https://youtu.be/d9b53KsccXI... Thanks......
Printable View
https://youtu.be/d9b53KsccXI... Thanks......
https://youtu.be/BeQWB2me668......... Thanks.........
https://youtu.be/NqC8XHFPsHE........... Thanks...
https://youtu.be/O4lJ3MiOEBU............ Thanks...
https://youtu.be/FbU4FnCdHP8......... Thanks...
தண்டோரா வாய்ஸ் வார இதழ் -03/03/2020
--------------------------------------------------------------------
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் மிக சுவையானவை மட்டுமல்ல .* அனைவருக்குமான பாடமும் கூட .* அவை , பொன்மன சம்பவங்கள் என்கிற தலைப்பில் தொடர்ந்து நமது இதழில் வெளியாகும் .
எம்.ஜி.ஆர். அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ளும் வகையில் அவர் அளித்த பேட்டி .முதல் அத்தியாயத்தில் வெளியாகிறது .* இதன் கூடுதல் சிறப்பு .*எம்.ஜி.ஆரை பேட்டி கண்டவர்* முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா* அவர்கள்.*1968ம் ஆண்டு பொம்மை சினிமா மாத இதழில் வெளியான பேட்டி இது .
கேள்வி :* அந்த கட்சி தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கி பழகி இருக்கிறீர்கள்*
பதில்: அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை .* அதாவது நான்கு பேர் என்னை தெரிந்து கொள்ளுமளவிற்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை .
கேள்வி : தி.மு.க. வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள் ?
பதில் : 1952ம் வருடம்* தி.மு.க. வில் சேர்ந்தேன் .
கேள்வி :தி.மு.க. வில் சேர காரணம் என்ன ?
பதில் : எனது காந்திய வழி கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில்* இருப்பதை அறிந்து சேர்ந்தேன் .
கேள்வி : உங்களை இந்த கட்சியில் செரித்த பெருமை யாருக்கு உண்டு?
பதில் : என்னை யாரும் சேர்க்கவில்லை .* அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் , என்.வி. நடராசன் , போன்றவர்களிடம் என்னை அழைத்து சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி. நாராயணசாமி ஒருவருக்கே உண்டு .
கேள்வி: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா ?
பதில் : நிச்சயமாக உண்டு*.
கேள்வி : நீங்கள் கோவிலுக்கு போனதுண்டா ?
பதில் : நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை சென்றுள்ளேன் .* முதல் தடவை நான் திருப்பதிக்குபோய்* வந்தபோது எனக்கு 12 அல்லது* 13 வயதிருக்கும் .நாடக கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன் .* இரண்டாவது மர்மயோகி படம் வெளியானபோது இரண்டாவது தடவை போனபோதுதான் திருப்பதியை பொறுத்தவரை கடைசியானது .* அதற்கு பிறகும் வேறு பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் .
கேள்வி : ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்ற போயிருந்தீர்களா ?
பதில் : பார்க்க வேண்டும் என்ற ஆவல்.* பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்து கொள்ளவில்லை .
கேள்வி : உங்கள் தாயார் எந்த கடவுளை வழிபட்டு* வந்தார் ?
பதில் : எங்கள் தாயார் இரண்டு கடவுள்களை வணங்கி வந்தார் .* ஒன்று விஷ்ணு.*நாராயணன் .* அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார் . குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை .
கேள்வி : வீட்டைவிட்டு புறப்படும் முன்பு யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள் ?
பதில் :* என் பூஜை அறையில் என் தாய், தந்தை , மகாத்மா காந்தியடிகள் என் வாழ்க்கை துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன .அத்துடன் முகம் பார்க்கும் கண்ணாடியும் உண்டு .* இவர்கள்தான் நான் வணங்கும் தெய்வங்கள் .
கேள்வி :: உங்களது பழைய படம் ஒன்றைப் பார்த்தேன் .* அதில் கழுத்தில் ருத்திராட்சை* மாலையுடன் இருக்கிறீர்கள் .* ஏதேனும் ஜெபம் செய்து கொண்டிருந்தீர்களா ?
பதில் : நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான்* அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன் .* இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக் கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன் .* ஒரு சின்ன திருத்தம்* அது ருத்ராட்ச மாலை அல்ல .* தாமரை மணி மாலை .
கேள்வி : அந்த மாலையை யார் தந்தார்கள் ?
பதில் : திருப்பதியில் நானே வாங்கிய மாலை .
கேள்வி : தமிழ் படங்களில் , தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள் , கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே. இதை நீங்கள் ஒர்க் கொள்கிறீர்களா ? உங்கள் அபிப்பிராயம் என்ன ?
பதில் : மறுக்கிறேன் .* காலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாச்சாரம் என்று சொல்லலாம் .* பண்பு*+ பாடு = பண்பாடு* என்றால் உழைப்பு . பண்படுத்தப்பட்ட செயல் . இப்படியும் சொல்லலாம் .* ஆக இவை அத்தனையும் சமூகத்தில்*உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை , செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள் .**
கேள்வி : தமிழ் படங்களுக்கு தங்க பதக்கம் கிடைக்குமா?
பதில் : தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்க பதக்கம் நிச்சயம் கிடைக்கும் .**
கேள்வி : நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன விஷம் ஏதாவது உண்டா ?
பதில் : விரும்பியதை பல. ஆனால் நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை .
கேள்வி : உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால் ?
பதில் : என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார் .
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *------தொடரும் .........
தனியார் தொலைக்காட்சிகளில் கலைவேந்தன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*
--------------------------------------------------------------------------------------------------------------------------
22/03/20* *- வசந்த் டிவி* - பிற்பகல் 1.30மணி - நவரத்தினம்*
* * * * * * * * * * மெகா 24* * * - பிற்பகல் 2 மணி* *- காதல் வாகனம்*
23/03/20* * * சன்லைப்* - காலை 11 மணி* - மன்னாதி மன்னன்*
24/03/20* * - முரசு டிவி - இரவு 7 மணி* - தாயின் மடியில்*
25/03/20* *- சன்லைப்* - காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * * *- புதுயுகம் - பிற்பகல் 2 மணி - குடும்ப தலைவன்*
26/03/20* - சன்லைப்* - காலை 11 மணி* - சந்திரோதயம்*
* * * * * * * * *மீனாட்சி டிவி* - இரவு 7 மணி - நல்ல நேரம்*
திருடாதே 23.3.1961
தமிழ்திரை உலகில் சமூக புரட்சி உருவாக்கிய படம் .
மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பு .
திருடுவதால் ஏற்படும் அவலம் - பாதிப்பு .
மக்கள் மனதில் சமூக சிந்தனையை தூண்டிய படம் .
இனிய பாடல்கள் .
சென்னை நகரில் பிளாசா - பாரத் - மகாலட்சுமி மூன்று அரங்கில் 100 நாட்கள் ஓடிய படம் .
2011ல் சென்னையில் திருடாதே பொன்விழா நடைபெற்றது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கு திருப்பு முனை தந்த படம் - திருடாதே
புரட்சி நடிகர் எம்ஜிஆர் நடித்த மாபெரும் வெற்றி படம் திருடாதே 23- 3-1961 வெளியானது .
தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த திருடாதே திரைப்படம்..
ஆம். அன்றைய சூழலில் சமூகத்தில் நிலவி வந்த திருட்டு என்னும் அவலத்தை, திருத்தும் நோக்கோடு, அழகிய, ஆழமான திரைக்கதையில் மக்களுக்கு எடுத்துக்காட்டிய படம். சட்டங்கள் மூலமாகவோ, கடுமையான தண்டனைகள் வாயிலாகவோ திருட்டு என்னும் குற்றத்தை குறைக்க முடியாது. திருடர்களின் மனமாற்றத்தின் மூலமே சமூகத்தில் இந்த குற்றத்தை குறைக்க முடியும் என்ற உயரிய சிந்தனையை தனக்கே உரித்தான இயல்பான நடிப்பால் வெளிபடுத்திய சிறந்த திரைப்படம்..இந்த திரைப்படம் அந்த கால கட்டத்தில் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியதை யாராலும் மறுக்க முடியாது. அந்த சமூக மாற்றம் ஒரு திரைப்படத்தின் மூலம் சாத்தியம் என்ற அதிசயத்தால்தான் தமிழகம் இத்திரைப்படத்தை உற்று நோக்க ஏதுவானது. பொது உடமைவாதியான எழுச்சிகவிஞர் பட்டுகோட்டையார் தன்னுடைய பொதுஉடைமை கொள்கை பாடல்களை யார் மூலம் பரப்பலாம் என்று நினைத்தபோது அதற்கு பொருத்தமானவர் உண்மையிலே பொது உடமை கொள்கை கொண்ட எம்ஜிஆர் என்பதை உணர்ந்தார். அதனால் தன்னுடைய பெரும்பாலான பாடல்களை தலைவரின் படங்களிலே இடம் பெற செய்தார்..அதே போல் தலைவர் அவர்களும் பட்டுக்கோட்டையாரை மிகவும் மதித்து அவர் இருக்கும் வரை அவரது பாடல்களை தன்னுடைய படங்களில் இடம் பெற செய்தார். கவிஞரின் பாடல்களிலே மிகவும் சிறப்பு வாய்ந்த, நமது தெய்வத்திற்கு மிகவும் பிடித்த பாடலான "திருடாதே பாப்பா திருடாதே" என்னும் சமூக சீர்திருத்த பாடல் இடம்பெற்ற படம்தான் திருடாதே. இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து ஒரு பெரிய சமூக மாற்றத்தையே ஏற்படுத்தியது..இன்னும் சொல்ல போனால் இந்த பாடலின் வரி தமிழ் மக்களுக்கு தாரக மந்திரமாகவே விளங்கியது..இன்றும் விளங்கிகொண்டிருக்கிறது..இன்று கூட திருட்டு குற்றங்களைப் பற்றி யார் பேசினாலும் 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்..இன்றைக்கும் யாராலும் ஏற்றுகொள்ளப்பட்ட கருத்தை அன்றே சொன்னவர்தான் நம் தலைவர்..அதனால்தான் அவர் புரட்சித் தலைவர்..
இந்த படத்தில் திருமதி சரோஜா தேவி நடிக்கும்போது, ஒரு கட்டிலை சுற்றி ஓடி காட்சி எடுத்தபோது அவருடைய காலில் கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் கொட்டியது..காட்சிக்கு நடுவே சொன்னால் யாராவது ஏதாவது சொல்ல போகிறார்கள் என்று திருமதி சரோஜா தேவி அவர்கள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார் ..அவருடைய காலில் வந்த ரத்தத்தை யாரும் கவனிக்காதபோது. நமது தலைவர் பதறிப்போய் காட்சியை நிறுத்த சொல்லி திருமதி சரோஜா தேவி அவர்களின் அடிபட்ட காலை கைகளால் பிடித்து மடிமீது வைத்து காலில் குத்திய கண்ணாடி துண்டுகளை எடுத்து சிகிச்சை செய்தார்..திருமதி சரோஜாதேவி அவர்கள் பதறிப்போய் மதிப்பிற்குரிய ஒரு பெரிய நடிகர் ஒரு சிறிய நடிகையின் காலைத்தொட்டு சிகிச்சை செய்வதா என்று மறுத்த போதும்., அவரிடம் இனிமேல் இப்படி எல்லாம் செய்ய கூடாது..ஏதாவது விபத்து என்றால் சொல்லவேண்டும் என்று அறிவுரை கூறினார்..மேலும் அந்த காட்சியை ரத்து செய்து கால் குணமான பின் நடிக்க வைத்தார்..அதனால்தான் திருமதி சரோஜாதேவி அவர்கள் நமது தலைவரை 'எனது தெய்வம்' என்று அழைத்தார். சக நடிகரின் பாதுகாப்பில் அவர் எப்படி கவனம் செலுத்தினார் என்பதற்கும், அனைவரையும் அவர் சமமாக பாவிக்கும் தன்மைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு..இதைப்போல் கோடிகணக்கான நிகழ்சிகள் தலைவரின் வாழ்க்கையில் உள்ளது.
மேலும். இந்த படத்தில் தலைவரின் இயல்பான நடிப்பு அனைவரையும் கவரும் விதத்தில் அமைந்தது..சமூக படங்களிலும் தலைவர்தான் நம்பர் ஒன் என்பதை அறிய வைத்த படம்..அதுவும் கிளைமாக்ஸ் சண்டையில் ஏற்படுத்திய புதுமை அனைவராலும் பாராட்டப்பட்டு..பல படங்களுக்கு முன்னோடியாக விளங்கியது
Climax Fight MGR - M.N.Nambiar Fight Scenes மூன்று நாட்கள் இரவு பகலாக படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சிகள் ரீரீகார்டிங் ஆகியவற்றை எம்ஜிஆர் அவர்கள் டைரக்டர் செய்தார்.
தகவலுக்கு நன்றி : திரு.சி.எஸ். குமார் , பெங்களூரு*