https://i1126.photobucket.com/albums...psm4l1y6u0.jpg
https://i1126.photobucket.com/albums...psfbjcnpuv.jpg
Printable View
பாக்யா வார இதழ் -01/08/2019
https://i1126.photobucket.com/albums...psdbf7m09b.jpg
அன்பேவா !
_________________
இந்த பாடல் காட்சியின் பெருமைகள் பல உண்டு ,இருவரின் உணர்ச்சிகரமான நடிப்பு ,லோகெஷன் , கேமரா கோணம் இப்படி பல !
இன்று இளைஞர்கள் ஜிம்மில் தம்புல்ஸ் எடுத்து பைசெப்ஸ் போட்டால் கூட உடனே கண்ணாடியில் தன் வயிற்றைத் தான் பார்க்கிறார்கள் சிக்ஸ் பேக் வந்து விட்டதா ? என்று உண்மையில் இது நல்ல முன்னேற்றம் தான் !
இதற்கு மூல காரணம் நம் மக்கள் திலகம் தான்
மக்கள் திலகத்தின் உடல் வாகுவை முன்பே கூறியிருந்தாலும் இது சற்று வித்தியாச மானது !
இப்பாடல் காட்சியை கவனியுங்கள் மக்கள் திலகம் இறுக்கமாக
டி ஷர்ட் போட்டுள்ளார் ஆனால் நடக்கும் பொழது வயிற்று பகுதியின் துணி மெல்ல காற்றில் அசையும் இப்படி ஒரு வயிற்று பகுதிஅமையத் தான் இளைஞர்கள் ஆளாய் பறக்கிறார்கள் !
சோல்டர் , லாட் , செஸ்ட் , பைசெப்ஸ் , டிரைசெப்ஸ் , போர்ஆம்ஸ் இதற்கு தனித்தனியாக இன்ஸ்டுருமென்ட் வந்து விட்டன ...ஆனால் மக்கள் திலகம் வெறும் கர்லாகட்டை வைத்து கொண்டு இக்கால இளைஞர்களுக்கு சவால் விடுவது வியப்பே ! .......... Thanks. .
அனைத்து எம்ஜியார் நெஞ்சங்களுக்கும் வணக்கம்..இந்த குழுவில் எளிய எம்ஜியார் தொண்டனின் முதல் பதிவு இது...நன்றி..
பத்மாவத் இந்தி படத்தில் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்று வரும் இன்றய ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்.
புரட்சிதலைவர் எம்ஜியார் சினிமாவில் கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர்.. அவரது உண்மை ரசிகர்கள் அவரை போல் எந்த வித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருப்பது அதிசயம்...சினிமாவில் கூட மது, புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க அவர் கடைசி வரை நடிக்க வில்லை.
ஒரு படத்தில் சாப்பிட்டு விட்டு உணவகத்தில் காசு கொடுக்காமல் வருவது தவறு என்று உணர்த்தி இருந்தார்.சினிமா துறையில் மட்டும் இன்றி நிஜ வாழ்விலும் அவர் தான் என்றும் ஹீரோ.
அவர் படங்களில் காட்டியதை தானும் கடைபிடித்தார். அதனால் தான் அவர் ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக கொண்டாடுகின்றனர்.
எம்ஜியாரை போலவே இனி நானும் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன் என்கிறார் அவர்..
சமீபத்தில் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தை ஹிந்தியில் தயாரிக்க அதில் கதாநாயகன் ஆக நடிக்க என்னை அணுகினர்...
அந்த படத்தை போட்டு பார்த்த போது கதாநாயகன் எப்போதும் குடிப்பது போல காட்சிகள் இருந்தன.
என் மனக்கண் முன்னால் எம்ஜியார் தோன்ற அந்த படத்தில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்கிறார் பிரபல ரன்வீர்சிங்.
எங்கு போய் கால் ஊன்றி நிற்குறார் பாருங்க நம்ம வாத்தியார்...அது தான் எம்ஜியார் பவர்...இங்கே அவர் நடித்த தமிழ் பட துறையில் இப்போது..
வேண்டாம்...
வாழ்க எம்ஜியார் புகழ் நன்றி.தொடரும்........ Thanks.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண்டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்........ Thanks...
தியேட்டரில்தான் தலைவர் படம் பார்க்கவேண்டும் என விரும்புபவர்கள் அதிலும் முதல்ரிலீஸ் நாள் அன்றுபோல மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றால் இன்றும் மதுரையில் தவறாமல் சென்று பார்க்க வேண்டும். அதற்கு சளைத்தவர்கள் அல்ல எனக் கொண்டாடுகிறார்கள் கோவை பக்தர்கள். கோவைக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இன்று தலைவர் படம் பார்க்கணுமே என ஆசைப்பட்டால் நகரில் தலைவர் படம் நிச்சயம் ஓடிக்கொண்டிருப்பதை அறியலாம்........ Thanks...