-
அந்தமான் கைதி!!
-------------------------------
ராமன் கிருஷ்ணன்!
கல்லிடைக் குறிச்சி!!
எம்.ஜி.ஆர் ஆல விழுதுகளில் மூத்த விழுதுகளில் ஒன்று!!
இவரைப் பற்றிய விபரங்கள் அனைத்தையும் ஒரே பதிவில் உரைக்க இயலாது!
அவ்வளவு சுவையான விபரங்களை,,மனிதர் கொண்டிருக்கிறார்!!
அவ்வப்போது இவர் பற்றிய சுவையான நிகழ்வுகள் வெளியாகும்!!
கல்லிடைக் குறிச்சியில் இவர் பெயர் சோத்து ஐயர்?
சிறு தொண்ட நாயனாருக்குப் பின் வந்த-
ஒரு தொண்டர் எம்.ஜி.ஆர் என்றால்--
எம்.ஜி.ஆரை மனதில் கொண்டு அவரிடமிருந்த அன்னதான சிறப்பை,,அவர் அனுமதியில்லாமலேயே பறித்துக் கொண்டவர்!!
அன்றைய தனுஷ்கோடி ஆதித்தனின் சகோதரர் ஆர்.பி.ஆத்தித்தன்,,சேரன்மாதேவித் தொகுதியில் எம்.எல்.ஏ ஆகியவரின் அத்யந்த ஆலோசகர் நம் சகோதரர் ராமன் கிருஷ்ணான்!!
திரு ஆர்.பி.ஆதித்தனை எவராது பார்க்கணுமா? இவரிடம் தான் கேட்கணும்.!
தேர்தல் செலவுக்குப் பணம் வேணுமா?
இவரிடம் தான் கேட்கணும்!!
ஆர்.பி.ஆதித்தனிடம் எவராது நங்கொடை கேட்டு வந்தால்--ஆதித்தனே இவரிடம் தான் கேட்பார்--
என்ன ஐயரே எவ்வளவு கொடுக்கலாம்??~
சென்னையில் அப்போதிருந்த பழைய எம்.எல்.ஏ ஹாஸ்ட்டலில் ஆதித்தன் தங்கியிருக்கும்போது-
இவர் சொந்த அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் சொந்த ஊர் சென்று விட்டு வருவதற்குள் தான்-
அந்த மோசமான சம்பவம் நடக்கிறது?
எம்.எல்.ஏவுக்கு எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த பணியாள்,,அவரிடமிருந்து கணிசமான பணத்தைக் களவாடி விடுகிறார்?
எம்.எல்.ஏ,,மிரட்டிக் கேட்கவும்,,அந்தப் பணியாளும் ஒப்புக் கொள்கிறார்??
இருபதாயிரம் பணம் எடுத்தேன். நாலாயிரம் சொச்சம் செலவு செய்துவிட்டேன் என்ன மன்னிச்சுடுங்க??
ராமன் சந்திரன் ஊரிலிருந்து வரவும்,,அவரிடம் விபரங்களை9க் கூறிய அந்த எம்.எல்,ஏ,,காவல்துறையில் இதுபற்றிப் புகார் கொடுப்பதற்காக இவரிடம் ஆலோசனை கேக்க-
ராமன் சந்திரன் அழுத்தமாக மறுத்துவிடுகிறார்--
வேணாம். அவன் தான் ஒப்புக் கொண்டுவிட்டானே. அவனிடமிருந்து மீதி பணத்தை வாங்கியாச்சு. என்று சொல்லி அந்தப் பணியாளை அழைத்துக் கடுமையாக புத்தி சொல்லி அனுப்பி விடுகிறார்!
ராமன் சந்திரன்,,அந்தப் பணியாளைப் போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டாம் என்பதற்கான காரணத்தை ஆதித்தனிடன் சொல்லியபோது அவரும் அதை ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ராமன்சந்திரனை பிரமிப்போடு நோக்கவும் செய்கிறார்??
காரணம்??/
அந்தப் பணியாளின் பெயர்--
ராமச்சந்திரன்???
எம்.ஜி.ஆர் பெயரை வைத்திருந்ததாலேயே அந்தப் பணியாள் அன்று சிறை தண்டனையில் இருந்து தப்பியிருக்கிறார்???
எம்.ஜி.ஆர்--
ரசிகர்களின் மனக் கைதி!
ஆனால்---
சிறைக்கு அனுப்பக் கூடாத கைதி???
இப்படியெல்லாம் மிக நுணுக்கமாக எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ரசிகர்கள் போல் வேறு எவருக்கு அமைந்திருக்கிறார்கள்???
ஒவ்வொரு அமைப்பும் எம்.ஜி.ஆர் விழா நடத்தும்போது தெரிந்த வி.ஐ.பிக்களையே மேடையில்; ஏற்றி பேசச் சொல்கிறார்கள்! அவர்களும் அரைத்த மாவையே அரைக்கிறார்கள்!
இவர்களைப் போன்றவர்களை மேடையில் ஏற்றி பேசச் சொல்வதால் இன்றைய இளைய சமுதாயத்துக்கு எம்.ஜி.ஆர் பற்றிய அனேக தகவல்கள் கிடைக்கும் என்பதுடன்--
இவர்களையும் உரிய முறையில் கௌரவப் படுத்தினாலும் ஆகும் என்பது நம் கருத்து!
நியாயம் தானே நேசங்களே???......... Thanks fb.,
-
மின்னலாய் ஒரு மனிதம்!!
------------------------------------------
எம்.ஜி.ஆர் நிகழ்வைப் பார்த்து நாளாயிற்று!!
அரசவைக் கண்ணதாசனின் இறுதி ஊர்வலத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் இறுதிவரை பங்கு கொண்டது மட்டுமல்லாது,,தாமும் நடந்தே சென்றது நமக்குத் தெரியும்.
அந்த ஊர்வலத்தில் நடந்த நெகிழ்ச்சி ஒன்றையே இன்று பார்க்கப் போகிறோம்!!
திரையில்,,எம்.ஜி.ஆர்-தேவர்-கண்ணதாசன்-கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியே/
கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளல்!
கண்ணதாசனுக்கு ஒரு சின்னப்ப வள்ளல்!!
அடிக்கடி எம்.ஜி.ஆருக்கும் கவிஞருக்கும் முட்டிக் கொள்ளும்!
கவிஞர் இல்லேன்னா வேற ஆளே இல்லையா? சினந்து கேட்கும் எம்.ஜியாரை நொடியில் சமாதானப்படுத்துவார் தேவர்.
நல்ல மனுஷன் தான் முருகா,,சமயத்துல ஏடாகூடமாப் பேசிடுவாரு. நீங்க தான் முருகா விட்டுக் கொடுக்கணும்??
தேவரின் நைச்சியத்தில் பாகாய் உருகி விடுவார் எம்.ஜி.ஆர்!
சரி--இந்தப் பதிவுல தேவர் எதுக்கு வரார்??
பார்க்கலாம். பதிவில் எங்கேயாவது இணைவார்?
தேவருக்கும்,,கண்ணதாசனுக்கும் உள்ள நெருக்கத்தை எம்.ஜி.ஆரும் உணர்வார்
கண்ணதாசனுக்கு தேவர் செய்த அளவு எம்.ஜி.ஆரும் செய்திருக்கிறார்!!
மகனால் தனக்கு வந்த சிறப்புக்களை எண்ணிய வண்ணம் தமிழன்னை மௌனமாய் கண்ணீர் வடிக்கிறாள்--
மகனின் மரண ஊர்வலமோ மயானத்தை நோக்கி?
கவியரசனின் கடைசி ஊர்வலத்தில் கலங்கியபடி-
புவியரசன்!!
திருமலைப் பிள்ளை சாலையில் திடீர் என ஊர்வலத்தைத் திருப்புகிறார் எம்.ஜி.ஆர்??
தீச்சட்டி ஏந்தியபடி வரும் கவிஞர்களின் வாரிசுகள் திகைக்க--
அந்த அலுவலகத்தை மௌனமாய்,,சற்று மெல்ல அந்தக் கூட்டம் நெருங்க-அது--?
தேவரின் தண்டாயுதபாணி ஃபிலிம்ஸ்!!
சிலை வடிவில் தேவர்,,தன் தோழனைப் பார்க்க-
மடியளவு கொள்ளாது அன்று பொருள் இட்ட தேவரின் உறவுகள்,,மௌனமாகக் கவிஞரைத் தொழுது-
பிடியளவு வாயில் இடுகிறார்கள்??
ஆயிரம் தேள்கள் கொட்டிய அதிர்ச்சியில் கண்ணதாசனின் வாரிசுகள் உறைந்து போகிறார்கள்? அடே? நாம் மறந்து போனதை எம்.ஜி.ஆர் எப்படி நுணுக்கமாக நினைவில் வைத்திருக்கிறார்??
தேவர் வழியனுப்பாமல் தந்தையின் தேகம் வேகுமா??
சூட்சும வடிவில் புன்னகைத்த தேவரையும்-
அதற்கு வழி செய்த எம்.ஜி.ஆரையும் அலங்க மலங்கப் பார்ப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன தோன்றப் போகிறது?
இந்த இடத்தில் நன்றாக கவனிக்க வேண்டும்!
தன்னை விட நெருக்கமாக தேவருடன் கவிஞர் பழகியிருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த மா மனிதர்,சட்டென்று தேவர் அலுவலகம் நோக்கி ஊர்வலத்தைத் திருப்பியது--
உப்பிட்ட தேவரை,,அவரது சிலை வடிவிலாவது-
உப்பி விட்ட கவிஞரின் பூத உடல் சந்திக்கவும்,,
கவிஞரின் வாரிசுகளுக்கும்,, கடமையைச் செய்தாற் போலவும்--
மின்னல் வேகத்தில் எத்தனை விதமான மனித நேயங்கள்???
அதுவும் செல் ஃபோன் இல்லாத அன்றைய சூழலில்?
எம்.ஜி.ஆர்--
இவன் சித்தனா???........... Thanks mr.VT.,
-
☘☘☘☘☘☘
*மலரும் நினைவுகள்....*
*மற்றவர்களுக்கு உதவு..*
*மகிழ்ச்சி தானாகவே வரும்..!!*
*விகடன் : -*
உங்களுக்குன்னு சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கணும்னு எண்ணம் இல்லாமல் இப்படி
வாரி வாரி வழங்கிக் கிட்டே இருக்கீங்களே,
அதற்கு என்ன காரணம்?
*எம்.ஜி.ஆர் :-*
சொத்துக்கள் கடைசி வரை நம்மிடையே இருக்கும்னு நினைக்கிறது தப்புங்கிறது என் கருத்து! என்னை முதன்முதலா கதாநாயகனா போட்டவர் ஜூபிடர் சோமு அவர்கள். ஒரு காலத்தில் இந்த ஸ்டுடியோ அவருக்கு சொந்தமாக இருந்தது. அவர் எதிரிலே வந்து நிக்கவே பயப்படுவோம். இப்போ அதே ஸ்டூடியோவுக்கு நான் பங்குதாரரா இருக்கேன்.
என்னை விட அனுபவத்திலும் ஆற்றலிலும் பன்மடங்கு உயர்ந்தவரான அவருக்கே அப்படி ஒரு நிலைமை வந்ததுன்னா நான் மட்டும் எத்தனை நாள் இந்த ஸ்டூடியோவுக்கு முதலாளியா இருந்திட முடியும்? எனக்கு இது புரியுது.
ஆனா, சில பேரு சட்டத்தின் பாதுகாப்பு நமக்கு இருக்குன்னு சொத்தையும் பணத்தையும் சேர்த்து வெச்சிக்கிறாங்க. நம்ம பாதுகாப்பிலே இல்லாதது, சட்டத்தின் பாதுகாப்பில் எத்தனை நாள் வாழ்ந்திட முடியும்?
அது மாத்திரமல்ல.
இந்த செல்வமெல்லாம் யார் தந்தது? அதாவது மக்கள் தந்தது தானே? அவர்கள் தந்ததிலிருந்து தான் நான் தருகிறேன். தேவைக்கு மேல் பணத்தை சேர்த்து வைப்பதில் ஏற்படக் கூடிய மகிழ்ச்சியை விட பயனுள்ள வகையில் மற்றவர்களுக்கு உதவும் போது அடையும் மகிழ்ச்சியையே நான் பெரிதாக நினைக்கிறேன்.
*- விகடன் பொக்கிஷம்*
☘☘☘☘☘☘......... Thanks.........
-
நம் தலைவரின் பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் அவர்கள்.
ஒருமுறை ஏ. எல்.சீனிவாசன் என்ற பிரபல தயாரிப்பாளர் ஆரூர்தாஸ் அவர்களை பெண் என்றால் பெண் என்ற படத்துக்கு இயக்குனர் ஆக்கி முன்பணம் கொடுத்துவிட..
விஷயம் அறிந்த வாத்தியார் அவரை அழைத்து நீங்க பெற்ற முன்பணத்தை திருப்பி கொடுங்கள் வசனம் எழுதுவது போதும் ஏன் இயக்குனர் வேலை என்று சொல்ல.
இல்லை அண்ணே ஒத்துக்கொண்டு பணம் வாங்கி விட்டேன் இனி எப்படி என்று தயங்க.
படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவராக சரோஜாதேவி நடிப்பதாக மாலைமுரசு நாளிதழில் சரோ அவர்கள் திருமணத்துக்கு பின் நடிக்கும் முதல் படம் என்று வர....சரோஜாதேவி அவர்களுக்கு அப்போது திருமணம் முடிந்து இருந்தது.
ஏற்கனவே பெற்றால்தான் பிள்ளையா பட இறுதியில் சரோஜாதேவி அம்மா அவர்கள் கொடுத்த அழுத்தத்தால் தலைவர் சரோஜா தேவி அவர்களுக்கு இடையில் சற்று உரசல் இருந்தது.
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் பாடல் படப்பிடிப்பில் அது எதிர் ஒலித்தது.
அரச கட்டளை அடுத்து வந்தது...அதுவே வாத்தியார் சரோஜாதேவி நடித்த கடைசி படம் ஆனது.
இவை எல்லாம் நன்கு தெரிந்த ஆரூர்தாஸ் அந்த படத்தை இயக்குவது சரியல்ல என்று தலைவருக்கு தோன்றவே அப்படி சொல்ல....அவர் திருமணம் முடிந்து கர்ப்பம் தரித்தால் உங்கள் படம் பாதியில் நிற்காதா...
வேண்டியதை விடாதே..வேண்டாததை தொடாதே என்று ஒரு பழமொழி உண்டு...
ஆனால் இயக்குனர் மோகம் அவர் கண்ணை மறைக்க பெண் என்றால் பெண் படம் முழுவீச்சில் தயார் ஆனது.
தலைவரிடம் ஒரு நாள் தொலைபேசியில் இந்த படம் வெற்றி பெற்றவுடன் ஒரு பெரிய ரோஜாமாலையுடன் உங்களை வந்து சந்திப்பேன்...அல்லது உங்கள் முகத்தில கூட முழிக்கமாட்டேன் என்று ஆரூர்தாஸ் வருந்தி சொல்ல....இனி உங்கள் விருப்பம்... என்று தலைவர் பதில் சொல்ல..
அடுத்து தேவரின் விவசாயி படத்தில் நீங்கள் இல்லாததால் மாரா... இப்போது எழுத ஒப்பந்தம் செய்ய பட்டுள்ளார்.... அடுத்த படங்களும் தொடர்ந்து இருக்க......சரி இனி...என்று தலைவர் முடித்து கொள்ள.
ஏ. எல்.எஸ்.ஸ்ரீனிவாசன் பெரிய தயாரிப்பாளர் என்பதால் பெண் என்றால் பெண் படத்தை போட்டி போட்டு கொண்டு வினியாகஸ்தர்கள் வாங்க.
1967 இல் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியான பெண் என்றால் பெண் மாபெரும் தோல்வி அடைய.
மீண்டும் பலகாலம் தலைவருடன் பயணித்த ஆரூர்தாஸ் தலைவருடன் மீண்டும் சேர்ந்தாரா.
பொறுத்து இருங்கள் .
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி..உங்களில் ஒருவன் .....நெல்லை மணி......தொடரும்.......... Thanks.........
-
தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பர்களே
தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிலே தமிழுக்கு பெருமை சேர்த்தவர் எம்ஜிஆர்
உலகிலே மொழிக்கு ஆராட்சி பல்கலைகழகம் நிறுவியவர் எம்ஜிஆர்
அரசாணை தமிழில் இடவேண்டும் என உத்தரவு இட்டவர் எம்ஜிஆர்
தமிழ் புலர்வர்கட்கு மானியம் வழங்கியவர் எம்ஜிஆர்
தமிழ் புலவர் திருவள்ளுவர்க்கு சிலை நிறுவ அடிக்கல் நாட்டியவர் எம்ஜிஆர்
தமிழ் சீர்திருத்த பெரியார் எழுத்தை நடைமுறை படுத்தி கணணியில் வரசெய்தவர் எம்ஜிஆர்
வாழ்க எம்ஜிஆர் புகழ்.......... Thanks.........
-
ஈட்டிய பொருளை கொடுத்து மகிழ்ந்தவர் எம்ஜிஆர்
பெற்ற அதிகாரத்தை தமிழர்களை வாழவைக்க பயன்படுத்தியவர் எம்ஜிஆர்
தன் மருத்துவ செலவையே அரசுக்கு திருப்பி கொடுத்த ஒரே இந்திய தலைவன் எம்ஜிஆர்
நினைவகம் அரசு செலவு செய்ய கூடாது என அதன் சிலவை தானே சிலவு செய்ய வழி வகுத்த ஒரே தலைவன் எம்ஜிஆர்
M an
G od.
Ramachathiran
வாழ்க எம்ஜிஆர் புகழ்....... Thanks.........
-
மக்கள்திலகம் அதிமுகவை தொடங்கி அவர் நம்மைவிட்டு பிரிந்தபின் இயக்கம் பல முறை பிளவுபட்டு பின் மீண்டது.
தலைவர் இருக்கும் போதே 1973 இறுதியில் 74 தொடக்கத்தில் ஒரு முறை நடந்தது...தெரியுமா..
கட்சி ஆரம்பித்தவுடன் திருமதி பி.டி.சரஸ்வதி அவர்கள் மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்தார்.
சென்னையில் ஷீலா பஜாஜ் என்கிற ஒரு பெண்மணி வட இந்தியர். கட்சியில் சேர விரும்பி பி.டி.சரஸ்வதி மூலம் வேண்டுகோள் விடுக்க.
படித்த பெண் ஆக இருக்கிறாரே என்று தலைவரும் கட்சியில் சேர்த்துக்கொண்டு சென்னை மாவட்ட அளவில் மகளிர் அணியில் ஒரு பொறுப்பு கொடுத்தார்.
அவர் மிகவும் ஒரு நடிகையை போல அழகான தோற்றம் கொண்டவர்...அவர் பெயரை டாக்டர் பொற்செல்வி என்று மாற்றி சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் பொது கூட்டங்களில் பேசி வந்தார்.
அவரின் வசீகர தோற்றத்தை கண்டு சில வக்கீல்களும், சில தொண்டர்களும் அவர் பின்னால் நின்றனர்.
ஒரு கட்டத்தில் மாநிலம் முழுவதும் கூட்டம் பேசுகிறேன் என்று சொல்லி தலைவரும் அனுமதிக்க.
செல்லும் நகரங்கள், ஊர்களில் கட்சி நிர்வாகிகள், மன்றம் கண்ட தோழர்களை மதிக்காமல் நடக்க ஆரம்பித்தார்.
விளைவு...தலைவருக்கு தெரிந்து உடனே கட்சி பொறுப்பில் இருந்து பொற்செல்வி நீக்க பட்டார்.
உடனே அவர் கோவம் கொண்டு புரட்சி அதிமுக என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து தலைவரை பற்றி தவறாக பேட்டி எல்லாம் கொடுத்தார்.
ஆனால் அவர் கட்சி ஓர் இரு மாதங்களில் மக்கள் திலகத்தின் மகத்தான செல்வாக்கின் முன் கட்சியும் கரைந்து போய் அவரும் காணாமல் போனார்.
இதுதான் அதிமுகவின் முதல் சிறு சலசலப்பு...
வாழ்க எம்ஜியார் புகழ்.
நன்றி தொடரும்..உங்களில் ஒருவன் நெல்லை மணி........... Thanks...
-
நம் தலைவரின் கடைசி நிமிடம்...இந்த மண்ணில்.
பல எம்ஜியார் நெஞ்சங்கள் என்னிடம் கேட்டனர்...
என்ன இருந்தாலும் நம்ம தலைவர் கிட்ட போய் அவரை... அவருக்கு தொல்லை கொடுத்தவரை. என்று.
நான் சொன்னேன் நடந்து விட்டது...அதுவும் நன்மைக்கே...உலகெங்கும் இருந்து இங்கே வரும்போது...
எம்ஜியார் போல வாழ வேண்டும்....அவர் போல கூடாது என்று தன் சந்ததியினருக்கு ஒரே இடத்தில் அடையாளம் காட்ட நல்ல வசதி என்றேன்.
வாழ்க எம்ஜியார் புகழ்
தொடரும்...நெல்லை மணி...நன்றி..
வழக்கம் போல house full போர்டு .....இங்கேதான்...அங்கே காத்து வாங்குது........... Thanks.........
-
இனிய பிற்பகல் வணக்கம்..!!
#எம்_ஜி_ஆர்_பற்றி_சுவையான_சிறு_குறிப்புகள்
சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும்... இன்று அவரை பற்றி பார்ப்போம்.
#பண்டிகை
எம்.ஜி.ஆர் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆரம்பம் முதலே அவர் அம்மா தீபாவளியைக் கொண்டாடததாலும் அவர் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொதுவாக மலையாளிகள் தீபாவளி கொண்டாடமாட்டார்கள். இந்தியாவில் தீபாவளிக்கு விடுமுறை விடாத மாநிலமாகவே கேரளா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்போது ஊடகங்களின் செல்வக்கால் குறிப்பாக விளம்பரத்தின் ஆளுகையால் அங்கும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வேட்டைக்காரன் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது தீபாவளிக்குச் சென்னை திரும்பிவிடலாம் என்று மற்றவர்கள் நினைத்தபோது எம்.ஜி.ஆர் ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தலாம் என்று சொல்லிவிட்டார். அனைவருக்கும் வீட்டுக்கு அனுப்பப் பணம் தருமாறு இயக்குநர் திருமாறனிடம் சொல்லிய எம்.ஜி.ஆர் இங்கிருப்பவர்களுக்குப் புதுத்துணி எடுத்துத் தருவதும் உங்கள் செலவே என்றார். திருமாறன் தன் அண்ணன் தேவரை விட சிக்கனக்காரர் என்பதால் திணறிவிட்டார். இதுவும் முக்கியஸ்தர் பேர்களை சீட்டு எழுதி குலுக்கி போட்டதில் இவர் பெயர் வந்ததால் திருமாறனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை எடுத்த சீட்டில் எம்.ஜி.ஆர் பெயர் இருந்திருந்தால் எம்.ஜி.ஆர் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் திருமாறன் பெயர் வந்ததால் அவர் சிக்கிக்கொண்டார். இந்தத் தகவல் அறிந்ததும் ஜெமினி சாவித்திரியுடன் தீபாவளி கொண்டாட அங்கேயே வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர் பொங்கல் பண்டிகையை மட்டுமே சிறப்பாகக் கொண்டாடுவார். அன்று அனைவருக்கும் கை நிறைய ரூபாய் நோட்டுகளை வழங்குவார். அவரை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சிவாஜியிடம் சத்தியம் செய்து கொடுத்த பாலாஜி கூட எம்.ஜி.ஆரிடம் அன்று வந்து எம்.ஜி.ஆர் கையால் பணம் வாங்கிச் செல்வார்.
எம்.ஜி.ஆர் நாடக மன்றம் இருந்த போது மன்றத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஒரே மாதிரி வேட்டி சேலை எடுத்து வழங்கி அன்று தன் அலுவலகத்துக்கு வரச் செய்து பல விளையாட்டுகள் நடத்தி கொண்டாடி மகிழ்வதுண்டு. பொங்கல் செலவுக்குப் பணம் வேண்டும் என்பதற்காகவே அவர் விவசாயி படத்தை ஒப்புக்கொண்டு தேவரிடம் பணம் பெற்றார் என்றும் தகவல் உண்டு. அந்தளவுக்கு அவர் பொங்கல் கொண்டாட பணம் செலவழிப்பதுண்டு........ Thanks...
-
நினைத்ததை முடிப்பவன் MGR ன் உரிமைக்குரல் ,,,,
1917 முதல் 1987ல் உடல் மட்டும் இந்தியமண்ணுக்கு உரமாகி பல்லாயிரம் கோடி மக்களின் இதயங்களில் இதயக்கனியாக உயிரிலே கலந்து உறவாடிகொண்டு ஒலித்துக் கொண்டிருக்கும் நம் தலைவனின் இந்த ஒரு ஸ்டில்லின் ஸ்டைலுக்கு எவனாலும் ஈடுகொடுக்கவே முடியாது......... Thanks...