-
வார்த்தை தவறி விட்டார் செந்தில் சார்
மதுரகானம் துடிக்குதடி
பார்த்தவிடத்திலெல்லாம்
வீடியோ பார்வை தெரியுதடி
நாளைமுதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம் :)
பிரம்மச்சாரி பிரம்மச்சாரி
வழுக்கி விழலாமா :)
சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே :)
அவரா சொன்னார் இருக்காது
அப்படி எதுவும் நடக்காது
நடக்கவும் கூடாது
நம்ப முடியவில்லை :)
-
வாசு ஜி... அவர் ஒரு ரிவர்ஸ் ரஜினி..
நாலு பாட்டு போட்டா ஒண்ணு போட்ட மாதிரி...
செந்தில்ஜி... நான் வாசுவைப் பிடிச்சுக்குறேன். இப்போதைக்கு தப்பிச்சுக்குங்க :)
-
வார்த்தை தவறவில்லை வாசு சார்
சும்மா ஒரு ஷோ காட்டிட்டு சுட்டியாக்கி விடுவேனே !
இப்பப் பாருங்களேன் ரவி வந்து வெளுப்பதற்குள் மாற்றி விட்டேன்!!
-
கதம்ப மதுர மாலை!!/ Old Songs remix!!
நமது திரைப் படங்களில் கற்பனைப் பஞ்சம் ஏற்படும் போது புகழ் பெற்ற பழைய / சம காலத்திய பாடல் பிட்டுக்களை சாமர்த்தியமாகக் கோர்த்துக் கதம்ப மாலையாக்கி நமது காதோடு நிற்காமல் உடல் முழுக்க சுற்றி விடுவார்கள் !
கதம்பமாலை 1 : தேன் கிண்ணம் / நாகேஷ்-விஜயலலிதா
[url]https://www.youtube.com/watch?v=CaznqYwdGMg
ஜெர்ரி லூயியை அடியொற்றும் நாகேஷின் மானரிசம்ஸ் !
கதம்பமாலை 2 : நான் / நாகேஷ்-மனோரமா
https://www.youtube.com/watch?v=MFLczvaSFoE
கதம்பமாலை 3 : நவராத்திரியில் பைத்தியக்கார் ஆஸ்பத்திரியில் மனோரமா கோஷ்டி ..
[url]https://www.youtube.com/watch?v=8HlY66SogrY
-
ரவி சார்!
தேனின் இனிமையை உங்கள் பதிவில் மீண்டும் கண்டேன். உவகை கொண்டேன்.
தேனின் குணங்களும், அதன் மருத்துவப் பயன்களும் அனைவருக்கும் உபயோகமானவை. நல்ல உபயோகமான பதிவு. மனமுவந்த நன்றிகள். இமேஜ்களும் அட்டகாசம். தேன் கண்ணெதிரே தெறிக்கிறது.
எனக்கே முன்னால் இப்படி ஒரு யோசனை இருந்தது. ஆனால் நீங்கள் எதுவாய் இருந்தாலும் முந்தி(ரி)க் கொண்டு விடுகிறீர்கள்.:) பாருங்கள்... அருமையாக மது அண்ணாவுக்கு மென்பொருள் பற்றிய விவரங்கள் அளித்து உதவி செய்து விட்டீர்கள். அவர்தான் விட்டால் போதும் சாமி என்று உங்கள் ஆபரேஷனைக் கண்டு அலறி ஓடுகிறார்.:)
அதே போல தாங்கள் அளித்து, மற்றவர்களும் அளித்த தேன் பாடல்கள் தேனோ தேன். அருமையாக இருந்தது. பாட்டியம்மா பதிவுகளை தேனாக திசை திருப்பி விட்டு உங்கள் அருமை நண்பர் சின்னக் கண்ணனைக் காப்பாற்றி விட்டீர்கள்.:) உங்கள் குறள் பாணியில் உதாரணமிட்டால் 'உடுக்கை இழந்தவன் கை' போல.
'ராஜா', 'வெள்ளி முத்துக்கள்' பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கும் நன்றி!
தேன் என்றாலே என் நினைவுக்கு வரும் பிற பாடல்கள்
தேன் சொட்ட சொட்ட சிரிக்கும் ஒரு திருமண மேடை
தேன் மழையிலே தினம் நனையும் உன் நெஞ்சமே
தேனில் ஆடும் ரோஜா
தேனாற்றங்கரையினிலே
தேன் பூவே பூவே வா
தேன் மல்லிப் பூவே
தேனே தென்பாண்டி மீனே
தேனில் வடித்த சிலையே
தேன் குளத்திலே நான் குளிக்கிறேன்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
செந்தமிழ் தேன் மொழியாள்
கல்யாணத் தேன் நிலா
அமுதும் தேனும் எதற்கு
என் யோக ஜாதகம் நான் உன்னைச் சேர்ந்தது
தேன் அமுதம அல்லவோ நான் அள்ளி உண்டது
தேனடி மீனடி
தேனோடும் தண்ணீரின் மீது
தேன் சிந்துதே வானம்
இன்னும் நிறைய.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அப்போது பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த திரைப்பாடல் அல்லாத கிறித்துவப் பாடல் ஒன்று ரொம்ப ரொம்பப் பிடிக்கும். சென்னை, புதுச்சேரி, திருச்சி வானொலி நிலையங்களில் காலை ஆறு மணிக்கு அப்போது போடப்படும் பக்திப் பாடல்களில் இப்பாடல் இடம் பெறாமல் போனதே இல்லை. இனிமையென்றால் அப்படி ஒரு இனிமை அப்பாடலின் முதல் வரியைப் போல. இப்பாடலைக் கேட்கும் போது உடலும், உள்ளமும் புல்லரித்துப் போவது நிஜம். இன்றும் கூட அதே போன்றே மனதை மயக்கிக் கொண்டேதான் இருக்கிறது.
அப்படியே சுசீலாம்மாவின் குரலுக்கு அடிமையாகிக் கிடக்க வேண்டியதுதான்.
தேன் இனிமையிலும்
யேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
அதைத் தேடியே நாடி
ஓடியே வருவேன் திருச்சபை
ஆனோரே
காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உத்தரித்தே
பாவக் கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்ய மதுரமாமே
சுசீலாம்மா பாடும் அந்த கடைசி சரணம். அதைப் பூப் போல உச்சரிக்கும் பாங்கு. சரண்டர் ஆகாமல் எவரும் தப்ப முடியாது.
'பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்று நாமம்'
அவரின் 'க' உச்சரிப்பைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். நிஜமாகவே திவ்ய மதுரம்தான்.
https://youtu.be/x9hzx6q29to
-
ஹய்! ரிவர்ஸ் ரஜினி! மது அண்ணா! ரொம்ப நல்லா இருக்கே!
ஆனா சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடுத்து. எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிப்பீங்களோ!:)
-
வாசு சார்
பாட்டியம்மா பாடல்கள் சி கவுக்கு அலர்ஜியா ? ஏதாவது கொசுவர்த்திச் சுருள் பிளாஷ் பேக்?
இருந்தால் எல்லோரும் தெரிந்து கொள்கிறோமே !
-
வாசு - மோதிர கையினால் "முந்திரி " என்று சொல்லி குட்டினதர்க்கு நன்றி - நீங்கள் குட்டினதாலோ என்னவோ வலிக்கவில்லை . தேனைப்பற்றி இவ்வளவு பாடல்களா ???? - மலைத்தேன் வாசு ! மானசிகமாக உங்களை அணைத்தேன் - பிழைத்தேன் இனி தொடராமல் ! களைத்தேன் என்று சொல்ல முடியாத பதிவுகள் உங்களுடையது
வெற்றி வேல் வீர வேல் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
http://i818.photobucket.com/albums/z...pslnw9o14p.jpg
-
விட்டுப்போன தேன் துளிகள்....
தேன் பாயும் வேளை - பௌர்ணமி அலைகள்
தேன் கூடு நல்ல தேன் கூடு - ஆட்டுக்கார அலமேலு
தென்றல் பாடவும் தேன் மலர் ஆடவும் - மனிதன் மாறவில்லை
தேன் அருவி அதில் ஒரு குருவி - கராத்தே கமலா
ஹனி ஹனி தித்திப்பது - நீச்சல் குளம்
செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வா வா - செந்தூரப்பூவே
ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான் - இதயத்தை திருடாதே
ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே - மணிப்பூர் மாமியார்
சேலாடும் நீரோடை மீது தேன் சிந்தப் பண் பாடுவோமே - அலாவுதீனும் அற்புத விளக்கும்
தேன் கூட்டில் இன்னும் எத்தனையோ தித்திக்கும் துளிகள் இருக்கு....
மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து இனிக்க வைத்த செந்தில் ஜி, வாசு ஜி... ரொம்ப நன்றி ஜி..
-
Take it ECg! Honey filled songs are endless!
பூமாலையில் ஓர் மல்லிகை ..இங்கு நான்தான் தேன் என்றது...
இந்த வரிசையில் சேருமா !?