரட்சிதலைவர் அவர் ஒருவருக்கு மட்டுமே.
இருக்கும் போதும் அவர் செய்த சாதனைகளை அவர் மறைந்த பிறகும் அவர் ஒருவரே நிலை நாட்டி கொண்டு இருக்கும் அதிசயம் பார்ப்போம் கண்ணிலே அது அப்படியே நிற்கும் நம் நெஞ்சிலே..
பதிவில் படத்தில் மின்னி கொண்டு இருக்கும் நம் தலைவர் சிலை தமிழகத்தில் அவர் மறைந்த பின் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ள அத்தனூர்பட்டி என்னும் கிராமத்தில் முதன் முதலாக வைக்க பட்ட தலைவர் சிலை என்பது கூடுதல் தகவல்.
இன்று முதல் மீண்டும் தொடரும்...
புரட்சிதலைவர் புகழ் மாலை நினைவுகள்.
நன்றி..உங்களில் ஒருவன் ..நெல்லை மணி...
அன்பு தலைவர் இதயம் அரிமா அவர்கள் உடன்..........nmi
-
#மக்கள்_திலகம்_எம்_ஜி_ஆர்_பிறந்த_தினம் இன்று...
#m_g_r. எட்ட முடியாத உயரத்துக்குச் சென்றபோதும் பட்டங்களும் பதவிகளும் வந்து குவிந்து, நாடே அவரைக் கொண்டாடியபோதும் அந்தப் புகழையெல்லாம் அவர் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதில்லை. ஏற்றத் தாழ்வுகளை சமமாகவே பாவித்தார்.
ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து, பின்னர் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வாய்ப்புகளுக்காக காத்திருந்தபோது எம்.ஜி.ஆர். துவண்டதுமில்லை. பின்னர், தமிழ் திரையுலகின் சக்கரவர்த்தியாக இருந்தபோது துள்ளியதும் இல்லை.
1968-ம் ஆண்டு ‘பொம்மை' இதழின் ஆண்டு மலருக்காக எம்.ஜி.ஆரை ஜெய லலிதா பேட்டி கண்டார். அப்போது, எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதா கேட்ட கேள்வி இது: ‘‘சினிமா உலகில் நீங்கள் யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்குப் போய்விட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? ’’
இந்தக் கேள்விக்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில், அவர் எந்த அளவுக்கு வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்தும். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மை யார் கதாநாயகியாக நடித்த ‘ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் புலிக்குட்டி பி.எஸ்.கோவிந்தன். அதே போல, நாடக மேடைகளிலும் திரைப் படங்களிலும் நடித்து ‘இந்திய மேடைப் புலி’ என்று பட்டம் பெற்றவர் கே.பி.கேசவன். இவர்களைப் போன்று பல நடிகர்கள் ஒருகாலத்தில் மிகுந்த புகழோடு இருந்தனர்.
‘இரு சகோதரர்கள்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம். அந்தப் படத்தின் கதாநாயகன் கே.பி.கேசவன். எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண் டவர். ‘இரு சகோதரர்கள்’ திரைப்படம் சென்னையில் ‘நியூ எல்பின்ஸ்டன்’ திரை யரங்கில் வெளியானது. அந்த தியேட்டரெல்லாம் இப்போது இல்லை. படத்தைப் பார்க்க கே.பி.கேச வனும் எம்.ஜி.ஆரும் சென்றனர். இடைவேளையின்போது கே.பி.கேச வனைக் கண்டுகொண்ட ரசிகர்கள் எழுந்து நின்று அவரைப் பார்த்து உற்சாகமாகக் கூச்சலிட்டனர். இதைக் கண்டு திகைத்துப் போன எம்.ஜி.ஆர்., இவ்வளவு ஆதரவும் செல்வாக்கும் உள்ளவரின் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோமே என்று மனதுக்குள் பெருமைப்பட்டார்.
ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்க்க, எம்.ஜி.ஆரும் கே.பி.கேச வனும் படம் முடிவதற்குள் எழுந்து வெளியே வந்தனர். அவர்கள் புறப் படுவதை அறிந்து மக்களும் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர். பாதுகாப்பாக அழைத்துச் சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். அப்போது, அந்தப் படத்தில் சிறிய வேடத் தில் நடித்திருந்த தன்னை மக் களுக்கு அடையாளம் தெரிய வில்லை என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகள் கழிந்தன. எம்.ஜி.ஆர். கதாநாயக னாகி புகழ் பெற்றிருந்தார். அவர் நடித்த ‘மர்மயோகி’ படம் சென்னையில் ‘நியூ குளோப்’ திரையரங்கில் திரை யிடப்பட்டது. படத்தைப் பார்க்க எம்.ஜி.ஆரும் கே.பி.கேசவனும் சென்றனர். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். எம்.ஜி.ஆருக்கு பக்கத்திலேயே கே.பி.கேசவன் அமர்ந் திருந்தார். அவரை யார் என்று கூட மக்கள் அறிந்துகொள்ளவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தபோது, மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்து கொண்டது. கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆருக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து காரில் அனுப்பி வைத்தார் கேசவன். காரில் எம்.ஜி.ஆர். புறப்பட்டுச் செல்லும்போது மக்களோடு ஒருவராக கேசவனும் நின்று கொண்டிருந்தார்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டுவிட்டு எம்.ஜி.ஆர். தொடர்ந்து, ‘‘கே.பி.கேசவனின் நடிப்பாற்றல் ‘மர்மயோகி’ படம் வெளியானபோதும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. கலைஞனைப் பொறுத்த வரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும், தாழ்த்தும்’’ என்று கூறியுள்ளார். இப்படி புகழைப்பற்றி தெளிவான மன நிலையில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
பேரறிஞர் அண்ணாவின் அமெரிக்க பயணத்தின்போது, திமுகவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக விளங்கியவரும் பல படங்களைத் தயாரித்தவருமான இராம. அரங்கண்ணலும் உடன் சென்றிருந்தார். பல அடுக்கு மாடிகளைக் கொண்ட உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு இருவரும் சென்றனர். அங்கிருந்து காட்சிகளின் அழகை ரசித்துக் கொண்டே அண்ணாவிடம், ‘‘அடேயப்பா, எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் அண்ணா? ’’ என்று அரங்கண்ணல் வியப்புடன் கூறினார்.
அதற்கு அண்ணா கூறிய பதிலை எல்லோரும், குறிப்பாக இன்றைய அரசியல் வாதிகள் மனதில் கொள்ள வேண்டும். சிரித்துக் கொண்டே அண்ணா சொன்னார்: ‘‘இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி தரையில் நடக்கப் போகிறோம் அரங்கண்ணல்.’’
அண்ணாவுக்கு இருந்த அதே மன நிலையோடு, உயர்வு வந்தாலும் தாழ்வு வந்தாலும் சமமாக பாவிக்கிற எண்ண ஓட்டத்தோடு எம்.ஜி.ஆர். இருந்தார். ‘உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல் லாம் ஒரு மயக்க நிலை’ என்று கருதி, அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் மக்கள் மீது அன்பு செலுத்தி அவர்களின் நலனில் அக்கறை காட்டியதால்தான், மக்களின் மனங்களில் எம்.ஜி.ஆர். உச்ச நிலையிலேயே இருந்தார், இருக்கிறார், இருப்பார்!...ns...
-
Thanks @Sarva Bhouman
Well said...!!!
________________________________
அந்தக் காலத்துக்கு எம்ஜியார், இப்போது ரஜினி என்பதைப் போல பல நண்பர்கள் பேசி வருகிறார்கள்.
எம்ஜியாரின் ரசிகர்களை பிற நடிகர்களின் ரசிகர்கள் எண்ணிக்கையில் விஞ்சி விடும் சாத்தியம் நிச்சயம் இருக்கிறதுதான். ஜனத்தொகை பெருகி வருகிறது, இல்லையா?
ஆனால், திரையைத் தாண்டி பொதுவாழ்வு, அரசியல் - என்று எல்லா இடங்களிலும் முத்திரை பதித்து மக்கள் மனத்திலும் இடம் பிடித்தவர் இன்னொருவர் கிடையாது எங்குமே.
திரையிலும் வெறும் நடிப்பு என்று மட்டுமே தன்னை நிறுத்திக் கொள்ளாது - நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என்று வெளிப்படையாகவும் ஒரு படத்தின் திரைக்கதை, இசை, காமிரா கோணங்கள், ஒளிப்பதிவு, பாடல் வரிகள்,, படத்தொகுப்பு என்று பலவகைகளிலும் தன்னை முழுவதுமாகப் பதித்துக் கொண்டவர் அவர். ஓரளவிற்கேனும் அந்த அளவு ஈடுபாட்டுடன் உள்ள நடிகர் அவருக்குப் பின்னர் வந்த கமலஹாசன் மட்டுமே.
மேற்கூறிய அத்துணை திறமைகளோடும், அதை வெளிப்படுத்தும் உறுதி மற்றும் துணிவோடும் ஒருவர் எதிர்காலத்தில் வருவாரானால், அவரே எம்ஜியார் என்னும் திரை வல்லுனருடன் ஒப்பீடு செய்யப்படத் தகுதியானவர்.
அந்தக் காலத்துக்கு இந்தக் காலத்துக்கு என்றில்லை, எந்தக் காலத்திலுமே ஒரே சூப்பர் ஸ்டார் - MGR.
#ரீபோஸ்ட்
_________________________________
#இத்துடன்....ஒரு சினிமா நடிகருக்கும், அரசியல்வாதிக்கும் மிக மிக இன்றியமையாத குரல்வளம் அவரிடமிருந்து பிடுங்கப்பட்டபோதும்;நாடக நாட்களில் கால்கள் உடைந்து நடக்கமுடியாமல் தடுமாறிய போதும்; அவரது படங்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் பல வந்தபோதும்;பின்னர் 1984 ல் அத்தனை உடல் நலக்குறைவுக்கு பிறகும் மீண்டு எழுந்து, அத்தனை பாதகங்களையும் தனக்கு சாதகமாக்கிய தன்னம்பிக்கையின் சின்னமாக, இனி எவரையும் நினைத்தாவது பார்க்கமுடியுமா?.........Sarva Bhouman...
-
#கட்சியின்_ஆணி_வோ்_யாா் ?
" தொண்டரென்றால் யாா் ?
ஒரு அரசியல் கட்சியின்
அஸ்திவாரமும்
அவன்தான் ...
மைய மண்டபமும்
அவன்தான் ;
மாளிகையின் முகப்பும்
அவன்தான் ....
படிகளும் அவன்தான் ;
படியேற்றி விடுபவனும்
அவன்தான் .....
படியிலிறக்குபவனும்
அவன்தான் ;
கொடிக் கம்பம் நடுபவனும் அவன்தான் ....
கொடியைக் காப்பவனும்
அவன்தான் ;
அடிபடுபவனும்
அவன்தான் ....
அடிமட்டத்திலிருப்பவனும்
அவன்தான் !
" உனக்காக என் உயிா் "
என்பதறிவான் ...
எனக்கென்ன தருவாய்
என்று கேட்டறியான் ; "
கொள்கையின் உயிா் மூச்சு
அவன் !
அவன் .... உயிா் ;
கட்சி ....... உடல் !
அவன் அசைந்தால்தான்
கட்சி இயங்கும் ...
அவன் அடங்கி விட்டால்
கட்சி முடங்கி விடும் "
----புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா்
( தென்னகம் 18.10.1975 )...
-
பணம் பதவி சுக அரசியல் ஆதாயத்திற்காக அல்ல. வெறும் சினிமா மோகத்தில் நாயகனைத் துதி பாடும் ரசிகனாக அல்ல. கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் இன்றைய உலகப் பிரசித்தி பெற்ற ஆளுமையைப் புகழ்ந்து முகவரி தேட அல்ல. 60 ஆண்டுக்கு முன்பு எழுதிய தலைவரைப்பற்றிய கட்டுரை. அதற்கும் 10 ஆண்டுக்கு முன்பு கட்டுரையாளரின் தந்தை தலைவர் எம்ஜிஆரைப்பற்றிச் சொன்ன தீர்க்க தரிசனப் பெருமைகள். உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. காரணமில்லாமல் தமிழ்மக்கள் தலைவரை தலையில் வைத்துக் கொண்டாடவில்லை. பகைவரின் தூற்றல்கள் வெற்றுக் காழ்ப்புணர்வால் என்பதை இவரது கூற்று 100 க்கு 100 பறைசாற்றும்.... Tamilan Chinnasamy...
-
எங்கள் இறைவனை போல வந்துவிடலாம் என்று நம்பியவர் பலர் இங்கே உண்டு.
மன்றம் நாங்கள் கண்ட நேரத்தில் இவர் முதல்வர் ஆவார் என்று கனவு கண்டு துவங்கவில்லை அவர் ரசிக மன்றங்களை..
அது காலம் இழுத்து சென்ற கோலம்.
ஒரு பிரபல நடிகரின் ரசிகர் மன்ற 4 மாவட்ட செயலர்கள் கட்சி துவங்க இல்லை இன்று வேறு திசையில் ஓடி வேறு கட்சியில் சங்கமிக்கும் காட்சி இன்று பார்க்கிறோம்.
ஒரு இன்னும் ஒரு பிரபல நடிகர் இவ்வளவு நாள் இன்னொரு நடிகர் புகழ் பாடி.... கட்சி ஆரம்பித்தவுடன்
மடியில் தவழ்ந்தேன் அவர் கொடியில் பிறந்தேன் என்று இன்று தலைவர் வீடு தேடி செல்லும் நிகழ்வுகள்..
இந்த மடியில் தவழ்ந்த அவர் முதல் திருமணத்துக்கு மும்பை சென்று தாலியை தன் கையால் எடுத்து கொடுத்து வாழ்த்தியவர் நம் தலைவர் .
பின் பிரிவு வரும் போது அந்த வாணி தலைவரிடம் அண்ணா என்ன இப்படி செய்கிறார் அவர் என்று கதறிய போது
தலைவர் அழைத்து நியாயம் கேட்க வர மறுத்த நாயகனும் அவரே.
வரலாறு தெரியாதவர்கள் இடம் உங்கள் வியாபாரம் சிறக்கட்டும்..எங்களிடம் வேண்டாம்...தம்பி
அமைதியாக பார்த்து மனதுக்குள் ரசித்து சிரித்து கொண்டு இருக்கிறார்கள். தலைவர் மன்றம் கண்ட ரசிகர்கள்..
உண்மை வீதிக்கு வந்து தலைவர் புகழ் எந்நாளும் காக்கும் உண்மை தலைவர் ரசிகர்கள்.
யாருக்கும் வெட்கம் இல்லை...
ஓடி களைத்து மீண்டும் வாருங்கள் ஒரே தலைவர் நம் எம்ஜிஆர் அவர்கள் புகழ் என்றும் காப்போம்.
கட்சியை காரணம் காட்டி அவர் புகழை சிறுமை படுத்த முயற்சிக்கும் உங்கள் எண்ணம் ஒரு போதும் பலிக்காது.
வாழ்க எம்ஜிஆர் மன்றங்கள்..வாழ்க உண்மை ரசிகர்கள்.
பூமி பந்து சுழலும் வரை ஒரே இலக்கு எங்களுக்கு..
அவர் புகழ் காப்பது மட்டுமே எங்களுக்கு.
கானல் நீரை நம்பி பதிவுகள் வேண்டாம்
உங்களை தலைவர் காலத்தில் நாங்கள் ஒரு நொடி கூட சந்தித்தது இல்லை.......nmi
-
மனங்கவர் மக்கள்திலகம்;
மக்கள் உள்ளங்களில் தாழம்பூவாக தழைத்து
மணம் வீசிக்கொண்டிருக்கும் மக்கள்திலகம் ஒரு தனிப்பிறவி;‘’பெற்றால்தான் பிள்ளையா? எங்கள் வீட்டுப் பிள்ளையென
ஏகோபித்த எண்ணங்களின் ஏற்பில், எங்கள் தங்கம் எனப்
பாசத்தோடு போற்றும் பரிமளிப்பைப் பெற்றவர் புரட்சிநடிகர் mgr;
சுவைதரும் இதயக்கனியாக தன்னுடைய இதமான
ஈடற்ற உயர்ந்த உள்ளத்தால் மக்களின் இதயவீணையை
மீட்டிய ஈடில்லா மாமனிதர்; ‘’நம் நாடு பல்லாண்டு வாழ்க என்ற உயர்ந்த லட்சியத்தோடு,
திடமான சீரிய நோக்கத்தில் தன்னுடைய செயல்திறனை
செறிவாக செயல்படுத்திய பொன்மனச்செம்மல்;
தொழிலாளி, விவசாயி போன்ற உழைக்கும் கரங்களை
ஊக்குவித்து, அன்னமிட்ட கையாக அலங்காரங்கொண்ட அற்புத மனிதர்;
தாயைக் காத்த தனயனாக, நம் நாட்டின் பெருமை காக்க
பண்பான பதங்களை படங்களிலும், பாடல்களிலும் பகர்ந்தளித்த
பெருந்தன்மைப் பேராளர்;
நாடோடி, மன்னாதி மன்னன் என்ற பாகுபாட்டு நிலைமை கொள்ளாமல்,
நடுநிலைமைப் பேணி, நீதிக்குப் பின் தான் பாசம்,
நீதிக்குத் தலை வணங்கு என்ற பண்புடைமையே என் கடமை;
என்றும் நல்லவன் வாழ்வான் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளல்;
தர்மம் தலை காக்கும் என்று, தனக்கென வாழா தன்னிகரற்ற தலைவன்;
அழுகின்ற மழலைகூட அவரின் ஆசைமுகத்தைப் பார்த்தால்
வருகின்ற கண்ணீரும் நின்று குழந்தை குதூகலிக்கும் முகராசி மிக்க எங்கள் தங்கம்;
திக்கற்று திகைப்போர்க்கு வழிகாட்டும் ஆனந்தஜோதியாக, கலங்கரைவிளக்கமாய்த்
திகழ்ந்தவர்; குடியிருந்த கோயிலான தெய்வத்தாய்ப் பெற்றெடுத்த நவரத்தினநாயகன்;
பணக்கார குடும்பமாயினும், பணத்தோட்டத்தையே பகர்ந்தாலும் நியாயங்களுக்காக
உரிமைக் குரல் எழுப்பி, மக்களைக் காக்க களமிரங்கி நினைத்ததை முடிப்பவர் எங்கள்
மன்னாதி மன்னர் பொன்மனச்செல்வர், புரட்சித்தலைவர், ஏழைப்பங்காளர் mgr;
அணையா ஒளிவிளக்காய், குளிர்ச்சிமிகு சந்திரோதயமாய் சாதனையாளராய்
ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க! பொன்மனச்செம்மல் புகழ் ஓங்குக!
இவண் ... T.s.a.பாலன்.............
-
எங்கள் தலைவா (இறைவா ) உன்னை போல் மனித தெய்வம் இவ் உலகில் உண்டா தரணி போற்றும் தன்னிகர் இல்லா எங்கள் தங்க தலைவா ,மக்களுக்க்கவே வாழ்ந்த "மக்கள் திலகமே "
எங்களின் இதயமே நீ தானே.
================================================== =========
எம்.ஜி.ஆரின் ஆரம்ப நாட்களில் , அவர் மீது மிகப் பெரிய அவதூறு ஒன்று சொல்லப்பட்டது..!
ஒரு படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்டு விட்டு , ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுக் கொடுத்து விட்டு , அதன் பிறகு நடிக்க மாட்டேன் என்று மறுத்தால்....அது குற்றம்தானே...?
ஏன் அந்தக் குற்றத்தை செய்தார் எம்.ஜி.ஆர்.?
இதோ.. அந்தக் குற்றச்சாட்டுக் கேள்வி....
“சில படங்களில் நடிக்க நீங்கள் மறுத்து விட்டதாகவும், சில படங்களில் நடிக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாகவும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் உண்மையா?”
இதற்கு எம்.ஜி.ஆர். கூறிய பதில் :
“இரண்டு படங்கள். ஒன்று காத்தவராயன். இன்னொன்று லலிதாங்கி. இரு படங்களில் இருந்து விலகினேன். ஆனால் பத்திரிகைகள் கூறும் காரணங்களால் அல்ல. சாமி கும்பிட மறுத்து விலகினேன் என்பது தவறு. கடவுள் வழிபாடு என்பது அவரவர் சொந்த விஷயம்.
காத்தவராயன் படத்தில் மாந்தரீக காட்சிகள் நிறைய. எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. என் மாமன் ஒருவர் மாந்தரீகனாக இருந்தார். எனவே எனக்கு நன்றாக தெரியும். மாந்தரீகம் ஒரு பித்தலாட்டம். மந்திரத்தில் மாங்காய் விழாது.
படித்தவர்கள் மட்டுமே பத்திரிகை வாசிக்கிறார்கள். ஆனால் படிக்காதவனும் சினிமா பார்க்கிறான். அந்த பாமரர்கள் என் படத்தில் நான் சொல்வதையும் செய்வதையும் நம்புகிறார்கள். அவர்களின் மனதில் தவறான கருத்துகளையும் பொய்களையும் புகுத்த நான் சம்மதிக்க மாட்டேன்.
நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது. அதனால் ஒப்பந்தம் போடும்போதே அதையெல்லாம் மாற்றினால்தான் நடிப்பேன் என்று சொன்னேன். ஒப்புக் கொண்டார்கள். ஆனால் பிறகு பின்வாங்கினார்கள். கர்ண பரம்பரையாக சொல்லப்படும் கதையை மாற்றினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். நான் விலகாமல் என்ன செய்வது?
அப்படித்தான் லலிதாங்கியும். அதில் கதாநாயகன் எல்லா பெண்களும் விபசாரிகள் என்கிறான். தாய்க்குலத்தை மதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் நான் எப்படி அதை உச்சரிக்க முடியும்? லட்சக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா? நாட்டின் எதிர்காலமே அவர்கள் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் அந்த படத்தை வேண்டாம் என சொல்லி விட்டேன். இதுதான் நடந்தது...”
# இதுதான் எம்.ஜி.ஆரின் ஒப்புதல் வாக்குமூலம்...! ஏற்றுக் கொள்ளக் கூடியதாகத்தானே இருக்கிறது..?
இதில் நாம் கற்றுக் கொள்ள இன்னும் சில விஷயங்களும் கூட இருக்கின்றன..!
#“நடிகன் என்ற முறையில் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது.”
“லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சிறுவர்கள் என்னை தங்கள் ஹீரோவாக மனதில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மனதில் நஞ்சை விதைக்க முடியுமா?”#
# எம்.ஜி.ஆர். காட்டிய இந்த சமூக அக்கறையை ,
இன்றைய “பீப்” பாய்கள் [Beep Boys ] கொஞ்சம் புரிந்து கொள்வது நல்லது...!.........VRH...
-
#எப்போதும்,எப்பொழுதும்
#mgr .........
நெடுந்தொடர்...
தமிழ் சினிமாவில், சினிமா எனும் கலையைக் காக்கவும் மக்களை மகிழ்விக்கவும் ஆபத்பாந்தவனாக ஒருவர், ஒவ்வொரு தருணத்திலும் வந்துகொண்டே இருப்பார். தியாகராஜ பாகவதார், சின்னப்பா, கிட்டப்பா என்றெல்லாம் ஆரம்பித்த அந்தப் பட்டியலில்... இடம் பிடித்தார் அந்த நடிகர். ஆனால், அவரை சாதாரணராக, நடிகராக மட்டுமே பார்க்கவில்லை மக்கள். உண்மையிலேயே ஆபத்பாந்தனாகத்தான் பார்த்தார்கள்; பூரித்தார்கள்; புளகாங்கிதம் அடைந்தார்கள். தேவதூதனாகப் பார்த்தார்கள். தேவனாகவே கூட பார்த்தார்கள். அவர்... எம்ஜிஆர்.
எம்ஜிஆரைப் போல் ஒரு மாஸ் ஹீரோ எவருமில்லை. ஆனால் எம்ஜிஆர், எடுத்த எடுப்பிலேயே ஹீரோ இடத்துக்கு வந்துவிடவில்லை. சின்னச்சின்ன கேரக்டர்களில் தொடங்கிய திரைப்பயணம் அது. கொஞ்சம்கொஞ்சமாகத்தான் வளர்ந்தார். பின்னாளில், மொத்தத் திரையுலகையும் சின்னவர் என எல்லோரும் அழைக்கும் வகையில், பெரியவராக இருந்து தன் கைக்குள் வைத்துக்கொள்வோம் என்று எம்ஜிஆரே நினைத்திருக்கமாட்டார்.
பின்னாளில், கதையில் கவனம் செலுத்தினார். காட்சிகளைக் கவனித்தார். வசனங்களைத் திருத்தினார். பாடல்களின் முக்கியத்துவத்தை இவரளவுக்கு உணர்ந்தவர்கள் இல்லை. மக்களின் ரசனையை ‘பல்ஸ்’ பிடிப்பதில் முதன்மையானவராகவும் வல்லவராகவும் இருந்தார். தத்துவார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். காதலுக்கும் வீரத்துக்கும் இன்னும் முக்கியத்துவம் கொடுத்தார். தத்துவமும் காதலும் வீரமும் எம்ஜிஆரின் அடையாளங்களாகப் பேசப்பட்டன. இந்த அடையாளங்கள்தான், எம்ஜிஆர் ஃபார்முலாவாயிற்று.
பெற்றவர்களை மதிப்பார். ஊரிலிருந்து வீட்டுக்கு வந்தகையுடன் அம்மாவின் காலில் விழுந்து வணங்குவார். தாய் சொல்லைத் தட்டமாட்டார். ஊரில் ஏதும் பிரச்சினை என்றால், தட்டிக்கேட்பது, பெண்களுக்கு ஏதேனும் பங்கமெனில், ஓடோடி வந்து உதவுவது, அநியாயத்தைக் கண்டு கொதிப்பது, வில்லனின் கூடாரத்தைக் கண்டறிவது, கெட்டவர்களை அழிப்பது என்று எம்ஜிஆர் செய்ததெல்லாம் எம்ஜிஆர் ஸ்டைலாயிற்று. எம்ஜிஆர் ஃபார்முலாயிற்று. அதுதான் சக்ஸஸ் ஃபார்முலாயிற்று.
படத்துக்கு ஒருபாடலாவது என்றைக்கும் நிலைத்திருக்கும் பாடலாக அமையவேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் அனைத்தையும் நிலைத்திருக்கும் பாடல்களாகக் கொடுக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் எம்ஜிஆர். அதை சாதித்தும் காட்டினார்.
டபுள் ஆக்டிங் ரோலுக்கு ஓர் இலக்கணத்தை வைத்தவரும் எம்ஜிஆராகத்தான் இருப்பார். டபுள் ஆக்டிங்கில் வெரைட்டி காட்டுகிற அவசியமெல்லாம் இல்லாமல், அதற்கொரு ஸ்டைலீஷையும் உண்டுபண்ணினார்.
எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில் எம்ஜிஆரின் வெற்றி, இவற்றில் மட்டும்தானா என்ன? உடன் பணிபுரிவோரிடம் அன்பாகப் பழகியதும் ஆபத்துக்கு உதவியதும் அவரை சின்னவர் என்றும் வள்ளல் என்றும் கொண்டாட வைத்தது.
‘எம்ஜிஆர் வீட்டுக்கு யார் போனாலும் முதலில் அவர்களுக்கு வயிறாரச் சாப்பாடு போடுவதுதான் எம்ஜிஆரின் வழக்கம். எத்தனையோ பேர், எம்ஜிஆரிடம் உதவி கேட்க வந்து, சொல்லத் தயங்கி, அவர்களின் தயக்கத்தை அறிந்து உணர்ந்து உதவி செய்யும் அவரின் வள்ளல் குணம்தான் இன்றைக்கும் எல்லோரையும் கொண்டாடவைக்கிறது என்கிறார்கள் எம்ஜிஆரின் ரசிகர்கள்.
எம்ஜிஆர், மறைந்தாலும் இறந்து பல வருடங்களாகிவிட்டாலும் இன்றைக்கும் எம்ஜிஆரின் குணத்தைச் சொல்லவும் அவரின் கருணையையும் கனிவையும் சொல்லிச் சொல்லிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதுதான் எம்ஜிஆர். அதுதான் வள்ளல் எம்ஜிஆர்.
இன்று எம்ஜிஆர் (17.01.2021) பிறந்தநாள். அந்த உன்னதத் தலைவரை, ஒப்பற்ற மனிதரைப் போற்றுவோம்!......