-
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் '' நினைவலைகள்''
104/2020
எங்களுக்கு விபரம் தெரிந்த ''நாடோடிமன்னன்'' 1958 முதல் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' 1978 வரை
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களை கண்டு களித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது . மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்கள் திரை அரங்குகளில் வெளியான நேரத்தில் வண்ண தோரணங்களை கட்டியது
எம்ஜிஆரின் புதுமையான ஸ்டார்களை அலங்கரித்து வைத்தது. .
திரை அரங்கு முன்பு வைத்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தது ..
நகரம் முழுவதும் ஒட்டப்பட்ட''' வருகிறது'' போஸ்டர்களை கண்டு மகிழ்ந்தது .
''இன்று முதல்'' விளம்பரத்தை கண்டு ஆனந்தமடைந்தது .
ஷோ கேசில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் ஸ்டில்களை கண்டு பரவசமடைந்தது .
முன்பதிவு அன்று திரை அரங்குகளில் அலை மோதிய எம்ஜிஆர் ரசிகர்களின் கூட்டத்தை கண்டு ஆர்ப்பரித்தது .
முதல் நாள் , முதல் காட்சியில் எம்ஜிஆர் ரசிகர்களின் அலப்பறையில் ஆனந்தமடைந்தது .
தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்த கண்கொள்ளா காட்சியை கண்டு வியப்படைந்தது .
50,75,100,125,150,175,200,225 நாட்கள் என்று வெற்றி நாட்களை பார்த்து ரசித்தது
சில படங்கள் வெற்றி இலக்கை தொடமுடியாமல் போனது கண்டு வருந்தியது .
படம் காண வரும் மக்களை வரவேற்பு நோட்டீஸ் தந்து வரவேற்றது .
வசூலை வாரி குவித்த விபரங்களை நன்றி நோட்டீஸ் மூலம் வெளியிட்டு உற்சாகமடைந்தது .
வெற்றிவிழாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர்
கலந்து கொண்ட திரை அரங்கை அமர்க்களப்படுத்தியது .
எம்ஜிஆர் சிறப்பு மலர்கள் வெளியிட்டது .
20 வருடங்கள் தொடர்ந்து எம்ஜிஆரின் படங்கள் திரைக்கு வந்த நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி போற்றியது .
நாடெங்கும் எம்ஜிஆர் மன்ற தோழர்களின் நட்பு வட்டம் இணைத்தது
வாலிப வயதில் துவங்கிய எம்ஜிஆர் நட்பு முதுமையிலும் தொடர்வது
1978க்கு பிறகு 2019 வரை எம்ஜிஆரின் 100 படங்களுக்கு மேல் மறு வெளியீடு மூலம் இன்னமும் எம்ஜிஆர் நம்மோடு வாழ்வது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் காணும் 2020 லும் எம்ஜிஆர் சாதனைகளை எண்ணி ஆனந்த வெள்ளத்தில்
கடந்த காலத்தின் வெற்றிகளை நினவு கொண்டு எல்லோரும் எம்ஜிஆரின் நினைவுகளோடு வலம் வருவோம் ...... Thanks...
-
-
-
புரட்சி தலைவரின் எண்ண கனவுகளை நினைவாக்குவதே பக்தர்களின் சேவை என்ற தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டு கடுமையான ஊரடங்கு உத்தரவால் அடுத்தடுத்து இருந்த தடுப்புகளையும் சுற்றி சுற்றி விடாது அரசு ஒப்புதல் பெற்ற திரு.லோகநாதன் அவர்களின் காரில் புளியந்தோப்பு வியாசர்பாடி சூளை ஓட்டேரி ஆயிரம் விளக்கு ராயப்பேட்டை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள இதுவரை வழங்கபடாத கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் (அறக்கட்டளை) இல்லங்களுக்கு நேரில் சென்று மளிகை பொருட்களை அட்சயநாளாகிய 26.4.2020 இன்று மயிலை திரு.R.லோக நாதன் V.S.ஷிவ பெருமாள் ஆகிய நான் மற்றும் பில்டர் K.N.ராஜ்ஆகிய மூவரும் வழங்கிவிட்டு வந்தது மனநிறைவை தந்தது*.இது மேலும் தொடர தலைவர் அருள் புரியட்டும்....... Thanks...
-
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம் இன்று எங்கள் வீட்டுக்கு அருகில் மரண சம்பவம் மரணித்தவர் ஒரு ஏழை பக்கவாத நோயினால் ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்குச் சென்றோம் மருத்துவர்கள் கைவிட்ட பின்பு நேற்று நாலு மணி அளவில் மரணமடைந்தார் அடிப்படையில் ஏழை மனைவி மகள் மகன் தாயார் அனைவரையும் தவிக்கவிட்டு சென்றார் மனைவியோ தனது கணவரது இறுதிச்சடங்கை செய்வதற்கு வசதி இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார் கேள்விப்பட்டவுடன் எங்களால் முடிந்த பண உதவியை ஏற்பாடு செய்து கொடுத்தோம், அதன் பிறகு அக்கம் பக்கம் உள்ளவர்கள் தங்களால் முடிந்த பொருளுதவி செய்ய அவரது இறுதிச்சடங்கு கான வேலை தற்போது நடந்து கொண்டிருக்கின்றது இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மரண வீட்டிற்கு செல்பவர்கள் மாலை வாங்கி மரியாதை செலுத்துகிறேன் என்று வீணாக படத்தை செலவு செய்ய வேண்டாம் தங்களால் ஆன பணம் உதவி செய்வதன் மூலம் ஏழை எளியோரின் இறுதி சடங்குக்கு உதவி செய்வதாய் இருக்கும்
மனிதநேயம் காப்போம் மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் தான் எங்களுக்குத் தெரிந்த வரை இதற்கு எல்லாம் வழிகாட்டியாய் அன்றும் இன்றும் என்றும் இருக்கிறார் இவன் தேவராஜ் ராதிகா திருச்சி இன்றைய தினம்26.. 04.. 2020..... Thanks Groups...
-
இது போன்ற இன்னும் பல தலைவர் வீடியோக்களை காண Like,share செய்து subscribe செய்யவும்..!!
https://youtu.be/iIjXZm-82Lo..... Thanks...
-
எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம். தஞ்சாவூரில் சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான சாந்தி, கமலா திரையரங்குகளைத் திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது, சிவாஜி தனது சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்கு விருந்து சாப்பிட அழைப்பு விடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தனது சக அமைச்சர்கள், முக்கியக் கட்சிக்காரர்களுடன் சிவாஜியின் சூரக்கோட்டை பண்ணை வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில், எம்.ஜி.ஆருடன் காரில் பயணித்த அமைச்சர்கள் சிலர், ''நாங்கள் உங்களுக்காக தனி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறோம். ஆனால் நீங்களோ, உங்கள் போட்டியாளர் சிவாஜி வீட்டுக்குச் செல்கிறீர்களே...'' என்று ஆதங்கப்பட்டிருக்கின்றனர்.
உடனே எம்.ஜி.ஆர், ''நானும் சிவாஜி யும் எப்படி அண்ணன், தம்பி போல் பழகு கிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எங்களது போட்டி, கலை வாழ்க்கையில் மட்டும்தான். அது தனிப்பட்ட எங்களது நட்பு, பாசத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. வேண்டாத பகைமை கொண்டு எங்கள் ரசிகர்கள் மோதிக் கொள்வதிலும் அர்த்தம் இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை'' என்றார். அதோடு நிற்கவில்லை.
''சிவாஜியிடம் இப்போது இருக்கிற இந்த பண்ணையில் இருந்து சென் னைக்கு வைக்கோல் வழக்கமாக எடுத்து வரப்படுகிறது. அது, எனது சத்யா ஸ்டுடியோவில்தான் இறக்கி வைக்கப்படும். அந்த வைக்கோல்தான் எனது வீட்டில் இருக்கும் பசு மாடுகளுக்கும் சிவாஜி வீட்டுப் பசுக்களுக்கும் உணவு. நான் குடிக்கும் பால் சிவாஜி பண்ணையின் வைக்கோலைத் தின்று செரித்துக் கிடைக்கின்ற பால்தான்'' என்றாராம்.
நன்றி! இதயக்கனி S.விஜயன்.
ஆனந்த விகடன் இணைய பகுதியிலிருந்து........(வைக்கோல் விஷயம் எந்தளவுக்கு உண்மையா?! பொய்யா?!... விபரமறிந்தோர் விளக்கலாம்).... Thanks...
-
புரட்சிதலைவரின் ரத்தத்தின் ரத்தங்களே..!!✌ இது தலைவரின் புகழ் பாடும் யூடியூப் சேனல்..!! தலைவரின் படங்கள்,பாடல்கள்,வசனங்கள்,புகழ் வீடியோகள் இதில் தொடர்ந்து பதிவிடப்படும்..!! புரட்சிதலைவரின் பக்தர்கள் அனைவரும் இந்த யூடியூப் சேனலை subscribe செய்து கூடவே ️ bell பட்டனை அழுத்தி like,share செய்யவும்..!! இப்படிக்கு, புரட்சிதலைவரின் முரட்டு பக்தன் உங்கள் ✌ *சிவகாசி எம்.ஜி.ஆர்*
https://youtu.be/CUfa5n1BWOo........ Thanks...
-
-
அதெல்லாம் சரி...
உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இருக்க, ஏன் எம்ஜிஆரை மட்டும் ஏன் மதிக்கணும் ?
ஏன் மற்ற தலைவர்கள் கூட தான் எவ்வளவோ நல்ல கருத்துக்களைச் சொல்லியிருக்காங்க..
ஆனால் எம்ஜிஆர் வித்தியாசம்
யார் கூறிய நற்கருத்துக்கள் படித்ததோடு நில்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் மனதாரத்திருந்த வழிவகுக்கிறதோ..
பூத உடலை நீத்த போதும்,
இன்னமும் எங்கள் தலைவன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்...
இன்னமும் தன் மக்கள் நன்றாக இருக்கிறார்களா!!! என்று நொடிப்பொழுதும் எண்ணி எண்ணி
கவலைப்படுகிறான் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் எவரொருவர் ஆழமாக விதைக்கிறாரோ...
எவரொருவர், மக்கள் தன்னை நினைக்கும்போதெல்லாம் நெஞ்சடைத்துக் கண்ணீர் வரச்செய்கிறாரோ.
அவர் தான் மக்களின் மனதில் நிலைத்து நிலைக்கமுடியும்...
இந்த வீடியோவைப் பாருங்க...
இவர்களெல்லாம் யார்? பதவியில் இருப்பவர்களா? பணக்காரர்களா? இல்லை, தங்களின் உன்னத்தலைவனை, நேரிலாவது பார்த்திருப்பவர்களா..? சிலர் பார்த்திருக்கவும் கூடும்
இதுபோன்ற பக்தர்களுக்கெல்லாம், ஏன் நமக்கும் கூட ஒரே ஒரு விருப்பம்...நாம் கேட்கும் ஒரே வரம்...
#வாத்தியாரே #நீ #மறுபடி #பிறக்கணும்........ Thanks...