-
வாருங்கள் வாசு அவர்களே..
தாய்மடியில் தலைவைக்காமல் எத்தனை தினம் இருந்துவிட இயலும் ?
உள்ளத்தில் நல்ல உள்ளங்கள்தான் உறங்காமல்... சிவந்திருக்கும்!
தெய்வத்தைக் கொண்டாடி குளிர்ந்திட வாழ்த்துகள்..
-
-
தங்கள் உளபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி கண்ணன் சார்.
-
வாசு சார்
வாழ்விலே ஒரு நாள் திரைக்காவியத்தின் தகவல் பகிர்வில் மேலும் அரிய நிழற்படங்களை அளித்து சிறப்பு சேர்த்து விட்டீர்கள். மிக்க நன்றி. இது போல் தொடர்ந்து தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்புள்ளங்களில் நானும் ஒருவன்.
அன்புடன்
ராகவேந்திரன்
-
Dear காவிரிக் கண்ணன் சார்
தங்களுடைய உள்ளன்போடு கூடிய பதிவுகள் அனைத்துமே உள்ளத்தில் உவகையும் அன்பும் எடுத்துக் காட்டும் அடையாளமாய் அமைந்துள்ளன. அது மட்டுமின்றி ஒவ்வொரு பதிவிலும் நடிகர் திலகத்தின்பால் தங்களுக்குள்ள அளவற்ற ஆழமான பாச்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றிகளும் பாராட்டுக்களும்
அன்புடன்
ராகவேந்திரன்
-
டியர் ஆதிராம் சார்
அமர தீபம் பற்றிய தங்களுடைய பதிவில் அபூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.
-
வாழ்விலே ஒரு நாள் - சிறப்புச் செய்திகள் தொடர்ச்சி
நடிகர் ஸ்ரீராம் இப்படத்தில் நடித்த போது நடிகர் திலகத்தை விட வயதில் மூத்தவர். ஆனால் அவருக்குத் தந்தையாக நடிகர் திலகம் இப்படத்தில் நடித்துள்ளார். இதனை நடிகர் திலகம் தன்னுடைய கருத்திலும் வெளிப் படுத்தி உள்ளார்.
"என்னை விட வயதானவருக்கு நான் தந்தையாக நடித்த படம் "
-
Thanks for the additional info on Vazhvinele Oru Naal.
This thread is treasure for NT's fans.
-
என்னவென்று சொல்வது! ராஜசுலோச்சனா அவர்கள் நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த வாழ்விலே ஒரு நாள் பதிவு திரியில் ஜொலித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஜோதி அணைந்து விட்டது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அற்புத நடிகை அவர். அவரது ஆன்மா சாந்தியடையவும், அவர்தம் குடும்பத்தினருக்கு மன அமைதி கிட்டவும் இறைவனை இறைஞ்சுவோம்.
'வாழ்விலே ஒரு நாள்' காவியத்திலிருந்து ராஜசுலோச்சனா அவர்கள் தோன்றும் ஒரு காட்சி.
http://raretfm.mayyam.com/pow07/images/vazhvileoru2.jpg
-
ஒளி படைத்த கண்ணினாய் வா வா என்று இறைவன் அவரை அழைத்துச் சென்று விட்டானோ ...
http://i1146.photobucket.com/albums/...ps787cc83c.png
அடுத்து நம் திரைப்படப் பட்டியலில் இடம் பெற உள்ள ரங்கோன் ராதா திரைக் காவியத்தில் மகா கவி பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் பாடல் காட்சியில் ராஜ சுலோச்சனா அவர்கள் தோன்றி நடித்த காட்சி தற்போது பார்த்தால் நெஞ்சை உருக வைக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம். அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வோம்.