https://scontent.fyto1-1.fna.fbcdn.n...58&oe=5EA52621
Printable View
புகைப்பட கலைஞர் சிம்மையா!....
‘‘சிவாஜியும், ஜெமினியும் நடித்த ‘பந்தபாசம்’ ஷூட்டிங் ஏவி.எம் ஸ்டூடியோவில் நடந்தப்போ, பக்கத்து ஃப்ளோரில் எம்.ஜி.ஆர் பட ஷூட்டிங் நடந்தது. ஷூட்டிங் பிரேக்கில் ‘பந்தபாசம்’ செட்டுக்கு எம்.ஜி.ஆர் திடீர்னு வந்தார். அவர்களை ஒன்றாக நிற்க வைத்து இந்தப் படத்தை எடுத்தேன். நான் ஒன்றிரண்டு எம்.ஜி.ஆர் படங்களுக்குதான் வேலை செஞ்சிருக்கேன். சிவாஜி படங்களுக்கு பெரும்பாலும் நான்தான் போட்டோகிராபர்.
ஒருத்தரிடம் இருக்கும் திறமையை மனதாரப் பாராட்டத் தயங்காதவர் சிவாஜி. ‘எங்க ஊரு ராஜா’ படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடம். அவரோட இரண்டு வேடத்தையும் ஒரே போட்டோவில் கொண்டு வரணும்னு நான் நினைச்சேன். சிவாஜிகிட்ட அதைச் சொன்னேன். தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில் அது அவ்வளவு சுலபமில்லை. ‘உன்னால அது முடியுமா’ன்னு சந்தேகமா கேட்டார். ‘முயற்சி பண்றேன் அண்ணே’ என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு போஸ் கொடுத்தார். கேமரா லென்ஸில் அட்டையை வச்சு பாதி மறைச்சிட்டு எடுத்தேன். அவர் நின்ன இடத்துக்கும் ஃபிலிமுக்கும் ஒரு இஞ்ச் கூட நகராம மார்க் பண்ணினேன். பிறகு இன்னொரு வேஷத்தில் சிவாஜி வந்து நின்னதும், அடுத்த பாதியை எடுத்து பிரின்ட் போட்டுக் காட்டினேன். முதன்முதலாக இரட்டை வேட போட்டோவைப் பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்.
அதே மாதிரி இன்னொரு சம்பவம்... ‘பாலும் பழமும்’ படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி படமாகிட்டிருந்தது. சிவாஜி இன்னொரு கல்யாணம் செய்திருப்பது தெரிந்ததும், முதல் மனைவியான சரோஜா தேவி விஷம் குடித்து இறக்குற மாதிரிதான் முதலில் கதை எழுதியிருந்தாங்க. ‘இது வழக்கமான க்ளைமாக்ஸா இருக்கும். பொதுச் சேவை செய்ய ஆசிரமத்துக்குப் போற மாதிரி வச்சா புதுசாவும் இருக்கும்... மனசை உறுத்தாமலும் இருக்கும்’னு நான்தான் இயக்குனர்கிட்ட சொன்னேன்.
சிவாஜிகிட்ட இதுபற்றி இயக்குனர் சொன்னப்போ, ‘இது யாரோட ஐடி யா?’ன்னு முரட்டுத் தொனியில் கேட்டார். ‘சிம்மையாதான் சொன்னார்’னு டைரக்டர் சொல்ல, எனக்கு உதறல் எடுக்க ஆரம்பிச்சிருச்சு. ‘இங்க வா’ன்னு என்னைக் கூப்பிட்டவர், ‘குட்... குட்... நல்லாயிருக்கு’ன்னு பாராட்டினார். சொன்னது யார்னு பார்க்காமல், சொல்ற விஷயம் என்னன்னு நினைச்ச அந்த குணம்தான் அவர் நடிகர்திலகமா உயர்ந்து நின்னதுக்குக் காரணம்.’’
நன்றி!
அமலன்
குங்குமம் இணைய பகுதியிலிருந்து.....
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...7c&oe=5EA5E496
Thanks Gansh Pandian
'நான் உன்னை அழைக்க வில்லை.... என் உயிரை அழைக்கிறேன்....கண்ணை மறைத்துக் கொண்டால்.... மனதில் எண்ணம் மறைவதில்லை......
நான் சின்னக் குழந்தை யம்மா.. சொல்லத் தெரியவில்லை.......
பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை......'
இன்று 29/03/2020 - மாலை 5.00 மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் தொலைக் காட்சியில்
நடிகர் திலகம் நடித்த -
"எங்கிருந்தோ வந்தாள் " - மெகா ஹிட் படத்தை காண தவறாதீர்கள். ¶
நடிகர் திலகம், ஜெய லலிதா, முத்துராமன், மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...d4&oe=5EA53BBF
இன்று 29/03/2020 - மதியம் 01.30.P.M. மணிக்கு வசந்த் டி.வி. யில் நடிகர்திலகம் நடித்த " சந்திப்பு "
இந்த படத்தில் நடிகர்திலகம், பிரபு, ஸ்ரீதேவி, சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
படத்தை காண தவறாதீர்கள். ¶
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...15&oe=5EA72B1D
நடிகர் திலகம் சந்தித்த துரோகம்.நடிகர் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து வடிவுக்கு வளைகாப்பு 'மக்கலைப்பெற்ற மகராசி படங்களை எடுத்த ஏ.பி.நாகராஜன் பின்னர் இறங்குமுகம் கண்டார்.அவர சிரமப்பட்டுகொண்டிரு த போது சிவாஜி அவற்றை அன்புடன் அழைத்து படம் பண்ணி கொடுப்பதாக கூறியதன் விளைவாக சிவாஜியின் நூறாவது படமான நவரா த்ரீயை சொந்தமாக தயாரித்து இயக்கி வெற்றி கண்டார் ஏ.பி.என்.
தொடர்ந்து திருவிளையாடல் 'சரஸ்வதி சபதம் 'திருவருட் செல்வர் 'தில்லானா மோகனாம்பாள் 'குருதட்சினை அத்துடன் வெளி ப்படங்கள் கந்தன் கருணை திறுமால் பெருமை விளை யாட்டுப்பிள்ளை 'ராஜ ராஜ சோழன் முதலிய படங்களை இயக்கி பலன் அடைந்துவிட்டு ஒரு நாள் சிவாஜியிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் எம் ஜி ஆரிடம் சென்று அவற்றை வைத்து நவரத்த்தினம்படத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்.
சிவாஜியை வைத்து அத்த்னை நல்ல படங்களை எடுத்து சம்பாதித்த சம்பாதித்த நாகராஜன் திடீரென்று தன் பக்கம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ச்சி அடையவில்லை.அதற்கு மாறாக அவருடைய அவருடைய வழக்கப்படி மனக்கனக்கு போட்டுக்கொன்டு போதிய ஒத்துழைப்பு
கொடுக்காததால் படம் தாமதமாக வெளி வந்ததுமல்லாமல் வெற்றி வாய்ப்பையும் இழந்தது.நவராத்திரியை தொடர்ந்து அடுத்தடுத்து சிவாஜியை வைத்து பல அற்புதமான படங்களை தயாரித்தும் இயக்கியும் வெற்றி கண்ட நாகராஜன் 'நவரத்னம்'என்ற ஒரே ஒரு படத்தில் அடிவாங்கி படுத்துவிட்டார்.மனதளவில் பெரிதும் பாதிக்க பட்டவர் ஒரு நாள் அகால மறனம் அடைந்தார்.அஞ்சலி செலுத்த சென்ற சிவாஜி ஏ.பி.என் உடலைப் பார்த்து அழுது கண்ணீர் வடித்தார் .அண்ணன் ஏ.பி.என் இயக்க நான் நடிக்க எத்தனை அருமையான படங்கள்.அவை எல்லாம் மறக்க முடியாதவை என்று கூறி வருந்தினார்.ஆரூர்தாஸ் எழுதியது
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...78&oe=5EA5C8D1
Thanks Vijaya Raj Kumar- Nadigar thilakam Fans
நன்றி மறவாத உயர்ந்த உள்ளம்.1960ல் பாசமலர் படப்பிடிப்பு நெப்டியுன் ஸ்டுடியோவில் நடந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் மாலை நடுத்தர வயதுடைய பிராமணர் ஒருவர் அந்தக்கால நாகரீகத்தை ஒட்டி விசிறி மடிப்பு ஜரிகை அங்கவஸ்திரத்தைகழுத்தில் சுற்றி அணிந்த வண்ணம் கால் மேல் கால போட்டு சிவாஜிக்கு நேரே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.நீங்க தம்பி சண்முகத்தைப் பாருங்க நான் அவனுக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லிடுறேன்என்று சிவாஜி சொல்லாவர் எழுந்து கும்பிட்டவாறு தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.அவர சென்ற பிறகு சிவாஜி என்னிடம் சொன்னார் இவர் பேரு கிருஷ்ணசாமி வேலூர்க்காரர்.அங்கே நாடகம் நடந்தபோது தினமும் வந்து என் நாடகத்தை பார்த்து நாடகம் முடிந்ததும் மேடைக்கு வந்து எனக்கு கைகொடுத்து பாராட்டுவார்.உங்களுக்கு சிறந்த வருங்காலம் இருக்குன்னு வாழ்த்துவார்.நான் கேட்க்காமலே எனக்கு நிறைய பொருளுதவி செஞ்சு இருக்கார்.அப்போ நல்லா வாழ்ந்தவரு இப்போ கொஞ்சம் கஸ்ட்டத்துல இருக்கார்.எவ்வளவு பணம் தேவைப் படும்னு கேட்டேன் பணம் எதுவும் வேண்டாம் வேலைக்கு எற்பாடு செய்தால் போதும்னு கேட்டார்.ஒரு காலத்தில் எனக்கு உதவி செய்தவர் நல்லா படித்தவர் அதனால் சிவாஜி ஃபிலிம்சில் அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து மாசா மாசம் ஒரு சம்பளம் போட்டுக்கொடுக்கும்படி சண்முகத்திடம் சொல்லி இருக்கிறேன்.அவர சொன்னபடி அந்த அய்யரூக்கு சிவாஜி ஃபிலிம்சில் வேலை கொடுத்தார் சண்முகம்.ஒரு வாரத்துக்கு ப்பிறகு செக் கில் சிவாஜியின் கை எழுத்து பெற வந்த அய்யர் ஒரு பணிவு மிக்க ஊழியர் போல் சிவாஜியின் அருகில் வந்து பவ்யமாக குனிந்து கை எழுத்து வாங்கி சென்றார்.நீண்ட லாலம் சிவாஜி ஃபிலிம்சில் பணியாற்றினார்.1964ல் வெளிவந்த புதிய பறவை ப்டத்துக்க்கான செட்டில்மென்ட் செக் அவர் கையால்தான் வாங்கினேன்.ஆரூர்தாஸ்
https://scontent.fykz1-2.fna.fbcdn.n...5b&oe=5EA5EE67
Thanks Vijaya Raj Kumar- Nadigar thilakam Fans
"சிங்கம் சிங்கந்தான்"
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
நல்ல நல்ல படங்கள் நடிகர்திலகத்தின் படங்கள்
இன்றைக்கு புதுமையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் அத்தனையும் அவரின் படங்கள் சொல்லிவிட்டன.
✨
*இப்படித்தான் நடக்கவேண்டுமென கருத்துக்கள் கொண்ட படங்கள்.
*இப்படி நடக்கக்கூடாதென
சொன்ன படங்கள்.
✨
நேர்மறை பாத்திரங்களை மட்டுமே நடிக்கும் அறிமுக வில்லன் நடிகர்கள் இன்றுமிருக்க...
"அந்தநாள்" அவர் நடித்ததை கொஞ்சம் "திரும்பிப்பார்"க்க வேண்டிய காலம் இருக்கத்தான் செய்கிறது.
✨
தங்களை சுயபரிசோதனை செய்துக்கொள்ள நெஞ்சுரமிக்க இன்றைக்குள்ள கதாநாயகர்கள் இருப்பார்களா? என்பது சந்தேகமே! என்பதைவிட, அப்படி ஒருவரும் இருக்கமாட்டார்கள். அப்படி இருந்தால் அவர்கள் இரட்டை வேடம் போடுபவர்களாக இருப்பார்கள். அது படத்தில் மட்டுமல்ல...
✨
நடிப்பென்று வந்துவிட்டால் கௌரவ வேடம் ஏற்கவும் தயங்காதவர். விந்தனையான நடிகர் நம் அய்யன் மட்டுந்தானென உறுதியிட்டு சொல்லலாம்.
✨
வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை விரும்பி மக்கள் ஏற்றார்கள் என்றால், அது நம்மவர் மட்டுந்தான்.
✨
அவர் பரிசோதனை செய்து பார்க்கவேண்டி நடிக்கவில்லை. அசட்டு தைரியமும் இல்லை. அவர் நடிப்பின் மேலுள்ள அவ்வளவு மரியாதை.
வில்லன் நடிகன் பாத்திரம் ஏற்ற பிறகு அதேபோன்ற வேடங்கள் ஏற்கச்சொல்லி தனக்கு வில்லன் முத்திரை குத்தி விடுவார்களோ என்ற துளியளவும் இல்லாமல்தான் "துளிவிஷம்" என்ற படத்தில் நடித்தார். அவர் அழகு திருமுகத்தை கதாநாயகனாக பார்த்தவர்கள்
அவ்வளவு சீக்கிரம் வில்லனாக ஆக்கிவிடுவார்களா?
✨
நடிகர்திலகம் படத்தில் மட்டும் நல்லவன் போல் நடிக்கும் கதாநாயகன் அல்ல, நடைமுறையிலும் அப்படித்தான். ஒரே வித்தியாசம் அவருக்கு நடிப்புலகில் மட்டுந்தான் நடிக்க தெரியும்.
✨
நடைமுறை வாழ்க்கையில் நடிக்க தெரிந்திருந்தால் நாடாண்டிருப்பார். நாடார் பின் போயிருக்க மாட்டார்.
✨
"பொன்னையும் நாடார்
பொருளையும் நாடார்
தன்னையும் நாடார்
தன் வீடும் நாடார்
அறுபது கோடி மாந்தரை நாடி
அவர்களின் வாழ்வில் அமைதியை தேடி
அல்லும் பகலும் சிந்தனை செய்தான்
அவனம்மா...
அவன் ஆக்கிய வழியில் ஆக்கிய தலைவன்
எவனம்மா?"
என்று கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பாடல் எழுதுவதற்கு முன்பாகவே காமராஜரை நாடி, தேடி போனவர்தான் நடிகர்திலகம்.
✨
நடிகர்திலகமாவது நடிப்புலகத்தில் நடித்தார்.
காமராஜர் அவர்களுக்கு இயல்புலகம் மட்டுந்தான். அவருக்கு நடிப்பென்றால் என்னவென்று தெரியாது. நடிகர்திலகம் படங்களை பார்த்து பின்புதான் நடிப்பென்றால்
இதுதான் போலிருக்கிறதென தெரிந்துக்கொண்டார். ஆனால் நடிகர்திலகத்தின் பழக்கத்தில் போலி இல்லையென்று தெரிந்துக்கொண்ட பிறகே, அவரை தன் தொண்டனாக ஏற்றுக்கொண்டார்.
✨
ஒரு தலைவனுக்கு உதாரணம் காமராஜர்.
ஒரு தொண்டனுக்கு உதாரணம் நடிகர்திலகம்.
✨
அப்படியாபட்ட நடிகர்திலகம் நடிப்புலகில்
நடிப்பை எவ்வாறாக நோக்கினார்...?
✨
நடிப்பென்று ஒன்று வந்தால் நவரசமும் தெரிந்தவன் ஓர் நல்ல சிறந்த நடிகனாக போற்றப்படுவான் என்பதை ஆழ்மனதில் எந்த ஒரு தயக்கமும் இன்றி உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் உலகமெங்கிலும் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிறந்த நடிகனாக புகழ் பெற்றார்.
✨
ஹாலிவுட் படங்களில் நடிக்காமலே ஹாலிவுட் நடிகர்களுக்கு பரீட்சயமானார். ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
✨
இவரை பெற்ற தாய் பெருமைகொண்டது முக்கியமல்ல. நாம் பெருமைகொள்வதுதான் முக்கியம். நாம் ஒரு தமிழரென பெருமை கொள்கிறோம். ஆனால் உலகம் ஒரு பெரும் நடிகனாகவும், பாரதம் நம் நாட்டில் பிறந்த பாரத பெரும் நடிகராகவும் பார்க்கிறது. நாம் எப்படி பார்க்கின்றோம்...?
✨
நம் தமிழ்நாடு எப்படி பார்க்கிறது? என்பது முக்கியமில்லையா? வேதனைதான் அவர் சிலையை எடுத்தது...
✨
என்றுமே மானமுள்ள தமிழனால் மறக்கமுடியாதது. தமிழை ஒவ்வொரு பெரியோர்களும் ஒவ்வொரு விதத்தில் வளர்த்திருக்கலாம். ஆனால் ஒன்றுமே தெரியாத ஒரு பாமர தமிழனையும் நற்றமிழ் பேசவைத்த பேராசிரியன் அய்யன் சிவாஜி!
✨
சிவாஜியை உயிராய் மதிக்கக்கூடிய ஒவ்வொரு பக்தருக்கும், 'மணிமண்டபம்' ஆலயமே ஆனாலும் அவரை அங்கு கொண்டுபோய் வைத்தது, சிறையில் அடைத்ததற்கு சமம்தான். சிங்கத்தை கூண்டில் அடைத்தாலும்... அது 'சிங்கம் சிங்கந்தான்.
✨
"அவனோ நேற்று வந்தான், இன்றிருப்பான், நாளை போவான் என்ற எல்லைக்கு இலக்கணத்திற்கு உட்பட்டவன். இம்மியேனும் நம்மோடு ஒவ்வாதவன். அவன் கத்தி பார்த்தேனும் கலங்காதே, ஆனால் அவன் பேச்சு கேட்டு மட்டும் வாழாதே. நான் கூறுவது உனக்கு மட்டுமல்ல, எங்களோடு சிங்கங்களாய் பிறந்து, இங்கு குரங்குகளாய் கூணி நிற்கும் இதோ அத்தனை ஈனர்களுக்கும், மானமற்ற மடையர்களுக்கும் கூறுகிறேன். சீ, கூறுவதென்ன? தூ... காறி உமிழ்கிறேன்."
அன்று 'வீரபாண்டிய கட்டபொம்மன்' பேசியது வெள்ளையர்களை பார்த்து மட்டுமல்ல, இந்த கொள்ளையர்களையும் பார்த்துந்தான்.
✨
"எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே
தந்தானே தானேதந்தானே தந்தானே தானேனன்னா"
✨
"நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா.."
✨
நடிகர்திலகத்தை நாமிருக்கும் வரை...
"எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்"
✨
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
Thanks ப.நடராசன்/: