-
MGR filmography - Film 16 - Poster
"பைத்தியக்காரன்"
1946ஆம் வருடம் ஒரு படத்தில் நாயகனாக நடித்து விட்டாலும் அடுத்த ஆண்டு மீண்டும் துணை நாயகனாக எம்ஜியார் நடித்த இந்தப் படத்தில் இரண்டு சுவாரசியங்கள்:
ஒன்று, பின்னாளில் குணசித்திர வேடதாரியான எஸ்வி சகஸ்ரநாமம் இதில் கதை திரைக்கதை எழுதி, ஹீரோவாகவும் நடித்தார்.
இரண்டாவது: டி.ஏ.மதுரம் டபுள் ரோல் செய்தார்; அதில் ஒன்று எம்ஜியாரின் ஜோடியாக!
போனஸ் சுவாரசியம் : போஸ்டரில் படத்தின் டைட்டில் ஆங்கிலத்தில்! அந்நாளில் பலபடங்கள் இவ்வாறுதான் விளம்பரமாயின!..... Thanks...
-
MGR Filmography Film 35 (1956) Poster
"அலி பாபாவும் நாற்பது திருடர்களும்"
ஏ சர்ட்டிஃப்கேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் (மர்மயோகி), தேசிய விருது வாங்கிய முதல் தமிழ்ப்படம் (மலைக்கள்ளன்) என திரைத்துறையில் பல விஷயங்களில் எம்ஜியார் படமே முன்னோடி, ட்ரெண்ட் செட்டர் என்பதைப் பார்த்தோம்; அந்த வரிசையில் இன்னொரு முதன் முதலாக எனச் சேர்கிறது, தமிழில் முதன் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.
1954ஆம் வருடம் வெளியான மஹிபால் நடித்த அலிபாபா சாலிஸ் சோர் என்னும் இந்திப்படத்தின் மறுவாக்கமே என்றாலும், அதன் காட்சிகள், இசை அனைத்தும் அப்படியே இதில் பயன்படுத்தப்பட்டன என்றாலும் ஒரிஜினல் போல கருப்பு வெள்ளையில் அன்றி இதைக் கலரில் எடுக்கத் தீர்மானித்த மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தின் ஆர்வம் மட்டுமன்றி அவரது மார்க்கெட்டிங் திறனும் கவனிக்கத்தக்கது. வண்ணப்படம் என்றால் காண்பதற்கு எப்படி இருக்கும் என்று மக்கள் அறிவதற்காகப் படம் வெளியாவதற்கு முன்னர் ஒரு சிறிய வண்டியில் படத்தில் சில நிமிடங்களை மட்டும் ஒரு சிறிய ப்ரொஜெக்டர் வழி ஊர் ஊராக அனுப்பித் திரையிட வைத்தாராம். படத்துக்குக் கிடைத்த கோலாகலமான வரவேற்பைக் கூற வேண்டியதில்லை!
வெற்றிக்கு அது மட்டும் காரணமல்ல; இந்திப் படத்தில் நடித்திருந்த மஹிபாலும் ஷகிலாவும் பி கிரேடு நடிகர்களே; மாறாக, தமிழில் உச்ச நட்சத்திரமாகி விட்ட எம்ஜியாரும், அவருக்கு சீனியராக ஏற்கனவே பாகவதர் காலத்திலிருந்து கதாநாயகியாக நிலை பெற்று விட்ட பானுமதியும், இப்போது சொல்கிறோமில்லையா அதைப் போல அவர்களிடையே பாடல் காட்சிகளில் காணப்பட்ட கெமிஸ்ட்ரியும், அபு ஹசன் ரோலில் இந்தியில் சவசவா என்று செய்திருந்த வ்யாஸ் போல அல்லாது நடுங்க வைக்கும் ஆர்பாட்டச் சிரிப்பு கொண்ட பி.எஸ்.வீரப்பாவும், எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியில் இல்லாத வண்ணமும் (இந்தியில் தேக்கோஜி சாந்த் நிக்கலா என்ற பாடல் மட்டும் கலரில் எடுக்கப்பட்டது. தமிழில் இது அழகான பொண்ணுதான்). படத்தை முற்றிலும் வேறு தளத்திற்குக் கொண்டு சென்று விட்டன. சுந்தரத்தின் இன்னொரு இன்னோவேஷன், குகையின் வாசல் திறப்பதை மாயாஜாலமாக்காமல் 'அண்டா கா கசம் அபு கா ஹுக்கம்' என்பதைக் கேட்டு உள்ளிருக்கும் அடிமைகள் விசையைச் சுற்றிக் கதவைத் திறப்பதைப் போல அமைத்தது! (யாருமில்லாத அந்தக் குகையில் சங்கிலியால் கட்டப்பட்ட அந்த அடிமைகளுக்கு சோறு தண்ணி எப்படி கிடைத்தது; ஒன் டூ காரியங்களுக்கு என்ன செய்வார்கள் என்றெல்லாம் அப்போதென்ன இப்போது பார்க்கையிலும் கேள்வி எழாது! :) )
இது முதல் கலர்படமல்ல; 1955ஆம் வருடத்து ஜெமினி கணேசன் நடித்த கணவனே கண்கண்ட தெய்வத்தின் ஒரு பகுதி கலரில் எடுக்கப்பட்டது என்பார் உண்டு; இந்தப் படத்தைப் பற்றிப் பல சுவாரசியமான கதைகளும் உண்டு - அல்லா என்ற சொல்லை அப்போது பகுத்தறிவுக் கட்சியச் சார்ந்து விட்ட எம்ஜியார் சொல்ல மறுத்ததாகவும், சுந்தரத்தின் கட்டாயத்தின் பேரில் சொன்னதாகவும் சொல்வார்கள்; அதைப் போல, படம் முடிவடையும் தருவாயில் எம்ஜியார் வேறு படங்களில் பிசியாகி விட, காத்திருத்தல் என்பதை அறியாத சுந்தரம், கரடிமுத்து என்னும் நடிகரை டூப் போட வைத்துப் படத்தை முடித்து விட்டதாகவும், அந்த மனக்கசப்பினால்தான் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் எம்ஜியார் நடிக்கவில்லை
பல எம்ஜியார் படங்களைப் போல, இதுவும் ஆக்கத்திலும் வசூலிலும் சரித்திரம் படைத்து விட்ட ஒன்று!......... Thanks...
-
MGR filmography Film 36 (1956) Poster
"மதுரைவீரன்"
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வெற்றிகளைச் சுவைக்கத் துவங்கிய எம்ஜியாரின் திரையுலக வாழ்க்கையை ஒரு கையாக உச்சக்கட்டத்துக்கு மிக அருகில் அழைத்துச் சென்றது, 1956ஆம் வருடம் தமிப்புத்தாண்டு தினத்தன்று ரிலீசாகி 36 தியேட்டர்களில் நூறு நாட்களும் மதுரையில் சில்வர் ஜூபிளியும் கொண்டாடி மொத்த வசூல் அன்றைய தேதியில் ஒரு கோடியைக் கடந்த இந்தப் படம்!
இரு கதாநாயகியரில் முன்பே எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்திருந்த பானுமதியுடன், முதன் முறையாக அவருக்கு ஜோடி சேர்ந்தார் நாட்டியப்பேரொளி பத்மினி இந்தப் படத்தின் வெற்றி காரணமாக வேறு பல படங்களிலும் அந்த ஜோடி தொடரலானது.
இதன் மாபெரும் வெற்றிக்கு நடிப்பு, பட ஆக்கம், இசை என்று அனைத்தும் துணை நின்றன. பிரதான நடிகர்கள் மட்டுமல்லாது துணைப்பாத்திரங்களிலும் பாலையா, என்எஸ்கே, மதுரம், ஓஏகே தேவர் என்று மிகச் சிறப்பான பங்களிக்க, ஜி. ராமநாதனின் இசையில் நாட்டுப்புற இசை கர்நாடக இசை இரண்டும் மிக அருமையாக கையாளப்பட்டு இனிய பாடல்கள் உருவாக, வசனங்களை கவிநயத்தோடு கண்ணதாசன் கையாண்டார். 'வானகமே! வையகமே! ஆராய்ச்சி மணி கட்டி ஆண்டு வந்த தென்னகமே!' என்பன போன்ற பல வசனங்கள் மனப்பாடம் போல உருப்போடப்படலாயின! இதன் வெற்றியால், நாடோடி மன்னன், மன்னாதி மன்னன் போன்றனவற்றிற்கும் கண்ணதாசன் வசனகர்த்தா ஆனார்.
ஒரு சின்ன கான்ட்ரவர்சி உண்டு, இந்தப் படத்தைப் பொறுத்து.
மலைக்கள்ளன், அலிபாபாவைத் தொடர்ந்து ஏழைகளின் நாயகனாகவும் புரட்சி வீரனாகவும் மட்டுமன்றி சாதி வேறுபாடுகளை தடைகளைத் தாண்டிச்செல்லும் சமூக வீரனாகவும் எம்ஜியாரை நிலைநிறுத்தியது இப்படம். ஆனாலும், அந்நாளைய சமூக எண்ணங்களுக்கொப்ப மதுரைவீரன் அரசகுலத்தில் பிறந்து, ஹரிஜன தம்பதியால் வளர்க்கப்பட்டான் என்று திரைக்கதையில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டாலும், அது பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை, எவராலும்!....... Thanks.........
-
MGR Filmography Film 37 (1956) Poster
"தாய்க்கு பின் தாரம்"
எம்ஜியாரின் திரைவாழ்க்கையில் பொன்னான ஆண்டாக மலர்ந்தது 1956ஆம் வருடம். அந்த வருடம் வெளியான அவரது மூன்று படங்களும் சூப்பர் ஹிட்டாயின. அது மட்டுமல்ல, மூன்றும் மூன்று வெவ்வேறு களங்களைக் கொண்டிருந்தன. அலிபாபா அராபிய ஃபாண்டஸி கதையாக இந்தியிலிருந்து மறுவாக்கம் செய்யப்பட்டது. அடுத்து வந்த மதுரைவீரன் தமிழர்களின் காவல் தெய்வத்தின் கதையைச் சொன்னது; மூன்றாவதான தாய்க்குப்பின் தாரம் தமிழ்நாட்டு கிராமத்தின் இயல்பான தன்மையைச் சித்தரித்து எம்ஜியாருக்கு சமூகப்படங்கள் சரிப்பட்டு வராது என்ற தவறான கருத்தை முறியடித்து வெற்றிவாகை சூடியது.
எம்ஜியார் பானுமதி ஜோடி இதிலும் தொடர, இப்படம். முதல் முறை மட்டுமன்றி, ரீரிலீஸ்களின்போதும் வசூலை அள்ளிக்குவித்த வகையில் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவரின் தேவர் ஃபிலிம்ஸ் கம்பெனிக்குப் அஷயபாத்திரமாகவே அமைந்தது. இதை அடுத்து எம்ஜியார் நாயகனாக நடிக்க கேவி மகாதேவன் இசையமைக்க, தேவரின் தம்பியும் எடிட்டருமான எம்ஏ திருமுகம் இயக்க தேவர் ஃபிலிம்ஸ்15 படங்களைத் தயாரித்தது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜியாருக்கும் தேவருக்கும் அவ்வப்போது சிறுசிறு பிணக்குகள் வந்ததுண்டு என்றாலும், இருவருடம் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்கள். இன்னொருவரை ஹீரோவாகப் போட்டு தேவர் ஃபிலிம்ஸ் படம் எடுக்காது என்று சின்னப்பா தேவர் எம்ஜியாரிடம் கூறியதாகச் சொல்வார்கள். வேறு நாயகர்கள் நடித்த தேவரின் தமிழ்ப்படங்கள் தேவர் ஃபிலிம்ஸ் அல்லாமல் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ் என்ற பேனரில் தயாரிக்கப்பட்டன.
எம்ஜியாரின் அம்மா செண்டிமெண்ட் ஏற்கனவே குலேபகாவலியில் இருந்தாலும், அழுத்தமாக எம்ஜியாரின் பிராண்டட் மார்க்கெட்டிங் டெக்னிக்காக அது மாறத்துவங்கியது இந்தப் படம் துவங்கித்தான். தாய் என்ற சொல்லை டைட்டிலாக வைத்தே வரிசையாகப் படங்கள் தயாராகத் துவங்கின.
எம்ஜியாரின் அரசியல் பிரசாரமும் இந்தப் படத்தில் தொடர்ந்தது. ஏற்கனவே மலைக்கள்ளனில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!' என்று பிரசாரித்ததைப்போல, இதிலும் அழுத்தமாக, 'மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே!' என்று சமூக, அரசியல் நிலைகளைச் சாடி ஒரு பாடல் அமைந்தது தற்செயல் அல்ல! இதற்குப்பின் அநேகமாக ஒவ்வொரு எம்ஜியார் படத்திலும் இதைப்போல ஒரு பாடல் இடம்பெறலானது....... Thanks...
-
MGR filmography Film 38 (1957) Poster
"சக்கரவர்த்தி திருமகள்"
1957ஆண்டு ஒரு வெற்றியோடு எம்ஜியாருக்குத் துவங்குகிறது. அதுதான் ஏ.எல்.ஸ்ரீனிவாசன் தயாரிப்பில் ப. நீலகண்டன் இயக்கி ஜி.ராமநாதன் இசையில் உருவாகிப் பல தியேட்டர்களில் 150 நாட்களைத் தாண்டி ஓடிய படமான சக்ரவர்த்தித்திருமகள். படத்தின் அமோக வெற்றிக்குக் காரணம் பல சம்பவங்களால் கோர்க்கப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக எந்த இடத்திலும் தொய்வு நேராதவண்ணம் மிக அழகாக அமைக்கப்பட்ட அதன் வெகு சுவாரசியமான திரைக்கதை. ஃபேரி டேல் பாணியில் சேடியின் சூழ்ச்சியால் அநாதியாக்கப்படும் இளவரசி, அவள் மீது காதலால் சேடிக்கு துணைபோகும் தளபதி, திருமணத்திற்கு முன்னரே இளவரசியைச் சந்தித்து விட்டதால் சேடி போடும் நாடகத்தை அறிந்தாலும் நிரூபிக்க முடியாத இளவரசன் என்று பிரதான கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, என்எஸ்கே, மதுரம், தங்கவேலு போலப் பலரும் மிக அருமையாகத் தங்கள் பங்கைச் செய்ததும் படத்தின் பெரு வெற்றிக்குக் காரணம்.
பொதுவாக எம்ஜியார் டப்பாங்குத்து ஆடியதில்லை. ஆனாலும், இருபடங்களில் அவர் அதைச் செய்ததுண்டு; ஒன்று இந்தப்படத்தின் 'ஆடவந்த அம்மாளு'; மற்றொன்று தேர்த்திருவிழாவின் 'ஏ குட்டி என்னா குட்டி'!
எம்ஜியாரின் அரசியல் நிலைப்பாடு அவர் படங்களின் மூலமாக பிரசாரிக்கப்படுவது வழக்கமாகி இந்தப்படத்திலும் தொடர்கிறது; நாயகன் பெயர் உதயசூரியன்!
இந்தப்பட ஷூட்டிங்கில் நீலகண்டனுக்கும் எம்ஜியாருக்கும் ஒரு சிறு உரசல் உருவாகிப் பின்னர் சமன்பட்டதாகச் சொல்வார்கள். எம்ஜியாரின் படங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் இயக்கியவர் என்ற பெருமை நீலகண்டனுக்கு உண்டு! பின்னாளில் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு எம்ஜியாரே இயக்குனர் என்றாலும், நீலகண்டன் அதில் செகண்ட் யூனிட் டைரக்டராகப் பணியாற்றினார் டைட்டிலில் அவர் பெயரும் தனியாக இடம்பெறும். தமிழ்வாணன் இதைக் கண்டு, படத்தின் டைரக்டர் நீலகண்டன்தான்; எம்ஜியார் தன்னுடைய இயக்கம் என்று சொல்லி ஏமாற்றுகிறார் - என்று கொஞ்சகாலம் சொல்லி வந்ததும் உண்டு! ஆனால், எம்ஜியார் தன் வழக்கப்படி இவை போன்ற எதையும் பொருட்படுத்திப் பதில் சொன்னதும் இல்லை!...... Thanks...
-
மனிதர் இறந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன !! அவரின் படங்கள் வந்து ஐம்பது வருடங்கள் உருண்டோடி விட்டன !! சன் டிவிக்காரன்விளம்பரம் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது !! ஆனால் அவரின் ரசிக கண்மணிகளுக்கு !! இந்த கொரானாவிலும் !! புது பட ஜுரம் தொத்தி கொண்டது !! இன்று இரவு அன்பேவா படமும் !! நாளை மறுநாள் இரவு எங்கள் வீட்டு பிள்ளை படமும் !! தலைவர் ரசிகர்கள் !! பக்தர்கள் இடையே !! புதிய உற்சாகத்தை !! புதுப்படம் ரீலீஸ் போன்ற மகிழ்ச்சியை உருவாக்கி இருக்கிறது !! இதுதான் தலைவரின் புகழ் ரகசிய விந்தை !! ஓங்குக நமது தலைவர் புகழ் பார் உள்ள வரை !!!......... Thanks...
-
எம்ஜிஆருக்கு வசூல் ராஜா பட்டம்; அதிக ரசிகர் மன்றங்கள்; மார்க்கெட்டை உயர்த்திய ‘மதுரை வீரன்’ ரீலிஸாகி 64 வருடங்கள்!
வி. ராம்ஜி
தி இந்து, ஏப்ரல் 17, 2020
முன்னதாகவும் படங்கள் ஓடியிருக்கின்றன. வசூல் குவிந்திருக்கின்றன. ஆனால் அப்படியொரு வசூலை அதற்கு முன்பு வேறு எந்தப் படங்களும் கொடுத்ததில்லை எம்ஜிஆருக்கு. அதேபோல், அவரை ரசிக்கத் தொடங்கிய கூட்டம் முன்னமே இருந்ததுதான். ரசிகர் மன்றங்களும் கூட முன்பே வைக்கத் தொடங்கிவிட்டார்கள்தான். ஆனால், அந்தப் படம் வந்த பிறகுதான், எம்ஜிஆரின் திரை வாழ்வில், பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது சின்னவரின் கொடி. அந்தப் படம்... ‘மதுரை வீரன்’.
இன்றைக்கும் தென்மாவட்டங்களில் பலராலும் வணங்கப்பட்டு வரும் தெய்வம்... மதுரை வீரன். தமிழ் கூறும் நல்லுலகில், மதுரை வீரன் குறித்தும் அவருடைய மனைவியர் குறித்தும் கர்ண பரம்பரைக் கதை உண்டு. அந்தக் கதையையே ஆதாரமாகக் கொண்டு, மிகப்பெரும் தயாரிப்பாளரான லேனா செட்டியார், எம்ஜிஆரின் கால்ஷீட்டை வாங்கி, ‘மதுரை வீரன்’ படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கினார்.
அநேகமாக, எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட்டும் ‘யாரது எம்.ஜி.ராமசந்திரன்?’ என்று எல்லோரும் வியந்து கொண்டாடியதுமான முதல் படம், முக்கியமான படம் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாகத்தான் இருக்கும். திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் நூறுநாட்களைக் கடந்து ஓடியது.
இதையடுத்து மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படமும் செம ஹிட்டைச் சந்தித்தது. ‘அண்டாகா கஸம், அபூக்கா குகும், திறந்திடு சீசேம்’ என்கிற வசனத்தைச் சொல்லாத தமிழ் ரசிகர்களே இல்லை. தமிழின் முதல் கேவா கலர்ப் படத்தில் நடித்த பெருமையும் இதனால் எம்ஜிஆருக்கு வந்து சேர்ந்தது.
எம்ஜிஆரின் வேகத்தையும் சுறுசுறுப்பையும் முக வசீகரத்தையும் முக்கியமாக அவரின் தெள்ளுதமிழ் வசன உச்சரிப்பையும் கண்டுணர்ந்த டி.ஆர்.ராமண்ணா, ‘குலேபகாவலி’ திரைப்படத்தை எடுத்தார். எம்ஜிஆரை சாகசக்காரனாக்கினார்.
இந்த சமயத்தில்தான் லேனா செட்டியாரின் ‘மதுரை வீரன்’ படத்துக்கு ஒப்பந்தமானார் எம்ஜிஆர். யோகானந்த் இயக்கிய இந்தப் படத்தில், பானுமதி, பத்மினி, டி.எஸ்.பாலையா, ஓஏகே.தேவர், ஈவி.சரோஜா, எம்.ஆர்.சந்தானலட்சுமி முக்கியமாக என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்தனர்.
படத்தின் பாடல்களை கண்ணதாசன், உடுமலையார் (உடுமலை நாராயண கவி), தஞ்சை ராமையாதாஸ் முதலானோர் எழுத, படத்தின் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதினார் கண்ணதாசன். வசனங்கள் ஒவ்வொன்றுக்கும் விசில் பறந்தன. கைதட்டலால் அரங்கையே அதிரவைத்தார்கள் ரசிகர்கள்.
அட்டகாசமான சினிமாதான், மதுரை வீரன் கதை. பிறக்கும் போதே குழந்தையின் கழுத்தில் மாலை. இது தேசத்துக்கு ஆகாது என்கிறார் அரச ஜோதிடர். தேசத்தையும் ராஜ்ஜிய பதவியையும் காப்பதற்காக குழந்தையைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். செருப்பு தைக்கும் தொழிலாளியான என்.எஸ்.கே.வும் அவரின் மனைவி மதுரமும் குழந்தையைப் பார்க்கிறார்கள். வளர்க்க முடிவு செய்கிறார்கள். ‘வீரன்’ எனப் பெயர் சூட்டுகிறார்கள். இந்த வீரன் என்கிற சூரன் தான், எம்ஜிஆர். இந்தக் குழந்தையால் தேசத்துக்கே ஆபத்து என்று சொல்லப்பட்ட கதை, நிஜத்தில் பொய்யானது. எம்ஜிஆரின் அரசியலும் அவரின் ஆட்சியும் பாமர மக்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது நிஜ சரித்திரம்.
காமெடியுடன் நகரும் திரைக்கதை, படத்துக்குப் பலம் சேர்த்தது. ஜி.ராமனாதனின் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘நாடகமெல்லாம் கண்டேன்’, ‘வாங்க மச்சான் வாங்க’ என்று எல்லாப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன.
இந்தப் படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைக் கடந்து, இருநூறு நாட்கள், அதற்கும் மேலே என்றோடியது. மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ’மதுரை வீரன்’ திரைப்படம், முக்கியமாக மதுரை சிந்தாமணி தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, 200 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தின் மூலமாக எம்ஜிஆருக்கு மூன்றுவிதமான வெற்றி கிடைத்தது என்கிறார்கள் ரசிகர்கள். அதாவது, எம்ஜிஆருக்கு இந்தப் படம் வெளிவந்த கையோடு, தமிழகமெங்கும் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு எம்ஜிஆரின் மார்க்கெட்டும் சம்பளமும் திரையுலகில் கூடியது.
இன்றைக்கு சூப்பர் ஸ்டார் என்று சொல்கிற அந்த அந்தஸ்தை எம்ஜிஆர் ஸ்டார் அந்தஸ்து எகிறியது. எம்ஜிஆர் நடித்தால், அந்தப் படம் ஹிட்டாகிவிடும் என்று பைனான்சியர்கள் நம்பினார்கள். தயாரிப்பாளர்கள் அவரைப் படையெடுத்தார்கள். விநியோகஸ்தர்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் பணப்பையோடு வந்து, அவரின் படங்களை பூஜை நாளின் போதே, வாங்கத் துடித்தார்கள். மூன்றாவதான விஷயம்... அப்போது எம்ஜிஆர், திமுகவில் இருந்தார். ‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு திமுகவில் அவரின் செல்வாக்கு உயர்ந்தது. மெல்ல மெல்ல, திமுகவில் பலரும் எம்ஜிஆர் ரசிகர்களானார்கள்.
1956-ம் ஆண்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸானது ‘மதுரைவீரன்’. எம்ஜிஆரை, மாறு கால் மாறு கை வாங்குவதுடன் படம் முடியும். துக்கத்தோடும் அழுகையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்கள் தமிழ் ரசிகர்கள். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு எம்ஜிஆர், வேறு எந்தப் படத்திலும் தன் ரசிகர்களை அழவைக்கவே இல்லை.
எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்றும் வசூல் ராஜா என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உயருவதற்குக் காரணமாக இருந்த ‘மதுரை வீரன்’ வெளியாகி, 64 வருடங்களாகிவிட்டன! இன்றும் எவர்கிரீன் ஹீரோவாக மக்களின் மனங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ‘மதுரை வீரன்’ எம்ஜிஆர்!........(மதுரை- சென்ட்ரல், சிந்தாமணி அல்ல)..
............ Thanks.........
-
வணக்கம் நண்பர்களே!! பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் நடந்து கொள்ளும் விதமே அலாதியானது. முத்தான இரண்டு நிகழ்வுகள். பலருக்கு தெரிந்திருந்தாலும் தெரியாதவர்களுக்கு....
அண்ணா முதல்வர். 1971 பொதுதேர்தல்.அண்ணா உயிரோடு இல்லை. ராஜாஜி யின் சுதந்திரா கட்சியும், காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியும் கூட்டணி. கண்டிப்பாக வெல்லும் என இணைக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி காமராஜருக்கு ஆதரவாக சிவாஜி. கருணாநிதிக்கு ஆதரவாக எம்ஜிஆர்.
ஒரு கட்டத்தில் இது எம்ஜிஆர் - சிவாஜி மோதலாக பார்க்கப்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நடந்த பிரம்மாண்டமான காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சிவாஜி ,எம்ஜிஆரை தாக்கி பேசினார்." நடிப்பில் சந்திப்போமா? இல்லை வீரத்தில் சந்திப்போமா?என சவால் விட்டார்.
அடுத்த வாரம் அதே தீவுத் திடலில் திமுக கூட்டம். எம்ஜிஆர் பேசுகிறார். "தம்பி கணேசன் என்னை நடிப்பில் சத்திப்போமா? என கேட்கிறார். நடிப்பில் அவருடைய பாணி வேறு என்னுடைய பாணி வேறு என அவரே சொல்லியிருக்கிறார். என்னுடைய நடிப்பு உடல்மொழி நடிப்பு. அவர் நடிப்பு முகமொழி நடிப்பு. அது தெரிந்தும் ஏன் இப்படி கேட்டார் என தெரியவில்லை. ஒருவேளை சிவந்தமண் படத்தில் நண்பர் முத்துராமன் மிகச் சிறப்பாக நடித்ததால் கணேசனுக்கு தன் நடிப்பில் சந்தேகம் வந்துவிட்டதோ என்னவோ?" சிறிது பேச்சை நிறுத்திவிட்டு எம்ஜிஆர் மறுபடி தொடர்கிறார்... "வீரத்தில் சந்திப்போமா என கேட்கிறார்.ஐயோ பாவம்"
கூடியிருந்த மக்களின் சிரிப்பும் ஆரவாரமும் விண்ணைப் பிளந்தது. ஓ. ஏ. கே. தேவர். அடுத்து பேசினார்"கணேசா நீ முதலில் நடிப்பில் என்னுடன் மோதிப்பார். அப்புறம் எம். ஜி. ஆர் உடன் மோதலாம்" என பதில் சவால் விட்டார். அந்த தேர்தலில் எம்ஜிஆர் என்ற ஒற்றை ஆளுமை காமராஜர் ராஜாஜி சிவாஜி என மூன்று பெரும் மலைகளை வீழ்த்தி கருணாநிதி யை உயரத்தில் அமர்த்தியது. தமிழக வரலாற்றிலேயே ஒரு கட்சி203இடங்களில் போட்டியிட்டு 184 இடங்களில் வென்று சாதனை படைத்த கட்சியாக திமுக ஆனது. அந்த சாதனை இன்றுவரை எந்த கட்சியாலும் முறியடிக்கப்படவில்லை...
1980 எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு பொதுதேர்தல். மதுரை மேற்கு தொகுதியில் தலைவர் போட்டியிடுகிறார். பிறகு நடந்த மாபெரும் பொதுக்கூட்டம். மதுரை சித்திரை திருவிழா போல இருந்தது. தாய்மார்கள் கைக்குழந்தை யுடன் கணக்கிலடங்காது கலந்து கொள்கிறார்கள்.ஆட்சி கலைக்கப்பட்ட வேதனையில் அனைவரும் கொந்தளித்து கொண்டிருக்கிறார்கள். நெரிசல் மிகுந்து உள்ளது. எம்ஜிஆர் பேசி முடிக்கிறார்.கடைசியாக"ஆண்களுக்கு ஒரு வேண்டுகோள்.நான் இங்கு பெண்களிடம் தனியாக பேச விரும்புகிறேன். தயவுசெய்து நீங்கள் கலைந்து செல்லுங்கள் "என்றார். ஆண்கள் கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமைதியாக கலைந்து செல்கிறது. ஆண்கள் எல்லோரும் போய் விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தி கொண்ட எம்ஜிஆர் மைக்கை பிடித்து பேசினார்"இப்போது பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக கலைந்து செல்லலாம்"
தன்னை தேடி வரும் மக்களை அடிமைகளாக நினைக்காமல் தன் குடும்பத்தில் ஒருவராக நினைப்பவருக்கே இது போன்ற பாதுகாப்பு உணர்வு வரும்.
அதே 1980ல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம்.(பதிவு பெரிதாக இருப்பதால் மன்னிக்கவும்) .கருணாநிதி இந்திரா வுடன் கூட்டணி வைக்கிறார். அவர் இரண்டே நிபந்தனை வைக்கிறார். "எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். நான் முதல்வராக பதவியேற்கும் போது இந்திரா வரணும். "
இந்திரா காந்தி அலையின் காரணமாக எம்.பி. தேர்தலில் அதிமுக இரண்டே இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் திமுக கூட்டணி அபார வெற்றி. ஆட்சி கலைக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து விட்டது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை. கருணாநிதி ஏக மகிழ்ச்சியில் உள்ளார். பத்திரிகை சந்திப்பு...
பத்திரிகை: இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
கருணா: உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். வள்ளுவர் கோட்டம் போய் பாருங்கள். அங்கு பிரம்மாண்டமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளை மறுநாள் என் பதவியேற்பு விழாவில் பிரதமர் இந்திரா கலந்து கொள்ள உள்ளார். நீங்களும் தவறாது கலந்து கொள்ளுங்கள். (நகைச்சுவையாக) வடக்கும் தெற்கும் ஒன்றிணைகிறது. ஆம். சுவையான வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் பரிமாறப்படும். அந்த அளவுக்கு நான் வெற்றி பெறுவது உறுதி. என் கவலையெல்லாம் நாளை என்பது சீக்கிரம் வர வேண்டுமே என்றுதான்.
மறுநாள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மக்கள் மறுபடி எம்ஜிஆர் அவர்களுக்கே வாக்களித்து வெற்றி பெற செய்தனர். அதே நிருபர் எம்ஜிஆர் இடம் பேட்டி.
பத்திரிகை :கருணாநிதி அவர்கள் நேற்று பேட்டியில் வெற்றி பெற்று விடுவேன். என மிகுந்த நம்பிக்கை யுடன் இருந்தாரே... ஆனால் வெற்றி உங்கள் பக்கம். இது எப்படி சாத்தியமானது?
எம்ஜிஆர் : கருணாநிதி அதிகாரத்தையும் ஜோசியத்தையும் நம்பினார். நான் மக்களை நம்பினேன்..இந்திராவிடம் என் ஆட்சியை கலைக்க சொன்ன கருணாநிதிக்கு நன்றி சொல்கிறேன். மக்கள் என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பதை எனக்கே உணர்த்திய நண்பர் கருணாநிதிக்கு நன்றி!!
அதுதான் எம்ஜிஆர்............ Thanks.........
-
மதுரையும்-மக்கள் திலகமும்.... சுவாரசியமான #எம்ஜிஆர் நினைவுகள்...
இனிஷியலே பெயராக மாறிய பெருமை #மக்கள்_திலகம் எம்ஜியாருக்கு மட்டுமே உண்டு. எம்ஜிஆர் என்பதன் விரிவாக்கம் Maruthur Gopalan Ramachandran என்பதே. இதில் மருதூர்-ஐ எடுத்துவிட்டு மதுரை என்பதை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த அளவிற்கு மதுரைக்கும், மக்கள்திலகம் எம்ஜியாருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. எம்ஜியார் நினைவுகளோடு கொஞ்சம் பின்னோக்கி பயணிக்கலாம்.
01. திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய எம்ஜியாரின் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போட்டது நாடக உலகம்தான். மதுரையைச் சேர்ந்த ` ஒரிஜினல் பாய்ஸ்` கம்பெனியில் அண்ணன் சக்ரபாணியின் விரல் பற்றி 6 வயதில் இணைந்தார் எம்ஜியார்.
02. திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்த எம்ஜியாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம்…மதுரைவீரன். இந்த படம் மதுரை சிந்தாமணி திரையரங்கில் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சிந்தாமணி திரையரங்கில்
20-க்கும் மேற்பட்ட எம்ஜியார் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கின்றன.
03.1958 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில்
`#நாடோடி_மன்னன்` வெற்றிவிழாவில்தான் எம்ஜியார் ரசிகர் மன்றம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது
04. 1986 ஆம் ஆண்டு இதே மதுரையில்தான் எம்ஜியார் தனது ரசிகர் மன்ற மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த மாநாட்டில் எம்ஜியாருக்கு ஜெயலலிதா ஆளுயர செங்கோல் வழங்கினார்.
05. எம்ஜியார் அதிமுகவை தொடங்குவதற்கு விதை போட்டது மதுரைதான். 1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் நாட்டிய நாடகம் நடத்த ஜெயலலிதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆத்திரமடைந்த எம்ஜியார் ஜெயலலிதாவுடன் திறந்த வாகனத்தில் மதுரையை வலம் வந்தார். மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதே மாநாட்டில் எம்ஜியார் பேசி முடித்தவுடன் பெருவாரியான கூட்டம் கலைந்தது. இது அடுத்து பேசவிருந்த முதல்வர் கருணாநிதியை எரிச்சலூட்டியது. இருவருக்கும் இடையிலான தொடர் மோதல்களின் உச்சமாக பின்னர் எம்ஜியார் தனிக்கட்சி தொடங்கினார்.
06. திமுகவிலிருந்து எம்ஜியார் நீக்கப்பட்டபோது அதிகம் கொந்தளித்தது மதுரை மாவட்டம்தான். பதற்றமான சூழ்நிலையால் அங்குள்ள சில கல்வி நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடிக்கிடந்தன.
07. அதிமுகவை தொடங்கிய பிறகு அந்தக் கட்சிக் கொடியை எம்ஜியார் முதன் முதலாக ஏற்றியது மதுரையில்தான். அண்ணா படம் பொறித்த அந்தக் கொடியை மதுரை ஜான்சிராணி பூங்காவில் எம்ஜியார் ஏற்றிவைத்தார்.
08. அதிமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை மதுரை கலெக்டர் அலுவலகம்தான் வழங்கியது. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மாயத்தேவரின் வெற்றிக்காக இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது.
09. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில்தான் ` உலகத் தமிழ்ச் சங்கம்` மீண்டும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் எம்ஜியார்.
10. 1980 ஆம் ஆண்டு மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் எம்ஜியார்.
11. சினிமாவிலும், அரசியலிலும் முத்திரை பதித்த எம்.ஜி.ஆர். கடைசியாக நடித்த திரைப்படத்தின் பெயர்….மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்........ Thanks.........
-
#எட்டுத்திக்கும்...
புரட்சித்தலைவர் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச் சை பெற்றுக் கொண்டிருந்தபோது உலகமே அவர் நலம்பெற பிரார்த்தனையில் ஈடுபட்டது. சர்ச், மசூதி, ஆலயங்களில் எல்லாம் மத வேறுபாடின்றி பிரார்த்தனை செய்தார்கள். வாத்தியாருக்காக உலகம் முழுக்க ஒருமைப்பாட்டோடு வழிபாடு நடந்தது. அத்தனை பேரின் அன்பினால் வாத்தியாரு குணமாகி நாடு திரும்பினார்.
புரூக்ளின் மருத்துவமனையில்
வாத்தியாருக்கு சிகிச்சை செய்ய அங்குள்ள #டாக்டர் #எலிப்டரீட்மேன் வரும்போது வீடியாவில் எம்ஜிஆர் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதை பார்த்துப் பார்த்து
அந்த டாக்டர் வாத்தியாரோட தீவிர ரசிகராகிவிட்டார்.
வாத்தியார் சென்னை
வந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எலிப்ரீட்மேன் அவர்களுக்காக ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அதற்கான ஏற்பாடுகளை திரு.ஏ.வி.எம் சரவணன் தான் செய்துகொண்டிருந்தார். அவர் மருத்துவரிடம் ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று கேட்க அப்போது அவர், ‘‘ ‘#அன்பே #வா' படத்தில் எம்ஜிஆர் இருப்பதுபோல போஸ்டர் வேண்டும்’’ என்றாரே பார்க்கலாம்.
வெளிநாட்டு மருத்துவர் ஒருவர் கொண்டாடும் அளவுக்கு எம்ஜிஆர் பெயர் பெற்றிருந்தார். அவரது விருப்பத்தை சரவணன் நிறைவேற்றினார்.
மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மகிழ்ச்சி!!!....... Thanks.........