-
#ஜனவாி_17
அதுவரை யாருக்கும் தெரியாமல்
இருந்த #புரட்சித்தலைவா்_எம்ஜிஆர்
பிறந்த நாள் பொது மக்களுக்குத்
தெரிந்தது எப்படி?
சென்னை 'யானைக்கவுனி' (எலிபண்ட்
கேட்) பகுதியில் எம்.ஜி.ஆர். வசித்து வந்த
அந்தக் காலத்தில் , அருகில் இருந்த
ஸ்ரீமுருகன் டாக்கீஸ் கால்நடையாகவே
சென்று படம் பார்க்கும் வழக்கத்தைக்
கொண்டிருந்தார் .
அப்பொழுது அவர் நாடக நடிகர் என்ற
முறையிலும் , பரமசிவ முதலியார்
தியேட்டர் உரிமையாளர் என்னும்
முறையிலும் ஒருவருக்கொருவர்
அறிமுகமாகி , நாளடைவில் அது
நட்பாகக் கனிந்தது .
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில்
நடித்துப் புகழ் பெற்று வசதியான
நிலைக்கு வந்த பிறகும்கூட அவருக்கும்
முதலியாருக்கும் இடையிலிருந்த அந்தப்
பழைய நட்பும் பாசமும் கொஞ்சம் கூட
குறையாமல் வளர்ந்து பெருகிக்
கொண்டே வந்தது .
வயது வளர வளர – வசதிகள் பெருகப்
பெருக , இருவருடைய நட்பும், தாம்புக்
கயிறுபோல இறுகி முறுக்கேறியது .
ஏனென்றால் , அது தூய , உண்மையான
நட்பு !
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆன
பிறகு 1978 ஜனவரி மாதம் 17 ஆம் தேதி
‘தினத்தந்தி’ நாளிதழில் முதலியார் ஒரு
விளம்பரம் கொடுத்தார் .
அதில் ‘‘இன்று 61–வது பிறந்த நாள்
விழா காணும் எனது ஆரூயிர் குடும்ப
நண்பர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன்
வாழப் பிரார்த்தித்து வாழ்த்தும்
வி.எம்.பரமசிவ முதலியார்’’ என்று
குறிப்பிட்டு இருந்தார் .
அதைப்பார்த்த எம்.ஜி.ஆர்.,
முதலியாரை தொலைபேசி வாயிலாக
அழைத்து ,
‘‘என் பிறந்த நாள் உங்களைத்தவிர
யாருக்குமே தெரியாது . இதுவரைக்கும்
யார்கிட்டேயும் நான் சொன்னதும்
கிடையாது., சொல்றதும் இல்லை .
அப்படி இருக்கும்போது இன்னிக்கு
நீங்க ஏன் அதை ‘தினத்தந்தி’யில்
போட்டிங்க ?’’ என்று அன்புடன் கடிந்து
கொண்டார் .
அதற்கு முதலியார், ‘‘ இப்போ
நீங்க முந்தி மாதிரி சினிமா நடிகர்
இல்லே . இந்தத் தமிழ்நாட்டின்
முதலமைச்சர் .
இதுவரைக்கும் இல்லேன்னாலும்,
இப்போவாவது – இனிமேலாவது
உங்க பிறந்த நாள் எதுன்னு எல்லா
மக்களுக்கும் தெரியட்டுமேன்னுதான்
தினத்தந்தியிலே போட்டேன் ’’ என்றார் .
புரட்சித் தலைவரால் பதில் ஏதும்
பேச முடியவில்லை . அதற்குப் பிறகுதான்
தலைவா் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்
ஜனவரி 17 என்பது அவருடைய
அத்தனை ரசிகப் பெருமக்களுக்கும்
மற்றும் அரசியல் , திரை உலக
நண்பர்களுக்குமே தெரிய வந்தது .
அதனைத் தொடர்ந்து , ஒவ்வொரு
ஆண்டும் ஜனவரி 17 , எம்.ஜி.ஆர். பிறந்த
நாளில் முதலியாரின் வாழ்த்துச் செய்தி
தவறாமல் ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்து
கொண்டிருந்தது .
புரட்சித் தலைவா் , மறைந்த
அடுத்த நாள் பரமசிவ முதலியார் பிறந்த
நாள் . ஆமாம். 25.12.1924–ல் முதலியார்
பிறந்தார்.
எம்.ஜி.ஆர். முதல்–அமைச்சரான
பின்னர் அவருக்கு பிறந்த நாள்
வாழ்த்துக்கூறி , எந்த ‘‘தினத்தந்தி’’யில்
எந்த முதலியார் விளம்பரம் செய்து வந்தாரோ – அதே ‘‘தினத்தந்தி’’யில்
அதே முதலியார் எம்.ஜி.ஆர். இறந்த
நாளான தனது பிறந்த நாளில் இப்படி
விளம்பரம் செய்தாா் .
‘‘எனது ஆரூயிர் குடும்ப நண்பர்
எம்.ஜி.ஆர். மறைந்த இந்த நாளில்
(டிசம்பர் 24) அவருடைய ஆன்மா சாந்தி
அடைய இறைவனைப்
பிரார்த்திக்கிறேன் .
– இப்படிக்கு, வி.எம்.பரமசிவ முதலியார்,
மிராசுதார் , சுரோத்தியம்தாரர் ,
உரிமையாளர் ஸ்ரீமுருகன் டாக்கீஸ் , சென்னை–1’’.
நேசமும் பாசமும் ஒன்று கலந்த
இந்த நினைவாஞ்சலிச் செய்தி
2005–ஆம் ஆண்டு வரையிலும் நாள்
தவறாமல் ‘தினத்தந்தி’யில் வந்தது.
அதற்கு அடுத்த ஆண்டு அது
வரவில்லை. ஏனென்றால் முந்தின
ஆண்டோடு அது முடிந்து போய் விட்டது.
காரணம் 27.8.2006–ல் தனது 81–வது
வயதில் வி.எம்.பரமசிவ முதலியார்
காலமானார் .......... Thanks.........
.
-
-
சஷ்டியப்த பூர்த்தி விழா செய்தி .
--------------------------------------------------
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவை சார்ந்த திரு.குணசேகரன்* இன்று (08/11/19) சஷ்டியப்த பூர்த்தி விழாவை சென்னை மேற்கு மாம்பலம் ஆர்யா கவடா* சாலையில் உள்ள கௌரி மினி ஹாலில் சிறப்பாக*கொண்டாடினார் .**
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் போன்ற அமைப்புகளை சார்ந்த பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
திரு.குணசேகரன், திருமதி சுகுணாதேவி தம்பதியர் இன்று போல் எல்லா வளமும்,நலமும் , பெற்று பல்லாண்டு காலம்* நமது இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* வாழ்க* என வாழ்த்துவோமாக .
-
-
டியர் ஜேம்ஸ் ...........
உங்கள் ஆதங்கம் புரிகிறது .எம் ஜி.ஆர்., திரை உலகில் நிகழ்த்திய சாதனைகளை அனைவரும் அறிவார்கள் .பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ யார் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான் என்பது விநியோகஸ்தர்களுக்கும் நன்கு தெரியும் . நேற்றைய தலைமுறை மக்களுக்கும் எம்ஜிஆர் தான் வசூல் சக்கரவர்த்தி என்பதை அறிவார்கள் . ஆனால் குறிப்பிட்ட சில சிவாஜி கணேசனின் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் தோல்வி களை மறைக்க எம்ஜிஆர் படங்களை பற்றி தவறான தகவலை இணைய தளத்திலும் , முக நூலிலும் , சில குழுக்களிலும் பதிவிட்டு அற்ப மகிழ்ச்சி கொள்கிறார்கள் .
இதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் . சிவாஜியின் வெற்றி தோல்வி புள்ளி விவரங்கள் அனைவரும் அறிந்ததே .
உங்கள் கவனத்தை சற்று மாற்றி கொண்டு எம்ஜிஆரின் நடிப்பாற்றல் பற்றிய பதிவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளவும் . உங்களுக்கு பிடித்த நடிப்பு காட்சிகள் , சண்டை காட்சிகள் , எம்ஜிஆரின் ஆளுமைகளை பற்றி பதிவிடவும் .பொன்னான நேரத்தை எம்.ஜி.ஆர் ., நினைவுகளுடன் நாம் பயணிப்போம் ..............(ஒரு ரசிக நண்பர் இன்னொரு ரசிக தோழருக்கு கூறிய விளக்கம்)......... Thanks.........
-
மதுரையில் பொங்கலுக்கு டிக்கெட் மொத்தமாக வாங்கி கிழிக்க ஒரு கும்பலே கும்பலாக காத்து கிடக்கிறது என மதுரை திரைப்பட விநியோகஸ்தர்கள் தெருவில் கோரஸ் ஆக கேட்கிறது... நண்பர்கள் தகவல்...
-
நாளை ஞாயிறு* முதல் (10/11/19) விருதுநகர் , அல்லம்பட்டி , ஸ்ரீராம் அரங்கில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .
-
-
-
-
-
-
மக்கள் குரல் -9/11/19
விக்கிரவாண்டி தொகுதியில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்*
--------------------------------------------------------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு இணையாக எந்த ஒரு தலைவரும் திரை துறையிலிருந்து அரசியலுக்கு* வர முடியாது .* முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு .
--------------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் தலைவர் , பாரத ரத்னா ,டாக்டர் எம்.ஜி.ஆர். முதலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நாட்டு மக்களுக்கு நன்மை செய்தார் .* பல ஆண்டு காலமாக மக்களுக்கு சேவை செய்தார் .* பலமுறை* சட்டமன்ற உறுப்பினராக இருந்து* மக்களின் அன்பை பெற்றார் .**
தான் வாழ்நாளில் சாதிக்க நினைத்ததை திரைப்படங்களில் நடிக்கும்போதே மக்களுக்கு எடுத்துச் சொன்னார் .* ஆனால் விஷமிகளாக இருக்கின்ற சில துரோகிகள் அவரின் உழைப்பை மட்டும் பெற்றுக் கொண்டு , அவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை .* அவருக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்தை கூட கொடுக்க மறுத்த காரணத்தினால், தான் அண்ணா கண்ட கனவை நனவாக்க வேண்டுமென்பதற்காக அண்ணா தி.மு.க. என்கிற ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார் .**
அவருக்கு இணையாக எந்தவொரு தலைவரும் , திரை துறையில் இருந்து அரசியலுக்கு அவர் மாதிரி வர முடியாது என்பதை மக்கள் முடிவு செய்திருக்கிறார்கள் .தன்* உயிர் இருக்கும்வரை* நாட்டு மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.*
-
தினத்தந்தி - 01/11/2019...
என்றென்றும் கண்ணதாசன்*...
----------------------------------------------
கண்ணதாசனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் வி.பி.ராமன் என்ற வழக்கறிஞர் .வி.பி.ராமனின் தந்தையும் ஒரு வழக்கறிஞர் .* லாயிட்ஸ் ரோடில் (அவ்வை சண்முகம் சாலை ) அடுத்தடுத்து நான்கு பங்களாக்கள் அவருக்கு இருந்தது .இதில் ஒன்றில்தான், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் , எம்.ஜி.ஆரும், அவரது சகோதரர் சக்கரபாணியும் வாடகைக்கு குடியிருந்தனர் .
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவு .* தாங்கள் குடியிருந்த வீட்டையே வாங்க வேண்டும் என்பது அவர்களின் ஆசை .* ஆனால் அதற்கு வாடகை தரவே வருமானம் போதாதா நிலையில் எப்படி வாங்குவது .
ஒருநாள் வி.பி. ராமனின் தந்தை எம்.ஜி.ஆரை அழைத்து வீட்டை விற்க போகிறேன் .வேறு ஒருத்தருக்கு தர மனமில்லை.* நீயே வாங்கி கொள் என்றார் .* பதிலுக்கு*எம்.ஜி.ஆர்., வாங்கணும்னு ஆசைதான் . ஆனால் இப்போ இருக்க சூழல்ல வாங்க முடியாது என்றார் .
ஏன் முடியாது. இதுவரையில் நீ தந்த வாடகையை அட்வான்ஸாக வைத்துக் கொள்கிறேன் . பாக்கியை கொஞ்சம் கொஞ்சமாக தா என்றார் வி.பி.ராமனின் தந்தை*
அப்படி எம்.ஜி.ஆர். வாங்கிய வீடுதான் இன்றைக்கு அ.இ .அ .தி.மு.க. வின் தலைமை அலுவலமாக* இருக்கிறது .* *இதை எம்.ஜி.ஆர். நான் ஏன் பிறந்தேன்*என்கிற தான் எழுதிய நூலில் குறிப்பிட்டு உள்ளார். அதை வெளியிட்டது கண்ணாதாசன் பதிப்பகம் ........ Thanks.........
-
தினகரன்* *-வெள்ளி மலர்*........
-------------------------------------------
நான் இல்லாமே நடக்காது - கவிஞர் வாலி .
---------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பொதுவாக அடிக்கடி கவிஞர் வாலியை வெறுப்பேற்றுவார் .அதை புத்திசாலித்தனமாக எதிர் கொள்ளும் முறையை எம்.ஜி.ஆர். ரசிப்பார் .
அப்போது தன்* கனவு படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை பெரும் பொருட்ச்செலவில் எடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வாலியை சந்தித்தபோது "இந்த படத்தோட டைட்டில் கார்டில் உங்க பேரு இருக்காது கவிஞரே , ஏன்னா,இந்த படத்திற்கு உங்களிடம் பாட்டு கேட்க போவதில்லை . என்று விளையாட்டாக சொன்னார் .
வாலி , பதிலுக்கு, அண்ணே, என் பேரு இல்லாமே உங்க படத்தை , நீங்க ரிலீஸ் பண்ணவே* முடியாது , இது சவால் என்றார் .**
அப்படியா ? பார்த்துவிடலாமா என்று உசுப்பு ஏற்றிவிட்டார்* எம்.ஜி.ஆர்.*
அண்ணே, உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலிலேயே என் பெயர் இருக்கு .* அதை எடுத்துட்டா,* உலகம் சுற்றும் பன்* என்றுதான் நீங்க படத்தை ரிலீஸ் செய்யணும் .
வாலி இல்லாமே எப்படி வாலிபன் வெளியாகும் என்றார் .
எம்.ஜி.ஆருக்கு சிரிப்பு* பொத்துக்* கொண்டு வந்தது .
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக, பின்னர் 4 பாடல்கள் எழுத எம்.ஜி.ஆர்.*வாய்ப்பளித்தார் .* அதில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின ...... ...... Thanks.........
-
தினகரன்* *- வெள்ளிமலர் -01/11/2019...........
------------------------------------------------------
தாலி பாக்கியம்*
------------------------------
எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது தமிழகம் எங்கும்* ஒளி விளக்கு படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் "பாடல்தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது .
எம்.ஜி.ஆர். உடல்நலம் தேறி, சென்னை திரும்பியதும் , உடல்நலம் விசாரிக்க நேரில் போனார் வாலி.* அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.. ஜானகி ,வாலியிடம் ,* ஒளி விளக்கு படத்தின்* உங்க பாடலான '"இறைவா உன் மாளிகையில் " பாடலைத்தான் நாடே பாடி, உங்க அண்ணனுக்கு பிரார்த்தனை செய்தாங்க .* அதன் பலனாலேதான் அவர் நல்லா ஆயிட்டாரு .* என்று உருக்கமாக சொன்னார் .
அப்போது வாலி, அம்மா அது வாலி பாக்கியம் இல்லை,. உங்க தாலி பாக்கியம் தான் என்று கூறி நெகிழவைத்தார் ....... Thanks..........
-
-
-
-
1970பது களில் புரட்சித் தலைவர் நான் தான் ... தி.மு.க. தி.மு.க தான் நான் ... என்று சொன்னாரே நினைவில் இருக்கிறதா? அதை ஆணித்தரமாக வலியுறுத்தும் ஒரு அபூர்வ ஆவணம் : ஆதாரம் முத்தாரம் 01/05/1964.
பேரறிஞர், நாவலர், பேராசிரியர், கலைஞர், .......என்று பலர் இருந்தும் ... நமது புரட்சித் தலைவர் "புகைப்படம்" ... அவருக்கு பின்னால் உதய சூரியன் சின்னம் படத்துடன் விளம்பரம் ......தி.மு.கவின் வாக்கு வங்கியை கவரவேண்டும் என்றால் புரட்சி நடிகர் தான் வேண்டும்....
ஓயாது உழைப்பதில் சூரியன் நீ
ஒவ்வொரு வீட்டிலும் சந்திரன் நீ........... Thanks.........
-
-
இந்த படம் அறிய ஒன்று .குமரிமுனை கடலின் நடுவே நடுவண் பாறையில் 133 அடி உயரம் கொண்ட வள்ளுவன் சிலை மறைந்த மாமனிதர் MGR., அவர்கள் 15.04.1979ல் அடிக்கல் நாட்டினார்.அந்த நிகழ்வில் அவருக்கு உதவியாளனாக கலந்துகொண்டேன் .படமும் எடுத்தேன் .பின்னர் 2000ல் கலைஞர் avl சிலையை திறந்தார்கள் .அதிலும் நான் முக்கிய பொறுப்பாளனாக கலந்துகொண்டேன்.அந்த 133அடி உயர வள்ளுவனின் தலைக்கு மேல் உள்ள பகுதி தான் இந்த படம்.இந்த படத்தை Cannon FTQL பிலிம் கேமராவில் 13.10.2004ல் நான் எடுத்தேன்.இது என்னுடைய adventurous shot ..... Thanks.........To mr.Kannan...
-
திருமண வாழ்த்து செய்தி .
--------------------------------------------
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை பக்தர்கள் குழுவை சார்ந்த நிர்வாகி திரு.சாந்தகுமார்* அவர்களுக்கு* இன்று (11/11/19) காலை , சென்னை வில்லிவாக்கம்* சௌமிய தாமோதர பெருமாள் கோயிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது .அதை தொடர்ந்து அருகில் உள்ள மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .பல்வேறு எம்.ஜி.ஆர். மன்ற அமைப்புகள் சார்பில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
-
பாக்யா வார இதழ் -31/10/19
--------------------------------------------
வைரம் நூறு தொடர்*
--------------------------------
திருநீறை செல்வி, மங்கையர் கைராசி, திருமணம் கொண்டாள் இனிதாக .........
இதயவீணை* படத்தில் புரட்சி தலைவர் பாடும் ஒரு அற்புதமான பாடல் இது.திருமணம் நடக்கும் எல்லா வீடுகளிலும் இந்த பாடல் நிச்சயம் ஒலிக்கும் .
திருநிறைச்செல்வி , மங்கையற்கரசி* திருமணம் கொண்டாள் , இனிதாக என*படத்தில் வாழ்த்து பாடிய தலைவர் .....
பல ஆயிரம் குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார் என்பது வரலாறு .
அவரது பெயர் நாகநாதன்.* உதவி நடிகர்.* புரட்சி தலைவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு காட்சியில் வந்து விடுவார் .* அவருக்கு ஒரே மகள். திருமண ஏற்பாடுகளை செய்கிறார் . பத்திரிகை அடித்த கையோடு தலைவரை பார்க்க ராமாவரம் தோட்டம் செல்கிறார் .* தலைவர் சூட்டிங்க் ஒன்றிற்காக பெங்களூரில் இருப்பதாக தகவல் .* வந்த விவரத்தை சொல்லி மகளின் கல்யாண பத்திரிகையை கொடுத்துவிட்டு வருகின்றார் .* மிகவும் சிரமப்பட்டு திருமணத்தை நடத்தி விடுகிறார் நாகநாதன்.* தலைவரிடம் இருந்து எந்த விதமான உதவியும் வரவில்லையே என்ற கவலை மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கின்றது நாகநாதனுக்கு.* நம்ம நேரம் சரியில்லை என் மனசை தே ற்றிக் கொண்டார் .
திருமணம் முடிந்த சில மாதங்களில் தீபாவளி வந்து விடுகின்றது .* நாகநாதனுக்கு பெருங்கவலை வந்து விடுகிறது.* தீபாவளிக்கு மாப்பிள்ளையையும் மகளையும் அழைக்க வேண்டும்.* புது துணி எடுத்துக் கொடுத்து சிறப்பு செய்ய வேண்டும் .* பணத்திற்கு எங்கே போவது .* ஏற்கனவே திருமணத்திற்கு வாங்கிய கடன் அப்படியே இருக்கு* *இப்ப யாரு கடன் கொடுப்பா*என யோசித்து கவலையோடு இருக்கிறார் .* நாகநாதன்.* அப்போதுதான் தலைவரிடம் இருந்து அழைப்பு வருகிறது . தோட்டத்திற்கு செல்கிறார் . தலைவரை பார்த்து வணங்குகிறார் நாகநாதன் .
தலைவர் ஒரு பை நிறைய பணம் கொடுத்து அனுப்புகிறார்.* வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்த நாகநாதனுக்கு வியப்பு . ஆம் ...
மகளின் திருமணத்திற்கு நாகநாதன் வாங்கி இருந்த கடனை* அடைப்பதற்கு ம்*மாப்பிள்ளைக்கும்* மகளுக்கும் தலை தீபாவளி கொண்டாட தேவையான பணமும் அதில் இருந்தது .**
இதுபோன்ற எண்ணற்ற உதவிகள் செய்ததால்தான் , மக்கள் திலகம் மக்கள் தலைவரானார் .
-
தமிழ் இந்து -18/10/19
----------------------------------
திரையிசையின் விஸ்வரூபம்*
------------------------------------------------
திண்டுக்கல் இடை தேர்தல் வெற்றி (1973)* கொடுத்த உற்சாகம் எம்.ஜி.ஆரின் அடுத்தடுத்த படங்களில் வசன ங்களாகவும், பாடல்களாகவும் வெளிப்பட்டன.**நேற்று இன்று நாளை தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை*எம்.ஜி.ஆருக்கு, எம் எஸ்.வி* இசையமைத்த பன்னிரண்டு திரைப்படங்களும் பாடல்களுக்காக இன்றுவரை பேசப்படுகின்றன .
பல திரை கலைஞர்களுக்கு சிறப்பான இசை வழங்கி கொண்டிருந்த எம்.எஸ்.வி. அரசியல் திரைப்படம் என தொடர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தி கொண்டிருந்த எம்.ஜி.ஆர். உடன் பணிபுரிந்த அத்தியாயம் மட்டுமே தனி வரலாறு .*
அகண்ட காவிரி நதியை ஒப்பிட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தி நீங்க நல்லா இருக்கணும்* என்று இதயக்கனி திரைப்படத்தில் விருத்தத்துடன் கூடிய* நீண்ட பாடலை கொடுத்தார் எம்.எஸ்.வி.* உரிமைக்குரல் படத்தில்* இந்துஸ்தானி இசையின் இனிய பஹாடி ராகத்தில் , விழியே கதை எழுத்து, மீனவ நண்பன் படத்தில் மிஸ்ரா சிவரஞ்சனி ராகத்தில் ,தங்கத்தில் முகம் எடுத்து , வலஜி ராகத்தில்* பொங்கும் கடலோசை என எம்.ஜி.ஆரை ராக அருவியில் நீராட்டினார் .**
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்* படத்திலோ , த்விஜாவந்தி ராகத்தில்* அமுத தமிழில் எழுதும் கவிதை என்ற பாடலுடன் எம்.ஜி.ஆரின் அரசியல் கனவை காற்றில் ஒலிக்கவிட்டு, திரையிசையில் எப்படி வேண்டுமானாலும் தன்னால் விஸ்வரூபம் எடுக்க முடியும் என்று காட்டியவர் .**
1965 முதல் மெல்லிசை மன்னராக தனி இசை பயணம் செய்த எம்.எஸ்.வி. 1978 வரை , எம்.ஜி.ஆர். முதலமைச்சராக முழுநேர அரசியல் வாழ்க்கைக்கு சென்றது*வரையில் 36 திரைப்படங்களுக்கு இசை அமைத்தார் .
கேரளா மாநிலம் பாலக்காட்டில் 1928ல் ஜூன் 24ம் தேதி பிறந்த எம்.எஸ். வி. இயற்பெயர் .மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன் .* தனது 25வது* வயதில் 1953ல் வெளியான ஜெனோவா படத்திற்கு முதன் முதலாக இசை அமைத்தார். படத்தின் நாயகன் எம்.ஜி.ஆர். ஆபிஸ் பையனாக* இருந்து இசை அமைப்பாளராக உயர்ந்த எம்.எஸ். வியை தான் முன்னணி கதாநாயகனாக புகழ் பெற்றதும் தனது படங்களின் திரையிசைக்கு சுவீகரித்து கொண்டார் .
-
தினகரன் - வெள்ளி மலர் -11/10/19
--------------------------------------------------------
எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தவர்*
-------------------------------------------------------------------------
1931ல் கும்பகோணம் பாய்ஸ்* நாடக கம்பெனியில் 11 வயது குருமூர்த்தி , 14 வயது ராமச்சந்திரனுக்கு நடிப்பு* சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் .
வாத்தியார் காளி ரத்தினத்துக்கு மகிழ்ச்சி . குருமூர்த்தி அழைத்து வந்த ராமச்சந்திரன் அழகாகவும் இருந்தார் .* சொன்னதை புரிந்து கொண்டு அப்படியே நடித்துக்காட்டினார் . அந்த ராமச்சந்திரன் தான் பின்னாளில் மக்கள் திலகமாக தமிழ் திரையுலகை கொடி கட்டி ஆண்ட எம்.ஜி.ராமச்சந்திரன் .**
நேற்றுதான் தன்னுடைய கனகாபிஷேக விழாவை (100 வது* பிறந்த நாள் )சென்னையில் கொண்டாடினார் . மயிலாடுதுறையில் 1920ல் பிறந்த குருமூர்த்தி பள்ளி படிப்பின்போதே ஓவிய வகுப்பில் சேர்ந்து இளநிலை தேர்ச்சி பெற்றார்.அப்போதே நாடகங்களிலும் நடிக்க தொடங்கியதால் , பள்ளி படிப்பு பாதியில் நின்றது .
எம்.ஜி.ஆரோடு இணைந்து, பவளக்கொடி , கோவலன் ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார் .**
-
குங்குமம் வார இதழ் .
--------------------------------
நடிகை குஷ்பூ பதில்கள்*
--------------------------------------
வாசகர் கேள்வி* : பழைய படங்களில் உங்களுக்கு பிடித்த எம்.ஜி.ஆர் படங்கள் எவை ?
*பதில் : எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன்,* அன்பே வா .
-
இதயவீணை !
________________
நாய்கள் கடிப்பதும்
கழுதை உதைப்பதும்
இயற்கை என்பது தெரியும் !
புலிகள் பாய்வதும்
நரிகள் ஏய்ப்பதும்
பிறவிக் குணம் என்று
புரியும் !
எந்தெந்த நேரத்தில் கடிப்பான் இவன்
எந்தெந்த வேலையில்
உதைப்பான்
யாருக்கு இவர்களைத்
தெரியும் ?
பார்வையில் குணம்
என்ன புரியும் ?
கவிஞர் வாலி !
சிலவரிகளிலே மிகப் பெரிய உண்மைகளை
உடைக்கும் கவிஞர்களை எனக்கு பிடிக்கும் அதில் கவிஞர் வாலியும் ஒருவர் !
பாடல் வரிகளில் மூழ்கிய எனக்கு இன்னொன்றும் கண்ணுக்கு புலப்பட்டது
மக்கள் திலகத்தை கவனியுங்கள் !
Handsome wrestler
அப்படித்தானே தோற்றம் நண்பர்களே !.......... Thanks.........
-
மாலை சுடர் -12/11/19
-------------------------------------
மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வி.ஜி.பி.உலக தமிழ் சங்கம் வழங்கிய எம்.ஜி.ஆர். சிலை கோலாலம்பூர் லிட்டில் இந்தியா எம்.ஜி.ஆ.ர்* மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது .* இந்த சிலையை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார் .* உடன் வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.பி. சந்தோசம் , மலேசிய எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மணிவாசகம் மற்றும் விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
-
அமுதசுரபி மாத இதழ் -அக்டொபர் 2019
---------------------------------------------------------------
திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள் -எம்.என். நம்பியார்*
கலைமாமணி வி.ராமமூர்த்தி*
--------------------------------------------------
பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் (அப்போது மேம்பாலம் கிடையாது ) ரயில் வரும்போது கேட்டை மூடி விடுவார்கள் .* நடிக* நடிகைகள் சூட்டிங் போவதற்கும் , படப்பிடிப்பை முடித்து*வீட்டுக்கு திரும்புவதற்கும்* பெரிய சங்கடமாக இருந்தது .**
ஒரு நாள் நடிகர் எம்.என்.நம்பியாரின் கார் வரும்போது ,ரயில்வே கேட்டை மூடிவிட , சில ரசிகர்கள் காரை நெருங்கி வந்து (எம் .ஜி..ஆர்.ரசிகர்கள் ) உங்களுக்கு* திமிர் ஜாஸ்தி.* என்ன தைரியம் இருந்தால் எங்கள் தெய்வம் எம்.ஜி.ஆரை நீங்க அடிக்கலாம் .* என்று கோபமாக கேட்டனர் .
நடிகர் நம்பியார் உடனே, ஏம்பா , அவரும் தானே என்னை அடிச்சார் .* குத்தினார் .**அதை நீங்கள் பார்க்க வில்லையா* என்று கேட்க , அவர் அடிக்கலாம் , என்ன அவர் எம்.ஜி.ஆர். ஆனால் நீங்க எப்படி அடிக்கலாம் என்று வாதிட்டனர் .* இதை ஒரு நிகழ்ச்சியில் நடிகர் நம்பியார் சிரித்து கொண்டே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .
சினிமாவில் ஆரம்பம் முதலே, வில்லனாக நடித்து , கெட்டவன் என்று பெயர் வாங்கியவர் நடிகர் நம்பியார் .* சில குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும், வில்லன் என்றால் நம்பியார்தான் என்று முத்திரை ஆழமாக பதிந்துவிட்டது .சரிவாதிகாரி,நாடோடி மன்னன் அரசிளங்குமரி* ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை குடியிருந்த கோயில் , ரகசிய போலீஸ் 115. நான் ஏன் பிறந்தேன், ராமன் தேடிய சீதை ,உரிமைக்குரல், சிரித்து வாழ வேண்டும் , பல்லாண்டு வாழ்க, போன்ற படங்களில் கொடியவனாகவும் , வில்லத்தனமாக நடித்ததால், நயவஞ்சகன், சூழ்ச்சிக்காரன் என்கிற பட்டமும் சேர்ந்துவிட்டது .**
ஜூபிடர் கம்பெனி 1948ல் தயாரித்த மோகினியில் எம்.ஜி.ஆர். நாயகன். நம்பியார் வில்லன் . அதிலிருந்து எம்.ஜி.ஆர். நாயகனாகவும், நம்பியார் வில்லனாகவும்* நடித்து அந்த முத்திரை ஆழமாக குத்தப்பட்டது .* வில்லன் நடிப்புக்கு ஏற்ப கொடூரமான பார்வையும், மிரட்டும் விழிகளும்,அபூர்வமான* பேச்சும் , நடிப்பும்* நம்பியாருக்கு விழுந்த வில்லன் முத்திரையை சாசுவதமாக்கியது .
குறிப்பாக எம்.ஜி.ஆர். படங்களில் வில்லன் நடிப்பில் நம்பியார் வரலாறு படைத்தார் என்று சொல்லலாம் .* எங்க வீட்டு பிள்ளையில் அப்பாவி எம்.ஜி.ஆரை இவர் சவுக்கால் அடித்து சித்ரவதை செய்வதும், அடுத்து* முரட்டு எம்.ஜி.ஆரால்* அதே சவுக்கால் அடிபட்டு அலறுவதும் நம்பியார் நடிப்பில் அபாரம் .வேணும் இந்த பாவிக்கு என்று மக்களை சொல்ல வைத்தது . இதுவே நம்பியாருக்கு ,ஒரு மறைமுக பாராட்டுதானே .*
மு.கருணாநிதி கதை வசனத்தில், ஏ. காசிலிங்கம் இயக்கிய நாம் படத்தில் எம்.ஜி.ஆர். நாயகன் .* நம்பியார் நாயகன் எம்.ஜி.ஆரை வாழ்த்தி அண்ணா வாழ்கவே, குமர* அண்ணா வாழ்கவே* என்று பாடியுள்ளார் .**
-
-
-
உங்களுக்கு தெரியுமா???
புரட்சித் தலைவருக்கு அந்த ஆண்டின் சிறந்த அகில இந்திய நடிகராகத் தேர்தெடுக்கப் பட்டு "பாரத்" விருதை பெற்றார்.
அந்த உற்சாகமான நிலையிலும் அந்த விருது பெற்ற பெருமகன்
அமைதியாக ஓவர் புன்முறுவலுடன் திகழ்ந்தார். ஒரு கணம் அவர் பார்வை எதையோ நோக்குகிறது. பின் நேராக மேடையில் வீற்றிருந்த ராஜ்கபூரை [வயதில் இளையவர்] பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு மேடையை விட்டு இறங்கினார்.
திகைத்துப்போகும் செய்தியா?
புரட்சித் தலைவர் அளித்த பதில் ; நான் அங்கே ராஜ்கபூரைப் பார்க்கவில்லை, அவருடைய உருவில் "அவருடைய தந்தையான பிரிதிவிராஜ் கபூரைத் தான் பார்த்தேன்", கலையுலக தந்தையான அவரை, விருது பெற்ற வேளையில் மானசீகமான நினைத்து வணங்கினேன்.
என்ன அடக்கம், என்ன தொழில் பக்தி - புரட்சித் தலைவருக்கு நிகர் என்றும் எவரும் இல்லை...... Thanks.........
-
இன்று தந்தி TV யில் இப்படி ஒரு நிகழ்ச்சி - ரஜினி - கமல் -: எம்.ஜி.ஆரா? சிவாஜியா?!!!!!
புரட்சித் தலைவர் மாதிரி யாரும் வர முடியாது ...
என்று ரஜினிகாந்த் சொல்லிவிட்டார்.
கமல் "சிவாஜி தான்" என்று கடந்த பாராளுமன்ற தேர்தலில் நிரூபித்துவிட்டார்!!!!!
அப்புறம் எதற்கு இந்த நிகழ்ச்சி???....... Thanks...
-
இன்று 12-11-2019 முரசு தொலைக்காட்சியில் மக்கள் திலகம் வழங்கிய கருத்து களஞ்சியம் "தாய் சொல்லை தட்டாதே", ஒளிப்பரபாகியது...
-
11-11-1966... 11-11-2019 நேற்று புரட்சி நடிகர் நடித்த சர்க்கஸ் காவியம் "பறக்கும் பாவை" 53 ஆண்டுகள் நிறைவடைந்து 54ம் வருடம் தொடக்கம்...
-
12-11-1976...12-11-2019... இன்று 43 வருடங்கள் நிறைவு கண்டு 44ம் ஆண்டு துவக்கம் காணுகிறார்...திரையுலக வசூல் சக்கரவர்த்தி "ஊருக்கு உழைப்பவன்" சாகச காவியம்...
-
வரும் வெள்ளி முதல் (15/11/19) கோவை சண்முகாவில் கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். வழங்கும் "தொழிலாளி " தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது .
தகவல் உதவி ; நெல்லை நண்பர் திரு.வி..ராஜா*
-
-
"இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது?" - வியந்து கேட்ட கலைஞர்! #VikatanVintage
http://dhunt.in/7xOfR?s=a&ss=pd
Source : "விகடன்" via Dailyhunt
செயலியை பெற
http://dhunt.in/DWND...... Thanks...