https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5E5A0EF6
நன்றி Vcg Thituppathi H O S
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...3d&oe=5E5A0EF6
நன்றி Vcg Thituppathi H O S
15/11/1968 ல் வெளிவந்த சிங்கத்தமிழனின் லட்சுமி கல்யாணம்
15/11/2019ல் 51 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...13&oe=5E4F93CBhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f0&oe=5E5A1EB1
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...30&oe=5E4117D4
நன்றி Vcg Thituppathi H O S
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...92&oe=5E4C6D76
நன்றி Veeyaar
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...32&oe=5E8C44EA
நன்றி Veeyaar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8c&oe=5E4AAD6D
நன்றி Veeyaar
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு "இந்தக் குறளுக்கும் நடிகர் திலகம் சிவாஜிக்கும் இருக்கும் நெருக்கம் என்னவாக இருக்கும்?
முதலில் குறளுக்கான தெளிவுரையைத் தெரிந்து கொள்வோம்,
1) திரு.மு.வரதராசனார் அவர்களது உரை:-
"எப்பொருள் எத்தன்மைதாய்த் தோன்றினாலும் ( அத்தோற்றத்தை மட்டும் கண்டு மங்காமல்)
அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு "
2) கலைஞர் கருணாநிதி உரை:-
" வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல் அது பற்றிய தெளிவான உண்மையை அறிவதே மெய்யுணர்வு "
3) திரு.சாலமன் பாப்பையா உரை:-
" எந்தப் பொருளானாலும் அது எப்படிக் காட்சி தந்தாலும் அப்பொருளின் வெளித்தோற்றத்தைக் காணாமல் உள்ளடக்கமாகிய உண்மைப் பொருளை காண்பதே மெய்யுணர்தல் "
இப்போது சொல்லவந்த செய்திக்கு வருவோம்,
1968 ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக அவரது தலைமையில் திமுக ஆட்சி நடந்த போது சென்னையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவதென முடிவெடுக்கப்பட்டு அதற்கான சீரிய பணிகள் நடைப் பெறத் தொடங்கியது,
விழா சிறப்பாக நடைபெற பெருமளவு நிதியும் தேவைப்பட்டது,
நிதி வேண்டி முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்,
அறிஞர் அண்ணா அவர்களது வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் எதிரணியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருந்த போதிலும் கூட உடனடியாக ரூபாய் ஐந்து லட்சத்தை அளித்ததோடு
( ஐந்து லட்சம் என்பது இன்று 50 கோடி ரூபாயாகும் இதில் மாற்றுக் கருத்து கொள்பவர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் எனில் அந்தத் தொகை அன்றைய நடிகர் திலகத்தின் ஏறக்குறைய இரு படத்தின் சம்பளமாகும் இன்று முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோரின் ஒரு படத்திற்கான சம்பளம் 20-25 கோடியாகும்)
மாநாட்டின் முக்கிய பணிகளையும் ஏற்றுக் கொள்வதாக கேட்டுக் கொண்டார்,
வழக்கம் போல நடிகர் திலகம் சிவாஜிக்கு மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து விடக் கூடாது என எதிரணியினர் அறிஞர் அண்ணா அவர்களிடம் வாதிட்டு புளம்பினர், ஆனால் நடிகர் திலகம் அளித்த பெருந்தொகை எதிரணியினரின் புளம்பலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது,
மாநாட்டில் பெருமைப் படுத்தும் விதமாக தமிழறிஞர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்கள் என உலகின் பல நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு தமிழுக்கான சிறப்பு செய்தனர்,
தமிழறிஞர்கள், தமிழக அமைச்சரவை என ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு தான் உலகப்புகழ்பெற்ற சென்னை மெரீனா கடற்கரையில் தமிழறிஞர்களின் திரு உருவச்சிலைகள் அமைக்கபடுவதென, அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவிற்கான முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடிகர் திலகம் திருவள்ளுவர் திரு உருவச்சிலையை தனது சொந்த செலவிலேயே அமைத்து கொடுக்க முடிவு செய்தார், அறிஞர் அண்ணா அவர்களது யோசனைப்படி திருவள்ளுவருக்கான சிலை உருவத்தை நடிகர் திலகமே மாடலாக நின்று திருவள்ளுவர் சிலை அமைய காரணமாகவும் அமைந்தார்
(நடிகர் திலகத்தின் சிலையை மெரினாவிலிருந்து அகற்றி விட்டார்கள் என நினைத்தாலுமே திருவள்ளுவராக அதே மெரினாவில் அதே கம்பீரத்துடனேயே இருக்கிறார்)
தத்ரூபமாகவும் கம்பீர தோற்றத்துடன் எழில் வடிவிலான திருவள்ளுவர் சிலை அமைந்ததைக் கண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்ந்தார், நடிகர் திலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என வாதிட்டவர்களுக்கு அறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டிய உதாரணம் தான் மேலேக் குறிப்பிட்ட திருக்குறள்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு,
சிலை அமைந்திருக்கும் பீடத்தின் கல்வெட்டில் குறள் பொறிக்கப்பட்டுள்ளது,
நடிகர் திலகம் எதிரணியில் இருந்தாலுமே தமிழெக்கென்று வரும்போது அவர்தான் முன்னாடி நின்றார்
இதே ஆண்டில் தான் நடிகர் திலகம் நடிப்பில் வெற்றி வாகை சூடிய 125 வது திரைப்படமான "உயர்ந்த மனிதன்" வெற்றி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என நடிகர் திலகத்தை குறிப்பிட்டு வாழ்த்தினார்,
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ee&oe=5E5C083Ahttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a6&oe=5E4A202Dhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c8&oe=5E5B9531https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ac&oe=5E4109D5
நன்றி Sekar Parasuram (F BooK)
https://youtu.be/OOD1-a9GSmM
Seeman Beautiful Speech about Sivaji Ganesan and Thiruvalluvar | Seeman Latest Speech
நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவசியம் இல்லாமல் ரஜினி மற்றும் கமலுக்கு பதில் சொல்ல நடிகர் திலகம் சிவாஜியை பயன்படுத்தினார்,
அவர் பேசும்போது சினிமாவில் நடிப்பில் எம்ஜிஆர்க்கு அடுத்த நிலையில் சிவாஜி இருந்தார் எனவும் வரலாறு தெரியாமல் கூறினார்,
அவருக்காக சில ஆவணங்களைக் கொண்டு சுட்டிக் காட்டிடுவோம்,
1952 ல் பராசக்தி வெளியான அன்றைய நாளில் இருந்தே சிவாஜிதான் உச்சம், ...
1977 ல் எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பை ஏற்கும் வரை நடிகர் திலகம் தான் பிரதானச் செய்தி,
மக்களிடையேயும் ஆகட்டும் செய்தி பத்திரிக்கைகள் ஆகட்டும் சிவாஜி- எம்ஜிஆர் என்பது தான் வழக்கம்,
திமுக அரசு அமைத்த 1967 களில் இருந்து பத்திரிக்கைகள் அச்சுறுத்தப்பட்டன எம்ஜிஆர்- சிவாஜி என மாற்றம் செய்து வழக்கத்தை மாற்ற வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன,
அதற்கு அச்சாரம் போட்டுக்கொண்ட பத்திரிக்கைகளில் ஒன்று தினத்தந்தி,
ஆனாலும் வரலாறு என்பதை முழுவதுமாக மாற்றிவிட முடியாத ஒன்று,
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் ஐ எப்படி வேண்டுமானாலும் கொண்டாடி பேசிக்கொள்ளட்டும்
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி எம்ஜிஆர் ஐ அடுத்த நிலை என வரலாறு தெரியாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்,
இனைப்பில் 1) அறிஞர் அண்ணா அவர்களது திருமண விழா தொடர்பான பத்திரிக்கை செய்தியில் சிவாஜி- எம்ஜிஆர்
2) கூண்டுக்கிளி திரைப்பட விளம்பரம் சிவாஜி- எம்ஜிஆர்
3) இந்தியாவின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் சிவாஜி- எம்ஜிஆர்
4) 1976 ஆம் ஆண்டின் திரைப்பட வரிசை சிவாஜி- எம்ஜிஆர்
5) மூன்று முக்கிய நடிகர்கள் நடிக்கும் திரைப்பட நடிகர்கள் வரிசையில் சிவாஜி- எம்ஜிஆர்
6) 15 மைல் தூர அளவிற்கு நடந்த சிவாஜி மன்ற பேரணி
7) முதன் முதலாக 30000 ரசிகர் மன்றங்களைக் கொண்டிருந்த சிவாஜி
இன்னமும் எவ்வளவோ வரலாற்று ஆவணங்கள் இருக்கத் தான் செய்கிறது.
வருங்காலத் தலைமுறையினருக்காவது சரியான வரலாற்றை எடுத்துச் சொல்லுவோம்,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...85&oe=5E3F73C7
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...29&oe=5E4CCF21https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...80&oe=5E5BCA46
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b2&oe=5E5664B0
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...df&oe=5E8443E0
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...e8&oe=5E8A5D28
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...67&oe=5E4285EF
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...fc&oe=5E51E84F
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...47&oe=5E447F61
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c8&oe=5E3E0DF5
நன்றி Sekar Parsuram (f Book)
அரசியல் வரலாறு தெரியாமல், விபத்தில் பதவி வகித்துக் கொண்டிருக்கும், சிவாஜியை விமர்சிக்கும் அதிமுக அமைச்சர்களே, (விபரம் தெரிந்தவர்கள், சிவாஜியை பற்றி பேசுவதில்லை)
1949, செப்படம்பர் 18ம் தேதி திமுக, அண்ணாதுரை தலைமையில் உதயமாகிறது.
1952ல் அதாவது, பராசக்தி வருவதற்கு முன் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிடவில்லை.
... பராசக்தி திரைப்படம் வெளிவந்ததற்கு பின்,
சிவாஜி அவர்கள் திமுகவிற்காக
பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து,
நிதி வசூலித்து கொடுத்து, கட்சி வளர்ச்சிக்காக உழைக்கிறார்.
சிவாஜி செல்லும் இடமெல்லாம்,
மக்கள் வெள்ளமென திரண்டனர். சிவாஜியின் பேச்சை கேட்க இளைஞர்கள் தவம் கிடந்தனர்.
அதன்பிறகு, 1956ல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது,
1962 ல் நடைபெற்ற தேர்தலில், திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெறுகிறது,
ஆனாலும், முதல்வர் வேட்பாளர், அண்ணாதுரை அவர்களோ, அவரது சொந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் தோல்வியடைந்தார்.
முதன்முதலாக, திமுக ஆட்சியை கைப்பற்றியது
1967ல், மேலும், முதல்வர் வேட்பாளர் அண்ணாதுரை அவர்கள் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
1949ல் ஆரம்பித்த திமுக ஆட்சியை பிடிக்க
18 ஆண்டுகள் ஆனது...
ஆனால், சிவாஜி மட்டும் அரசியலில் தோற்றார், என்று பேசும் மேதாவிகளே,
சிவாஜி அவர்கள் மட்டும், கட்சி ஆரம்பித்து, 6 மாத காலத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்...
இது என்ன நியாயம்.
சிவாஜி மட்டும் தான் அரசியலில் தோற்றார் என்பது போல் ஒரு மாயையை, இன்றைய அரசியல்வாதிகளும்,. மேலும், ஊடகங்களும் தவறான தகவல்களை மக்களிடத்தில் பரப்புகின்றனர்.,
இவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும்....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...98&oe=5E563590
நன்றி Sundar Rajan ( F Book)
வணக்கம்,
* நடிகர்திலகம் சிவாஜி அரசியலில் தோற்றாரா?
* தனிக்கட்சி ஆரம்பிக்கக் காரணம் என்ன?
* சிவாஜியை ஏன் சிறுமைப்படுத்த நினைக்கிறார்கள்?
* அரசியலில் சிவாஜி சாதித்தாரா?...
* ரஜினி - கமலுக்கு ஆதரவு உண்டா?
* சிவாஜி குடும்பத்தினர் உங்களை ஆதரிக்கிறார்களா?
- இதுபோன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விளக்கத்தைத் தருகிறார் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையின் தலைவர் திரு.கே.சந்திரசேகரன்.
அவசியம் கேட்போம், அனைவருக்கும் பகிர்வோம்.
- நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை, சென்னை.
https://youtu.be/Do_fT_UFdiU
நன்றி Sivaji Peravai Chennai
Sivajiperavai Chennai
தமிழக முதலவர் எடப்பாடி அவர்களே தெரிந்து கொள்ளுங்கள்.
_________________________________
உன் தலைவன் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் நோய் முற்றி சிகிட்சை எடுத்து கொண்டிருந்த போது, அண்ணனை (எம.ஜ.ஆர்) காண்பதற்கு எங்கள் அய்யன் தன் மனைவி கமலா அவர்களுடன் அமரிக்காவிற்கு சென்றார்கள்.
தம்பியை (அய்யனை) பார்த்த உடன் எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் கண் கலங்க நால்வரும்(அய்யனும்,கமலா அம்மை, ஜானகி அம்மை, எம்.ஜி.ஆர்) ஒன்றாக கண்ணீர் வடித்து கட்டி பிடித்து அழுது தங்களின் கரை இல்லா பாசத்தை கண்ணீராக வெளி படுத்தினார்கள்.
மருத்துவர்களின் நிற்பந்தத்தால் இவர்களின் ஓய்வில்லா கண்ணீர் அடக்கப்பட்டன. இரண்டு நாட்கள் உடன் இருந்து விட்டு அய்யனின் குடும்பம் இந்தியா திரும்பியது.
இந்தியா திரும்பிய அய்யனை எம்.ஜி.ஆர் அவர்கள் திரு. வீரப்பனுடன் மீண்டும் அவசரமாக அமெரிக்காவிற்கு அழைக்கப்படுகின்றார்கள்.
இந்த அழைப்பின் விவரம், ரகசியம் ஏன் என்று, என்ன என்று, எதற்க்காக என்று கால் நக்கி பதவியில் ஒட்டி கொண்டிருக்கும் எடப்பாடியே தங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்.
அழைப்பபை ஏற்று திரு.வீரப்பன் அவர்களுடன் அய்யன் செல்கின்றார்கள் மனம் கனத்துடன். இத்தனை அவசரமாக அண்ணன் என்னை அழைக்க காரணம் என்ன? விபரீதம் ஏதாவது? மனம் கனத்துடன் இருவரும் அமெரிக்கா செல்கின்றனர்.
அங்கு சென்றதும் அய்யனுக்கு மனதிற்க்கு சிரிய சமாதானம். விபரீதம் எதுவும் இல்லை என்று.
பிறகு அண்ணன்(எம்.ஜி.ஆர்) அய்யனை அழைத்ததின் அவசரம் என்ன? 4 பேரும்( எம்.ஜி.ஆர்,அய்யன், ஜானகி, வீரப்பன்) மருத்துவமனையில், அங்கிருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு பேசப்படுகின்றது.
தம்பி கணேசா உன் சகோதரி ஜானகிக்கு எதுவும் தெரியாது. என் கட்சியில்(அ.தி.மு.க) உள்ள எவர் மீதும் எனக்கு (எம்.ஜி.ஆர்) எள் அளவும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த இயக்கத்தை (அ.தி.மு.க) தலைமை ஏற்று நீதான் வருங்காலத்தில் வழி நடத்தி செல்ல வேண்டும் என்ற அய்யனின் கை பிடித்து அண்ணன் என்ற அன்பு கலந்த அதிகாரத்துடன் வேண்டடி கொண்டார் எம்.ஜி.ஆர் அவர்கள்.
இதற்கான விழா (அய்யனிடம் இயக்கத்திற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற விழா) சென்னையில் ஒரு மாபெரும் விழாவாக நடத்தப்பட வேண்டும் என்று விரப்பன் அவர்களிடம் கட்டளை இடப்படுகின்றது. இருவரும்(அய்யனும், வீரப்பனும்)முதலில் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்கள் ஜானகி அம்மை, சில மருத்துவர்களுடன் சென்னை வருகின்றார்கள். விழாவிற்கு அய்யனை தலைமை ஏற்க சொல்லும் பிரமாண்ட விழாவிற்கு 2 தினங்கள் மட்டுமே இருந்த நிலையில் எங்கள் அய்யனின் பாச மிகு அண்ணன் (எம்.ஜி.ஆர்) இயற்கை எய்தினார்கள்.விழாவும் நடை பெறாமல் அனைத்துமே மரண ஓலத்துடன் அடங்கி விட்டது. அனைத்தும் மரண பெட்டியில் வைத்து பூட்டப்பட்டது.
இதற்கு சாட்சி திரு.வீரப்பன் (அ.தி.மு.க அமைச்சர்) அவர்களே.
ஏய் சசிகலாவின் கால் நக்கி எடப்பாடியே! உன் கட்சியில் எவனையும் நம்பாது எதிர் முகாமில் இருந்த எங்கள் அய்யனை மட்டுமே தங்களின் தலைவன் (எம்.ஜி.ஆர்)நம்பினார்கள். காரணம், அ.தி.மு.கவில் உள்ள நாய்கள் அனைவருமே கால் நக்கிகள் என்று அன்றே தங்களின் தலைவன் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை.
அதை இப்போது மனசாட்சி இன்றி தவறாமல் செய்து, ஒரு விபத்து போல் ஆட்சியில் ஒட்டி கொண்டுருக்கும் சோமாரி நீ, மாசற்ற எங்கள் அய்யனை விமர்சிக்கின்றாய். தனது கட்சியில் உள்ள அத்னைபேரும் திருட்டு நாய்கள் என்று தனது தலைவனே முடிவு செய்து, இந்த உலகில் தனது(எம்.ஜி.ஆர்)தலைவனுக்கு நம்பிக்கை உள்ள ஒரே உத்தமன் எங்கள் அய்யன் மட்டுமே.
இவைகளை நீ தெரிந்திருக்க வழி இல்லைதான். அன்று நீ உடம்பில் துணி இன்றி ஓடிய காலமாக இருக்கலாம். உலகில் உத்தமர்கள் ஒரு சிலரே தோன்றினார்கள் அதில் எங்கள் அய்யனும் ஒருவர் என்பது எவராலும் மறுக்க முடியாத சத்தியம்.
எங்கள் அய்யன் மாற்று குறையாத இறை பிறவியாம் எங்கள் அப்பச்சியிடம்(காமராஜ்) பாடம் கற்றவர். உன்னை போல் சசியிடம் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி கொள்.
ரஜனியும், கமலும் அரசியலில் வந்தால் உன் தலைவன் போல் வெற்றி பெற இயலாது என்று நீ கூறி இருந்தால் என்ன ம.......க்கு உன்னை நாங்கள் விமர்சிக்க வேண்டும். இதன் உண்மை, நீ உன் தலைவனை மறந்து என் அய்யனையே இப்போதும் உன் மனதில், நினைவில் வைத்திருக்கின்றாயோ? ஆட்சியின் அகங்காரத்தில் ஆடை இன்றி அலையாதே. உன் முடிவு வெகு விரைவில். அப்பச்சியே போற்றி. அய்யனே போற்றி.
நன்றி Selvaraj Fernandez
காஷ்மீர் மாநிலத்தில் குழந்தைகள் கல்வி வளர்ச்சி நிதி கவர்னர் மீர்காசிமிடம்
டெல்லி வாழ் தமிழர்களுக்குவீடுகட்ட அன்னை இந்திராவிடம் நிதி
மும்பை கொய்னார் டேம் உடைந்நபோது இந்தியாவிலேயே முதல்நபராக நிதி
மும்பை வீரசிவாஜி சிலை வைக்கநிதி
பீகார் வெள்ள சேதநிதி...
அமெரிக்க குழந்தைகளை மகிழ்விக்க தனி விமானத்தில் யானை குட்டி
சீனபோரின்போது யுத்தநிதி
பாகிஸ்தான் போரின் போது தன்மகளின் திருமண நகைககள் லால்பகதூரிடம்
சத்துணவு திட்டத்திற்கு மமுதல்நபராக பெருந்தொகை நேருவிடம்
தன் உழைப்பால் ரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தில் அரசியல்
இதெல்லாம் இன்றைய அரசியல் பதவி வகிக்கும் வாதிகளுக்கு தெரியுமா
நேர்மையான அரசியல்னா தெரியுமா
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...b3&oe=5E4FAD0Ahttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...e5&oe=5E5A6564
நன்றி சிவாஜி வெற்றிவேல்
தனி மனிதர்....
அந்த ஒருவர் தோற்றதுதான் சரித்திரம்.எதிரிகளாலாயே தாங்கிக் கொள்ள முடியாத தோல்வி அது.அந்த தோல்வியை அவரது ரசிகர்களுக்கே நினைவூட்டுவது அவரது அரசியல் பங்காளிகள்தான்.அதை தோல்வியாக அவரது ரசிகர்களே இன்றுவரை நினைப்பது இல்லை. பின் ஏன் அடிக்கடி நினைவூட்டல்?
அவர் எப்படி தோற்கலாம் என்பது தான் புரியாத புதிராக உள்ளது? இது கூட எதிர்க் கூடாரமிருந்தே!
கலையுலகை உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பயணித்த பாதையானது மிகவும் சுத்தமானது. அவர் வந்திருந்தாரென்றால் அரசியலின் சில சாக்கடைகளாவது ச...ுத்தமாயிருக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணமாயிருக்கலாம்.தங்களின் கசடான
அரசியல் செயல்கள் அவர்களுக்கே சலிப்பை தந்திருக்கலாம்.ஆனாலும் மொத்த கட்சியின் செயல்பாடுகள் தடைகளை ஏற்படுத்தும் சூழலில் தான் கட்சிகள் நடந்து கொண்டிருப்பதால் அதை மீறி என்ன செய்ய முடியும்? ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் அந்த 10000 ஓட்டு வித்தியாசத்தை தங்களின் மனச்சாந்திக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
யார் யாரெல்லாம் ஜெயித்திருந்தார்கள் என்ற வரிசையை தமிழக அரசியலில் பார்த்தோமானால் அந்த வரிசை ஓட்டுப் போட்ட மக்களுக்கே அறுவெறுப்பை தரும்.
சுதந்திரத்திற்கு பின்னால் கடைசியாக காமராஜருக்கு பின்னால் வந்த44 வருட அரசியல் தேர்தல் ஒரே ஒருவரின் தோல்வியைத்தான் தாங்கிக் கொள்ள முடியாதது என்ற வகையிலே பிரஸ்தாபிக்கப்படுகிறது.அப்படியானால் தோல்வியுற்றவர் எப்படிப் பட்டவராக இருந்திருக்க வேண்டும்?
கண்டிப்பாக அவர் ஜெயித்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவரது தொண்டர்களை விட எதிர் முகாமுக்கே அதிகம் இருந்திருக்கின்றது என்பது தான் புலனாகின்றது.
உங்களுக்கெல்லாம் 100 ரூபாய் தருகிறேன்.அரசாங்க கஜானாவில் 1000 ரூபாய் எடுத்துக் கொள்வேன் என்று மறைமுகமாய் விளையாடப்படும் அரசியல் களத்தில் புரியாத பாமரர்களின் ஓட்டுகள்
எந்த நல்ல உண்மை வீரனுக்கு கிடைக்கும்?
ஆகவே எம் திலகம் நல்ல மனிதர்.
அந்த பெயர் போதும் எமக்கு!
ஆனால் இந்தஅரசியல் அவலமானது , என்றுதான் சரித்திரம் பேசப்படும்.
நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
முதல் சுற்றில் 31 அரங்குகளில் 50 நாட்களைக் கடந்ததோடு மட்டுமன்றி, ஆறே வாரங்களில் தமிழகத்தில் 31 லட்ச ரூபாய் வசூல் செய்து, மதுரையில் 182 நாட்கள் ஓடிய கருப்பு- வெள்ளையின் கடைசி ஆல்ரவுண்ட் பிளாக்பஸ்டர் திரைப்படம்
#பட்டிக்காடா_பட்டணமா 1972
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7a&oe=5E41AC07
நன்றி nilaa
அமெரிக்காவில் MGR சிகிச்சை பெற்றபோது நேரில் சந்தித்த கலைக்கடவுள் சிவாஜி யிடம் MGR தன் மனைவி ஜானகி அம்மாளை காட்டி இவள் ஏதும் அறியாதவள் எனக்கு ஏதும் ஆச்சுதுன்னா த...ம்பி கணேசா இவளை நீ பார்த்துக்கணும்னு சொன்ன ஒரே சொல்லு க்காக 89 தேர்தலில் அன்று தோற்றார் எங்கள் தெய்வம் ஆனால் அன்று தோற்றது சிவாஜி அல்ல MGRன் மனைவி ஜானகி அம்மாள் ஆட்சி யார் விசுவாசமாக இருந்தது(இது நடிகர் அண்ணன் திரு ராஜேஷ் அவர்களிடம் ஜானகி அம்மாள் சொன்னது) MGRக்கு யார் துரோகம் செய்தனர் இன்று பதவிக்காக காலை பிடுச்சு வந்தவர்கள் சொல்கிறார்கள் சிவாஜி அரசியலில் தோற்றார் என்று உண்மை அதுவல்ல உங்கள் தலைவர் MGR உங்கள் போன்ற தொண்டர்களிடம் தோல்வியடைந்தார் அன்று இதை சொல்லுங்க விசுவாசம் னா என்னவென்று
நன்றி Shanmugaraj Madthur
மொத்தத்தில் கர்ணனும்.....
எங்களின் திலகமும் ஒன்றே....
கர்ணன் நண்பனுக்காக தன்னையே இழந்தான்...
எங்கள் திலகமும்,நண்பனாய்...சகோதரனாய் கொண்ட உங்கள் தலைவனுக்காக...
நன்றி என்ற ஒரு கொள்கைக்காக...
உங்கள் நலனுக்காக உழைத்து, அன்று தி.மு.க.தலைவர் விரும்பி அழைத்தும்,
நன்றிக் கடனுக்காக ...உங்களுக்கு உழைத்தாரே..ம்ம்ம்...நன்றி கெட்ட ஜென்மங்கள்....உங்களுக்கு எங்கே புரியப் போகின்றது....
நன்றி Rajendran Rajendran
நெஞ்சில் வாழும் அய்யனுக்கு....
பரந்து விரிந்த பாயும் காவிரி போல்,
பிரளயத்தின் சண்டவாயு போல்,
ஓங்கி அடிக்கப்பட்ட பேரிகையின் முழக்கம் போல்,
மோதி தெரித்த முகில்களில் புறப்பட்ட விண்ணேறு போல்,
ஜலம் பெருக்கி பீதி காட்டும் வேலம் போல் நீ உச்சரித்த வார்த்தைகளின் கர்ஜனைகளை கேட்டுத்தான் மானிடமே வியக்கிறதே!
துள்ளும் தமிழே!
தூய தமிழ் ஓசையே!
துவளாத தெள்ளு தமிழ் உச்சரிப்பே!
உன் வெடியோசை குரலால் திரைகளெல்லாம் தீப்பற்றாததுதான் மிச்சமே! எங்களின் விம்மியெலும் நரம்புகள் வெடித்துச் சிதறாதுதான் மீதமே!
எழிலோவியமாய் உன் வதனம் திரைகளை அலங்கரிப்பது எவ்வாறு உள்ளதென்றால் வெண் பட்டில் வைரங்களையும், முத்துக்களையும், கோமேதங்களையும், மரகதங்களையும் ஒன்றாக குவித்து வைத்து பார்ப்பது போலல்லவா உள்ளது.
அன்னம்தான் பெண்டிரின் நடையழகு உதாரணம் என்றால் அரிமாவின் நடையழகு வீரர்களுக்கு. ஆனால் உன் நடையழகில் நூறு வகை உண்டே! இதைச் சொல்லி எவற்றை உவமைப்படுத்த முடியும்? சிறுத்தாலும் கடுகு கொண்ட காரமே அதன் வலிமை.நீ மலையல்லவோ!
அதை என் சொல்வது?
ஆயிரம் பாவம் காட்டும் விழிகளை கொண்டவனே! வேல் அம்பு வீசி சைதன்யங்களை சாய்ப்பது தான் படை வீரனின் வீரம்.அவருக்கெல்லாம் வேலும் அம்புமே துணை.உனக்கோ உன் விழிகளோ அல்லவா.உன் விழி பார்த்து
எவன் நிற்பான் எதிரில்.
விழிகளில் காட்டும் வீரத்தை சொல்வதா?வீரத்துடன் காட்டும் காதலை சொல்வதா? காதலுடன் காட்டும் கனிவைச் சொல்வதா?
கனிவுடன் பார்க்கும் ரசத்தை சொல்வதா?
நவரசத்தையும் பிழியும் பாவங்களை சொல்வதா?
பாவங்களில் ஆயிரம் காட்டும் விந்தையைச் சொல்வதா?
அதே விழிகளில் ஒரு துளி நீர் இறக்கி நிற்க வைக்கும் அதியசந்தான் என்ன?
வேந்தனுக்கு ஒரு விழி
வீரனுக்கு ஒரு விழி
ஏமாளிக்கு ஒரு விழி
கோமாளிக்கு ஒரு விழி
பைத்தியத்திற்கு ஒரு விழி
பாமரனுக்கு ஒரு விழி
வித்தகனுக்கு ஒரு விழி
உத்தமனுக்கு ஒரு விழி
உங்களுக்குத்தான் இது சாத்தியம்
சத்தியமாய் மானிடருக்கெல்லாம்
விழிகள் ஒன்றல்லவா?
உன் விழிகளை பாட,
கம்பனே நொந்து கொள்வானே
வார்த்தைகள் கிடைக்காமலே!
வளரும் வளர் பிறையும், தேயும் தேய்பிறையும் இயற்கைதானே. அதனால்
அதில் ஏதும் விந்தையில்லை .உன் புருவ ஏற்றலும், சுருக்கலும் எங்களது நெஞ்சத்து தசைநார்களை அசைக்கிறதே! தசைநார்களில் குருதியின் ஓட்டம் கூடுகின்றதே! இதை எந்த விந்தையில் சேர்ப்பது?
எதுவென்றே எண்ண முடியாத வான்வெளியில் இருட்டும் சேர்ந்தது போல்
இருக்கும் நிலையில், தூரத்தில் பிரகாசிக்குமே விண்மீன், அந்த விண்மீனின் ஜோதி வடிவத்தில் பிரபஞ்சத்தின் நம்பகத்தன்மைக்கு விடிவு பிறப்பதுபோல் வந்த கலைஜோதியே!
உங்கள் விரல்கள் பிடிக்கும் அபிநயத்தில் பரதம் கூட தாழ் பணியுமே!
இக்கூற்றை பாமரனின் சொல்லாய் கொண்டாலும் கூட புறந்தள்ளுதலில் நெறி உண்டு.
ஆனால், பெரும் ஞானவான்கள்கூட
நின்
நடை பார்த்து,
நடையின் அழகு பார்த்து,
நாவின் சரஸ்வதி கடாட்சம் பார்த்து,
உள்ளம் பார்த்து,
உள்ளத்தின் சாத்வீகம் பார்த்து,
உயர்ந்தவரே என்று புகழப்பட்டவரே!
கற்றோரை கற்றோரே காமுறுவர்.
இகத்தில்,
வெற்றிமுரசு கொட்டிய வேந்தர்களைத்தான் பார்ப்பதெங்கே.?
புராணம் எடுத்தியம்பிய புண்ணியவான்களின் திருக்கோலம் காண்பதெங்கே?
காவிய நாயகர்களின் திருக்கோலங்களைத்தான் காண்பதெங்கே?
சிவனைத்தான், அவன் அடியார்களைத்தான், தேவர்களைத்தான்,
தெய்வ சிந்தனையாளர்களைத்தான், அவதாரங்களைத்தான் கண் கொண்டு பார்ப்பதெங்கே?
அனைத்திற்கும் ஆறுதலாய் நின் கோலமே சாட்சியல்லவோ?
அதிசயமே!
ஆனந்தமே!
இடி குரல் வேந்தனே
ஈர நெஞ்சு கொண்டோனே!
உதவும் கரத்தோனே!
ஊர் புகழும் கலையே!
எழிலின் இலக்கணமே!
ஏடு படிக்கா மேதையே
ஐயனே!
ஒருவனில் ஒருவனே!
ஓங்கார நாதனே!
ஔவியம் அற்றவனே!
வாழிய நின் புகழ்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a3&oe=5E83D3FF
நன்றி Senthilvel Sivaraj (Sivaji Group)
சிவாஜியின் அரசியியல் தெரியாமல் உளறிய எடபாடிக்கு ,ரவீந்திரன் துரைசாமி சாட்டை அடி !
நியூஸ் 18 சேனலில் பங்கேற்று பேசிய அரசியல் விமர்சகரும் பத்திரிகை ஆசிரியருமான ...திரு ரவீந்தரன் துரைசாமி அவர்கள் சிறப்பாக கருத்தை பதிய வைத்தார்
அதாவது சிவாஜியின் அரசியல் பற்றி பேசும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சரியான வரலாறு தெரியாமல் பேசி இருக்கிறார்,
எம்ஜிஆர் எமர்ஜென்சி காலத்தின் போது தனது கட்சி அதிமுகவைக் காப்பாற்றி கொள்ள பிரதமர் இந்திரா அவர்களிடம் சரணடைந்து தான் கட்சி பதவி என தக்க வைத்துக் கொண்டார், பின்னாளில் மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆன போதும் கூட அவரிடமும் சரணடைந்து ஆட்சியை தொடர்ந்து நடத்தினார்,
பிரதமர்களிடம் சரணடைந்தவர் எம்ஜிஆர்
அதே தருணத்தில் சிவாஜியிடம் பிரதமர்கள் தான் சரணடைந்தார்கள் என்பது வரலாறு,
அதற்கு உதாரணம் 1984 தேர்தலில் சிவாஜியின் நிபந்தனையை ஏற்று பிரதமர் ராஜீவ் காந்தி வேட்பாளர்கள் பட்டியலை மாற்றி அறிவித்தது
அந்தச் சூழலில் சிவாஜி தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல் இருந்து இருந்தால் அரசியலில் சிவாஜியின் சகாப்தம் வேறு மாதிரி அமைந்திருக்கும்
நன்றி ! திரு இரவீந்திரன் துரைச்சாமி அவர்களுக்கு,
நன்றி Ranganathan Kalyan (F Book)
திரைப்படம் மட்டுமல்ல... நாடகமும் ஒரு வரலாற்று வெற்றிதான்!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...23&oe=5E50007A
மதிய உணவுத் திட்டத்திற்காக 1959 ம் ஆண்டு
Thanks Nilaa
தேசியத் தலைவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டியும் அவர்களின் நினைவுகள் மக்களிடையே நிலைத்து நிற்பதற்கும் காரணங்கள் நடிகர் திலகத்தின் படங்களே..............
இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...fc&oe=5E4C30A3
Thanks Lakshmanan Lakshmanan (Nadigar Thilagam Sivaji Visirigal)
தமிழ்த் திரையுலகில் 13:04:1944 அன்று வெளியாகி ( 8) எட்டு திரைகளில் வெள்ளிவிழா ஓடிய வெற்றிப்படமான பி.யூ. சின்னப்பாவின் #ஜகதலப்பிரதாபன்
திரைப்படத்தின் சாதனையை 35 ஆண்டுகள் கழித்து 1979-ல் எட்டுத் (8) திரைகளில் வெள்ளிவிழா ஓடி சமன் செய்த படம் நடிகர்திலகத்தின் 200 வது படமான #திரிசூலம்
சென்னை மாநகரில் திரையிடப்பட்ட 3 அரங்குகளிலும் ஒரு காட்சிகூட மாற்றப்படாமல் மூன்றிலும் வெள்ளிவிழா ஓடிய நடிகர்திலகத்தின் மூன்றாவது படம் #திரிசூலம்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...84&oe=5E588738
நன்றி Vaannila Vijayakumaran
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
பாண்டிச்சேரி , தஞ்சை , திருவண்ணாமலை முதலிய இடங்களில்
ஷிப்டிங்கில் வெள்ளிவிழா கண்டது குறிப்பிடத்தக்கது
மதிப்பிற்குரிய திரைப்பட எடிட்டர் திரு B.லெனின் அவர்கள்,
16-11-19 சென்ன மைலாப்பூர் RR சபா
தனது 73 வயதிலும் கூட சுமார் 3 மணி நேர அளவிற்கு மேடையில் திரையின் அருகே தொடர்ந்து நின்ற படியே பாவமன்னிப்பு, பாச மலர், ஆகிய வெள்ளி விழா காவியங்கள் மற்றும் பாலும் பழமும் காவியத்தில் நடிகர் திலகத்தின் அர்ப்பணிப்பு நடிப்புக் காட்சிகளை விவரித்து அரங்கு நிறைந்த ரசிகர்களை மகிழ்வித்தார்,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...d6&oe=5E47F5ABhttps://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c3&oe=5E55AC9E
நன்றி Sekar Parasuram
செய்ததை மறந்த தமிழகம்.
https://youtu.be/I-fjY5Sm3TI
நன்றி செந்தில்வேல்
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ef&oe=5E54DC69
நன்றி ராமசாமி
82- வது வீரவணக்கம்.
பச்சைதமிழன் வ.உ.சி தியாகியின் நினைவு நாளான இன்று அவர் தியாகத்தை போற்றி... போற்றி... போற்றி...
வணங்குகிறோம்.....
இந்தியாவின் சுதந்திரம் வேண்டி தனது கோடிக்கணக்கான சொத்துக்களையும் வாழ்நாளில் இளமைக் காலத்தின் பெரும்பகுதியை சிறைச்சாலையின் உள்ளே கொடுமைகளை அனுபவித்த
கப்பலோட்டிய தமிழன்
வ.உ.சிதம்பரனார் அவர்களது நினைவு நாள் இன்று,
18-11-1936
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bb&oe=5E86E629
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7e&oe=5E400AAA
நன்றி C J Joe
நிஜ வள்ளல் சிங்கத்தமிழனின் மறுவெளியீடுகண்ட சில திரைப்படங்களின்
விளம்பரங்கள்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...4a&oe=5E3E3949https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8e&oe=5E886A17https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cb&oe=5E8B2B38
(ரா எ ராமனடி 1990)
நன்றி நிலா
உலகம் இருக்கும் வரை நடிகர்திலகத்தின் புகழ் இருக்கும் என்பதற்கு ஒரு சான்று...
இன்றைய அன்னதான விழாவின் பொழுது #பார்கவ் என்ற சிறுவன் தானே முன்வந்து நடிகர்திலகத்தின் புகழ் காத்தார்...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...26&oe=5E5026BB
நன்றி Remix Gold
நடிகர் திலகம் தனிக்கட்சியை ஏன் துவக்கினார்?
எம்ஜிஆர் இடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, எம்ஜிஆர் இன் ஆட்சியை மத்திய காங்கிரஸ் அரசாங்கம் களைத்து விடக் கூடாது என்பதற்காக தான் வளர்த்த காங்கிரஸ் கட்சியையே எதிர்த்து வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கியது? எம்ஜிஆர் கட்சியை நம்பி அவரது மனைவியை ஆதரிப்பவர்கள் என அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஜானகி ராமச்சந்திரன் முதல் மந்திரி வேட்பாளர் என பிரச்சாரம் செய்தது,
திமுக தனது கூட்டணிக்கு விரும்பி அழைத்தும் அதை நிராகரித்தது, என
மேற்கண்ட கேள்வி...
களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் முன் சொல்லப்பட்டிருக்க வேண்டும்,
அவ்வாறு மக்கள் முன் சொல்லப்பட்டிருந்தால் இப்போது தகுதியில்லாதவனெல்லாம் மைக் மு
ன் சிவாஜியை நினைத்து கருத்து சொல்ல பயந்து இருப்பான்,
இந்தச் செய்திகளை அறிந்திடாத அன்றைய சிவாஜி ரசிகர்களாவது சாந்தம் பெற்றிருப்பார்கள்,
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ce&oe=5E41C1D1
நன்றி Sekar Parasuram
எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதுாக்குகிறதோ... அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார் என்பார்கள்.
அதுபோல, எப்பொழுதெல்லாம், தேர்தல் வருகிறதோ அல்லது ஒரு நடிகர் கட்சி ...ஆரம்பித்தாலோ, அரசியல்வாதிகள் நடிகர்திலகத்தை விமர்சிப்பது பழக்கமாகி விட்டது.
ஒவ்வொரு முறையும், சமூகநலபேரவை சந்திரசேகரன் அவர்கள், கண்டனம் தெரிவிப்பார், தொலைக்காட்சிகளில் விவாதமேடைகளில் கலந்து கொண்டு, நடிகர்திலத்தின் பெருமைகளை பதிவு செய்வார்..
அப்போதெல்லாம், பத்திரிக்கைகள், அரசியல்வாதிகள், மற்றும் நமது இதயங்கள் முதற்கொண்டு,
நடிகர்திலகத்தின் வீட்டில் இருந்து எந்தவிதமான கண்டணமும் வரவில்லையே.. அதிலும், இளையதிலகம் அவர்கள் தனது வருத்தத்தை தெரிவித்தால் நன்றாக இருக்குமே என எண்ணியதுண்டு...
இந்தமுறை இளையதிலகம் அவர்கள், தனது வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல்,
சிவாஜி அவர்கள் தோற்றதற்கு காரணம், எம்.ஜி.ஆருக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்கு... கட்டுப்பட்டு அன்று #ஜானகி அம்மாளுடன் கூட்டணி சேர்ந்தது தான், அன்றே, சிவாஜி அவர்கள் வேறுவிதமாக முடிவு எடுத்திருந்தால், நிலைமையே மாறியிருக்கும்..
நடிகர்திலகம் மறைந்துவிட்டார். இனியும் இதுபோல், விமர்சனம் செய்யாதீர்கள், எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல.. கோடானு கோடி சிவாஜி ரசிகர்களுக்கும் வருத்தமளிக்கிறது.என சற்று கோபமாகவே பேசினார்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களின், நெஞ்சங்களில் பாலை வார்த்த,
#இளையதிலத்திற்கு
உலகெங்கும் வாழும் கோடானு கோடி,
சிவாஜி ரசிகர்களின் சார்பில் நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...0c&oe=5E4B5EF6
Thanks .. Sundar Rajan
வரலாற்று நிகழ்வுகளை மறந்து போன தமிழகம்,
1988 ல் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது அதிமுக இரண்டு அணிகளாக ஜானகி அதிமுக, ஜெயலலிதா அதிமுக என பிளவுபட்ட போது ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசுக்கு நடிகர் திலகம் சிவாஜி ஆதரவு கொடுத்தார், ஆதரவு கொடுக்க மறுத்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியைத் துவக்கினார், காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகம் பின்னால் நின்றார்கள், ஜானகி அணியின் முக்கிய தலைவராக இருந்த ஆர்.எம்.வீ...ரப்பன் அவர்கள் அன்னை இல்லத்திலேயே முகாமிட்டுக் கிடந்தார், நடிகர் திலகத்தை யாரும் சந்தித்து ஆதரவு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக,
ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து நடைபெற மேலும் இதர கட்சிகளின் ஆதரவும் தேவைப்பட்டது, அதுவும் இல்லாமல் அதிமுகவின் இன்னொரு பிரிவான ஜெயலலிதா அணியை எப்படியாகினும் அரசியலில் இருந்து ஒதுக்க எடுக்கப்பட்ட முடிவுகளில் பிரதானமானதாக அப்போது பேசப்பட்ட செய்தி திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களிடம் ஆதரவு கேட்பதென,
அவ்வாறு கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டபோது ஜானகி அதிமுக அரசுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டார்,
அந்த ஆதரவை மட்டும் ஒருவேளை கலைஞர் கருணாநிதி கொடுத்திருக்கும் பட்சத்தில் ஜானகி ராமச்சந்திரன் ஆட்சி தொடர்ந்திருக்கும்
ஆனால் அரசியலில் தேர்ந்த கணக்கீட்டளாரான கலைஞர் அவர்கள் ஜெயலலிதாவை ஓரங்கட்ட வேண்டி உங்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தால் நாங்கள் எப்போது தான் ஆட்சியைப் பிடிப்பது என மறுத்துவிட்டாராம்,
அவரது அரசியல் கணக்குப்படியே பின்னர் ஆட்சியையும் பிடித்தார்,
அதே தருணத்தில் அவருக்கு வலுவான அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்கள் வளர்வதற்கு காரணமாகவும் அமைந்தார்,
அந்த அரசியல் சதுரங்கத்தில் அப்போது நடிகர் திலகத்தை சுற்றியே பல தலைவர்கள் சதி வேளைகளில் ஈடுபட்டனர்,
தலைவர்களின் சதி திட்டத்திற்கான காரணங்கள் என்ன என்பதையும் பார்ப்போம்,
நன்றி Sekar Parasuram