-
#தொண்டர்களின் #மைண்ட்வாய்ஸ்
1977 பொதுத்தேர்தலில் பொன்மனச்செம்மல் அருப்புக்கோட்டையில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். ஆனால் அந்த தொகுதிக்கு எளிமையும், மகளுக்குத் தொண்டாற்றும் கடமை உணர்வும் கொண்ட பஞ்சவர்ணம் என்பவருக்குத்தான் சீட் கிடைக்கும், என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆனால் ஒரு சில முக்கிய காரணங்களால் புரட்சித்தலைவரே அத்தொகுதியில் நிற்கும்படி ஆகிவிட்டது.
ஆனால்.. மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம், தனக்கு எப்படியும் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது, நம் பொன்மனச்செம்மலுக்கும் தெரியும்.
தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெறுகிறார். முதல்வர் ஆகிறார். நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கு வள்ளல் பெருந்தகை அருப்புக் கோட்டைகு வருகிறார். பஞ்சவர்ணம், அங்கே, கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார்.
கட்டுக்கடங்காத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில், மக்கள்திலகம் மைக்கைப் பிடித்து,
“நீங்களெல்லாம் ஏன்-எதிர்க்கட்சிகள் கூட, சென்னை கோட்டையில் அமர்ந்திருக்கும் இந்த ராமச்சந்திரனை, அருப்புக் கோட்டை தொகுதியில் இனி பார்க்க முடியுமா? இவரால் இந்தத் தொகுதிக்கு என்ன விமோசனம் பிறக்கப் போகிறது! அவசர தேவைக்கு எப்படி பார்க்க முடியும்? என்றெல்லாம் நினைக்கலாம். எதிர்க்கட்சிகள் விமர்சனமே செய்யலாம். அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படவேண்டாம்.
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ராமச்சந்திரனை இனி இங்கே இருக்கிற உங்கள் அனைபை பெற்றிருக்கும் பஞ்சவர்ணம் வடிவில் பார்க்கலாம். இனி அவரிடம் உங்கள் குறைகளைச் சொல்லலாம். கோரிக்கைகளை வைக்கலாம். அதையெல்லாம் உடனடியாக தீர்த்து, வைப்பேன். நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து போகிறேன். என்று வள்ளல் சொன்னவுடன் கூட்டமே ஆர்ப்பரிக்கிறது.
விழிகளில் வேதனையை தேக்கி வைத்திருந்த பஞ்சவர்ணத்தின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிகிறது. இனி அருப்புக்கோட்டைக்கு இவர்தான் எம்.எல்.ஏ. என்று சொல்லும் அளவுக்கு நம் வளல் பஞ்சவர்ணத்துக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்...
தொண்டனிடம் உண்மையான அன்பு, கொள்கை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு...இப்பல்லாம் காணாமல் போனவைகளில் "லிஸ்ட்" ல போயிருச்சுன்னு சொல்கிற
உங்களின் "மைண்ட் வாய்ஸ்" நான் 'கேட்ச்' பண்ணிட்டேன்............. Thanks.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர்.படங்கள் ஒளிபரப்பு*
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
15/04/20* *-சன் லைப் -* * * *காலை 11மணி* -* * * நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * *முரசு டிவி* * - காலை 11 மணி &இரவு 7 மணி _நீதிக்கு தலைவணங்கு*
* * * * * * * * *மூன்* டிவி* * - இரவு* 7 மணி* * - நல்ல நேரம்*
* * * * * * * * *மெகா 24 டிவி _ இரவு 9 மணி -தர்மம் தலை காக்கும்*
16/04/20* * சன்* லைப்* *- காலை 11 மணி* - தனிப்பிறவி*
* * * * * * * * * *மெகா டிவி* *- மதியம் 12 மணி* *- கலங்கரை விளக்கம்*
* * * * * * * * * *வசந்த் டிவி* -பிற்பகல் 1.30 மணி _ நீரும் நெருப்பும்*
17/04/20* * புதுயுகம் டிவி -இரவு 7 மணி* - நீரும் நெருப்பும்*
18/04/20* முரசு டிவி - காலை 11 மணி & இரவு 7 மணி- விவசாயி*
20/04/20* *-ஜெயா டிவி* *-காலை 10 மணி -இதய வீணை*
21/04/20* -ஜெயா டிவி* *- காலை 11 மணி* - பணக்கார குடும்பம்*
* * * * * * * * * *சன் டிவி* * - இரவு 9.30 மணி - அன்பே வா*
22/04/20* *- ஜெயா டிவி* -காலை 10 மணி -தாய்க்கு பின் தாரம்*
23/04/20* -ஜெயா டிவி* - காலை 11 மணி* -குலேபகாவலி*
* * * * * * * * * சன் டிவி* * *-இரவு 9.30 மணி* - எங்க வீட்டு பிள்ளை*
24/04/20* *ஜெயா டிவி* - காலை 10 மணி - பெரிய இடத்து பெண்*
-
“நீயும் நாடோடி மன்னன் தான்” – வாலி
https://www.thaaii.com/?p=25493
*****
“மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை செவ்வனே நடத்தியதற்காகத் திருச்சியில் பெரியவர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களைத் தலைவராகக் கொண்ட புலவர் குழு திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
திருச்சி தியாகராஜ பாகவதர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார்.
சிலம்புச் செல்வர் திரு.ம.பொ.சி அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார்கள்.
சிலம்புச் செல்வரைக் குறித்துப் பாடிவிட்டு அண்ணன் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது-
“செங்கோட்டை சாய்ந்தாலும்
உன் கோட்டை சாயாது” என்று பாடினேன்.
இதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு புலவர் பெருமக்கள் சிரக்கம்பம் செய்தார்கள்.
இதே விழாவில் திரு.எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாராட்ட அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும் வந்திருந்தார்கள்.
நான் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பாடும்போது –
“நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்குச் சென்ற
இராமச்சந்தினல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியாவிற்கு வந்த
இராமச்சந்திரன் !
இருப்பினும்
என்னளவில்
இருவரும் ஒன்றே !
அந்த ராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்;
நீயும்
உதயசூரியனின்
வழித்தோன்றல் தான்.
அவனும்
ஜானகி மணாளன்;
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவியாசை
பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்;
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னன் ஆனான்.
நீயும்
நாடோடி மன்னன் தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே-
உன்னிடத்திலும்
‘வில் பவர்’ இருந்தது.
அவனும்
குகன் என்னும்
படகோட்டியை
குவலயம் அறியச் செய்தான்;
நீயும்
படகோட்டியின்
பெருமையைப்
பாரறியச் செய்தாய்.
நீயும்
அவனைப் போல்
மீனவ நண்பன்.
அன்று
அவன் வாக்கு
அரச கட்டளை.
இன்று
உன் வாக்கு
அரச கட்டளை.
அந்த ராமசந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்
நீ
மனிதனாக இருந்து
தெய்வமாக
மாறியவன்;
அதனால் தான்
உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயோ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.
நீயே
எனக்கு
நிஜமான கருணாநிதி”
இப்படி நான் பாடியதும் தொந்தி குலுங்கச் சிரித்தார்கள் வாரியார் ஸ்வாமிகள்.
பிறகு வாரியார் பேசும்போது சொன்னார்கள்.
“பொன்மனச் செம்மலைப் பாராட்டி ‘வாலியார்’ சொன்னதை இந்த ‘வாரியார்’ அப்படியே வழிமொழிகிறேன்”.
வாரியார் ஸ்வாமிகள் இப்படிச் சொன்னதும், அண்ணன் எம்.ஜி.ஆர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“இந்தப் புன்னகை என்ன விலை?’ என்று ஒரு காலத்தில் நான் பாடியது என் நினைவுக்கு வந்தது.”
புதிய பார்வை – இதழில் தொடராக வெளிவந்த வாலியின் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ என்கிற தொடரிலிருந்து ஒரு பகுதி........ Thanks...
-
“மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்”- மு.ராமசாமி
https://www.thaaii.com/?p=25219
***
“இந்த நிமிடம் வரையும் எம்.ஜி.ஆர் எனக்குள் அரணாய் நின்று, தன் ஆட்சியை எனக்குள் நீட்சி பெற வைத்திருக்கிறார் என்று தான் தெரிகிறது.
இன்றைக்கும் என்னுள் விருட்சமாகி நிற்கும் அந்த விதையின் நிழலில் நின்று கொண்டுதான், எந்தவித அசூசையுமின்றி நாடகக்காரனாய் உலகத்தை அதன் போக்கில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் முடிகிறது.
“என்னடா.. பொல்லாத வாழ்க்கை.. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா?” வகையறாப் பாடல்கள் எம்.ஜி.ஆரின் எந்தப் படத்திலும் எந்தக் காலத்திலும் வந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை என்னால் இப்பொழுதும் உறுதியாகக் கூற முடியும்.
“நாம பாடுற பாட்டும், ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும்…
நாட்டுக்குப் படிப்பினை தந்தாகணும்”
என்பது தான் எம்.ஜி.ஆரின் எல்லாப் படங்களின், பாடல்களின் அடிச்சரடாயும், அழகியலாகவும் இருந்து கொண்டிருக்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவிறக்கம் தான் எம்.ஜி.ஆர் படங்கள் என்று ஒற்றை வரியில் எளிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
1969 ல் ‘நம்நாடு’ திரைப்படத்தில்
“பாலூட்டும் அன்னை
அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை
நல்வழி காட்டும் தலைவன்
துணையாகக் கொண்டு நடைபோடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று…”
– என எம்.ஜி.ஆர் குழந்தைகளுக்குப் பாடம் நடத்திப் பிஞ்சு நெஞ்சங்களைப் பஞ்சினால் போர்த்தியிருப்பார்.
43 ஆண்டுகளுக்கு முன் பாரிய படைப்புகளால் சமூகக் கருத்துக்களை மக்களிடம் மனச்சலவை செய்த ஒரு திரை வரலாறு எம்.ஜி.ஆர்!
அதே போல்,
“மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை”
என்று நிழல் பிம்பமாய் வாயசைத்து,
“அஞ்சாமை திராவிடர் உடைமையடா”
என்று புதுக்கணக்கில் அதைப் பெயர்த்தெழுதி, அதில் பொதுவுடமைக்கான வித்தை, அந்தப் பொடி வயதிலேயே என் மனசுக்குள் நிஜமாய் ஒளித்து வைத்ததும் எம்.ஜி.ஆர் தான்.
அந்த வயதில், என் சூழலில், என் வயதுப் பையன்களின் சமூகக் கோபத்திற்கு வடிகாலாய் அமைந்திருந்தது,
“நாளை உயிர் போகும்; இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா” என்ற எம்.ஜி.ஆர் தான்!
‘தோன்றத் தான் போகிறது சம உரிமைச் சமுதாயம்’ என்கிற அவரின் கனவு தான்!
பட்டுக்கோட்டையாரின் பாடல்களாக இருந்தாலும் சரி, அல்லது தஞ்சை ராமையா தாஸ், உடுமலை நாராயண கவி, மருதகாசி, கண்ணதாசன், லட்சுமண தாஸ், புலமைப்பித்தன், வாலி என்று எவருடைய பாடல்களாய் இருந்தாலும் சரி, படத்தில் எம்.ஜி.ஆர் வாயசைக்கிற பாடல்கள் எல்லாமே,
அவரின் முத்திரை அறிவிக்கைகள் தாம்!
“வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?”
என்ற கேள்வியை அவரே எழுப்பி, ‘மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார்’ என்ற பதிலையும் தந்து நிற்கிற எம்.ஜி.ஆர், அப்போது என் இளம் நெஞ்சுக்குள் இலவம் பஞ்சாய்க் கிடந்தார்.
“ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை” என்றும்,
“சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா,
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவம் அம்மா” – என்றும்,
“வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறு பாதை போகவில்லையே” – என்றும்,
திரையில் அவர் நடத்திய சமதர்மப் பாடம் தான், பசுமையாய் எனக்குள் இன்னமும் இனிமை பேசிக் கொண்டிருக்கிறது.
பாடல்கள் பலவிதமாக இருக்கலாம். பலரால் புனையப்பட்டும் இருக்கலாம். ஆனால் பாடலின் உள்ளடக்கம் என்பது எம்.ஜி.ஆர் தான்!
“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே” என்பது தான்!
“உழைப்பவர்கள் உரிமை பெறுவதில் தான் இன்பம்
உண்டாகுமென்றே நீ சொல் தோழா” என்கிற அவரின் கனவு தான்!
“உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே” என்கிற அவரின் பெரு வியப்பு தான்!
“கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்துத் தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக” என்கிற அவரின் சிந்தனைச் சிறகு தான்!
“அழுதவர் சிரிப்பதும்,
சிரித்தவர் அழுவதும் விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளது எல்லாம் இறைவனும் தந்ததில்லை” என்கிற அவரின் உறுதி மிக்கத் தெளிவு தான்!
அதனால் தான் ராஜா காலத்துக் கதைப் பின்புலத்தில் கூட அவரால், “தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று உணர்வுபூர்வமாய் வாயசைத்துவிட முடிகிறது.
அவரின் கடைசிப்படமான ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனிலும்’,
“புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்” என்று தான் உண்மையாய் அவர் வாயசைக்கிறார்.
அவரின் அத்தனைப் படங்களையும் இணைக்கின்ற பொதுக்கோடு,
“எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்” என்பது தான்!
பொதுவுடமை பேசும் இந்தவகைச் சிந்தனைத் தடத்தில் தான், அதற்கான சூழல்களைத் திரைப்படத்தில் உருவாக்கித் தன் கருத்தைப் பதிவு செய்தபடி, அவரின் திரைப்பயணமும் அமைந்திருந்தது.
அன்று அவர் உள்ளுக்குள் விதைத்த விதை, அறுபதிலும் வளையாமல் புதுக்கதைகள் எனக்குள் பேசிக் கொண்டேயிருக்கிறது”
(முனைவர்.மு.ராமசாமி எழுதிய “திரை வளர்த்த நான், நான் வளர்க்கும் திரை” என்ற நூலில் இருந்து ஒரு பகுதி…)........ Thanks...
-
#எம்ஜிஆர் #நினைவலைகள்
#நான்கு #காட்சிகள்...!
(தலைப்பே அமர்க்களமாயிருக்கே!! )
You tube channel ல்
https://youtu.be/58M4Xw3MntY (காலை)
https://youtu.be/rDgTVyjV4KE (பகல்)
https://youtu.be/gDPj0RgpgEU (மாலை)
https://youtu.be/GqdzayISogI (இரவு)
வாத்தியார் பிறந்த இந்நன்னாளில்
வித்தியாசமான சிந்தனை...
பாராட்டுக்கள்...!
#தமிழ்நதி @ #எம்ஜிஆர் #சேனல் குடும்பத்திற்கு உலகிலுள்ள புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் சார்பாக நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள்
எம்ஜிஆர் நினைவாயலத்தைப் பற்றி நிறைய சேனல்களில் பார்த்திருப்போம். மிகப் பிரமாதமாகவும் இருந்திருக்கலாம்...பின்னணிக் குரலிலும், தொழில் நுட்பத்திலும்...பின்னியிருக்கலாம்...
மறுப்பதற்கில்லை...
ஆனால் இந்தக் காணொளியில் #உயிர் #இருக்கிறது என்பது தான் இதன் தனிப்பெரும் சிறப்பு...! ஏனெனில் இதில், வர்ணனையாளர், பேட்டியளிப்பவர் என அனைவருமே தீவிர எம்ஜிஆர் பக்தர்களாயிற்றே! எனவே இதைப் "#புனிதப்பேட்டி" என்று கூறலாம்...
இந்தக் காணொளிகளின் மூலம் நம் புரட்சித்தலைவர் இந்த இல்லத்தில் நடமாடுவதை ஆத்மார்த்தமாக நாம் உணரலாம்...
எல்லாக் காணொளிகளுமே சிறப்பென்றாலும், அந்த இரவுக்காட்சிக் காணொளி இருக்கிறதே!!! அடடா!!! பார்ப்பவர்களை அப்படியே மனம் உருகச்செய்துவிடும் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது...!
இந்தப் பேட்டியில் நாம் இடம்பெறாமல் போய்விட்டோமே! என ஒவ்வொருவரையும் அவர்களையுமறியாமல் நெஞ்சம் கனக்கச் செய்வது திண்ணம்...!
வாத்தியார் வாழை போல...! தலைமுறை தலைமுறைகளாய் நம்மை எப்படித் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் பாருங்கள்...!
உலகில் யாருக்குமே இல்லாத சிறப்பு இது ....!
வாழ்க...!
புரட்சித்தலைவர் திருநாமம் ( Thalaivar Birthday Functions... Posts....... Thanks...
-
எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 14.
அன்று பெரும்பாலும் வானொலி மூலமாகத்தான் பல பாடல்களும் நமக்கு அறிமுகமாகும் . பொதுவாக கவர்ச்சிப் பாடல்களுக்கே பயன் போன ஈஸ்வரி அவர்களின் குரலில் , அந்த வயதிற்கு முதன் முறையாக ஒரு தனிப்பாடலை ...ஒரு வாழ்த்துப்பாடலாக கேட்க , அவரின் குரலின் இனிமை ..எண்ணெய் வெகுவாகக் கவர்ந்தது. மற்றுமொரு சங்கதி அதில் நாதஸ்வர இசையும் கலந்து ஒழிக்க என் மனம் வரிகளில் புகுந்தது ...
"பிறந்த இடம் தேடி .
நடந்த தென்றலே
பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரையில்
தேசம் நன்மை பெறுக ..."
"ஆல மரம் போல நீ வாழ
அங்கு ஆயிரம் பறவைகள் இளைப்பாற
காலமகள் உன்னைத் தாலாட்ட
உந்தன் கருணையை நாங்கள் பாராட்ட .."
புதிய சூரியன் உன் வரவு
இந்த உலகம் யாவுமே உன் உறவு
எதையும் தாங்கும் நிலை பெறவே
எங்கள் இதய பூமியில் ஒளி தரவே .."
ஆலங்குடி சோமு அவர்கள் எழுதியது . இவர் மிகவும் சுருக்கமாகவே எழுதியுள்ளார் . கதைக்கு எழுத சற்று மிகைப்படுத்தியே கதைக்கு பொருந்தாத வரிகள் .. எம்.ஜி. ஆர். பார்த்து கே.ஆர். விஜயா. பாடுவதாக இருக்கும் . நான் ஆணையிட்டால் .. திரையில் ஒரு புரட்சி நாயகனை வாழ்த்தும் பாடல் .
ஆயினும் ஈஸ்வரி அம்மா குரலில் , மெல்லிசை மன்னர்கள் இசையில் இந்தப் பாடல் என் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல் . பின்னாளில் தனது கட்சிப்பரப்புக்காக இப்பாடல் மூளை முடுக்கெல்லாம் ஒலி பரப்பப்பட்டது .
கோதை தனபாலன்
..https://www.youtube.com/watch?v=HRLSkhnGWu0....... Thanks.........
-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."......... Thanks...
-
#மக்களின் #மனக்கண்ணாடி
பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.
அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.
வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.
மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.
இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.
இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.
கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!
அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.
இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.
அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.
நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.
‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.
அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”
மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடிமன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.
காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்
#மக்கள்திலகம்
#ஒருவரே
#மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்....... Thanks...
-
#இன்றைய #தேவை
எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-
எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.
மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
#ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.
அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!......... Thanks...
-
#இறைவனின் #சித்தம்
திருப்பதி அருகில் கைலாசநாதர் கோனை என்னும் ஒரு சிறு நீர்வீழ்ச்சி.
அங்கு ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. மக்கள்திலகத்துடன் எல்லோரும் உணவுக்காக உட்கார்ந்திருந்தனர்...
சற்றுத் தள்ளி, அழுக்கு உடை, தாடி மீசை கலைந்த கேசத்துடன் கூடிய கோவணம் கட்டிய ஆண்டி ஒருவர் மக்கள்திலகத்தை முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்...
நான் ரொம்ப நேரமா கவனித்துக்கொண்டேயிருக்கேன். அந்த மனிதர் என்னையே பாத்துட்டு இருக்காரு...ஏதாவது தேவையா இருக்கும்னு நெனைக்கறேன்...என்ன வேணும்னு கேளுங்க அவருக்கு? அப்படின்னாரு மக்கள்திலகம்... (பாருங்களேன்...எப்பவுமே கொடுக்கணுங்கற எண்ணம் தான் வாத்தியாருக்கு)
போய்க்கேட்டபோது, 'எனக்கு ஒன்றும் வேண்டாம்' என்று சொல்லி...மூர்த்தியின் (டைரக்டர் சேதுமாதவனின் தம்பி) பாக்கெட்டில் கைவிட்டு பால்பாயிண்ட் பேனாவை எடுத்தார்...
பிறகு கீழே கிடந்த ஒரு பிரவுன் பேப்பர் துண்டை எடுத்து விறுவிறுவென ஏதோ எழுதி, 'அந்த மனிதனிடம் கொடு' என்று எம்ஜிஆரைச் சுட்டிக் காண்பிக்கிறார் அந்த ஆண்டி...
மூர்த்தியும் கொடுக்க, அதைப் படித்து லேசான வியப்புடன் புன்முறுவல் பூக்கிறார்...
துண்டுப்பேப்பரில் எழுதியிருந்த அந்த வாசகம்...
"#நீதான் #நாளை #இந்நாட்டுக்கு #முதல்வர்...இது இறைவனின் சித்தம்...உன் முடிவு மிகச் சிறப்பு..."
இச்சம்பவத்திற்குப் பிறகு எவ்வளவு தேடியும் அந்த ஆண்டியைக் காணவில்லை........ Thanks...