https://youtu.be/zwZ74Re4rrE......... Thanks.........
Printable View
https://youtu.be/zwZ74Re4rrE......... Thanks.........
https://youtu.be/aqVBYqNGV6w.......... Thanks.........
வரும் வெள்ளி முதல் (08/11/19)* கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகளில் வெளியாகிறது .
தகவல் உதவி ; சத்தியமங்கலம் திரு.சாமுவேல் .
இரங்கல் செய்தி .
-------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் உண்மை விசுவாசியும், தீவிர பக்தருமாகிய திரு.அப்துல் கனி (69 வயது ) கடந்த மாதம் 21/10/2019 அன்று* உடல்நல குறைவால்*தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என்கிற அதிர்ச்சி கலந்த துயர செய்தி அவருடைய*சகோதரர் திரு.அப்துல் வாஹித் மூலம் அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன் .இந்த செய்தி மிகவும் தாமதமாகத்தான் எனக்கு தெரிந்தது .
திரு.அப்துல் கனி, நடிக மன்னன் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் என்கிற அமைப்பில் 1972 முதல் நிர்வாகியாகவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதில் முன்னணி*பக்தராகவும் விளங்கியவர்.* 1973 முதல் அவருடன் நெருங்கிய நட்பு இருந்தது .பல* ஆண்டுகளுக்கு முன்பு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய சில மலர்கள், புத்தகங்கள் எனக்கு வழங்கி இருந்தார் .உலகம் சுற்றும் வாலிபன், திரைப்பட வெற்றிகள், சாதனைகள் ஆகியவற்றை அப்போது வெளியாகியிருந்த இந்தி, ஆங்கில பட வசூல்களுடன் ஒப்பிட்டு நோட்டிஸ்கள் அடித்து வெளியிட்டு பக்தர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .* தொடர்ந்து,நேற்று இன்று நாளை , உரிமைக்குரல், இதயக்கனி, பல்லாண்டு வாழ்க , நினைத்ததை முடிப்பவன் , நீதிக்கு தலைவணங்கு, உழைக்கும் கரங்கள் , இன்றுபோல் என்றும் வாழ்க, மீனவ நண்பன் போன்ற* படங்களுக்கும் அதன் வெற்றிகள் , பற்றி பறைசாற்றி வந்தார் .
திரு.அப்துல் கனி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர்.அருள் புரியட்டும்* அவரை இழந்து வாடும் அவரது மனைவி , மகள்*மற்றும் உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் அனைத்து எம்.ஜி.ஆர் மன்ற*அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ..
1964ம் ஆண்டில் சாதனை புரிந்த படங்கள் _ ஒரு அலசல்*--------------------------------------------------------------------------------------------
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 1964ம் ஆண்டில் 7 படங்கள் வெளியாகி இருந்தன . அவை 1, வேட்டைக்காரன் .2, என் கடமை .* 3, பணக்கார குடும்பம்*4.தெய்வத்தாய் . 5. தொழிலாளி* 6.படகோட்டி . 4. தாயின் மடியில் .
1. வேட்டைக்காரன் , சென்னை, சித்ரா, பிராட் வே , மேகலா , மற்றும் சேலம் அரங்கில் 100 நாட்கள் ஓடி, பொங்கல் திருநாளில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் பெற்ற* படமாக திகழ்ந்தது .
2. என் கடமை வெளியானபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் பெருந்தலைவர் .காமராஜரை என் தலைவர் , பேரறிஞர் அண்ணாவை என் வழிகாட்டி* என பேசியதை சிலர் அரசியலாக்கி* படம் , பாடல்கள் தரமாக இருந்தாலும் , கடும் விமர்சனங்கள் எழுப்பி , வெற்றி பெறாமல் செய்தனர் .அனால் இந்த படம் தலைவர் கட்சி ஆரம்பித்த பின்பு1973 லிருந்து 1990 ஆண்டு வரையில்* *ரெகுலர் காட்சிகளிலும்,பகல் காட்சிகளிலும் நூற்றுக்கணக்கான அரங்குகளில் வெளியாகி வெற்றிமுரசு கொட்டி வசூலை குவித்தது .
3. பணக்கார குடும்பம் - சென்னை சித்ரா , பிராட் வே, மேகலா, மதுரை தேவி,திருச்சி*பேலஸ் , சேலம் விக் டோரியா , கோவை சுவாமி அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது .1964ம் ஆண்டிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட், அதிக வசூல் ஈட்டிய படம் .
4. தெய்வத்தாய் - சென்னை பிளாசா , கிரவுன் , புவனேஸ்வரி அரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக கடந்த சத்யா மூவிஸ் தயாரித்த உன்னத படம் .ஒரு முறை ஆனந்த் அரங்கில் தினசரி 3 காட்சிகளில் ஒரு வாரம் வெளியிடப்பட்டு வெற்றிகரமாக ஓடியது .
5. தொழிலாளி - சென்னை சித்ரா , பிராட் வே,, மேகலா அரங்குகளில் 50 நாட்களை கடந்து வணிக ரீதியாக வெற்றிகண்ட படம். 1973க்கு பிறகு பல அரங்குகளில் , பகல் காட்சிகளில் வெளியாகி வசூலை ஈட்டியது . இப்போதும்*சென்னை, மதுரை, கோவை* போன்ற பெருநகரங்களில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கிறது . விரைவில் கோவை சண்முகாவில் வெளியாக உள்ளது .
6. படகோட்டி,- சென்னை பிளாசாவில் வெற்றிகரமாக 100 நாட்களை கடந்தது .*கிரவுனில் 72 நாட்களும், புவனேஸ்வரியில் 79 நாட்களும் ஓடியது .73வது நாளில் வெளியான எங்க வீட்டு பிள்ளையின் இமாலய வெற்றி இந்த படம் ஓட்டத்திற்கு தடையாக இருந்தது .அதனால் பல அரங்குகளில் 100 நாள் எட்டவில்லை . ஆனால் அ .தி. மு.க. உதயம் ஆன பின்பு* 1973 முதல் 2000 வரையில் தொடர்ந்து தொய்வில்லாமல் நூற்றுக்கணக்கான (பட்டி தொட்டி களில் ) அரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது . தேவி பாரடைஸில் இருமுறை வெளியான படம் இதுவே . 1964 ம்* ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுவரையில் அதிக வசூலை பெற்ற படம் இதுதான் .* கடந்த பல ஆண்டுகளாக அரங்குகளில் வெளியாகாததால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம்* ஆனால் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது . டிஜிட்டல் வடிவில் உருவானால் நல்ல வரவேற்பை பெறும் வகையில் உள்ளது .*
7.தாயின் மடியில் - கதை அமைப்பில் உள்ள குழப்பம், திரைக்கதை அமைப்பு கோளாறு, சோக காட்சிகள் அதிகம் காரணம், 28 வது நாளில் எங்க வீட்டு பிள்ளை வெளியீடு ஆகியவற்றால் படம் வந்த சுவடு தெரியாமல் , எதிர்பார்த்த வெற்றி பெறாமல் மறைந்தது .
மாற்று முகாம் நண்பர் பதிவிடும் தவறான செய்திகள் .
--------------------------------------------------------------------------------------
தெய்வத்தாய் 100 நாள் பட்டியலில் இடம் பெறவில்லை.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிப்பில் 7 படங்கள் வெளியாகி இருந்தது . ஆனால் அவர் 3 படங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார் .**
கை. கொ.தெய்வம் - 100 நாள் பட்டியலில் கோவை கர்னாடிக் -கையால் விளம்பரத்தில் எழுதப்பட்டுள்ளது .
வெ .ரோஜா - திண்டுக்கல் கணேஷில் 50 நாளில் ரூ.8,10,000/-. வசூல் .இப்போது வெளியாகும் படம் கூட 50 நாளில் இந்த வசூல் பெற வாய்ப்பே இல்லை . அந்நாளில் கட்டணம் மிக குறைவு. இந்த நிலையில் பொய்யான வசூலை பதிவு*செய்து தங்கள் அபிமான நடிகருக்கு பெருமை தேடி தருவதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள் .
உண்மையான தகவல்களையே பதிவிடுவதாக சொல்லி, நமது நண்பர்களின் பதிவுகளை குறை சொல்பவர்கள் இனியாவது உண்மை தகவல்களை பதிவிடுவார்கள் என்று எதிர்பார்ப்போம் .* * * * *
🦉எம்.ஜி.ஆர் உடல் நல்ம குன்றி அப்போலோவிலிருந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப் பட்ட நாள்- இன்று!- நவம்பர் =5
🚦வழக்கம்போல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் 5.10.1984 இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். லேசான ஆஸ்துமா தொந்தரவினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதற்கு சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விஷ்யம் தெரிந்து கூடி விட்ட பத்திரிகை
யாளர்களிடம்அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு கடந்த ஒரு வார காலமாக சளி (ஜலதோஷம்) இருந்தது. காய்ச்சல் இருந்தது. சிறிது ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்.என்று கூறினார்.
இதற்கிடையில் தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்து வந்தது. சட்டசபையில் சித்தன் (இ.காங்கிரஸ்) பேசும்போது, "எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன்,
"5.10.1984 வெள்ளிக்கிழமை முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு "ஆஸ்துமா" போன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஓய்வுக்காகவும், சிகிச்சைக்காகவும் சேர்க்கப்பட்டார்.
சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்பல்லோ ஆஸ்பத்தி ரியை சேர்ந்த டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகிய டாக்டர்கள் குழுவினர் முதல் அமைச்சரின் உடல் நிலை குறித்து கவனித்து வருகிறார்கள்.
மறுநாள் முதல் அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கிவிட்டது. இன்று காலையில் முதல் அமைச்சரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்.
மூச்சு விடுவதில் சிரமம் இல்லை. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசீஸ்) நல்ல உதவியை செய்துள்ளது. சிறு நீரகத்தை கிட்னி என்ற உறுப்பில் இந்த டயாலிசீஸ்' இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வயிற்று குடலில் உள்ள ஜவ்வில்தான் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது." என்று நெடுஞ்செழியன் கூறினார்..
பின்னர் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி,"நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த திரவத்தை "பெரிடோனியல் டயாலி சீஸ்" முறை மூலம் முழுவதுமாக வெளி எடுத்துவிட்டோம்.
இது போன்றவற்றால் சிறுநீரகத்தில் மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே "டயாலிசீஸ்" மூலம் திரவத்தை வெளியேற்றினோம்.
அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. எனவே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் அவர் தங்கி இருக்கவேண்டும். ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல." என்று அவர் கூறினார்..
இப்படி எம்.ஜி.ஆர். உடல் நிலை தேறி வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. ஆனால் 14ந்தேதி அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர்.
அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கை,”
"13ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச்செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். உடல் நிலையை ஆராய்ந்தார்.
தலைப்பகுதியை `எக்ஸ்ரே' படம் பிடித்து பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது." என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது..
சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதற்காக தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற வெளிநாட்டிற்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்புவதாக இருந்தாலோ அதற்கு உதவிகளை செய்வதாக கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.
அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.
திரை உலக பிரமுகர்கள், நடிகர்_ நடிகைகள் ஆஸ்பத்திரிக்கு படை யெடுத்தனர். எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி விசாரித்தனர்.
கோவில்களில் எம்.ஜி.ஆர். நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன. எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய மருத்துவ அறிக்கை சட்டசபையில் தினமும் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
ஆஸ்பத்திரி சார்பிலும் மருத்துவ அறிக்கை அவ்வப்போது வெளியிடப்பட்டு வந்தது. 16ந்தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திராகாந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
நேராக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்குச் சென்றார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அறைக்கு சென்று 10 நிமிடம் இருந்து எம்.ஜி.ஆரை பார்த்து உடல் நலம் விசாரித்தார்.
அப்போது அந்த அறையில் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மாள் மற்றும் டாக்டர்கள் இருந்தனர். பிறகு டாக்டர்களுடன் இந்திரா 15 நிமிடம் பேசி எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டு அறிந் தார். மொத்தம் 30 நிமிடம் இருந்துவிட்டு இந்திரா காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தியை நிருபர்கள் சந்தித்தபோது நடந்த கேள்வி - பதில் :.
கேள்வி:- எம்.ஜி.ஆர். உடல் நிலை எப்படி இருக்கிறது?
பதில்:-அவரை பார்க்கப்போன எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். "நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றை சமாளித்து இருக்கிறீர்கள்.
அதுபோல இப்போது மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல் லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் விரைவில் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்" என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார்.
நாங்கள் அவர் இருக்கிற அறைக்கு போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள்.
கேள்வி:- மேற்கொண்டு சிகிச்சைக்காக எம்.ஜி.ஆர். வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரா?
பதில்:-வெளிநாட்டு மருத்துவ நிபுணர்கள் வருகிறார்கள். எம்.ஜி.ஆரை பரிசோதித்துவிட்டு, அவரை வெளி நாட்டுக்கு கொண்டுபோகவேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது." என்று இந்திராகாந்தி கூறினார்.
பின்னர் அமைச்சர் ஹண்டேயையும் இந்திரா டெல்லிக்கு அழைத்துச்சென்றார் -சில சுப்பீரியர் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யதான்.
ஆந்திர முதல் மந்திரி என்.டி.ராமராவ், கர்நாடக முதல் மந்திரி ஹெக்டே, மத்திய மந்திரிகள் பலர் எம்.ஜி.ஆர். உடல் நிலைபற்றி விசாரித்தபடி இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர்.
அக்டோபர் 17ந்தேதி காலையில் எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க அமெரிக்காவில் இருந்து டாக்டர் பிரீட்மேன் (நியூயார்க் நகரில் புரூக்லீன் என்ற இடத்தில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனை சிறுநீரகப் பிரிவு தலைவர்), டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் (வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர்), டாக்டர் ஸ்ரீபரதராவ் (புருக்லீன் டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரி டயாலிசீஸ் பிரிவு டைரக்டர்), டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர் (டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர்) ஆகியோர் சென்னை வந்தார்கள்.
அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த அவர்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே வரவேற்று தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். காலை 8.20 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அமெரிக்க டாக்டர்கள் வந்து எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர்.
பின்பு இதுவரை சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்பு அமெரிக்க டாக்டர்களை நிருபர்கள் மீட் பண்ணிய போது,””எம்.ஜி.ஆருக்கு சர்க்கரை வியாதி, சிறுநீரக கோளாறு ஆகியவை உள்ளன. வலதுபுற கை, கால் செயல் இழந்து உள்ளன.
இங்குள்ள டாக்டர்கள் சிறப்பாக அளித்த சிகிச்சையால் அவரது உயிரை காப்பாற்றி குணம் அடையும் பாதையில் செல்ல வழிவகுத்துள்ளன. மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்.”இவ்வாறு டாக்டர்கள் கூறினார்கள்.....
டாக்டர் பிரீட்மேன் கூறும்போது, "எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறினார். டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள்.
அமெரிக்க டாக்டர் பிரீட்மேன் அமெரிக்கா புறப்படும் முன்பு விசேஷ பேட்டி அளித்தார். "எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். பழைய நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையை தொடர முடியும்.
அவர் 67 வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால்நடக்கமுடியும்" என்று கூறினார்.
🎯ஆனால் திடீரென்று எம்.ஜி.ஆரின் மூளையில் ஒரு கட்டி ஏற்ப்படிருப்பதாகவும் அந்த ரத்தக்கட்டியை கரைப்பதற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானிய நிபுணர்கள் கானு, நகமோரா ஆகியோர் தனி விமானம் மூலம் 20_ந்தேதி சென்னை வந்தார்கள்.
காலை 7.45 மணிக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள். எம்.ஜி.ஆர். அறைக்குச்சென்று அவருடைய உடல் நிலையை பரிசோதித்தனர். மொத்தம் 2 மணி நேரம் பரிசோதனை நடந்தது. எம்.ஜி.ஆரின் மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக்கட்டியை கரைக்க அறுவை சிகிச்சை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தனர். அதுவும் அவரை வெளிநாட்டுக்கு அழைத்து போய் பண்ன திட்டமிட்டார்கள்
அதாவது இன்னும் சில வாரங்கள் கழித்து "பைபாஸ்" முறையில் ரத்த குழாய்களில் ஒட்டு அறுவை சிகிச்சை பெறச்செய்து மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது பற்றி சிந்திப்பதாகவும் ஜப்பான் டாக்டர்கள் தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜப்பானில் இருந்து சில முக்கியமான மருந்துகளையும் ஜப்பான் டாக்டர்கள் கொண்டு வந்தார்கள். மூளையில் உள்ள வீக்கத்தை குறைக்க அவர்கள் கொண்டு வந்த "கிளிசரால்" என்ற மருந்து எம்.ஜி.ஆர். உடலில் ஏற்றப்பட்டது.
மேலும் விமானப்பயணத்தை எம்.ஜி.ஆர். உடல் தாங்குவ தற்கான விசேஷ மருந்தும் ஜப்பானில் இருந்து வர வழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு வாரம் சென்று மீண்டும் வருவதாக கூறிவிட்டு டாக்டர்கள் கானு, நகமோரா ஆகியோர் ஜப்பானுக்கு புறப்பட்டுச் சென்றார்கள். எம்.ஜி.ஆர். மீது பற்றும், பாசமும் கொண்ட 10க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அதிர்ச்சியால் தீக்குளித்தும், தற்கொலை செய்தும் மாண்டனர். கோவையைச் சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டார்.
எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி கவர்னர் குரானா திருப்பதி சென்று, பிரார்த்தனை செய்தார். கிறிஸ்தவ ஆலயம், மசூதி மற்றும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடந்தது. ஏராளமான பேர் பாதயாத்திரை சென்று வழிபாடு நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வெளிமாவட்ட சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். எம்.ஜி.ஆர். சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அவருடன் அன்பழகன், துரைமுருகன், அன்பில் தர்மலிங்கம், டி.ஆர்.பாலு, நீலநாராயணன் ஆகியோரும் சென்றனர். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், டாக்டர்கள் ஆகியோரை கருணாநிதி சந்தித்து எம்.ஜி.ஆர். உடல் நிலை குறித்து விசாரித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனும் ஆஸ்பத்திரிக்குச் சென்று விசாரித்தார். இதற்கிடையே எம்.ஜி.ஆரிடம் இருந்த இலாகாக்களை, அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார் என்று கவர்னர் குரானா அறிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 அன்று டெல்லியில் அவருடைய மெய்க்காவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி புதிய பிரதமராக பதவி ஏற்றார். எம்.ஜி.ஆரின் உடல் நிலையைக் கருதி, இந்திரா காந்தி மரணம் அடைந்தது பற்றி, அவரிடம் தெரிவிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகிவிட்டது. விமானப் பயணம் செய்யும் அளவுக்கு, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்காக எம்.ஜி. ஆருக்கு ஜப்பானில் அறுவை சிகிச்சை செய்ய முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது அல்லவா?.
அதையொட்டி எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதிக்க ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் 3ந்தேதி சென்னை வந்தார். எம்.ஜி.ஆரை பரிசோதித்து விட்டு, "எம்.ஜி.ஆரின் மூளையில் இருந்த வீக்கம் முழுவதுமாக நீங்கிவிட்டதால் அவருக்கு ஆபரேஷன் தேவை இல்லை" என்று அறிவித்தார். எனவே, மூளை ஆபரேஷனுக்காக எம்.ஜி.ஆரை ஜப்பானுக்கு கொண்டு செல்லும் யோசனை கைவிடப்பட்டது.
ஆனாலும், சிறுநீரக சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடந் தன. அமெரிக்காவில் நிïயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மருத்துவமனை சிறுநீரக கோளாறுக்காக, சிகிச்சை அளிப்பதில் உலகப்புகழ் பெற்றதாகும். அந்த ஆஸ்பத்திரியில்தான் எம்.ஜி. ஆருக்கு ஆபரேஷன் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஒரு சிறிய ஆஸ்பத்திரி போன்று அமைக்கப்பட்ட விசேஷ விமானம் தயாரானது. அந்த `போயிங்' ரக விசேஷ விமானம் 4_ந்தேதி சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த விமானத்தில் இருக்கைகள் அகற்றப்பட்டு படுக்கை வசதி, ரத்த சுத்திகரிப்பு (டயாலிசீஸ்) கருவிகள், ரத்தப்பரி சோதனை கருவி, பிராணவாயு சிலிண்டர்கள் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
விமானம் பறக்கும்போது சிகிச்சை கருவிகள் சரிவர இயங்குகின்றனவா? என்று பரிசோதிக்க இந்த விமானம் 70 நிமிடம் வானத்தில் சென்னை நகரை சுற்றி பறந்தது. பின்னர் தரை இறக்கப்பட்டு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தி சார்பில் மந்திரி நரசிம்மராவ், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மூப்பனார், ஜி.பார்த்தசாரதி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தார்கள்.
ஆஸ்பத்திரிக்கு சென்று எம்.ஜி.ஆரை பார்த்தார்கள். ராஜீவ் காந்தியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்கள். இதையடுத்து *இதே* 5.11.1984 இரவு 9.05 மணிக்கு எம்.ஜி.ஆரை `ஆம்புலன்ஸ்' வேன் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆம்புலன்ஸ் வண்டியின் கண்ணாடி ஜன்னல்களின் திரை தொங்கவிடப்பட்டிருந்தது.
இருபுறமும் போலீஸ் ஜீப்புகள் சென்றன. ஜானகி அம்மாள், டாக்டர்கள், நர்சுகள் உடன் சென்றனர். இரவு 9.55 மணிக்கு ஆம்பு லன்ஸ் வேன் விமான நிலை யத்தை அடைந்தது. அங்கு அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் காத்திருந்த னர். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, அவர் மனைவி மீனா அம்மாள் மற்றும் குடும்பத்தினர் நின்று கொண்டு இருந்தனர்.
விமானத்தின் அருகில் கவர்னர் குரானா, அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோர் சென்றனர். விமானம் அருகே ஆம்புலன்ஸ் வேன் சென்றதும் எம்.ஜி.ஆர். இருந்த தூக்குப் படுக்கையை (ஸ்டிரெச்சர்) இயந்திர கருவி மூலம் அப்படியே தூக்கி விமானத்துக்குள்ளே வைத்தார்கள். சரியாக இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது.
பின்னர் இந்திய நேரப்படி 6.ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நிïயார்க் நகரத்தை அடைந்தது. அமெரிக்க டாக்டர்கள் விமானத்துக்குள் சென்று எம்.ஜி.ஆர். உடல் நிலையை பரிசோதித்தனர். அவர் உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் எம்.ஜி.ஆர். ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். அங்கு ஏற்கனவே அவருக்காக தயார் செய்து வைக்கப்பட்ட அறையில் அனுமதிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியின் 5 வது மாடியில் எம்.ஜி.ஆர். இருந்தார்.
10ந்தேதி எம்.ஜி.ஆரை சாய்வு நாற்காலியில் அமர வைத்தார்கள். 2 மணி நேரம் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்ததாக அமெரிக்காவில் இருந்து தகவல் வந்தது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.😍............ Thanks.........
பெற்றால் தான் பிள்ளையா ?
___________________
காமராஜர் அரங்கத்தில் சத்யராஜ் அவர்கள் கூறியது !
இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... இந்தப் பக்கம் ஒரு டி வி வைப்பா... ஒரு டி வி யில் உலகிலுள்ள அனைத்து நடிகர்களின் இதை மூன்று முறை சொன்னாா் உணர்ச்சிமயமான காட்சியை போடுங்கப்பா...
இந்தப் பக்கம் உள்ள டி வி யில் மக்கள் திலகம் குழந்தைக்காக வாதடற உணர்ச்சிகரமான காட்சியை போடுங்கப்பா... அப்பறம் பாருங்கப்பா...என்று சொல்ல அரங்கம் இடிந்து விழந்திடுமோ ...என்ற அச்சத்தை ஏற்படுத்தும் கைதட்டல் ...
என் கரங்களும் சிவந்தன என சொல்லத்தான் வேணுமோ ?.........
........... Thanks.........
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்..
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!
வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.
ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.
காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.
(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)
இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.
இப்படக் கதை செல்லும்.
பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.
மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.
சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.
தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.
இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.
அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.
படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!
வாருங்கள்!
(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)
நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}
இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….
நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!
சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.
நரசப்பன்: அரசே!
சொக்கன்: போவாயாக.
(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)
பொம்மண்ணன்: மன்னா!
சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.
பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.
சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.
{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}
இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.
ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!
பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.
திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!
வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!
அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?
‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!
திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!
வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!
பார்த்தீர்களா! படித்தீர்களா?
நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!
இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?
இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.
மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.
கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!
கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.
இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.
தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!
1956 – ஆம் ஆண்டில் புட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-
கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.
1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.
பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.
1961, 1964 – ஆம் ஆண்டுகிளல் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.
1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.
1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.
1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...
கண்ணதாசனும் எம்.ஜி.ஆரும்..
தமிழ்த் திரையுலகில் கதை வசனங்களில் பெரும் மற்றங்களை ஏற்படுத்திய சிலருள் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரே எனலாம்.
“வசனத் துறையில் எனக்கென்று ஒரு தனி பாணி உண்டு. சமூகக் கதைகளைவிட சரித்திரக் கதைகளிலே அதை நிறைவேற்ற வாய்ப்புண்டு.”
இவ்வாறு, கவியரசரே, ‘எனது சுயசரிதம்’ என்ற நூலில் எழுதியிருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது எனலாம்.
மக்கள் மனங்களைக் கவர்ந்த மதுரைவீரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான வெற்றிப்படம் ‘மதுரைவீரன்’. இதற்கான திரைக்கதை வசனத்தைத் தீட்டியவர் கவியரசர் கண்ணதாசனே. இப்படத்தில் சில அற்புதமான பாடல்களையும் கவியரசரே எழுதினார்.
‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சிதம்பரம் லேனா செட்டியார் தயாரித்த இப்படத்தை, டி. போகானந்த் இயக்கினார்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மதுரை வீரன்’ திரைக்காவியம், தமிழகத்தில் முதன்முதலில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலான மகத்தான வெற்றிப்படமாக மகுடத்தைச் சூட்டியது.
தமிழகத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் முதன் முறையாக நூறு நாட்களுக்கும் மேலாக ஓடிய பெருமையினையும் இந்தப் படமே பெற்றது.
அம்மட்டோ! அக்காலத்தில், ‘டூரிங் டாக்கீஸ்’ என்று அழைக்கப்பட்ட, தென்னங்கீற்று வேய்ந்த திரையரங்குகள் பலவற்றிலும் ‘மதுரை வீரன்’ படம் ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தியது.
இன்னும் என்ன என்ன சாதனைகளை ‘மதுரைவீரன்’ என்ற திரைக்காவியம் நிகழ்த்தியது என்கிறீர்களா?
சொன்னால் பட்டியல் நீளும்! சுருங்கக் காண்போமாக!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மாநகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய திரைப்படம் மதுரைவீரன்! ஆம் காஞ்சிபுரம், முருகன் திரையரங்கில் தொடர்ந்து, மூன்று காட்சிகளாக 157 நாட்கள் ஓடி சாதனை படைத்த ஒரே படம் ‘மதுரைவீரன்’ தான்.
செங்கல்பட்டு நகரில் 84 நாட்கள் ஓடிய முதல் படம் ‘மதுரைவீரன்’ தான். திருமலை திரையரங்கில்தான் இச்சாதனை நிகழ்ந்தது.
1956 – இல், குறைந்த ‘ மக்கள் தொகை கொண்ட ஆம்பூர் நகரில், அதிக நாட்கள் (85) நாட்கள்) ஓடிய படமும் மதுரைவீரனே.
பூவிருந்தவல்லி ‘விக்னேஸ்’ திரையரங்கில் அதிக நாட்கள் (85 நாட்கள்) ஓடி வெற்றி முத்திரையைப் பதித்த படமும் மதுரைவீரனே.
கும்பகோணம் நகரில் முதன்முதலாக நூறு நாட்கள் ஓடிய ஒரே படமும ‘மதுரைவீரன்’தான். டைமண்ட் டாக்கீஸில் 119 நாட்கள் ஓடி புதிய சாதனை படைத்தது.
இவ்வளவுதானா என்கீர்களா? ஒரு படத்தைப் பற்றி இப்படியொரு பெருமிதமா என்பீர்கள்? இன்றைய நிலையில், பரபரப்பான தொலைக்காட்சிகளின் விளம்பரங்களுக்கிடையில், ஏதேனும் ஒரு திரையரங்கில் பகல் காட்சியாகப் படத்தை ஓட்டி நூறுநாள் விளம்பரப் போஸ்டர்களை ஒட்டும் போக்கை நாம் பார்க்கிறோம்.
ஆனால், பத்திரிகை விளம்பரங்களே பற்றாக்குறையாக இருந்த 1956 – ஆம் ஆண்டு காலகட்டத்தில், சின்னஞ்சிறிய நகரங்களான பழனி, பொள்ளாச்சி, ஊட்டி, புதுக்கோட்டை, நாமக்கல், ஆத்தூர், பவானி, மன்னார்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, காஞ்சிபுரம், கும்பகோணம், திருவாரூர், கம்பம், போடி, பரமக்குடி, மாயவரம், கடலூர், கரூர், நாகர்கோவில், விருதுநகர், விழுப்புரம் போன்ற பல இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி ஒப்பற்ற உலக சாதனையை நிகழ்த்திய ‘மதுரைவீரன்’ படத்தைப் போற்றிப் புகழாமல் இருக்க முடியுமா? சொல்லுங்கள்.
இத்துடன், மாவட்டத் தலைநகர்களிலும் மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மதுரைவீரன் திரைப்படம், சென்னை, மாநகரில் முதன்முதலாக, திரையிடப்பட்ட சித்ரா, பிரபாத், சரஸ்வதி, காமதேனு ஆகிய நான்கு திரையரங்குகளிலும் தொடர்ந்து நூறுநாட்கள் ஓடிச் சாதனைச் சரித்திரமே படைத்தது.
மதுரை மாநகர் சென்ரல் திரையரங்கில் ‘மதுரைவீரன்’ இருநூறு நாட்கள் ஓடி இமாலயச் சாதனை படைத்தது. இதற்கான வெற்றிவிழா, வெள்ளிவிழா மதுரை மாநகரில், மகத்தான முறையில் நடைபெற்றது. புரட்சி நடிகர் கலந்துகொண்ட இவ்விழாவில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.
திரையரங்கு சார்பிலும், மதுரை மாவட்டத்தின் சார்பிலும் மக்கள் திலகத்திற்கு வெள்ளிக்கேடயமும், வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டன.
இத்தகைய சிறப்புகள் பெறுவதற்கான காரணங்கள் யாவை? மதுரைவீரன் திரைக்காவியத்தைப் பற்றி ஆய்ந்தால் தெரிந்துவிடுமே! ஆய்வோமே!
வாரணவாசிப் பாளையம் – அரசன் துளசி அய்யா – பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லை – தவிப்பு – ஆண்டவன் அருளால், ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தை ஆனான்.
ஆனால், நிமித்திகர் ஒருவர் அரசனைப் பார்த்து, ‘மாலை சுற்றிப் பிறந்த குழந்தை மன்னர் பரம்பரைக்கும், அரண்மனைக்கும் ஆபத்தை விளைவிக்கும்’ என்று கூறக் குழந்தை, காட்டில் கொண்டுவிடப்படுகிறது.
காட்டில் விடப்பட்ட குழந்தையை, நாகமும், யானையும் காப்பாற்றி வருகின்றன. அந்நிலையில் அங்கு வந்த சக்கிலியர் இனத்தைச் சேர்ந்த சின்னானும், அவன் மனைவியும் அக்குழந்தையை எடுத்துச் சென்று ‘வீரன்’ என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். வளர்ந்து பெரியவனான ‘வீரன்’ தன் பெயருக்கு ஏற்றாற்போல பெரிய வீரனாகிறான்.
(இந்தப் பெரிய வீரனாக, மதுரை வீரனாக மக்கள் திலகம் எம்ஜி.ஆரும்; சின்னானாக்க் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும், அவரது மனைவி செல்வியாக டி.ஏ. மதுரமும் நடித்தார்கள்)
இதன் பின்னர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொட்டியம் பாளையம் இளவரசி பொம்மியை வீரன் காப்பாற்ற முறைமாமன் நரசப்பன் தானே காப்பாற்றியதாகக் கூறுகிறான். பாளையக்கார பொம்மண்ணன் மகிழ்கிறான். ஆனாலும் பொம்மியின் மனம் வீரனிடம் பறிபோகிறது.
இப்படக் கதை செல்லும்.
பொம்மியாக நடிப்பின் இலக்கணமாம் பி. பானுமதியும், நாரசப்பனாக நடிப்பின் நாயகன் டி.எஆ. பாலையாவும் நடித்தார்கள்.
மதுரை மன்னனாகோ.ஏ.கே தேவரும்; அரண்மனை நாட்டியக்காரியாக நாட்டியப் பேரொளி பத்மினியும் நடித்திருந்தனர்.
சிக்கலான கதையை, மக்கள் ஜீரணித்து, ஏற்றுக்கொண்டு, ஏகோபித்த வெற்றியைத் தேடித்தந்ததற்குக் காரணமே கவியரசரின் திரைக்கதை அமைப்பும்; கருத்தைக் கவரும் வசனங்களுமே எனலாம்.
தாழ்த்தப்பட்ட ஓர் இனத்தின் பெருமையை, அருமையாக உயர்த்திக் காட்டி, தமிழ்த்திரையுலகில் அரும்பெரும் சாதனையை நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுக் காவியமே மதுரைவீரன் எனலாம்.
இப்படத்தில், புரட்சிநடிகரின் இயற்கையான நடிப்பிற்கு உலக அளவில் பெரும் பாராட்டுகள் கிட்டின என்பதனையும் நாம் மறந்துவிட இயலாது.
அந்த அளவிற்குக் கண்ணதானின் திரைக்கதை – வசனம் பெரும்துணையாய், மதுரைவீரன் படத்திற்கு அமைந்திருந்தன.
படத்தில் இடம்பெற்ற காலத்தின் கொடையான இனிய தமிழ் வசனங்களில் இருந்து, சில வரிகளை வாசித்துப் பார்ப்போமா!
வாருங்கள்!
(பொம்மியோடு தப்பிவிட்ட மதுரைவீரன், பாளைய அதிபதி பொம்மண்ணனின் வேண்டுகோளின்படி, திருச்சி மன்னன் விஜயரங்க சொக்கன் வீரர்களால் கைது செய்யப்பட்டு பொம்மியோடு விசாரணை மன்றத்தில் நிறுத்தப்படுகிறான்)
நரசப்பன்; பேரரசின் பிரதிநிதிகளே! பெருமக்களே! குற்றம் சாட்டப்பட்டு நிற்பவன் குலத்திலே சக்கிலியன்; நம் போன்றாரிடம் பேசுவதென்றால் கூட எட்டி நின்று பேச மட்டுமே அருகதையுடையவன். இவன் காதலித்தான், அது முதல் தவறு.
மன்னன் சொக்கன்: என்ன? காதலித்ததே தவறா?
நரசப்பன்: உம்..ம். மன்னன் மகளைக் காதலித்தான். அது முதல் தவறு. அரண்மனைக் கன்னிமாடத்துக்குள் புகுந்தான். அது இரண்டாவது தவறு. கொற்றவன் பெற்ற குலக்கொடியைக் கூசாமல் தூக்கிச் சென்றான். அது மூன்றாவது தவறு. எதிர்த்து வந்தோரை அடித்தான். ஏனென்று கேட்டோரைக் கொன்றான். கீழ்மகன் இவ்வளவு அநியாயங்களைச் செய்வதா? பொறுக்க முடியுமா, அரசே! ஆகவே இந்தத் தீயவனுக்குத் தக்க தண்டனே விதித்துத் தீர்ப்பளிக்குமாறு மன்னரைக் கேட்டுக் கொள்கிறேன்.
மன்னன் சொக்கன்: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் உன் பதில்?
வீரன்: ஒரே பதில்! கண்டேன். கண்டாள். காதலித்தோம்! கட்டுண்டோம்! பொறுத்திருந்தோம்! காலம் வந்தது; தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: தூக்கிச் சென்றது குற்றம் என்கிறார் நரசப்பன்.
வீரன்: இல்லை!
சொக்கன்: எப்படி?
வீரன்: கேட்டால் கொடுக்கமாட்டாரே! அதனால் தூக்கிச் சென்றேன்.
சொக்கன்: நீதான் கீழ்மகயிற்றே. கேட்டால் எப்படிக் கொட்ப்பார் என்பது நரசப்பன் வாதம்!
வீரன்: கீழ்மகனா? ‘இட்டார் பெரியோர்! இடாதார் இழிகுஙத்தோர்!’ என்ற இரண்டே ஜாதிகள்தான் உண்டு என்பது பள்ளிப்பாடம். இவர் நிழலுக்காவது பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி இருந்தால்தானே மன்னா! எங்கள் இருவர் உடலிலிருந்தும் ரத்தத்தை எடுத்துச் சோதியுங்கள். அதிலே கீழ்மகன், மேல்மகனென்று பேதம் தெரிகிறதா என்று பாருங்கள்!
நரசப்பன்: ஐயய்யோ வேண்டாம் மன்னா! அந்தப் பரீட்சை! அவன் கீழ்ச்சாதிக்காரன் என்பது பிறப்போடு வந்த வழி…
வீரன்: இல்லை! உன் போன்ற பித்தர்கள் செய்த சதி!
{பருகினீர்களா? வளமான தமிழ் வசனங்களை… அறிவுக்கு விருந்தாகும், மருந்தாகும் இந்த வசனங்களை மறக்க முடியுமா?}
இப்படியே நீளும் வாதங்களின் முடிவில்….
நரசப்பன்: தீச்செயல் பல செய்த இவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம்! ஆனாலும், போகட்டும் ஆயுள்தண்டனை விதியுங்கள்!
சொக்கன்: ஆம். ஆயுள் தண்டனை! அதிலிருந்து தப்ப முடியாது. இன்றுமுதல் பொம்மியின் மனச்சிறையில் ஆயுள் முழுவதும் கிடந்து சாவாயாக! அதோடு நமது தளபதியும் ஆவாயாக.
நரசப்பன்: அரசே!
சொக்கன்: போவாயாக.
(இந்த வசனங்கள் வரும்போது, திரையரங்குகளில் எழுந்த சிரிப்பொலியும், கரவொலியும் அடேயப்பா! எத்துனை ஆரவாரமானது.)
பொம்மண்ணன்: மன்னா!
சொக்கன்: பொம்மண்ணா! கறந்த பால் மடி புகாது. இயற்கையாகக் கலந்துவிட்ட அவர்களை, இனிப் பிரித்தாலும் உமது மகள் கன்னித்தன்மை பெறமுடியாது.
பொம்மண்ணன்: ஆனாலும் அவன் கீழ்ச்சாதி.
சொக்கன்: சாதி என்பது மனிதன் வகுத்த அநீதி! அதை மாற்றிக் கொள்வதுதான் நீதி! காலம் மாறி வருகிறது! எல்லோரும் ஓரு குலமு என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறது. அதற்கு நாம் அச்சாரம் போடுகிறோம் இன்று! அந்தப் பெருமையில் நீரும் பங்கு கொள்ளும்.
{கேட்டீர்களா? சாதி எனும் தீயை அணைக்கத் தேன்தமிழில், நம் தீஞ்சுவைக் கவிஞர் தீட்டித் தந்த தெளிவான வசனங்களை…!}
இப்படியே நம் இதயங்களை ஈர்க்கும் வசனங்கையே பார்த்துச் சென்றால், மதுரைவீரன் வசனங்கள் மட்டுமே நூலை நிரப்பிவிடும். பின்னர், ‘கண்ணதாசன் பார்வையில் எம்.ஜி.ஆர் என்ற கருத்துகளைக் காண இயலாமல் போய்விடும்.
ஆதலால் மதுரைவீரனுக்கு மாறுகால், மாறுகை வாங்குமறு தீர்ப்பளித்த திருமலை மன்னனை நோக்கி பொம்மியும், வெள்ளையம்மாளும் பேசுமாறு, கவியரசர் புவி புகழத் தீட்டிய வசனங்களின் ஓரிரு பகுதிகளை மட்டும் பார்த்துவிட்டு ஏனைய கருத்துகளைக் காண்போமே!
பொம்மி: நீதான் மதுரை மன்னனா? வா! ஏன் வந்தாய்? எதற்காக வந்தாய்? கொலை புரியும் காட்சியைக் கண்டுகளிக்க வந்தாயா? அக்கிரமத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்ட ஆனந்தத்திலே ஓடி வந்தாயா? தாவி வந்த குழந்தையின் கன்னத்தைக் கடித்தாயே! மனம் திறந்து உண்மையைக் கூறியும் கடும் தண்டனை விதித்தாயே! சாவு எப்படி இருக்கிறது என்று கார்க்க வேண்டுமா? பார்! பார்! பாவி பார்! கண்கெட்ட உன் ஆட்சியின் பெருமையைக் காப்பாற்ற ஓடுவந்த கால்களைப் பார். சுற்றி வரும் எதிரிகளை தூகாக்குவேன் என்று கத்தி எடுத்த கைகளைப் பார்! ரத்த வெள்ளத்தில் மிதக்கும் அந்த சுத்த வீரனைப் பார்! மாலையிட்ட மணவாளன் அங்கே! ஆலையிட்ட கரும்பாக அவதிப்படும் நான் இங்கே! நீதி எங்கே? நியாயம் எங்கே? நாடு ஆளும் மன்னவனா நீ? நடுநிசியில் கொலை புரியும் கள்ளனுக்கும், உனக்கும் என்ன பேதம்? போ! போய்விடு.
திருமலை மன்னன்: ஐயோ! தவறு நடந்துவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்! எல்லாம் அவன் செயல்!
வெள்ளையம்மாள்: அழு! நன்றாக அழு! தொண்டை அடைத்துப் போகும் அளவுக்கு அழு! ஆற்றாது அலறும் இந்த அபலைப் பெண்கள் தனியாகவே அழுவது? நீயும் கூட, சேர்ந்து அழு! அநியாயத்தின் உருவமே! சாகப்போகும் போதாவது உன் கண்கள் திறந்தன. அந்தக் கண்களிலே ஒளியிருக்கிறதா? இருந்தால் பார்! தேம்பி அழும் இந்தப் பச்சைப் பசுங்கிளியைப் பார்! நான்கு புறமும் வேடர் சூழ நடுவில் சிக்கிய மான்போல தவிக்கும் இந்த இல்லறச் செல்வியைப் பார்! மாலை இழந்து, மஞ்சள் அழிந்து, கூந்தல் அவிழ்ந்து, குங்குமம் கலைந்து, பச்சைப் பருவத்திலே பட்டுப்போன மரத்தைப் பார்! பார் மன்னா! நன்றாகப் பார்!
அன்பு தவழும் கணவன் முகத்தை ஆசையோடு பார்க்கவேண்டிய கண்கள். அதிலே ஆறாக ஓடும் கண்ணீர்! அத்தான்! அத்தான்!’ என்று பாசத்தோடு அழைக்கவேண்டிய உதடுகள்! அதிலை சோகத்தின் துடிதுடிப்பு! நீதியற்ற மன்னவனே! உன் ஒரு வார்த்தையிலே உயிரற்ற நடைப்பிணமாகி விட்ட இந்த உத்தமியைப் பார்! ஏன் அசையாமல் நிற்கிறாய்?
‘வீடு தட்டி வந்த கள்வன் யார்?’ என்று கேட்க, ‘தட்டியவன் நானே!’ என்று, வெட்டி வீழ்த்திக் கொண்டான் கையை, பொற்கைப் பாண்டியன். குற்றமற்ற கோவலனைக் கொலை செய்தோம் என்பதை உணர்ந்ததும், சிங்காதனத்திலிருந்து வீழ்ந்து உயிர்விட்டான் பாண்டியன் நெடுஞ்செழியன். கன்றைக் கொன்றான் சோழமன்னன். கற்பு நிறைந்த மணிமேகலையைக் கெடுக்க முயன்றான் மகன் என்று தெரிந்ததும், ‘ஊரார் கொன்று விட்டார்களே! அவனை நானல்லவா கொன்றிருக்க வேண்டும்!’ என்று நீதி முரசு எழுப்பினான் பூம்புகார்ச் சோழன். ஏன்? ஆண்டி முதல் அரசர் வரை ஒரே நீதி வழங்கியதே மூவேந்தர் பரம்பரை! அந்தச் சிங்காசனத்திலே நீ! அந்தச் சிங்கனத்திலே நீ!
திருமலை மன்னன்: இல்லை! பிறழாத நீதி பிறழ்ந்தது! வளையாத செங்கோல் வளைந்தது! என்னைக் கெடுத்துவிட்டார்கள் சண்டாளர்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!
வெள்ளையம்மாள்: மன்னிப்பு! வானகமே! வையகமே! வளர்ந்து வரும் தாயகமே! ஆராய்ச்சி மணி கட்டிப் போர்க்களத்திலே சிரிக்கின்ற பொன் மதுரை மண்டலமே! மறையப்போகிறது ஒரு மாபெரும் ஜீவன்! மன்னிப்புக் கேட்கிறார் திருமலை மன்னர்! மாபாதகம் தீர்க்க மண்டியிடுகிறார் திருமலை மன்னர்! மன்னியுங்கள்! மன்னா போ! அவர் காலிலே விழு! புரண்டு அழு! கண்ணீரால் உன் களங்கத்தைக் கழுவு! போ! போ! போ!
பார்த்தீர்களா! படித்தீர்களா?
நம் இதயங்களை, இலக்கியச் சொல்லோவியங்களால், மூவேந்தர் ஆண்டிருந்த காலத்து நீதிமுறைகளைச் சொல்லிச் சொல்லிச் சொக்க வைக்கும் கண்ணதாசனின் கருத்துக் கருவூலங்களை…..!
இரண்டு மாதரசிகள் மூலம் மதுரை மன்னனுக்கு நீதியைப் புகட்டி, மதுரைவீரனின் மங்காத புகழை, மக்கள் மனங்களில் நிலையிறுத்திக் காட்டும் கண்ணதாசனின் உணர்ச்சிப்பிழம்பான, உணர்வுப்பூர்வமான வசன ஓட்டங்கள்… ஆடாத நெஞ்சங்களையும் ஆண்டி வைக்கும் ஆற்றல் பெற்றன அல்லவா?
இந்த வசனங்கள்தான், இன்றும் தென்பாண்டி நாட்டிலை, மதுரைவீரனைத் தெய்வதமாக நிரந்தரமாக வணங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்பது உண்மையிலும் உயர்ந்த உண்மையாகும்.
மதுரைவீரனாக நடித்த மக்கள் திலகம், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் புகழை மென்மேலும் உயரச் செய்த்தோடு, தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சங்களில் எம்.ஜி.ஆர். எனும் பெயரைத் தாரக மந்திரமாக்கி உச்சரிக்க வழிவகுத்துத் தந்ததும் கண்ணதாசனின் கருத்தோட்டத்தில் எழுந்த எழுச்சிமிக்க வசனங்ளே என்பதும் உண்மையே.
கவிஞர் வசனங்கள் எழுதிய எம்.ஜி.ஆரின் காவியங்கள்!
கவியரசர் கண்ணதாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதலில் 1954 – ஆம் ஆண்டு ‘இல்லற ஜோதி’ என்ற திரைப்படம் வெளிவந்தது. இலக்கிய ரசனையும், தன்னிகரற்ற தமிழ்நசயமும் மிகுந்த வசனங்கள் இடம் பெற்றிருந்தும் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை.
1956 – ஆம் ஆண்டில், கவியரசரே பெருமிதப்படும் வசனங்கள் அமைந்திருந்த ‘நானே ராஜா’ படமும் வெற்றிக்கனியைப் பறித்துத் தரவில்லை. இதே ஆண்டில் கவிஞரின் திரைக்கதை வசனத்தில் வெளியான ‘தெனாலிராமன்’ படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மூன்றிலும் நடிகர்திலகம் சிவாஜிகணேசனே நடித்திருந்தார்.
இருப்பினும் இதே 1956 – ஆம் ஆண்டில் கண்ணதாசனின் திரைக்கதை வசனத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘மதுரைவீரன்’ திரைப்படமோ மாபெரும் வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. இதனால், கவிஞரின் புகழும், எம்.ஜி.ஆரின் மகோன்னத வெற்றியும் மக்களால் மாறி மாறி பேசப்பட்டது. இப்படம் குறித்த செய்திகளை முன்னரே பார்த்தோம்.
1956 – ஆம் ஆண்டிலேயே சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரால் தொடங்கப்பெற்ற தேவர் பிலிம்ஸாரின் முதல் படமான ‘தாய்க்குப் பின் தாரம்’ கண்ணதாசனின் வசனத்திலேயே வளர்ந்து வந்தது. கவிஞர் ‘திர்க்கோஷ்டியூர்’ தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட நேர்ந்ததாலும், கழகப்பணிகளில் பெரும் நேரம் செலவிட்டதாலும் கவிஞரின் உதவியாளர் ச. அய்யாப்பிள்ளை அப்படத்தின் வசனங்களைத் தொடர்ந்து எழுதினார். இருப்பினும் கவிஞரின் மேற்பார்வையில் வசனங்கள் மெருகூட்டப்பட்டன. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த இத்திரைப்படம் மகத்தான வெற்றியைக் கண்டது.
ஆக 1956 – ஆம் ஆண்டில், கண்ணதாசன் வசனங்கள் எழுதிய படங்கள் நான்கும் பெருமைக்குரியனவாகவே வெளிவந்தன.
அதில் வரலாற்றுப் பெருமைக்குரியதாய், ‘மதுரை வீரன்’ படமும். சமூகப் பிரச்சனைகளைச் சித்தரித்து, குடும்ப உறவுகளில் ஏற்படும் பகையினால் விளையும் தீமைகளைப் பக்குவமாய்ப் பேசித் தீர்வு காண வைக்கும் படமாய்த் ‘தாய்க்குப் பின் தாரம்’ படமும் அமைந்தன.
1957 – தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
நூலில் இடம் அமைந்திடும் அளவிற்கு, நம் இதயங்களில் அவரது வசனங்கள் இதம்பெறப் பின்பு முயற்சிக்கலாம். இப்போது கவிமகன், சத்தியத்தாய் மகனுக்குத் தந்த பாராட்டை வாசிக்கலாம்.
தென்றல் ஏட்டில், சத்யத்தாய்
மகனுக்கு, கவிமகன் தந்த பாராட்டு!
கவியரசர் கண்ணதாசன், தனது தென்றல் வார இதழில் (27.10.1956 – இல்), ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ என்ற தலைப்பில் எழுதிய எழுச்சிமிகு பாராட்டுக் கடிதத்தை நாம் இப்போது படித்துப் பார்ப்போமா!
“நடிகத் தோழர்களின் சேவை, நாட்டுக்குப் பலவகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டும் அல்லாது, நாட்டின் பல்வேறு நிறுவனங்களையும் வளர்க்கும் பெருமை நடிகத் தோழர்களில் பலரைச் சாருகிறது.
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள், தன் கொடைத்திறனால் மக்கள் மன்றத்தில் பெருமதிப்புப் பெற்றவர். பிறர் கண்ணீரைக் காணச் சகியாத உள்ளம், அவர் உள்ளம். இல்லையென வருவாருக்கு, இயன்ற மட்டும் தருவது அவர் பழக்கம். கைப்பணத்திலும் ஆயிரமோ, இரண்டாயிரமோ கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
அந்த வரிசையிலே இப்பொழுது புரட்சி நடிகர் இராமச்சந்திரன் இடம் பெறுகிறார். புயல் நிவாரண நிதிக்கு அவர் வாரி வழங்கிய தன்மையை நாடறியும். இப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கும், தெற்குத் திட்டங்களத்து ஆதிதிராவிடப் பள்ளிக்கும், சென்னை தியாகராயர் கல்லூரிக்கும் முறையே ரூ 1000, 2000, 2500 நன்கொடையாகத் தந்துள்ளார். அதன்றியும் அகில இந்தியப் பெண்கள் உணவு சங்கத்தின் சென்னைக் கிளைக்கும் ரூ. 500ம் தந்துள்ளார்
வருமானம் அதிகரிக்கலாம்; புகழ் பெருகலாம். பெரிய மனிதர்கள் கூட்டுறவு ஏற்படலாம். ஆனாலும் நாராள மனது எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. கையிலிருந்து பணம் கொடுப்பது என்றாலே, கண்களில் ரத்தம் கசியும் சிலருக்கு. வந்த பணத்தை, எப்படித் தன் குடும்பத்துக்குச் சொத்தாக்குவது என்றுதான் எல்லோருமே செய்யும் உபதேசமே, ‘பணத்தைப் பத்திரமாக வைத்துக் கொள்ளப்பா’ என்பதுதான். பணம் கைக்கு வந்ததும் மடிக்கு மாறி, பெட்டிக்குள் பதுங்கப் பார்க்கிறது. ‘நாம் தொல்லைப்படும் போது, யார் நமக்குத் தருகிறார்கள்? நமக்கெதற்கு வள்ளன்மை!’ என்ற பேச்சுப் புறப்படுகிறது.
‘ஐயா பசி!’ என்று அலறுபவனைப் பார்த்து, ‘எல்லார்க்கும் அப்படித்தான்! போ! போ!’ என்று இரக்கமின்றிக் கூறத் தோன்றுகிறது. கைப்பணத்துக்கும், தன் பெண்டு பிள்ளைகளுக்குமே தொடர்பு ஏற்படுத்தி, மனம் கணக்கிடுகிறது. பெரும்பகுதி மனித மனம் இப்படி இருப்பதால்தான், ஈந்து சிவக்கும் இருகரம் படைத்தோரை வாயார வாழ்த்தத் தோன்றுகிறது.
கலைவாணர் என.எஸ்.கே, நடிப்பிசைப் புலவர் ராமசாமி, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதலியோர் நடிகர்களில் வள்ளல்கள் ஆவார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். உறுப்பினர். தீவிரமான கொள்கைகளை உறுதியாகக் கடைப்பிடிப்பவர். இலட்சோப இலட்சம் மக்களின் இதயகீதம் அவர் பெயர். சமீகத்தில் அவர் நடித்து வெளிவந்த ஐந்து படங்களும் இதுவரை படுலக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வசூலைத் தந்துள்ளன. இப்பொழுது சுமார் பதினைந்து படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டொரு படங்களில் நடிப்பதாக இருந்து கொள்கை மாறுபாட்டால் அவர் நடிக்க மறுத்ததை நாடறியும். கூமார் இரண்டு இலட்சம் ரூபாய்கள்வரை, இதனால் அவர் இழந்தார். அதற்காகத் துளியும் வருந்தியதில்லை அவர். திருச்சியிலும், மதுரையிலும் சமீபத்தில் மதுரைவீரன் 200 ஆவது நாள் விழா நடந்தபோது, அவற்றில் பேசிய எம்.ஜி.ஆர். ‘எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் என் கொள்கையை விட்டு நடிக்க மாட்டேன். தயாரிப்பாளர்கள் இருக்கும் இந்த மேடையிலேயே அதை அறுதியிட்டு உறுதியாகக் கூறுகிறேன்’, என்றார்.
நான் நடிக்கப் போகும் கதையை, முன்கூட்டியே பரிசீலித்துத்தான் நடிக்கிறார். கதைகளிலே தன் கருத்தை வெளியிட இரண்டு நடிகர்களுக்குக் கற்பனை ஓட்டம் உண்டு. ஒருவர் கலைவாணர். மற்றொருவர் புரட்சி நடிகர். இன்றையத் திரை உலகில் தலையாய நடிகர் என்ற பெருமை புரட்சி நடிகருகுக்க் கிட்டியுள்ளது. தென்இந்திய நடிகர் சங்கத்தைத் தொடங்கி சிறப்புடன் வளர்க்கும் பெருமை இவருக்கு உண்டு. இவர் பதிப்பாசிரியராக இருந்து நடத்தி வரும் ‘நடிகன் குரல்’ என்ற மாத இதழ், சுமார் இருபத்து மூவாயிரம் பிரதிகள் செலவழிகிறது. அதில் தன் வரலாற்றை எழுதி வருகிறார்.
தி.மு.க. கழகத் தலைவர்கள் அனைவரும் இவரிடத்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள்.
நடிகர்களில், அழகாகப் பேசக்கூடியவர் இவர். இவர் புகழில் நாம் பெருமைப்பட நியாயம் இருக்கிறது. காரணம், இவர் நம் குடும்பத்துத் திடமான பிள்ளைகளில் ஒருவர்! வாழ்க!”
படித்துப் பார்த்தோம்! இவற்றிலிருந்து சத்தியத்தாய் பெற்றெடுத்த சரித்திர மகனைப் பற்றி, கவதைத்தாயின், காவியத்தாயின் மகனின் கணிப்பு சரிதானா? கொஞ்சம் சிந்திப்போமே!
1956 – ஆம் ஆண்டில் புரட்சி நடிகர் பற்றிக் கவியரசர் பார்வை:-
கலைவாணர் வரிசையிலே கொடை கொடுப்பதில் இப்பொழுது புரட்சி நடிகர் இடம்பெறுகிறார்!’ என்ற கண்ணதாசன் கருத்து, வளர்ச்சி பெற்ற வளமான உண்மையாகவே வருங்காலத்தில் உருவெடுத்தது.
1956 – ஆம் ஆண்டில் ஒரு சவரன் (பவுன்) ரூபாய் நூறுக்கும் குறைவாகவிற்றபோதே, பல்லாயிரக்கணக்கில் வாரி வாரி வழங்கிய வள்ளலே எம்.ஜி.ஆர். என்பதனை அறியும்போது, அவர் ‘மக்கள் திலகம்’ என்ற மகுடத்தைப் பெற்ற மகிமை நம் மனங்களுக்கு நன்கு புரிகிறது.
பின்னாளில் 1959 – ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவமனைகள், பள்ளிக்களுக்கு எம்.ஜி.ஆர் வாரி வழங்கிய நிதி ரூபாய் மூன்று இலட்சமாகும்.
1961, 1964 – ஆம் ஆண்டுகளில் அடையாறு ஔவை இல்லத்திற்கு வழங்கிய நிதி ரூபாய் அறுபது ஆயிரங்கள்.
1960, 61, 64 – ஆம் ஆண்டுகளில் சென்னை வெள்ளநிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் எண்பத்தைந்தாயிரம்.
1960, 62, 64 – ஆம் ஆண்டுகளில் மதுரை, தஞ்சை, திருச்சி, நகரங்களின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கிய ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1961 – ஆம் ஆண்டு ரிக் ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட்டு வாங்கி, வழங்கிடத் தந்த தொகை ரூபாய் அறுபதாயிரம்.
1962 – ஆம் ஆண்டு சீனப்படையெடுப்பின் போது எம்.ஜி.ஆர் வழங்கிய யுத்த நிதி, ரூபாய் ஒரு இலட்சமாகும்.
1964-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் தீக்குளித்த தியாகிகளுக்கு வழங்கிய நிதி ரூபாய் இருபதாயிரம். இதே ஆண்டில் பண்டிதர் நேரு பிரான் நினைவு நிதிக்கு வழங்கிய தொகை ரூபாய் இருபத்தைந்தாயிரமாகும்........... Thanks...
சார் வணக்கம்
நேற்று ஒரு பதிவு பார்த்தேன் அதைப் பற்றிய ஒரு சிறிய விளக்கம்.
1964 ஆம் ஆண்டில் வெளியான படங்களின்
வெற்றி குறித்து ஒருவர்
போட்ட பதிவை இன்னொருவர் எடுத்து
மிகவும் குஷியாக போட்டிருக்கிறார், ஏற்கெனவே முகநூலில்
திரிசூலம் படம் 6 கோடி
ரூபாய் வசூல் செய்ததாகவும், பதினொரு அரங்குகளில் வெள்ளி விழா கண்டதாகவும் ஒரு பத்திரிக்கை பதிவையும் போட்டிருந்தார் , அந்த பதிவுக்கு பதிலாக லோகநாதன் சார் கேட்டிருந்தார் வெறும் 8
அரங்குகள் வெள்ளி விழா ஓடிய திரிசூலம் படம் எப்படி 11 திரை அரங்குகள் ஆனது ? அதுவும் குறிப்பாக 1965 இல் 7 அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய " எங்க வீட்டுப் பிள்ளை" படத்தை விட ஒரு அரங்கிலாவது கூட ஓட்டி முந்தி விட வேண்டும் என்ற வெறியிலே வேலூரில்
ஒரு அரங்கில் இழுங்கப்பா இழுங்கப்பா என்று தியேட்டர் காரர்களே டயர்ட் ஆகி போகும் அளவுக்கு இழுத்து எப்படியோ இலக்கை அடைந்து விட்டோம் என்று நிம்மதிப் பெரு மூச்சு விட்டார்கள் இது
நடந்தது 1979 இல் நல்லா பார்த்துக்கோங்க ஜனங்களே 1965 படத்தை 12 வருடம் கழித்து முறியடிக்க நினைத்து சில ஜிம்னாஸ்டிக் வேலைகள் செய்து வடிவேலு காமெடி போல அஹ்ஹாஹா பார்றா பார்றா 8 தியேட்டர்ல ஓட்டிட்டோம்ல என்று தனக்குத் தானே மகிழ்ச்சி (?) அடைந்து கொண்டார்கள் ஆனால் பாருங்க இத்தனை வருடம் கழித்து முக நூலில் போடும்போது அப்படியே நைஸாக 8 அரங்கு குட்டி போட்டு 11
அரங்காகி விட்டது அது
மட்டுமல்ல அந்த பேப்பர்
விளம்பரத்தில் கூட வசூல் 2 கோடி என்றுதான் போட்டிருந்தார்கள் ஆனால் அதுவே இப்போது வட்டியும் குட்டியுமாக சேர்ந்து 6
கோடி ஆகிவிட்டது
( ஏம்ப்பா எழுதும் போது
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?) லோகநாதன் சார் இது பற்றியும் ஞான ஒளி படம் சம்பந்தமாக ஓடிய
நாட்கள் குறித்து கேட்ட
கேள்விக்கும் உத்தம புத்திரன், அரிச்சந்திர மகாராசா விடம் இருந்து
இது வரை பதில் இல்லை, சரி போகட்டும்
இப்போ அதே திரிசூலம்
பட பதிவு போட்டவரின் மற்ற ஒரு பதிவுதான் இந்த 1964 ஆம் வருடத்திய பதிவு அதை எடுத்து இன்னொரு சிங்கம் போட்டு குதூகலம் அடைந்திருக்கிறது
1964 ஆம் ஆண்டில் வெளிவந்த மக்கள் திலகத்தின் பட்டியலில்
100 நாள் ஓடிய படங்களில் தெய்வத் தாய் படத்தை தூக்கி
எங்கு போட்டாரோ தெரியவில்லை இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் சரி போகட்டும் , எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது
கர்ணன் படம் மாபெரும்
தோல்விப் படம் பந்துலுவை மீளவே முடியாத கடன் தொல்லைக்கு ஆளாக்கின படம் என்று
ஆனால் சிங்கம் திரும்பத் திரும்ப மதுரை தங்கம் அரங்கில் நூறு நாள் ஓடியது, அங்கே ஓடியது
இங்கே ஓடியது என்று
கதை அளப்பதை மட்டும்
விட்ட பாடில்லை கர்ணன் படம் படுதோல்வி அடைந்ததனால் அவசரம் அவசரமாக கால்ஷீட் கொடுத்து இந்த படமாவது ஓடி விடாதா என்ற நப்பாசையில் தயாரித்து குறுகிய கால
வெளியீடாக வந்ததுதான் இந்த முரடன் முத்து ஆனா பாருங்க இதுவும் சுருண்டு டப்பாவுக்குள்
போய் குதிரை கீழேயும்
தள்ளியது பத்தாதுன்னு
குழியும் பறித்த கதையாக ஆகிவிட்டது
நொந்து நூலாகி விட்ட
அந்த மனுஷனை இன்னும் பங்கப்பாடு படுத்தி அய்யன் சார் நோகடித்தது எல்லாம் பழைய வரலாறு ,
நடிகர் விசு ஒரு பேட்டியின் போது சொல்கிறார் நான் பயங்கர சிவாஜி ரசிகன்
கர்ணன் படம் ரிலீஸ் சமயத்தில் நாங்கள் கொஞ்ச பேர் அது ஓடும்
திரை அரங்குக்குப் போய் முதல் நாள் பார்த்த போது முதல் ஷோவுக்கு பயங்கர கூட்டம், எங்களால் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை அப்படியே வேட்டைக்காரன் ஓடும்
அரங்குக்கு போய் பார்க்கிறோம் கொஞ்சம்
கூட்டம் குறைவாகத்தான் இருந்தது எங்களுக்கெல்லாம் பயங்கர சந்தோஷம் வேட்டைக்காரன் கதை
முடிந்தது என்று எங்கள்
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம் கடைசியா
செய்தி வருது வேட்டைக்காரனுக்கு ராத்திரியே கூட்டம் கூடியதால் விடியற்காலமே படத்தை தொடங்கி விட்டதும் அடுத்த ஷோவுக்கான கூட்டம்தான் கூட ஆரம்பித்தது என்னும் உண்மை தெரிந்ததும்
நொந்து போய் விட்டோம்( இது சும்மா டிரெய்லர் தான்)
வேட்டைக்காரன் படம் வசூலை அள்ளிக் குவித்த கதையை சமீபத்தில் தமிழ் ஒன் இந்தியா இணைய பத்திரிக்கையில் பெரு.
துளசி வேல் என்பவர் கூட எழுதியிருந்தார்
அடுத்தது " நவராத்திரி"
படம் நாலு தியேட்டரில்
நூறு நாள் ஓடியதாம்
சரிதான் மறுக்கவில்லை இந்த நாலு தியேட்டரிலும் சிவாஜியின் நூறாவது
படம் எந்த காரணம் கொண்டும் அவமானப் பட்டு விடக் கூடாது என்ற ஒற்றை காரணத்துக்காக நூறு நாள் தேய்ப்பதற்கு என்ன என்ன ஏற்பாடுகள் செய்யப் பட்டது( உள்ளடி வேலைகள்) மற்றபடி விஜய லட்சுமி பிக்சர்ஸ்
சார்பாக பரிசுப் போட்டி
என்ற பெயரில் 9 சிவாஜி நடிப்பில் எந்த சிவாஜி நடிப்பு சிறந்தது
என்னும் போட்டியெல்லாம் வைத்து ( பாதி டிக்கட் வேற கண்டிப்பா இணைக்கணும்) ஏ. பி.
நாகராஜன் என்னென்ன பாடு பட்டார் என்பதை பின்னாளில் ஒரு சினிமாப் பத்திரிக்கையில் வெட்ட வெளிச்சம் ஆக்கிய கதை சிங்கத்துக்கு தெரியுமோ தெரியாதோ
தெரியல, ஏ. பி. என் அவர்கள் சொன்ன இன்னொரு செய்தி அந்த நடிகரை வைத்து எவ்வளவோ படங்கள் எடுத்தேன் ( நிறைய கலர் படங்கள்) கடைசியில் பெயரை அவர் எடுத்துக் கொண்டு போய் விட்டார் படம் எடுத்த நானோ செலவழித்த காசைக் கூட எடுக்க முடியாமல் நடுத் தெருவில் நின்றதுதான்
மிச்சம்( எல்லோரும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பேட்டி
நவரத்தினம் படம் வந்த பிறகு கொடுத்த பேட்டி
இவ்வளவுக்கும் நவரத்தினம் கொஞ்சம்
சுணங்கிதான் போனது
ஆனால் ஏ. பி. என் எவ்வளவு லாபம் சம்பாதித்தார் என்பதை
சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் பட விழாவின் போது அவர் உறவினர்
சொன்னது எல்லோருக்கும் தெரியும் அது மட்டுமல்ல நவரத்தினம்
தோல்விப் படம் என்று
சிவாஜி ரசிகர்களால்
விமர்சிக்கப் பட்ட படம்
ஆனால் இந்த 2019 வரையிலும் அடுத்தடுத்த வெளியீடுகளில் தொடர்ந்து வந்து வசூலை அள்ளி குவித்துக் கொண்டே இருக்கிறது ஆனால் உங்களால் 4 அரங்கில்
ஓட்டப் பட்ட நவராத்திரி
படம் மறு வெளியீடு கண்டதுண்டா? இல்லை அதன் பிறகு எப்பவாவது எந்த விநியோகஸ்தராவது அதை வெளியிட துணிந்ததுண்டா? பேச வந்துட்டார் சத்திய புத்திரன், சமீபத்தில் கூட ஆரூர் தாஸ் சொன்னார் எம். ஜி ஆரின் ஒரு சில படங்கள் தோல்வி அடைந் திருக் கலாம் ஆனால் அதெல்லாம்
யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்ற
கதைதான் எனவே அவரின் எந்தப் படமும்
தோல்வி லிஸ்டில் எடுக்க முடியாது.
அடுத்து பச்சை விளக்கு
1990 களில் ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து " ஜெமினி சினிமா" என்ற
சினிமா இதழ் வெளி வந்து கொண்டிருந்தது
அதில் ஒரு சமயம் அது வரை சிவாஜி நடித்து வெளி வந்த படங்களைப் பற்றி சிவாஜியிடம் comment
சொல்லச் சொன்னார்கள் அந்த வரிசையில் பச்சை விளக்கு படத்தைப் பற்றி சிவாஜி அடித்த கமென்ட் "நல்ல வேளை
சிவப்பு விளக்கு விழாமல் போனது" அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்
அந்த படத்தை வேல் பிக்சர்ஸ் பேனரில் தயாரித்தது பைனான்ஸ் செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும் அது மட்டுமல்ல வெலிங்டன் திரை அரங்கத்தை யார்
லீசுக்கு எடுத்திருந்தார் கள் என்பதும் தெரியும்
அப்படியிருக்க பச்சை விளக்காம்? போங்கப்பா
இந்த வரிசையில் ஒரே
ஒரு படம் மட்டும் கொஞ்சம் கை கொடுத்தது என்றால்
அது"கை கொடுத்த தெய்வம்" படம்தான்
காரணம் இந்த படத்தைப் பற்றி இயக்குனர் கே. எஸ். கோபால கிருஷ்ணன் சொன்னது " உண்மையிலேயே இந்த
படம் கை கொடுத்த தெய்வம்தான் காரணம்
தொடர் தோல்வியினால் துவண்டிருந்த சிவாஜிக்கு அது உண்மையிலேயே கை
கொடுத்தது
இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால் சிவாஜி ஒத்துக் கொண்டாலும் இந்த அடிப் பொடிகள் ஒத்துக்
கொள்ள மாட்டார்கள்
இந்த படம் அங்கே நூறு நாள் ஓடியது இங்கே நூறு நாள் ஓடியது என்று லிஸ்ட் காட்டுவது
இது எப்படியிருக்கிறது என்றால் ஒரு முறை " உத்தம புத்திரன்" படத்தைப் பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமலஹாசன் ஆஹோ ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி விட்டு அது நன்றாக ஓடியதாகவும்
சொன்னார் , அதன் பிறகு ஒரு நாள் ஒரு
பத்திரிக்கை பேட்டியில்
கமல் சொல்கிறார் நான்
சிவாஜியைப் பார்க்க
அன்னை இல்லம் சென்றிருந்தேன் அப்போது சிவாஜி சொன்னார் நீ உத்தம புத்திரன் படத்தைப் பற்றி சொன்னது எல்லாம் உண்மைதான்
ஆனால் அது வெற்றிப்
படமல்ல நூறு நாள் ஓடியது அவ்வளவுதான்
அது மட்டுமா கண்ணதாசன் குடும்பத்தார் ராசி பிலிம்ஸ் என்ற பெயரில்
அவன்தான் மனிதன் படத்தை எடுத்து வெளியிட்டார்கள் நகரப்
பகுதிகளில் ஓரளவு வெற்றி பெற்ற அந்த படம் பி அண்ட் சி என்று
சொல்லக் கூடிய சிறு குறு நகரங்களில் மண்ணைக் கவ்வியது
ஆனால் அதுவும் நூறு
நாள் படம், ஜேயார் மூவீஸ் தயாரிப்பில் 1972 இல் தொடங்கி 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த" மன்னவன்
வந்தானடி" படமும் நூறு
நாள் படம்தான் ஆனால் அந்த படத்தைப் பற்றி
எழுத்தாளர் சுதாங்கன்
அவர்கள் தினமலர் வாரமலரில் சிவாஜியை
பற்றி எழுதி வந்த "செலூலாயிட் சோழன்"
என்ற தொடரில் மன்னவன் வந்தானடி படம் ஒரு தோல்விப் படம் என்று உண்மையை எழுதினார் இது 2016 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன் உடனே
மையத்தில் அடிப் பொடிகளெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
சுதாங்கனை கண்டபடி
திட்டி பதிவெல்லாம் போட்டார்கள் இவன் எவனுக்கு கையாளோ
என்று போட்டு மன்னவன் வந்தானடி
100 வது நாள் விளம்பரத்தையும் போட்டார்கள் இவ்வளவுக்கும் சுதாங்கன் தீவிர சிவாஜி ரசிகர் ஆனால்
அவர் உண்மையை எழுதினார் அப்போ புரிந்து கொள்ளுங்கள்
இவர்கள் சொல்லும் நூறாவது நாள் படங்களின் லட்சணங்கள் , நான் நேரடியாகவே கேட்கிறேன் 4 அரங்கில் நூறு நாள் ஓடிய நவராத்திரி படமும் , முரடன் முத்து படமும்
படகோட்டி ஓடிய 50 நாள்
வசூலை தொட முடிந்ததா? பதில் சொல்லுங்கள் பார்ப்போம், எங்கள் தலைவருக்கு நூறு நாள் ஓடிதான் தன்னை
நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை
விநியோகஸ்தர் களுக்கு நன்றாகத் தெரியும் 98 நாள் ஓடி 100 நாள் ஓடாமல் போன படத்தைக் கூட
அவர் கண்டு கொள்ளவில்லை
1964 ஆம் ஆண்டிலேயே
தலைவர் நான்கு லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கத் தொடங்கி விட்டார் ஆனால் 1968 ஆம் ஆண்டு ஏ. வி. எம் நிறுவனம் தயாரித்த
உயர்ந்த மனிதன் படத்துக்கு சிவாஜிக்கு
ஒரு லட்சம் சம்பளம் கொடுத்த போது கூட ஒரு 25000 கேட்ட போது
மறுத்து விட்டார்கள் அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிவாஜியின் மார்க்கெட்
வேல்யு என்ன என்பது
எங்களுக்குத் தெரியும்
அடிக்கடி இது வேறு
ஒரே நாளில் இரண்டு
படம் வெளியிட்டு சாதனை படைத்தார்
ஒண்ணு நல்லா தெரிஞ்சு க்கோங்க பண்ணி பல குட்டி போட்டு ஒரு பலனும் இல்ல ஆனால் சிங்கம் ஒரு குட்டி போட்டாலும்
சிங்கம் சிங்கம்தான்
அதை மறந்து விடாதீர்கள்
படகோட்டி முதல் வெளியீட்டில் பிளாசாவில் மட்டும் நூறு நாள் என்று மனத் திருப்தி அடையும் நீங்கள் அடுத்தடுத்த வெளியீடுகளில் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பட்டி
தொட்டியெங்கும் பட்டயைக் கிளப்பிய , கிளப்புகிற வரலாறை
மறந்தது ஏனோ?
உங்களால் அந்த நாட்களில் வெற்றிப் படம் என்று சொல்லப் பட்ட நவராத்திரி படம் உட்பட 80 சத விகித படங்கள் குறட்டை விட்டு
தூங்குவதை மறந்து விடாதீர்கள், இப்போது கூட படகோட்டி படத்தை
டிஜிட்டல் செய்து வெளியிட பல பேர் செருப்பு தேய நடந்தும்
விநியோக உரிமையை
வைத்திருப்பவர் கொடுக்க மறுக்கிறார்
அதை தெரிந்து கொள்ளுங்கள்
பின் குறிப்பு: தீபாவளிக்கு வெளியான " நாடோடி மன்னன் படம் 5100 பேர்களால் பார்க்கப்பட்டு ஒரு வார
வசூலாக 1,95,000 .00 வசூலித்து சரித்திரம் படைத்திருக்கிறது( வழியில் போவோரையும், புடவை, வேட்டி கொடுத்தும் யாரையும்
அழைக்காமலும் தானாக வசூல் ஆன தொகை இது , இதனை முதலில் முறியடித்து
சாதித்து விட்டு அப்புறம்
பேசுங்கள் )
அப்புறம் இன்னொன்று
தலைவரை மிக உயர்வாக காட்டி காட்சிகள் வைத்த பிகில் படம் பத்து நாளில் 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது
நன்றி!........... Thanks.........
பாராட்டுக்களும்....!
வாழ்த்துக்களும்....!!
****************************
ஒளிவிளக்கு MGR குடும்பத்தில் நாள்தோறும் நமது தெய்வம், பொன்மனத்திலகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் காலத்தால் அழிக்க முடியாத காவிய வரலாறுகளை குரல்பதிவு மூலமாக பதிவு செய்து...மக்கள் திலகம் அவர்களின் எண்ணற்ற பக்தர்களின் இதயத்தில் தனக்கென்று ஓர் இடம் பிடித்து புரட்சி படைத்துக் கொண்டிருக்கும் பாசத்திற்குறிய இனிய சகோதரர் திரு. சம்பங்கி GSR அவர்கள் தொடர்ந்து நம் கொடைவள்ளலின் புகழ் ஒலிக்க செய்ய பாராட்டுக்களும்... வாழ்த்துக்களும் கூறி கொள்வதோடு , அண்ணாரின் குரல் உழைப்பை போற்றி பாராட்டு தெரிவித்த சகோதரர் திரு. குமார் அவர்களுக்கு , பெங்களூரில் புனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின் ஏகோபித்த உண்மை விசுவாசிகளின் நல் ஆதரவு பெற்று 27 ஆண்டுகளை கடந்தும் சிறப்புடன் இயங்கி வரும் "அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " யின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
என்றும் ,
எம்ஜிஆரின் காலடி நிழல் க. பழனி........ Thanks...
https://youtu.be/e13s9xjUbCg........ Thanks.........
கன்னியாகுமரில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலகாரணம் யார் தெரியுமா? திக-வும் இல்லை; திமுக-வும் இல்லை.
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கருணாநிதிக்கா, வீரமணிக்கா.... இல்லை.
ஆர்எஸ்எஸ் பிரச்சாரக்கான ஏக்நாத் ரானடே என்கிற மகத்தான கர்மயோகிக்குதான்.
கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-7-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.
ஒப்படைத்த து மட்டுமல்லாமல், 15-3-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்கிற திட்டத்தை அனுப்பியது விவேகானந்தா கேந்திரம். அனுப்ப ஏற்பாடு செய்தவர் ஏக்நாத் ரானடே அவர்கள்.
அதன் காரணமாக தமிழக அரசாங்கமும் அதை ஏற்றுக் கொண்டு திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வராக இருந்த திரு.எம்.ஜி ஆர்.,... அவர்களாலும் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களாலும் 15-04-1979ல் கன்னியாகுமரில் நாட்டப்பட்டது.
ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழு முதல் காரணம் *ஆர்எஸ்எஸ் பிரச்சாரக் ஏக்நாத் ரானடே* அவர்கள்தான். இந்து அமைப்புதான் காரணம்........... Thanks.........
https://i.postimg.cc/Dy2XH4qx/39b63f...8c5f5b7ec9.jpg
கோவை டிலைட்
திரையரங்கில்
https://i.postimg.cc/g0qpCjyK/IMG-4210.jpg
நன்றி - திரு ரஞ்சித்
#புர*ட்சித்த*லைவ*ருட*ன் "அடிமைப்பெண்"... திரைப்ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவி ந*டித்ததைப்ப*ற்றி அவ*ரே விளக்கும் க*ட்டுரை..
உலகப் பொது மறையான திருக்குறளை நினைவுபடுத்தியது-புரட்சி நடிகர் அன்று என்னிடம் கேட்ட அந்தக் கேள்வி
அவர் அப்படி என்னதான் கேட்டார் என்கிறீர்களா? ஆரம்பத்திலிருந்தே சொல்லுகிறேன்.
“அடிமைப் பெண்" வேடத்தில் நடித்த போது எப்போதும் போல, கதாநாயகி வேடம் என்று எண்ணி இருந்தேன். படத்தின் பூர்வாங்க வேலைகள் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கதைக்கேற்ப வில்லியாக வேறு ஒருவரை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். சொல்லப் போனால் எனக்கு அப்போது இரட்டை வேடம் அதில் கிடையாது.
பின்னர் மீண்டும் அப்ப*ட*த்தை உருவாக்கும்போது க*தை ச*ற்றே மாற்ற*ப்ப*ட்ட*து. எனக்கு இர*ட்டை வேட*ம் கிடைத்த*து. உருவ ஒற்றுமையைப் பயன்படுத்தி க*தை நீயே இரட்டை வேடம் ஏற்று இதில் நடிக்கிறாயா? என்று கேட்டார் எம்.ஜி.ஆர். சட்டென்று எனக்கு ஒரு திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது.
“கொக்கக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்தவிடத்து” என்ற வரிகளை எண்ணிக் கொண்டேன். இதைத்தான் முதலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இம்மாதிரியான சந்தர்ப்பம் வாய்க்காதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நான் இதை நழுவ விடுவேனா? முழு மனதுடன், மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன்.
கதாநாயகி ஜீவா பாத்திரத்துடன், பட்டத்து ராணி பவளவல்லி (வில்லி) யாகவும் நடிக்கும் பெரும் வாய்ப்பை எம்.ஜி.ஆர் எனக்கு அளித்து விட்டார்.
வில்லிக்காக ஒரு மானரிசம் (mannerism), அதாவது ஒரு தனிப்பட்ட சேஷ்டையைக் கைக்கொள்ளும்படியும் எம்.ஜி.ஆர் அப்போதே கூறிவிட்டார். அதற்காக வீட்டில் கண்ணாடி முன் நின்று ஒரு விசேஷ சேஷ்டையைப் பயிற்சி செய்தேன். நாலைந்து பாவனைகள் பழக்கத்துக்குக் கொண்டு வந்தேன்.
அந்த பாவனை பயிற்சிகளை எம்.ஜி.ஆர் முன் நடித்துக் காட்டிய போது, அதில் ஒன்றை, இப்போது படத்தில் வரும் உதட்டை விரலால் வழித்து விடும் பாவனையை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தார்.
“அடிமைப் பெண்” படம் வளரத் தொடங்கியது முதல், அதில் சில தனிச் சிறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. படக் காட்சியில் எல்லா அம்சங்களும் கலந்தாலோசனை செய்யப்பட்ட பிறகே காமிரவுக்குச் சென்றன.
தயாரிப்பில் பங்கு பெற்ற அனைவரிடமும் ஒரு தனி உற்சாகம் நிறைந்து இருந்ததையும் என்னால் உணர முடிந்தது. என்னைப் பொறுத்தமட்டில், நான் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட படத்தில் நடித்துவிட்டேன். ஆனாலும் ‘அடிமைப்பெண்’ணில் ஒவ்வொரு காட்சியிலும், நானே அனுபவித்து, ரசித்து நடித்தேன். என்னை அறியாமலே ஒரு தனி உற்சாகம் இதில் நடிக்கும் பொழுது ஒட்டிக் கொண்டுவிட்டது.
“இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறதே’ என்று சொன்னால் போதும் அதை உடனே ஏற்றுக் கொண்டுவிடுவார் எம்.ஜி.ஆர் அதற்கு ஒரு சான்றும் கூறுகிறேன்.
ஜெய்ப்பூர் வெளிப்புறக் காட்சிக்காக சென்று அங்கு முகாம் செய்திருந்தோம். ஜெய்ப்பூர் அரண்மனையில், தர்பார் காட்சி ஒன்று அன்று படமாக்கப்பட்டது.
பட்டத்து ராணி (வில்லி)யாக நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். தர்பார் ஆசனத்தை விட்டுப் படி இறங்கி நடந்து வந்து, எதிர்க் கோடியில் கட்டப்பட்டிருக்கும் கதாநாயகனை நான் பார்க்க வேண்டும். படப்பிடிப்பு சமயத்தில் வில்லியாக வருகையில் எனக்கே இயல்பான, வழக்கமாக நான் மற்ற படங்களில் நடந்து வந்ததைப் போன்ற நடையில் நடந்து வந்தேன். காமிரா படமாக்கிக் கொண்டிருந்தது. டைரக்டரும் ஓ.கே சொல்லி, அந்த நடை காட்சியை முடித்து விட்டார்.
இவ்வளவு முடிந்தும் நான் எம்.ஜி.ஆர் முகத்தை பார்த்தேன். அவர் முகத்திலே அந்தக் காட்சி நினைத்தபடி அமையவில்லை என்பதற்கான அதிருப்தி நிலவியதைக் கண்டு கொண்டேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.
“டைரக்டர் சார், இன்னொரு டேக் எடுக்கிறீங்களா? என்று நானாகவே கேட்டேன். ஏனெனில், என் மனதுக்குள் வேறொரு “ஸ்டைலில்’ நடந்து காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல் எழுந்தது.
மீண்டும் அந்த நடையலங்காரக் காட்சி படமாக்கப்பட்ட போது, முன் நடந்து வந்தது போல் நடக்காமல், என் கற்பனையில் உதித்த வேறொரு வகையில் ஒரு விசேட நடையை என் பாதங்கள் வெளிப்படுத்திற்று. எம்.ஜி.ஆர் முகத்தைப் பார்த்தேன். இப்போது மனநிறைவின் மகிழ்ச்சி அவர் முகத்தில் தோன்றியது. அதுமட்டுமல்ல உடனே அவர் என்னை அழைத்து, “இந்த நடை ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. வில்லிக்கேற்ற அலங்கார நடையாக இருக்கிறது. படம் பூராவும், வில்லியாக வரும்போதெல்லாம் இதே நடையிலேயே நடந்து வந்துவிடு, என்று உத்தரவு போட்டு விட்டார். நடையில் மட்டுமல்லாமல், ஜீவாவாக வரும் போதும், பவளவல்லியாக வரும் போதும் என் குரல்களில் கூட சிறிது வித்தியாசம் இருக்கும். படத்திற்கென்று அப்படி மாற்றம் செய்து கொண்டு நடித்திருக்கிறேன்.
நடிப்பு, குரல் இரண்டையும் பற்றி சொல்லிவிட்டேன். இன்னும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களும் இதில் உள்ளன. அவற்றிலே முக்கியமாக உடை அலங்காரத்தைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா? “அடிமைப் பெண்”ணில் வில்லியாக வரும்போது நான் அணிந்து வரும் ஆடைகள் அனைத்தும் புதுமையான பாணியில் தைக்கப்பட்டவை.
அடுத்தது என்னைப் பாட வைத்த முதல் பெருமையும் இந்தப் படத்துக்குத் தான் சேரும். என்னைப் பாடச் சொன்ன போது முதலில் பயந்து தன்னம்பிக்கை குறைவாக இருந்ததால் நான் வாதாடினேன், பிறகு, எம்.ஜி.ஆர் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தைரியம் கூறிய பிறகே, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் முன்பு தோன்றினேன்.
இசைக்கு அடுத்ததாக நடனம். “இதில் ஏதேனும் புதுமையைச் செய்ய முடியுமா? என்று புரட்சி நடிகர் என்னிடம் கேட்டார். பலவித நடனங்கள் ஆடிவிட்டேன், பலபடங்களில் ஸ்பானிஷ், எகிப்திய நடன பாணிகளிலும் நடனங்கள் ஆடியிருக்கிறார்கள். இதில் மாற்றம் புதுமையைப் புகுத்துவது எப்படி? இந்தக் கட்டத்தில் நான் பார்த்த பல படங்களை என் மனக் கண்ணுக்குள் கொண்டு வந்து பார்த்தேன். நான் படித்த பல புத்தகக் குறிப்புகளும் நினைவில் பம்பரமாக சுழன்றன . தனிமையில் அமர்ந்து ஓயாமல் சிந்தித்தேன்.
டிக் டிக் டிக்… என இதயத்துடிப்பு… டிக் டிக் துள்ளி எழுந்தேன். முரசு அதிர்ந்து நடனங்கள் ஆடப்படுவதுண்டு… முரசு அதிர்ந்து போர் பரணியும் புறப்படுவது உண்டு. படங்களில்... இந்தக் கட்டத்தில் முரசுகளையே சலங்கை போல் மேனியில் அணிந்து கொண்டு ஆடினால் என்ன? எப்படி இருக்கும்? “குட் ஐடியா” எனக்கு நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.
மறுபடியும் ஸ்டுடியோவுக்குச் சென்றபோது எம்.ஜி.ஆரிடம்; ”முரசு அணிந்து ஆடினால் புதுமையாக இருக்கும் என்றேன். “அப்படியே செய்ய்லாம்” என்று கூறியதோடு நிற்காமல், நடனப் பயிற்சி வல்லுனரான நடன மாஸ்டர் சோப்ராவையும் வரவழைக்குபடி ஆளை அனுப்பிவிட்டார் புரட்சி நடிகர். கூடவே கே.வி.மகாதேவனும் வரவழைக்கப்பட்டார்.
ஆட்டம் பிறந்தது. கூடவே தனி விசேஷமானதோர் பின்னணி இசையும் பிறந்தது. மகாதேவன் கிளுகிளுப்பையும் புல்லரிப்பையும் இசையிலே எப்படியோ புகுத்திவிட்டார். அந்த இசை என்னை மேலும் உற்சாகத்துடன் நடனம் ஆட வைத்தது.
இப்படத்திலே நான் கதாநாயகனுக்கு சண்டை பயிற்சிகளும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன். ஆமாம், எம்.ஜி.ஆருக்குத் தான் கத்திச் சண்டை, கோடரியில் சண்டை, ஈட்டிச் சண்டை, ஜூடோ சண்டை இத்தனையும் காமிராவில் பதிவாகும் முன் அவர் எனக்கு சொல்லித் தருவார், காமிரா படமாகும்போதோ, எம்.ஜிஆருக்கு நான் பயிற்சி தருவேன்.
இது தான் திரை உலக விந்தை! “அடிமைப் பெண்’ படத்தில் என் நடிப்பின் மீது நம்பிக்கை வைத்து, மகத்தான வாய்ப்புக் கொடுத்ததற்காக புரட்சி நடிகருக்கு என்றென்றும் நன்றி கூற கடமை பட்டிருக்கிறேன்.
இவ்வாறு புர*ட்சித்த*லைவி அடிமைப்பெண் ப*ட*த்தில் புர*ட்சித்த*லைவ*ருட*ன் ந*டித்த அனுப*வ*த்தை நெகிழ்ச்சியுட*ன் குறிப்பிடுகிறார்.
இனிய காலை வ*ணக்கத்துட*ன்...........
Thanks.........
மக்கள் திலகத்தின் வெற்றிக்கு துணை புரிந்த அவர் பெயரின் எண் கணிதம்
M.G.RAMACHANDRAN
M 4
G 3
R 2
A 1
M 4
A 1
C 3
H 5
A 1
N 5
D 4
H 5
R 2
A 1
N 5
=46 or 1
ஒன்று என்ற எண் ஸூர்யனைக் குறிக்கும். அரசியல் ஆட்சி இரண்டுக்கும் உரியது.உயர் தலைமையைக் குறிப்பது.ஸூர்யனின் சின்னத்தை ப்ரபலபடுத்தியவர் மக்கள் திலகமே.மேலும் ஸூர்யனின் ஆதிக்கம் பெற்றவர்கள் கண்ணாடி அணிபவர்களாக இருப்பார்கள்.
மக்கள் திலகம் கறுப்பு கண்ணாடி உபயோகித்தவர்.
இவரின் பெயரில் ஸூர்யனின் எண் ஒன்று நான்கு முறை வருகின்றது.
சந்த்ரனின் எண் இரு முறை வருகின்றது.
M.G.R.
குரு பகவானின் எண் 5 நான்கு முறை வருகின்றது.
எனவே அவர் கருணை வள்ளலாக தர்மத்தில் சிறந்தவராக மிளிர்ந்தார்
4 3 2 =9
செவ்வாய்குரிய இந்த எண்ணிலால் M.G.R.மிகவும் ப்ரபலமடைந்தார்.ராஜ தந்த்ரம் கை வரப்பெற்று போராடி மிக உன்னத நிலையைப் பெற்று நம் இதய தெய்வமாக விளங்குகின்றார்
மேலும் செவ்வாய் பலம் பெற்றவர்கள் மல்யுத்தம் கத்தி வாள் வீச்சு வீரர்கள். எந்த போட்டி விளையாட்டிலும் அனாவசியமாக வெற்றிக்கனியை தட்டிப் பறிப்பர்.
நம் பொன் மனச்செம்மலுக்கு இது எல்லாமே கை வந்த கலை தானே............ Thanks.........
M. G. R. ..N. T. R. தொடர்ச்சி பாகம் 2
ராமபுரம் தோட்டம் இல்லத்தில் எந்த நேரமும் அனையா விளக்கு போல் அடுப்பு எரியும் எப்போது யார் சென்றாலும் உணவு உண்ணாமல் திரும்புவதில்லை ....
யாராவது வரும் போது சாப்பிட்டு வந்திருந்தாலும் பால் பாயசம் அல்லது பழம் ஜூஸ் எதாவது ஒன்று சாப்பிட்டுத்தான் வர வேண்டும் ..இதுதான் வாத்தியார் கொள்கை லட்சியம்..ஆகும் ...புரட்சித்தலைவர் காண வந்த N. T. ராமராவ் அவர்கள் அங்கே சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களுடன். தானும் அமர்ந்து சாப்பிடுவதாக கூறினார் ..அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் .புரட்சித்தலைவரே.அவர்க்கு உணவு பறிமாறினார். அறுச்சுவை உணவு என்றால் என்ன என்று புரட்சித்தலைவர் வீட்டில் சாப்பிட்டாத்தான் தெரியும் ..வாத்தியார் வீட்டில் சாப்பிட்டவர்கள். வேறு இடத்தில் சாப்பிட்டா அந்த உணவு நன்றாக இல்லை என்றுத்தான் நினைப்பார்கள்.
அதனால்தான் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் எம். ஜி. ஆர் எத்தனையோ முறை சாப்பிட கூப்பிட்டும் போகவில்லை ..அதற்கு காரணம் ஒரு முறை எம். ஜி. ஆர் வீட்டில் சாப்பிட்டா மீண்டும் மீண்டும் அவர் வீட்டு சாப்பாடு சாப்பிட தோண்றும். என்பதால் நாவின் சுவை அடக்கி வைத்திருந்தார் ..இப்போது அதே நிலைத்தான் புரட்சித்தலைவர் விருந்து உண்டவுடன். விருந்தோம்பல் என்றால் என்ன என்று..
எம். ஜி. ஆரிடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார் .N. T. ராமராவ் அவர்கள் ...
புரட்சித்தலைவர் ஆசிர்வாதத்துடன் ஆந்திராவின் முதல்வர் ஆனார் ...N. T. ராமராவ் அவர்கள்.
ஆந்திராவில் முதல் முதலாக சட்டசபையில் அறிவித்த திட்டங்களில் அறிவித்த ஒர் அறிவிப்பு இனி திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் வழங்கப்படும்..என்றார் ...இது எப்படி சாத்தியம் ஆகும் .என்று கேள்வி எமுப்பினார்கள் எதிர் கட்சி காரர்கள் ..அதற்கு N. T. ராமராவ் தந்த விளக்கம் ..
தமிழகம் முதல்வர் திரு..எம் ஜி. ராமச்சந்திரன் அவர்கள் வீட்டில் எந்த நேரம் சென்றாலும் உணவு கிடைக்கும். எப்போதும் அவர்வீட்டு அடுப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். தனி ஒரு மனிதர் வீட்டில் இது சாத்தியம் ஆகும் போது..
ஊர் உலகத்துக்கே படி அளக்கர திருப்பதி திருமலை ஏமுமலையான் ஆலயத்தில் ஏன் சாத்தியம் ஆகாது. என்று விளக்கம் தந்து திட்டத்தை நிறைவேற்றினார்..
பின் குறிப்பு .....N. T. ராமராவ் அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் கிடையாது. விஷேச நாட்கள் திருவிழா நாட்கள் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்து..மற்ற நாட்களில் பிரசாதம் வழங்கப்பட்டது..N. T. ராமராவ் அவர்கள் வந்த பிறகு தான் சாமி தரிசனம் பார்த்து விட்டு வருபவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு வந்த. சந்திர பாபு நாயுடு அவர்கள் திருப்பதி திருமலைக்கு வரும் அனைவோருக்கும் எப்போதும் உணவு.உண்டு திட்டம் நிறைவேற்றினார் .....
ஆக திருப்பதி திருமலையில் தினமும் அன்னதானம் உருவாதுக்கு காரணம்
நமது தெய்வம் பொன்மனச்செம்மல்............ Thanks............
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 34. .
எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கிறதோ அங்கெல்லாம் எதாவது ஒரு ரூபத்தில் வடிவத்தில் அவதாரம் எடுத்து அதர்மத்தை அழிப்பேன். .
பகவத் கீதையில் கிருஷ்ணபரமாத்மா கூறியது. .
அதேப்போல் எங்கெல்லாம் துன்ப படுபவர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உதவி செய்ய இறைவன் எதோ ரூபத்தில் வடிவத்தில் யாரையாவது அனுப்புவார். அப்படி அனுப்பப்பட்டவர்தான் நமது தெய்வம் பொன்மனச்செம்மல். .
வாத்தியார் ஒவ்வொருக்கும் உதவும் போதும். அவன் நல்லவனா கெட்டவனா ? எதிரியா நண்பனா? ? சொந்தமா உறவு முறையா? ? என்று பார்ப்பதில்லை. ..தன்னை நாடி வருபவர்களுக்கு உதவிடும் போதும். .தேடிச்சென்று உதவிடும் போதும். அங்கே அவனது கஷ்டமான சூழ்நிலையும். எண்ணி சராசரி மனிதாபிமானத்துடன்தான் உதவிடுவார் தவிர. உதவியால் பலன் உண்டு என்பதினாலோ. பிறர் உதவி எதிர்பார்த்தும் உதவிடுவதில்லை உதவி செய்வது நமது கடமை என்கிற ஒரே கொள்கை தான் அவர்க்கு கொடைவள்ளல் பொன்மனச்செம்மல் என்ற பட்டம் பொருந்தியது வழங்கப்பட்டது. . இது 100/. சதவீதம் உண்மையாகும்...இதற்கு ஆயிரம் ஆதாரம் உண்டு. அதிலே ஒரு ஆதாரம் தான். .இந்த பதிவு. .
கவியரசு கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் நடித்த பல படங்களில் மதுரைவீரன். .மகாதேவி .நாடோடி மன்னன். . ராஜாதேசிங்கு மன்னாதி மன்னன்
திருடாதே. .வசனம் எழுதி தேர்ச்சி,தன்னை ஒரு வசனகர்த்தா என்பதை நிருபித்து. வெற்றியும் வசூலும் குவித்தார். ....அதன் பிறகு அரசியல் சூழ்நிலை காரணமாக வாத்தியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். ..அதன் பின்னர் கண்ணதாசன் தயாரிப்பாளராக இருந்து எடுத்த மாலையிட்ட மங்கை. வானம்பாடி வெற்றி படமாக இருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை. நஷ்டம்தான் ஏற்பட்டது, ..மேலும் சிவகங்கை சீமை. ...இரத்ததிலகம். ...கவலையில்லாத மனிதன்
தாயே உனக்காக கருப்பு பணம் .போன்ற படங்கள் எடுத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக ஆனார் ..கடனை அடைக்க முடியாமல் தவித்தார். .தனது சகோதரர்களான A L, சீனிவாசன். .A. L , நாராயணன். ..A. L, முத்தையா. .A. L, கண்ணப்பன். .மேலும் தனது சொந்தகாரர்கள் உறவினர்கள், நண்பர்கள் என பல பேர்களிடம். மற்றும் சிவாஜி. சந்திரபாபு பல சினிமா தயாரிப்பாளர்களிடம் .உதவி கேட்டார். எல்லோரும் எதாவது காரணம் பிரச்சினைகள் கூறி. உதவி செய்ய மறுத்து விட்டார்கள். .இன்னும் சொல்லனும் என்றால் தீபாவளி பண்டிகை குடுபத்துடன் கொண்டாட முடியாதளவுக்கு பணம் பிரச்சினை கஷ்டம் ஏற்பட்டது. கண்ணதாசன் சூழ்நிலை கேள்விப்பட்டார் வாத்தியார். . உடனே போனில் தொடர்பு கொண்டு பேசினார். .
உங்களுக்கு என்ன பிரச்சினை . எவ்வளவு கடன் ..எவ்வளவு பணம் தேவை ..ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா ..நான் போன் செய்து கேட்கறளவுக்கு வைத்துள்ளீர்கள். யார் யாரோரிடம் கேட்டீர்கள் என்னிடம் கேட்கனும் என்று தோன்றவில்லையா, சரி இப்போமுது எவ்வளவு பணம் தேவை என்று வாத்தியார் கேட்டதும். கண்ணதாசனால் பதில் பேச முடியாமல் தவித்தார் மனம் கலங்கினார். .இப்படியும் ஒரு மனிதரா இவரைப் போய் தவறாக எண்ணி தவறனா கருத்துக்கள் தெரிவித்தோமே என எண்ணி மனம் வருந்தியபடி குறிப்பிட்ட தொகையே கேட்டார்..மறுநாள் அதிகாலை நேரத்தில் கண்ணதாசன் வீட்டுக்கு ஒருவர் வந்து வாத்தியார் கொடுத்தார் என்று கூறி மிகபெரிய பொட்டலமும் தீபாவளி பண்டிகை கொண்டாட தேவையான அனைத்து பொருட்கள் பெட்டி நிறைய கொடுத்து விட்டு சென்றார். .அவ்வளவு தான் கண்ணதாசன் ஒன்றும் பேசமுடியவில்லை திக்குமுக்காடிப் போனார். .அப்போது அவருக்கு ஞாபகம் வந்த குறள் இதுதான். .
இன்னார் செய்தாரே ஒருத்தர் அவர் நாணம்
நம்மையும் செய்திடுக. ... என்ற குறள் தான்.
உடனே சின்னப்பர் தேவர்க்கு போன் செய்து நீங்கள், உங்கள் ஆண்டவரை வைத்து அடுத்து எந்த படம் எடுத்தாலும்,அந்த படத்திற்கு நான்தான் முமு பாடல்களும் எழுதுவேன், என்று கூறி போனை வைத்து விட்டார். சின்னப்பர் தேவர் இதைக்கேட்டதும் அதிர்ச்சியில் மகிழ்ச்சி அடைந்தார். .
வாத்தியார் கொடுத்த தொகையை கண்ணதாசன் பிரித்து பார்த்து மேலும் அதிர்ச்சி ஆகினர். அவர் கேட்ட தொகையை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது. ..இன்னும் முடியலங்க வரலாறு தொடரும் தொடரும் தொடரும்....... Thanks...
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 35.
காரியத்தை ஆராய்ந்து பார்த்தால் காரணம் தானாகவே தெரியும். .
என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் எண்ணிக்கைகள் பல பல. ஒருவனை குற்றவாளியாக்கிக் விடலாம். நிரபராதி என்று நிருப்பதுத்தான் கடினம். இது வரை என் வாழ்விலே கள்ளம் இல்லை .கபடம் இல்லை .சூதும் இல்லை .
சூழ்ச்சி இல்லை. ...இந்த பதவி நான் கேட்டுக் பெறவில்லை. ..கூப்பிட்டு தந்திர்கள் என்பதற்காக நான் செய்வதெல்லாம் சரி என்று வாதிக்கவும் இல்லை. .
பொறாமைக்காரர்கள் விஷ மூச்சிலே. .சதிகாரர்கள் பின்புறம் இருந்து தாக்கிய சூழ்ச்சியிலே. நான் யார் என்ற கேள்வியை மறந்து. குற்றவாளி கூண்டிலே நிற்கவேண்டிய கோரமான நிலை அடைந்திருக்கிறேன்..
நான் நிரபராதி என்று நிருப்பிதற்க்கு முன் இந்த வழக்கை திருஷ்டி செய்தவர்கள் திறமைசாலிகள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ..அந்த திறமைக்குத்தான் நீதிக்கு அடிப்படை என்றால் தாங்கள் இஷ்டம் போல் தீர்ப்பு கூறலாம். .
இது மதுரை வீரன் படத்தில் கவியரசு கண்ணதாசன் வாத்தியார் குணம் அறிந்து எழுதிய வசனம் ஆகு*ம். வாத்தியார் வாழ்க்கையில் பாதி வதந்திகளாலே அவர் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும். பொறாமைக்காரர்களின் சூழ்ச்சி சதியினாலும் வயிற்றெரிச்சலில் மறைக்கப்பட்டு உள்ளது. என்பதுதான். உண்மையாகும்.ஆனால் அவரால். உதவி பெற்றவர்கள். ..பலன் அடைந்தவர்கள்..
பயன் அடைந்தவர்கள்.. அவரால் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். .முன்னேற்றம் அடைந்தவர்கள்...அவர் பெயர் சொல்லி பிழைப்பு நடத்துபவர்கள். இவர்களால் மட்டுமே வாத்தியார் பொன்மனம் வள்ளல்தனமும் மனிதநேயம் அறிய முடிகிறது. .ஒரு மனிதனின் நல்ல செயல்கள் யார் மறைக்க நினைத்தாலும்..
அவர்கள் செய்த உண்மையான தர்மமும் வள்ளல்தனமும் அவர்கள் புகழைக்காக்கும் என்பதற்கு வாத்தியார் வாழ்க்கையை ஒரு உதாரணம் ஆகும்..
கண்ணதாசன் அவர்கள் வாத்தியார் செய்த உதவியை எண்ணி அவர் ஒரு தனிபிறவி என்று புகழாரம் சூட்டினார். சின்னப்பர் தேவர் வாத்தியாரின் அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் கண்ணதாசன் போனில் பேசினார். .முதலில் பாடல் பதிவு செய்து விட்டு பிறகு படத்தின் பெயர் வைக்கலாம் என எண்ணி கண்ணதாசன் வீட்டுக்கு சென்றார். கண்ணதாசன் எமுதிய பாடலின் முதல் சரணம் வரிகள் இதுதான்
ஒருமுறை தான் உன்னிடம் பேசினேன் நீ ஒரு தனிபிறவி என்று நிருப்பித்துவிட்டாய் என்று தான் எழுதிய வரியின் சரணத்தை சின்னப்பர் தேவரிடம் காட்டினார். அவ்வளவு தான் சின்னப்பர் தேவர் கண்ணதாசனை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் நினைத்தேன் நீங்கள் உங்கள் பாடல் வரியிலே கூறிவிட்டீர்கள் அதுவே பாடல் அதுவே படத்தின் பெயர் என்றார்,..
கண்ணதாசன் கையில் பெரும் தொகையை திணித்து விட்டு சென்றார். .பாட்டும் சூப்பர் ஹிட் படமும் சூப்பர் ஹிட் வசூலும் சூப்பர் ஹிட் வாத்தியார் நடிப்பும் அற்புதம் அதிலும் உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே என்ற பாடல் காட்சியில் வாத்தியார் சுறுசுறுப்புக்கும் வேகத்துக்கும் இன்னொரு நடிகரால் ஈடு கொடுக்க முடியாது அவ்வளவு பிரமாதமாக வாத்தியார் அசத்திருப்பார் ......
தனிபிறவி யின் வள்ளல்தனம் தொடரும் தொடரும் தொடரும் .......... Thanks...
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைய மூலக்காரணம் யாரென்று ஆராய முற்பட்ட போது தான் பல உண்மைகள் தெரிய வந்தது.......... தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.க-வும் கிடையாது, திமுக-வும் கிடையாது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் முதலில் யாருக்கு வந்தது? கட்டுமரத்துக்கா, கோழைமணிக்கா.... இல்லை.
எல்லாப் புகழும் புரட்சித் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி ஆரு.,க்கே.
கன்னியாகுமரியில் இருந்த இரண்டு பாறைகளையும் அன்று சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் ஏக்நாத் ரானடே தலைமையில் இயங்கிய விவேகானந்தா நினைவு மண்டப கமிட்டி மற்றும் விவேகானந்தா கேந்திரத்திடம் ஒப்படைத்திருந்தது தமிழக அரசு.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டபின் பக்கத்தில் இருந்த மற்றொரு பாறையை 17-07-1977ல் தமிழக அரசாங்கத்திடமே ஒப்படைத்தது விவேகானந்தா கேந்திரம்.
ஒப்படைத்தது மட்டுமல்லாமல், 15-03-1979ல் தமிழக அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கப்பட்ட அந்த பாறையில் சுவாமி திருவள்ளுவருக்கு நினைவாலயம் மற்றும் திருவள்ளுவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதல்வர் திரு எம்.ஜி.ஆர்., அவர்களிடம் வைத்தது விவேகானந்தா கேந்திரம். இதற்கு முழுக்க முழுக்க பின்புலமாக இருந்து செயல்பட்டவர் திரு ஏக்நாத் ரானடே அவர்கள்.
அன்றைய முதல்வர் எம்ஜிஆரும் அதை உடனே ஏற்றுக் கொண்டு ஐயன் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் அழியாப்புகழ் மற்றும் அருமை, பெருமைகளை கருத்திற் கொண்டு இதற்கான அடிக்கல் நாட்டின் பிரதமரால் தான் நாட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படியே அன்றைய பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயை அழைத்து திருவள்ளுவர் நினைவாலயத்திற்கான அடிக்கல்லை மிகவும் பொருத்தமாக தமிழ் வருடப்பிறப்பன்று (15/04/1979) எம்ஜிஆர் நாட்டினார். அதே நாளில் திருவள்ளுவர் சிலைக்கான அடிக்கல்லை மொரார்ஜி தேசாயைக் கொண்டு கன்னியாகுமரியில் நாட்டினார்.
ஆக, கன்னியாகுமரில் திருவள்ளுவருக்கு இன்று கம்பீரமாக சிலை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு முழுமுதற் காரணம் தன்னலம் கருதா தானைத்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்.
"இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே"....... Thanks.........
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 36.
"படகோட்டி " படத்தில். மீணவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். . .
"தொழிலாளி " படத்தில் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். .
"விவசாயி" படத்தில் விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார்.
"பாசம்" படத்தில் தாயின் மகிமையும் தாயில்லாத பிரிவு எப்படிப்பட்டது என்பதை காட்டினார்.
"குடும்பத்தலைவன்" படத்தில் அண்ணன் தம்பி பாச ஒற்றுமையை காட்டினார்.
"பெற்றால்தான் பிள்ளையா" படத்தில் தந்தையின் பாசமும் குழந்தையின் பிரிவும் என்ன என்பதை உணர்த்தினார். .
இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு மைய கருத்துக்கள் கூறுவதுதான் வாத்தியார் படத்திற்கு உள்ள ஒரு பாடநூல் ஆகும்,
அப்படி கூறப்பட்ட மற்றொரு மைய கருத்து பாடநூல் தான் "தாய்க்கு தலைமகன்". ..
மகன் தாய் மீது உள்ள பாசத்தை காட்டி வாழ்ந்திருப்பார் வாத்தியார். .
தாய் மகன் மீது உள்ள பாசம் எப்படிப்பட்டது என்பதை காட்டினார் S. N. லட்சுமி. .
ஆயிரம் தவறு செய்தாலும் கணவர்தான் உலகம் என்பதை உணர்த்தினார் செளகார்ஜானகி. .
தந்தை மகள் பாசம் எப்படிப்பட்டது என்பதை நிருபித்து இருப்பார்கள். ஜெயலலிதாவும் S. V ரங்காராவ்
ஒரு குடும்பம் எப்படி இருக்கும் என்பதை தாய்க்கு தலைமகன் படத்தில் அனைவரும் வாழந்திருப்பார்கள்...கதையின் நாயகன் அசோகன் என்றாலும் வாத்தியார் நடிப்பு த்தான் அனைவரையும் பிரமிக்க வைத்தது பேசப்பட்டது. .முதல் முறையாக படத்தை பார்ப்பவர்கள் வாத்தியார் நடிப்பைக் கண்டு கண்ணீர் சிந்தாதவர் இல்லை...கலைஞர் மு கருணாநிதி அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். .எம்ஜிஆர் நடிப்பை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளர்கள் தாய்க்கு தலைமகன் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் சிந்தாமல் வெளியே வந்தால் அல்லது அவரது நடிப்பில் குற்றம் குறை கண்டுபிடித்தால் சினிமாவில் கதை வசனம் எழுதுவதை நிறுத்தி விடுகிறேன். .என்று சவாலான கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் எந்த பத்திரிக்கையிலிருந்தும் வரவில்லை. . அந்தளவுக்கு வாத்தியார் நடிப்பு பேசப்பட்டது. .
சாண்டோ சின்னப்பர் தேவர் நல்லவராகவும் கெளரவவேடத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ஒரே திரைப்படம் இதுதான்.
எந்த தாயாக இருந்தாலும் மூத்த பிள்ளை மீதுதான் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள் அதற்கு என்ன காரணம் என்று இந்த படத்தை விட இது வரை வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் யாரும் கூறியதில்லை. .அவ்வளவு தெளிவாக விளக்கமாக மனதில் ஆழமாக பதியும் படி தாய்க்கு தலைமகன் படத்தில் சின்னப்பர் தேவர் திரைக்கதையில் தெளிவுபடுத்திருப்பார். ...அதற்க்கான விளக்கம் படத்தில் S N லட்சுமி கூறும் வசனம் இதோ உங்கள் பார்வைக்கு. ...
ஒவ்வொரு பெண்ணின் வவாழ்க்கையிலும் ஒரு கண்டம் உண்டு. . அதுதான் தலைப்பிரசவம். அதிலே சுகம் பிரசவம் ஏற்பட்டு நல்ல படியாக குழந்தை பெற்று விட்டால் அதுதான் அவளுக்கு மறுபிறவி. .அப்படி உயிருக்கு போராடி நொந்து பெற்று எடுக்கும் போது ஏற்படுற வலிதான் பிள்ளைமேல் தாய்க்கு அளவுக்கு மேல் பாசம் வளர்கிறது. .அதனால் மூத்த பிள்ளை எந்த தப்பு செய்தாலும் எவ்வளவு கெட்டவனாக இருந்ததாலும் அவன்மீது தான் பாசம் அஅதிகமாகஇருக்கும். அதனால் தான் தாய்க்கு தலைமகன் என்று மூத்த பிள்ளையே சொல்கிறார்கள்
இதுதாங்க வாத்தியார் படத்தின் பாடநூல் என்றேன். .இதைவிட தெளிவான விளக்கம் யாராலும் கூற முடியாது. என்பதற்கு இதைவிட வேறு சான்றிதழ் வேண்டுமா ??
12 1 1967 ம் ஆண்டு அன்று தான் வாத்தியார் குண்டடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தமிழமே கண்ணீர் கடலில் மூழ்கியது.
13, 1. 1967 ம் ஆண்டு அன்று தாய்க்கு தலைமகன் படம் வெளிவந்து தியேட்டரில் ரசிகர்கள் கண்ணீர் மல்கினர்
வாத்தியார் நடித்த படங்களில் குறைந்த பாடல்கள் இடம் பெற்றுள்ள இரண்டு திரைப்படம் ஒன்று தாய்க்கு தலைமகன் மற்றொன்று நல்ல நேரம். .இரண்டு படத்திலும் நான்கு பாடல்கள் தான் இடம் பெறுகிறது.
தாய்க்கு தலைமகன் படத்தில் முமு பாடல்களும் கவியரசு கண்ணதாசன் எழுதினார். சின்னப்பர் தேவர் படத்தில் மனோகர் நடித்த முதல் படம் இதுதான்
பாட்டு நடிப்பு சண்டைக்காட்சி வசூல் அனைத்திலும்" தாய்க்கு தலைமகன்"... வெற்றி மகுடம் சூட்டி மாபெரும் சாதனை படைத்தது. மேலும் சாதனைகள் தொடரும் தொடரும் ....... Thanks.........
நேற்று இன்று நாளை -1974.
1971ல் நடிகர் அசோகன் அவர்கள் தன்னுடைய மகன் அமல்ராஜ்
பெயரில் துவக்கிய படம் .
மக்கள் திலகம் அவர்களின் நேரிடை பார்வையில் எல்லா பாடல்களும் மெல்லிசை மன்னரின் கை வண்ணத்தில் இனிமையான பாடல்கள் உருவாகி வந்தன .
அசோகனின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு
1971 இறுதியில் மக்கள் திலகம் தான் நடிக்கும்
உலகம் சுற்றும் வாலிபன்
இதயவீணை
ராமன் தேடிய சீதை
நினைத்ததை முடிப்பவன்
4 படங்கள் படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தும் போது
அசோகனுக்கு ஒரு செலவில்லாமல் ''நீ என்னென்ன சொன்னாலும் கவிதை '' பாடலை படமாக்கினார் .
1972 மக்கள் திலகம் தனி இயக்கம் கண்ட போது அசோகன் அவர்களின் நிலையில் தடுமாற்றமும் -தெளிவில்லாமல்
போனதும் படபிடிப்பு தள்ளி போனது .
1974 மே மாதத்தில் மக்கள் திலகம் பரிபூர்ண ஒத்துழைப்பு கொடுத்து படத்தை வெற்றிகரமாக ,எல்லா எதிர்ப்பையும் தவிடு பொடியாக்கி ''நேற்று இன்று நாளை '' படம் - வசூல் ரீதியாக மாபெரும் சாதனை புரிந்தது என்ற வரலாற்றை உருவாக்கினார் .
இதை புரியாத ஒரு சிலர் கட்டிய கதை - கதையாகவே முடிந்து போனது .
நடிகர் அசோகனின் குடும்பத்துக்கு இன்றும் வருமானம் தரும் படம் நேற்று இன்று நாளை .
நேற்று இன்று நாளை - 1974.
மக்கள் திலகம் திரியின் நண்பர்களுக்காக .....
மக்கள் திலகம் அவர்களின் அபரிதமான அரசியல் -சினிமா வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட அன்றைய ''சக்திகள்'' நேற்று இன்று நாளை படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு என்னென்ன யுக்திகளை கையாள முடியுமோ அத்தனையும் உண்டாக்கி
விநியோகஸ்தர்கள் -
திரைஅரங்கு உரிமையாளர்கள்
எம்ஜியார் மன்ற நிர்வாகிகள்
எல்லோரையும் மிரட்டி - அராஜககம் செய்து - வன்முறையை கட்டவிழ்த்து
படம் வராது என்ற சூழ் நிலையில் இருந்தது .
வேறு எந்த நடிகராக இருந்தாலும் நிலைமையை சந்திக்க முடியாமல் சரண் அடைந்திருப்பார்கள் .
கட்டுக்கோப்பான மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - மன்ற பொறுப்பாளர்கள் ஒன்று பட்டு விநியோகஸ்தர்கள் -
திரைஅரங்கு உரிமையாளர்கள்
இருவருக்கும் அரணாக நின்று படத்தை திரையிட முழு ஆதரவு தந்தனர் .
பறக்கும் படை என்ற போர்வையில் - ஆளும் கட்சி ஆதரவுடன் சென்னை அயனாவரம் - சயானி அரங்கத்தை சூறையாடினார்கள் .
பல இடங்களில் வன்முறை தலை விரித்தாடியாது .
12.7.1974 அன்று படம் வெளியானது .
தமிழகமெங்கும் 40 அரங்குகளில் திருவிழா போல் மக்கள் - ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கினார்கள் .
படம் மிக பெரிய வெற்றி பெற்றது .
மக்கள் திலகம் தன்னுடைய பொறுமையினாலும் , ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமலும் படம் வெளிவர பல யுக்திகளை கையாண்டு வெற்றி பெற்றார் .
ஒரு பக்கம் கோவை - மேற்கு சட்டமன்ற இடை தேர்தல் மூலம் முதல் அண்ணாதிமுக சட்ட மன்ற உறுப்பினர் செல்கிறார் .
மக்கள் திலகம் ஆதரவு பெற்ற கோவை நாடாளுமன்ற இடைதேர்தலில்
கம்யுனிஸ்ட் வேட்பாளர் வெற்றி .
புதுவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி
புதுவை மாநில ஆட்சியை முதல் முறையாக அதிமுக கைப்பற்றியது
அரசியலில் வெற்றி மேல் வெற்றி
திரை உலகில் சாதனை மேல் சாதனை
இப்போது கூறுங்கள்
ஒரு மக்கள் திலகத்தின் ரசிகனுக்கு இந்த அளவிற்கு விருந்து மேல் விருந்து
தந்து ''எல்லா புகழும் ஒருவருக்கே [இதயதெய்வம் எம்ஜியார் ] என்றென்றும்
என்று சொல்லும் அளவிற்கு நம்மை ஆக்கிவிட்ட வள்ளலின் பெருமை என்னவென்று சொல்ல ?
1974 ல்
அரசியல் ரீதியாக வெற்றி மேல் வெற்றி
உரிமைக்குரல் - 200 நாட்கள் - இமாலயவேற்றி
நேற்று இன்று நாளை - சிரித்து வாழ வேண்டும் - மிகப்பெரிய வெற்றி .
இப்போது சொல்லுங்கள் .....
நாம் எல்லோரும் கொடுத்து வைத்தவர்கள் ......... Thanks..........
இப்பொழுது மதுரை - சென்ட்ரல் dts திரையரங்கம் நிர்வாகி அளித்த தகவல்... கடந்த வாரம் வரலாற்று சிறப்புமிக்க, முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான வெற்றியை ருசித்த வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் படைப்பு " நாடோடி மன்னன்"... காவியத்தை பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ 7000 பேர்கள் ...என்ற சிறப்பு செய்தியை பகிர்ந்துள்ளார்.........
வரும் வெள்ளி முதல் (8/11/19) கோவை டிலைட்டில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு பின் பாசம் " தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ். குமார் .
பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்
1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம்தேதி ஒன்றிணைக்கப்பட்ட "பூம்பூஹர் ஷிப்பிங் கார்ப்பரேஷன் லிமிடெட்"....இவர்கள் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பலை" வாங்கி "தமிழ் பெரியார்" மற்றும் "தமிழ் பெரியார்" என்று பெயர் சூட்டப்பட்டது!!!
வர்த்தக ரீதியாக அந்த் "ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பழைய கப்பல்கள் " ஜனவரி 1979ஆம் வருடமும், பிப்ரவரி 1981 வருடமும் "ஸ்கிராப்" செய்யப்பட்டது.
ஹலடியா முதல் தூத்துகுடி போர்ட் வரையில் நிலக்கரி சொந்த கப்பலில் எடுத்துச்சென்றால் தான் அது லாபகரம், முழு உபயோகம் என்பதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 1985ஆம் ஆண்டு "தமிழ் அண்ணா" ஆகஸ்ட் 1985 செப்டம்பர் 1986ஆம் ஆண்டு "தமிழ் பெரியார்" மற்றும் ஜனவரி 1987ஆம் அன்று "தமிழ் காமராஜ்" என்று மூன்று கப்பல்கள் "புரட்சித் தலைவர் ஆட்சியில்" உலக அளவில் டெண்டர் விடப்பட்டு ஜப்பான் கப்பல் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து வெளிநாட்டு வாங்கி [ Bank of Tokyo] மற்றும் ஸ்டேட் வங்கிகளிடம் [ State Bank of India - Tokya Branch]கடனாக பெற்ற பணத்தில் வாங்கப்பட்டது.
எதுவும் தனது பெயரில் புரட்சித் தலைவர் செய்ததில்லை. அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்..........
கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
இதுதான் பாடமையா
நான் என்ன சொல்வதுநாட்டினில் நடப்பதை
கண்கொண்டு பாருமையா............ Thanks...
ஓர் மலேசிய ரசிகரின் கேள்விக்கு தலைவரின் தன்மையான பதில் :
கேள்வி : அண்ணாவின் இதயக்கனியாம் எங்கள் தங்கமே,நான் சென்னை வந்தால் தங்களை நேரில் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பாக்கியம் கிடைக்குமா?
பதில் : தம்பி என் புகைப்படத்தை நான் அனுப்புகிறேன்.அதே அளவுள்ள உங்கள் படத்தையும் சேர்த்து நுணுக்கத் திறமையுள்ள புகைப்பட நிபுணரிடம் கொடுத்து இணைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் மலேசியாவிலிருந்து இங்கு வருவதால் ஆகும் செலவுத் தொகையை அங்கே உள்ள வேலையில்லாமல் கஷ்டப்படுகின்ற ஏதாவதொரு தொழிலாளர் குடும்பத்திற்கு பயன்படுத்தவும்.
1974 ம் ஆண்டு வெளிவந்த கேள்வி பதில் பகுதி.
இதுதான் தலைவர் எம்.ஜி.ஆர்.சொல் செயல் அனைத்திலும் தர்மசிந்தனை.
வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்....வளர்க தூய தொண்டு.... Thanks........
மக்கள் திலகம் எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் : தமிழ்நாடு கோவை மாவட்டம்
மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.
மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.
அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.
வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.
அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.
நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.
இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.
அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.
இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார்.......எப்பொழுதும் வாழ்வார்......... Thanks.........
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் அறக்கட்டளை யை சார்ந்த திரு. ராமமூர்த்தி அவர்களின் தாயார் மறைவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். சௌ.செல்வகுமார், செயலாளர், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொது நல சங்கம்.......... Thanks...
"காவல்காரன் "... புரட்சித்தலைவரின் ஒயிட்அன்பிளாக் படங்களிலேயே மகத்தான வெற்றி பெற்ற காவியங்களில் சிறப்பு பெற்றது... துரோகி நடிகர் எம்.ஆர்.ராதா வால் துப்பாக்கியால் சுடப்பட்டு மக்களின் பிரார்த்தனையால் பூரணநலம்பெற்று காவல்காரன் படத்தில் மேற்கண்ட கட்சியில்தான் முதன்முறையாக நடித்தார் மிகவும்சிரமப்பட்டு நடித்தார் திரையரங்கில் இக்காட்சியை கண்ட ரசிகர்களும் தாய்மார்களும் கண்ணீர்விட்டு அழுதனர் ஒருதிரைப்படநடிகர் நடித்த காட்சிகளை பார்த்து அவர் ரசிகர்களின் திருப்திக்காகமட்டுமே நடிப்பவர் படம் எண்ணிக்கை மற்றும் சம்பளத்துக்காக நடித்தவர்அல்ல என்று பத்திரிக்கை அன்றுவியந்தது பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் மறுபிறப்பு நமக்கு உயிர்துடிப்பு என்று இன்றையநாள் அனைவருக்கும் இனியதாக இருக்கட்டும் மதுரை.எஸ் குமார்..... Thanks...
7-11-1969 ---7-11-2019 இன்று 50 ஆண்டுகள் பொன்விழா நிறைவடைந்து இன்று 51ம் வருடம் தொடக்கம் திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் வழங்கும் "நம் நாடு"... எக்காலத்திற்கும் உகந்த சமூக, அரசியல், கருத்து களஞ்சியம் தாங்கிய உன்னத படைப்பு.......... Thanks.........
இன்றுடன் (07.11.2019) மக்கள் திலகம் நடித்த "உரிமைக்குரல்" காவியம், திரைப்படம் வெளிவந்து 45 வருடங்கள் ஆகிவிட்டது. 7.11.1974 ல் தீபாவளி வெளியீடாக வந்த வெற்றி காவியம் உரிமைக்குரல். இயக்குநர் ஸ்ரீதருக்கு புதுவாழ்வு மக்கள் திலகத்தால் கிடைத்தது. மெல்லிசை மன்னரின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம் இது. 57 வயதில் மக்கள் திலகத்தின் சுறுசுறுப்பு பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நம்மை பிரம்மிக்க வைக்கும். வெள்ளி விழா திரைப்படமான இது சின்ன சின்ன ஊர்களிலும் 50 நாட்களை கடந்தது சிறப்பு செய்தி நேத்து பூத்தாளே பாடலில் தியேட்டரில் ஆண்களின் ஆட்டம் ஒவ்வொரு காட்சியிலும் களை கட்டியதால் சில் ஊர்களில் பெண்களுக்கென்று தனியாக காட்சிகள் திரையிட்டது கூடுதல் சிறப்பு. என் தாய் எனக்கு பாலூட்டி வளர்த்தாங்க ஆனால் இந்த நிலத்தாய் எனக்கு சோறு ஊட்டி வளர்த்தாங்க என்று மக்கள் திலகம் பேசும் க்ளைமேக்ஸ் வசனத்தின் போது இன்றும் தியேட்டரில் விசில் தூள் பறக்கும்........ Thanks.........
"தாய் சொல்லை தட்டாதே", 7-11-1961---7-11-2019
இன்று 58 ஆண்டுகள் நிறைவு பெற்று , 59ம் வருடம் துவக்கம் காணுகிறது... சென்னை பிளாசா101 நாள் பாரத் 101 நாள் மகாலட்சுமி 101 நாள் மதுரை கல்பணா 101 நாள் கோவை ராஜா 101 நாள் திருச்சி ஜூபிடர் 101 நாள் சேலம் நியூசினிமா 101 நாள் இலங்கை- கொழம்பு கிங்ஸ்லி 100 நாள் ஓடியது.
சிரித்து சிரித்து ரசிகர்களை சிறையிலிட்ட புரட்சிநடிகர் எம்ஜிஆர் நடித்த தாய்சொல்லை தட்டாதே 7-11-1961 வெளியானது !....... Thanks...
அனுதாப செய்தி*
--------------------------
அ.இ அ .தி.மு.க. வின் தீவிர தொண்டரும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மூத்த பக்தருமாகிய திரு.ஏ. தணிகாசலம் ( வயது 66 ) அவர்கள் உடல்நல குறைவால்*ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ,நேற்று இரவு 10 மணியளவில் (06/11/2019)* மாரடைப்பால் காலமானார் என்கிற துயர செய்தி* அறிந்ததும் இன்று (07/11/2019) காலை , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மூத்த பக்தர்கள் பலருடன் சென்னை , அவ்வை சண்முகம் சாலை அருகில் உள்ள மாவடி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று* அவரது பூத உடலுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தேன். என்னுடன், திருவாளர்கள்* ஜி.வெங்கடேச பெருமாள், ஆதம்பாக்கம் சேகர், மயிலை மகாதேவன், மீர்சாகிப் பேட்டை பிரபாகரன், திருமங்கலம் தண்டபாணி என்கிற சரவணன் ஆகியோர் இறுதி மரியாதையில் கலந்து கொண்டனர் , [பின்னர் திரு.தாமோதரன், திரு.கே.எஸ். மணி மற்றும் பலர் இறுதி அஞ்சலி செலுத்தியதாக நண்பர்கள் தகவல் அளித்தனர் .
திரு.தணிகாசலம் 1973 லிருந்து* என்னுடன் நெருங்கி பழகியவர் . ஞாயிறுதோறும் மாலை வேளையில் பல காலம் சந்தித்து உரையாடி வந்துள்ளோம் .* அவருடைய திருமணம், மற்றும் மகன்கள் திருமணத்திற்கும் கலந்து கொண்டுள்ளேன் .பழகுவதற்கு மிகவும் இனிய நண்பர் .* 1973ல் இருந்து பொது தேர்தல், இடை தேர்தல் எதுவாக இருந்தாலும் , தமிழகம் முழுவதும், முக்கிய நகரங்கள், தொகுதிகள் ஆகியவற்றிற்கு விஜயம் செய்து , அன்றைய சூழ்நிலையில் மிக துல்லியமாக அ. தி. மு.க. கட்சியின் செயல்பாடு, தேர்தல் கூட்டங்கள், கட்சியின் அணுகுமுறை , தொண்டர்கள்* ஆதரவு, வெற்றி வாய்ப்பு ஆகியவற்றை இன்றைய மீடியாக்களில் தெரிவிக்கும் கருத்து கணிப்பு போல செய்திகள் சேகரித்து , சென்னை வந்ததும் , நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார் .அவருடைய வரவை எதிர்பார்த்து நாங்களும் காத்திருப்போம் .மறக்க முடியாத மலரும் நினைவுகள்.*
அன்னாரது இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை 4 மணியளவில் புறப்பட்டு , மயிலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது .
அவரது ஆன்மா சாந்தி அடைய அவர் இறுதிவரை நேசித்த நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அருள் புரியட்டும் .
அவரை இழந்து வாடும் மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள்*அனைவருக்கும், அனைத்து எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .
https://youtu.be/meF7TbVpEbU.......... Thanks..........
இதயக்கனி மக்கள் திலகம் பக்தர்கள்... மறைந்த உடன்பிறப்புகளுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் திரி உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்...
உங்களுக்கு தெரியுமா??? ...
எம். பக்தவத்சலம் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
எம். பக்தவத்சலம் கடைசி பிறந்தநாள் [ 90வது பிறந்த நாள்] அவரது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் ரூபாய் 90,000/= ஆயிரம் வழங்கினார். அத்துடன் எம். பக்தவத்சலம் அவர்களின் முன்னைய சேவைகளை பாராட்டி நினைவு கூர்ந்தார்.
கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் "உண்டு" இங்கே........... Thanks.........
எம்.ஜி.ஆரின் மனதுக்கு நெருக்கமான ஒரு சின்னம்தான். உண்மையில் இரட்டை இலையை விட கூடுதலாக அவரது வாழ்வில் பயணித்த ஒரு பொருள் தொப்பிதான்.
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் இரட்டை இலைக்கு உள்ள முக்கியத்துவம் போல் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் தொப்பிக்கு தனியிடம் உண்டு.
இரண்டு பொருட்களை நீங்கள் சொன்னால் ஒருவருக்கு எளிதாக எம்.ஜி.ஆரை நினைவுட்டிடமுடியும். அவை தொப்பியும் கறுப்பு கண்ணாடியும்! உண்மையில் எம்.ஜி.ஆர் எப்போது தொப்பி அணிய ஆரம்பித்தார் எனத்தெரியுமா...
எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பி கண்ணாடிகள் அணிவதில் சிறுவயதிலிருந்தே மிக விருப்பம். சினிமாவில் நடிக்கத்துவங்கிய காலத்தில் பொது இடங்களில் ரசிகர்களின் அன்புப்பிடியில் இருந்து தப்பிக்க தனது பாகவதர் கிராப் தலைமுடியை மறைக்க ஒரு துண்டை தலைப்பாகை போல தலையில் கட்டி லாவகமாக மறைத்துக்கொள்வார்.
திரைப்பட நடிகரானபின் தான் இளமையோடும் அழகோடும் தெரிவதற்கும் கதாபாத்திரத்தை வித்தியாசப்படுத்திக்காட்டவும் பல படங்களில் விதவிதமான தொப்பி அணிந்து நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரைப்போல் வேறொரு நடிகருக்கு தொப்பி பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.
காவல்காரன் படத்தின்போதுதான் எம்.ஜி.ஆர் சுடப்பட்டிருந்தார். இதனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் எடுக்கப்பட்டவை. இதனால் பல காட்சிகளில் முகம் சோர்ந்தும் குரல்வன்மை கரகரவென கவர்ச்சியில்லாமலும் இருக்கும். படத்தில், “நினைத்தேன் வந்தாய் நுாறு வயது” பாடல் எடுக்கப்பட்ட அன்று எம்.ஜி.ஆர் வித்தியாசமாக தெரிய வெள்ளைத் தொப்பி அணிந்து சில காட்சிகளில் ஆடினார். பாடல்காட்சி முடிந்ததும் எம்.ஜி.ஆரிடம் அங்கிருந்தவர்கள், “அண்ணே, நீங்க தொப்பியில் நீங்க 10 வயசு குறைஞ்சி தெரியறீங்க” எனப் புகழ்ந்து தள்ள, தன் இமேஜ் மீது எப்போதும் பெரிய அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு வெட்கமாகப்போய்விட்டது. தன் முகப்பொலிவும் கவர்ச்சியும் குறைந்துபோயிருந்ததாக வருத்ததத்தில் இருந்தவருக்கு இது பெரும் மகிழ்ச்சியை தந்தது. இதன்பின்னர் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் விதவிதமாக தொப்பிகளை தேடிப்பிடித்து பயன்படுத்தினார்.
திரைப்படங்களில் மட்டும் அதுவரை தொப்பி பயன்படுத்திவந்தவருக்கு அடிமைப்பெண் திரைப்படம், நிரந்தரமாக தொப்பி அணியக் காரணமானது. படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்தபோது பாலைவனத்தில் நடந்த படப்பிடிப்பினால் எம்.ஜி.ஆர் சோர்ந்துபோனார். படப்பிடிப்பை காணவந்த நண்பர் ஒருவர் முதன்முதலாக புஸ்குல்லா எனப்படும் வெள்ளைத்தொப்பியை கொடுத்தார். ஜெய்ப்பூரின் கடும் வெயிலை தொப்பியினால்தான் எம்.ஜி.ஆரால் சமாளிக்கமுடிந்தது. படப்பிடிப்பு முடிந்தபின் எம்.ஜி.ஆர் அதன் பயன்பாட்டைக் கருதி தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களிலும் வெயிலை சமாளிக்க பயன்படுத்த ஆரம்பித்தார். 'தொப்பி' எம்.ஜி.ஆர் வழக்கமான எம்.ஜி.ஆரை விட இளமையாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிய தொப்பியை அன்றுமுதல் நிரந்தரமாக்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி அடையாளமான வரலாறு இதுதான். கண்ணாடியை ஏற்கனவே அணிந்துவந்திருக்கிறார்.
பின்னாளில் எம்.ஜி.ஆர் இந்த தொப்பியின்றி வெளியிடங்களுக்கு வருவதையோ, படம் எடுப்பதையோ விரும்பியதில்லை. தொப்பி நிரந்தரமானபின் நெருக்கமான நண்பர்கள் குடும்ப உறவினர்கள் தவிர வேறுயாரிடமும் தொப்பியின்றி காட்சி தரமாட்டார். ஆரம்பத்தில் தொப்பிக் கடைகளில் ரெடிமேட் தொப்பிகளை அணிந்துவந்த எம்.ஜி.ஆர் ரசாக் என்ற தொப்பி தயாரிப்பாளரிடம் தனக்கென பிரத்யேகமாக தொப்பிகளை தயாரித்து தர பணித்தார். இவரே எம்.ஜி.ஆருக்கு இறுதிவரை தொப்பி தயாரித்துக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆரின் தொப்பி வழக்கத்துக்கு மாறான தன்மையில் தயாரிக்கப்படும். காஷ்மீர் போன்ற குளிர்பிரதேசங்களில் வளரும் வெள்ளை செம்மறி ஆட்டின் முடியை பதப்படுத்தி அதை பலகட்டங்களில் மேம்படுத்தி அவை தயாரிக்கப்பட்டன. இதனுள் 3 அடுக்குகளில் கேன்வாஸ் வைத்து தைக்கப்பட்டிருக்கும். சிறுசிறு வெளியே தெரியாத ஓட்டைகளினால் வெளிக்காற்று எளிதாக உள்ளே சென்றுவரும் என்பதால் தலையில் வியர்வையோ வேறு எந்த சங்கடங்களோ ஏற்படாது. அதிக எடை இல்லாத புஸ்புஸ் குல்லா தலையில் இருப்பதாகவே தெரியாது. அடிக்கடி தொப்பிகளை மாற்றும் இயல்புடைய எம்.ஜி.ஆர், மொத்தமாக அரை டஜன் தொப்பிகளை ஆர்டர் வரவழைத்து அவற்றில் தனக்கு பொருத்தமான 2ஐ மட்டும் எடுத்துக்கொள்வது வழக்கம். ஆனால் அத்தனைக்கும் பணம் கொடுத்துவிடுவார்.
பின்னாளில் அவர் திமுகவிலிருந்து பிரிந்தபின் இந்த தொப்பி பெரும்பிரச்னையானது அவருக்கு. திமுக மேடைகளில் அவரை தொப்பித்தலையா என தரம் தாழ்ந்து கிண்டலடித்தது திமுக. தலை வழுக்கையை மறைக்கவே அவர் தொப்பி அணிவதாக அவர்கள் விமர்சனம் செய்தனர். முதல்வரானபின் இன்னும் நிலைமை மோசம். ஆட்சியின் நிர்வாக விஷயங்களை விட்டுவிட்டு அவரது தொப்பிதான் அதிகம் விமர்சனத்திற்குள்ளானது. திமுக மேடைகளில் எம்.ஜி.ஆரை தொப்பித்தலையா என்று பேசி எம்.ஜி.ஆருக்கு எரிச்சலை தந்தனர்.
பல சமயங்களில் ரசிகர்கள் என்ற போர்வையில் மேடையில் எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிப்பதுபோல் அவரது தொப்பியை கழல வைக்க முயன்றனர் திமுகவினர். மதுரையில் ஒருமுறை அவருக்கு மாலையணிவிக்கும் சாக்கில் அவரது தொப்பியை தட்டிவிட்டார் ஒரு திமுக மாணவர். ஆனால் படங்களில் மட்டுமல்ல நிஜமாகவும் தனக்கு ஸ்டண்ட் தெரியும் என்பதை அவரிடம் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். அதன்பிறகுதான் திமுகவினர் இந்த நேரடி சாகசத்திற்கு முற்றுப்புள்ளிவைத்தனர். ஆனால் மேடைகளில் தங்கள் தொப்பி விமர்சனத்தை கைவிடவில்லை.
இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை கேள்வி கேட்கப்பட்டபோது,“ நான் தொப்பி அணிவதை பலர் கேலியும் கிண்டலுமாக விமர்சனம் செய்றாங்க. அந்தநாள்ல நான் ஜிப்பா போட்டிருந்தேன். பின்னாளில் காலர் வெச்ச முழுக்கைச் சட்டை போட ஆரம்பிச்சேன். ஒருமுறை சினிமா நிகழ்ச்சியில கலந்துக்கிட்டப்ப சட்டையின் கையில கிழிஞ்சிடுச்சி. அதை மறைக்க முழுங்கை வரை மடிச்சிவிட்டேன். உடனே 'எம்.ஜி.ஆர் ரவுடியைப்போல சட்டையை சுருட்டிவிட்டிருக்கார்'னு சொன்னாங்க. இதுக்கு என்ன சொல்றது.
உடலமைப்புக்கு, பாதுகாப்புக்கு எதுதேவையோ அதைத் தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சரி நானே ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். என் தலையில் முடியே இல்லைன்னு வெச்சிக்குவோம். அப்போ என்னை நீங்க எம்.ஜி.ஆர் னு ஏத்துக்கமாட்டீங்களா..? வடநாட்டில் இளமையான நடிகர்கள்கூட தலையில் பொய்முடி(விக்) வெச்சிக்கிட்டுத்தான் வெளியே வர்றாங்க. அதுக்கு என்ன சொல்றீங்க?... இன்னொருத்தருடைய வற்புறுத்தலுக்காக மற்றவங்க என்ன சொல்வாங்களோ, என்ன நினைப்பாங்களோங்கறதுக்காக நம்மை மாத்திக்கக்கூடாது. அத்தியாவசிய தேவைகளை குறைச்சிக்கக்கூடாது. ” என எதிர்கட்சிகளுக்கு பதிலடி தந்தார் எம்.ஜி.ஆர்.
தன் சினிமா கவர்ச்சியினால்தான் எம்.ஜி.ஆர் தேர்தலில் வென்றார் எனக்கருதி அவரது இளமை இமேஜை அடித்துநொறுக்குவது என்பதே எம்.ஜி.ஆர் மீதான இந்த தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணம்.
திமுகவின் குடும்ப இதழ் ஒன்றில் தலைமைச் செயலகத்தில் காலையிலும் மாலையிலும் எடுக்கப்பட்ட இருபடங்களை வெளியிட்டு எம்.ஜி.ஆரின் கிருதா வித்தியாசத்தைக் கூறி முதல்வருக்கு மட்டும் எப்படி சில மணிநேரங்களில் இத்தனை நீளமாக தலைமுடி வளர்கிறது என கேள்வி எழுப்பியிருந்தது திமுக. இப்படி எம்.ஜி.ஆரின் மீதான தொப்பி விமர்சனம் எல்லையற்றுப்போனது. இறுதியாக தொப்பி அரசியல் மக்களிடையே எடுபடாததால் கால ஓட்டத்தில் அந்த விமர்சனத்தை நிறுத்திக்கொண்டது திமுக.
ஆனால் திமுகவின் இந்த அஸ்திரத்தை திமுகவுக்கு எதிராகவே செயல்படுத்திய சந்தர்ப்பம் ஒன்று நிகழ்ந்தது. 1983 ம் ஆண்டு மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் எம்.ஜி.ஆர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அன்றைக்கு பரபரப்பான அரசியல் சூழலில் எதிர்கட்சியான திமுக எம்.ஜி.ஆர் அரசு மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை வைக்கப்போவதாக எம்.ஜி.ஆருக்கு உளவுத்துறையிலிருந்து தகவல் போனது. அதேசமயம் தொப்பி பற்றிய தாக்குதல் உச்சத்தில் இருந்தநேரம் அது. பேட்டியளித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் குற்றச்சாட்டு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எம்.ஜி.ஆர் பதிலைக் கூறாமல் ஒரு காரியம் செய்தார். மெல்ல தன் தலையிலிருந்து தொப்பியை கழற்றி மேஜைமீது வைத்தார். அவ்வளவுதான் அடுத்த நொடி புகைப்பட .ஃப்ளாஷ்கள் மின்னத் துவங்கின. மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்புச்செய்தி எம்.ஜி.ஆர் 'தலைச் செய்தி'தான். எம்.ஜி.ஆரின் தொப்பியற்ற தோற்றத்தை வெளியிட்ட பத்திரிகைகள் கருணாநிதியின் குற்றச்சாட்டை கடைசிப்பக்கத்தில் முக்கியத்துவம் இன்றி வெளியிட்டன. அதுதான் எம்.ஜி.ஆரின் சாதுர்யம்.
1984 ம் ஆண்டு தஞ்சை சென்ற எம்.ஜி.ஆர் ராஜராஜசோழன் அரண்மனைக்கு சென்றபோது மயங்கிவிழுந்தார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை பாதித்தது. அப்பல்லோவிலும் பின்பு அமெரிக்காவிலும் சிகிச்சையளிக்கப்பட்டபோது அவரது மூளையில் கட்டி இருந்தது தெரியவந்தது. நீண்டகாலமாக தலையில் தொப்பி அணிந்ததால் இது உருவானதாக சொல்லப்பட்டது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற சமயம் தன் இமேஜை கட்டிக்காப்பதில் பெரும் அக்கறை கொண்ட எம்.ஜி.ஆருக்கு ஒரு சோதனை வந்தது.
எம்.ஜி.ஆர் உயிருடன் இல்லை என்பதாக தமிழகத்தில் பரவிய வதந்தியை முறியடிக்க அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆரின் பேசுவதும் சிரிப்பதுமாக வீடியோ எடுக்க திட்டமிட்டனர். வீடியோ படத்தில் தொப்பி அணியக்கூடாது என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலில் வழக்கமான தோற்றத்தில் எம்.ஜி.ஆரை படம்பிடித்தது காமிரா.
அழகும் உடல்கட்டும் கொண்ட எம்.ஜி.ஆர் பரிதாபமாக நம் வீட்டுப்பெரியவர்போல படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்த காட்சி தாய்மார்களை இன்னும் கருணைப்படவைத்தது. அந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் படுத்தபடியே வென்றார்.
1987 ம்ஆண்டு டிசம்பர் மாதம் 24ந்தேதி அதிகாலை தமிழகத்தை கண்ணீர் கடலில் மூழ்கவைத்தார் எம்.ஜி.ஆர். அரைநுாற்றாண்டு காலம் தமிழகத்தின் தவிர்க்கவியலாத தலைவராக வாழ்ந்து மறைந்த எம்.ஜி.ஆரின் உடலோடு காலம் முழுக்க அவர் நேசித்து அணிந்து மகிழ்ந்த தொப்பியையும் சேர்த்து அடக்கம் செய்தனர்.
தேர்ந்த ஒரு ஓவியரால் எம்.ஜி.ஆரை வரைய ஓரிரு நிமிடங்கள் போதும். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது உங்களுக்கு எம்.ஜி.ஆராகவே தெரியும். ஆனால் இந்த இரு அடையாளங்களுமின்றி எம்.ஜி.ஆரை அடையாளப்படுத்த எக்காலத்திற்குமான ஒர் அடையாளம் உண்டு. அது எம்.ஜி.ஆர் தன் தலைக்கு அணிந்த தொப்பி அல்ல; தன் உள்ளத்தில் அணிந்த மனிதநேயம்!
✌✌✌. M.G.R.✌✌✌........ Thanks...
"உலகம் சுற்றும் வாலிபன்" காவியத்தின் மறு வெளியீடுக்கு சுவரொட்டிகள் (Wall Posters) தயாராகி வருவதாக சிறப்பு தகவல்கள்.........