-
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை தமிழர் இல்லை என்று எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தபோது கவியரசர் கண்ணதாசன் எழுதிய கவிதை.
நல்லோர்களெல்லாம்
நாடும் அறிவுடைமை
உள்ளோரே என்றும்
உயிர் தமிழோடிருப்பவர்கள்
கல்லூரி படியேறி
பயிலாதபோதினிலும்
சொல்லும் மொழியெல்லாம்
சுவையான செந்தமிழாய்
வெல்லும் படிசொல்லும்
வீரனை நாம் பெற்றுள்ளோம்
மன்னர் இவரொருநாள்
மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான்
அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசு என
கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான்
உயிர் படைத்த நாள் முதலாய்
உண்ணும் உணவும்
உலவுகின்ற வீதிகளும்
எண்ணும் பொருளும்
ஏற்றதோர் தொழில்களும்
செந்தமிழால் வந்த
திருவென்றோ பெற்றவன் நான்
அந்த மொழியின்றி
அடுத்த மொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார் இவர்
பெருமை யாருக்கு வரும்
பொன்மனத்துச் செம்மலிவர்
புரட்சித் தலைவரிவர்
தமிழரிலை என்றால்
தமிழுக்கே களங்கம் வரும்.
கவிஞர் கண்ணதாசன..
கவிதை உதவி திரு காந்தி கண்ணதாசன் அவர்கள்............. Thanks.........
-
-
-
-
-
-
#மக்களின் #முதல்வர்
தமிழக முதல்வர் பொன்மனச்செம்மல், ஒரு பொதுக்கூட்டத்திற்காக மதுரை சென்று திரும்பும் வழியில் அருகே உள்ள சோழவந்தான் கிராமத்திற்கு வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்...
அப்போது, சற்று தொலைவில் வயலில் நாற்று நட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பார்த்து அதிர்ச்சியற்ற மக்கள்திலகம், கடகடவென்று வரப்பில் நடந்து அப்பெண்மணிக்கு அருகே செல்கிறார்...
எம்ஜிஆரைப் பார்த்து பிரமித்த அப்பெண்மணி அதிர்ச்சியுற்று நிற்க...!!!
எம்ஜிஆர் கண்களில் நீருடன் கேட்கிறார்... "என்னம்மா இது? உங்களுக்கா இந்த நிலை ? இந்த வயசான காலத்துல ஏன் இப்படி கூலி வேலை செஞ்சு கஷ்டப்படறீங்க.??? ...
அந்த வயதான தாய் பொங்கிவரும் கண்ணீரை அடக்கமுடியாமல் தன் குடும்ப நிலையைக் கூறியதும் அப்பெண்மணியின் கைகளை இறுகப் பற்றிக் கொள்கிறார்..."அம்மா! உங்க மகன் நானிருக்கும் போது, இப்படி நீங்க கஷ்டப்படலாமா!!! இதுக்கு சீக்கிரமே ஒரு வழி செய்யறேன்..." ன்னு கிளம்பிட்டார்.
அப்பெண்மணி வேறு யாருமல்ல...
நான்கு முறை காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த பொன்னம்மாள் தான் அவர்...
அடுத்த சிறிது நாட்களிலேயே
"#எம்எல்ஏக்களுக்கு #ஓய்வூதிய #திட்டம்" வழங்க அரசாணை பிறப்பித்தார்.
கட்சிப் பாகுபாடின்றி
மக்களின் குறைகளை தான் நேரடியாகவே சென்றறிந்து திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் #மக்கள்திலகம் #ஒருவரே.............. Thanks.........
-
"ஆயிரத்தில் ஒருவன் ","கோடியில் ஒருவன்", தான் தலைவர் தான் (மக்கள் திலகம்) என்று அறிவுஜிவிகளுக்கு சுட்டிக்காட்டிய நடிகர் திரு விஜயசேதுபதி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் !
ஹயாத் !......... Thanks.........
-
அல்பட் திரையரங்கம் சார்பாக எடுக்கப்பட்ட அந்த ஒரு பேனரை தவிர வேறு எந்த ஒரு போஸ்டர்( ரகசிய போலீஸ் 115) கூட ஒட்டவில்லை. இருந்தாலும் எம்ஜிஆர் பக்தர்கள் திரையரங்கத்தில் நிரம்பி விட்டார்கள். இதுதான் எம்ஜிஆரின் மக்கள் சக்தி. இது மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்குமே தவிர ஒருபோதும் தொய்வு ஏற்படாது. தங்க தலைவரின் ஆசை முகத்தை காண எப்போதும் கூட்டம் கூடிக் கொண்டேதான் இருக்கும். ஏனென்றால் அவர் என்றென்றும் ஜீவித்து இருக்கிறார். 'நின்றால் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர்வலம்' இது உலகத்தில் எம்ஜிஆருக்கு மட்டுமே உரித்தான வரிகள். பழுதுபடாத வீரத்திற்கு சொந்தக்காரரான வாத்தியார் எம்ஜிஆரின் கொள்கைப்படி உலகெங்கும் வாழும் எம்ஜிஆர் பக்தர்கள் மக்கள் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் வாழ்க எம்ஜிஆர் புகழ்! வாழ்க எம்ஜிஆர் பக்தர்கள்.... Thanks.........
-
இந்த கரோனா அவசர கால நேரத்திலும், திரையரங்கம் இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடந்தது என்றால், அது திரையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் அவர்கள் காவியங்கள் மட்டுமே எனில் மிகையாகாது...