http://i67.tinypic.com/14ty0d1.jpg
http://i66.tinypic.com/2uq0jrd.jpg
http://i64.tinypic.com/97sk6o.jpg
Printable View
எம்.ஜி.ஆரைக் கிண்டலாக??
-----------------------------------------------------
எம்.ஜி.ஆரின் கொடை--மனித நேயம்-சினிமா-ஏழைகளின் பால் இரக்கம்--இத்யாதி இத்யாதி காரணங்களால் நாம் அவரை விரும்புகிறோம் என்பது ஒரு புறமிருக்க--
எம்.ஜி.ஆரைப் புகழ்ந்ததால் நான் அடைந்த குழப்பத்தைப் பற்றியே இந்தப் பதிவு??
ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள்!!
காஞ்சி மகா முனியின் பிரதம சீடர்களில் ஒருவர்.
காஞ்சி முனி காலடி என்னும் ஊரில் இருந்தபோது முழுப் பணிவிடையும் முகம் மலரச் செய்தவர் அதனாலேயே ஆச்சாரியாரின் முகமலரச் செய்தவர். இப்படியும் சொல்லலாம்--
காலடியில் காஞ்சி முனி அருள் பாலிக்க--அவர்-
காலடியில் கிடந்தவர் இந்த காமாட்சி ஸ்வாமிகள்!!
ஒரு நாள் பெரியவர்,,இவரிடம் கேட்கிறார்?
நான் பூலோக வாழ்க்கையை முடிச்சுக்கப் போறேன். நீ என்ன பண்ணறதா நினைச்சுண்டிருக்கே??
நான் படிச்ச வேதம் மூலம் புரோகிதம் செய்யட்டுமா??
இ9ல்லேடா!! இந்தக் காஞ்சி காமாட்சி உன் வாக்குல இருக்கா! நம்ப பக்தாளுக்கு அருள்வாக்கு சொல்லு!!
குருவின் ஆணையை ஏற்றவர் இன்று வரை தினமும் இருபது பேருக்கு அருள்வாக்கு சொல்வதுடன்,,சில அற்புதங்களையும் அவர்களுக்கு நிகழ்த்திக் காட்டி அவர்களது பிரச்சனைகளை தீர்த்து .வருகிறார்.!!
நாமாகத் தட்டில் போட்டால் தவிர இவர் தனியாக பணம் கேட்பதே இல்லை!!
அம்பாளின் 102 அம்சங்களையும் தனித் தனி கோயிலாக,,கண்ணன் தாங்கல் என்ற ஊரில் பிரதிஷ்டை செய்து ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்.
அம்பாளின் 102 அம்சங்களுக்கும் தனித்தனி கோயிலாக ஒரே இடத்தில் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது.
ஒரு நாள்,,குறுஞ் சிரிப்புடன் திடீர் என்று என்னிடம் கேட்டார்?
தியாகு! உனக்கு எம்.ஜி.ஆர்ன்னா ரொம்பப் பிடிக்குமோ?
வேகமாகப் பதில் சொன்னேன்!--ஆமாம் என்று!
எதனாலப் பிடிக்கும்?
கொடையாளி!!
ஏன்? ஊருலே வேற யாருமே தர்மம் பண்னறதில்லையா??
இல்லே--அவரோட சினிமாக் கருத்துக்கள்--
நான் முடிக்கு முன்னரே குறுக்கிட்டார்--
ஏன்? மத்தவா யாருமே நல்ல கருத்துக்கள் சொன்னதில்லையா??
இப்படி நான் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து சொல்லச் சொல்ல--அவரும் சளைக்காது பதில் கொடுத்துக் கொண்டே வந்தவர்--
அதே சிரிப்புடன் என்னைப் பார்த்தவர்--சொன்ன விளக்கம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது?
பெரியவாள் ஒரு நாள் சீடர்கள் எங்ககிட்டே சொன்னார்!
எனக்குத் தெரிஞ்சு இப்போ மனுஷ ரூபத்துலே இருக்கற கடவுள் நம்ம ராமச்சந்திரன் ஒருத்தன் தான்!!
அவன் இப்போ இல்லே இன்னும் பல ஜென்மாக்களில் வித விதமாய் பொறந்து லோக ஷேமத்துக்காக மெனக்கெடுவான்!!!
அதனால தியாகு! நீ சொன்ன அத்தனை அம்சங்களையும் பட்டியல் போடறதை நிறுத்திண்டு,,,அவர் தெய்வ அம்சம் பொருந்திய சித்தர்ங்கற கோணத்திலே அவரைப் பாரு!!
காமாட்சி ஸ்வாமிகளுக்கு எம்.ஜி.ஆர் பற்றி மகா பெரியவர் சொன்னதை,,அவர் என்னிடம் விளக்கிய விதம்??---
படாதிபதிகளை பணம் பார்க்க வைத்தார்!
பாடாதிவதிகளைப் பதம் பார்க்க வைத்தார்!!
மடாதிபதிகளை மயக்கியது எப்படி??
எம்.ஜி.ஆரின் ஆன்மா தெய்வ அம்சம் பொருந்தியது என்பதை இந்த இடத்தில் நாம் ஒப்புக் கொண்டு தானே ஆக வேண்டும்???.......... Thanks wa.,
வெற்றி வெற்றி வெற்றி .... மாபெரும் வெற்றி .. .சென்னை அகஸ்தியா 70MMவில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக மக்கள் திலகத்தின் நினைத்தை முடிப்பவன் 21/06/2019 முதல் தினசரி 3/ 6 30 காட்சிகள் அனைத்து பக்தர்களும் தவறாமல் கலந்து கொண்டு தரிசிக்கமாறு கேட்டு கொள்கிறோம் ...வாழ்க தமிழ்.. வளர்கMGR ...பக்தர்கள்... Thanks wa.,
.
நண்பர் திரு.சுகாராம் அவர்களின் கவனத்திற்கு ,
சென்னை அகஸ்தியாவில் , மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ,
1.தர்மம் தலை காக்கும் ,
2.எங்க வீட்டு பிள்ளை
3. காவல்காரன்
திரைப்படங்களை தொடர்ந்து நான்காவது வாரமாக (மூன்றாவது வாரமல்ல )
நினைத்ததை முடிப்பவன் நாளை முதல் (21/06/19) தினசரி 2 காட்சிகள் திரையிடப்படுகிறது .வேறு எந்த நடிகரின் பழைய படங்களும் இப்படி தொடர்ந்து
அகஸ்தியாவில் திரையிடப்பட்ட வரலாறில்லை என்பது குறிப்பிடத்தக்கது .